வெள்ளி, 21 மார்ச், 2014

மோடி அலையால் தமிழகத்தில் எழுந்த மேருமலை.




இப்படி நடந்துவிடக்கூடாது என்பதற்காக
பலிகடாக்களாக ...
கம்யூனிஸ்டுகள், உடன் பிறப்பு... என
தமிழக அரசியலில் நடந்த நாடகங்கள்
எத்தனை ? ... எத்தனை ? ...

இதற்கு சாத்தியமே கிடையாது,
இப்படி ஒன்றும்  ஏற்படவே ஏற்படாது
என்றெண்ணி
தங்களின் பிரச்சாரத்தை தொடங்கி
அவரவர் பவனி வந்து கொண்டிருக்கும் வேலையில்

அனைத்து கட்சிகளையும் வியப்பில் ஆழ்த்தி

பாஜக,
தேமுதிக,
பாமக,
மதிமுக,
கொமதேக,
ஐஜேகே
என ஒன்றிணைத்து
ஒரு மகத்தான வெற்றிக்கூட்டணியை
தேசிய ஜனநாயக கூட்டணி
தமிழகத்தில் பெற்றுள்ளது.

இந்தியாவெங்கும்
மோடி அலை விசிக்கொண்டிருக்கும் வேலையில் ,

அது தமிழகத்தில்
ஒருபடி மேலே சென்று ,
மோடி அலை  மலையாகி ,
அமைதியாக தேர்தலை எதிர்கொண்டு காத்திருக்கிறது.

மோடி அலையில்
எழுந்த இந்த மலை
மேருமலைக்கு ஒப்பாகும்
என தேர்தல் ஆய்வர்கள் கருதுகின்றனர்.


வாழ்க பாரத மாதா.
.

Download As PDF

புதன், 19 மார்ச், 2014

தேவகுமாரனை நோக்கி .







முன்னோர்களின்

வடு உடல்

நிறமாய்
நீங்காத பாவமாய்

கண்கள் முழுதும்
காட்சி கலக்கமாய்
பளிங்கு செவியாய்

மடையனாய்
மூடனாய்
முட்டாளாய்
சமுதாயத்தில்
சமூகத்தில்
சாதியால்
எப்பொழுதும் எப்பொழுதும்
உடல் வெம்பி
நாக்கு உள் இழுத்து
மொழி பேசா வாய்
வெளிச்சொல்லா
பயத்தில்
தடிமனாய்
அச்சத்தில்
போதை மிதந்து
பிதற்றி
ஓலை சுவற்றுக்குள்
நித்தம் நித்தம்
தவம் தவம்
பெண் மீதேறி
தேவகுமாரனை நோக்கி.


.


.
மீள்வு.
Download As PDF

ஞாயிறு, 16 மார்ச், 2014

மிகச்சிறந்த தேர்தல் அறிக்கை 2014 .



india political leaders faces












தேசிய கட்சிகளில் முதன்மையான கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கைகளை இன்னும் சில நாட்களில் வெளியிட உள்ள நிலையில் , மிகச்சிறந்த தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும் ,எப்படி இருக்கவேண்டும் என நினைத்துப்பார்த்து தெடுக்கப்பட்ட தான் இந்த அறிக்கை.இதில் கூறியுள்ளவைகளை நிறைவேற்றுவது சாத்தியமா என்றால் 100 சாத்தியமே.மேலும்,இந்த அறிக்கையில் உள்ள அனைத்து அம்சங்களையும் மக்களுக்கு முன்பே சென்றடைந்திருக்கவேண்டும்.மேலும்,மக்களும் அதன் பயனையும் தற்பொழுது  அனுபவித்து கொண்டிருக்கவேண்டும்.


....



 மிகச்சிறந்த தேர்தல் அறிக்கை 2014  





 1 ரூபாய்க்கு   1 யூனிட்   வீட்டு உபயோக மின்சாரம் .











1ரூபாய்க்கு   3 நிமிடம்  என தனி நபர் பயன்பாட்டிற்கு  மொபைல் சர்வீஸ்  .







 
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று ரூபாய் 100க்கு .











பொட்ரோல் 1 லிட்டர் ரூபாய் 25 , 
டீசல் 1 லிட்டர் ரூபாய்  18 ,
மண்ணென்ணை   1 லிட்டர் ரூபாய் 5 என தனி நபர் பயன்பாட்டிற்கு  .





பெட்ரோல்,டீசல் மற்றும் சமயல் எரிவாயு விலைகளை இனி அரசே  .









ரூபாய்  10 லட்சம் வரை வருமான வரிவிலக்கு.









குடும்பத்திற்கு  ரூபாய் 10 லட்சம் மருத்துவ காப்பீடு















குழந்தைகள்,பெண்கள் மற்றும்  முதியோர் பாதுகாப்பு.










அனைத்து மொழிகளும் அரசு மொழி,
அனைத்து மொழிகளும் ஆட்சி  மொழி,
அனைத்து மொழிகளும் அலுவலக  மொழி .





(இதன் மூலம் இனி அனைவரும் அவர்அவர் மொழிகளில் பாராளுமனறத்திலும், அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும்  தங்களின் கருத்துக்களையும்,வாதங்களையும் முன்வைக்கலாம்.
இதன் மூலம் தமிழிலே  தமிழர்கள் பாராளுமனறத்திலும், அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும்  தங்களின் கருத்துக்களையும், வாதங்களையும்  இனி முன்வைக்கலாம் )






குழந்தைகளுக்கு மிகத்தரமான உயர்தரக்கல்வி,

இளைஞர்களுக்கு மதிப்புமிக்க வேலைவாய்ப்பு,

சுகாதாரமான பாதுகாப்பான நிம்மதியான குடும்பவாழ்வு,

முதியோருக்கு மன நிறைவான ஓய்வு,

சுரண்டல் அற்ற சமூதாயம்     ...



என  ...இப்படி இருக்க வேண்டும்... என்ற எதிர்பார்ப்புடன்.                                                   

    



படங்கள் உதவி நன்றி இணையபக்கங்கள் மற்றும் கூகுள்
Download As PDF

புதன், 12 மார்ச், 2014

காந்தி விரும்பிகளின் வரலாற்றுத்தவறும் ,காந்தியின் படுகொலையும் .



இக்கட்டுரை யாரையும் குறைகூறவேண்டும் என்றோ  ,
யார் மனமும் புண்படவேண்டும் என்றோ  ,
யாரையோ பாதுகாக்க வேண்டும் என்றோ  எழுதப்பட்டது  அல்ல.
இந்தியர்களின் காந்தி மனேபாவத்தையும்,அதனால் இந்தியா அடைந்து வந்துள்ள பின்னடைவுகளையும் ஆய்ந்து எழுதப்பட்டது அவ்வளவே.

காங்கிரசின் வளர்ச்சி முழுக்க முழுக்க  காந்தி விரும்பிகளின் உழைப்பும் அதைத்தொடர்ந்து , அதனைத்தொடர்ந்த ஒன்றும் அறியாத சாமானியர்களின் நம்பிக்கையையிலுமே இன்றுவரை இருந்துவருகிறது.அதில் காந்தியவாதிகளும் அடங்குவர்.(காந்தி விரும்பி அனைவரும் காந்தியவாதிகள் அல்லர்).

சாமானியர்களுக்கு காந்தி விரும்பிகள் யார்?  காந்தியவாதிகள் யார்? என இனம்காண முடியாமலே,அனைவரையும்  காந்தியவாதிகளாக  என நினைத்து கண்மூடித்தனமாக அதனை பின்பற்றத்தொடங்கி,அதுவே  காங்கிரஸின் பலம் ஆகி,நாளடைவில் அதுவே காங்கிரஸ் ஆகி ...

காந்திக்கும் இன்றைய காங்கிரஸிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அனேகருக்கு இன்னமும் தெரிவதில்லை.தமிழகத்தை தவிர பிற மாநிலங்களின் பெரும்பான்மையினருக்கு இந்த விழிப்புணர்வே இல்லை.

சரி ,காந்தி கொலை பற்றி வருவோம்.

காந்தி பற்றி விமரிசிப்பவர்கள் அவரைப்பற்றியும்,அவரின் மரணத்தைப் பற்றியும் கூறுவது அனைத்தும் அறிவுஜிவி முகமூடிக்காக மட்டுமே தவிர அவைகளில் உண்மைத்தன்மைகளோ,ஆய்வின் கூறுகளோ,ஆய்வு காண்ணோட்டமோ சிறிது கைட இல்லாது இருப்பதை ஆய்வர்கள் நன்கு அறிவர்.

மேலும்,காந்தியின் கொலை பற்றி இன்றுவரை எந்த  காந்தியவாதியோ,காந்தி விரும்பிகளோ ஆய்வு செய்யவில்லை.அந்த எண்ணம் கூட அவர்களிடம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.தான் விருப்பிய தலைவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பதனை ஐயந்திரிபற அறிந்துகொள்ள விளைபவரே , உண்மையான தொண்டர்,பின்பற்றுபவர்,நேர்மையாளர் ஆவார்.
ஆனால் காந்தியவாதிகளோ,காந்தி விரும்பிகளோ இன்று வரை செய்து வருவதெல்லாம், காந்தியின் பெயரிலான விளம்பர விருவிருப்பு காந்திமோக சுவாசித்தலையே தவிர வேறு ஒன்றும்இல்லை.

இன்றும் கூட காந்தியவாதிகளில் அனேகர் காந்தியின் இறப்பிற்கு காரணம் என காங்கிரசு கூறுவதையே அழுத்தமாக நம்பிக்கொண்டும்,அதனையே கூறிக்கொண்டும் வருகின்றனர்.காந்தியவாதிகளே  நம்பும் இந்த விசயத்தை காந்தி விரும்பிகளும்,சாமானியர்களும்  கண்மூடித்தனமாக  நம்ப ஆரம்பித்து,
இன்று வரை அந்த பாரத்தை ஆர்.எஸ்.எஸ் மீது சுமத்தி ,உண்மை என்னவென்றே தெரியாமல் பயணிக்கின்றது இந்திய வரலாறு.இது ஒரு வரலாற்றுத் தவறு.

காங்கிரசின் மீதான சாமானிய மக்களின் எதிர்ப்பை  பாஜக அருவடை செய்யமுடியாமல்  போனதற்கான காரணம் ,காந்தியவாதிகள் மற்றும் காந்தி விரும்பிகளின் ,இந்த வரலாற்றுத்தவறே.இது தான் தற்கால இளைய சமுதாயத்தையும்,காந்தியவாதிகளையும் ,படித்த நடுத்தர மக்களையும், அகிம்சை விருமபிகளையும் ,சமூக ஆர்வளர்களையும் பாஜக பக்கம் சேரவிடாமல் தடுப்பதோடு.இது போன்ற வரலாற்றுத் தவறுகளினால் தான்  நாடு இப்படி ஆனது என்றும்,இப்படிப்பட்ட வரலாற்று தவறே,மேலும் மேலும் காங்கிரசை வளப்படுத்தி நாட்டை பலவீனப்படுத்தி இன்று நாடு ஊழல்,ஏழ்மை,சுரண்டலில் மூழ்கி  தவிக்கிறது என்பதனையும் இதனை ஒவ்வொரு இந்தியனும் உணரவேண்டியது ,தற்பொழுது மிகவும் அவசியமான ஒன்றாக  உள்ளது என்பதனையும் ,உணர்த்தவேண்டிய கடமை நம்மைப் போன்ற ஒவ்வொரு இந்தியருக்கும் உள்ளது என்பதனையும் இங்கு பதிவு செய்கிறேன்.

காந்தியின் கொலை பற்றிய ஆய்வு நடந்து  வருகிறது என்பதனையும்,அது வெளிவரும்பொழுது முழுஉண்மையும் தெரியவரும் என்பதனையும், இந்தியாவின் வரலாற்றில் உயர்ந்த பீடத்தில் இருந்த உயர்ந்த மனிதர்கள் சிலர் அப்பொழுது கருப்பு ஆடுகளாக ஆக்கப்படுவார்கள் என்பதனையும் இங்கு பதிவு செய்கிறேன்.






தொடரும் ...




படங்கள் நன்றி கூகுள் மற்றும் இணையம்.
Download As PDF