வியாழன், 11 டிசம்பர், 2014

சில பாரதி தீ கவிதைகள்


சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்,
துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார்,
அப்பால் எவனோ செல்வான் - அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்,
எப்போதும் கைகட்டுவார் - இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார்.

@ .@ .@. @ .@ .@

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல்

@ .@ .@. @ .@ .@


கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

@ .@ .@. @ .@ .@


தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;

@ .@ .@. @ .@ .@

மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப்-பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?

@ .@ .@. @ .@ .@

அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்.
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.

@ .@ .@. @ .@ .@

பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.



@ .@ .@. @ .@ .@


நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,


@ .@ .@. @ .@ .@



இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.








....


பாரதியின் பாடல்கள்  .

பாரதியின் நினைவாக .


இன்று பாரதியின் பிறந்த தினம் .




Download As PDF

புதன், 10 டிசம்பர், 2014

கூத்தாடிகளின் தமிழ்ஆட்சிஅரசுகள் தமிழுக்கு செய்த துரோகங்களும், நந்தவனத்து ஆண்டியும், தமிழன் போண்டியும்.


நந்தவனத்தில் ஓர் ஆண்டி ...தமிழன் போண்டி ....
தமிழன் போண்டி ....நீ ஆடு பாண்டி ...

ஜிண்க்கா...ஜிண்க்கா ..ஜிக்கா
ஜிங்...
ஜிண்க்கா...ஜிண்க்கா ..ஜிண்ஜாக்கா....
ஜிக்கா
ஜிண்ஜக்கா...ஜிண்ஜக்கா ..ஜிக்கா


நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி  .....
நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி ....
ம்.....
கொண்டுவந் தானொரு தோண்டி...
அதை ...
மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...
ம்... ம்...ம் ... ம்:  நொரண்டு   

நண்டு :  என்ன நொரண்டு ஒரே பாட்டா இருக்கு.

நொரண்டு :  ஜிண்க்கா...ஜிண்க்கா ..ஜிண்ஜா.
ஜிங்...
ஜிண்க்கா...ஜிண்க்கா ..ஜிண்ஜாக்கா....ஜிண்க்கா

நண்டு : என்னப்பா ? .என்னாச்சு ?.

நொரண்டு : அட இந்தப்பாட்டு தெரியாதா உனக்கு.
இது காடு வழியோ,கடுவெளியோ ,என்னமோ ஒரு சித்தர் பாடல் .
எனக்கு ரொம்ப பிடிக்கும்.

நண்டு : ஓ.

நொரண்டு :  இதுக்கு அர்த்தம் தெரியுமா ?.

நண்டு :  செல்லுப்பா ,என்ன ?.

நொரண்டு நந்தவனத்தில இருந்த ஆண்டி  ஒருத்தன்  ,பிச்சை எடுக்க , குயவனை நச்சு நச்சுனு நச்சி , பிச்சை பாத்திரத்த ( தோண்டி ) ஒன்னு , வாங்கிவந்தத்தனாம் .புது தோண்டி கிடைச்ச சந்தோசத்தில ,கூத்தாடி கூத்தாடி,போட்டு உடைச்சுட்டானாம்.அதிகம் ஆடுன அம்புட்டுத்தான் , இதன் தத்துவம் .

நண்டு : நீ  ஜிண்க்கா  இப்ப போட்ட மாதிரி.

நொரண்டு : ஏய் என்னப்பா ,எனக்கே வா ? .

நண்டு : இது சித்து .

நொரண்டு : அப்படினா ?.

நண்டு : சித்து  ,நேரடியாக தரும் பொருளை விட மறைமுகமாக தரும் பொருள் மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.அது தான் சரியானது.

நொரண்டு :அப்படினா சித்து சுத்துனு சொல்ர.

நண்டு : ஆம். அப்படித்தான்.

நொரண்டு : சித்து தெரியுது ,சுத்து என்ன ?.

நண்டு :  பல உண்டு.

நொரண்டு என்ன பலதா.

நண்டு :  ஆமாம்.

நொரண்டு :சரி சிலத சொல்லு.

நண்டு :  முதல ,எனக்கு  தெரிஞ்சத சொல்ரேன்.

நொரண்டு :ம்...

நண்டு : நந்தவனத்தில் ஓர் ஆண்டி- நந்தவனத்தில் இருக்கும்  ஆண்டியை ஏன் பாடனுங்கரது என் முதல் கேள்வி ?.

நொரண்டு :சரிதான் .ஆமாம்,ஏன் சுடுகாடு,கோயில் இப்படியான இடத்தில இருக்கிற ஆண்டிகளை பாடாம, ஏன்  நந்தவனத்தில் உள்ள ஆண்டிய வைத்து பாடினார் ?.

நண்டு :பாடல் படி ,குயவனை வேண்டினால் ,தோண்டி கிடைக்கும் ,ஒரு தோண்டி போனால் என்ன ?.அடுத்து வேண்டவேண்டியது தானே அடுத்த நாலாறு மாதம்?.

நொரண்டு :ம்.

நண்டு :  தோண்டி கிடைத்ததற்கு கூத்தாடியதும் ,உடைந்ததற்கு வருத்தப்பட்டதும் ஆண்டிகளின் இயல்பில்லையே ?.

நொரண்டு : ஆமாம்,ஆண்டிகளில் இயல்பில்லை தான் .

நண்டு : ஆண்டிகள்  மகிழ்ச்சி,துக்கம் எதுவும் இல்லாதவர்கள்.

நொரண்டு :ஆமா இல்ல ! ?.

நண்டு :   ''பிச்சையென் றொன்றுங்கே ளாதே '' என பாடி தோண்டி மேல் பற்று வைக்க காரணம்.

நொரண்டு :ஓ

நண்டு : இது தமிழின் நிலையையும்,மக்களின் நடவடிக்கையையும் நகைப்பதோடு ,தமிழ் அரசுகளை ஏளனம் செய்தும் ,தமிழ் அரசுகள் தமிழுக்கு செய்யும்  துரோகத்தை ,தமிழக மக்களின் கூத்தாடிகளின் மீதான பேதை நிலையை சுட்டிக்காட்டியும் செல்வதை உணர்ந்தேன்.

நொரண்டு :எப்படி சொல்ர.

நண்டு :  ஒரு சின்ன சோதனை.

நொரண்டு : சொல்லு செஞ்சரலாம்.

நண்டு :  எந்த காலத்துக்கு இந்த பாடலை பொருத்திப்பார்க்களாம்.

நொரண்டு :எப்படி பொருந்தும்.

நண்டு :  ம்.ஒரு  சிறு விளக்கம் மட்டும் தரேன்.நீ பொருத்தி பார்.அப்புறம் தெரியும் ,சித்தர்களின் சித்துக்கள்.

நொரண்டு :சரி சொல்லு ...முயற்...சிக்..கிறேன்.

நண்டு :நன்று.

இப்பாடலில்,

நந்தவனம் என்பது  அனைத்து விதத்திலும் செழுமையாக இருந்த தமிழ் தேசத்தை  குறிக்கிறது.

 நொரண்டு : சரி .

நண்டு : ஆண்டி என்பவர் தமிழ் ஆதையை குறிக்கிறது .

 நொரண்டு : சரி . 

நண்டு: குயவன் என்பவர் இங்கு வாழ்ந்த திருவள்ளுவர், தொல்காப்பியர்,சித்தர்கள் போன்ற தமிழ் மூதாதைகளை குறிக்கிறது.   

நொரண்டு : சரி .

நண்டு : தோண்டி என்பது இங்கு அள்ள அள்ள குறையாது ,புதுப்புது கருத்துக்களை உற்பத்தி செய்து வரும் மெருகேற்றப்பட்ட இலக்கியமும் , அதன்பால் வளமான இலக்கணத்தையும் கொண்ட  தமிழ் மொழியை குறிக்கிறது .

நொரண்டு சரியாக சொல்லப்போனால்.

நண்டு : வழக்கு மொழியினின்று  மேன்மையாக்கப்பட்ட தமிழ் மொழியை குறிக்கிறது .

நொரண்டு : சரி .

நண்டு : மெத்த கூத்தாடி மற்றும்  கூத்தாடி  என்பது ஆண்ட மற்றும் ஆளத்தெரியாத கூத்தாடி நபர்களையும் மற்றும் கூத்தாடி நபர்களையும் , அவர்கள் மக்களிடம் எப்படி நடிப்பது என்பதனை சரியாக தெரிந்து நடிப்பதையும்,கூத்தாடிகளிடம் நாட்டை ஒப்படைத்து தமிழர்கள் வேடிக்கை பார்ப்பதையும்.கூத்தாடிகள் அவர்களின் கூத்தை மட்டுமே ஆடு ஆடு என ஆடி  .... ம் ...என்ன சொல்ல ....சமீப காலத்திற்கு பொருத்திப்பார்.  

நொரண்டு : சரி .

நண்டு :சரி சொல்லிக்கிட்டு இருக்காத .பொருத்திப்பார்.

நொரண்டு :நீயே சொல்லப்ப,எனக்கு புரியல.

நண்டு :செழுமைப்படுத்தி  நமக்கு நமது முன்னோர்கள்  விட்டுச்சென்ற நமது தமிழ் மொழியை தமிழகத்தை ஆண்ட,ஆளும் கூத்தாடி அரசுகள் மேலும் செழுமைப்படுத்தாமல் தமிழுக்கு துரோகம் செய்து தமிழையும், தமிழர்களையும் நடுக்காட்டில் விட்டுவிட்டனர் .

நொரண்டு   ஆமாம் சரி தான் சொன்ன . நீ எப்படி இந்த முடிவுக்கு வந்த?.

நண்டு : திருவள்ளுவர்,தொல்காப்பியர்,சித்தர்கள் இவர்கள் போன்றவர்கள்  எல்லாம் அரசர்கள் அல்ல.

நொரண்டு : அரசர்களால் போற்றப்பட்டவர்களும் அல்ல.

நண்டு :அது ஒரு பார்வை.ஆனால்,தூரத்து பார்வை.

நொரண்டு :ம்...

நண்டு :தனிப்பட்ட தமிழர்களால் தான் தமிழ் என்றும்  வளர்ந்து வந்துள்ளது என்பது வரலாறு.

நொரண்டு : இப்ப கூடவா.

நண்டு :  எப்பவும் ,
இப்ப கூட  சமீப காலத்தில் தமிழ் வளர்ச்சிக்கு பத்திரிக்கைகள் , சிறு பத்திரிக்கைகள் செய்த சேவைகள் சில மிகவும் சிறப்பாக இருந்து வந்தது. இவைகள் தனிநபரால் இயக்கப்படுபவைகள்.
ஆனால் ,அப்படிப்பட்ட ஒரு சேவையைக்கூட  அரசு செய்யவில்லைனு தான் சொல்லனும்.

நொரண்டு :ம்.

நண்டு :துரோகங்களை சொல்லனும்னா ,சொல்லிக்கிட்டே  போகலாம்.

நொரண்டு : ஓ

நண்டு : ஆனால்,தமிழன் ஒன்றே ,ஒன்றை புரிந்துகொண்டு நடக்கவேண்டும் .

நொரண்டு : எதப்பா.

நண்டு : அதையும் சித்தரே சொல்ரார்.

நொரண்டு :என்னானு ?

நண்டு : 
  

"நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு"


நொரண்டு : ஓ...சரி தான் .ஆனா  'பரமனை நத்தியே' னா ?.

நண்டு : இதுவும் சித்தின் சுத்து தான் .

சித்தர் பாடலில் மறைத்துள்ள இரகசியம்
 இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.

Download As PDF