Wednesday, June 29, 2011

25 பைசா சில்லரைகள்



ஜூன் 30ம்தேதிக்கு பிறகு  அதாவது  நாளையிலிருந்து 25 பைசா செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதற்கு காரணமாக சொன்னவற்றில் முதன்மையானது 25 பைசா, 50 பைசாவுக்கு நாட்டில் எந்தப் பொருளுமே கிடைக்காது என்ற நிலை உருவாகிவிட்டது என்பது .ஆனால் இந்த நிலை உருவாக்க்காரணம் யார் ? அரசு தானே .அப்படியிருக்க என்னவோ அரசுக்கு மிக்க மக்களின் மீது கரிசனம் வந்த மாதிரி அறிக்கைவிடுவது கேலிக்குறியதாக உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக சில்லறை நாணயங்களின் புழக்கம் வெகுவாக குறைந்து விட்டது என்பதுவே உண்மை .விலைவாசி குறைந்தால் சில்லறை நாணயங்களின் புழக்கம் அதிகம் ஆகும் என்பதுவே இதன் உள்ளீடான உண்மை .

கார்ப்ரேட் நிறுவனங்களில் கார்டு போட்டு பொருள் வாங்கும் மக்களை இது பாதிக்காது .ஆனால்,சாமானியனை இது பாதிக்கும் ,அதோடு இது அவனை சுரண்டுவதும் ஆகும்.

நாம அன்றாடம் 25 பைசாவிற்கு பேருந்து நடத்துனரின் நடத்தை தவறு இனி இருக்காது என்ற நிம்மதியில் பயணித்தால் உங்களின் பயணத்தில் 2% த்தை சுரண்டுவதை உங்களின் அறியாமையாலே அனுமதிக்கின்றீர்கள் என்பதுவே உண்மை. ஆம் ,இனி 2.25 ரூபாயில் பயணம் செய்யவேண்டிய தொலைவை 2.50 கொடுத்து பயணிக்கவேண்டும்.

மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும்.
இனி ரூபாய்  4.01 அடக்கவிலையுள்ள ஒரு மாத்திரையை தனியாக வாங்கும்பொழுது ரூபாய் 4.50  கொடுத்து வாங்கவேண்டும்.

தபால் கார்டுகள் இனி காலாவதிதான் .அதோடு மட்டுமல்லாமல் இனி 75 பைசா ஆபீஸ் கவர் 1 ரூபாய்க்கு வாங்கவேண்டும். 3 பைசா AD கார்டு இனி 50 பைசாவிற்கு வாங்கவேண்டும் .

இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளவை சில எளிய உதாரணங்கள் மட்டுமே, முழுமையானவையல்ல.

இப்ப  25 பைசா என்பது பிரச்சனையில்லாத்தது மாதிரி தெரியலாம் .ஆனால் உண்மையில் இது  49 பைசா பிரச்சனை .1பைசாவில் தயாரித்த ஒரு பொருளை 50 பைசாவிற்கு விற்று 49 பைசா லாபம் காணலாம் .இதில் கவனிக்கவேண்டியது அடிப்படை அலகுகளில் சிறு உயர்வு முதலாளித்துவத்துக்கே ஆதாயம் என்பதே .

நுண் பொருளாதாரத்தை நோக்க இது எளிதில் புலப்படும்.

1000 ரூபாய் ,500 ரூபாய்  ஒழிப்பு எப்படி கருப்புபணத்தை வெளிக்கொணர்ந்து மட்டுப்படுத்துகிறதோ  அதே போலத்தான் சிறு தொகைகள் ஒழிப்பு ஏழ்மையை மேலும் மேலும் அதிகரித்து ,வறுமைக்கோட்டை மிகுபடுத்தும்.

அதோடு இதை ஒட்டி விலைவாசிகள் அமைவதால் விலைவாசிகள் நுண் அளவில் மாற்றம் பெற்று முதலாளிகளுக்கு லாபத்தை கொடுக்கும் .

முதலில் விலைவாசியை கட்டுப்படுத்துங்கப்பா .இப்படி ஏழை மக்களிடம் உள்ள சில்லறைகளை புடுங்கி பணக்காரர்களை காப்பாத்தாதீங்க .


சுவிஸ் வங்கி மற்றும் வெளிநாடுகளில் உள்ள சுமார் 100 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களுக்கு சொந்தமானது அதனை கொண்டுவாங்கப்பா 1 பைசாவின் தேவை எத்தகையதுனு அப்ப புரியும் . என்ன ...? அதவிட்டுட்டு ஏழைகளின் வயித்தில அடிக்காதீங்கப்பா.






.
Download As PDF

Monday, June 27, 2011

ஈரோட்டில் தமிழினப் படுகொலைக்கு நினைவேந்தல்.


தமிழினப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நினைவேந்தலை

உலக அரங்கில் இது பேசப்படும் வேளையில் நாம் ஆயிரக்கணக்கில் அஞ்சலி செலுத்தி நிற்கும்போது மிகவலிமையை உணர்த்தும் என்ற விதத்திலும்,

இலங்கை இனவெறி கடற்படையால் கொல்லப்பட்ட  தமிழக மீனவர்களுக்காகவும்

அம்மக்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற நோக்கிலும்

நேற்று சூன்-26  மாலை 6.30 மணிக்கு  ஈரோட்டில் உலக சித்திரவதைகுள்ளாக்கப்படோருக்கான ஆதரவு தினத்தில்

திரை 400 ,ஈரோடு.  வின் திரை நிகழ்ச்சியில்

ஈரோடு  Senthil Multispeciality Hospital,
SMS   கலையரங்கில்

இனத்திற்கான ஒளி

வழக்கறிஞர் கி.சிதம்பரன்,
வழக்கறிஞர் வி.எம்.நடராஜன்,
சூரியா டெக்ஸ்  செல்வராஜன் ,
வழகுகறிஞர் இராஜசேகரன் (நண்டு @ நொரண்டு),
வழக்கறிஞர் சந்தோஷ்,
வழக்கறிஞர் சந்திரசேகர், 
வழக்கறிஞர் பழனிவேல்,
தோழர் ரவி ,
தோழர் மகேந்திரன் ,
தோழர் கல்லூரி ஆசிரியர் விஜய்
தோழர் அகிலேஷ் ,
திருமதி மாலதி கி.சிதம்பரன்,
திருமதி கனகரத்தினம் வி.எம்.நடராஜன்,
தோழி அணு ,

மற்றும் பலரால் ஏற்றப்பட்டு
மரியாதை செலுத்தப்பட்டது .




.
Download As PDF

Sunday, June 26, 2011

நமது இனத்திற்கான ஒளி ஏற்றுவோம்.




இன்று
நாம் நமது இனத்திற்கான ஒளி ஏற்றுவோம்.
ஒன்றுபட்ட மாந்தர்களாய் .

இந்த குறும்படத்தை பார்க்க 







நன்றி : You Tube  .
Download As PDF

Saturday, June 25, 2011

ராஜபக்சேவுக்கு ஆயுள் தண்டனை உறுதி .


Pauline Nyiramasuhuko இவர் ருவாண்டா நாட்டின் முன்னாள் குடும்ப நலத்துறை அமைச்சர். 1994ம் ஆண்டு ருவாண்டாவின் தெற்கு புடார் மாகாணத்தில் டுட்சி இன மைனாரிட்டி மக்கள் 100 நாட்கள்  போராட்டம் நடத்தினர்.அப்போதைய  ருவாண்டா அரசு டுட்சி இன மக்களை படுகொலை செய்தது .அதில் பல லட்சம் பேர் மாண்டனர்.இதில்  Pauline Nyiramasuhuko ம் அவரது மகனும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

இது சம்பந்தமாக ஐ.நா.சர்வதேச குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இனப் படுகொலை, மனித உயிர்களுக்கு எதிரான கிரிமினல் செயல்கள், கற்பழிப்புகள், அடக்குமுறை, மக்களின் கண்ணியத்தின் மீது அட்டூழியம், வன்முறை போன்ற பிரிவுகளின் கீழ்  குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு Pauline Nyiramasuhuko மற்றும் அவரது மகன் மீது வழக்கு தொடரப்பட்டது.

10 ஆண்டுகள் நடந்த விசாரணைக்குப் பின் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது .
கொடூர இனப் கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் Pauline Nyiramasuhuko மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பாகும் .பெண் ஒருவருக்கு சர்வதேச நீதிமன்றம் இனப் படுகொலைக்காக ஆயுள் தண்டனை கொடுத்துள்ளது  இதுவே முதல் தடவை .

அடுத்தாக இந்த தண்டனையை அனுபவிக்கப்போகும் நபர்களில் ராஜபக்சேவே முதலிடத்தில்  இருப்பதாக உலக அரசியல் அறிஞர்கள் அவையத்தின்  கருத்தாகும்.

அதனால் இத்தீர்ப்பு ராஜபக்சேவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபக்சேவுக்கு  ஆயுள் தண்டனை உறுதி .






.
Download As PDF

Sunday, June 19, 2011

உங்கள் இல்லங்களில் எங்கேனும் இங்குள்ள அடையாளங்கள் தென்படுகின்றனவா ?

எனது மதிப்பிற்குரிய பதிவர்களே ,
தமிழ் இனத்தின் விடியலுக்கும் ,வாழ்விற்கும்
ஆன முயற்சிகள் பலவற்றில் ஒன்றான
சிங்கள பொருட்களை புறக்கணிப்பு 
என்பதனை கடைப்பிடிக்க  தீர்மானித்திருப்பவரில் ஒருவராக தாங்கள் இருப்பீர்கள் என்பதால் தாங்களை தங்களின் வலையில்


இங்கு தந்துள்ள வலைமனைப் பட்டையை  இட்டு  மேலும் உலக அரங்கில் மற்றவர்களுக்கும் இது பற்றிய  புரிதலையும் ,விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில் தங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

மிக்க வணக்கத்துடன் .
நண்டு .














நன்றி  :  ''தூயா ''நினைவலைகளில்...
மற்றும் பார்க்க
http://sriakaram.blogspot.com/2007/09/blog-post_7654.html
Download As PDF

Bloggers.com

Nandunorandu - Find me on Bloggers.com