செவ்வாய், 30 மார்ச், 2010

இது நாய்களின் நகரம் ...எச்சரிக்கை ...

.


.
''இவைகள் காகிதம் திங்குமாம் .
காகிதமா ? எப்படி தெரியும் ?
பேசிக்கொண்டன.
காகிதத்திற்கு என்ன செய்ய ? நீ வைத்துள்ளாயா ? ''

...........

.

.


புதிதாக குடியோறிய இடத்தில் புதிராய்ப்போகும் வழித்தடங்களில் புதிய இருட்டில் ஆங்காங்கே தெரியும் வெளிச்சத்தின் மத்தியில் நடக்கும் சுகத்தில் அந்த ஒத்தநாயைப்பார்க்கும் தூரம் வரை கால்கள் ஆர்வமாக ஆங்காங்கே உழன்றது. எந்தவித பிரக்ஞையும் இல்லாதது மாதிரி பார்த்தது அந்த
நாய் . நாய்கள் கடிக்கும் என்ற வரைமுறையில் சற்று ஒதுங்கி நகர்ந்தேன் .தனது தலையை பக்கத்து சந்தை நோக்கி திருப்பிக்கொண்டது .அதனை தாண்டி முன்னேறும்பொழுது உறுமியது .நகர்வை துரிதப்படுத்தினேன் ,துரத்தியது , ஓடினேன் ,ஓடினேன் தெரியாத வழித்தடங்களில் இரு நாய்கள் தென்படும் பொழுது வரை . அவ்விரு நாய்களும் துரத்திவந்த நாயைப்பார்த்து
உறுமியது .இனி நாய்களுக்கிடையே சண்டையிட்டுக்கொள்ளும் என எதிர்பார்த்து இயல்பாக நடந்தேன். ஆனால் ,மூன்றும் சூழ்ந்து என்னை தாக்கின. ஏனென்று தெரியவில்லை. பின் ஒரு சந்தைநோக்கி நடக்க சமிக்சை செய்தது. மூன்றுக்கும் நடுவில் நடந்தேன் .நீண்ட தூர நடைக்குப்பின் ,தூரத்தே மேலும் நாலு நாய்கள் ஒரு பெண்ணை மோப்பம் பிடித்துக்கொண்டுருந்தன .நாய்களின் மூச்சுக்காற்றின் வெம்மையில் தவித்துக்கொண்டிருந்தாள் .என்னைப்பார்த்ததும்
அவளிடமிருந்துவிலகி முறைத்து உற்றுப்பார்த்தன .ஒன்று தன்முன் காலால் என் தோள்பட்டையில் அடித்து பின் அவள் அருகில் சென்றது . இவானா ? என்றது .இல்லை போல் தலையை ஆட்டினாள்.அவைகள் கூடி ஏதோ சமிக்சைகள் செய்துகொண்டன .அவளைப்பார்த்தேன் .அவளை இழுத்துவந்து
என்னுடன் பிணைத்தது நாய்கள் .

உன் பெயரென்ன ?
லாவண்யா.
எந்த ஊர் ?
பதிலில்லை...
இங்கு என்ன செய்கின்றாய்?
பதிலில்லை...
எதற்காக இங்கு வந்தாய் ?
வரச்சொல்லியிருந்தான் .
எதுக்கு?
நான் இரவு ....
அவன் எங்கே?
தெரியவில்லை .
இதற்குமுன் இப்படி நடந்துள்ளதா உனக்கு?
வெளியே தனியாக வருவதில்லை .
இப்பமட்டும் ஏன் வந்த?
அவன் வீட்டிற்கு கூட்டிட்டு போறேனான் .
இவைகள் என்ன செய்யும் ?
தெரியவில்லை.
என்ன செய்ய ?
தப்பிக்கவேண்டும் .
எப்படி?
இவைகள் காகிதம் திங்குமாம் .
காகிதமா ? எப்படி தெரியும் ?
பேசிக்கொண்டன.
காகிதத்திற்கு என்ன செய்ய ? நீ வைத்துள்ளாயா ?

ஒரு அடர்ந்த இருட்டில் சுற்றித்திரியும் புகைகளின் மத்தியில் ஒளிரும் நியான்
விளக்கொளியில் இரண்டு நாய்கள் அமர்ந்திருந்தன . எங்களைப்பார்த்தும் ஓடிவந்த ஒன்று ஒரு வட்டமடித்து சென்றது . திடீரென நாய்களிடையே பரபரப்பு .
பலத்த காயத்துடன் ஒருவனை ஒரு நாய் தூக்கிவந்தது . இவன் தான் ,இவன் தான் என்றாள் .அமைதியாக இரு என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்றேன்
.ஓடிவந்த ஒரு நாய் அவள் அருகில் சென்றது .இவனா ? என்றது .இல்லை போல் தலையை ஆட்டினாள் .அவைகள் கூடி ஏதோ சமிக்சைகள் செய்துகொண்டன .அவளைப்பார்த்தேன் .ஏதோ தவறு ,எங்கோ நடக்கிறது என்பது மட்டும் தோன்றியது . எங்கள் மூவரையும் பிணைத்தது நாய்கள் .நல்ல
திடகார்த்தமான அவன் அவளைப்பார்த்ததும் ஏதோ முணகி தலையை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டான் . நாய்கள் எங்கள் மூவரையும் பின் தொடர சமிக்சை செய்தது.

உனக்கு என்ன நடந்தது ?
எதற்கு ?
தப்பிக்க .
உண்மையாகவா?
ஆம் .
முடியுமா?
முடியும்
ஏதாவது ஐடியா உள்ளதா?
இவைகள் காகிதம் திங்குமாம் .
காகிதத்திற்கு?
உன்னிடம் பணம் இருக்கிறதா ?
இருக்கு .
அவைகள் காகிதம் தானே .

நீண்ட நேரத்திற்குப் பிறகு நாய்கள் நின்றன .ஒன்றை ஒன்று மாறிமாறி சமிக்சைகள் செய்தன.நாய்களுக்கு பசிக்க ஆரம்பித்துவிட்டன என்றாள் .ஒரு நாய் என்னருகில் வந்தது .தைரியத்தை வரவழைத்துக்கொண்டு என் வசமிருந்த காகிதங்கள் அனைத்தையும் அதன் முன் வைத்தேன் .ஒரு மாதிரியாகப்பார்த்தபடி வாங்கிச்சென்றது நாய்களின் கூட்டத்திற்கு மத்தியில் .பிறகு இரண்டு நாய்கள் என்னையையும் ,அவளையும் சோதனை செய்தது .எனது பாக்கெட்டிலிருந்த விசாவைஎடுத்துசிரித்துக்கொண்டன அவளிடமிருந்த காகிதங்கள்அனைத்தையும் பிடுங்கிக்கொண்டன .பின் போகலாம் என்பது போன்று சமிக்சை செய்தது .வாருங்கள் செல்லலாம் என்றேன் .அவர்கள் நாய்களை உற்றுப்பார்த்து தயங்கினர் .இருவரின் கைகளையும் பிடித்து இழுத்து நடந்தேன் .நாய்கள்
எதிர்திசையில் நகர ஆரம்பித்தன .

எங்கோ ஓர் நாய் ஊளையிடும் சப்தம் கேட்டது .சிலர் ஓடும் சத்தமும் ,சில வினோதக்குரல்களும் .நாய்களுக்கு மீண்டும் பசியெடுத்திருக்க வேண்டும் .
இங்கு யாரும் இரவில் நடமாடவேண்டாம் .
இது நாய்களின் நகரம் ...எச்சரிக்கை ... என உரக்க மனதில் கூறிக்கொண்டு ,கதவைத்தொடும் வரை கால்கள் .


.


.
.

Download As PDF

ஞாயிறு, 28 மார்ச், 2010

சிரிக்கும் சிவப்புரோஜாக்கள் .

.
.

.
பாழடைந்த கோட்டை
சுவற்றில் சித்திரமாய் .
சிரிக்கும் சிவப்புரோஜாக்கள் .

=====

மூன்றாவது
மூக்குக்கண்ணாடி .
தொலைந்த இரண்டின் ஞாபகமாய் .

=====

மலர்கள் விடாதுவீழ்கின்றன
இடை யிடையே பேச்சு .
மௌனம் ...புரட்சி ...
=====
.
.
.
.
Download As PDF

சனி, 27 மார்ச், 2010

வெள்ளிக்கம்பியின் முடிவிலிபோர் - புனைவு

.



.



எங்கும் மூக்கு வைத்து எதுவும் கிடைக்காமல்,கொட்டிக்கிடக்கும் காலாவதி போலி மருந்து கசிவின் கழிவுகளில் அசிங்கப்படுத்திய மூக்கினை நொந்தபடி காலிடப்பாக்களை உருட்டிய பலத்தில், பயத்தில் பறந்தமர்ந்த மொட்டை மதிலில் பூனை மஞ்சள் பட்டுப்பூச்சிகள் பறந்து திரிவும் செடிகளுடே இடித்துச்சென்றது மூக்கிலிருக்கும் அத்துகள்களுடன். எங்கிருந்தோ வந்த ஆக்ஸைடின் நாற்றத்தில் தனது இறக்கைகளை பரப்பி இம்சித்துக் கொண்டது ; பல்லாயிரக்கணக்கான தாக்குதல்களை கொடுக்கும் சிறுசிறு கம்பிகளை வயிற்றில் ஆயிரக்கணக்கில் கட்டி வைத்திருத்தல் மிகவும் கடினம் என்பதால் எப்படியாவது அவற்றை அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்.

போர், போர் தீரான மாயப்போர், காலச் சக்கரம் சுலன்றது. தன்னையும் விடாமல், போரையும் விடாமல், ஒன்றை ஒன்று ஒட்டி வைத்து வெட்டப்பட்ட இணைப்பு இடம் மட்டும் வெள்ளைக்காயம் வெள்ளிக் கம்பியாக மாறி , போர் தொடங்கி ,வெள்ளிக் கம்பி ஒளியுடன் உலகெங்கும் வீச, அத்தனை ஜீவ ராசிகளும் பரிதவிக்க ஓட ஓட பிரட்டியடிக்கும் அம் மாய ஒளி. எங்கும் செல்ல வைக்கும், எதைப் பற்றியும் சிந்திக்கவைக்காமல் எதையும் செய்ய வைக்கும். பனியினுடே பளபளக்கும் பொருள் தேடி, நதியினுடே மின்னிச் செல்லும் மஞ்சள் பார்த்து, நிலத்தினுடே நிலம் பிளந்து, கபாலம் உடைந்து, ஒன்றைக்கொன்று ஒன்பதாக்கி ஒன்பதையும் விடாமல் ஒன்றுமில்லாதாக்கி மீண்டும் ஒன்று பெற்று .தொடரரும், தொடரும், தொட்டுத் தொட்டு தொடரும் வெள்ளிக் கம்பியின் அதிகாரம்.

ஒரே ஓங்காரம், ஓலம், அவலம், இருந்தாலும் போரினின்று தப்பி எங்காவது சற்று நிம்மதி கிடைக்கினறதா. மலையேறி ஆதங்கம் கொண்டவனின் அடிவருடியது வெள்ளிக்கம்பி,அதை உணராமல் சிலாகித்தவன் காலில் வெள்ளிக்கம்பி வெம்மையுற்றது. எங்கும் வெம்மை. குளிர்தாண்டி வெம்மையின் வேதனை
மண்டையைப் பிளக்க. தொப்புளைத் தொட்ட குதிரைப்படை நாற்புறம் ஓடி எங்கும் பரவியது. சிறுக சிறுக குதிரையின் வேகம் உத்வேகம் பெற்று உடலெல்லாம் பரவி குதிரையின் ஓட்டத்திற்கு ஆட்பட வைத்தது. காடு, மேடு, பள்ளத்தாக்கு, பனி, நதி கடந்து நிலத்தினில் குதிரை எங்கும் வெல்வாலம் பிடித்து அலைந்து கொண்டிருந்தது. ஓடி வந்த குதிரையினின்று எங்கோ வெள்ளிக் கம்பி நிலத்தினில் விழுந்துவிட அங்கே நிற்கும்படி ஆகிவிட்டது அவனுக்கு.

திடுமென முலைத்த மின்னலை தலையில் பதித்து வெள்ளிக் கம்பியை அழித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தன்னுடல் தேய்த்து பல உயிர்களை பார்த்து ஆணையிட்டு, ஆண்டு அடங்கி வெள்ளிக்கம்பியின் ஒரு துரும்பைக் கண்டு சமாதானம் கொண்டு, மீண்டும், மீண்டும் கபாலம், சதை ,எழும்பு, இயக்கம், ஓட்டம் துரத்தல் என அனைத்தும் ஒரு துரும்பு வெள்ளிக் கம்பியினை காண்பதிலே சென்றது. எங்கே ஆரம்பிப்பது. எங்கே முடிகிறது. விடை கிடைக்காமல் பிரிந்து போகிறது ஜீவராசிகள். எனினும், வெள்ளிக் கம்பியின் மீது வெற்றி கொள்ள யாராலும் போரிடத்தான் முடியும். வெற்றி என்பது பல தோல்விகளுக்கு பின் அறிவிக்கப்படும் என்ற எண்ணத்துடனே பயணம்.வலிமை, மெலிமை இவைகளிரண்டும் வெள்ளிக் கம்பியின் கோரத் தாக்குதலுக்கு இலக்காகாமல் போக முடியாது. இருப்பினும் வலிமை மெலிமையை ஓட, ஓட சுரண்டி வெள்ளிக் கம்பியுடனான தனது போருக்கு தக்க ஆயுதங்களை தயார்படுத்தினாலும் சமதானம் மட்டுமே செய்ய முடிந்தது. மெலிமை எப்பொழுதும் திடத்துடன், தீரத்துடன் கடும்போர் செய்து தளர்வுற்று தளர்வுற்று சமாதானம் சொல்லி மீண்டும் இடையுறாத போர் -சமாதானம், போர்- சமாதானம் என்ற வேத காமத்தை ஓதியது. ஆனால் வலிமையையும், மெலிமையையும் மோதவிட்டு இவைகளிடமும் மோதி கம்பீரமாக நிற்கிறது வெள்ளிக்கம்பி. இத்தனைக்கும் மெலிதாக வாள் போல் தோன்றினாலும் அது கம்பியே. வாள் கம்பியென்றும் கூறலாம். ஆனால் வாள் என அறுதியிட்டுக் கூற முடியாது.

வெள்ளிக் கம்பியோ திடீரென தனதுடலின் அனைத்து அணுக்களின்றும் மின்னிப்பரவும் ஆயிரம் வெப்பக் கதிர்கணைகளை ஒரே நேரத்தில் பாய்ச்சும் திறனுள்ளது. இதன் தாக்குதல் காலம், தூரம், நேரம் என பாராமல் எல்லா ஜீவராசிகளிலும் ஏகமாகப் பரவி நிற்கும். இதன் மின்னிப்பரவும் ஆற்றல் மின்னி மறையும், மறைதல் என்பது குறிப்பிட்ட கால அவகாசத்திற்குட்பட்டது. எப்பொழுது தோன்றும், தாக்கும் என்றும், யாரைத் தாக்கும் என்றும் சொல்ல முடியதது. வலியதைத் தாக்கும்பொழுது மெலியதை தாக்காமல் செல்லலாம். ஒரே நேரத்தில் வலியதையும், மெலியதையும் தாக்கலாம். எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் அதன் தாக்குதல் அந்தரங்கமாக எங்கோ
பூமிக்கு வெளியேறியள்ள சால்டன் தீவில் கூட வைக்கப்பட்டிருக்கலாம். காபாலத்திற்கு கீழேயும் வைக்கப்பட்டிருக்கலாம். சால்டன் தீவு உன் கபாலமாகக் கூட இருக்கலாம். அதற்கு கீழேயும் இருக்கலாம்.

வெள்ளிக் கம்பியுடனான போரை அனைத்து ஜீவராசிகளும் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பொழுது எழுந்து நடந்தவன் மட்டும் விரைந்து சென்று மண்டியிட்டுவிட்டான். பிறவற்றைப் பார்த்தே கற்றுக் கொண்டவன். மண்டியிடலை மட்டும் சுயமாக உருவாக்கிக் கொண்டான். நடப்பவை சிலவற்றையும் தன்வயன்படுத்தி, நிலத்தில் பூத்த மகரந்தங்கள் அனைத்தையும் அழிக்க ஆரம்பித்தான். வாழ்விற்கு வரம்பு வைத்தான். இரவு போருக்கான சுழல் அல்ல என முடிவெடுத்தாலும். போர் சில பக்கங்களில் அவ்வப்பொழுது நடந்து கொண்டிருந்தது. தாம் போரினின்று தனிப்பட்ட முறையில் தப்பயெண்ணி தன் இரத்தத்தை கூறாக்கி தன்னுடனான ஓரினத்தை சேர்த்து கலந்து தயார் செய்யப்பட்டது சிலசூழ்ச்சிகள் .ஒரு குறிப்பிட்ட கால அவசாகசத்துடன் போரில் சமாதானம் ஏற்பட வழி கிட்டிவிட்டது. கபாலத்தை தயார் செய்து கவசம் தாங்கி என்னுடன் வெள்ளிக் கம்பியுடனான போர் இல்லை என பறை சாற்ற துடித்தன எழுந்து நடந்த கும்பல். சமாதானத்திற்கான அனைத்து ஆயுதங்களையும் சேமித்து தன்னிடமில்லாதவைகளை தன்னிடம உள்ள ஆயுதம் கொடுத்து பறிமாறிக் கொள்ளப்பட்டது. எவ்வளவு பரிமாறுவது, எவ்வளவு பரிமாறுவது, கத்த ஆரம்பித்தது கூட்டம். விதியேற்படுத்தி, உயர உயர கற்களை நிரப்பி விதவிதமான ஒலியெழுப்பி ருசி காட்டி, சோம்பலை புகுத்தி, சொகுசு காட்டி என்றாலும் கூச்சல் மேலிட மேலிட, கபாலம் பிளந்து ஒலி பூமியை ஓட்டை போட பலர் ஓட்டை, ஓட்டை ,ஓசோன் ஓட்டை என் கத்திட, கத்தல் கூடிக்கொண்டே சென்றது.

வெள்ளிக் கம்பியின் புதிய பரிமாணம் புரியாமல் தவித்தது ஜீவராசிகள். வெள்ளிக் கம்பியின் தாக்குதல் யாவரையும் விட்டபாடில்லை. தாக்குதலை மறைக்க முயன்று முகத்தில் வெள்ளிரோகைகள் பரவ அதற்கும் பயந்து தன் இயக்கத்தை விரைவுபடுத்த உச்சி கபாலத்தில் ஏற்படுத்திய தாக்குதல் உள்ளங்காலை மண்டியிட வைத்தாலும் சற்று திடத்துடன் தோல்வி, தோல்வி என மனதிற்குள் கருவி தன்னிடம் தேடி சமாதானம் பேசி யாரிடமும் சொல்லாமல் நிம்மதி தேடி அலைந்தவனை, எங்கும் சொல்லாமல் பாடிய மூங்கிலும் மூச்சைவிட்ட குயிலும் கவர தனதியக்கத்தை ,உருக்கத்தை தனது உணர்வில் வாங்கி உதட்டிலும், நரம்பிலும், விரலிலும் விரல் விட்டு இனிமையான இசையையேற்படுத்தினான் ஒரு போராளி. அவனின் இசைக்கு மயங்கி ஓடி வந்தது ஒரு கூட்டம். சற்றே இளைப்பாற, சகலத்தையும் மறக்க கற்றுக் கொண்டது கூட்டம். அலைத்துச் சென்றன அனைவரையும் ஏதோ இராகத்தில், என்னவோ ஒரு தாளத்தில், காலம் . இசையில் மிதந்தவர்கள் போர் மறந்து, தொல்லை மறந்து, போக்கு மறந்து, காடு, மலை, சமவெளி, நீர் வீழ்ச்சி, தென்றல், சுகந்தம், மலர் கூட்டம், இனிய நெருடல், சிலாக்கியம், பிணைப்பு எல்லாம் கலந்த ஏகாந்தத்தில் திடீரென சால்டன் தீவினில் இறக்கி விடப்பட்டனர். பரிதவிப்பு, பதைப்பு அனைவரும் ஓடினர். அவரவர் இயக்க சக்திக்கேற்றவாறு, அதற்குள் இசைக்கருவியின் நரம்பு அறுந்து அனைவரின்
தொப்புளிலும் ஒரு மாய புகையை சுழலவிட்டது. பாவம் யாருக்கும் தெரிவதில்லை. வெள்ளிக்கம்பியின் மாயஜாலங்கள்.

அனைவரும் தங்களுக்கே உரித்தான ஆயுதங்களை பூட்டி போரிடாமல் சமாதானம் பேசிக் கொண்டிருக்க ஆரம்பித்துவிட்டனர். வெள்ளிக்கம்பியுடனான போரை அனைவரும் வெறுத்தனர். இதற்கென முடிவு, குழு குழுக்கலாக, அவரவர் கூட்டம் கூட்டமாக முடிவெடுக்கப்பட்டது. முதலாவதாக பூமியினின்று வெள்ளிக் கம்பியின் கோரப்பிடிக்கு ஆட்படாத உலோகத்திற்கு வெள்ளியென பெயரிடப்பட்டது. பின் அதனை கம்பி போன்ற அமைப்புள்ளதாக்கி தங்கள் இஷ்டம் போல் கலர் கலராக, பல நிறத்துடன், பல வடிவத்தில் வெள்ளிக் கம்பியை சிக்கவிடப்பட்டது. இதனைக் கொண்டு வெள்ளிக் கம்பியுடன் போரிட அவ்வவ்குழுக்களுக்கு, கூட்டத்திற்கு ஆணையிட்ப்பட்டது. பண்டமாற்று முறையில் வாங்கப்பட்ட ஆயுதங்களனைத்தும் இந்த போலி வெள்ளிக் கம்பிகளுக்கு அளிக்க முடிவெடுக்கப்பட்டது. வெள்ளிக் கம்பியுடனான சமாதானம் இந்த போலி வெள்ளிக் கம்பியால் சாத்தியப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. காலம் சற்றைக்கெல்லாம் போலி வெள்ளிக் கம்பியுடன் உண்மையான வெள்ளிக் கம்பியை கலந்து விட உண்மையான வெள்ளிக் கம்பி தனது பணியின் புதிய பாரிமாணத்தை நோக்கி பாய்ந்துவிட்டது. வெள்ளிக் கம்பிக்கு மாற்று வெள்ளிக் கம்பி என்பதால் அதனுடனான தாகத்தில், சேர்ப்பில் ,சேமிப்பில் கூட்டம், கூட்டமாக நடக்க ஆரம்பித்தது ஜீவராசிகள். போலிக்கு உண்மையைவிட வலிமைகூட ஆரம்பித்துவிட்டது. போலியின் முன் அன்பு, பாசம், பரிவு, காதல், கருணை, இரக்கம், நேர்மை, நியாயம் அனைத்தும் அடித்துச்செல்லப்பட்டது. கடவுளை படைக்க வைத்து அடிபணிய வைத்தது. இதனை இல்லை யென்றுகூறும் அளவிற்கும் இட்டுச் சென்றது.

போர், போர் வக்கிரமான போர் இப்பொழுது மோதிக் கொண்டது வெள்ளிக் கம்பியும் உயிரும் அல்ல. உயிரும், உயிரும். காரணம் போலி வெள்ளிக் கம்பியை சேர்த்தால் உண்மை தாக்காது என்ற பயத்தில் தாக்கினாலும் உடனடி சமாதானம் என்ற நினைப்பில் தொடர்ந்து போர், போரின் தன்மை மாறிக்கொண்டே வந்தது. இல்லை இல்லை போரின் பரிணாமம் பிரிதொன்றாக மாறவும் தலைப்பட்டது. திருடுதல், கலவாடுதல், கொள்ளையடித்தல் மூன்றும் பொதுவான ஒரு பிரிவின் முப்பாரிமாணம். சுரண்டுதல், பிடுங்குதல் இவை இன்னொரு பிரிவின் அதிகாரம். இப்படியாகவும் போரையும் ஜீவராசிகள் சந்திக்க நேரிட்டது. போலியிடம் ஒப்படைத்த பணி இனிதே நிறைவேறிக் கொண்டிருக்கிறது. போரிடுபவர்கள் வெள்ளிக் கம்பியின் தாக்குதலுக்கு தப்பிக்க பிறருடன் போரிட்டு வெள்ளிக் கம்பிக்கு அவர்களின் இரத்தத்தை அர்ப்பணிப்பதன் மூலம் தப்பிக் கொள்வார்கள். இதில் அரசனும், ஆண்டியும் அடங்குவர். வெள்ளிக் கம்பிக்கு அது உண்மையோ, போலியோ இரத்தம் என்றால் மிகவும் பிடிக்கும் என்ற நிலைக்கு சென்றது உலகு.தனக்காகவும், தன்னுடனும் போரிடும் அனைவரும் போலி வெள்ளிக் கம்பியின் முன் தனது இரத்தத்தினை உரைய வைத்தாலொழிய உண்மை வெள்ளிக் கம்பிக்கான தாக்குதலை அது நிறுத்தாது. போரிட வைக்கும் சூத்திரதாரி. தொடரும், தொடரும் இரத்த உறைதல், மீண்டும் தொடரும் இரத்த உறைதல். இரத்தம உறைந்தாலும், அதனுடன் தன்னுடன் போரிட ஏதாவதுண்டா என பல லட்சக்கணக்கான அழுகிய நெழிபுழுக்களை அனுப்பி அலசி அவற்றுடன் சொச்ச தாக்குதலை தொடுத்து மீண்டும் அலசி உலகம் முழுவதும் நாத்தத்தை ஏற்படுத்தி பின் புழுக்களின் இரத்தம் பார்த்து அவற்றிற்குள் ஆயிரம் தங்க வாட்களை ஏழுகூறாக்கி ,பாய்ச்சி, பிளந்து மீண்டும் அவற்றை மக்கச் செய்து நிலம் பிளப்பவன் கையில் கொடுத்து, அவனும் போரிட இரத்தம் கொடுத்து தனது நிலையில்லாத யாரும் வெற்றி கொள்ள முடியாத, எதிரியில்லாத, எதனாலும் வெல்ல முடியாத தனது மாய புகையால் அனைத்தையும வலைத்து அவைகளுடன் போரிட்டு அதனாலே இயங்க வைத்து ஆட்டி வைத்து உருவாக்கி, உருபார்த்து, அழிக்கும் முடிவில்லா மாயப் போரை மேற்கொண்டுவிட்டது வெள்ளிக்கம்பி.

காலில் ஒரு பரபரப்பு, பாய்ந்து சென்று பார்த்த பார்வையில் மின்னிக் கொண்டிருக்கும் பாதரச துகள் தாண்டி சமாதான ஆயுதங்களின் குவியல் பார்த்து ஒவ்வொரு கம்பியாக, ஒவ்வொரு கம்பிக்குமான சமாதானத்தையும் ஏற்படுத்த தன்னை ஆசுவாசப்படுத்தியது அந்த பூனை. வெள்ளிக்கம்பியால் இன்னும் சிறிது நேரத்தில் இரு கூறாக்கப்படுவது அறியாமல்..


.




.




.
Download As PDF

வெள்ளி, 26 மார்ச், 2010

புலிகளாவோம் .



.



புழுக்கை புல்லுயிரியாய்
நூற்றாண்டு நூற்றாண்டாய்
நாமனைவரும்
சாதியால்
மதத்தால்
மந்தை மந்தையாய்
புல்லுருவி
ஏய்ப்பான்களின்
மேய்ப்பு ஆடுகளாய்.
புலிகள்
பசித்தாலும்
புல்லைத்தின்னாதாம்
புற்களை மட்டு்ம்
புசித்து வந்ததால்
புரியவில்லை
இதுவரை.
புல்லைத் தவிர்ப்போம்
புலிகளாவோம்
இனி
மந்தை மந்தையாய்
புழுக்கை ஆடுகளாய்
அல்ல
பகுத்தறிவுபுலிகளாக
ஒன்று சேர்வோம்.


.




.



.

.

Download As PDF

புதன், 24 மார்ச், 2010

ஜோப்டோஸ் -புனைவு

.
.
துண்டிலுக்குச் சிக்காததால் வலை விரித்தேன் எனினும் சுருங்கிக்கொண்டான்.நீரிரைத்தால் அகப்படுவான் என்ற எண்ணத்தில் நீரிரைத்தேன் துகளாக எங்கோ சென்றுவிட்டான் . இன்று காலி
மதுக்கிண்ணத்தின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிலதுளி மஞ்சள் திரவத்தினின்று ஒரு ஒளிவீச்சில் என் கண்களில் முத்தமிட்டான் .தன் தங்கவாளால் வெட்டி விடுவானோ என் கண்களை என்ற
பயத்துடன் உற்றுப்பார்த்தேன் .எந்திரத்துப்பாக்கியின் கன கம்பீரமான தாக்குதலைவிட என் கண்களில் தன் வாளின் வீச்சால் நுழைந்து விட்டான் . வேறு வழியில்லாமல் கண்களை கடும்பனித்துளி் பரிமாண நேரத்தில் மூடிவிடும்படி ஆலிலோஸ் சொன்னான். ஜோப்டோஸ் எப்படி இப்படி வந்தான்
என்றுகண்கள் மூடியபடி கேட்டிடுக்கொண்டிருக்கின்றேன். ஆலிலோஸ் எப்பதிலும் கூறாமல் எதைஎதையோ தின்னும் சப்தம் மட்டிடும் காதில் கேட்கிறது.
முன்னொரு சமயம் ஜோப்டோஸ்சுடன் மலையேறிக்கொண்டிருக்கும்பொழுது இப்படித்தான் சார்மன் வந்தான் . இப்பொழுதுள்ள ஜோப்டோஸைப் போலல்ல சார்மன் . சார்மன் என்னுள் புகையாக இறங்கினான்.இன்பம் , இன்பம் என்றேன், மமதையுடன். இறங்கிக்கொண்டே இருந்தான் ஆதாள பாதாளத்தில் நெஞ்சுக்குள்
மாயக்குகைவைத்து இறுக்கி இறுக்கிவிடப்பட்டவன் பலகாத துரம் இறங்கியவனை காணவில்லை . தேடினேன், தேடினேன் காணவில்லை.தேடிக்கொண்டிருக்கும் வேலையில் அவன் நினைவு தவறும் வேலையில் எங்கிருந்து பாய்ந்ததோ அவன் தீ தாக்குகள் பல்லாயிரம் இரத்தின அம்புகளுடன் தகிக்கும் வெப்பத்துடன் நான் தான் சார்மன், நான் தான் சார்மன் என கைவிளிம்பு வரையுள்ள
ஒவ்வொரு செல்லும் உடல் பூராவும் கூறியது.நான் விரும்பியவன் எப்படி இப்படி மாறினான் . மனம் நினைப்பதற்குள் அதிலும் சார்மன் .வேண்டாம் சார்மன், வேண்டாம் சார்மன் எனக்கு சார்மன் வேண்டாம் எனக்கூறி ஓடிக்கொண்டிருந்தேன். மின்னலிடும் கடும் பாலைவனம் நோக்கி, உடம்பெல்லாம் எரியும் நெருப்புடன் ஓடினேன் , ஓடினேன் .சார்மன் நெருப்பாக வெளியேறிக்கொண்டிருந்தான்
என்பது மட்டும் தெரிந்தது .ஜோப்டோஸ் என் பாக்கெட்டில் பத்திரமாக அப்பொழுது பதுங்கியிருந்தான் .அன்று முதல் சார்மனை என் வாழ்வில் குறிக்கிட நான் விட்டதே இல்லை .ஆனால் ஜோப்டோஸும் ஆலிலோஸும் எப்பொழுதும் என்னுடனே வந்து கொண்டிருந்தனர் . ஆலிலோஸும் சார்மனும் உறவினர் என்றாலும் வேறு வேறு தளத்தினர் . ஏதோ ஓர் உறவு. உள்ளடக்கத்தில்
,வெளியீடு பரப்பில் .சார்மன் போல் ஆலிலோஸ் என்னை என்றும் எரிக்க நினைத்தவன் அல்லன் . ஆலிலோஸ் என் பயம் நீக்கியாக சில நாளும், துன்பம் பெருக்குபவனாகவும் ,இன்பம் தருபவனாகவும் பிறநாளும் இருப்பான் .சார்மன் ஒரு முட்டாள் ஆனால் ஆலிலோஸ் அறிவாளி அல்ல .
சார்மன் துரத்திய அன்றுமுதல் ஜோப்டோஸின் வேலை அமைதியாக என் பின் தொடர்தல் தான். நான் தங்க முத்துக்களை தூண்டில் போட்டபொழுது அவன் நீரில் கரைந்து விட்டான் . துண்டிலும், வலையும் ,நீரிரைத்தலும் எதுவும் அவன் வசம் அடங்கவில்லை.தப்பிக்கொண்டே என் பின் தொடர்ந்தான். இன்று
தான் காலிக்குப்பியின் ஓரத்தில் நின்று தன் தங்கவாள் வீச்சை ஆரம்பித்துள்ளான் .ஆலிலோஸ் ஒரு சுயநலவாதி . தான்தான் என்ற இருமாப்பு அவனுக்கு முக்கியமாகப்பட்டது . இப்பொழுது என் கேள்விகளை அவன் கேட்டுக்கொண்டே என்னுள் நுழைவதை விரும்பிக்கொண்டிருக்கின்றான்.அவனுக்கு
எப்படி தெரியும் இன்னும் சிறிது நேரத்தில் ஜோப்டோஸின் அகங்காரத்திற்கு என்னை நான் பலியிடப்போகின்றேன் என. சார்மனை பிரிந்தபொழுதே ஜோப்டோஸையும் கலட்டிவிட்டிருக்க வேண்டும் .
சார்மனுடன் கடைசியாக மலையேறிய பொழுது அவன் என்னைத்துரத்தி எரித்தானே யொழிய என்னுடன் வந்த ஜோப்டோஸ்க்கோ மற்றும் எனது நண்பர்கள் பிர்மோனிக்கோ ,பால்மனுக்கோ அது தெரியாது. அவர்கள் அவனிடம் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தனர் .ஆனால் நான் அறிமுகப்படுத்திய சார்மனை இன்னும் பிர்மோனியும் ,பால்மனும் உயிருக்குயிராய் நேசிக்கின்றனர் .சார்மனுக்கு உறவேன்பதால் ஆலிலோஸ் அன்று மலையேற்றத்திற்கு வராமல் எங்கோ போய்விட்டான்.உறவினர்கள் முன் கெட்டவர்களாயினும் தான் கெட்டவன் என்று கெட்ட உறவுக்காரர்கள் கூட ஒருவருக்கொருவர்
கூறுவதில்லை என்பதால்.
என் நண்பர்களுக்குத்தெரியாமலேயே எரிமலை லாவாவை என் உடலில் புகுத்தி என்னுடலில் வெப்பத்தை தள்ளிவிட்டிருந்தான் சார்மன். வெடித்துச்சிதறிக்கொண்டிருக்கும் என் எலும்புத்துண்டுகளை தொட்டுக்கொண்டே பிர்மோனியும் ,பால்மனும் சிரித்துக்கொண்டிருந்தனர்
.அவர்களுக்கு சார்மன் எதையோ கொடுத்து மயக்கியிருக்கவேண்டும் . எனக்காக
வருத்தப்பட்டதாகவோ,ஆதங்கப்பட்டதாகவோ, எனக்கு ஏற்பட்ட அவஸ்தையை உணர்ந்தவர்களாகவோ, உணராதவர்களாகவோ,எதுவாகவோ அவர்கள் இல்லை.என் அருகில் மட்டும் இருந்தனர் .அந்த வெள்ளிப்பிஞ்சுக்கரம் பற்றி,வெப்ப வீதியினின்று வெந்து கொண்டிருந்த உடலினின்று புறப்பட்ட
என் எலும்புத்துண்டுகளும் ,சதைகளும் ,இரத்தமும் சிறிது சிறிதாக வெள்ளிப்பிஞ்சுக்கரம் ஒடிய ஏறி அந்த பச்சிளம் தேவதையின் மஞ்சள் தலைகொய்து வாயில் அடக்கி பல மணிநேரப்போராட்டத்தில் ,உத்வேகம் பெற்ற மஞ்சள் தலை சுழன்று ,சுழன்று வயிறு,குடல், நாளம் ,இதயம், நுரையீரல், சிரை ,தமனி என மாறி மாறி ஒவ்வொருசெல்லிலும் மைடாசிஸ், மியாசிஸ் பார்த்து சார்மனை துரத்தியடித்தபொழுது பிர்மோயும் ,பால்மனும் அவனுடன் அந்நியோனியமாக இருந்தனர் . வேண்டாம் நண்பர்களே,வேண்டாம் , சார்மன்
வேண்டாம் .அவன் உங்களை எரித்துவிடுவான். அவனை விட்டுவிட்டு வந்துவிடுங்கள் என்றேன் . எவ்வளவு சொல்லியும் கேட்பதாக இல்லை வர்கள் .நான் ஜோப்டோஸ்சுடன் வந்துவிட்டேன்.
அன்று எவ்வளவு நல்லவனாக இருந்தான் ஜோப்டோஸ்.உன்னால் சார்மனின் ஆழ்துளை உலகில் மேகமாகமுடியாது .சார்மனால் உன்னை புரிந்துகொள்ள முடியவில்லை . சார்மனுடன் இனி எந்த ஜென்மமும் சேராதே மேலும் அவன் உன்னை அடுத்த சந்திப்பில் கொன்றுவிடுவான் எனக்கூறி என்னுடன்
அதி்க ஒட்டுதலை ஏற்படுத்திக்கொண்டான் ஜோப்டோஸ் .அப்படிப்பட்ட ஜோப்டோஸ் இன்று என்னை கேவலப்படுத்தப்பார்க்கின்றான் . நன்றாகத்தெரிகிறது .எனது அறையில் உள்ள எனது புதிய
மூன்று நண்பர்கள் மத்தியில் ஜோப்டோஸு டன் எனக்கு அதிக பழக்கம் , ஜோப்டோஸ் இல்லாமல் என்னால் ஒருபொழுதும் இருக்கமுடியாது என அவர்களிடம் என் வார்த்தைகளை பிய்த்தெரிந்து கொண்டிருந்த
வேளையில் என்னை கேவலப்படுத்த தன்னை தயார்படுத்திவிட்டான் ஜோப்டோஸ் என உணரத்தொடங்கினேன் . நான் கண்களை மூடினேன் .
மூடியது ஏன் ? என்று புதிய நண்பர்கள் மூவரும் மாறிமாறி கேட்டனர் .
யோசனை செய்கின்றேன் என்றேன் . மாற்றி ...,மாற்றி .....யோசனையா ?..!..
என சிரித்தார்கள் .அவர்களிடம் ஜோப்டோஸின் சரிரத்தின் ஒரு ஒளி இருந்ததாக
எனக்குப்பட்டது . சிரிப்பு , சிரிப்பு சதிகாரர்களுக்கு இது பழக்கம் என்பதால்
கண்களை திறக்கவில்லை .இருந்தாலும் ஆலிலோஸ் மெதுவாகத்திற நான் அவனை அமிழ்த்தி விடுகின்றேன் என்று என் உதடருகில் சொன்னான் , கண்களை மெதுவாகத்திறந்தேன் . கெட்டுவிட்டது,எல்லாம் கெட்டுவிட்டது ஜோப்டோஸின் சூழ்ச்சியை ஆலிலோஸும் புரிந்துகொள்ளாமல்.
நான் கண்களை திறக்க ஜோப்டோஸ்ஸின் ஆயிரம் தங்க வாட்கள் வைர ஒளி தாங்கி என் கருவிழிகளை பாதி பாதி கூறாக்கி என் அறையில் சுற்றவிட்டு விட்டாது .அறை முழுவதும் ஜோப்டோஸ்ஸின் ஆதிக்கம்
தலைவிரித்தாடியது . நிமிடத்திற்கு நிமிடம் ஜோப்டோஸ் அறையின் ஒவ்வொரு பரிமாணத்தையும் மாற்றிக்கொண்டிருக்கின்றான் .தங்க வாட்களை அறை விளக்குகள் ஒவ்வொன்றிலும் வட்டமடிக்க வைத்து
என்னை நோக்கி ஏவிவிட்டிருந்தான். மின்விசிறியை தனது ஆக்கிரமிப்பில் அதி பயங்கரமாக உருமாற்றி என்னை பிரபஞ்ச வெளியில் ஒரு கரும்புள்ளியிடத்திற்கு தூக்கியெறிய அபாயகரமாக சுழல விட்டுக்கொண்டிருக்கின்றான் . திரைச்சீலைகூட வழித்தேடலாக உணரும்நிலையில் . அறையிலுள்ள ஒவ்வொரு பொருளும் ஜோப்டோஸின் ரூபமாற்றத்தால் நட்சத்திரங்களையும்,மின்னல்கீற்றையும் வெளியிட்டுக்கொண்டிருந்து. அறையே நிலைகுலைந்து ஆடிக்கொண்டிருந்தது. பொருண்மை தாங்காத பொம்மலாட்டத்தில் அங்குமிங்கும் . ஆலிலோஸிம் மெதுவாக எவரிடமோ இருந்து வெளியேறிக்கொண்டிருந்தான் .
மீண்டு் இமைகளை மூடிக்கொண்டேன் . ஜோப்டோஸ் ,ஜோப்டோஸ் ஏன் எழுந்து
வெளிப்பிதுங்கப்பார்க்கின்றாய் ?.. எத்தனை நாள் நான் கூறியபடி ஆடியிருக்கின்றாய், சொல் ? ஜோப்டோஸ் சொல் ?இன்று என்னை ஏன் இப்படி அவதிக்குள்ளாக்குகின்றாய் என்றேன் ...ஒரு கரத்தை என் கரத்துடன் பற்றிக்கொண்டு ...என்ன செய்ய ?...ஜோப்டோஸ் என் குரல்வளையினின்று ஐந்து அங்குலம் தள்ளி நின்றுகொண்டு காற்று குமிழிகளை சிறிது சிறிதாக தன் கைகளில் எடுத்துக்கொண்டு , என்னுடன் பேச ஆரம்பித்தான் .
நண்பா , என்றான் .ஆயிரம் ஃகதைகள் கொண்ட போர்வீரர்கள் என்னுடன் சேர்ந்தது மாதிரி தோன்றியது . ஆனால் ,அவனே ஏதோ சக்கரவர்த்தியாகிவிட்ட அடிமை போல .நான் பல நாட்கள் உன் அடிமையாக இருந்தேன் ,ஆனால் நீயோ என்னை அதிகமாக உன் வசத்திற்கு ஆட்பட வைத்து ... !!!...??. .. இதோ எனது அடிமைசாசனத்தை கிழித்தெரிந்து லாவாபோல் வெளிப்படப்பேகிறேன் . நீ என்னை இந்நிலையில் முழுமையாக ஒதுக்கி விட முடியாது .எனினும்
,என் எதிர்ப்பின் வளைக்கரங்களைமட்டுமேநீஒருவேளைவெற்றிபெற்றாயானால்
முறியடித்திருந்திருப்பவனாவாய் . மேற்கொண்டு என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றான் . எப்படியும் மூவர் முன்வெளிப்படுத்தி என்னை அவமானப்படுத்தப்போகிறான் .பின் என்ன செய்ய ..அவமானப்பட்டுத்தான் ஆக
வேண்டும் என முடிவு செய்து ஆலிலோஸின்கையைஉதறிவிட்டேன்.மீண்டும் ஒரு கரடுமுரடான சிரிப்பு நண்கர்களிடமிருந்து .கேட்டுக்கொண்டே
ஜோப்டோஸ் சதியின் கோரப்பிடியினின்று தப்ப எண்ணிஅவனுடன் சண்டையிட ஆரம்பித்தேன் . மெல்ல ,மெல்ல ஜோப்டோஸ்என் குரல்வளை பிதுக்கி ,வழிந்தோடி,களிமண் பட்டு தெரித்து ,பாதாளத்தை நோக்கி தன்
அகங்காரத்தை மட்டும் விட்டு,செல்லப்பார்க்கின்றானே. அகங்காரத்திற்கும் ,அடிமையின்சுதந்திரத்திற்கும் அதிகாரம் கொடுக்கக்கூடாது . ஏன் ஜோப்டோஸிக்கே இடம் கொடுக்கக்கூடாது என பிய்த்தெரியும் இரத்த நாளத்துடன் கண்மூடிஎன்னை மறைத்துக்கொணடு் .மீண்டும் அவன் அதிகாரத்திற்கு ஆட்படமுடியாதளவு ,வேகாஸ் நரம்பு தனது ஆழ்நிலைக்கு இழுத்துச்செல்ல , அதன் அடித்தளத்திற்கு தாவி.என்னை ? எப்படி ? ஜோப்டோஸ் ! .. தெரியவில்லை .
விடுதிப்பையன்அறைமுழுதும் ஏதோ தெளித்து என்னவே செய்துகொண்டிருப்பதைப்பார்த்தேன். தலைவலியின் காரணமாக ஒரு டீக்கு ஆர்டர் தந்து மீட்டுப்படுத்தேன் என்னை சரி செய்துகொண்டு .எங்கிருத்து இவைகள் தோன்றுகின்றன என எண்ணிப்பார்க்கின்றேன் . தெரிந்தும் ,தெரியாமலும் மறைந்துவிடும் இந்த வெட்டுக்கிளிகளின் அதிகார பலமில்லா ஆனால் அனைத்தையும் ஆடவைக்கும் அகங்கார பலத்திற்கு
அடிபணிந்து அவதைக்குள்ளாவது மிகவும் வேதனை . ஒரு காலகட்டத்தில் தோன்றிஒரு காலகட்டத்திற்குள் சென்றுவிடும் இவைகள் .ஆனால் ,காலகட்டம் என்பது எதிலிருந்து எதுவரை என வரையறுப்பது சுலபமல்ல .எனினும் காலகட்டம் என்ற ஒன்று கட்டாயம் இவற்றிற்கு உண்டு .ஜோப்டோஸின் காலகட்டமும் இப்படித்தான் என்னுள் ..

.
.

.
Download As PDF

செவ்வாய், 23 மார்ச், 2010

எது முதல் ... முட்டையா ? கோழியா ?

.
.


.


பருவ வேதாரண்யம்
பறக்கும் பூக்கள்
எங்கும் பறவை இரைச்சல்


======


பறந்து செல்லும் பறவைகள்
பச்சை வயல்வெளி
நிழலான பயணம்

======

எது முதல்
முட்டையா ? கோழியா ?
கால்சியம் பாடும் கவி


.


.

.

Download As PDF

வெள்ளி, 19 மார்ச், 2010

என்ன செய்து கொண்டிருக்கிறது இந்த உலகம் ?.

.


.


என்ன செய்து கொண்டிருக்கிறது இந்த உலகம் ?.
புதிய தெய்வங்களை கண்டுபிடிக்கிறது .
புதிய சட்டங்களை உருவாக்குகிறது .
பாப்லார் மரங்களில் காற்று ஊடுருவிச் செல்லும் ஓசை
காலையொளியில் ஒரு தேவனைப் போல்
சுடர்விட்டபடி ஒரு தேனீ இதோ செல்கிறது
அதன் ரீங்காரத்தின் ஓங்கார நாதம் .
உலகை விடுங்கள் ,நான் கேட்க விரும்பும்
பூமியின் வரலாறு இதில்தான் உள்ளது .


-ஹெர்மன் ஹெஸி .


.


.

.


.

Download As PDF

வியாழன், 18 மார்ச், 2010

சாவுக்கு அஞ்சாத சிறுவர்கள்

.

''ஏனைய பலரையும் போல அவரும் சாவதற்காக இடுகாட்டுக்குப் போய்விட்டார் என்றா நினைக்கிறாய் ? சறுக்கூர்தியில் நாம் அவர் உடலை இழுத்துச் செல்ல வேண்டி வருமென தாமே புறப்பட்டு அங்கே சென்றுவிட்டார் என்கின்றாய் ? ..இல்லை, அம்மா,அதெல்லாம் இல்லை ! ''
''அதைப் பற்றிப் பேச வேண்டாம் .''
''திரும்பி வருவதாக வாக்களித்துச் சென்றிருக்கிறார் ...எனக்கு வெதுவெதுப்பாக இருக்கட்டுமென்று மேல் கோட்டை என் மேல் போர்த்துவிட்டுச் சென்றார்.
மெய்யாகவே நீ அப்படியா நினைக்கிறாய் ? ...இல்லை ,அம்மா,என்னை அவர் ஏமாற்ற மாட்டார் ! ''
''ஏமாற்ற மாட்டார் ,நீ பயப்படாதே .....அவருக்காக நாம் காத்திருப்போம் .நாம் உயிருடன் இருந்தாக வேண்டும் ,தெம்பு இழக்கக் கூடாது .நாம் சாகாமல் இருந்தாக வேண்டும் .அல்யோஷா,நாம் உயிரோடு இருக்கவேண்டுமென்று எத்தனையோ பேர் உயிரை விட்டிருக்கிறார்கள் ....உயிரோடு இருந்து பகைவனை முறியடித்தாக வேண்டும் .இது நமது கடமை .''

மாஸ்கோ ,முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட ''சாவுக்கு அஞ்சாத சிறுவர்கள் '' என்ற வீரச் சிறுவர்கள் கதைகள் அடங்கிய புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது மேற்கண்ட வரிகள் -பக்கம் 102.
இந்தப்புத்தகம் தான் என்வாழ்வில் நான்வாங்கிய முதல் புத்தகம்(காசு போட்டு) .பசுமையான அந்த நிகழ்வு என்னால் மறக்கமுடியாதது .மதுரை மாவட்டம் (இப்பொழுது தேனி மாவட்டம்) வத்திலக்குண்டிற்கும் பெரியகுளத்திற்கும் இடையில் அமைந்துள்ள தேவதானப்பட்டியில் இருக்கும் அரசினர் மேனிலைப்பள்ளியில் அப்பொழுது நான் 8 வகுப்பு படித்துக்கொண்டிருக்கின்றேன் 1980ல்.எங்கள் பள்ளியிலேயே ஏற்பாடு செய்திருந்த புத்தகக்கண்காட்சியில் மலர்ந்திருந்து என்னை இந்த புத்தகம் வரவேற்றது .4 ருபாய் 50 பைசா புத்தகம் 4 ருபாய் .கையில 2 ருபாய் தான் இருந்துச்சு ,புத்தகத்தை விட்டுவர மனசில்லை .அப்ப எங்கண்ணன் அதே ஸ்கூலில் தான் +1 படிச்சிட்டு இருந்திச்சு .2 ருபா வீட்டுக்கு வந்து தரேனு செல்லி கடன் வாங்கி வாங்கினேன் .ரொம்ப சந்தோசமா இருந்துச்சு அதிலிருந்த கதைகள் ,படங்கள் அப்பப்பா.

எங்கம்மாய் வீடு கோவை மாவட்டம் (இப்பொழுது ஈரொடு மாவட்டம்) ஈரொடு டூ மேட்டூர் ரோட்டில் உள்ள அம்மாபோட்டையிலிருந்து அந்தியூருக்கு செல்லும் வழியில் ,5வது கிலோமீட்டரில் உள்ள ஊஞ்சப்பாளையத்திலிருக்கும் மேற்காலத்தோட்டம் .அங்கு கோடை முழுவதும் நாங்க , எங்க பெரியம்மா மற்றும் சித்தி வீட்ல இருத்து எல்லோரும் வருடாவருடம் டெண்டு அடிப்பது வழக்கம்.எங்கப்பா தேவதானப்பட்டியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மஞ்சளார் அணையில் வேலைபார்த்துவந்தார் .அங்கு தான் நாங்க ,நான் 10 வருப்பு படிக்கும் வரை குடியிருந்து வந்தோம் .வருசாவருசம் எங்க அப்பிச்சி பழனிக்கு வந்த முருகனுக்கு மொட்டையடுச்சுட்டு மஞ்சளார் டேம் வந்து எங்களை லீவிற்கு மேற்காலத்தோட்டத்துக்கு கூட்டீட்டுப் போகும்.அங்கு நாங்கள் ஆட்டம் பாட்டத்தினுடே இரவு உறக்கத்திற்கு முன் பல மணிநேரம் எங்க அப்பிச்சி ,மாமாக்களுடன் நாங்க படிச்சதை விவாதிப்போம் .அதோடு புதுப்புத்தகம் வாங்கிட்டுப்போய் .அங்கு படித்து பகிர்ந்துகொள்வோம்.இந்தப்புத்தகம் வாங்கிய வருடம் எங்க அப்பிச்சியின் வரவை எதிர்பார்த்து ஆவலாய் இருந்த கணங்கள் அப்பப்பா.

பதின்ம நினைவுகள் பற்றி தொடர் பதிவிட நண்பர் Starjan ( ஸ்டார்ஜன் ) அழைத்த பொழுது நான் முதலில் வாங்கிய இந்த புத்தகம் தான் ஞாபகத்திற்கு வந்தது .30 ஆண்டுகள் தாண்டிவிட்டதை அதைப்பார்த்த பிறகு தான் தெரிந்துகொண்டேன் .அதைப்பார்த்ததும் மீண்டும் ஒரு முறை படிப்பதேன்.எனக்கு பல விசயங்களை அது மீண்டும் புதிதாக கூறியது .இப்போதைய...சுழலில் அதில் உள்ள சில வரிகள் என்னை ஏதோ பிரண்டியது ...அப்படிப்பிரண்டியதில் தலையான வரி தான் மேலே உள்ள வரிகள் .
இது போன்று நாம்... நாம்... நமக்காக ...நமது மொழியில் ...எழுத வேண்டாமா ? ... என்று ?...என்று ?...
என்ற ஏக்கத்தினையும் விதைத்தது இது .


பதின்மப் பதிவு தொடரும் ...

தொடர் பதிவிட அழைத்த நண்பர் Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களுக்கு மிக்க நன்றி .


.



.


. Download As PDF

இந்த 3 நாட்களும் ...நாம் ஒதுக்குவோம் ...

.
.

நம் வீட்டு வாசலில் ,ஜன்னல் கம்பியில்
பள்ளி மரக்கிளையில் கிரிச்சிட்டுப் பறந்த
சிட்டுக் குருவிகள் இப்போது எங்கே ?
நம் வீட்டு நாய் போல் நன்றியுடன்
நம் வளர்ப்புப் பூனை போல் பாசத்துடன்
நம் தோட்டத்துப் பசு போல அன்புடன்
நம் வாசலில் குதித்துக் குதித்துப் பறந்த
அந்தக் குண்டு அழகிகள் எங்கே?


நம் வீட்டுக் கூரையில் குடியிருந்த சிட்டுகள்
காங்கிரீட் காடுகளில் கூடுகட்ட இடமின்றி ...
நாம் வயல்களில் கொட்டிய நச்சு ரசாயனத்தில்
மண் புழுக்கள் சாக -இரையின்றி...
நம் கார் புகையின் மீதைல் நைட்ரைட்
பூச்சிகளைக் கொல்ல பட்டினி கிடந்து ...
செல்போன் டவரின் நுண்ணலையால்
முட்டைகள் மலடாக...இனக் கொலையாகி ...
காணாமல் போனதற்குக் கவலைப்பட்டோமா?


ஆறுமுகத் தாத்தா போல் அரிசி போட ஆளில்லை .
அவசர உலகத்தில் அன்புக்கு இடமில்லை ...

வீட்டுக் குருவியில் துவங்கட்டும் அன்பின் பாடம் .
பாரதி போல் தானியம் இரைத்து மகிழ்வோம் .
மரக்கிளையில் சட்டி கட்டி வாழ்விடம் தருவோம் .
மாடியில் தட்டில் நீர் வைத்து தாகம் தீர்ப்போம்.
நம் கண்ணாடி முன் மீண்டும் குருவிகள் பாட்ட்டும் .
குருவிகள் தினம் காலை வணக்கம் சொல்ல வரட்டும் .
குருவிகள் வாழ்த்த ...வாழ்வோம் ...மகிழ்வோம் .

விட்டு விடுதலையாகிப் பறப்போம்
அந்த சிட்டுக் குரிவியைப்போல ...


============

உலக சிட்டுக்குருவிகள் தினம் -மார்ச் 20

WORLD HOUSE SPARROWS DAY -MARCH 20


=========

உலக வன நாள் - மார்ச் 21


==========

உலக நீர் நாள் - மார்ச் 22

==========


இந்த மூன்று நாட்களும் ... நாம் ஒதுக்குவோம் ... இயற்கைக்காக


இந்த நாள் தொட்டு .....
நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டு சன்னலோரத்தில் அனுதினம் ஒரு பிடி தானியம்
பாசப்பறவைகளுக்காக வைப்போம் . அவைகளை உண்டு பறவைகள் பசியாரும்
மற்ற உயிரினங்களும் மகிழ்ந்து உண்ணும் .

அது போலவே ஒரு குடிநீர் தட்டு நம் வீட்டு மொட்டை மாடியிலும் ,நம் வீட்டு ஓரத்திலும்
வைப்போம் .இவைகளை பறவைகளும் ,தெருவில் இருக்கும் மற்ற உயிரினங்களும் வெயில் கால
வெப்பத்தைத் தனிக்க குடித்து மகிழட்டும் .
வெயில் காலங்களிலும் மற்ற பொழுதுகளிலும் இவைகள் உணவையும் ,நீரையும் தேடித்தேடி தங்களை
கொன்றுகொள்கின்றன .

அதலால் நாம் இந்த நாள் தொட்டு இவற்றை மேற்கொள்வோம் .
இந்த மூன்று நாட்களும் இதற்காக நாம் ஒதுக்குவோம் .

=========

இயற்கையை காக்க ,
காடு வாழ நாடு வாழும் எனும் நற்செய்தியுடன்.
'காவிரியைக் காசுக்காகக் களங்கப்படுத்தாதே '
என நன்னீர் காக்கும் விழிப்புணர்வுக்கோஷத்துடன் மார்ச்21 ஊட்டியிலிருந்து ஈரோட்டிற்கு
சைக்கிள் பயணம் மேற்கொள்ளும்

'உதகை லிம்கா பிரசாத்தை'

வாழ்த்தும்

=போதி இயற்கைக் குழு ,
=சித்தார்த்தாப் பள்ளி ,ஈரோடு ,
=கேர்&லவ் வெல்பர் டிரஸ்ட் ,ஈரோடு,
=சுடர் -சத்தியமங்கலம் ,
=NILGIRI WILDLIFE & ENVIRONMENT ASSOCIATION
=டாக்டர் ஜீவானந்தம் ,ஈரோடு
இவர்களுடன் இணைந்து
எஸ் .இராஐ சேகரன் (நண்டு@நொரண்டு),வழக்கறிஞர் ,ஈரோடு.


=====


.

.

.

.

Download As PDF

திங்கள், 15 மார்ச், 2010

நவீன பாசிஸ்டுக்கள் ... உஷார் ...

.

.


இன்னும் மனிதர்களிடையே விழிப்புணர்ச்சி மலரவேயில்லை ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு சிறு முயற்சியைக்கூட எந்த ஒருவரும் தனக்கே கூட செய்துகொள்வதில்லை .அதற்குக் காரணம் தங்களை மனித நேயர்களாகவோ,நாத்திகர்களாகவோ காட்டிக்கொண்டாலே போதும்
அனைத்தும் பொற்றுவிட்டவர்களாக,எல்லா விசயமும் தெரிந்தவர்கள் போல் வலம் வரும் ஒரு சூழலை அரசியலில் இருந்து அடித்தட்டு மக்கள் வரை விதைத்து விட்டனர் .இந்த விதையில் முளைத்தவர்கள் மாறத நச்சுக்கள்.உண்மையில் பெரியாரோ ,மார்க்ஸொ இன்ன பிற அறிஞர்களே அதனை அறியும் நிலையில் இருந்தால் வெட்கித் தலைகுனிவர் .ஏனெனில் இவ்வாறு உருவாகிய நபர்களிடம் எந்த ஒரு அறிவும் ,அதன் பயனான வளர்ச்சியையும் பார்க்கமுடியாது. இப்படிப்பட்டவர்கள் தங்களை
எதுவாகவும்வடிவமைத்துக்கொள்வர்.இவர்கள்சினிமா,டீ.வி,சாட்டிங்,மொக்கை,அரசியல்,இலக்கியம்,
இன்னிசை,கேலி ,கிண்டல்,கடி என குழல் இனிது ,யாழ் இனிது என பொழுது போக்கு அம்சங்களில் தங்களை அமிழ்த்தி மற்றவர்களுக்கு வழிகாட்டாத தங்களின் மடத்தனத்தை மறைக்க கண்டதுபோல் கண்டதைப்பேசி காலம் கடத்துவர் .கவிஞராக, எழுத்தாளராக,நாத்திக சிகரமாக,மனிதகுல
மாமணியாக, மாமேதமையாளராக மேலும் பிரபலமாக, முடிந்தவர்கள் தலைவர்களாக. இவர்களிடம் பாசிச கொள்ளை வேறுன்றி இருக்கும் .அவர்களின் பேச்சும், எழுத்தும், நடவடிக்கைகளும், செயல்களும் ஆழ்ந்து வாசிக்க ,நோக்க அது பளிச்சிடும் .ஆனால்,அவர்கள் எப்பொழுதும் தங்களை ,மக்களின் மீது சிறுதுரும்பு பட்டாலும் பதறி ஒடி உதவும் பண்பாளர்களாகவே வேடமிடுவர் .இவர்கள் நவீன பாசிஸ்டுக்கள்.

நவீன பாசிஸ்டுகளிடமிருந்து துளிகூட இன உணர்வோ, வெளிப்படையானதன்மையோ இருக்காது. இவர்கள் பணத்தின் மிதே தங்களின் பார்வையையும்,பயணத்தையும் வைத்திருப்பர் .இவர்களுக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை. இனத்தைப்பற்றியோ,இழிநிலைபற்றியோ அழிவைப்பற்றியோ ஒரு வார்த்தையும் பேசவோ, எழுதவோ மாட்டார்கள் தான் .அப்படியே எழுதினாலும் ஊருடன் ஒத்து ஊதுவார்கள் . சரி,அதிருக்கட்டும் விலைவாசி விசம்போல் ஆகிவிட்டதென்றால் ஒரு கண்டனம் கூட காட்டாமல் பேருந்து ஓட்டுநர் பெயரில்லாமல் வண்டி ஓட்டுகின்றார் என்ன கொடுமையடா கோபாலா
என கோபத்துடன் வெளிப்பட்டு ருத்ரதாண்டவனாகி சமுதாயம் காப்பார் .சரி,அது
போகட்டும்,கோவில் கோவிலாக கோடிகோடி மக்கள் சென்றாலும் அதற்கான காரணம் அறிந்து மக்களை நல்வழிப்படுத்துவதை விடுத்து .கடவுள் என்றும்,புசாரி என்றும் ,ஏமாற்றுக்கூட்டம் என்றும், சாமியார்கள் ஓழுக்கங்கொட்டுவிட்டார்கள் என்றும் ஏகத்துக்கு துக்கப்படுவர் .ஆனால்,
அப்படிச்சொல்பவர்கள் எல்லாம் என்ன ஒன்றும் அறிவில்லாதவர்களா?அல்லது பைத்தியங்களா ? .அப்படி ஒன்றும் இல்லையே, அப்படியிருந்தும் ஏன் செல்கின்றனர் ? .அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளும் ,அதிலுள்ள சங்கதிகளும் என்ன ? என்ன செய்தால் திருந்துவர்? என சிந்திக்காமல்.கீழ்தரமாக திட்டுவதாலோ,எழுதுவதாலோ அல்லது ஒதுக்குவதாலோ மேற்கொள்வது
மந்திரத்தால் மாங்காய் விழும் என்னும் முடத்தனத்தில் இருப்பவருடன் கைகோர்த்து நடப்பதற்கு ஒப்பாகும். உதாரணமாக எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை கருங்குறங்கு மருத்துவரிடம் லேகியம் வாங்கி சாப்பிட்டால் நோய் தீரும் என்னும் மூடநம்பிக்கையை எங்கனம்
தடுக்க.மருந்தைக்கொடு மூடநம்பிக்கை ஓடியே போகும் .அதை விடுத்து மூடத்தனம் ,மூட நம்பிக்கை என பேசியும்,எழுதியும் வருவதால் என்ன பயன்.

இவ்வாறு திரிபவர்களைக்கண்டுதான் ,

நவீன பாசிஸ்டுக்களிடமிருந்து நம்மை உஷார்படுத்த

வள்ளுவர் இவர்களை

'' குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். ''

என்கின்றார்.
இங்கு மக்கள் மழலைச்சொல் என்பது மக்களின் கஷ்டம் எனக்கொள்க.

.....

.


.


வாள்ளுவர் அறியப்பட வேண்டிய உண்மைகள் ...

தொடரும் ....

.

.


.


.

Download As PDF

மனிதனின் அறியாமை ...

.


.


.


எத்திசையும் சாலைகள்
எதிலும் பயணிக்கவில்லை.
நகரைக்கடக்கும் நாரைகள் .


=========

நிற்க மறுக்கின்றன
ஒற்றைக்காலில் கொக்குகள்.
வரண்ட காவேரி .

==========

செயற்கை குளம்
கொக்குகளுக்கு தெரியும்
மனிதனின் அறியாமை.

.

.


.


.

Download As PDF

சனி, 13 மார்ச், 2010

தனது தாயக பூமியை .......

.


.

நாங்கள் இந்த அழகான பூமியை ஒருபோதும் மறப்பதில்லை

எங்களுக்கு பூமியே தாய் .
நாங்கள் பூமியின் ஒரு பகுதி .
பூமி எங்களின் ஒரு பகுதி .
வாசனைப்பூக்கள் எங்களின் சகோதரிகள் .
மானும்,குதிரையும் ,பருந்தும் எங்களின் சகோதரர்கள்

பாறைச்சிகரங்களும் ,புல்வெளிகளில்
ஊற்றெடுக்கும் சுனைகளும்,குதிரையின்உடல்வெப்பமும்,மனிதனும் -எல்லாம் ஒரே குடும்பம் .
நதிகள் எங்களின் சகோதரர்கள் .
எங்களுக்கு காற்று விலைமதிப்பில்லாதது .
விலங்குகள் இல்லாமல் என்ன மனிதன் ?
விலங்குகளுக்கு நேர்வது யாவும் தாமதமின்றி மனிதனுக்கும் நேரிடும் .
பூமிக்கு எது நேர்ந்தாலும் அது பூமியின் பிள்ளைகளுக்கும் நேரிடும் .
நிலத்தின் மீது துப்பும் போது மனிதன் தனது உடம்பின் மீதே துப்பிக்கொள்கிறான் .....


-1854 ல் தனது தாயகபூமியை விற்க மறுத்த செவ்விந்தியத்தலைவர் சியாட்டில் அமெரிக்க
குடியரசுத்தலைவருக்கு எழுதிய கடிதத்தி்லிருந்து .......

.

.

.


.

Download As PDF

வெள்ளி, 12 மார்ச், 2010

சாமியார்களும் நம்பிக்கைகளும் .

.

.

ஆரம்பத்தில் நோய் என்பது கடவுளின் சாபம் அல்லது தண்டனை அல்லது கோபம் என்றே எண்ணப்பட்டது .

சிலர் நோயிற்கு காரணம் பிசாசுகள் என்றும் மாந்தீரிகர்கள் நோயை போக்குவார்கள் என்றும் நம்பினர் ரோமானியர்கள் மருத்துவத்தை விட மாந்தீரிகத்தை அதிகம் நம்பினர்.

மேலை நாடுகளில் "பண்டோரா" எனும் பெட்டியை திறந்ததிலிருந்து தான் உலகில் நோய்கள் ஏற்பட்டதாக மேலைநாட்டுப் புராணங்கள் கூறின .அந்த பெட்டியை திறப்பதற்கு முன் உலகில் நோய்களே கிடையாதாம் .

பிளேக்நோய் இங்குபஸ் ,சுக்குபஸ் என்ற வேதாளங்களின் செயலாலே ஏற்படுவதாக பிரானஸ் நாட்டினர் கருதினர் .

