சனி, 21 பிப்ரவரி, 2009

நாட்டுடமையாக்கலும் -பெரியாரும்

.


இலக்கியவாதிகளின் எழுத்துக்கள்
மற்றும்
நாட்டுக்கு உழைத்த நல்லோர்கள்
மற்றும்
தேசியவாதிகளின்
உடைமைகள் ,எழுத்துக்கள்
ஆகியவைகள்
நாட்டுடமையாக்கப்படுவதற்கும்

சிந்தனையாளர்களின் எழுத்துக்கள்
நாட்டுடமையாக்கப்படுவதற்கும்

நிறைய வேறுபாடுகள் உண்டு .


ஒரு சிந்தனையாளராக பெரியாரை நினைக்கும் எவரும் அவரின் எழுத்துக்களை
நாட்டுடமையாக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவேமாட்டார்கள்.
ஏனெனில் நாட்டுடமையாக்கல் என்றால்
என்ன என்பது பகுத்தறிவாளர்களுக்கு மட்டுமே தெரியும் .


பாமரத்தனமானவர்களின் பார்வைக்கு ....


பெரியாரின் எழுத்துக்கள்
அழிந்து வருகிறது
அதனின்று அதனை காப்பாற்ற
நாட்டுடமையாக்கப்படுவதல் மட்டுமே முடியும்
என்ற நிலையில்,
மற்றும்
பெரியாரின் எழுத்துக்கள்
மக்களால் அறியப்படவேயில்லை
எனவே
நாட்டுடமையாக்கப்படுவதால் மட்டுமே
மக்கள் மத்தியில் அறியப்படவைக்க முடியும் அப்பொழுதுதான்
அது சாத்தியமாகும்
என்ற நிலையில்
நாட்டுடமையாக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தால்
அது மிகவும் நியாயமாக இருக்கும் .
தவிர்த்து,
பெரியாரின் கொள்கைகள்
அனைத்தும் உயிர்ப்புடன்
உள்ள நிலையில்
அவர் ஆரம்பித்த
அனைத்தையும்
அவரின் அன்பினைப்பெற்ற
அவரின் நேரடியான
அன்பர்களால்
நிர்வகிக்கப்பட்டும் ,
செலுமைப்படுத்தப்பட்டும்
வரும் நிலையில்
பெரியாரின் எழுத்துக்களை
நாட்டுடமையாக்கவேண்டும் என்ற கோரிக்கையை
முன்வைப்பது்

பாமரத்தனமாக உள்ளது .

பெரியாரை பெரியாராக மட்டுமே பார்க்கவும்.
அடையாளமாக பார்ப்பது பாமரத்தனமாகும் .


.
.

Download As PDF

புதன், 18 பிப்ரவரி, 2009

பதிவுகளும், வரலாறும்.

.




எனது வலைப் பதிவை படித்த சில நண்பர்கள் என்னிடம் எத்தனையோ பிரச்சனைகள்
இருக்கும்பொழுது

அயோத்தி விவகாரம்-இது உண்மை -இது முடிவு -என்ற

இப்பதிவைக்கு காரணம்
கேட்டார்கள்.


அவர்களுக்கு…


இது
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு
வழக்கறிஞர்கள் நடத்திய
இலக்கிய காலாண்டிதலில்
வெளிவந்த பதிப்பின்
மறு வெளியிடலே.


வழக்கறிஞர்களாகிய எங்களுக்கு மற்றவர்களைவிட
சமூகப் பொறுப்புகள்
மிக அதிகம்.
மற்றவர்களைப் போன்று
எம் போன்றோர் ஒரு விசயத்தை
ஏனோ, தானோ என்றுபார்க்க முடியாது, எழுத முடியாது.

விருப்பு, வெறுப்பற்று
எந்தவித இசத்திற்கும் ஆட்படாமல் நடுநிலையுடன்
மதமாச்சர்யங்கள் கடந்த
மனித நேயத்துடன் இருந்தால் மட்டுமே எமது எழுத்துக்களை புரிந்துகொள்ளமுடியும் .


மதவாதம்,
பிரிவினைவாதம்,
தீவிரவாதம்
ஆகியவை
எங்கிருந்தாலும்,
எவ்வடிவில் இருந்தாலும்,
எவரிடம் இருந்தாலும்,
எவரிடம் இருந்து வந்தாலும்
அதனை
வேரறுக்கவேண்டும்
என்பதுவே
எமது பதிவு.


பொய்மைகளையும்,
சுரண்டலையும்,
அடக்குமுறைகளையும்,
மூடத்தனத்தையும்,
அறியாமைகளையும்
அகற்ற
எம்போன்றோர்
விழிப்புடன்
எப்பொழுதும்
எந்நிலையிலும்
செயல்பட்டுக் கொண்டே இருப்போம்...


வழக்கறிஞர்களாகிய நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை
நடத்தி வரும் இவ்வேலையில்,


நோயில் வாடினும், நொடிப்பொழுதும் தமிழர் நலன் மறவா
தமிழினக் காவலர்
இனமானத்தலைவர்
மாண்புமிகு தமிழக முதல்வர்
கலைஞர்
அவர்களும்,

தமிழே,
தமிழ்மொழியே,
தமிழரே,
தந்தை பெரியாரே
என
தனக்கென வாழா
தன்மானத் தமிழர்
மானமிகு கி. வீரமணி
அவர்களும்,

இது தமிழின் காலம்,
ஆனால்
ஈழ தமிழினமோ கலக்கத்தில்
என
தினம், தினம்
வாடி, வாடி
பல்வேறு போராட்டங்களில்
தமிழர் வாழ்விற்காக
தம்மை ஈடுபடுத்தி போராடிவரும்
ஐயா பழ.நெடுமாறன், டாக்டர் இராமதாஸ், தொல்.திருமா, வை.கோ
மற்றும்
பல்வேறு தமிழ்இன உணர்வாளர்களும், மாணவர்களும்,
தொழிலாளிகளும்
மற்றும்
லட்சோப லட்ச தமிழ் இதயங்களும்,

வழக்கறிஞர்களாகிய நாங்களும்


ஈழ மக்களின் விடியலுக்காக
தம்மால் முடிந்த அளவிற்கு
முழுமையாக போராடிவரும் இவ்வேலையில்,


அப்பாவி தமிழ்மக்களின்
அவலம் நீடித்துவரும்
நிலையில்,


எம்மைச் சந்தித்த வழக்கறிஞர் நண்பர்கள் சிலர்,

பொதுத் தேர்தல் வரும் இவ்வேலையில் பா.ஜ.க. அயோத்தி விவகாரத்தை கையில் எடுத்துள்ள நிலையில்,
ஈழ மக்கள் விடியலுக்கு ஒட்டுமொத்த தமிழகமே திரண்டிருக்கும் இவ்வேலையில்
சந்தடிசாக்கில்
மதவாதம்
இங்கு
மேலும் வேரூண்டிவிடக்கூடாது.
எனவே,
அயோத்தி விவகாரம்
-இது உண்மை, இது முடிவு -கட்டுரையை புத்தகமாக வெளியிட வேண்டும் என வேண்டினர்.
முழுவதும் புத்தகமாக வெளிவர சில நாட்களாகும் என்பதாலும்,
தற்பொழுது
மேலும் சில நண்பர்கள் படிக்க ஏதுவாக இருக்கும் என்பதாலும்
எமது கட்டுரையின் ஒரு பகுதியை வெளியிட்டேன்.

இதுவே காரணம் .



எனது கட்டுரையைப் படித்த
கற்றறிந்த வழக்கறிஞர் நண்பர்கள்
சிலர்
எஸன்ஸ் ஆக இருக்கிறது
சர்பத்தாக மாற்றிக் கொடுத்தால்
மிகவும் நன்கு
ஆழமாகப் புரிந்துகொள்வோம் என்றார்கள்.



அவர்களுக்கு....


