செவ்வாய், 17 ஜூலை, 2012

கடவுளின் மரணமும் 3 மரண தண்டனையும்.




டைரில் வரிகளின் மூழ்கியிருந்த  டிராசிஸ்க்கு கழுத்துக்குக்கீழ் ஏதே செய்வது போல் தோன்றவே எழுந்தான்.அப்பொழுது அதிகாலை முடிந்து நற்பகல் வந்துவிட்டிருப்பதை மணிக்கடிகை காட்டியது .கழுத்துக்குக்கீழ் அல்ல வயிற்றில் தான் ஏதே செய்கிறது என்பதனை உணர்ந்தவன் அது பசி என்பதனை அறியாமலே தனது உணவுக்கூடம் நோக்கி இயல்பாக நகர்ந்தான்.அங்கு யாரும் இல்லாதது கண்டு அழைப்பு ஒலியை ஏற்படுத்தினான்.


நீண்ட நேரம் கழித்து வீரன் ஒருவன் வந்தான்.


அவனைப்பார்த்து பார்டன் எங்கே  என யோசித்தபடி கேட்டான்.  


அதற்கு வந்த வீரன்  எந்த பதிலையும் கூறாது நின்றான்.

அது கண்டு வெகுண்ட டிராசிஸ்,பார்டனை வரச்சொல் என கர்சித்தான்.


அப்பொழுது விரன் தனது உடைவாளை உருவுவது கண்டு அதிர்ந்தான்.
பின் யோசித்தவனாய்,நான் எப்பொழுதிருந்து சிறை வைக்கப்பட்டுள்ளேன் என கேட்டான்.


அதற்கு வீரன் எனக்கு தெரியாது,ஆனால் தாங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது அதுவும் 3மரண தண்டனைகள் என்றான்.


அது கேட்டு  நான்  பைரோனை பார்க்கவேண்டும்  என்றான் .


அரசரை பார்க்கமுடியாது என விரன் சொல்வது கேட்டு அதிர்ந்தவனாய்  அமர்ந்தான் டிராசிஸ். 


. . .


அரசருக்கு எனது வணக்கங்கள் பல.

ஹா...ஹா ... ஹா...உண்மையாகவா...உண்மையாகவா... இதை எதிர்பார்க்கவில்லை டிராசிஸ் ,நான் இதை எதிர்பார்க்கவில்லை.


தாங்கள் தானே இப்பொழுது அரசர்.

அதில் சந்தேகமே இல்லை.

அதனால் அவ்வாறு வணங்கினேன்.

ஓவ்...ஓவ்.....ஓவ்...ஓவ் ....எனக்கு மிகவும்  மகிழ்ச்சியாக உள்ளது.இதைவிட வெகுமதி எனக்கு யாரும் தரமுடியாது.வேறு யாரும் தரமுடியாது.
டிராசிஸிசே என்னை  அரசனாக ஏற்றுக்கொண்ட பின் ,உண்மையில் நான்  அரசனே  தான் .
டிராசிஸ் உனக்கு விதித்திருந்த 3 மரணதண்டனைகளிலிருந்தும் நீ  விடுவிக்கப்பட்டாய். 
வா...வா...வா,என் அருகில் வா ,உனக்கான ஆசனம் இந்த மகாசாம்ராஜ்யத்தின் பிரதான மந்திரியாகும்.
வா,டிராசிஸ்,வா ,ஏற்றுக்கொள் ...வா...என்று தனது இரண்டு கைகளையும் நீட்டி அழைத்தான்  பைரோன் .
டிராசிஸ் ,உனக்கு தெரியுமா  நீ என்னை அரசனாக ஏற்றுக்கொள்ளமாட்டாய் என நினைத்துத்தான் உனக்கு 3 மரணதண்டனைகள் அளிக்கப்பட்டது.


ஏன் 3 மரண தண்டனைகள் ?.


டிராசிஸ் உனக்கு யாரும் சொல்லவில்லையா ???. ஓ...ஓ...ஓ... உனக்கு எப்படி தெரியும் , உனக்கு முன்னே உன்னை சார்ந்தவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனரே.பிறகு யார் உனக்கு சொல்லுவார்கள்.கைபனை பாராட்டியே ஆகவேண்டும்.சரியாக கணித்து கூறினான்.அதனால் தான் எல்லாம் சரியாக நடந்தது முடிந்தது.ஆனால், ஆனால், உன் விசயத்தில் மட்டும் சற்று சருக்கல்.

நான் கேட்டகேள்விக்கு பதிலில்லையே .மரணதண்டனை  விதிக்கப்பட்டவர்களுக்கு  உணவு மறுக்கப்படுவது சரியானது தானா?.புதிதாக உள்ளதே . 


ஓ,ஓ,ஓ, ...உனது  மனமாற்றத்திற்கு அது தான் காரணமா டிராசிஸ்?.
வாழ்க்கையில் முதல்முதலில் பசியை  உணர்ந்திருக்கின்றாய் என நினைக்கின்றேன்.பசி...பசி...இது எவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.
என்னை மன்னித்துவிடு உன்னை வருத்தியதற்கு.
. . .


உனக்கு யார்  இந்த பதவியை கொடுத்தது ...கடவுளா ? .


டிராசிஸ் இறந்தவனால்  எப்படி பதவி  கொடுக்கமுடியும்?. 

உளராதே .


ஓ...உனக்கு செய்தி தெரியாது அல்லவா .உங்களின் கடவுள் இறந்துவிட்டார் டிராசிஸ். இறந்துவிட்டார் .


உண்மையாகவா  !!!!!! ?????  .


ஆம்,நேற்று மாலை .

நான்  பார்டனை பார்க்கவேண்டும்.


அவன் தப்பிசென்றுவிட்டான்.


தப்பிசென்றுவிட்டானா ?..


ஆம்,கைது செய்ய முயன்றபொழுது தப்பிவிட்டான்.

ஓஓஓஓ

எனக்கு  உண்மையை கூறு பைரோன் .


நேற்று  இறந்துவிட்டதாக தகவல்.

யார் மூலமான தகவல்.


அபாகஸ் என்பவனிடமிருந்து.


என்ன  அபாகஸிடமிருந்தா .


ஆம்,உனக்கு  அபாகஸ் தெரியுமா ?.


யார் செய்தி கொண்டு வந்தார் ?.






தொடரும்....

இதன் முந்தைய பகுதியை இங்கே பார்க்கவும்

கடவுளின் சாம்ராஜ்யமும் அபாகஸும் .

கடவுளின் வருகை இன்னும் சில தினங்களில் இங்கு 




படங்கள் உதவி ; wikipedia
Download As PDF

5 கருத்துகள் :

MARI The Great சொன்னது…

சுவாரஸ்யம்.!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

தொடக்க அத்தியாயங்கள் விருவிருப்புடன் அமைந்திருக்கின்றன. தொடரட்டும் புதுமைப் படைப்பு.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வித்தியாசமான, விறுவிறுப்பான பதிவு...

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

விருவிருப்பு...சுவாரஸ்யம்...தொடருங்கள்...

அம்பாளடியாள் சொன்னது…

மரண தண்டனை வழங்கப்பட்டவர்களுக்கு உணவு
மறுக்கப்படுமா!!!?......இந்த விசயம் இப்போதுதான்
அறிகிறேன் .வித்தியாசமான பகிர்வு தொடர
வாழ்த்துக்கள் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "