ஞாயிறு, 26 ஜனவரி, 2014

இதுவே இன்றைய முக்கிய செய்தி.




இதுவே
இன்றைய
செய்தியாகும்.


இதுவே
இன்றைய
முக்கிய செய்தியாகும்.




 வளமையான    பாரதம்
வறுமையற்ற இந்தியா 

இதனை உறுதிப்படுத்தும் கட்சிகளுக்கே எமது ஆதரவு

இதுவே
இன்றைய
எனது முக்கிய  செய்தியாகும்.


......


இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.










படங்கள் உதவி நன்றி கூகுள் மற்றும் இணையம்.
Download As PDF

சனி, 25 ஜனவரி, 2014

காங்கிரஸ்,பாஜக மற்றும் பிற கட்சிகளிடம் ஏழை இந்தியர்கள் சார்பில் ஒரு கேள்வி?





ஏழைகளுக்காகவும்,
ஏழ்மையை ஒழிப்பதாகவும் ,
ஏழைகளின் பங்காளனாகவும்
தங்களை கூறிவரும் காங்கிரஸ்,பாஜக மற்றும் தேர்தலில் மக்களை சந்திக்க உள்ள  கட்சிகளே
உங்களால் பகிரங்கமாக கூற முடியுமா ?.வருகின்ற பாராளுமன்ற தேர்தல்
ஏழை இந்தியர்களுக்கான தேர்தலாகத்தான் இருக்கும் ,
ஏழை இந்தியர்களின் உயர்விற்கானதாகத்தான் இருக்கும் என்று .

ஆம்,என்று நீங்கள்  சொல்வீர்கள் எனில்,

வருகின்ற தேர்தலில் ,உங்கள் கட்சியின்  சார்பில் ,
வருமைக்கோட்டிற்கு கீழ் உள்ள எத்தனை ஏழை இந்தியர்களுக்கு உங்கள் கட்சி சீட் கொடுக்க உத்தேசித்து உள்ளது என்பதனை கூறுங்கள் பார்க்கலாம்.


வருமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை இந்தியர்களுக்கு  சீட் கொடுக்காமல்
ஏழ்மையை ஓழிப்பதாகவும் , 
ஏழைகளின் பக்கம் நீங்கள் இருப்பதாகவும்
காட்டு கூச்சல் போட்டாலும்
யாரும் உங்களை ஆதரிக்கபோவது  இல்லை என்பதனை நீங்கள் முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
இது தான் உண்மை.

ஏழை இந்தியர்கள் பற்றிய
உங்களின் நிலைப்பாட்டினை  முதலில்   மக்களிடம் தெள்ளத்தெளிவாக எடுத்து வையுங்கள்.
பிறகு 
ஏழ்மையை ஓழிப்பதாகவும் , 
ஏழைகளின் பக்கம் நீங்கள் இருப்பதாகவும்
கூச்சல் போடுங்கள்
மக்கள் நம்புவார்கள்.

இல்லையெனில்
இனி ஒருபோதும்
ஏழை இந்தியர்கள் உங்களுடையவர்களாக இருக்கமாட்டார்கள் . 



படங்கள் உபயம் நன்றி கூகுள் மற்றும் இணையம்.
Download As PDF

திங்கள், 20 ஜனவரி, 2014

புதிய பொருளாதார கொள்கை - ஒரு பார்வை


.



 புதிய  பொருளாதார கொள்கையால்  மட்டுமே  ஊழலை ஒழிக்க முடியும்.











புதிய  பொருளாதார கொள்கையால்  மட்டுமே  வறுமையை  ஒழிக்க முடியும்.



புதிய  பொருளாதார கொள்கையால்  மட்டுமே  போரை   ஒழிக்க முடியும்.











 புதிய  பொருளாதார கொள்கையால்  மட்டுமே  ஆயுத கலாச்சாரத்தை  ஒழிக்க முடியும்.












புதிய  பொருளாதார கொள்கை  மட்டுமே  ஏற்றத்தாழ்வுகளை  ஒழிக்கும்.












புதிய  பொருளாதார கொள்கை  மட்டுமே சகோதரத்துவத்தை பேணும்.







 




புதிய  பொருளாதார கொள்கை  மட்டுமே  அன்பை வளர்க்கும்.








புதிய  பொருளாதார கொள்கை  மட்டுமே  அமைதியை கொடுக்கும் .







. . .

 இப்படி புதிய  பொருளாதார கொள்கை
மனித குலத்திற்கு நன்மை பயப்பதால்,

இத்தனையும்  இன்று உலகுக்கு  தேவையாக  இருப்பதால்  



 இத்தகைய புதிய  பொருளாதார கொள்கையே  
இன்றைய உலகிற்கு   
இப்பொழுது உடனடி தேவையான ஒன்றாக  உள்ளது.





தொடரும் ....






