புதன், 28 ஆகஸ்ட், 2013

குற்றவாளிகள் தேர்தலில் நிற்பது சரியா ?

.



குற்றவாளிகள்  தேர்தலில் நிற்பது சரியா ? ஏன் நிற்கக்கூடாது ?.


இதில் கவனிக்கப்படவேண்டியது அரசியலமைப்பை சிதைக்கும் அளவிற்கு
அவர்களின் குற்றங்கள் இருக்கிறதா என்பதுவே .

அவர்களின் குற்றங்கள் அரசியலமைப்பை சிதைக்கும் அளவிற்கு இருக்கக்கூடாது.

மேலும் ,
இவர் குற்றவாளி .இவர் சமூக அச்சத்தை ஏற்படுத்தக்கூடியவர் ,
தேவையில்லாதவர் ,எனவே ,இவரை தேர்ந்தெடுக்கக்கூடாது என்று  மக்களிடையே தேர்தல் ஆணையம் தான் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் .

அது அவர்களின் கடமை.

அதைத்தவிர்த்து

குற்றப்பிண்ணனியை காரணம் காட்டி மக்களுக்கு செய்யவேண்டிய கடமையினின்று தேர்தல் ஆணையம்
தப்பித்துக்கொள்ள பார்க்கிறது.

இறுதி வேட்பாளர் பட்டியல்  அறிவிக்கப்பட்ட உடன் யார்,யாருக்கு ஓட்டுப்போடக்கூடாது என்று பத்திரிக்கைகள் ,தொலைகாட்சிகள் மற்றும் துண்டுப்பிரசுரம் மூலம்  குற்றப்பிண்ணனி உடையவர் தேர்தலில் வேட்பாளர்களாக கலம் இறங்கிய உடனே விழிப்புணர்வை மக்களிடையே போதிக்கவேண்டும் ,கூற வேண்டும். இது அவர்களின் கடமை.

இவர் இத்தகைய குற்றப்பிண்ணனி உடையவர் என்பதனை
வாக்குச்சீட்டிலும் ,வாக்குச்சாவடியிலும் தெரியும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும் .மேலும் ஏன் ஓட்டுப்போடக்கூடாது என்றும் தெளிவாகவே தெரிவித்தால் எந்தக்கட்சியும் குற்றப்பிண்ணனியுள்ளவர்களை
தேர்தலில் நிறுத்தாது ,தவிர்க்கும் .



குற்றப்பிண்ணனியுள்ளவர்களை  தேர்ந்தெடுப்பதும் தவறு .
குற்றப்பிண்ணனியுள்ளவர்களை தேர்ந்தெடுக்க வைப்பதும் தவறு .






.
Download As PDF

சனி, 17 ஆகஸ்ட், 2013

மோடியின் சுதந்திரதின உரையை விமர்சிப்பவர்களே சற்று நினைத்துப்பாருங்கள் .




நொரண்டு : வணக்கம் நண்டு .

நண்டு :  வாங்க ... வாங்க ...

நொரண்டு : வாங்க வாங்க கடன் தான் .

நண்டு :  என்ன ?.
 
நொரண்டு : வாங்க வாங்க கடன் தானே .

நண்டு :ம் ,அரசியல் பேசர .
 
நொரண்டு : என்ன நான் பேசக்கூடாதா ,என்னப்பா ...  

நண்டு :  உனக்கு விசயமே தெரியாதா .

நொரண்டு : என்ன விசயம் .

நண்டு :  நம்ம சுதந்திர இந்தியாவில் சுதந்திர தின உரை  கூட சுதந்திரமாக பேச முடியாது . உனக்கு இது தெரியுமா .

நொரண்டு : என்ன கொடுமையட இது .யாருப்பா சொல்ரா இப்படி.

நண்டு : இது  சுதந்திர நாடு என்பதை கூட அறியாத சில அறிவுசீவிக்கள் அப்படித்தானய்யா பேசிக்கிராங்க.

நொரண்டு  : ,  மோடியின் சுதந்திரதின உரையைப்பத்தி  சொல்ரயா.

நண்டு :  ஆமாம்பா , ஆமாம் . 


நொரண்டு : அவருடைய பேச்சு....

நண்டு :  ஓ ...அதுவா .அவர்  இந்தியர்கள் அனைவருக்காகவும் பேசினார்.அவரின் குரல் ஒட்டுமொத்த இந்தியர்களின் குரலாகவே இருந்தது .

நொரண்டு :ஓ ..அப்படியா .... அதனால தான் இந்தனை ஆர்ப்பாட்டமா ?.

நண்டு :  ஆமாம்பா ,ஆமாம் . மோடியை விமர்சிப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா . அவர்கள் தாங்களும் கேக்க மாட்டார்கள்,கேட்பவரையும் குறை சொல்வார்கள் ...இப்படிப்பட்டவர்களால் தான் நம்  நாடு 1947லிருந்து நாசமா போச்சுப்பா .நாசமா . 

 நொரண்டு :ஆமாம்பா ...அதுதான் உண்மை . 

நண்டு :  இவங்களுக்கு நாடு நல்லா இருக்கிறதும் பிடிக்காது.நாடு நல்லா இருக்கவேண்டும் என நினைப்பவர்களையும் பிடிக்காது.இவங்க தான்  ஆட்சியாளர்களின் பலம்.

நொரண்டு :சரி,சுதந்திர உரை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஏதாவது வரைமுறை  இருக்காப்பா.

நண்டு :  ஹா...ஹா...ஹா... 
தவறை சுட்டிக்காட்டாத எந்த உரையும் ஒரு சுதந்திரமான உரையாக இருக்கவே முடியாது.
மேலும் ,சுதந்திர உரை இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது ஒரு சுதந்திரமானது அல்ல.
அப்படி எதாவது இருந்தால் ,அவைகள்  சுதந்திரத்தையும்,கருத்து சுதந்திரத்தையும் நசுக்கும் அம்சங்களாகும்.

நொரண்டு :ஆம் ...சரிதான். 

நண்டு : மோடியை விமர்சிப்பவர்களே,

தற்பொழுது நாடுள்ள நிலையை சற்று   நினைத்துப்பாருங்கள் .
உங்களின் சுய நலத்திற்காக நாட்டை மறந்துவிடாதீர்கள். 

நொரண்டு :ஆம்...நமக்கு நாடு தான் முக்கியம்.

நண்டு : நாட்டை காக்க நல்லவரிடம் அதனை ஒப்படைப்போம் . 
அது தான் நாட்டிற்கு நாம் செய்யும் தொண்டாகும்.

 நொரண்டு : இது வரை நான் நாட்டிற்காக ஒன்றும் செய்யவில்லை.
இனி நாட்டை நல்லவரிடம் ஒப்படைக்கும் தொண்டை சிறுதொண்டனாக இருந்து செய்கிறேன்.
















நன்றி ; படங்கள் உதவி இணையம்
Download As PDF

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

வஞ்சனை படுகொலைகளும் மகாபாரதமும்.









இயல்பாக பிறந்த உயிரினங்கள் அனைத்தும்
இயல்பாகவே மரணிக்கவேண்டும் .


இயற்கை 
தனது  மாற்றத்தால் 
மரணத்தை தருவதை  கூட 
நான் ஏற்றுக்கொள்வதில்லை.
அதற்கு அந்தகைய  உரிமையும் இல்லவேயில்லை .


இயல்பான மரணத்தைத் தவிர 
மற்றவகையான மரணங்கள் அனைத்தும் கண்டனத்திற்குரியதே. 
அதற்கு எத்தகைய காரணங்கள் கூறப்பட்டாலும்- இது  எனது கருத்து .



  
 தமிழ்நாட்டில் நடக்கும் சில வஞ்சனை படுகொலைகளைப்பற்றி படிக்கும் பொழுது உண்மையில் நாம் எந்தவகையான சமூகத்தில் இருக்கிறோம்  என எண்ணத்தோன்றுகிறது.

இந்த நிலை மாறவேண்டும்.

மகாபாரதத்தில் சாந்தி பர்வம் என ஒரு பர்வம் இருக்கிறது.

அதில் கூடாத குணங்கள் எட்டு

1.இல்லாத குற்றத்தை சுமத்துவது,
2.குற்றமற்றவனை தண்டிப்பது,
3.வஞ்சனையாக கொலை செய்வது ,
4.பிறர் பெருமையில் பொறாமை கொள்வது,
5.அடுத்தவர் குணங்களை குற்றமாக கூறுவது,
6.உரிமையற்ற பொருளை கவர்வது,
7.கடுஞ்சொற்களை  பேசுவது,
8.கொடுந்தண்டனை அளிப்பது என வகைப்படுத்துகிறது.



இது போன்ற குணமுடையவர்களை அடையாளம் கண்டு சீர்திருத்த வேண்டும். 












படங்கள நன்றி  . Wikipedia
Download As PDF