திங்கள், 17 ஆகஸ்ட், 2009

நீதித்துறையில் மறைக்கப்படும் ஜனநாயகத்தத்துவம் .

.


.
நண்டு : டெல்லியில்
நேற்று (16.8.09)நடந்த முதல்-மந்திரிகள்
மற்றும்
ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் மாநாட்டில்
பிரதமர் பேசியதை படித்தாயா ? .


நொரண்டு : உண்மையில் ஆச்சரியப்பட்டுவிட்டேன் .
அழகான ,
அர்த்தம் பொதிந்த பேச்சு. எதிர்பார்க்கவில்லை
இப்படி ஒரு அற்புதமான பேச்சை அவரிடமிருந்து .
வாழ்த்துக்கள் பிரதமர் வாழ்த்துக்கள் .


நண்டு : என்ன ஆச்சரியமா இருக்கு ,
நீ வாழ்த்துவது என்றால் ?
என்ன காரணம் ?


நொரண்டு : கோர்ட்டின் மீது மக்கள் நம்பிக்கை
வைக்கும் அளவிற்கு நீதித்துறை
செயல்படவேண்டும் ,விரைவு நீதிமன்றங்கள்
விரைவாக தீர்ப்பு வழங்கவேண்டும் ,
தண்டனைக்காலத்தைவிட ஜெயிலில்
பெருமளவினர் அதிக காலம் தண்டனை
அனுபவித்து வருகின்றனர் .
வருத்தம் அளிக்கின்றது - என கூறியுள்ளாரே
அதனால்தான் .

நண்டு : இது எல்லாத்துக்கும் தெரிந்ததுதானே .


நொரண்டு : ஆம் ,
ஆனால் ,இதைக்கூட கூறத் தயங்கினவர்களைத்தான்
அல்லது
இவ்விசயத்தில் தலையிடாதவர்களைத்தான்
பார்த்திருக்கின்றேன் .


நண்டு : எப்படி ?


நொரண்டு : 'கோர்ட்டின் மீது மக்கள்
நம்பிக்கை வைக்கும் அளவிற்கு
நீதித்துறை செயல்படவேண்டும் '
என்ற அவரின் பேச்சிற்கு
நீ என்ன அர்த்தம் புரிந்துகொண்டாய் சொல் .


நண்டு :'கோர்ட்டின் மீது மக்கள்
நம்பிக்கை வைக்கும் அளவிற்கு
நீதித்துறை செயல்படவேண்டும் ' அவ்வளவே .


நொரண்டு : அட நண்டு
வெளிப்படையான பாமரப்பார்வை அது .
அதற்கு அர்த்தம் -நீதித்துறை
மக்கள் நம்பிக்கை வைக்கும் அளவிற்கு
செயல்படவில்லை,
நீதித்துறையின் மீது
மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் .
மக்கள்
நம்பிக்கை வைக்கும் அளவிற்கு
செயல்படாத நீதித்துறை
நமது ஜனநாயக நாட்டில் உள்ளது .
இனி அப்படி செயல்படக்கூடாது
'கோர்ட்டின் மீது மக்கள்
நம்பிக்கை வைக்கும் அளவிற்கு
நீதித்துறை செயல்படவேண்டும் ' என்பதுவே .


நண்டு : அப்படியா ...?
உண்மையில் அப்படித்தான் உள்ளதா ..


நொரண்டு : நான் ,நீ
பேசிக்கொண்ட பேச்சுல்ல இது ,
முதல்-மந்திரிகள்
மற்றும்
ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள்
முன்னிலையில்
பிரதமர் பேசியது .
ஆதாரங்கள் இல்லாமல்
பிரதமர் அவ்வாறு பேசியிருக்க மாட்டார் .


நண்டு : நீதித்துறையின் மீது
மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் எனில் ?


நொரண்டு : ஜனநாயகம்
குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகின்றது
என அர்த்தம் .


நண்டு : நீ என்ன சொல்ற ?


நொரண்டு :பிரதமரே பேசியிருக்கும் பொழுது
நான் என்ன சொல்ல .
அவர் கூற்றில் உண்மை இல்லாமல இருக்கும் .
அரசு தான் உரிய நடவடிக்கை
துரிதமாக மேற்கொள்ள வேண்டும் .
எடுக்கும் என நம்புகின்றேன் .

நண்டு : எப்படிப்பட்ட நடவடிக்கைகள்
இருந்தால் நலமாக இருக்கும் என எண்ணுகின்றாய் .


நொரண்டு : நண்டு ,
மன்னராட்சியில் ,
அரசர் கேள்விக்கு அப்பாற்பட்டவர் .
அரசர் தவறே செய்யாதவர் ,
அரசர் செய்யும் தவறுகள் எதுவும் தவறுகள் அல்ல,
அரசன் என்ன நினைக்கின்றனே
அதை
அப்படியே
நீதிமன்றம் பிரதிபலிக்கவேண்டும் ...
இப்படியான கோட்பாடுகளினால்
நீதித்துறை முழுக்கமுழுக்க கட்டமைக்கப்பட்டது .
மிகவும் மிகவும் கவனமாக.
அரசனிடமிருந்து ,
அரசரின் பிரதிநிதிகளுக்கு ,
நீதி - நீதித்துறையாக மாற்றப்பட்டபொழுது .
அதனால்,
மன்னராட்சியில்
நீதிபதிகளும்
எக்கேள்வி்க்கும் அப்பார்ப்பட்டவர்கள் .
அதனால் , அவர்களிடம் நான்
என்ற எண்ணம் அழுத்தம் திருத்தமாக இருந்தது .
அவ்வாறு
இருக்கும் படியே திட்டமிட்டு
அமைக்கப்பட்டிருந்தது .
ஆனால் , ...


தொடரும் ...

.
.

.

Download As PDF

சனி, 15 ஆகஸ்ட், 2009

தமிழனால் அரை நிர்வாணப்பக்கிரியான காந்திஜி

.

நண்டு : இன்று  சுதந்திர தினம் .


நண்டு : .ம்...

நொரண்டு : ஏன் அரைநிர்வாணப்பக்கிரியானார்னு சொல்லு ...

நண்டு : தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் மனிதன் மனிதனை அடிமைப்படுத்தும் நிலையினை , மனிதனை மனிதனாக பார்க்காதன்மையை , அதனின்று மனிதனாக விடுதலை பெற துடித்து க்கொண்டிருந்த தமிழக ஒப்பந்தக்கூலிகளைக்கண்டார் . மற்றவர்களைப்போல் அல்லாது அவர்கள் கொள்கைப்பிடிப்புடனும் , அதே நேரத்தில் அகிம்சை வழிப்போரட்டத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் வைத்து இயங்கிவந்தனர் .மேலும்,அவர்கள் மனிதனை மனிதனாகப்பார்க்கும் மக்களாகவும் இருந்தனர் . அவர்களின் தியாகம் , உண்மை,உறுதி,விடுதலை உணர்வு ஆகியவற்றைக்கண்டு ஆச்சரியப்பட்டார்.   இது அவரை மிகவும் கவர்ந்தது . அவர்களின்பால் மிகுந்த அன்பும் ,பாசமும் கொண்டார் . அகிம்சைப்போராட்டம் இங்கு தான் இப்படித்தான் ஆரம்பமானது .
தென்னாப்பிரிக்காவிலிருந்த தமிழர்களின் ஆதரவு எப்பொழுதும் காந்திக்கும். அவரின் போராட்டத்திற்கும் உந்து சக்தியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் கடைசி வரை உறுதுணையாகவும் இருந்தது . இது தான் காந்தியை இந்திய விடுதலைப்போராட்டத்திற்கே உந்திச்செல்லும் சக்தியாகவும் ஆனது .


பிறகு, இந்திய சுதந்திரப்போராட்டத்திற்கு தன்னை முழுமையான  ஈடுபடுததிக்கொள்ள காந்தியடிகள்  இந்தியா முழுவதும் பயணம் செய்கின்றார்.

தமிழர்கள்  தென்னாப்பிரிக்காவிலேயே அப்படியெனில் ,தாயகத்தில் சிறப்புடன் மிகுந்த வேட்கையுடன்  இருப்பர் என்று ,தனது போராட்டத்திற்கு தென்னாப்பிரிக்காவில் எப்படி தமிழர்கள் உந்து சக்தியாக இருந்தார்களே .அது போலவே இங்கும் தமிழர்கள் தனக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்கள் என்ற எண்ண ஓட்டத்தில் இருந்த காந்தி தமிழகம் வருகின்றார் .

இங்கு அவர் பார்த்த தமிழனின் நிலை அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது .
மிகப்பெரிய மனித நேயம் கொண்ட இவர்களின் நிலை இதுவா என மிகவும் மன வேதனை அடைந்தார் .தங்களின் பண்பாடு ,கலாச்சாரம் இன்ன பிற அடையாளங்களை தொலைத்துவிட்டு இருக்கின்றனறே இப்படி என மனமொடிந்தார் .சிந்து சமவெளிப்பரப்பில் பிறந்த காந்திக்கு தமிழனின் பண்பாடும் ,நாகரிகமும் இரத்தத்தில் கலந்த ஒன்றாகத்தானே இருக்கமுடியும்.
தங்களின் அடையாளங்களை என்று இந்த மனித நேயர்கள் முழுமையாகப் பொறுகின்றார்களே ,அது வரை அவர்களைப்போல தானும் ஆடை உடுத்துவேண்டும் என்று உறுதி பூண்டார் .கத்தியவார் ஆடைகளான (KATHIAWARI DRESS) வேட்டி, நீண்ட குர்த்தா,தலைப்பாகை ஆகியவற்றைத் துறந்து  அரை வேட்டிக்கும் மேல் துண்டுக்கும் மாறினார் தமிழனால் மனித நேயத்திற்காக .

கதராடைக்கு முக்கியத்துவம் கொடுத்தார் .கையில் ராட்டையுடன் கடைசி வரை தனது  எண்ணத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார் .

இதனாலேயே ''அரை நிர்வாணப்பக்கிரி '' என்ற ஏச்சுக்கும் ஆளானார் .

நொரண்டு : அப்ப ,தமிழனால்தான் அரை நிர்வாணப்பக்கிரியானார்னு சொல்ற

நண்டு : நான் சொல்லவில்லை இது உண்மை ,வரலாறு .

முடிவுக :தமிழன் ,இந்தியன் தன்மானத்துடன் ,தனித்துவத்துடன் தனது நிலையில் உயர்ந்து விளங்கும் காலம் வரை காந்தி ''அரை நிர்வாணப்பக்கிரி '' யாகவே அறியப்படுவார் என்பதுவே உண்மை  .





.
Download As PDF