ஞாயிறு, 14 நவம்பர், 2010

எங்கே போய் முன்தோன்றிய மூத்த குடியாவது தமிழன்



நொரண்டு :  காந்தியடிகள் தமிழ் கற்றாரா ? ...

நண்டு : ....


நொரண்டு :  திருக்குறளை கற்பதற்காக ....

நண்டு : .....

நொரண்டு : ஏன் அமைதியா இருக்க .???

நண்டு :  ....

நொரண்டு : சரி அது இருக்கட்டும் . திருக்குறளை அதன் உண்மையை
தமிழ் கற்றால் தான் அறிந்துகொள்ள முடியுமா ? . மொழி்பெயர்ப்பு அதனை வெளிப்படுத்தாதா ?

நண்டு :ஆம் . அதிக கலைச்சொற்களை பயிலுதல் அதிக ஆழத்திற்கு இட்டுச்சொல்லும் . மொழிபெயர்ப்பு ....

நொரண்டு :  ஏன் ?

நண்டு : நான் மொழிபெயர்ப்பில் குறளை படித்ததில்லை .யாரவது தங்களின் மொழியில் குறளைப்படித்து பின் தமிழ் கற்று குறள் படித்தவரிடம் கேட்க வேண்டிய கேள்வி .

நொரண்டு : ஓ ...

நண்டு :ஆனால் தமிழில் கற்பது பற்றி வள்ளுவர் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

நொரண்டு : கூறு .

நண்டு :

''அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.''

என்ற குறளில்
தமிழ் தான் முன்தோன்றிய மொழி என்று கூறுவதன் மூலம்
அதனை கற்றபது தான் சிறப்பு என கூறுகின்றார் .

நொரண்டு :  ஓ...


நண்டு :மேலும் ,

''வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் தமிழ்தம் என்றுணரற் பாற்று.''

என்ற குறளின் மூலம்
தமிழ் கற்பதனால் உண்டாகும் பயனை கூறுகின்றார் .

நொரண்டு : என்ன பயன் ?

நண்டு :
தமிழ் , கற்றவருக்கு மழைபோல்
அனைத்தையும் கொடுக்கும் என்கின்றார் .

நொரண்டு : ஓ... இப்படியும் கூறியுள்ளாரா !!!


நண்டு :மேலும் ,

''தமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
''

என்ற குறளின் மூலம் ...

நொரண்டு : இதுக்கு



      

என்றும் ...


நண்டு :  சொல்லவருவதை சொல் .

நொரண்டு : அது வந்து
நான் பாத்த புத்தகத்திலெல்லாம்
''அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்'' னு போட்டுருக்கு
நீ
''தமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்'' னு
எடுத்திருக்க...

நண்டு :
அவர்கள் பார்வையே தவறு .திருவள்ளுவர் காலத்தில் சுத்தத்தமிழ் பயன்படுத்திவந்த பொழுது  அமிழ்து என்பது  ....பின்னாள் சேர்த்துக்கொண்ட ஒரு சொல் . சுருங்கக்கூறின் திருவள்ளுவர் காலம் தனித்தமிழ் காலம் . தனித்தமிழன் காலம் .


நொரண்டு : ஓ ...அப்படியா ..

நண்டு :
பின்னாள் சேர்த்தவர்கள் .அமிழ்து என்பது தமிழுக்கு முன்பு தோன்றியதுபோல் ஆக்கி . தமிழை பின்னுக்கு தள்ளினர் .அந்த ஒரு வார்த்தையைக்கொண்டே தமிழை கேவலப்படுத்திவிட்டனர் தமிழை ,தமிழனை ,தமிழ் பண்பாட்டை .அமிழ்து ,அமிழ்து,அமிழ்து ...என்று சொல்லிக்கொண்டே வந்தால்  தமிழ் என வருமென்றும் சொல்லி ஏமாற்றியதோடு . தமிழ் இனத்தையே  மடையர்களாக்குவதற்கு இலக்கியத்திலும் இதே கருத்தை புகுத்தி விளையாடிவிட்டனர் . எங்கும் . நீ அமிழ்தை ஏற்றுக்கொண்டால் தேவர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் . தேவர்களை ஏற்றுக்கொண்டால் அவர்களின் அடிவருடிகளை உமக்கு முன்னவர்களாக ஏற்றுக்கொண்டுவிட்டாய் அவ்வளவே . இவ்வாறு ஒவ்வொன்றாய் ஏற்றுக்கொண்டு... எங்கே போய் முன் தோன்றிய மூத்த குடியாவது தமிழன். தெரிகின்றதா கபட நாடகம் .

நொரண்டு :  அட ...

நண்டு :
ஆனால் ,இடைச்செருகலுக்கு் குறள் மட்டும் மிகவும் கடினமாக இருந்ததால் மிகவும் கடினப்பட்டே ;ஆனால் ; அமைப்பை உடைக்கும் திறனற்று .அதனால் தான் இப்பொழுது நம்மால் எளிதில் அதனை அடையாளம் காணமுடிகிறது .குறளின் சிறப்பே இது தான் .இப்படியொல்லாம் நடக்கும் என நினைத்துத்தான் என்னவோ வள்ளுவர் குறள் வடிவத்தில் இயற்றினார் போலும் .

நொரண்டு : சரி ஏன் இத்தனை பீடிகை...குறளுக்கு விளக்கம் சொல் .

நண்டு :
தமிழ்தினும்
மிகவும் இனிமையான மகிழ்வைத்தரும்
தம் மக்கள் அதாவது தம்  குழந்தைகள்
இட்டும் ,தொட்டும் ,துழந்தும்
சிறு கையாள் அளாவப்பட்டு
குழைந்து எழு்தும் தமிழை பார்க்கும் பொழுது .

நொரண்டு : மழலை எழுத்தை கூழ் என்கின்றார் .

நண்டு :ஆம்

நொரண்டு : மழையை தமிழ் என்கின்றார்

நண்டு :ஆம்

நொரண்டு : 
இன்னைக்கு குழந்தைகள் தினம் ,
இது குழந்தைகளுக்கான குறள்  .
ஆகா..ஆகா



.


. Download As PDF

10 கருத்துகள் :

எல் கே சொன்னது…

:)

sivakumar சொன்னது…

அருமை

NaSo சொன்னது…

அந்த குறளுக்கு சரியான விளக்கம் இப்போதுதான் பார்க்கிறேன். ஆம் தமிழ் எப்போதுமே தனித் தமிழ் தான்.

அம்பிகா சொன்னது…

திருக்குறள் விளக்கம், தனித்தமிழ் சிறப்பு என்பதோடு குழந்தைகள் தின பகிர்வு என சிறப்பு பதிவு. நல்லாயிருக்குங்க.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

குறள் விளக்கம் அருமை.. தமிழ், தமிழ்,தமிழ்ன்னு இடைவிடாம சொல்லிப்பாருங்க... அமிழ்து,அமிழ்துன்னு கேக்கும். ரெண்டும் ஒண்ணுதானே :-))

vasu balaji சொன்னது…

:) நல்லாருக்கு விளக்கம்.

தமிழ்மலர் சொன்னது…

அருமை.. அருமை...

தாராபுரத்தான் சொன்னது…

அருமைங்க..

ஹேமா சொன்னது…

தமிழ்ச்சுவை அமுதம் !

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "