செவ்வாய், 22 ஏப்ரல், 2014

வாலி வதம் - சரியா , தவறா ?.







இது நான் எழுதிவரும் ரகுராமன் கதைகேளுங்களில் ஒரு சிறு பகுதியாகும்.
ரகு ராமன் கதை கேளுங்கள் -இது  இராமனையும்,இராம காதையை ஆராய்ந்து,எந்தவித சார்பும்,முன் முடிபும் இல்லாமல்.இராமனைப்பற்றிய எனது பயணத்தில் நான் கண்டடைந்த முடிவை எழுதுகின்றேன். இது இராமனைப்பற்றிய ஒரு புதிய பார்வை,ஒரு புதிய பரிணாமம்.அவ்வளவே.

@@@@@@@@@@@@@@@
   
இனி ....

வாலி வதம் - சரியா , தவறா ?.


வாலிவதத்தில், இராமன் நடந்து கொண்டது சரியா? அல்லது தவறா?

இராமன் வாலியை மறைந்திருந்து ஏன் வதம் செய்தான் ?.

ஒரு படைப்பாளி தானது  நாயகனுக்கு எதிரான ஒரு பகுதியை ஏன்  படைத்தான் ?.

இதற்காக விடை சில மட்டும் ....

@@@@@@@@@@@


அண்ணா, இந்த கானகம் நமக்கு தேவையான அம்புகளை தரும் என நினைக்கின்றேன்.

ஆமாம் நானும் அதையே தான் சிந்தித்தேன். .....

இவ்வாறு  பேசிக்கொண்டிருந்தவர்களை கண்டு  இரண்டு  நபர்கள் மராமரங்ளை கடந்து  தலைதெரிக்க ஓடினார்கள்.
மிக வேகமாக அதிக தொலைவு ஓடியதால் சோர்ந்தவர்களில் முதலாவதாதவன்  நில் அனுமா,நில் என்றான்.
உடனே நின்றான் முதலாவதாதவனை கடந்து ஓடிய இரண்டாவதாதவனான அனுமன்.ஏன் சுக்ரீவா ,ஏன் என்றான்.
அவர்கள் நம்மை துரத்தவேயில்லையே நாம் ஏன் ஓடவேண்டும் அனுமா என்றான் சுக்ரீவன்
.நீ சொன்னாய்  அதான் நான் ஓடினேன் ......

ஓடிய அனுமனும்,சுக்ரீவனும் மீண்டும் தாங்கள் கானகத்தில் கண்ட இரண்டு நபர்களையும் காண தீர்மானிந்து மீண்டும் கானகத்திற்கு வந்தனர்.அங்கு அவர்கள் கண்ட காட்சி ஏழு மராமரங்கள் நேராக பிளக்கப்பட்டும்   இருந்தது.....

அனுமன் சுக்ரீவானைப்பார்த்து,
சுக்ரீவா, இவர்கள் புதியவர்கள்,மிகவும் திறமையானவர்கள்,நல்லவர்களாக தெரிகிறது,ஏதற்கு வந்தார்கள் என்று அறிவோம் வா என்றான்....

_______________

இராமன் கதை கேட்டு சுக்ரீவனும்,அனுமனும் உதவ நாங்கள் தயார் என்கின்றார்கள் .
அதற்குப்பின் சுக்ரீவன் தங்களின் கதையை கூற இராமன் தானும் அறநெறிப்படி தாங்களுக்கு உதவுவதாக வாக்களிக்கின்றான்.

அறநெறிப்படி என்றால் என்ன என்பதனை இராமன் விளக்குகிறான்...

_______________

வாலியும் சுக்ரீவனும்  கடும்போரில் ஈடுபடுகின்றனர்...

இராமன் அம்பு எய்கிறான்.அம்பு பட்டதும் வாலி நிலைதடுமாறுகிறான் ...

வாலி இது தர்மமல்ல,நீயாயமல்ல,வீரனுக்கு அழகல்ல என்று கூறி மீண்டும் போர்புக இராமனின்  அம்புகள் வாலியை வதம் செய்கின்றது .

இராமன் சொன்ன அறநெறி என்ன ?.அடுத்த பதிவில்.


இதையும் படித்துப்பாருங்கள் ....


  அசுவமேத யாகம் செய்யலாம் வாருங்கள்



அடுத்து வருவது

இந்தியா  எது ?. பாரதம் எது ? .

இராமன்  - உண்மையா  இல்லை கதாபாத்திரமா  ? .

இராமன் காட்டிற்கு செல்வதற்கு கூனி மட்டும் தான் காரணமா ?. ...

.
படம் ; நன்றி இணையம்.
மீள்வு ...
Download As PDF

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

இராமர் கோவில் ,சேது சமுத்திரத்திட்டம் நாட்டிற்கு அவசியம் எது ?




 சேது சமுத்திரத்திட்டம் - ஆதி தமிழன் தோண்றிய இடமாக கருதப்படும் லேமூரியா கண்டம் என்ற குமரி கண்டம் கேள்விக் குறியாக போவதற்காக போடப்பட்ட சிறப்புத்திட்டம்.

தமிழனின் தொப்புள் கொடிஉறவுகளை பிரிக்கும் ஒரு உன்னத திட்டம்.

வரலாற்று உண்மைகளை மறைக்கப்பார்க்கும் அற்புத திட்டம்.

என்றென்றும் தமிழனும், தமிழினமும் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்க போடப்பட்ட சிறப்பு சதித்திட்டம் - என்பது கற்றறிந்த அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  இதனை ஒரு சுற்றுச்சூழல் படுகொலையாகவே பார்க்கின்றனர்.

அறிஞர் பெருமக்களின் கருத்துக்களையும் ஆய்வோம்.(இவை மிக நீண்ட விடயம ,ஆதலால் இதைப்பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்.)


நாம் ??????.


@@@@@@@@


திருவள்ளுவரை நாம் யாரும் பார்த்த்தில்லை ,அவர் எப்படி இருப்பார் என்பது யாருக்கும் தெரியாது,அவர் எத்தனை குறளை எழுதினார் என்பதும் யாருக்கும் தெரியாது,1330 குறள்களில் எத்தனை அவர் எழுதினார் ,அதில் எத்தனை இடைசெருகல்கள் என்பதும் யாருக்கும் தெரியாது,இப்படி பல தெரியாத திருவள்ளுவருக்கு சிலை வடித்தது எப்படி பகுத்தறிவுக்கு ஒப்பாகுமோ,அதே போன்ற பகுத்தறிவுக்கு ஒப்பாகும் விடயம் தான் இராமர் கோவில்.

இராமனுக்காவது குறிப்புகள் பல உண்டு ,திருவள்ளுவருக்கு ???.

திருக்குறளில் இல்லாத நெறிகள் இல்லை ,
அது போலவே
இராமன் வாழ்வு சொல்லும் நெறி போல் சிறந்தநெறி உலகில் வேறு இல்லை.

இராமனை போல் வாழ முடியாதவர்கள் தான் இராமனை எதிர்ப்பவர்கள்.

திருக்குறள் காட்டிய அனைத்து நெறிகளிலும்,காட்டாத நல்நெறிகளிலும்  வாழ்ந்தவன் இராமன்.

இராமன் இந்தியாவின் ஒருமைப்பாட்டின் சின்னம்.

இராமனிடம் இருந்துதான் இந்தியாவின் முழு ஆன்மா பிறக்கிறது.

இந்தியாவின் சுதந்திரத்தில் இராமனின் பங்கு அளப்பறியது,சொல்லி மாளாது .
என்பது படித்த பண்பேறிய தமிழறிஞர்களின் கருத்தாக உள்ளது .

தமிழறிஞர்களின் கருத்துக்களையும் ஆய்வோம்(இவையும் மிக நீண்ட விடயம் ,ஆதலால் இதைப்பற்றியும் பின்னர் விரிவாக பார்ப்போம்).



நிலைப்பாடும்,உண்மையும் இங்கு இருக்க 


நமது நிலைப்பாடு  ??????.


  




படங்கள் உதவி நன்றி -இணையம் மற்றும் கூகுள்.
Download As PDF

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

நரேந்திரமோடி தமிழ்மண்ணின் மைந்தர்.


  
நான் ஏன் நரேந்திரமோடியை ஆதரிக்கிறேன் எனில்
அவர் தமிழ்மண்ணின் மைந்தர்  என்பதாலும்,
ஒரு மண்ணின் மைந்தரால் தான் மண்ணின் உணர்வை புரிந்துகொள்வதோடு,
அந்த மக்களுக்கும்,மொழிக்கும் நன்மைகள்  செய்யமுடியும் என்பதாலும்.

மோடி எப்படி தமிழ் மண்ணின் மைந்தராவார் எனில் நாம் நம் நாகரிக வரலாற்றை  பார்க்கவேண்டும்.

உண்மையில், நாம் ஒவ்வொருவரும் வெட்கப்படக்கூடிய விசயம் ஒன்று உண்டெனில்,அது நாம் நமது நாகரிகத்தை நாமே ஒத்துக்கொள்ளாமலும் , அதனைப்பற்றி எந்த வித அக்கறையும் இல்லாமலும்,மேலும்,அதனை நாமே நிராகரித்தும் வருவது தான் .

'அ ' வை கண்டுபிடித்த எனது மூதாதை இவர் தான் என என்னால் அடையாளத்துடன் உலகின் முன் நிறுத்த முடியாவிட்டாலும் .
என்னால் ஆற்றங்கரைகளில் அழிந்துபோன எமது அண்மை தொன்மையை காணமுடிந்தது. அது தான் சிந்து சமவெளி நாகரீகம் .அது நமது நாகரீகம் . அங்கு வாழ்ந்தவர்கள் நமக்கு இன்றைய ஜீன்களை கொடுத்தவர்கள் .
அதனை அறியாமல் ,உணராமல் ,போற்றாமல் வாழ்தல் முறையா ?


மேலும்,இன்று வரை சிந்து சமவெளி நாகரீகம் ,தமிழர்களுக்கு ஒரு வரலாற்றுப் பாடம் என்றளவே இருப்பது தான் அதைவிட மிகவும் வேதனையளிக்கும் விசயமாக உள்ளது. அதனைக்கண்டு வெட்கித்தலைகுனிகின்றேன்.

சரி மோடி எப்படி  தமிழ்மண்ணின் மைந்தர் எனில் சிந்து சமவெளி நாகரீகம் தமிழர் நாகரீகம்,இந்திய நாகரீகம்.
சிந்து சமவெளி நாகரீக படுகையில் பிறந்த மோடி தமிழர் தானே.
இதை விவாதத்திற்காக மறுக்கலாம்.ஆனால்,உண்மை இது தான்.

நரேந்திரமோடி தமிழ்மண்ணின் மைந்தர்.
ஒரு மண்ணின் மைந்தரால் தான் மண்ணின்  இன உணர்வை புரிந்துகொள்வதோடு.அந்த இன மக்களுக்கும்,மொழிக்கும் நன்மைகள்  செய்யமுடியும்.அவரின் தமிழக பரப்புரையினிற்று,இந்த மண்ணின் மீதான அவரின் பாசத்தை உணரலாம்.
மகாத்மா காந்திக்கும் இத்தகைய பாசம் இருந்தது. 

எனவே, தான்  நான்  நரேந்திரமோடியை ஆதரிக்கிறேன் .







படங்கள் உதவி நன்றி  harappa.com
Download As PDF

வியாழன், 17 ஏப்ரல், 2014

365 எம்.பி க்களுடன் நரோந்திர மோடி பிரதமர் ஆகிறார்.வருக,வருக,வாழ்த்துக்கள் மோடிஜி.



நொரண்டு :  வணக்கம் நண்டு.

நண்டு :  வாங்க நொரண்டு.

நொரண்டு : இன்றைய செய்தி.

நண்டு : நமோ மோடிஜி ஈரோடு வருகிறார்.

நொரண்டு :   வருக,வருக  மோடிஜி அவர்களே.வருக,வருக .

நண்டு :  எனது சார்பிலும் வரவேற்கிறேன்.

நொரண்டு :  சென்ற தேர்தலில் உனது  கணிப்புப்படிதான் தேர்தல் முடிவுகள் இருந்தது.இந்த தடவை உனது கணிப்பை இப்பவரை சொல்லவேயில்லையே.

 நண்டு : ம்...சற்று குழப்பம் தான் அதனால தான் இன்னும் தீர்மானிக்க முடியல.

நொரண்டு :   உனக்கே குழப்பமா !!!! என்னப்பா !!!

நண்டு :  ஆமாப்பா ....ஆமாம்.

நொரண்டு :   என்ன குழப்பம்  சொல் .

நண்டு : இந்திய மக்கள் மோடியை பிரதமரா ஏத்துக்கிட்டாங்க.
ஆனால், தமிழகத்தில் மக்கள் மோடியை பிரதமரா ஏத்துக்கிட்டாளும்,
அவங்க கட்சிக்காரங்களின் செயல்பாடுகள் மக்களை குழப்பி உள்ளது.

நொரண்டு :   நீலகிரி தொகுதி விவகாரத்தை சொல்ல வரையா.

நண்டு :  அதுவும் தான்,மேலும் ஆரம்பத்திலிருந்தே தமிழக பாஜகவின் நிலைப்பாடு சரியில்லாமல் தான் இருந்துவந்துள்ளது.

நொரண்டு :   வலுவான கூட்டணி அமைத்துள்ளனரே.

நண்டு : உண்மை தான் ,ஆனால்,அதற்கு முழுக்க முழுக்க தமிழக பாஜக காரணமல்ல என்பதை முதலில் தெரிந்துகொள்.

நொரண்டு :    ஓ....

நண்டு :  அரசியல் .

நொரண்டு :  அரசியலை விடு ...உனது கணிப்பு என்ன ?.
தேசிய ஜனநாயக கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றிபெறும்.
 
நண்டு :  

365 எம்.பி க்களுடன் நரோந்திர மோடி பிரதமர் ஆகிறார் 


நொரண்டு : குழப்பமா இருக்குனு சொன்ன,ஆனா, இவ்வளவு சீட் வாங்குவாங்னு சொல்ர.

நண்டு :  ஆம்,கட்டாயம் 365 எம்பிகளுடன் மோடி பிரதமராக வேண்டும்.இல்லையெனில்..

நொரண்டு :   இல்லையெனில்..

நண்டு : இல்லையெனில்.. அது அவங்க  தவறுனு சொல்லுவேன்.


நொரண்டு :   என்ன தவறு ?

நண்டு :  என்ன தவறுனு தேர்தலுக்கு பின் சொல்ரேன்.



@@@@@@@@@@@@@@@@@@@@




நண்டு @ நொரண்டு

எங்கள் ஊருக்கு
முதல் முதலாக வருகைதரும்
மோடிஜி அவர்களை 
வருக,வருக  
என வரவேற்பதில் மிக்கமகிழ்ச்சி கொள்கிறேன்.

365 எம்.பி க்களுடன் தாங்கள் பிரதமராக
எனது மனங்கனிந்த நல்வாழ்த்துக்களையும்
இந்த நேரத்தில் மிக்கமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


வாழ்க பாரதம்.



@@@@@@@@@@@@@@@@@@@@@



நன்றி ; படங்கள் கூகுள் மற்றும் இணையம்
Download As PDF