வியாழன், 12 ஜூன், 2014

கால்பந்து கூலி உழைப்பாளிகளின் ஆன்ம வெளிப்பாடு .

.

கால்பந்து விளையாட்டு மட்டுமன்று,
விளையாட்டு மட்டுமேயன்று,
விளையாட்டு மட்டுமேயாக மட்டும் கிடையாவே கிடையாது ...

கால்பந்தை
' விளையாட்டு ' என்ற பதத்தில் மட்டும் வைத்துப்பார்க்கக்கூடாது .
அது மிகப்பெரிய தவறு ...

கால்பத்து என்பது
கூலி உழைப்பாளிகளின் ஆன்ம வெளிப்பாடு ஆகும்...

எங்களின் கைகளில் நீங்கள் உண்கின்றீர்கள் .
அதற்காக  எங்களின் கைகளை நீங்கள் கட்டிப்போட்டாலும்,
வெற்றியை நாங்கள் எங்களின் கால்களில் மூலம் அடைகின்றோம் ....
இது கால்பந்தின் அடிப்படை .

கால்பந்து கூலிகளின் கனவு .
குடிசைவாசிகளின் ஆறுதல்.

உண்மையான கால்பந்தாட்ட வீரர் பணத்திற்காக விளையாட மாட்டார் .
அப்படி விளையாடுபவன் கால்பந்தாட்ட வீரனில்லை ,
அவன் கால்பந்து விளையாடத்தெரிந்தவன்,
கால்பந்தின் ஆன்மாவை கொன்றவன் ஆவான்.

கால்பந்தானது வெவ்வேறு வடிவங்களில் தற்போது விளையாடப்பட்டுவருகிறது...

Download As PDF

திங்கள், 9 ஜூன், 2014

பின் நாக்கு சித்தரும் நானும் .








சொத்து வந்து சேர்ந்த தால்
சித்து வந்து  சூழ்ந்த தோ

சித்து வந்து  சேர்ந்த தால்
சொத்து வந்து சூழ்ந்த தோ

சொத்த சொத்து சொத்தை சொத்து
சுத்த சுத்தில் இல்லையே

சித்து பார்க்க சித்து பார்க்க
சொத்தை சொத்து இல்லையே

சொத்தை போயி சித்து போயி
சுத்தி மீளும் மானிடா

சொத்துமில்லை சித்துமில்லை

சிர  சுத்தியாகி போய்விடு
கிரி  சித்தமாகி போய்விடு.

 சித்து 1...
......

சித்து என்பது மிகவும் கவனமாக பர்க்கவேண்டிய ஒன்று.
சித்தர்கள் பற்றியும் அவர்களின் தன்மைகள் பற்றியும் ,சித்து பற்றியும் மக்கள் இன்றுவரை தவறான பார்வையையே வைத்துள்ளனர் என்பது எனது கருத்து மட்டுமல்ல ,உண்மையும் கூட.

கடந்த செவ்வாய் சென்னிமலை கோவிலுக்கு சென்றிருந்தேன்.
இரவு 8,9 மணி இருக்கும்.அன்னதானம் நடந்து கொண்டிருந்தது.
சாப்பிட்ட அனைவரும் செல்வந்தர்கள் .
குழந்தைகளும்,முதியோரும் உணவின்றி இங்கு அனேகஆசிரமத்தில் அனேகர் உள்ளனர்.அவர்களுக்கு உணவளிக்கலாமே .
சரி இது அவரவர் விருப்பம்.



மேலே உள்ள சித்து 1...எனது ஆக்கம்.

ஓவியம்  எனது  தூரிகை தீண்டலில் சென்னிமலை .


சித்தர்கள் பற்றியும் அவர்களின் இரகசியம் பற்றியும் இனி பார்ப்போம்....




Download As PDF