வெள்ளி, 17 ஜூன், 2011

நாம் அனைவரும் சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை புறக்கணிப்போம்.

நல்ல ஆரம்பம் . புதிய பயணம் .அறப்போராட்டத்தினின்று வெற்றியை நோக்கி ...




தரவு.காம் மில் வெளிவந்த  புலம்பெயர் தமிழர்கள் ஆகிய நாம் சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை புறக்கணிப்போம்  என்ற கட்டுரையை படித்ததும் எழுதத்தேன்றியது .

கட்டுரையை படித்துபாருங்கள் .

புலம்பெயர் தமிழர்கள் ஆகிய நாம் சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை புறக்கணிப்போம்

வெள்ளி, 17 ஜூன், 2011

கொடுங்கோல் சிறிலங்கா அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தைப் புலம்பெயர் தமிழ் மக்களும் தமிழக, மலேசியா, சிங்கப்பூர் மக்கள் அனைவரும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

என அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:

எம் இனத்திற்கு எதிரான போரில் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான எமது சொந்தங்களை திட்டமிட்ட இனப்படுகொலை செய்தும் கற்பழிப்புச் செய்தும் இன்றுவரை தமிழின அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்தக் கொடுங்கோல் சிறிலங்கா அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தமிழ் நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தைப் புலம்பெயர் தமிழ் மக்களும் தமிழக, மலேசியா, சிங்கப்பூர் மக்கள் அனைவரும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.


எமது நீண்ட கால விடுதலைப் போராட்ட வரலாற்றில் இத்தீர்மானமானது ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை நாம் எமக்கு சாதகமாகப் பயன்படுத்தி செயல்படுத்துவோம். அத்தோடு சனல் 4 காணொளியை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இப்போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்

சிறிலங்காவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை தமிழர்களாகிய நாம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

1. இங்கு விற்பனைக்கு இறக்குமதி செய்யப்படும் சிறிலங்காவின் உற்பத்திப் பொருட்கள் எதுவாயினும் அவற்றை நாம் புறக்கணிக்க வேண்டும்.

2. சிறிலங்காவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் மொத்த அங்காடி உரிமையாளர்கள் அதே பொருட்களை வேறு நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து அதனை எமது மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

3. தென்னாபிரிக்கா தேசிய விடுதலைப் போராட்ட காலத்தில் உலக நாடுகளில் இயங்கும் துறைமுகத் தொழிற் சங்கங்களைக் கொண்டு எப்படி ஏற்றுமதி இறக்குமதி இரண்டையும் தடுத்தனரோ அதேபோல நாமும் சிறிலங்காவில் இருந்து இறக்குமதியாகும் உற்பத்திப் பொருட்களையும் சிறிலங்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களையும் துறைமுக தொழிற்சங்கங்களை அணுகி போர்க்காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையைச் சித்திரிக்கும் சனல் 4 காணொளிப் படத்தைச் சான்றாகக் காட்டி சிறிலங்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை கப்பல்களில் இருந்து இறக்கவோ ஏற்றவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ள வேண்டும். கப்பல் துறைமுகத் தொழிலாளர்களின் அனுதாபத்தை நாம் தேடவேண்டும்.

4. நிறவெறி பிடித்த தென்னாபிரிக்க அரசை எப்படிப் பன்னாட்டு சமூகம் விளையாட்டுத்துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் தனிமைப்படுத்தியதோ அதேபோல், தமிழினப்படுகொலை செய்த சிறிலங்காவையும் பன்னாட்டுச் சமூகத்திடமிருந்து நாம் தனிமைப்படுத்த வேண்டும்.

5. லிபியா, சிரியா போன்ற நாடுகளை எப்படி வல்லரசு நாடுகள் தண்டிக்கின்றதோ அதே போன்று சிறிலங்காவையும் தண்டிக்கவைக்க வேண்டும். இதற்கான எமது பரப்புரையை உலகளாவிய மட்டத்தில் நாம் முன்னெடுக்க வேண்டும். முடியாதது என்று ஒன்றும் இல்லை.