நன்றி :படங்கள் உதவிக்கு - கூகுள் மற்றும் இணையங்கள்.
Download As PDF

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

கடவுள் வசிக்கும் வீட்டின் வரைபடம்.









அப்பத்தாவின் சமாதி
எங்கள் வயல் வெளியில்தான்
இருந்தது !
இப்போது
இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின்
அடியில்
இருக்கிறது
அந்த வயலின் சமாதி!




 @@@@@@@@@@



ரகசியங்களை
சேகரம் செய்கிறது
இரவு.
அதிகாலை
அவைகளை
சூரியனிடம்
சொல்லி விட்டு செல்கிறது.
நான்
அண்ணாந்து பார்க்காமலே
நடக்கப் பழகுகிறேன்
அந்தரங்கங்களின் கனத்துடன்.



@@@@@@@@@@







நண்பர் வழக்கறிஞர் ராஜீ சிவசுப்பிரமணியம் அவர்களின் கடவுள் வசிக்கும் வீட்டின் வரைபடம் கவிதைகள் தொகுப்பில் இருந்து  இரண்டு கவிதைகள் பார்வைக்கு.
வெளியீடு :அமுதாலயா,2,சிவஞானம் சாலை,சென்னை-17.விலை : ரூ.40 .


படம்: நன்றி இணையம்.
                                                                                                                                              
Download As PDF

வியாழன், 16 ஜனவரி, 2014

ராகுல் பிரதமர் ஆவாரா ?.







காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்துள்ள  தவறுகளுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை .இந்நிலையில் தாங்கள் செய்த அனைத்து தவறானவைகளையும்  ராகுல்  என்ற பிம்பத்தை வைத்து மறைக்கப்பார்க்கின்றனர் காங்கிரஸார்.அதனால் ,காங்கிரஸ் கட்சியின்
கடந்த காலம் அனைத்தும் ராகுலின் தலையில் தான் விழுகிறது.
இது மிகப்பெரிய சுமை. இதனை கட்டாயம்  எளிமை ஆக்கினால் மட்டுமே ராகுலால் சுறுசுறுப்புடன் கட்சியுல் இயங்க முடியும்.இல்லையென்றால் கட்சியை பலப்படுத்துவது  என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

அதற்கு இரண்டே வழிகள் தான் உண்டு.

 1.காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்துள்ள  தவறுகளுக்கு யார் யார் பொறுப்போ அவர்அவர்கள் கட்டாயம் அவர்அவர் செயலுக்கு பொறுப்பேற்கவேண்டும்.

2.ராகுல் பிரதமராக வேண்டும்.

நாளை நடைபெறவுள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இதற்காண ஏற்பாடுகளை செய்கின்றார்களா என்று பார்ப்போம்.




( இக்கட்டுரை ஒரு அரசியல் பார்வை கொண்ட அலசல் மட்டுமே )




படங்கள் : நன்றி குகூள் மற்றும் இணையம்
Download As PDF

புதன், 15 ஜனவரி, 2014

மத்திய மாநில அரசு ஊழியர்கள் இனி வருமான வரி கட்டதேவையில்லை.





பார்வை 1.ஆண்டு வருமானம் ருபாய் 10 லட்சம் வரை உள்ள அனைவரும்  வருமான வரி கட்டதேவையில்லை.

( மத்திய , மாநில அரசு ஊழியர்களுக்கும்  இதில்  அடங்குவர் என்பதால்
ஆண்டு வருமானம் ருபாய் 10 லட்சம் வரை உள்ள அனைத்து மத்திய மாநில அரசு ஊழியர்களும்  இனி வருமான வரி கட்டதேவையில்லை .
மேலும்,வருமான வரி காட்டாதவர்கள் அனைவரும்  ஆண்டு வருமானம் ருபாய் 10 லட்சத்திற்குள் உள்ளவர்கள் என  கொள்ளப்படும் ) .

பார்வை 2.குறிப்பிட்டவைகளுக்கு குறிப்பிட்ட அளவு வரை தொழில் வரி, சேவை வரி மற்றும் மதிப்பு கூட்டுவரிகள் என்ற வரிவிதிப்புகள் இனி கிடையாது .

பார்வை 3.வரித்துறைகள்  மற்றும் அவை சார்ந்த சட்டங்கள்  மாற்றி அமைக்கப்படும்.

பார்வை 4. வங்கிச்சேவைகள் எளிமையானதாகவும்,பாதுகாப்பனதாகவும் அமையும் வகையில் சீரமைக்கப்படும்.

பார்வை 5.பெட்ரோல்,டீசல் மற்றும் சமயல் எரிவாயு விலைகளை அரசே இனி நிர்ணயிக்கும் ,அதுவும் ஆண்டிற்கு ஒரு முறை .

பார்வை 6.அனைவருக்கும்  மருத்துவப் பாதுகாப்பு.

பார்வை 7.குழந்தைகள்,பெண்கள் மற்றும்  முதியோர்கள்  பாதுகாப்பில் முன்னுரிமை.

 பார்வை 8. ஊழல் ஒழிப்பிற்கு முன்னுரிமை.

...

தற்பொழுது வருமான வரி  மற்றும் பிற வரிகள் குறிந்து  நாடு முழுவதும் முக்கிய விவாதம் நடந்து வரும் வேலையில்,தேர்தல் அறிக்கையா அரசியல் கட்சிகள் முன்வைக்கவுள்ள அறிவிப்புகளில் பிரதானமாக இருக்கும்  அம்சங்களைப் பற்றிய   ஒரு பார்வையே  இந்த பதிவு , அவ்வளவே.



பார்ப்போம்  தேர்தலில் அரசியல்கட்சிளின் நிலைகள் என்னவென்று?.


வரி இல்லாம  எப்படியா நாட்டை  ஆள முடியும் ? - னு யாராவது கேட்டால் ,
எனது பதில் ,நாங்க புதிய பொருளாதார கொள்கையில் பயணிப்பவர்கள்,
இந்த சமாச்சாரம் எல்லாம் உங்களுக்கு புரியாது ,
நீங்கள் வரி எப்படி இருக்கவேண்டும் என்று முதலில் படித்துவிட்டு வந்து
பிறகு கேளுங்க  கேள்வி .பழையதையே பேசாதீங்க.சிந்தியுங்கள்.




படம் : நன்றி கூகுள் மற்றும் இணையம் . 
Download As PDF

செவ்வாய், 14 ஜனவரி, 2014

தமிழச்சி கண்ணீர்



தமிழச்சி வடித்த கண்ணீர்

தமிழச்சி வடிக்கும் கண்ணீர்

அன்றும்

இன்றும்

மண்ணில்

புதைக்கப்பட்டே

மறைக்கப்பட்டு

வரலாறாக .

இமைப்பொழுதும்

இனியும் அனுமதியோம்.

எங்கே வீழ்ந்தோமென

இனம் கண்டு

இனி

எங்கும் வீழா

உயர்தோராவோம்

என

இன்றைய நாளில்

உறுதியேற்போம் .


ஓங்கீயுயர்ந்த மாந்தனாய்

ஒல்காப்புகழ் தமிழனாய்.









.
அனைவருக்கும் எனதினிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் .














மீள்வு.
Download As PDF

திங்கள், 13 ஜனவரி, 2014

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் -நடராஜர் நாட்டுக்கு சொல்லும் செய்தி -பகுத்தறிவு பார்வையில்









//தமிழக மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயில், கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிபுகுந்த கதையாகி விட்டது. தமிழ் அரசர்கள் கோயிலாக்காக விட்ட தானங்களை, நிலங்களை தீட்சதப் பார்ப்பனர்கள் கபளீகரம் செய்து விட்டனர்.

இந்தப் பார்ப்பனர்கள் கைலாசத்திலிருந்து நேரே இறங்கி வந்தவர்களாம். மூவாயிரம் பார்ப்பனர்களில் தலைமை எண்ணும்போது ஒரு தலை குறைந்ததாம் அந்த ஒரு ஆசாமி நான்தான் என்று சிவனே சொன்னதாகக் கதையளந்து வைத்துள்ளனர்.

தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று பரமசிவன் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அடி எடுத்துக் கொடுக்க திருத்தொண்டத் தொகையை சுந்தரர் பாடினாராம். தில்லையில் வாழும் பார்ப்பனர்களின் அடியார்களுக்கும் அடியாராம் சிவபெருமான்!

வானம் முட்டும் கோபுரங்கள் கட்டியவர் யார்? அதன் உச்சிக்கெல்லாம் தங்க மூலாம் பூசியவர் யார்? தில்லை நடராசருக்குத் தங்கக்கூரை வேய்ந்து தந்தவர் யார்? சத்திரம், சாவடி கட்டியவர் யார்? அன்றாடம் ஆறுகால பூஜைக்கு உதவி வருபவர் யார்? எல்லாம் நாம் தானே? நாம் போட்டுக் கொடுத்த செல்வம் தானே இவை யாவும்? ஒரு பார்ப்பானாவது, ஒரு செல்லாக் காசாவது கோவில், குளம், தானம் தருமம் இவற்றிற்குக் கொடுத்திருப்பானா? அப்படியிருக்க இவ்வளவு செய்தும் நாம் ஏன் சூத்திரர்களாயிருக்க வேண்டும்? அவர்கள் மட்டும் ஒன்றும் செய்யாமலேயே நம்மை ஏமாற்றி உண்டு, பிராமணர்களாக வாழ வேண்டும். 


இந்தக் கோவிலே அந்த கோவில் பக்தர்களுக்குச் சொந்தமாக இருக்க வேண்டுமே தவிர, அது சில பித்தர் களுக்கு சொந்தமாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்காது - இருக்கக் கூடாது // .
என்பது ஒரு சாரார் வாதம் .

//மதச் சிறு பிரிவினரின் கோயில் (Religious Denomination) என்றும் இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 26 இன்படி, மதச் சிறுபிரிவினரின் உரிமைகளைப் பறிக்கக்கூடாது என்றும் நிருவாக அலுவலரின் நியமனம் தீட்சிதர்களின் மதச்சார்பான செயல்களில் குறுக்கீடு செய்வதாகும்// என்பது தீட்சிதர்களின் தரப்பு 



இது இப்படி இருக்க,

எனக்கு தெரிந்து ,

சிதம்பரம் என்பது கோவிலின் பெயர் .
ஊரின் பெயர் தில்லை.

சைவர்களுக்கு கோயில் என்பது சிதம்பரம் நடராசர் கோயிலையே குறிக்கும்.

பாடல் பெற்ற தலம்.

சேக்கிழார் பெருமானுக்குத் திருத்தொண்டர் புராணம் பாட அடியெடுத்துத்தந்து, அரங்கேற்றச் செய்யப்பட்ட  தலம்.

மாணிக்கவாசகர்  ஊமைப் பெண்ணைப் பேசுவித்த பெரும்பதி .

இந்தக் கோவிலின் சிவன் மற்ற கோவில்களை போல் லிங்க வடிவில் இல்லை.


சிதம்பரம் கோவிலில் முக்கியமானது சிதம்பர ரகசியம்.
நடராஜர் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார்
.




இவ்வாறு  சில மற்றும் சில உண்மையான வரலாறு ,அவ்வளவே.

இது இருக்கட்டும் ,

இப்பொழுது  சிதம்பரம் நடராஜர்  கோவில் விவகாரத்தின் வழி பொதுவில் மக்களுக்கு  நடராஜர்  சொல்லும் செய்தி...


அரசியல்வாதிகளே,
நாடு மக்களுக்கு எப்படி சொந்தமோ அப்படி கோவில் மக்களுக்கு சொந்தம் .

அதனை தீட்சிதர்கள் நிர்வகித்து வந்தனர்,வருகின்றனர்,
எப்படி என்றால் சமய மக்களின் ஆதரவில்.
ஆனால் அரசியல்வாதிகளே  உங்களைப்போல் நாட்டு மக்களிடம்  என்ன என்ன பொய்  சொல்லி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தீர்களே,அது போல் தீட்சிதர்கள் வரவில்லை.

நீங்கள் உங்களை நம்பிய மக்களுக்கும் ,இனத்திற்கும் துரோகம் செய்துவிட்டு  எப்படி இன்னும் இன,மொழி காவலராக வேடம் போட்டு,
மக்களின் வாக்கையும்,அவர்களால் கிடைத்த வசதிகளையும்,அதனால் அடித்த பணத்தையும் வைத்துக்கொண்டு தன் பிள்ளை, தன் பெண்டு என மகிழ்ச்சியாக இருக்கின்றீர்களே ,அது போல இங்கு யாரும் இல்லை.

உங்களைப்போல் மக்களின் பணத்தை பல ஆயிரம் கோடி ஏமாற்றி உண்டு கொழுத்தவர்கள் இங்கு யாரும்  இல்லை.

நீங்கள் இங்கு யாரையும் காக்கவும்  இல்லை,காக்கப்போவதும் இல்லை.

உங்கள் குடும்பத்தை தவிர்த்து  நீங்கள் மற்ற யாருக்கும் காப்பாளரும் இல்லை.

என் மீது பக்தியும் இல்லை.எனது  பக்தனும் இல்லை.

நிர்வாகம் சரியல்ல அதனால் வெளியேற சொல்லும் நீங்கள்,
உங்களை நம்பியவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு  ,
இத்தனை நாள் தமிழர்களை சுரண்டி பிழைத்து,
இன்னும் அரசியலையும்,பொது வாழ்கையையும் ஒட்டிக்கொண்டு இருக்கின்றீரே. 

உருப்படியா ஏதாவது செய்துள்ளாயா ...சொல் ...?.

அப்படி இருக்க  ஏப்பா ... இத்தனை ஆர்ப்பாட்டம் ?.

என்னங்கையா உங்க தர்மம்.



முதலில்
தூய கரத்துடன் ,
தூய மனத்துடன்
பொது வாழ்க்கையை  இனி உங்களால நடத்த முடியுமா ?.

முடியாது   
அதனால
சுரண்டியதை வைத்து புள்ள குட்டி பேத்தி என இருங்க.

 



   








நன்றி : கூகுள் -படம்  மற்றும் இணைய பக்கங்கள்.
Download As PDF