இராஜ தரிசனம் நோயைத்தீர்க்கும் என்றும் நம்பினர். அதற்காக மக்கள் பல காததுரம் கடந்து பல மணிநேரம் காத்திருந்து இராஜ தரிசனம் பெற்று சென்றுள்ளனர் .இதன் வளர்ச்சியாக சாமி தரிசனம் ,பின் சாமியை தரிசித்த இடத்திலிருந்து சாமியார் தரிசனம் என உருமாறி இன்று இதில் மக்கள் அதிகம் நிலைத்துவிட்டனர் .ஆனால் அறிவியல்பூர்வமான உண்மை என்னவென்றால், எந்த ஒரு சாமியாராலும் மற்றும் அவர் கற்றுத்தரும் எந்த ஒன்றாலும் , வேறு எதிலாலும் எந்த ஒரு நோய் கிருமியின் எந்த ஒரு அணுவையும் ஒரு துளிகூட அசைக்கமுடியாது என்பதுவே.

இப்ப வெயில் சீசன் ஆரம்பித்துவிட்டது.கடந்த ஆண்டைவிட இந்த வருடம் வெயில் அதிகம் .வெய்யில் காலத்திற்கு சில வியாதிகள் வருவது இயற்கை .
அதைத் தவிர்க்க வெயிலில் அலைவதை முதலில் தவிர்க்கவும் .நீர்ச்சத்துள்ள பழவகைகளை அதிகம் சாப்பிடவும் .தண்ணீர் அதிகம் அருந்தவும் .இந்த சீசனில் விளையும் பழங்களை அதிகம் உண்ணவும் .தினமும் 2 தடவை குளிக்கவும் .
ஆனால், இதைவிடுத்து நம் நாட்டில் ஒருவர் மீது மாரியம்மன் கோபம் கொண்டுவிட்டால் ஆத்தா உடம்பில் ஏறிவிடும் என்றும் அதனால் இது போன்ற நோய்கள் வருகின்றது என்றும் நம்புகின்றனர் .

இவ்வாறு நோய்கள் பற்றிய நம்மவர்கள் நம்பிக்கைகள் பல.அனைத்தும் மூட நம்பிக்கைகளே
.எனவே,உண்மையை அறிவீர் .உடல் சுகத்துடன் வாழ்வீர் .

.


.


.

.


.

Download As PDF

வியாழன், 11 மார்ச், 2010

மரணம் என்றிலிருந்து...
















.


பொதுவாக ஆரோக்கியமான மனிதன் 100 ஆண்டுகள் மற்றும் அதற்கும் சற்றும் அதிகமான ஆண்டுகள் வாழ சாத்தியக்கூறுகள் இருந்தாலும் மரணம் என்பது மனிதன் தனது 20 வயதை தொடும்பொழுதோ ஆரம்பித்துவிடுகிறது என்பதுவே உண்மை.
20 வயதிலிருந்தே நமது தோலுக்கு வயதாகத் தொடங்கி விடுகிறது .மூளையும் 20 வயதை தொடும்பொழுதோ செல்களை இழக்கத் தொடங்கிவிடுகிறது. தசை இழப்பு 30-லிருந்தே ஆரம்பிக்கிறது . கல்லிரலும் அப்படியே 30ல் இருந்து எடையை இழக்கிறது. 40ல் இருந்து கண்களில் தொய்வும்,இதயப்பலகினமும் ,50ல் இருந்து எலும்புச்சிதைவையும் ,60ல் இருந்து தண்டுவட செல்கள் வீழ்ச்சி,சுவையறியும் மற்றும் நுகரும் திறன்கள் குன்றல் , கேட்புத்தின் குன்றல் ஆகியவையும் படிப்படியாக ஏற்படுகிறது.
எனவே மரணம் என்பது சூழ்லைப்பொறுத்து சராசரியாக 20ல் இருந்து ஆரம்பித்து பிறகு சூழ்லைப்பொறுத்து முடிந்துவிடுகிறது .
அதனை உணர்ந்து நாம் வாழப்பழகுவதே நல்லது .





.


.



.


Download As PDF

புதன், 10 மார்ச், 2010

நம்பிக்கை விதை என் கைகளில் ...

.


.

எங்கள் தாய் நாட்டைச் சுட்டெரியுங்கள்
எங்கள் கனவுகளைப் பொசுக்கி சாம்பலாக்குங்கள்
எங்கள் கவிதைகளை அமிலத்தில் மூழ்கடியுங்கள்
எங்கள் சகோதரர்களைப் படுகொலை செய்து
அவர்களின் ரத்தச் சுவடுகளை
மண் தூவி மறையுங்கள்.
எமக்குச் சொந்தமான அனைத்தையும் ,
எமது சுதந்திரமான இயற்கையை
எங்கள் மண்ணின் தொன்மை மரபுகளை,
உங்கள் அதிநவீனத் தொழில் நுட்பங்களால்
வாயடைத்து...குரல்வளை நெறித்துக்
கொல்லுங்கள்.
அழியுங்கள்...அழியுங்கள்.
எங்கள் புல்வெளிகளை
எங்கள் வளமண்ணை
அழியுங்கள்
எங்கள் வயல்வெளிகளை
எங்கள் கிராமங்களை
எங்கள் முதாதையர் கட்டிய வீடுகளை
எங்கள் காவியங்களை
எங்கள் தொன்மை மரபு விதிகளை
எல்லாம் தரையோடு தரையாக
நசுக்கி அழியுங்கள்.
எங்கள் பச்சை மரங்களை
எங்கள் சமத்துவ வாழ்வை
எங்கள் ஒத்திசைந்த மரபை
அழியுங்கள்...அழியுங்கள்.
உங்கள் குண்டு மழையால்
எங்கள் பள்ளத்தாக்குகளை நிரவுங்கள்
உங்கள் கட்டளைகளால்
எங்கள் கடந்த கால நினைவுகளை
எங்கள் இதிகாச பெருமைகளை
எங்கள் இலக்கிய உவமைகளை
எல்லாம் தரைமட்டமாக்கி அழியுங்கள் .
எங்கள் சோலைகளை
எங்கள் பூமியை
ஒரு புழு பூச்சியின்றி
ஒரு பறவை...ஒரு வார்த்தையுமின்றி
ஒண்டி ஒளியவும் இடமின்றி
அழித்துச் சாம்பலாக்கித் துடைத் தெறியுங்கள்.
இன்னும் என்னவெல்லாம் முடியுமோ
அத்தனை கொடுமைகளையும்
செய்து முடியுங்கள்
ஆனால்...
உங்கள் அராஜகம் என்னை அச்சுறுத்திவிடாது .
நான் ஒரு போதும் சோர்ந்து விழப் போவதில்லை
என் இறுகி மூடிய கைகளுக்குள்
ஒரு விதை ...ஒரு சின்னஞ்சிறு உயிர் வித்து
அதை நான் பத்திரமாகக் காத்து வைத்துள்ளேன் .
அதை எம் மண்ணில் மீண்டும் விதைப்பேன்
அதுவே என் நம்பிக்கை .


===========

பெயர் தெரியாத ஒரு பாலஸ்தீனியனின் உணர்வுகளின் சாரம் .

===========

நன்றி வழக்கறிஞர் U.K.S & நன்றி டாக்டர் ஜீவா .

===========


.

.

.


.


.

Download As PDF

வியாழன், 4 மார்ச், 2010

ஒத்துக்கொள்ளுங்கள் ...மாற்றம் வரும் ...

.

.

.

தெரிந்துகொள்ளும் ஆவலுடன் மட்டுமே இருந்துகொண்டும் மேலும் எதையும் தெரிந்துகொள்ளாமலும் , அப்படியே தெரிந்துகொண்டாலும் தெரிந்துகொண்டதிலும் தெளிவில்லாமல்தெரிந்துகொண்டதினாலும் ஏற்பட்ட மிகப்பெரிய பிழை ,தெரியாததிலும் தெரிந்ததுபோல் செயல்படவைக்கிறது.
அதனால் மிக எளிமையாக பிறரின் பேச்சு வலையிலும் ,எழுத்து வலையிலும்,பிரபலம்என்றகவர்ச்சியிலும்கபடவேசத்திலும்வீழ்ந்து
அவலப்படுகின்றோம்.இதனைப்போக்க நாம் நமக்கு இது தெரியும்,இதுதெரியாது என்பதனை முதலில்ஒத்துக்கொள்ளவேண்டும். இதற்கு நாம் நமக்கு என்ன தெரியும்,நமக்கு என்ன தெரியாது என்ற அறிவினை ளர்த்திக்கொள்ளவேண்டும்.

நோயாளிகளில் பெரும்பான்மையினர் தங்களுக்கு உள்ள நோயை உடனே ஒத்துக்கொள்ளாததால் தான் டாக்டர்களால் நோயை உடனே போக்க முடியாமல் போய்விடுகிறது என்பது பெரும்பான்மையானடாக்டர்களின் கூற்றாக உள்ளது . உதாரணமாக 10 மாத்திரைகள் எழுதிக்கொடுத்தால் 3 மாத்திரைகள் மட்டும் சாப்பிட்டு மீண்டும் அவஸ்தைப்படும் நபர்களே அதிகம் . தங்களின் உடல் நலத்திலேயே இத்தகைய போக்குடையவர்களாக இருக்கும்பொழுது எப்படி அறிவு சார்ந்த விசயத்தில் அவர்கள் முற்போக்கு தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள் ?மிகப்பெரிய சர்வே எடுத்தோமானால்100 க்கு 95சதவிதம் பேர் இப்படிப்பட்ட ஆசாமிகளாக தான் .

உடல் உபாதையை விடஅறிவு எந்த உபாதையை கொடுக்கப்போகிறது ?.
மாற்றம் வேண்டும் என்ற ஆர்வமோ,ஆசையோ அல்லது உண்மையான எண்ணமோ எதுவாக இருந்தாலும் முதலில் எதார்த்தத்தை ஒத்துக்கொள்ளவேண்டும்.அப்பொழுதுதான் மாற்றம் முடியும் .மாற்றத்தின் முதல்படி இதுதான்.

இல்லையோல் ...இதனை முதலில் இருந்து வாசிக்கவும் .


.

.

.

Download As PDF