எனது எழுத்தின் எழிமைப்படுத்திய வடிவம்தான் தாங்கள் படித்தது. இருந்தாலும், என்னால்
முடிந்த அளவிற்கு முயற்சிக்கின்றேன்.
தாங்களும் முயற்சிக்கவும்.


சரி கட்டுரைக்கு வருவோம்………..



பதிவுகளும், வரலாறும்.


( அயோத்தி விவகாரம்
-இது உண்மை
- இது முடிவு .
........ 2-ம் பகுதி)



முழு முழுப் பூசணிக்காய்கள்
சோற்றில் அல்ல
ஆற்றில் ...
ஆங்காங்கே
ஆங்காங்கே
நதிக்கரைகள் நெடுகிலும்
நதிக்கரைகள் நெடுகிலும்
மறைக்கப்பட்டு இருப்பது கண்டு
உலகமே வாயடைந்து நின்றது.


"முற்றிலும்
கபட தந்திரங்கள் வழியாக
நமது நாட்டின் ஆதிக்கத்தைக் கைப்பற்றிய அந்நிய நாட்டினர் நமக்குப் போதித்துத் தந்த வரலாறு
வேறு வகையிலானது.
அவர்கள் வந்த பின்னர்தான் இந்த நாட்டிலே கலாச்சாரம் நாகரிகம் எல்லாம் உருவாயினவாம்!
அதன் முன்னர் இங்கு அனைவரும் கிஞ்சிற்றும் நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளாய் இருந்தார்களாம்!
ஐந்தாயிரம் வருடத்திய பழமையுடைய எகிப்து, பாபிலோனியா ஆகிய நாகரிகங்கள் பற்றிக்
கேள்விப்பட்டிருக்கிறோமல்லவா? எகிப்தைச் சேர்ந்த ஃபரோவர்கள் நிர்மாணித்த, பேருருவமாய்
அமைந்திருக்கின்ற 'பிரமிடு'களும்
ஊறு, உரூக முதலிய இடங்களில் அமைந்த மாபெரும் தேவாலயங்களின் மிச்சசொச்சங்களும் இந்த
நாகரிகங்களின் நினைவுச் சின்னங்களாய்த் திகழ்கின்றன. ஆனால் நமதென்று சொல்ல இதிகாசங்கள்
மட்டும்தான். அவற்றை அடிப்படையாகக் கொண்டு பாக்கும்போது இரண்டாயிரம் மீறினால்,
இரண்டாயிரத்து ஐநூறு வருடத்திற்கும் மேலான பழமை நமது நாகரிகத்திற்கு இருக்கிறதென்று
உரிமை கொண்டாட முடிந்திருக்காது.

கடந்த ஐம்பது அல்லது அறுபது வருடங்களுக்கு முன்னர்தான் இந்த நிலைமையில் ஒரு மாறுதல்
ஏற்பட்டது. வைதீக நாகரிகத்தை இங்கே கட்டி வளர்த்த ஆரியர்களின் வருகைக்கு ஆயிரத்தி ஐநூறு
வருடங்களுக்கு முன்னரே பாரதத்தில் மிகவும் மகத்தானதொரு நாகரிகம் நிலைபெற்றிருந்தது.
அந்தக் காலகட்டத்தின் மிகவும் முன்னேற்றமடைந்த நாகரிகமாய்த் திகழ்ந்திருந்தது அது. மிகப்
பெரிதாகவும் இருந்திருக்கிறது.
சிந்து நதிக்கரையோரங்களிலேதான் அது வளர்ந்து மலர்ந்தது.
ஏறத்தாழ முவாயிரம் வடங்களுக்கு முன்னர் அது முற்றிலும் அழிந்து மண்ணிற்கடியிலே
புதையுண்டு போயிற்று. 1921-ஆவது ஆண்டிலேதான் இவை முதன் முதலாக மொகஞ்சதாரோ, ஹரப்பா
ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன."


உண்மை .....முடிவை நோக்கி.......தொடரும்....


.

Download As PDF