சனி, 15 பிப்ரவரி, 2014

அரவிந்த் கெஜ்ரிவாலின் தப்பு கணக்கும் பாஜகா காங்கிரசின் தப்புக்கணக்குகளும் ,





டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா ஒரு எதிர்பார்ப்பு நகர்வின் தோல்வியையே காட்டுகிறது.

ஆம் ஆத்மியின் வெற்றியை பயன்படுத்தி பாஜகாவின் வெற்றியை மறைக்கப்பார்த்தது  காங்கிரஸ்.அதை காங்கிரஸ் தனது வெற்றியை கண்டு பணிந்ததாக நினைத்து தப்புக்கணக்கு போட்டார் அரவிந்த் கெஜ்ரிவால் .
இம்முறையும் முன் போலவே , காங்கிரஸ்பணியும் என எண்ணி ,பல காய்களை நகர்த்த திட்டம் போட்டார்.ஆனால்,அவசரப்பட்டு ராஜினாமா செய்துவிட்டார் .இந்த வாய்ப்பு இனி கிடைக்குமா என்பது சந்தேகமே.


யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் ,பாஜகாவும் காங்கிரசும் எப்படி ஒன்றிணைய முடியாதோ  ,அதுபோலவே ஆம் ஆத்மியும் இருக்கும் ,ஆதாலால்,ஆம் ஆத்மியும் ஒருபொழுதும் காங்கிரஸ்  ஆதரவில் ஆட்சி அமைக்க முன்வராது என  பாஜகா  நினைத்தது.ஆனால் நடந்து ....
ஆதலால் , இது பாஜகா  எடுத்த தப்புக்கணக்கு என்றே சொல்லுவேன்.
இனி வரும் காலங்களில் இப்படி ஒரு முடிவை எடுக்கமாட்டார்கள் என நினைக்கிறேன்.

 காங்கிரஸ்  இப்பவரைக்கும் போட்டுட்டு வர அனைத்து கணக்குகளுமே     தப்புக்கணக்குகளாகவே இருக்க ,அதை உணராமல் இன்னும் மேலும் பல கணக்குகளை தப்புக்கணக்கு ஆகும் என தெரியாமலே போட்டுகிட்டுவராங்ளே,இவை தான் அவர்கள் போடும் தப்புக்கணக்கு(கள்) .


@@@@@@


அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களே , நீங்க காங்கிரசுக்கு உம்மாண்டி காட்ட நினைச்சீங்களா ...

ஹா ... ஹா ... ஹா ...

அவங்க காந்திக்கே  உம்மாண்டி காட்டினவங்கனு உங்களுக்கு தெரியாதா.


@@@@@


ம் ...நடக்கட்டும் ...நடக்கட்டும் ... நாடு காட்டும் உண்மையை.





 படம் நன்றி கூகுள் மற்றும் இணையம்.
Download As PDF

புதன், 12 பிப்ரவரி, 2014

அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பைத்தியக்கார முதல்வர்,சர்வதிகாரி,பொய்யர் மற்றும் ...?



நண்டு :  வணக்கம் நொரண்டு.

நொரண்டு :   வாங்க நண்டு.

நண்டு : என்ன விசேசம்.

நொரண்டு :   ஒன்னும் இல்லை,டெல்லி அரசியல் இன்று ஒன்றும் இல்லையானு பார்த்தேன்

நண்டு :  ம் ...

நொரண்டு :   என்ன ? ம் ...

நண்டு : சொல்ல வந்தத சொல்லு.

நொரண்டு :   ''அரவிந்த் கெஜ்ரிவால் பைத்தியக்கார முதல்வனுசுஷில் குமார் ஷிண்டே  '' 

நண்டு :  சரி அதனால் என்ன ?.

நொரண்டு :   அதபத்தி ...

நண்டு :ம் ...

நொரண்டு :   அப்புறம்

நண்டு :  சொல்லு .

நொரண்டு :  '' வினோத் குமார் பின்னி  அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பொய்யர், சர்வதிகாரி என  .. ''   

நண்டு : அதனால என்னப்பா ?.

நொரண்டு :   இல்லப்பா , உண்மையில் அவர் எப்படிப்பட்டவர்னு கேட்க வந்தேன்.

நண்டு :  நான் என்னத்த சொல்ல ,

நொரண்டு :   சட்டத்தை மீறியே செயல்படராருனு  சொல்ராங்களே. அதப்பத்தி.

நண்டு :  அதப்பத்தி ...சட்டம் தன் கடமையை செய்யும்னூ அவருக்கு தெரியும்.

நொரண்டு :   வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாடகம் ஆடுகிறார் என கூறுவது பத்தி

நண்டு : நாடகம்னா ஆடித்தானே ஆகனும்.

நொரண்டு :   என்னப்பா எதக்கேட்டாலும் இப்படியே சொல்ர.

நண்டு :  சரி , விசயத்துக்கு வரேன்,
அரவிந்த் கெஜ்ரிவாலும் சரி ஆம் ஆத்மி கட்சியினரும் சரி ,மிகவும் தூய கரங்களுடன் பொதுத்தொண்டாற்ற வந்தவர்கள் .

நொரண்டு :   ம்...

நண்டு : காந்தி கூட தனது நடவடிக்கைகளுக்காக அதிகம் விமரிசிக்கப்பட்டுள்ளார்.வெற்றி பெற்ற பின் புரிந்துகொள்ளப்பட்டுள்ளார்.

நொரண்டு :    ம்...

நண்டு :  அரவிந்த் கெஜ்ரிவாலும் சரி ,ஆம் ஆத்மியினரும் சரி ,சில பேச்சுக்களிலும்,நடவடிக்கைகளிலும் மாற்றம் காணவேண்டும்.மற்றபடி சரியாகத்தான் இயங்குகிறார்.

நொரண்டு :   அப்படியா .

நண்டு : மக்கள் அவர்களுக்கு கொடுக்கும் உயர்ந்த ஸ்தானத்தை நன்றாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்  ...மக்களை தொந்தரவு செய்யாமல் ...

நொரண்டு :   ஓ...அதனால் தான் நீ அவர்களின் மக்களை தொந்தரவு தரும் செயல் குறித்து 
நண்டு :   அது ....ம் ...அரசியல்...அவர்கள் இன்னும் படிக்கவேண்டிய பகுதி அதிகம் என்பதால் ,அதனை பிறகு பார்ப்போம்.

 நொரண்டு :   ம்...

நண்டு : இன்னும் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது எனில் ,நல்லவர்கள் நாட்டில் இருப்பதால் தான்.அவர்களை வெளிக்கொணர்ந்த விசயத்தில் அன்னாவிற்கும்,ஆம் ஆத்மிக்கும் நாம் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

நொரண்டு :   ஆமாம் ,அது ஒவ்வொரு இந்தியனின் கடமையும் கூட.

நண்டு :  அரசியல் பொய்யர்கள் ,அரசியல் சர்வதிகாரிகள்,அரசியல் கொள்ளையர்கள்,அரசியல் திருடர்கள்,மற்றும் அரசியல் பித்தலாட்டக்காரர்கள் மத்தியில் நல்லவன் ஒருவன் அரசியல் பொய்யனாக, ,அரசியல் சர்வதிகாரியாக,அரசியல் கொள்ளையனாக,அரசியல் திருடர்னாக,மற்றும் அரசியல் தெரியாதவனாக  தெரிவது இயல்புதான்.

நொரண்டு :   ஓ...

நண்டு : இந்தியாவிற்கு ஆம் ஆத்மியினரின் சேவை மிகவும் அவசியமான ஒன்றாகும் .

நொரண்டு :   எதற்கு.

நண்டு :  ஆளும் வர்கத்தினருக்கு இவர்கள் தான் சிம்ம சொப்பனம்.

நொரண்டு :  அதனால் என்ன ...?

நண்டு :  அதனால்,ஆளும் வர்கத்தினர் மக்களிக்கு எதிராக என்றும் செயல்பட முடியாது.

நொரண்டு :  தெளிவா... உதாரணம் ஒன்னுடன் சொல்லு.

நண்டு:ம்....உதாரணத்திற்கு...ஒடுக்கப்பட்ட, நலிந்த சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதுபோல் ஆளும்வர்க்கத்தினர் செயல்பட்டால்,அதனை ஒடுக்கும் வல்லமை இவர்களிடம் தான் உண்டு.

நொரண்டு :   ம் ...புரியுது ...புரியுது.

நண்டு :  மற்ற கட்சிகள் என்றும் ஆதாய அரசியலை மேற்கொள்வதால் அவர்களை நம்ப முடியாது.

நொரண்டு :   சரி தான் ...  அப்ப  நீ ...

நண்டு :எனக்கு நேரமச்சு நான் வரேன் ...மற்றதை பிறகு விரிவா பேசலாம்.







 படம் நன்றி கூகுள் மற்றும் இணையம்.
Download As PDF

சனி, 8 பிப்ரவரி, 2014

ராகுலா x மோடியா யார் சரியான பிரதமராக இருப்பார் ?.




நாடாளுமற்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வென்றால் ராகுலும்
பாஜகா கூட்டணி வென்றால் மோடியும் பிரதமராக 100 % வாய்ப்புள்ள நிலையில் ,இவர்கள் பிரதமராகும் பட்சத்தில் யார்  சரியான பிரதமராக இருப்பார்  என்ற பார்வையில் ,எனது ஆதரவினை 75% பெறும் நபருக்கே நான் வாக்களிக்க உள்ள நிலையில் சில பகிர்வுகள் இங்கே  .

எனக்கு ராகுலா,மோடியா, காங்கிரசா ,பாஜகாவா என்ற பாகுபாடு கிடையாது.

ராகுல் என்ன செய்தார்,மோடி என்ன செய்தார் என்று குற்றம் பார்த்து  விமரிசனம் செய்ய விரும்பவில்லை.

 காங்கிரஸ்  என்ன செய்தது,பாஜகா என்ன செய்தது  என்றெல்லாம் நான் பார்க்க விரும்பவில்லை.

இனி வரும் காலங்களில் இவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் .
நாட்டின் பொருளாதார ஏற்றத்திற்கும்,
மக்களின் நலவாழ்விற்கும் இவர்கள் என்ன செய்ய உத்தேசித்துள்ளனர்.
இதுவே எமக்கு முக்கியம்.



சரி ,
யார்  சரியான பிரதமராக இருப்பார் என்பதற்கு மதிப்பெண் கொடுக்க என்னை சொன்னால்  

ராகுலுக்கு 49/100 ,

மோடிக்கு 51/100.

என மதிப்பிடுவேன்.



இது இன்றுவரையிலான  ஒரு மதிப்பீடு தான்.
அடுத்தடுத்து நடக்கும் நடவடிக்கைகள் பார்த்து இதில் மாற்றம் வரலாம்.


 கட்சிகளின் நிலை பற்றிய எனது  பார்வை.

1.காங்கிரஸ் இன்னும் உறங்கிக்கொண்டுள்ளது ,ஏனென்று தெரியவில்லை,
ராகுல் இன்னும் சரியான முடிவிற்கு ( form மிற்க்கு) வரவில்லை,
அதனால் இன்னும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது .
ராகுல் சரியான முடிவெடுத்து ,மக்களை சரியாக அணுகினால்,நல்ல பலன் கிடைக்கும்.

2.பாஜகாவுக்கு மக்களை சென்றடைவதில் இன்னும் செறிவு தேவை.
மோடியின் வேகம் மற்றவர்களிடமும் வேண்டும்.

 சரி ,யார் பிரதமர் என்பதனை அவர்அவர்களின் செயல்களின் மூலம் நிலைநிறுத்த வாழ்த்துக்கள்.


எமக்கு தேவை

 வளமையான    பாரதம்
வறுமையற்ற இந்தியா 


இதனை உறுதிப்படுத்துபவருக்கே எமது ஆதரவு




 வாழ்க பாரத மணித்திரு நாடு.

.

படங்கள் உதவி நன்றி கூகுள் மன்றும் இணையம்.
Download As PDF