6. எமது வெளிநாட்டுப் பறப்புக்களை சிறிலங்கா விமான மூலம் மேற்கொள்வதை நாம் நிறுத்த வேண்டும்.

7. சனல் 4 காணொளி மட்டும் எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப் படுகொலையை உலகம் முழுவதும் பரப்ப முடியாது. ஆகவே நாமும் இந்தப் பரப்புரையை உலகம் முழுவதும் சனல் 4 காணொளியைக் காட்ட வழிவகை செய்ய வேண்டும். அந்தந்த நாட்டு அரசியல்வாதிகளுக்கு இந்த சனல் 4 DVD யை கொடுத்து எம்மவர்களின் இன அழிப்பை பார்வையிட கேட்கவேண்டும்.

8. அந்தந்த நாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நாம் ( எம்மவர்களை கொண்டு ) தொடர்பு கொண்டு சனல் 4 காணொளியை மறு ஒளி ஒலிபரப்ப கோர வேண்டும்.

கீழ்காணும் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு கனேடியர்களுக்கு எம் இனத்திற்கு நடந்த இந்த கொடூர இன அழிப்பை பார்வையிட ஓர் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என கேட்க வேண்டும் ( கனடா)

RADIO

CBC 416.205.6301
680 News 416 872 6397
AM 640 416.646.8640
CFRB 1010 416.924.6717

TV

CBC 426.205.6309
CTV 416.384.5000
Sun Tv 416.601.0010
City Tv 416.599.2489
CP 24 416.384.2400

PRINT

Toronto Star 416.869.4301
National Post 416.386.2600
Toronto Sun 416.947.2211
பG & M 416.585.5000

அலை அலையாக தமிழ் மக்களாகிய நீங்கள் தொடர்பு கொண்டால் நிச்சயமாக இவர்கள் மறு ஒளி ஒலி பரப்புவார்கள் இதில் எந்த அச்சமும் இல்லை. ஆகவே தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள். மறு ஒளிபரப்ப கோருங்கள். இந்த நாட்டு மக்களும் இந்த காணொளியை பார்வையிட்டு எம்து அரசிற்கு அழுத்தங்களை கொடுக்கட்டும்.

9. நாம் வாழும் நாடுகளின் அரசியல் தலைவர்கள், மத்திய, மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து சிறிலங்காவிற்கு எதிரான பொருளாதாரத் தடையைக் கொண்டு வருமாறு வற்புறுத்த வேண்டும். நாங்கள் எமது தொகுதி அரசியல்வாதிகளுக்கு இந்த சனல் 4 காணொளியை பார்வையிட தாழ்மையாக கேட்டுக் கொள்ளுங்கள்.

10. இலங்கையில் வாழும் சிங்களவர்களும் தமிழர்களும் இனத்தால், பேசும் மொழியால், சமயத்தால், பண்பாட்டால், வரலாற்றால் வேறுபட்டவர்கள் என்ற உண்மையை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும்.

இப் போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் எவரும் தனிப்பட்டமுறையில் பாதிக்கப்படவோ நஷ்டப்படவோ கூடாது அது வாடிக்கையாளர்களாக இருக்கட்டும்! மொத்த வியாபாரிகளாக இருக்கட்டும்! சில்லறை வியாபாரிகளாக இருக்கட்டும்.

மொத்த வியாபாரிகள் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் இதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உதவ வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசிற்கு நாங்கள் உதவ வேண்டும்.

வாடிக்கையாளர்களை தயவு செய்து உங்கள் வியாபாரிகளிடம் சொல்லுங்கள் இலங்கையில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டாம் என அழுத்திக் கூறுங்கள்.

இனவாத இரத்தக்கறை படிந்த பொருட்களை புறக்கணிப்போம்!! புறக்கணிப்போம்!! இந்த சந்தா்ப்பம் இனிமேல் எமக்கு கிடைக்குமோ தெரியாது. ஆகவே இந்த சந்தர்ப்பத்தை நாம் இழக்காது பயன்படுத்துவோம்.

