திங்கள், 27 டிசம்பர், 2010

ஆண்குறியும் சிவலிங்கமும் .





நொரண்டு : ஈரோட்ல  விழாவா  ?.

நண்டு : ம் ...

நொரண்டு : இது சிசனா ?

நண்டு : ஆமாம் .

நொரண்டு :என்ன ஒன்னும் சொல்லாம ...ம் ...ம் ...னு ?

நண்டு : என்ன எதிர் பாக்கர .

நொரண்டு :மாரியம்மன் திருவிழா இந்த சிசனுல கொண்டாராங்களே ஏன் ?

நண்டு :உனக்கு எதப்பத்தி  தெரிஞ்சுக்கனும் .

நொரண்டு :இல்லப்பா மாரியம்மன் வழிபாடு பற்றி சொல்லேன் .

நண்டு : ம் ...

நொரண்டு :ஆனால்,ஒரு கண்டிசன் .

நண்டு :என்ன ? .

நொரண்டு :உன் பாணாயில் சொல்லு .மந்தவங்க மாதிரி வேண்டாம் .

நண்டு :நான் எப்பவும் நானாத்தான் பேசுவேன் .ஏன் என்ன ?

நொரண்டு :இல்லப்பா சிலர் ஆபாசமா பேசுகிறார்கள் அதான் .
நண்டு :புரியல ...!!!

நொரண்டு :அதாம்பா ,லிங்கத்த சொன்னா அது ஆண்குறியின் அடையாளம் அப்படி இப்படினு ...

நண்டு :இது பேச்சுரிமைக்கு ,கருத்துரிமைக்கு நாம் கொடுத்துவரும் மிகப்பெரிய மரியாதை .லிங்கம் மற்றவர்கள் சொல்வது போல ஆண்குறியை அடையாளப்படுத்துவது அல்ல .

நொரண்டு :அப்ப சிவன் உண்டுனு சொல்ல வரையா .

நண்டு :நான் கடவுள் விசயத்துக்கு வரலா .ஆனால் ,சிவலிங்க அடையாளத்திற்குப்பின் உள்ள விசயத்திற்கு வரேன் .

நொரண்டு :அப்ப லிங்க வழிபாடு சரிதானா .

நண்டு : சரியா,தவறா என்பதைப்பற்றி நான் பேசவரல .ஆனால் ,அவர்களின் வழிபாட்டில்  உள்ள தன்மைகளை விளக்குவதன் மூலம் ,அவர்களிடம் ஒரு விழிப்புணர்வையும் ,சரியான பாதைகளையும் தேர்ந்தெடுக்க ஒரு சிறு முயற்சியே .

நொரண்டு :ஆபாசம பேசராங்களே இது பகுத்தறிவா ?

நண்டு : நல்ல கேள்வி ,உங்களுக்கு  கடவுளின் மீதுள்ள நம்பிக்கையில் கடவுளின் மீது நம்பிக்கையில்லாதவர்களின் குரலை மட்டுமே கேட்டுக்கொண்டு அவ்வாறு சொல்லுகின்றீர் .ஆனால் ,உண்மையில் ஆத்தீகவாதிகள் சொன்னதைத்தான் நாத்தீகர்கள் அப்படியே சொல்கின்றனர் .ஆத்தீகர்கள் சொல்வது உங்களுக்கு ஒலிக்கும் ஓங்காரத்தில் மறைக்கப்பட்டுவிடுகிறது .

நொரண்டு :என்ன தான் இருத்தாலும் பகுத்தறிவாதிகள் பகுத்தறிவுடன் ஆபாச பேச்சை தவிர்க்கலாமே .என்ன தான் இருந்தாலும் இப்படி பேசுவது பகுத்தறிவா ? .கடவுள் இல்லை எனச்சொல்ல அறிவியல் ரீதியான பல வழிகள் இருக்க இன்னும் ஆபாசமாக பேசுவது நாகரிகமா ? .ஆபாசமாக பேசுவது ,எழுதுவது என்பதெல்லாம் அறிவுஜிவித்தனம் என ஒத்துக்கொண்டால் ,அவர்கள் ஆடை உடுத்துவது எதற்காக ? .ஆடை என்றது எதற்காக தொன்றியது என்பது அவர்களுக்கு தெரியாத ஒரு கூறா ? .இல்லை அது பற்றிய அவர்களின் அறியாமையா ? .

நண்டு :நல்ல கேள்விகள் தான் . நாகரிகத்தின் ஒரு அடையாளம் தான் ஆடை .இது எப்படி அவர்கள் பேசிவரும் ஆபாசத்தின் குறிகள் மறைக்கின்றதோ அதுபோலவே அது போலவே அவர்களின் எழுத்தும்,மொழியும் எழுத்து,மொழி  என்ற நாகரிகத்தில் அப்படிப்பட்ட வார்த்தைகள் கட்டாயம் தவிர்ப்பதே பண்புடைய தன்மை .அத்தகைய எழுத்துக்களே அறிவுப்பூர்வமானவை ,உயர்ந்தவை ,சிறந்தவை,மனிதனை மனிதனாக்குபவை .இப்படிப்பட்ட பேச்சு,எழுத்துக்களை தவிர்ப்பது அவர்களின் பண்பாக வேண்டும் .இல்லேயெனில் அப்படிப்பட்டவர்களைத் தவிர்ப்பது நமது பண்பாகவேண்டும்.
 
நொரண்டு :ம் ...லிங்க வழிபாடு பத்தி ஏதோ சொல்ல வந்த .

நண்டு :புதிய வெளிப்பாட்டின் குறியீடு.

நொரண்டு :புரியல

நண்டு :புதிய உதயத்தின் குறியீடு.

நொரண்டு :இன்னும் புரியல .

நண்டு :மேல இருக்க படத்த பார் .

நொரண்டு :யார் வரச்சது .

நண்டு :நான் தான் .

நொரண்டு :ஓ ........

நண்டு :படத்த நல்லா பாரு முதலில் .யார் வரஞ்சா என்ன .

நொரண்டு :ம் .......

நண்டு : புரிஞ்சுச்சா .

நொரண்டு :ம் ....நான் கேள்விப்பட்டதெல்லாம் .லிங்கம் ஆண்குறியின் அடையாளம் அப்படினு .

நண்டு :சரி கேள்விப்பட்டாய் அல்லவா ,அதோடு அதற்குப்பின்னால் உள்ள நிகழ்வுகளையும் தெரிந்துகொண்டாயா ? .உணர்ச்சி வசமா மட்டும் பேசத்தெரிஞ்சுப்பிட்ட .அதனால் அறிவ விட்டுட்டு தேடுர .என்ன சொல்ல .இயல்பைப்பற்றிய அறிவில்லாமல் இருக்க பக்குவப்படுத்தப்பட்டுள்ளாய் .எதுக்கொடுத்தாலும் .

நொரண்டு :விடுப்பா ,பெரிய இவன் மாதிரி பேசாத ,அதப்பத்தி நீ சொல்லவரத சொல்லு .

நண்டு :ஆதி மனிதன் ...



தொடரும் ....












. Download As PDF

சனி, 25 டிசம்பர், 2010

பன்றிகளை எனக்கு ரொம்ப பிடிக்கும்




பன்றிகளை எனக்கு ரொம்ப பிடிக்கும்
காரணம்
நாய்கள் மேல் நோக்கி  பார்க்கும்
பூனைகள் கீழ்  நோக்கி  பார்க்கும்
பன்றிகள் மட்டும் தான் சரிசமமாய் பார்க்கும் .




--------


1.ஹலோ வெங்கடாசலம் இருக்காரா ?.

2.இல்லைங்க .ராங் நப்பருங்க .

1.நீங்க யாருங்க பேசரது ?

2.நான் கோபிங்க .

1.வெங்கடாசலத்த கூப்பிட்டா நீங்க ஏங்க எடுக்கிறீங்க  .

2 !!! ?.                                                                                


..........


சாப்பாடு சாப்பிடுவதை விட்டுவிட்டு 2 பன்றிகள் கடுமையான சண்டை போட்டுக்குச்சு .
விசாரித்ததில் .
ஒரு பன்றி இன்னென்றை பன்னி மாதிரி ஏன் சாப்பிடரனு சொல்லிடுச்சாம் .அதனால தான் சண்டை போடுதாம் .



..........


ஒரு கிலோமீட்டருக்கு மேல கியூ ரோட்டோரமா போய்க்கிட்டுருக்குது .காரில் சென்றுகொண்டிருந்த நம்மாளுக்கு ஒரே ஆச்சரியம் .சரி என்னானு  பாக்கலாமுனு கார வேகம ஓட்டிட்டுபோய் பாத்தா கியூவுக்கு முன்னாடி ஒரு சவ ஊர்தி மெதுவா போய்க்கிட்டிருக்கு .என்னானு பக்கத்தில போய் பாக்கலாம்னு கார ஒரு ஓரமா நிப்பாட்டிட்டு சவ ஊர்தி கிட்ட போய் பார்த்தார் . அதில 2 சவப்பெட்டிகளும் அதுக்கு மேல ஒரு நாயும் இருந்தது .நம்மாளுக்கு ஆச்சரியம் .என்னடா 2 சவபெட்டி இருக்கு நாய் ஒன்னும் இருக்கு என குழம்பி .அதற்கு அருகில் அமர்ந்திருந்தவரிடம் என்னங்கனு கேட்க .முதல் சவப்பொட்டிய காட்டி இது என் மனைவிங்க என்றார் சவ ஊர்தியில் அமர்ந்திருந்தவர் .எப்படிங்க இறந்தார் என நம்மாள் கேட்க இதோ இந்த நாய் கடிச்சிருச்சு அதனால் இறந்திட்டாங்க என்றார் .இன்னொரு சவப்பொட்டிய நம்மாள் பார்க்க .அத புரிந்துகொண்ட  அவர் அது என் மாமியாருங்க என்றார் .அவங்க எப்படி செத்தாங்க என்றதுக்கு .அவங்களையும் இந்த நாய் தாங்க கடிச்சுக்சு என்றார் .குழப்பத்துடன் திரும்பி காருக்கு வந்தார் நம்மாள் .ஏதோ ஒன்று மனதை உறுத்த திரும்ப சென்று ஏங்க உங்க நாய கொஞ்சம் கொடுக்கமுடியுமா என கேட்டார் .அதற்கு அவர் கொடுக்க நான் தயார் ,ஆனால் ,அதற்கு நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணனும் என்றார் .நம்மாளுக்கு ஒன்னும் புரியல .எங்க என்றார் .அதுக்கு பணிவ அவர் இந்த கியூ அது முடிஞ்ச பிறகு தானே உங்களுக்கு கொடுக்கமுடியும் என்றார் .









 ..........


அவசியம் இதைப் பாருங்க 

ஈரோடு வரும் பதிவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு




.



. Download As PDF

வெள்ளி, 24 டிசம்பர், 2010

2 ம் தலைமுறை வலைப்பதிவர் விருதுகள் 2010 - 2G BLOGGER AWARDS 2010 -HURRY UP


வலைப்பூ எழுத்துக்களின்
2 ம் தலைமுறையை ஊக்குவிக்கும்
ஒரு சிறு முயற்சியாக 
2 ம் தலைமுறை வலைப்பதிவர் விருதுகள் 2010
அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விருதுகள் வலைப்பதிவர்களுக்கான விருதுகள் .

வலைப்பதிவர்களின் ஆகச்சிறந்த 2010 ம் ஆண்டின் பதிவுகளுக்கு தரும் ஒரு சிறு சிறப்பு இது அவ்வளவே.

கீழ்க்காணும் நான்கு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளன .

1. படைப்பிலக்கியம் (கதை,கவிதை)
2. நகைச்சுவை (நகைச்சுவைகள் ,மொக்கைகள் )
3. கட்டுரைகள் (அறிவியல்,விழிப்புணர்வு,சுற்றுச்சூழல் )
4. திரை (திரைவிமரிசனம் ,திரை சார்ந்த கட்டுரைகள் )


ஒவ்வொரு பிரிவிலும் 5 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு விருந்தினரால் முதல் பரிசுக்கான விருதினர் தேர்ந்தெடுக்கப்படுவர் .

முதல் பரிசாக விருதுடன் ருபாய் 300 சன்மானமாக  சமர்ப்பிக்கப்படும் . தேர்தெடுக்கப்பட்ட மற்ற நால்வருக்கும் தலா ருபாய் 75 சன்மானமாக  சமர்ப்பிக்கப்படும் .

வெளிநாட்டில் வெளியூரில் இருப்பவர்களுக்கு அவர்அவர்கள் கூறும் வழிகளில் விருதும் சன்மானமும் சமர்ப்பிக்கப்படும் .

விருதுகளும் சன்மானமும் 15.01.2011 அன்று வழங்கப்படும் .

வலைப்பதிவர்களிடமிருந்து  ஆகச்சிறந்த பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.

வலைப்பதிவர் அனுப்பும் படைப்புகள்  01.01.2010 லிருந்து 23.12.2010 க்குள் வெளியிடப்பட்டதாக இருக்கவேண்டும் .

சொந்த படைப்பாக இருக்கவேண்டும் .

நடுவர்களும் படைப்புகளை அனுப்பலாம் .

படைப்புகளை twogbloggerawards@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும்.

வலைப்பதிவர்கள் தாங்களின் ஆகச்சிறந்த படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் 05.01.2011  .


வலைப்பதிவர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களின் ஆகச்சிறத்த படைப்புகளை அனுப்பி சிறப்பிக்க  அன்புடன் வேண்டுகிறேன் .




இப்படிக்கு
அன்புடன்
நண்டு @நொரண்டு
ஈரோடு .






. Download As PDF

வியாழன், 23 டிசம்பர், 2010

நாளைய தமிழக முதல்வர் .


எனக்குத் தெரிந்தவரை நான் என் வாழ்நாளில் ஒரு பாமர காங்கிரஸ் தமிழரையும் இது வரை பார்த்ததே இல்லை .இன்னும் தெளிவாக கூறவேண்டும் என்றால் ஒரு ஏழை காங்கிரஸ்காரரை நான் இது வரை சந்தித்ததே இல்லை .அப்புறம் காங்கிரஸுக்கு எப்படி ஓட்டு விழுதுனா . தமிழகத்தில் உள்ள எந்த ஒரு காங்கிரஸ் தலைவரையும் நம்பியோ ஆதரித்தோ  இங்குள்ள யாரும் காங்கிரஸுக்கு ஓட்டுப்போடுவதில்லை .காங்கிரஸுக்கு ஓட்டு விழுவது நேரு குடும்பத்திற்கே தவிர இங்குள்ளவர்களின் மீது நம்பிக்கை வைத்து கிடையாது .

தமிழர்கள் காங்கிரஸின் மீது எத்தகைய நம்பிக்கை வைத்திருந்தனர் என்பதனை இங்கு கட்டாயம் கூறியே ஆக வேண்டும் .எனது அன்பர் வழக்கறிஞர் கி.சிதம்பரம் அவர்கள் சிங்களன் தமிழன் மீது வெறுப்புடன் ஒட்டாமல் இருக்க பல காரணங்கள் வெளிப்படையாக தெரிந்திருந்தாலும் மறைமுகமான பல காரணங்களின் ஒன்று எது தெரியுமா ?என கேட்டார் .சொல்லுங்கள் என்றேன் .அவர் சொன்னது எனக்கு ஆச்சரியத்தை தந்தது .அது என்னவெனில் ,இனப்பிரச்சனைக்கு முன்பு இலங்கையில் நாம் சாதாரணமாக ஒரு தமிழர் வீட்டிற்குள்( இது ஏழை வீடானாலும் ,பணக்கார வீடானாலும்) சென்று பார்த்தால் அங்கு சாமி படம் இருக்குதோ ,இல்லையோ கட்டாயம் நேரு ,இந்திராகாந்தி ஆகியோரின் படங்கள் இருக்கும் .அந்த அளவிற்கு அவர்கள் இந்தியத்தலைவர்களை விரும்பினர் .அதனாலும் சிங்களர்கள் இவர்கள் இந்திய விசுவாசிகள் நமக்கு என்றும் எதிரிகள் என்ற மனேபாவத்திலே பார்க்க ஆரம்பித்ததும் ஒரு காரணம் என்றார் . இலங்கையில் உள்ள தமிழனே அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த பொழுது இங்குள்ள தமிழன் எவ்வளவு நம்பிக்கையுடன் எதிர்பார்த்துள்ளான் என்பதை காங்கிரஸ் எண்ணிப்பார்க்கவேண்டும் .காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் மக்கள். ஆனால், அதனை ஒருங்கிணைக்க இங்கு ஒரு மக்கள் தொண்டரும்  இல்லை .தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமானால் அப்படி ஒரு மக்களின்  தொண்டரை இனம்காண வேண்டும் .காமராஜர் போல .

தமிழகத்தில் கோஷ்டிக்குத் தலைவர்கள் ஆவதையும் ,அதன் மூலம் பதவிகளில் அமரத்துடிப்பதுமாக இருக்கும் மக்கள் தொண்டர்களைப் பார்த்து பார்த்து பாமரன், காங்கிரஸ் மீது உள்ள தனது அபிப்பராயத்தை மாற்றி மாற்றி இப்பொழுது அதை பணக்கார கட்சியாகவே பார்த்து ஒதுங்க ஆரம்பித்துவிட்டான் .இந்த நிலை மாற வேண்டும் . அப்பொழுது தான் "கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை. காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர, நாம் தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபடுகிறோம். இது தாமதமானாலும், ஒருநாள் நாம் அதை செய்து முடிப்போம். இளைஞர் காங்கிரசில் உள்ள ஒருவர், வரும் காலத்தில் தமிழக முதல்வராக வரும் வாய்ப்புள்ளது,'' என, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் பேசிய பேச்சு சாத்தியமாகும் .








. Download As PDF

புதன், 22 டிசம்பர், 2010

இசை மனிதனுக்கு ஏன் பிடிக்கிறது ?

இசை மனிதனுக்கு ஏன் பிடிக்கிறது ? என்பதற்கு விடை தேடிக்கொண்டிருக்கும் பொழுது எனது நண்பர் கிருஷ்ணன் சொன்னார் .இதைக்கேட்டு பாருங்க என .
இதைப்பற்றி கூறுவதை விட
இதை கண்ணாலும் காதாலும் கேட்டுப்பாருங்கள் .
கண்ணால் பார்த்துக்கொண்டு கேட்பதை விட கண்மூடி காதால் கேட்பதில் அதிக அழுத்தத்தை இசை நமக்கு தருவதை உணர்வீர்கள் .













இசை மனிதனுக்கு ஏன் பிடிக்கிறது ?
பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் .ப்ளிஸ் .



நன்றி : YouTube
&
BOND சகோதரிகள் .






.







. Download As PDF

வெள்ளி, 17 டிசம்பர், 2010

நரகமாக்கி


.






நகர்ந்து  நகர்ந்து
நகரமாகி
நகர்த்தி நகர்த்தி நரகமாக்கினான் .





.
Download As PDF

வியாழன், 16 டிசம்பர், 2010

உளவுத்துறையில் ஊழல்கள்

விக்கிலீக் ...எங்களை மீறி எதுவும் நடந்துவிடாது என்ற இறுமாப்புடன் இருந்த அனைத்து உலக உளவுத்துறைகளின் கர்வத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்த ஒரு  சாதனை .

இதிலிருந்து  ஒவ்வொரு உளவுப்பிரிவுகளும் எவ்வாறு தவறுதலாக செயல்பட்டுக்கொண்டிருந்துள்ளன என்பதுவும் .இவ்வாறு இருந்த காரணத்தினால் தான் தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாட முடிந்துள்ளது என்பதையும்  அறிந்துகொள்ள முடிகிறது .

உளவுப்பிரிவுகள் என்று அரசியல் வயத்துடன் அரசியல் பார்வையுடன் அரசின் பார்வையுடன் செயல்படுகிறதோ அப்பொழுதே அங்கு ஊழல் மலிந்துவிடுகிறது .(இங்கு ஊழல் என்பது அரசியல் ஆதாயம் ஆகும்).இது மிகவும் தவறாக கொள்கை என்பதுடன் மக்களாட்சி தத்துவம் கொண்ட நாடுகளில் மக்களைக் காக்கும் பாங்கும் இதுவன்று .

ஒரு உறவுப்பிரிவு எப்படி இருக்கவேண்டும் என்பதை வள்ளுவர் மிக அழகாக விளக்கியுள்ளார் .

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.     589


உளவுத்துறை ஒன்று இருக்கின்றது என மக்கள் உணராதபடி இருக்கவேண்டும் .அதனுடன் மூன்றுவகையான உளவுகளில்  அடிப்படையில் உள்ள ஒற்றுமைகளை தெரிந்தெடுத்து அவைகளில் உள்ள  உண்மையைத் தெளிவுறவேண்டும் என்கிறார் வள்ளுவர் .

இங்கு கவனிக்கப்படக்கூடிய விசயம் என்னவெனில் தவறான மற்றும் ஊகத்திலான தகவலில் கவனம் செலுத்தி கற்பனைக்கு இடம் தந்து எந்த உளவின் முடிவும் இருக்கக்கூடாது என்பதுடன் உளவின் முடிவு ஆழ்ந்த பார்வையுடனும் கவனத்துடனும் இருக்கவேண்டும் என்கிறார்  வள்ளுவர் .




வள்ளுவர் அறியப்படவேண்டிய  உண்மைகள் ...
தொடரும் .....


. Download As PDF

புதன், 15 டிசம்பர், 2010

நண்பர் யார் சகோதரன் யார்

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் ...

இந்த கூற்று உண்மைதாங்க .
(இங்கு பால் வித்தியாசம் பார்க்காமல் படிக்கவும் )

சகோதரன் என்றால் நம்மின் உணர்வில் ,உள்ளத்தில்,அன்பில்,பண்பில் ,பாசத்தில் ,நேசத்தில் ,சுகதுக்கங்களில் சமமாக  பகிர்ந்துகொள்ளும் ஒரு அனைத்துமான உறவு .

நண்பர் என்றால் என்ன லாபம் என உறவில் ஆதாயம் தேடும் அல்ப்பைகள்  அவ்வளவே .

என்னைப்பொறுத்தவரை சகோதரத்துவத்தையே விருப்புகிறேன்





. Download As PDF

செவ்வாய், 14 டிசம்பர், 2010

மிக்க மகிழ்ச்சி மஹிந்த ராஜபக்ச அவர்களே சிங்கள மொழியில் மாத்திரமே இனி தேசிய கீதம் பாடுங்கள் .


சிங்கள மொழியில் மாத்திரமே இனி தேசிய கீதம்! - மஹிந்த ராஜபக்ச .

மதிப்பிற்குரிய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச அவர்களே உங்களின் இந்த அறிவிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது .நான் இது போன்று மேலும் உங்களிட்ம் எதிர்பார்க்கின்றேன் .அதையும் செய்துவிடுங்கள் இலங்கையின் மதம் புத்தம் அதனால் மற்ற மதத்தினர் அனைவரும் உடனே புத்தத்திற்கு மாறவேண்டும் என்றும் .அனைத்து மத வழிபாட்டு மையங்களையும் புத்த பிக்குகளின் கையில் ஒப்படைக்கவேண்டும் என்றும் ஆணையிடுங்கள் .இது தான்  மிகசரியாக இருக்கும் .இதையும் செய்வீர்கள் என நம்புகிறேன் .


உங்களை நான் மிகப்பெரிய ராஜதந்திரி என நினைத்திருந்தேன் .ஆனால் தாங்கள் ஏன் இப்படி ஆகிவிட்டீர் என்றுதான் தெரியவில்லை .உலக நாடுகளின் பார்வைக்கு புலிகளை தீவிரவாதிகளாக ஆக்கி நீங்களும் உங்களின் முன்னவர்களும் தமிழர்களை அடக்கி ஒடுக்கி வந்தீர்கள் .அனைவரும் அதையே நம்பினார்கள் . நீங்கள் அனைத்து உரிமைகளையும் தமிழருக்கு தந்தாலும் அவர்கள் போராடுகின்றனர் என இத்தனை நாள் கூறிவந்தீர்  அதையும் அனைவரும்  நம்பினார்கள் .ஆனால் ,இப்ப சிங்களத்தில தான் தேசியகீதம் இலங்கையில் பாடப்படும் என அறிவித்து உங்களின் உண்மை முகத்தை  உலகிற்கு காட்டிவிட்டீரே ..இனிமே சர்வதேச சமுதாயத்தை எப்படி ஏய்ப்பீர்கள் ? .ஐ.நா .சபையில் எப்படி மனிதஉரிமைக்குரல் எழுப்பப்போகின்றீர்கள் ?.இத்தனை நாள் உங்களின் முன்னேர்கள் அணிந்திருந்த முகமூடியை நீங்கள் ஏன் கழட்டுனீர்கள் ? .


எது எப்படி இருந்தாலும் உம்மை  நான் பாராட்டுகிறேன் .ஏனெனில் ,என்ன சென்னாலும் சிங்கள அரசை ஒரு அரசு தன் பிரசைகளுக்கு இப்படியெல்லாம் செய்யுமா ? .அதுவும் சுதந்திர நாட்டில .தமிழர்கள் தான் தப்பு செஞ்சுக்கிட்டு வர்ராங்கனு தங்களின் விரோதப்போக்கை காட்டிவந்த உலக நாடுகளுக்கு தாங்களே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர் .குற்றவாளி  சிங்கள அரசு தான் என .சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக தாங்கள் அறிவிக்கப்பட இது ஒன்றே போதும் .அதனால் தான் என்னால்  தாங்கள்  பாராட்டப்படுகின்றீர் . விரைவில் விசரணைக்கு தயாராகுங்கள் .

மக்களிடம் தாங்கள் இப்பொழுது விதைத்துள்ள ஒரு விதை என்னை மிகவும் கவர்ந்துள்ளது .அது ,இந்த தேசிய கீதம் உனது அல்ல என்பது. ஒரு தேசிய கீதம் ஒருவனுடையது அல்ல  என்றால் அவன் தேசமும் அது அல்ல என்பது பொருள் . அப்படியெனில் தனது தேசத்தை அவன் சுட்டிக்காட்டிக்கொள்ள வேண்டும் அல்லவா.அப்பொழுது அவன் என்ன செய்வான் ? .விருட்சமாக வேர் ஊன்றுவான் . அதைத்தான் தமிழன் செய்யப்போகின்றான் .சோர்வுற்றிருந்தவனை வேர்விட்டு எழ வித்திட்ட உம்மை எமக்கு பிடிக்காமலா போகும் .

இருந்தாலும் ஒன்றை உம்மிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன் .ஹிட்லருடன் உம்மை ஒப்பிட நினைத்தேன் .ஆனால் ,அது முடியாமல் போனது .ஏனெனில்,என்ன இருந்தாலும் ஹிட்லர் ஒரு வீரன் . நீ ஒரு கோழை .ஒரு கோழையை ஒரு வீரனுடன்  எவ்வாறு ஒப்பிடுவது  .




.............


சர்வதேச மக்களே ...
உங்களிடம் நான் முறையிடுகின்றேன் ...
மனிதப்பிறப்பால் நாம் எல்லொரும் சகோதரர்களே ...
இது உண்மை என்றால் நான் கூறுவதை செவிமடுத்து கேளுங்கள் ...
உங்களின் நாட்டில் ,உங்களின் தாய் மொழியில் ,உங்களின் தேசிய கீதத்தைத் தானே நீங்கள் பாடுகின்றீர்கள் ...
இது உண்மை தானே ...
உங்களின் நாட்டில் ,உங்களின் தாய் மொழியில் ,உங்களின் தேசிய கீதத்தைத் பாடாதே என சென்னால் உங்களின் உணர்வு என்னவாக இருக்கும் ,நீங்கள் என்ன நினைப்பீர்கள் ,என்ன செய்வீர்கள் ...
சற்றே ஒரு நிமிடம் எனக்காக சிந்தியுங்கள்...
நம்மைப்போற்று  தானே தமிழனும்  மனிதன் ...
நாம் கற்பனை செய்யமுடியாத துயரத்தை அவன் கஷ்டப்பட்டு சுமக்கின்றானே ...இது முறையா ? ...ஞாயமா ? ...
சிந்திப்பீர் உலக சமுதாயமே ....
சகோதரர்களே 
ஒன்றுபட்டு குரல் கொடுப்போம் ...
இலங்கை அரசின் தமிழர் மீதான அடக்குமுறையை கைவிடச்செய்வோம் ...
அது வரை இலங்கையரசின் மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டி போராடுவோம் ...
உலகெங்கும் ....
சர்வதேச சமுதாயமாய் ...


அனைத்து பதிவர்களும் இதற்கான கண்டனத்தை தங்களின் வலைப்பூக்களில் பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன் .




. Download As PDF

திங்கள், 13 டிசம்பர், 2010

புலிக்கொடிகளின் விடுதலைப்போர் தோல்வியில் முடிந்ததா ? .


வரலாற்றில் என்றும் புறக்கணிக்கப்பட்டதாகவே தமிழனின் அனைத்து நிகழ்வுகளும் இருந்துவந்துள்ளன.இன்றும் கூட தமிழன் தன் அடையாளங்களை கண்டு பதிந்து தெளிவுகொள்ளாமல் ,ஏதோ யாருக்கோ ,எதுக்கோ எதுவும் நடந்துமுடிந்தது போல கண்டும்காணாததுமாய் வாய்கிழிய  பேசிவருகிறான் .இனி ஒவ்வொன்றின் தன்மையையும் உண்மையையும் பதிந்து இனிவரும் சந்ததிக்கோனும் உருப்படியான வரலாற்றைக்கொடுக்கும் முயற்சியாக வேலூரிலிருந்து ஆரம்பிக்கின்றேன் .

நான் இதனை புலிக்கொடிகளின் விடுதலைப்போர் எனக்கொள்கிறேன் .அதற்கு காரணம் வெற்றிபெற்ற தமிழ்வேங்கைகள் வேலூரில் புலிக்கோடியேற்றி தங்களின் வெற்றியை அறிவித்ததுவே .

இந்தியவின் வரலாற்றுப்பக்கங்களில் மறுக்கப்பட்ட பல தமிழரின் போராட்டங்களில் வேலூர் புரட்சியும் ஒன்று .

ஆங்கிலேயர்களுக்கு முதன்முதலாக மிகப்பெரிய பாடத்தை கற்பித்த நிகழ்வு இது .

தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் மிகவும் ஒன்றுமையான இருப்பது கண்டு தங்களின் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டதற்கு அட்சாரமான சம்பவம் இது .

இது நடந்தது 1806 ஜூலை 10 .இதற்குப்பிறகு தான் இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 ல் நடந்தது .


இது நடந்ததற்கான காரணம் .சுருக்கமாக ,இந்திய சிப்பாய்களுக்கு ஆங்கில அரசு  “தோலினால் செய்யப்பட்ட தலைப்பாகை அணிய வேண்டும், மீசையின் அளவை குறைக்க வேண்டும், தாடி வளர்க்கக்கூடாது” போன்ற கட்டளைகள் இஸ்லாமிய சிப்பாய்களுக்கும் மற்றும் திருநீறு அணியக்கூடாது போன்ற கட்டளைகளை இந்து சிப்பாய்களுக்கும்,அனைவரும் மார்பில் சிலுவை போன்ற ஒன்றை தொங்கவிடவேண்டும் எனவும் ஆணை பிறப்பித்தது.இது சிப்பாய்கள் மத்தியிலும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இது மட்டும் காரணம் அல்ல என்றாலும் ஆங்கிலேய தரப்பால் இதுவே கூறப்பட்டது .

வெகுண்ட சிப்பாய்கள் பாளையக்காரர்களுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட தீர்மானித்தனர் .திப்புவின் குடும்பத்தினர் அனைவரும் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.அதனால் அங்கிருந்து ஆரம்பிப்பதுடன் அவர்களை மீட்டதாகவும் அமையும் என்பதால்  வேலூர் நகரம் புரட்சியின் மையப்பகுதியாக தேர்வானது .

அதனால் 1806 ஜூலை மாதம் 9 ஆம் தேதி  அங்கு நடைபெறவிருந்த திப்பு சுல்தானின் மகள்களில் ஒருவரின் திருமணத்தை காரணம் காட்டி, வேலூர் கோட்டையில் புரட்சிப் படையினர் குழுமினர். அடுத்த நாள் பத்தாம் தேதி காலை 2 மணிக்கு ஆரம்பமானது  தாக்குதல் .வலுவான இந்தியச் சிப்பாய்களினால்  மூன்றே மணிநேரத்தில் வேலூர் கோட்டை மீட்கப்பட்டது .ஆங்கிலேய தளபதிகள் கொல்லப்பட்டனர் .அங்கிருந்த வெள்ளையர்களில் 100 க்கும் அதிகமானேர் கொல்லப்பட்டனர்.திப்புவின் புலிக்கொடியை வெற்றியாளர்கள் வேலூர் கோட்டையில் ஏற்றினர் .

மிகவும் கடினமான அமைப்பாக திப்புவின் குடும்பத்தினர் வைக்கப்பட்டிருந்த இடம் அமைக்கப்பட்டிருந்ததால் அவர்களை மீட்பதில் கவனமாக புரட்சியாளர்கள் இருந்தனர் .அதற்கு நீண்ட நேரமும் ஆயிற்று .அதோடு ஆங்கிலேயர்கள் திருப்பித் தாக்கலாம் ஆதலால்  திப்புவின் குடும்பத்தினரை விடுவித்த உடன் கோட்டையைவிட்டு உடனே வெளியேற்றவேண்டும் என்ற  எண்ணத்தினால் கோட்டையின் கதவை தாழிடாவில்லை .

ஆற்காட்டிலிருந்து வந்த ரோந்து படையினர் கோட்டையில்  புலிக்கொடி கண்டு அதிர்ந்தனர் . பின் குதிரைப்படையுடன் மதியம் வத்து கோட்டைக்குள் திறந்திருந்த கதவின் வழியாக புகுந்து கோட்டையை கைப்பற்றியது .இதில் சுமார் 3000க்கும் மேலான புரட்சியாளர்கள் கொல்லப்பட்டனர் .பிடிபட்ட ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது .
புரட்சியை தூண்டியதாகக்கூறி திப்புவின் வாரிசுகளை கல்கத்தாவிற்கு இடம் மாற்றியது .
கல்கத்தாவில் திப்புவின் வாரிசுகள் இன்று வறுமையில் வாடுகின்றனர் .

சரி இந்த புலிக்கொடிகளின் விடுதலைப்போர் தோல்வியில் முடிந்ததா ?  என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும் .சிலர் இது தோல்வியில் முடிந்தது என்று கூறுவதுடன் அதற்காக கூறும் காரணங்கள் தான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை .முதலாவது தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்படவில்லை.இரண்டாவது கோட்டை கைப்பற்றப்பட்டவுடன் அங்கிருந்த கஜானாவை உடைத்த சிப்பாய்கள் அதிலிருந்த பொருட்களை கொள்ளயடித்து ஓடிவிட்டார்கள் என்பது .இரண்டும் தவறு திட்டமிடே நடத்தப்பட்டதால் எளிதில் சில மணி நேரத்தில் கோட்டையை மீட்டனர் .ஆனால் ஆங்கிலேயர்கள் பெரிய படையுடன் வந்து நீண்ட நேரம் போராடியே பெற்றனர் . கஜானாவை கொள்ளயடித்து ஓடிவிட்டார்கள் என்பதுவெல்லாம் பொய் ஆங்கிலேயர்கள் இந்த புரட்சியை கொள்ளை என அரசியாருக்கு தெரிவுத்து  புரட்சியாளர்களை கேவலமாக சித்தரித்ததுடன் .கஜானாவில் இருந்ததை இங்கிருந்த ஆங்கிலேயர்களே பங்கிட்டு பகிர்ந்துகொண்டார்கள் என்பதுவே உண்மை .

இது நடந்து 51 ஆண்டுகள் கழித்து 1857ல்  நடந்த இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சிக்கும் இதே காரணம் சற்று வித்தியாசமாக கூறினர் ஆங்கிலேயர்கள் .

வேலூர் புரட்சியில் பங்குபெற்ற யாவரும் இன்றுவரை நினைத்துப்பார்க்கப்படவில்லை . இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி 1857 க்கு கொடுக்கப்பட்ட அளவு அங்கீகாரம் இதற்கு கொடுக்கப்படவில்லை .

வேலூர் புரட்சியின் நாயகர்களான ஷேக் காசிம், சுபேதார் ஷேக் காதம் ,ஜமேதார் ஷேக் ஹூசைன்  ஆகியோருக்கு உரிய மரியாதை  இதுவரை கொடுக்கப்படவில்லை .  அவர்கள் யாரேன்றே பலருக்குத்தெரியாது .  என்ன சொல்ல ?.

இந்த புலிக்கொடிகளின் விடுதலைப்போர்  இட்ட கனலும் மெல்லமெல்ல ஆங்கிலேயன் வெல்லமுடியாதவன் அல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்தி ஆங்கிலேயன் மேல் இருந்த பயத்தை போக்கச்செய்து விடுதலைப்போராட்டத்தில்  மக்களை பயமின்றி ஈடுபடவைத்தது .

அதனால் நாம் இன்று மகிழ்வாக இருக்கின்றோம் .அனைத்தையும் பெற்று .அனைத்தையும் மறந்து .ஆனந்தமாக .







. Download As PDF

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

ஏட்டப்பர்களே வாருங்கள்





ஒற்றைக்கோணலாய்
ஒற்றைப்பார்வை
பார்க்கும்
ஏட்டப்பர்களே
வாருங்கள் 

உலகு
பலப்பலவாக
பல கோணங்களில்
பலப்பலவாக
பார்க்கிறது

நாமும்
உலகை
பல பலவாக
பல கோணத்தில்
பளபளப் ஆக
பார்ப்போம் .



.


பலப்பல -மிகவும் பழைய





.
Download As PDF

வெள்ளி, 10 டிசம்பர், 2010

இனி நோபல்பரிசுக்கு குட்பை - கன்பூசியஸ்பரிசை போற்றுவோம்


இன்று  நோபல்  நினைவு  நாள் .
இவர் டைனமைட்டை உருவாக்கியவர்.
ஆயுதத்தயாரிப்பாளர் .
Bofors ன் உரிமையாளர் .
இவரின் கண்டுபிடிப்பால் கோடிக்கணக்கான மனிதர்கள் மண்ணில் புதைந்துள்ளார்கள் இன்றுவரை.

அவரின் உயிலின் படி நோபல் பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றது .

அவரின் பரிசின் நோக்கம்  கண்டுபிடிப்புகள் தவறான வழிகளில் பயன்பட்டு மக்களை காவுவாங்கக்கூடாது என்பதுவே .

அவர் நோபல் பரிசை தோற்றுவித்ததன் நோக்கம் சரியானதாக இருந்தாலும் ,அதனை பல சமயங்கள் சரியாக கொடுக்கப்படவில்லை என்பதுவே பொதுவான கருத்தாக இருந்து வருகிறது .அப்பரிசு கொடுப்பதில் ஒரு குறுகிய பார்வை இருப்பதாகவே என்னால் அறியப்படுகிறது .

உலகு மார்க்ஸியத்தால் விரிவடைந்து வந்துகொண்டிருக்கின்ற  நிலையில் இப்பரிசு வழங்குவதில் முதலாளித்துவ ஆளுமை அதிகம் இருப்பதுடன்  முதலாளித்துவத்துக்கு எதிரான போக்கை மட்டுப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு செயல்பட்டு வருவதாகவே உணர்கிறேன் .நோபல் பரிசுப்பட்டியலை பார்த்தாலே இதனை தெரிந்துகொள்ளலாம் .

அதோடு மேற்கத்தியவர்கள் மற்றும் மேற்கத்திய சிந்தனைகளை ஏற்றுக்கொண்டவர்கள் அதனை ஆதரிப்பவர்களுக்கே முன்னுரிமை தரப்படுவதாகவும் உள்ளது .

உதாரணமாக காந்தியடிகளுக்கு இப்பரிசு கொடுக்கப்படாததை சொல்லலாம் . காந்திக்கு இப்பரிசு கொடுக்காததுக்கு  காரணம் அவர்கள் பல சொன்னாலும் ,அவர்கள் கட்டாயம் தந்திருக்கவே மாட்டார்கள் ,ஏனெனில் காந்தியின் சித்தாந்தத்தை அவர்கள் கண்டு அஞ்சியதே .காந்திக்கு பரிசு கொடுக்கப்பட்டால் காந்தியம் உலகம் முழுதும் 2 ம் உலகப்போர் முடிந்த சமயத்தில் பார்க்கப்பட்டிருக்கும் .அப்ப ஒரு குழப்பமான சூழல் உலகில் நிலவியது .அப்பொழுது காந்தியத்தை உலகநாடுகளுக்கு வெளிப்படுத்தினால் முதலாலித்துவ சிந்தனைகள் அடிபட்டுப்போய்விடும் .காந்தியம்  ஐரோப்பாவிலும் அமேரிக்காவிலும் மற்றைய நாடுகளிலும் எளிதாக பரவிவிடும் அதோடு காந்தி ஆசியாவிலும் மிகப்பெரிய மனிதராகிவிடுவார் .இந்தியப்பிரிவினையும் மறுபரிசீலனைக்கு  உட்படுத்தவும் படலாம் .இது எல்லாம் நடந்துவிட்டால் காந்தி உலக சிருஷ்டி ஆகிவிடுவார் .காந்திய உலகம் ஏற்பட்டாலும் ஏற்பட்டுவிடும் .இதுக்கு விடுவார்களா மேற்கத்தியவர்கள்.அதனால அதச்சொல்லி இதச்சொல்லி மலுப்பிட்டாங்க .

இப்பொழுது சீனா இனி நோபல் பரிசுக்கு குட்பை கன்பூசியஸ் பரிசை போற்றுவோம் என அமைதிக்கான ஒரு உன்னத பரிசை அறிவித்துள்ளது .இது வரவேற்கத்தக்கது .

எத்தனை நாளைக்குத்தான் உலகும் இந்த ஒத்த பரிசையே பெரிசா பேசிக்கிட்டு.நீங்களும் அவங்க மாதிரி யில்லாம பாத்துக்குங்க .இல்லைனா அடுத்த யாராவது இதே போல ஒரு பரிசை அறிவிப்பார்கள் .

இனி வரும் காலத்தில் ஏகப்பட்ட உலக பரிசுகள்  கொடுப்பது உறுதியாகிவிட்டது.அப்ப நோபல் பரிசு மற்றவற்றுடன் 10 தோட நீ ஒன்னு அத்தோட நான் ஒன்னு என்ற நிலைக்கு ஆளாகப்பட்டுவிடும் .இந்த மாற்றத்திற்கு அச்சாரம் போட்ட சீனாவை வாழ்த்தலாம் .

இறுதியா ,அமைதிக்கான ஒரு உன்னத பரிசை அறிவித்துள்ள சீனாவே அதனை கன்பூசியஸ் என்ற உன்னதரின் பெயரில் ஆரம்பித்தது உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது .இனி தாங்கள் ஆசியாவில் அமைதி நடவடிக்கைக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் என இதன் மூலம் நம்புகிறேன் .



. Download As PDF

புதன், 8 டிசம்பர், 2010

ஈரோட்டில் இளைப்பாறலாம் வாங்க 26 ல்



பொருமை மிகு
பதிவுலகப் பறவைகளே


மின்வெளியில்
வண்ணங்களாய்
எண்ணங்களை
மிளிரச்செய்யும்
நாம்
சற்றே
இளைப்பாற
சங்கமிக்கலாமே
ஈரோட்டில்
26 ல்

என
அன்புடன்
அழைக்கும்
உங்களின்
நண்டு @ நொரண்டு















மேலதிக விபரங்களுக்கு
பார்க்க

சங்கமம் 2010 – தயாராகுங்கள்!!!!



.




.
Download As PDF

திங்கள், 6 டிசம்பர், 2010

நாய்கள்,பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால் .




“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’

காந்தியைரை சந்தித்தபொழுது  டாக்டர் அம்பேத்கர் அவரிடம் முன் வைத்தவை கருத்துக்கள் இவை .இது 1931ல் நடந்தது .

மிகவும் உன்னதமான மனிதர் .

தனது வாழ்நாள் முழுதும் சமூக நீதிக்காகப் போராடிய ஒரு சமூக நீதிப் போராளி .

'அரசியலமைப்பின் பிதா'

நமது நாட்டின் முதல் சட்ட அமைச்சர் .

அண்ணலின் நினைவு நாள் இன்று .



வணங்குவோம்





இதையும்  பாருங்க


ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு 5.12.2010


. Download As PDF

வெள்ளி, 3 டிசம்பர், 2010

சிங்களம் காட்டுமிராண்டி மொழி யென்று


சிங்களா ...
உரக்கச்சொல்லுவேன்
உங்களிடம் நான்
உரக்கச்சொல்லுவேன்
உங்களின் மீது தவறில்லை
உங்களின் மொழியின் மீது தவறென்று
புத்தனின் புத்தத்தை
புதைத்து
புறமுதுகிடா மறவனை
புறமிருத்து கொன்று
கருவறையிலே தமிழினத்தை
கல்லறையாக்கி
மனிதனை மனிதனாக்கா
மாபதகஞ்செய்யும்
சிங்களத்தை
உரகச்சொல்லுவேன்
உலகம்
உறைக்கச்சொல்லுவேன்
காட்டுமிராண்டி மொழியென்று..







.
(இது மீள்வு  ) Download As PDF

மருத்துவர்களே குற்றவாளிகள்



அறுவைச்சிகிச்சை செய்யும்போது நோயாளி் பிழைக்காவிட்டாலும் அல்லது நோயாளிக்கு வேறு தீங்கு ஏற்பட்டாலும் மருத்துவர் தூக்கிலிடப்படுவர் அல்லது தண்டிக்கப்படுவர் என்ற அவலம்  இருந்து வந்ததால் மருத்துவர்கள் அறுவைச்சிகிச்சை மருத்துவத்தினின்று விலகினர் 16 ம் நூற்றாண்டு வரை. மேலும் மிரட்டல் ,தாக்குதல் , கொன்றுவிடும் வழக்கங்கள்இருந்ததாலும் மருத்துவர்கள் அறுவைச்சிகிச்சை மருத்தும் செய்ய பயந்தனர் . மேலும் அறுவைச்சிகிச்சை மருத்துவர்கள் அரசாங்கத்திலுள்ள உயர் அதிகாரிகளுக்கு முடிவெட்டல் மற்றும் முகச்சவரம் செய்தல் போன்ற பணிகளும் செய்யவேண்டும் என்ற கட்டளைக்கும் பணியவேண்டியிருந்தது.இதன் விளைவாக இத்துறை இழிவான செயல் என்று கருதவேண்டிய சூழ்நிலை ஏற்படவே இக்கலை அழிய நேரிட்டது . வேறு வேலை செய்யும் நாவிதர்கள் ,செருப்புத்தொழில்செய்பவர் தான் இந்தத் தொழிலை செய்தனர் .16ம் நூற்றாண்டு வரை இது தொடர்ந்தது .


பிரான்சில் ஏழை நாவிதக்குடும்பத்தில் 1510 ல் பிறந்த
ஆம்ரோஸ் பாரி என்பவரின் அயராத முயற்சியினால் அறுவைச்சிகிச்சை மருத்துவம் உயிர் பெற்று உயர்வு பெற்றது .

அறுவைச்சிகிச்சை மருத்துவர்கள் குற்றவாளிகள்  அல்ல ,
அவர்கள் மக்களின் சேவகர்கள் என்ற உணர்வினை தனது அயராத நிகரில்லாத சேவையின் முலம்  உலகிற்கு உணர்த்தினார் .

ஆதலால்
ஆம்ரோஸ் பாரி அவர்கள்
அறுவைச்சிகிச்சை மருத்துவத்தின் தந்தை எனப்போற்றப்படுகிறார் .





இன்றைய மருத்துவத்துறையையும் ,மருத்துவர்களின் அர்ப்பணிப்பையும்
நினைத்துப் பார்க்கையில்...




. Download As PDF

வியாழன், 2 டிசம்பர், 2010

சோகம்






படிந்தவைகளை  அகற்ற அகற்ற

மீண்டும் மீண்டும்  படியும்  தூசுகள்

சோகம்





.
Download As PDF