புலம் பெயர் தமிழா்கள் நாங்கள் தான் எம் இன விடுதலையையும் எம் மக்களையும் காப்பாற்றவேண்டும். ஒருவர் மீது ஒருவர் நாம் கல்வீசிவிட்டால் எமக்கு விடுதலை கிடைக்குமா? எம் மண்ணின் மீட்புக்காக தம் உயிரை அர்ப்பணித்த எம் மாவீரர்களை ஒரு கணம் சிந்தியுங்கள்.

இந்தப் போராட்டத்தின் வெற்றிக்கு வாடிக்கையாளர்களின், வியாபாரிகளின், மொத்த வியாபாரிகளின் ஒத்துழைப்பும் இன்றி இது சாத்தியமற்றது.

நாம் எல்லோரும் தமிழனாய் ஒன்றிணைந்து எமது கோபதாபங்களை ஓரம்கட்டி ஒருமித்து போராடுவோம்.

சிந்தியுங்கள்! செயற்படுங்கள்!.

என

இதில் புலம்பெயர் தமிழர்களை மட்டும் அழைத்தமை வருத்தத்தை அளிக்கிறது .


இனி
இனப்படுகொலைகளுக்கு  முடிவுகட்டுவோம்  ...
உலக மக்களின் பேராதரவுடன் ...
நாம் அனைவரும் சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை புறக்கணிப்போம்.













                                                                                                                     


நன்றி : You Tube ,தரவு.காம் ..
Download As PDF

19 கருத்துகள் :

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தில் மத்திய அரசின் நிலை என்ன ..... பொறுத்திருப்போம் - நல்லதே நடக்கும் - நட்புடன் சீனா

Mohamed Faaique சொன்னது…

இந்த புறக்கணிப்பால் எந்த சிங்களவனும் பாதிக்கப் பட போவதில்லை.. பாதிக்கபடுவதெல்லாஅம் தமிழந்தான்,
வேகத்தை விட விவேகம் சிறந்ததது... கொஞ்சம் யோசியுங்கள்.....
படுகொலைக்கு இலங்கை அரசாங்கத்தை விட, புலிகளே பொருப்புதாரிகள்..



போர் நிறுத்ததை கோறியது, இராணுவம் .5 கி.மி அருகில் வந்த போதுதான்..அதுவும் இலங்கையிடம் அல்ல. சர்வதேச சமூகத்திடம்
என்ன நடந்தாலும் போரை விடப்போவதில்லையென வெள்ளை கொடி ஏந்தி வந்த மகராசா இறப்பதற்கு 2 மாதத்துக்கு முன்னாடிதான் பேட்டி குடுத்ததை நானும் கேட்டேன்.

வெளியேறிய மக்களை வெளியேற விடாமல் துப்பாக்கி சூடு நடத்திய வீடியோவும் வெளியாகியதே!! இதை எல்லாஒரும் எப்படி மறந்தார்கள்?

தப்பி வரும் மக்கள் மத்தியில் மனித வெடி குண்டுகளை வெடிக்க செய்தது யார்?
மக்களுக்காக ஒதுக்கப்பட்ட வலய்த்துக்குள் புகுந்து கொண்டு, மக்களை கேடயமாக பாவித்து எதிரியை தாக்கி தன்னை நம்பிய இனத்துக்கே அழிவை தேடிக் கொடுத்தது யார்?
இன அழிவுக்க முக்கிய காரணம் புலிகளும், அவர்களை நம்பியதுமே!!!!1

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//Mohamed Faaique said...

இந்த புறக்கணிப்பால் எந்த சிங்களவனும் பாதிக்கப் பட போவதில்லை..-----அவர்களை நம்பியதுமே!!!!1//

சகோ தங்களின் புரிதலை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை .

இப்ப பிரச்சினை முள்வேலிகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள அப்பாவி மனிதர்களை பாதுகாப்பதே.

அதற்காக கைகோர்ப்பதே மனிதாபிமானம் உள்ள ஒருவரின் செயலாக இருக்கும் என நினைக்கிறேன்.

இலங்கையில் இப்ப என்னமோ தமிழர்கள் சுகமாக இருப்பதுபோலும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் அவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவது போலவும் தாங்கள் //பாதிக்கபடுவதெல்லாஅம் தமிழந்தான்,// என கூறியதிலிருந்து தெரிகிறது. இதில் எந்த அளவு உண்மை என்று அனைவருக்கும் தெரியும் .

எமக்கும் உலக வரலாறு மற்றும் உலக நடப்பு மற்றும் இலங்கையின் அனைத்து விசயங்களும் விபரங்களும் மற்றவர்களை விட அதிகம் தெரியும் என்பதனை தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன் . அவ்வளவே.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

நல்ல விஷயம் சொல்லியிருக்கிறீர்கள் நண்டு் அவர்களே! எல்லோரும் ஒத்துழைத்தால் இலங்கை அரசுக்கு தண்டனை நிச்சயம்!

மதுரை சரவணன் சொன்னது…

avasiyam onru seruvom.. ithanai marravarakalukkum parappuvom.. ilangkai arasu thandikkappada vendum . nam thamilan paathukaakkappada vendum . thani ilaam pirakka vendum

நிரூபன் சொன்னது…

வரவேற்கப்பட வேண்டிய விடயம் சகோ, கட்டுரைப் பகிர்விற்கு நன்றி சகோ.

ஹேமா சொன்னது…

எங்களுக்குள் நாம் என்கிற ஒற்றுமை இத்தனை அழிவுக்குப் பிறகும் இல்லை.ஒன்றிணைந்தால் மட்டுமே தமிழன் உருப்பட முடியும்.மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் தமிழனின் தேவை ஒன்றுதானே.சிங்களவர்களுக்குள் எத்தனை கட்சி இருந்தாலும் தமிழனுக்கு எதுவும் கொடுக்கக்கூடாது என்பதில் எத்தனை ஒற்றுமையாகச் செயல்படுகிறார்கள் !

இன்று புலிகளின் 30 வருட முயற்சியில் நல்லது நடந்திருந்தால் வேறுபட்டுப் பேசுபவர்கள்தான் முதலில் ஓடிப்போய் ஊரில் குந்தியிருப்பார்கள்.
ஆதங்கத்தை எப்படிச் சொல்ல நான்.

மனம் உள்ளவர்கள் முடிந்தவரை முயற்சிப்போம்.
காலம் எடுத்தாலும் நல்லதே நடக்கும்!

வேகநரி சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
உலக சினிமா ரசிகன் சொன்னது…

மிக முக்கியமான பதிவு.
அம்மா கொண்டு வந்த தீர்மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை உங்கள் பதிவு உணர்த்தியது.
இலங்கையில் இருந்து வரும் பொருள்களில் நான் சமஹன் மட்டும் பாவித்து வருகிறேன்.
இனி வாங்க மாட்டேன்.

அதே போன்று ஈழப்பிரச்சனையை மையப்படுத்தி உலகசினிமா தரத்தில் ஒரு படம் ஆங்கிலத்தில் எடுங்கள்.
ஆஸ்கார் பரிசை வெல்லும் தரத்தில் இருக்க வேண்டும்.
அந்தப்படம் ஈழம் பற்றி வல்லரசுளிடம் பேசும்.
யூதர்களுக்கு தனி நாடு வாங்கிக்கொடுத்த நாடுகள் ஈழம் அமைக்க ஒடோடி வரும்.

கவி அழகன் சொன்னது…

ஸ்ரீ லங்காவில் இருந்து தமிழ் மக்கள் ஏற்றுமதி செய்கிரபோருட்களை வாங்கி வித்தால் நல்லம்தனே

கூடல் பாலா சொன்னது…

விரைவில் நல்லது நடக்கவேண்டும்

சசிகுமார் சொன்னது…

கட்டுரை சிறிலங்காவை அடக்குவதற்கான வழிகள் அனைத்தையும் தெயளிவாக எடுத்துரைக்கிறது இதை நடைமுறை படுத்தினால் இலங்கை தானாக பணிந்து விடும்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

கண்டிப்பாக....
பல்வேறு உலக நாடுகளும் இதுபோன்று செய்து இலங்கை மீது பொருளாதர தடை விதித்தால் அரசின் ஆணவம் அடங்கியிருக்கும்...

எல்லாநாடுகளிலும் தன் ஆதிக்கத்தை காட்டும் அமெரிக்க இலங்கை விஷயத்தில் ஒரு கண்டனம் கூட சொல்லாது ஆச்சரியம்...

பெயரில்லா சொன்னது…

இப்ப பிரச்சினை முள்வேலிகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள அப்பாவி மனிதர்களை பாதுகாப்பதே. //
சரியாக சொன்னீர்கள்..பணக்கார தமிழர்கள் சிலர் இணையத்தில் இந்த வாதங்களை முடக்க பார்க்கிறார்கள்

பெயரில்லா சொன்னது…

இலங்கை பொருட்கள் தமிழ்நாட்டில் என்னென்ன புழக்கத்தில் இருக்கிறது கண்டுபிடிப்பது எப்படி..?

ஷர்புதீன் சொன்னது…

//இலங்கை பொருட்கள் தமிழ்நாட்டில் என்னென்ன புழக்கத்தில் இருக்கிறது கண்டுபிடிப்பது எப்படி..? //
me too have this quesitons

ceekee சொன்னது…

Where there is a will, there is a way.

It is not difficult to find out the products of Srilanka. One has just to ascertain who the manufacturer is from where we purchase articles,,,

And we must persuade all peoples of all other races, languages, cultures and nations to boycott Srilankan goods. Further, we must also persuade the various governments of the world to cut off diplomatic and other ties because this State has descended into a rogue State throwing all international treaties, laws and covenants of human rights to the wind and defying and threatening even UN and other international human rights bodies.

Riyas சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ad சொன்னது…

பொருளாதாரத்தடை என்று வந்தால்,.. அரசு மட்டுமன்றி ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் எமது மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது முற்றிலும் உண்மை.
ஒரு விதத்தில் பார்த்தால் இந்த நிலைமைதான் நாசபக்சே குடும்பத்துக்கும் அடிவருடிகளுக்கும் கேடயம் போன்றது.
பொருளாதாரத்தடை விதித்தால் மட்டும்தான் நம் மக்கள் பாதிக்கப்படப்போகிறார்களா?என்று கேட்டால் சிரிப்புதான் வருகிறது.எத்தனையோ வருடங்களாக-அதற்குத்தடை,இதற்குத்தடை என்று பொருளாதாரத்தடைக்குள்ளேயே வாழ்ந்து,அத்தனை இடர்களின் மத்தியிலும் பல சாதனைகளையும் புரிந்து காட்டியவர்கள்தான் எம் மக்கள்.
விடுதலைப்புலிகளை சாட்டி,ஒட்டுமொத்த தமிழினத்தின் மீதும் வம்சாவளியாக விதிக்கப்பட்ட நிரந்தரமான பொருளாதாரத்தடைகளை எவரும் மறந்துவிடக்கூடாது.
ஆகவே...
எதிரிகளுக்கு கவசமாகவோ கேடயமாகவோ பயன்படக்கூடிய எந்த விசயங்களையும் நாம் தாமதிக்காது, உடைக்கவேண்டும்.உலகத்தமிழர் ஒன்றிணையவேண்டும்.
நாசபக்சே க்களை கழுமரத்தில் ஏற்றும்வரை அதற்கான சகல முன்னெடுப்புக்களையும் முன்னெடுத்தேயாகவேண்டும்-ஒற்றுமையாக.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "