புதன், 27 டிசம்பர், 2017

தமிழன் என்ற இனம் _ _ _ இல்லையா ?

யார் தமிழன் ?,
தமிழன் யார் ?,
தமிழ் இனம் எது ?,
எது தமிழ் இனம் ?,
தமிழன் என்ற இனம் எது ?,
தமிழ் இனம் என்று ஒன்று உண்டா ?,
அப்படியெனில் அது எது ?,

போன்ற வற்றிற்கான விடை தேடி  புறப்பட் டோர்  அனேகர் வரலாற்றில் உண்டு. ஆனால், அதற்கான சிறு துரும்பைக் கூட காண முடியாமல், கண்டவர் 
Download As PDF

திங்கள், 25 டிசம்பர், 2017

தமிழ் சமுதாயம் ஏமாற்றப்படுகிறதா ?

வந்தாரை வாழவைப்பவன் தமிழன்...

தமிழன்
 தன்னை  நம்புகின்றவரை,
 தன்னால் நம்பப்படுபவனை
ஏற்றம்காண வைப்பவன்,
வந்த அவரை வாழ வைப்பவன் .
வந்தாரை வாழவைப்பவன்தமிழன் என்பதன் உட்கிடை மறை இது.

இதில் ஏளனமும் உண்டு, ஏமாற்றமும் உண்டு, அதன் குறியீடும் உண்டு.

இப்படியாக
வந்த தொரைகளை
 வாழவைத்த  நம்பிக்கையின்
பலனாய் கிடைத்த  படிப்பினையை
 தனது சந்ததிகளுக்கு கடத்துவான்.

இதைத் தான்
 இதுவரை
தனது மூதாதைகளுக்கு ஏற்பட்ட

மிக ப்பெரிய பெரிய சூழ்ச்சிகள்
அதனால் ஏற்பட
மிக ப்பெரிய பெரிய
வீழ்ச்சிகளால்

செய்வதை அறிந்தே

 மீட்பானை எதிர்நோக்கி

செய்து வருகிறான்.


இதனை நம்பித்தான் 
இவன் நம்பவைக்கப்படுகிறான்இன்று வரை .

வந்த அவர்களால் வாழப்பட்டு
இவன் தாழப்படுகிறான்.

தமிழன்
கடந்து போகட்டும்
என
கடந்து கொண்டிருக்கின்றான்.

இனி
தமிழ் சமுதாயத்தை
 ஏமாற்றி விட்டோம் என்ற மமதையில்
மிதந்து உழலும் வக்கிரர்களை
வரலாற்றில் 
சுவடுதெரியாமல் போக வைப்பதோடு, 
அவரும், அவர் சார்தோரும்
 புழுவென துடித்து, 
புளுங்கி புளுங்கி 
மறைய
ஒன்றுபடுவோம்
வாரீர் 


....

இனி
ஏமாற விட மாட்டோம்
என சூளுரை ஏற்போம்.




Download As PDF

புதன், 8 மார்ச், 2017

செல்போனில் கடவுள் தொன்றிய உண்மைச்சம்பவம்.



இது முற்றிலும் உண்மையாக நடந்த நிகழ்வு.

எனக்கு இது ஒரு வியப்பான ஒன்றாகாவே உள்ளது.

மாயை என்பதற்கான முழு அர்த்தம் உணர இது காரணமாயிற்று.

பலர் பல சமயங்களில் கூறியவைகளை ,உணர்ந்தவைகளானவைகளை என்னுள் மீள்பார்வை பார்க்கவைத்த ஒரு காட்சி இது.

இதைத்தான் தோடுகிறார்களே,
இப்படிப்பட்ட செல்பிக்காகத்தான் முயன்றுவருகிறனரா  இந்த செல்பி சமூகம்  என மன ஓட்டம் கேள்வி கேட்கிறது.

ஆனால்,நான் செல்பி பிரியனும் இல்லை.
இதற்காக இந்த செல்பி எடுக்கவும் இல்லை.

இந்த செல்பிக்கு பின் உள்ள நிகழ்வை முதலில் பார்ப்போம்.

இந்த செல்பி எடுக்க காரணம் வறட்சி,பசுமை மறைந்துவரும் ஏக்கம் மற்றும் ஐந்தறிவு உயிரினங்கள் நீரின்றி படும் அவதி இவற்றால் மனப்போராட்டத்திற்கு ஆட்பட்ட நிலையில் மனிதர்கள் தான் இயற்கையை பாழ்படுத்துகிறான் ,அவனுக்கு இயற்கைஇன்னையே நீ எந்தகைய தண்டனையையும் கொடு.உன்னேடு இயைந்துவாழும் இவைகளுக்கு ஏன் இந்த தண்டனை என்ற கேள்வியுடன் சிந்தித்துக்கொண்டே எனது மனைவியின் வருகைக்காக காத்திருந்த பொழுது இயற்கையுடன் இயைந்த ஒரு செல்பி எடுக்கப்பட்டது கடந்த 22.2.17 மாலை 4.33க்கு.

அந்த செல்பி இதோ



இனி இதில் கடவுள்  பிரதஷ்டனை  விசயத்திற்கு வருவோம்

ஏதெச்சையாக நேற்று இரவு எனது Instagram பார்த்துக்கொண்டிருந்தபொழுது
S Photo Editor-Collage Maker என்ற செயலி ஒன்று பார்த்தேன் .அதனை எனது செல்பேசியில் நிறுவி அதன் செயல்பாடுகளை சோதித்துப்பார்த்துக்கொண்டு வந்தேன்.அப்பொழுது அதன் Edit பகுதிக்கு சென்று  இதன் Mirrorபகுதிக்கு உட்செல்ல எனது செல்போனில் கடவுள் உரு பிரத்தஷ்டனை ஆனது.


படத்தின் பின்புலத்தினை நன்றாக உற்றுநோக்கவும். (அதில் எத்தனை கடவுளின்உ ருக்கள் தெரிகிறது என்பது உங்களின் மனதினை பொறுத்தது )
 


இதனை கண்ணுற்ற நான் இது இயற்கை அன்னை என்பதனை அறிந்துகொண்டேன்.

அவள் என்னைப்பார்த்து எனது மனப்போரட்டம் அறிந்து ஏதோ ஒன்றை எனக்கு உணர்த்துகிறார் என்பதனை அறிந்துகொண்டேன்.

அது அவள் என்னிடம் நீ உன்னின் எதிரெதிர் இருசமனபார்வையில் உன்னுள் கட்புலனாகும் சமயம் இவ்வுலக  உண்மையை அறிவாய் என  உரக்க உரைப்பதாக உணர்கிறேன்.

எனது பகுத்தறிவு பாதையின்  அடுத்த பரிணாமம் உணர்த்திய இயற்கை அன்னைக்கு எனது வாழ்த்துக்கள். அதுவும் மகளிர் தினமான இன்று உமக்கு வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

 
இயற்கை அன்னையே நீ வாழ்க .

உமது செழிப்பில் தான் இவ்வுலகு நலம்பெறும்.



 இதுவோ எனது செல்போனில் இயற்கை அன்னை தொன்றிய நிகழ்வின் உண்மை.              





Download As PDF

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

அரசியலற்ற அரசியல்வாதிகளே இனி நம் இளைஞர்கள் புத்துலகு படைக்கட்டும். வழிவிடுங்கள்.


t-1.jpg (620×350)














தமிழக சட்டசபையில் நடந்த கூத்துக்கள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும்,தமிழக அரசியல்வாதிகள் செய்யும் அரசியலற்ற அரசியல் ....

இவர்கள் இன்னும் மக்களை புரிந்துகொள்ளாமல்,
அந்தக்காலத்து அரசியல் ஆட்டங்களையே ஆடிவருவதினின்று
அனைவருக்கும் அரசியல் சன்னியாச வயதாகவிட்டது என்பதனை ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்.

மக்களுக்கு மறதிதகவல் தொழில்நுட்ப காலத்தில்
கட்டவிழித்துவிடப்படும் எந்தவித அப்பட்டமான பொய்யும் கன நேரத்தில் வெட்டவெளிச்சமாகிவிடுவதை அறித்திருந்தும். அல்லக்கைகளின்ஆர்ப்பரிப்பில் மக்களை ஏமாற்ற நினைத்து ஏமாறப்போகிறார்கள் இவர்கள். அதிகம்,மறதி அவனின் சொத்து எனநினைத்துக்கொண்டு தங்களின் இழிசெயல்களை தொடர்கிறார்கள்.
இதனால் இவர்களை மக்கள் விரைவில் மறக்கப்பதோடு மறுக்கவும் செய்வார்கள் என்பது உறுதி.

மெத்தப்படித்த மேதாவிகளே இனியாவது சுயநலம் துறந்து தூய்மையடைவீர்.

எதிர்கால தமிழகத்தையல்ல இன்றைய தமிழகத்தையே நம்இ ளைஞர்களிடம் தருவோம்.ஜல்லிக்கட்டு காளை அவர்கள்.

நம் இளைஞர்கள் மிகச்சிறந்த புத்துலகு படைக்கட்டும் .

அரசியலற்ற அரசியல்வாதிகளே இனி  நம் இளைஞர்கள் புத்துலகு படைக்கட்டும். வழிவிடுங்கள்.


  படம் இணையம் நன்றி கூகுள்.
Download As PDF

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

நடிகர்களாகிப்போனவர்களை என்ன செய்ய ?.

மனிதன் ,தன் வாழ்வை  ,இங்கும்அங்கும் ஓட்டி ,அலைந்து திரிந்து , ஒன்றையும் புரிந்துகொள்ளமல்,சக மனிதர்கள் மத்தியில் தவிக்கும்பொழுது , அவனால்  கடினத்துடன் கூறும் வார்த்தை தான்  ''நாடகமே உலகம் '' .

 ''நாடகமே உலகம்,நாமெல்லாம் நடிகர்கள் ''   என்ற நாடக வார்த்தை  நாடகவாதியால்   கூறுவதற்கு முன் இவ்வுலகம் பற்றிய கணிப்பு மதவாதக்கூற்றுகளின் படி இருந்தது .

 மனிதனை ,தனது சுயத்தினின்னு ,புறம் தள்ளி ,நாடக மனேபாவத்திற்கு கொண்டுசென்று,மனிதர்களை நாமெல்லாம் நடிகர்கள் என நடிகர்களாக்கி , அதன் முலம் தன்னை விட நன்றாக நடிப்பவனை உயர்ந்தவனாக நோக்க வைத்து ,மக்களை நடிகர்களின் மாயையில் ஆழ்த்தி ,நடிகனை  இலட்சியவாதியாகவும் ,தானக்கு தலைவனாகவும் எண்ண வைத்து  , அவனை தொடர வைத்து ,சமுதாயத்தை சீரழித்து ,உலகையே கேள்விக்குறியாகவும்,கேலிக்குரியாதகவும் ,கேளிக்கைக்கோ உரியதாகவும் ஆக்கி விட்டதால்  உலகை பீடித்த உன்னதவரிகள்   ''நாடகமே உலகம் , நாமெல்லாம் நடிகர்கள் '' என்கின்றேன்.

''நாடகமே உலகம் ,நாமெல்லாம் நடிகர்கள் ''  என்ற பதத்தை  பயன்படுத்தியவருக்கு உண்மையில் நாடகமே உலகமாக இருந்திருக்கிறது தான் .ஆனால் ,அதனை நிஜ உலகத்தில் புகுத்தி  உண்மையை கற்பனையாக்கி விட்டது தான் கவலைதருகிறது .மனிதனின்  இயல்பை நடிப்பாக ஆக்கிவிட்ட ,மாற்றிவிட்ட  மிகப்பெரிய கெடுதி  இது அல்லவா ?

ஆடல்பாடலுடன் ஆரம்பித்தது .ஆடல்பாடலுடன்  கலாச்சார சீரழிவும் அதிகமாகி தற்பொழுது நடிப்பாகவே அனைத்தும் .

இன்று,
நிஜ வாழ்வை தொலைத்து ,
எது வாழ்வு என புரியாமல்
'' நாடகமே உலகம் ''என
நடிகர்களாகிப்போனவர்களை என்ன செய்ய ?.






Download As PDF

புதன், 8 பிப்ரவரி, 2017

ஆபத்தான மனிதன் .







                               அச்சத்தில் வாழும் மனிதனைவிட
                               அவசரத்தில் வாழும் மனிதன் ஆபத்தானவன்.




Illustration: Jayachadran/Mint



                         
                             அவசரத்தில் வாழும் மனிதனைவிட
                             ஆசையில் வாழும் மனிதன் ஆபத்தானவன்.









                        ஆசையில் வாழும் மனிதனைவிட
                        அடுத்தவரை எதிர்பார்த்து வாழ்பவன் ஆபத்தானவன்.





                           

                            அடுத்தவரை எதிர்பார்த்து வாழ்பவனைவிட
                            அடுத்தவரை எதிர்பார்க்க வைத்து வாழ்பவன் ஆபத்தானவன்.




















படங்கள் ;நன்றி கூகுள் மற்றும் இணையம்.
Download As PDF

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

நல்ல நேரம் தமிழர்வாழ்வில் ஏற்படுத்தும் நெருக்கடியும் சீரழிவும்



"நல்லநேரம், இராகுகாலம், எமகண்டம் என்று பார்க்கிறார்களே " இவர்களுக்குக் கோர்ட்டில் ஒரு கேஸ் விசாரணை இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கு நல்ல கொழுத்த இராகுகாலம் என்று சொல்லப்படும் நேரத்தில் அவன் இராமசாமி! இராமசாமி! என்று கூப்பிட்டால், இவன் இப்போது இராகுகாலம் நான் வரமாட்டேன் என்று கூறுவானா? துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு குடுகுடு என்று ஓடிப்போய் வந்தேன் என்று தானே கூறுவான்? அப்பொழுது எங்கே போயிற்று இராகுகாலம்?"
--தந்தை பெரியார்.

நான் தினசரி பேருந்தில் பயணம் செய்யும் விதமான பணியில் இருப்பதால் ஓர் ஆண்டின் 365 நாட்களும் பல்வேறு விதமான சூழலில் பயணம் செய்திருக்கிறேன் . மிகவும் நெருக்கியடித்துக் கொண்டு ஒரு காலின் மீது மற்றொரு காலை வைத்துக் கொண்டு நிற்பதற்குக்கூட இடமில்லாதவாறும். அதே பேருந்து வழித்தடத்தில் ஓட்டுநர் நடத்துநர் மற்றும் நான் என மூவர் மட்டுமேயும் அமர்ந்து பேருந்து காத்தாடவும் பயணம் செய்திருக்கிறேன்.
ஏன் இந்தத் தலைகீழான நிலை? ஒரு நாள் மிகமோசமான இடநெருக்கடி; மற்றொரு நாள் ஆளேயில்லாத வீண் பயணம். பொதுவாக நகர்ப்புறங்களில் பணிக்குச் செல்பவர்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் என காலை 8 மணியிலிருந்து 10 மணிவரையும், அதேபோல் மாலை பணிமுடிந்து வீடு திரும்பும் 5மணியிலிருந்து 7மணி வரையும் பேருந்தில் நெரிசல் மிகுந்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அதே போல கிராமப்புற வழித்தடத்தில் விவசாயக் காலத்தில் களைஎடுக்க, அறுப்புக்கு என்று உழைக்கும் பெண்கள், கூட்டம் கூட்டமாக ஏறும் போது பேருந்தில் நெரிசல் மிகுவதையும் நாம்புரிந்து கொள்ள முடியும்.ஆனால் ஓர் ஆண்டின் குறிப்பிட்ட சில நாட்களான, தை, மாசி, பங்குனி, ஆனி, ஆவணி போன்ற மாதங்களின் முகூர்த்த நாட்களில் மட்டும் நாம் மேலே கூறிய‡ நிற்பதற்கு இடமில்லாத நெரிசலும் பிற நாட்களில் அதுவும் ஆடி, புரட்டாசி, மார்கழி போன்ற மாதங்களில் முற்றிலும் கூட்டமில்லாத வெறிச்சோடிய நிலையையும் பேருந்தில் நாம் காணும்போது நமது தமிழ் மக்களிடம் வேரூன்றியுள்ள ஒரு நம்பிக்கை நம் நாட்டின் ஓரு துறை (போக்குவரத்துத்துறை) யையே எவ்வாறு பாதிக்கிறது என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

அடுத்து பேருந்துப்பயணம் செய்பவர் பற்றிய ஒரு புள்ளிவிபரத்தை எடுத்துப் பார்த்தால் ஆண்களைவிடப் பெண்கள் குறைவாகவே பயணம் செய்வது புலனாகும். தென்மாவட்டங்களில் சராசரியாக ஒரு பேருந்தில் 50 ஆண்களுக்கு 10 பெண்கள் என்ற விகிதத்திலேயே பயணம் செய்கின்றனர். அதுவும் பெண்களின் பேருந்துப் பயணம் பெரும்பாலும் பகல் பொழுதுகளிலேயே நிகழ்கிறது. மாலை 6 மணிக்குமேல் பயணம் செய்வது மிகக்குறைவு. இரவு 9மணிக்கு மேல் முற்றிலும் இல்லை என்றே கூறலாம்.
இதற்குமாறாக ஆண்களைவிடப் பெண்கள் அல்லது ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் பயணம் செய்யும் நாட்கள் இந்த முகூர்த்த நாட்களேயாகும். அதுவும் நிறைய நகைகளையும், பட்டுப்புடவையையும் அணிந்து கொண்டு பங்குனி, சித்திரை மாத வெயிலில் பெண்கள் பேருந்தில்படும் தொல்லை மிக அருவருப்பானதாகும்.

இவ்வாறான நேரத்திலேயே திருடு, பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள், சேட்டைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் முகூர்த்த நாட்கள், திருவிழாக்காலம் போன்ற இந்துமதம் சார்ந்த நாட்களில்தான் பெண்கள் அதிகமாகப் பயணம் செய்கின்றனர். ஆனால் பணி, உழைப்பு, பொருளீட்டல் போன்ற காரணங்களுக்காக ஆண்களைப்போல் வீட்டைவிட்டு வெளியேவந்து பயணம் செய்வது மிகக்குறைவாகவே உள்ளது.
இன்றும் பெண்கள் திருமணம், திருவிழா, கோவில், குளம் என இந்துமதப்பண்பாடு சார்ந்து மட்டுமே வீட்டை விட்டு வெளிவருவதும் பயணம் செய்வதும் அதிகமாக இருக்கிறது என்ற நிலை. தமிழர் வாழ்வுமுறை காலத்தால் எந்த அளவு மாற்றம் அடைந்துள்ளது என்பது சிந்திக்கத்தக்கது.
பயணம் என்பதும் ஒருவகை நுகர்வுதான்; எனவே மற்ற எல்லாவித நுகர்வுகளிலும் பெண்கள் தமக்குரிய பங்கை, சரிபாதியை ( 50 % ) நுகரமுடியாமல் இருப்பதைப்போலவே பயணத்திலும் மிகக்குறைவாகவே ‡ அதுவும் மதம்சார்ந்தும், ஆண்சார்ந்தும், கேளிக்கை சார்ந்தும் பயணிக்கிறார்களேயன்றி தன்மதிப்புசார்ந்த பயணம் மிகக்குறைவே. இதில் கிராமம், நகரம், மாநகரம் என்ற வெளிக்கேற்ற மாறுபாடுகள் உண்டு.
இக்கட்டுரை இத்தகைய ஆண் பெண் ஏற்றத்தாழ்வு பற்றியதல்ல. மாறாக கால , நேரம் ( நல்ல நேரம்‡ கெட்ட நேரம்) தமிழர் வாழ்வின் ஒவ்வொரு கூறுகளிலும் புரியும் வினை பற்றியதாகும். ஆம் இந்துக்கள் என்போரின் ஒவ்வொரு செயலுமே காலம், நேரம், நாள், நட்சத்திரம் பார்த்தே மேற்கொள்ளப்படுகிறது. அதாவது பார்ப்பனியம்/ இந்துமதம் வரையறுத்துத்தந்த காலவெளிகளிலேயே இந்துக்கள் வாழ்வு இயங்குகிறது எனலாம். அதன் ஒரு உதாரணம்தான் நான் மேலேகூறிய பேருந்துப்பயணம்.
பேருந்துப்பயணம் மட்டுமல்ல, இந்துக்கள் தங்கள் மயிரைச் சிரைத்துக் கொள்வதைக்கூட கிழமை பார்த்தே மேற்கொள்கின்றனர். வெள்ளியும் செவ்வாயும் முடிவெட்டிக் கொள்வதில்லை. அதே போல் இந்துக்கள் வெள்ளியும் செவ்வாயும் அசைவம் உண்பதில்லை. நம்மைப் ¼ ப V ன் ற வ ர்க ள் முடிவெட்டிக் கொள்ளவும்,இறைச்சி வாங்கவும் இந்த வெள்ளி செவ்வாயைப் பயன்படுத்தினால் சிரமம் இருக்காது. இன்று இந்துக்கள் விரதம் இருக்கும் நாட்கள் புதிதுபுதிதாக முளைத்து வருகிறது. சிலர் சனிக்கிழமையைத் தேர்வுசெய்து அன்று விரதம் என்கிறார்கள், சிலர் திங்கள் கிழமையை விரதநாளாக முடிவு செய்து அன்று ஒருநாள் அசைவம் உண்பதில்லை எனக் கராறாக மறுத்து விடுகின்றனர்.

இந்த முடிவுகளுக்குப் பின்னே யாரோ ஒரு சோதிடரின் கூற்றும், அசைவம் என்பது தீட்டு; சைவம் என்பது உயர்வு என்ற கருத்தும் மறைந்திருக்கிறது. இவ்வாறான நாள் கிழமை , நல்ல நேரம் ‡ கெட்ட நேரம் என்ற மனநோய் முற்றி சிலர் தங்கள் வீட்டுப் பெண்களின் குழந்தைப் பிறப்பை நல்லநேரத்தில் அமைய வேண்டும் என்பதற்காகக் குறித்த நேரத்தில் அறுவை செய்து குழந்தையை வெளியே எடுக்கும்படி செய்யும் அளவிற்குத் தீவிரமாகியுள்ளது.
இந்துக்கள் பிறப்பிற்கு நேரம் பார்ப்பதைப் போலவே இறப்பிற்கும் நேரம் பார்ப்பதும், பிணத்தையும் நேரம் பார்த்து எடுப்பதும் வழக்கமாகும். மேலும் ஒரு இந்து வெள்ளிக்கிழமை இறந்து அடக்கம் செய்யப்படுவாரேயானால் அவருக்காக இவர்கள் மேற்கொள்ளும் இரண்டாம்நாள் காரியத்தை (பால் ஊற்றுவது) சனிக்கிழமை செய்வதில்லை; ஒரு நாள் விட்டு ஞாயிற்றுக்கிழமையே செய்வர். அதேபோல் ஒரு இந்துவை சனிக்கிழமை அடக்கம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால் சனிப்பிணம் தனிப்போகாது என்ற அச்சத்தின் காரணமாக ஒரு கோழிக்குஞ்சை பிணத்தின் கால்ப்பகுதியில் கட்டி மயாணத்திற்கு எடுத்துச் செல்வதும் வழக்கமாக இருக்கிறது.
இன்னும் ஒரு நகைப்பிற்குரிய நம்பிக்கையும் இந்துக்கள் மத்தியில் உண்டு. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ( குளிகை ) இறந்துவிடும் இந்துவின் சடலத்தை வீட்டுக்கு வெளியே எடுத்துச்செல்ல வீட்டு வாயிலைப்பயன்படுத்தக்கூடாது என்பதும் வீட்டுச்சுவரை உடைத்து புதிய வழியை உருவாக்கி, அதன் வழியே பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விதியும் இருக்கிறது.
சாதாரண மனிதர்களின் நிலை இது என்றால் நாட்டின் உயர்கல்வி கற்ற அறிஞர்கள் , விஞ்ஞானிகளின் நிலையோ இதைவிடக் கேவலமாக இருக்கிறது. இவர்கள் புதிதாக வடிவமைத்து விண்ணில் ஏவும் செயற்கைக்கோளை நேரம் (இராகுகாலம், எமகண்டம்) பார்த்து ஏவுவது என்பது, ஒரு இந்து எவ்வளவுதான் உயர்ந்த கல்விகற்று இருந்தாலும்கூட அவனால் இந்து மதப்பண்பாட்டையும், நம்பிக்கைகளையும் மீற இயலாது என்பதையே காட்டுகிறது. தனி மனிதர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த அரசு, அதிகார வர்க்கம் முழுதுமே இவ்வாறுதான் இருக்கிறது. ஒரு மதச்சார்பற்ற அரசின் திட்டங்கள் துவக்க விழாக்கள், அடிக்கல் நாட்டல்கள் என அனைத்துமே இந்துப்பார்ப்பனிய வழிகாட்டலின்படி இங்கு நேரங்காலம் பார்த்தே மேற்கொள்ளப்படுவது மதச்சார்பின்மை என்பதைக் கேலிக்குரிய ஒன்றாக மாற்றிவிடுகிறது. தமிழர் வாழ்வு விவசாய உற்பத்தியை முழுமையாகச் சார்ந்து இயங்கிய காலத்தில் ஆடிவிதைப்பு துவங்கி தைஅறுவடை முடியும்வரை வேறு எந்த நிகழ்வுகளுக்கும் அதாவது கல்யாணம், காதுகுத்து போன்ற விழாக்களுக்கு இடம் கொடுப்பதில்லை. தைக்குப்பிறகே அதாவது விவசாயப்பணிகள் முடிந்து நெல் வீடுவந்து சேர்ந்த பிறகே தம்வாழ்வின் பிறதேவைகளை‡மறு உற்பத்தி , பண்பாட்டுத் தேவைகளை  நிறைவு செய்ய முயல்வர். இதில் நியாயமும் உண்டு.
ஆனால் இயற்கைச் சூழல் முற்றிலும் குழம்பிப் போய்விட்ட இன்றைய நிலையில் அதைச்சார்ந்து விவசாய உற்பத்தியும் மாறியுள்ள நிலையில் மேலும் குறுகிய காலப்பயிர் போன்றவைகள் நடப்பிற்கு வந்துவிட்ட நிலையிலும் ‡ மேலும் நகர்ப்புறத்தில் விவசாய உற்பத்தியைச் சாராத நிலையில் வாழும் மக்களும் கடந்த காலத்தைப் போலவே ஆடி, மார்கழி , புரட்டாசி போன்ற மாதங்களைப் பீடைமாதம் என்று புறந்தள்ளுவதும் வைகாசி, ஆனி, ஆவணி, போன்ற மாதங்களின் குறிப்பிட்ட ஒரு சில நாள்களை மட்டுமே அதாவது 365 நாள்களில் வெறும் 50 நாள்களை மட்டுமே நல்ல நாள்களாகக் கருதி அந்நாட்களில் அடித்துப் பிடித்து தம் இல்ல விழாக்களை நடத்துவதும் அறிவுக்கு ஒவ்வாத நடைமுறையாக இருக்கிறது என்பதோடு பல்வேறு நெருக்கடிகளையும் கொண்டு வருகிறது.
குறிப்பாக அய்ப்பசி, கார்த்திகை போன்ற அடைமழைக் காலத்தில் அதிகாலை 6 மணிக்கு நல்ல நேரம் என்று கருதி திருமணத்தை நடத்துவதை நாம் காண்கிறோம். காலைக்கடனை முடிக்க கழிவறையைத் தேடும் நேரத்தில் மழைக்கும் புயலுக்கும் நடுவே திருமணத்தை நடத்தி முடித்தே தீரவேண்டிய கட்டாயம் என்ன வந்தது?

இந்துக்கள் பெரும்பான்மையாக திருமணத்தை நடத்தும் ஆவணி மாத முகூர்த்த (வளர்பிறை) நாளில்தான் தமிழகம் முழுதும் திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில் திருமண மண்டபங்கள் கிடைப்பதில்லை; காய்கறித் தட்டுப்பாடு, வாழைஇலை, பழங்கள், பூமாலை என அனைத்திற்கும் தட்டுப்பாடு; அதனால் விலையேற்றம்; பேருந்துகளில் கூட்ட நெரிசல் என்று ஒரு செயற்கையான நெருக்கடியை இந்த நல்ல நாள் ஏற்படுத்துகிறது.
இந்துத் திருமணமுறை தாலி , பார்ப்பனச்சடங்கு, வரதட்சணை போன்ற வற்றை நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பது வேறு பிரச்சனை. ஆனால் தமிழ்ச்சமூகத்தில் பெரும்பான்மையோர் இவ்வாறு திருமணத்தை மேற்கொள்வதால் ஏற்படும் நெருக்கடியை எல்லோருமே சந்திக்க வேண்டியுள்ளது.

இத்திருமண முறையை இன்று பார்ப்பனரல்லாத அனைத்துச் சாதியினரும் ஆதிக்கச் சாதியினர் முதல் அருந்ததியர் வரை கடைப்பிடிக்கின்றனர். பார்ப்பனர்கள் இந்துக்கடவுள்களுக்குத் திருமணம் நடைபெறும் (ஆடித் திருக்கல்யாணம் ) ஆடி மாதத்தில் தங்களது இல்லத் திருமணங்களை நடத்திக் கொள்வர். ஆடியும் மார்கழியும் அவர்களுக்கு மட்டும் நல்ல மாதங்கள். இத்தகையநிலையில் இந்த நல்ல (முகூர்த்த) நாள் என்ற ஏற்பாட்டால் தொழில் உற்பத்தித் துறையில், வணிகத்துறையில் ஏற்படுகின்ற நெருக்கடிகள் பற்றியும் நாம்சிந்திக்க வேண்டியுள்ளது.

இங்கு தமிழ்ச்சமூகத்தில் (சிறுதொழில்) பொருள் உற்பத்தி என்பது மக்களுடைய அன்றாடப் பயன்பாட்டிற்கு என்று மட்டுமல்லாமல் பிரதானமாக பண்பாடு சார்ந்ததாகவும் இருக்கிறது. அதாவது தமிழர்களின் அன்றாடத்தேவை சார்ந்த கொள்முதலை மட்டும் நம்பி இங்கு பொருள் உற்பத்தி அமையுமேயானால் அது ஒரே சீராக இருக்கும்.
மாறாக குறிப்பிட்ட மதப்பண்பாடு சார்ந்த நாட்களை மய்யப்படுத்திய நுகர்வு மேலோங்கி இருப்பதால், ஆண்டின் சில நாட்களை மய்யப்படுத்திய நுகர்வாக இருப்பதால் தொழில், வணிகம் ஒரு நெருக்கடியைச் சந்திக்க வேண்டியுள்ளது.
உதாரணத்திற்கு இந்துக்கள் தம் இல்லத்திருமணத்தை முன்னிட்டு கொள்முதல் செய்யும் மளிகைப் பொருட்கள், ஆடை ஆபரணங்கள் மற்றும் சீர்சாமான்கள் எனப்படும் கட்டில், மெத்தை, கிரைண்டர், பித்தளை, சில்வர் பாத்திரங்கள் போன்றவற்றில் கிரைண்டர் அல்லது ஸ்டீல்பீரோ என்பனவற்றின் உற்பத்தியைப்பற்றிச் சற்றுச் சிந்தித்துப் பார்ப்போம்.
முன்நாளில் ஆட்டுக்கல் , அம்மி வாங்கியவர்கள் காலமாறுதலுக்கு ஏற்ப இன்று கிரைண்டர் , மிக்ஸி வாங்குகிறார்கள். இந்தக்கிரைண்டர் எனப்படும் மாவு அரைக்கும் இயந்திரம் நகர்ப்புறங்களில் எல்லோருக்கும் அவசியமான ஒன்றாக மாறிப்போயிருக்கிறது. எனவே வீட்டுக்கு ஒரு கிரைண்டர் அவசியம் எனக்கொள்ளலாம். எனவே கிரைண்டர் இல்லாத நடுத்தர வர்க்கத்தினர், அடித்தட்டு மக்கள் கையில் கூடுதலாக பணம் புழங்கும் நேரத்தில் கிரைண்டர் வாங்கலாம். இன்றைக்குப் பெரும்பாலும் அரசு போனஸ் வழங்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த கிரைண்டர் அல்லது பிற பொருட்களின் விற்பனை கூடுதலாக இருக்கும்.
ஆனால் இன்றைக்கு இந்தப் பொருட்களின் விற்பனை என்பது கல்யாண சீசன் என்று சொல்லக்கூடிய ஆனி, ஆவணி, வைகாசி என்ற மாதங்களின் முகூர்த்த நாட்களை மய்யப்படுத்தியதாகவே இருக்கிறது. ஏனென்றால் இவை பயன்பாட்டிற்காக வாங்கப்படுவதில்லை. மாறாக, சீர் கொடுப்பதற்காகவே வாங்கப்படுகின்றன. இவ்வாறு சீருக்காக வாங்கப்படும் பொருட்களில் பெரும்பாலானவை மூட்டையாகக் கட்டப்பட்டு ஒவ்வொரு நடுத்தரவர்க்கத்து இந்துவின் வீட்டின் மூலையிலும் தூங்கிக் கொண்டிருப்பது தனிக்கதை.
ஆக இப்பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு தொழில் பட்டறைகள் முகூர்த்த காலத்தில் அதிகமாக இவற்றை உற்பத்தி செய்து கொடுக்க வேண்டும். இந்நிலைக்கு நேர் எதிராக முகூர்த்தமில்லாத ஆடி, மார்கழி, புரட்டாசி போன்ற மாதங்களிலும் பிற மாதங்களின் முகூர்த்தமற்ற காலத்திலும் உற்பத்தியைக் குறைக்க வேண்டும். ஒரு தொழில் நிறுவனத்திற்கு இது எவ்வாறு சாத்தியம்? மேலும் முகூர்த்த காலத்தில் தேவையை ஒட்டி கூடுதலாகத் தொழிலாளரைச் சேர்த்தால் பிற முகூர்த்தமற்ற நாட்களில் அவர்களுக்கு வேலை கொடுக்கவும் சம்பளம் கொடுக்கவும் முடியுமா ? அதே போல்தான் இப்பொருட்களை வாங்கி விற்கும் வணிகர்களுக்கும் , கடைகளுக்கும் நெருக்கடி. திருமணசீசனில் ஒரேநாளில் சமாளிக்க முடியாதவாறு வாடிக்கையாளர்கள் வந்து குவிவதும் அவர்களைக் கவனிப்பதற்கு ஆள் பற்றாக்குறையின் காரணமாக வாடிக்கையாளர் வருத்தமுற்றுத் திரும்பிச்செல்வதும் மற்றொருபுறம் வாடிக்கையாளர் விரும்பும் பொருள் தட்டுப்பாடு காரணமாக வியாபாரம் கையைவிட்டுப் போவதும் என்ற நிலையில் வணிகநிறுவன உரிமையாளருக்கு ஏற்படும் மனஉளைச்சல். இது ஒவ்வொரு ஆண்டும் தொடரக்கூடிய நெருக்கடியாகும்.

இந்தவிதமான நெருக்கடிக்கு மாறாக ஆடி, மார்கழி, புரட்டாசி போன்ற மாதங்களில் தொழில் துறையினரும் வணிகர்களும் சந்திக்கின்ற நெருக்கடி வேறுவிதமானது. அன்றாடச் செலவுகளுக்கும், மின்கட்டணம், தொலைபேசிக்கட்டணம், வேலையாள் சம்பளம், கடைவாடகை போன்றவற்றைச் சமாளிப்பதற்கும் சரக்கு சப்ளை செய்தவர்களுக்குக் குறித்த தேதியில் பணம் கொடுக்க முடியாத நிலையும் என்று இது இன்னொரு விதமான நெருக்கடி. இந்த நேரத்தில்தான் சிறு வியாபாரிகள் வட்டிக்குக் கடன் வாங்கி பிறகு அது தொடர்கதையாகி இறுதியில் தனது கடையையே இழந்து தெருவில் நிற்கும்படியாகிறது.

ஓரளவு வசதியான பின்புலமுள்ள வணிகர்களாலேயே இந்த நல்லநாள் என்ற பண்பாடு ஏற்படுத்தும் நெருக்கடியை ஈடு கொடுத்துச் சமாளிக்க முடிகிறது. மற்ற சாமானியர்களுக்கு இந்த இந்துமதம் சார்ந்த நல்லநாள் என்பது குழிபறிக்கும் நாளாகவே இருக்கிறது.

அடிக்குறிப்பு ‡ 1 :

இவ்விடத்தில் வரதட்சணை, சீர் என்பதே கூடாதது, தவறானது என்ற கருத்துதான் சரியானது, முற்போக்கானது என்றாலும் இன்றும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் இந்த வழக்கம் ஆதிக்கம் செய்து வருகின்ற நிலையில் அதை ஒட்டியே சிறு தொழில் உற்பத்தி , வணிகம் இயங்குகின்ற நிலையில் இந்த முகூர்த்த நாட்கள் என்பவை எவ்வாறு நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றன என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
கடந்த 2008‡ ஆம் ஆண்டின் மொத்த சுப முகூர்த்த நாட்கள் 54. இதிலும் வளர்பிறை முகூர்த்தநாட்கள் என்பவை சனவரியில் ஒன்று, பிப்ரவரியில் இரண்டு, மார்ச்சில் நான்கு, ஏப்பிரலில் இரண்டு, மேயில் மூன்று, ஜுனில் இரண்டு, ஜூலையில் ஒன்று, ஆகஸ்ட்டில் கிடையாது, செப்டம்பரில் நான்கு, நவம்பரில் மூன்று , திசம்பரில் மூன்று. ஆக மொத்தம் 25 நாட்கள். இந்த 25 நாட்களில்தான் தமிழகத்தின் ஒட்டு மொத்தத் திருமணங்களும் நடைபெறுகின்றன. இன்று இந்துக்கள் மத்தியில் பரவலாகக் காணப்படும் மற்றொரு போக்கு வெள்ளிக்கிழமை இரவு வீட்டு வாசலில் கற்பூரம் கொளுத்துவது; அதே போல் வணிகர்கள் கடைமூடும் வேளையில் கற்பூரம் ஏற்றி தேங்காயை கடைஎதிரே வீதியில் சிதறடிப்பது என்பதுமாகும். காரைக்குடியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு மட்டும் குறைந்தது 1000 தேங்காய்கள் வீணடிக்கப்படுகின்றன. வீட்டுச்சமையலுக்கு முழுத்தேங்காய் வாங்கமுடியாமல் இன்றும் தேங்காய்ச்சில் வாங்கிச் செல்லும் ஏழைகள் வாழும் ஊரில் மாதம் 5000 க்கும் அதிகமான தேங்காய்களை வீதியில் அடித்து வீணடிக்கின்றனர்.

இதுபோல் காலத்தின் ஒவ்வொரு நாளின் மீதும் புதிது புதிதாக நம்பிக்கைகளை பிழைப்புவாதிகள் , சோதிடர்கள் , மதவாதிகள் , பார்ப்பனர்கள் , வியாபாரிகள் உற்பத்தி செய்து கொண்டேயிருக்கின்றனர். சமீபத்திய உற்பத்தி ‘அட்சயதிதி’ ‡ அன்று தங்கம் வாங்க வேண்டும் என்ற வழக்கம். இதற்கு முன்பதிவு செய்யும் அளவிற்கு இன்று நிலைமை முற்றிவிட்டது.
அன்றைய நாளில் மட்டும் பல கோடிகளுக்குத் தங்கம் விற்பனையாவதாகப் புள்ளிவிபரங்கள் போட்டி போடுகின்றன. இந்த மூடத்தனத்தில் வங்கிகளும் (ணூளீணூளீணூ வங்கி அட்சயதிதி அன்று தங்கக்காசு விற்பனையை அமோகமாகச் செய்கிறது) இதையயல்லாம் காணும் போது இந்த இந்துக்களைப் போன்ற முட்டாள்கள் உலகத்தில் வேறுயாரும் உண்டா என்று கேட்கத் தோன்றுகிறது.

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டும் சூரியனையும் சுற்றிவருவதால் ஏற்படும் மாறுதல்களையே பகல், இரவு, காலை, மாலை, முற்பகல், பிற்பகல், நன்பகல், முன்னிரவு, பின்னிரவு, நள்ளிரவு, எனவும் இவ்வாறு தொடர்ந்து ஏற்படும் மாறுதல்களையே நாள் , வாரம், ஆண்டு என பலவாறு கணக்கிடுறோம். இவ்வாறு பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் 24 மணி நேரத்தை ஒரு நாள் எனக் கணக்கிடும்போது அந்த 24 மணி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட மணிநேரத்தை மட்டும் இராகுகாலம், எமகண்டம் என்றும் மற்றொரு நேரத்தை சுபமுகூர்த்தம் என்றும் கூறுவதும், அதே போல் பூமி சூரியனைச்சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால அளவான 365 நாள்களில் ஒரு சில நாள்களை மட்டும் நல்லநாள்கள் ( முகூர்த்த நாள்கள் ) எனக் கருதுவதும் அறியாமை, மூடத்தனம் என்பதை சித்தர்கள் துவங்கி பெரியார்உள்ளிட்ட பலரும் சுட்டிக்காட்டிய பின்னரும் தமிழர்கள் அறிவு பெற்ற பாடில்லை.
நியாயமாக இவ்விடத்தில் தமிழர்கள் என்று பொதுவாகக் கூறுவது தவறாகும். ஏனெனில் இசுலாமியர் இவ்வாறு நல்லநேரம் பார்த்துத் திருமணம் போன்றவற்றைச் செய்வதில்லை 1 ஆ: எனவே இந்துக்கள் என்று கூறுவதே சரியாகும். ஆக, இந்துக்கள் இன்றைய நவீன யுகத்திலும் 2000 ஆண்டு வழக்கமான நாள் நட்சத்திரம் பார்த்துச் செயல் ப டு வ ç த த் தொ ட ர் வ து வினோதமும் வேடிக்கையுமாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நட்சத்திரம் பார்த்துச் செயல்பட்டது முட்டாள்தனமில்லை. அன்று வானமும் , நிலவும், நட்சத்திரங்களுமே காலம், திசைகாட்டும் கருவி. ஒரு குறிப்பிட்ட நட்சத்திரக்கூட்டம் வானில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோன்றினால் மழைவரும் என்பதைத் தனது அனுபவத்தில் கற்றிருந்த அன்றய மனிதன் உடனே விதைத்தான். இதுபோல் வானில் நட்சத்திரக் கூட்டங்களின் வடிவம், இடம் இவற்றைக் கண்டே தன் அன்றாடப்பணிகளை மேற்கொண்டான். பின்பு இதுவே வழிகாட்டும் பதிவாக மாறி ஆவணப்படுத்தப்பட்டு பஞ்சாங்கம் என்ற பெயர் பெற்றது. இன்று வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் கூறும் செய்திகளைக் கேட்டு விவசாயிகள் செயற்படுவதைப் போல் அன்று பஞ்சாங்கத்தைப் பார்த்து மனிதர்கள் செயல்பட்டனர்.

ஆனால் காலப்போக்கில் பஞ்சாங்கத்தில் பல்லி விழும் பலன் போன்றவை இடைச்செருகப்பட்டு பார்பனியமயமாகிப் போனதாக த. வி. வெங்கடேசுவரன் கூறுகிறார். (நாள் என்னசெய்யும், கோள் என்னசெய்யும் நூலில் ...) அந்தப் பழைய பஞ்சாங்கத்தையே இன்றும் பார்த்துத் தங்களின் செயல்களை இந்துக்கள் மேற்கொள்வது மிகவும் மூடத்தனமாகும். இன்று எவரும் வானத்தைப்பார்த்து நேரம் சொல்ல வேண்டியதில்லை; திசை சொல்லவேண்டியதில்லை. முன்பு ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் சென்ற மீனவர்கள் இரவில் வானத்தை, நிலவை, நட்சத்திரத்தைப் பார்த்துத் தங்களின் பயணத்தின் திசையையும், நேரத்தையும் கணித்துக் கொண்டனர். இன்று திசை காட்டும் கருவி, அலைபேசி (துலிணுஷ்யிe ஸ்ரீஜுலிஐe) ழழியிவதீ வீழியிவதீ போன்றவற்றைக் கையில் எடுத்துச் செல்கின்றனர். இதனால் மழை,புயல் போன்றவற்றால் வானம் சரிவரத்தெரியாமல் திசையையும்,நேரத்தையும் சரிவரக் கணிக்கமுடியாமல் அவதிப்படும் நிலை தற்போது நவீனக் கருவிகளின் பயன்பாட்டின் காரணமாகக் குறைந்துள்ளது.
ஆக காலத்தால், விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளால் மக்கள் மாறவேண்டும். ஆனால் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துத் திருமணம், வீடு குடிபுகுதல், தொழில் துவங்குதல் போன்ற செயல்களை இந்துக்கள் இன்றும் கைவிடாமல் தொடர்வதால் ஏற்படும் சிரமங்களை, நெருக்கடிகளைப்பற்றி சமூக அக்கறையுள்ள யாரும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
ஆனால் சமூக அக்கறைகொண்டு அரசியல் இயக்கங்களில் செயல்படும் தோழர்களே கூட இந்த நல்ல நாள், நல்ல நேரம் போன்றவற்றைப் பற்றித் தெரிந்தே கண்டும் காணாமல்விடுவது அல்லது கவனமின்றிக் கடைப்பிடிப்பது போன்ற நிலைகளை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
முதலாளிய, பார்ப்பனிய இயக்க, கட்சித் தோழர்களைப்பற்றி நாம் இங்கு கூறவில்லை. சமூக மாறுதலுக்காக நிற்கும் திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம், தமிழ்தேச விடுதலை, சாதி ஒழிப்பு மற்றும் தாழ்த்தப்பட்டோர் விடுதலை இயக்கம், பெண் விடுதலை இயக்கம் சார்ந்த தோழர்களைப் பற்றியே இங்கு கூறுகிறோம். நமக்குத் தெரிந்தவரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான தோழர்கள் நல்லநாள், நேரம் பார்த்தும் சடங்கு சம்பிரதாயங்களோடு சுயசாதித் திருமணங்களையே நடத்துக் கொள்கின்றனர். விதிவிலக்கான ஒரு சிலரும் தங்களின் சுயபுரிதல், நேர்மையின் காரணமாகத்தான் சாதி மறுப்பு, சடங்கு மறுப்புத் திருமணங்களை மேற்கொண்டனரே தவிர இதில் கட்சிக்கட்டுப்பாடு ஏதும் இல்லை.
இது நாள் வரை பெரும்பான்மையான கட்சித் தோழர்கள் மத்தியில் சாதி, சடங்கு விசயத்தில் பெரிய விழிப்புணர்வோ, கவனம் குவிக்கப்படவோ, நாம் செய்வது சரியா? என்ற கேள்வி எழும் நிலையோ ஏற்படுத்தப்படவே இல்லை. மேலும் வேதனை என்ன வென்றால் இதுபோன்ற சுயசாதி, சுபமுகூர்த்த, சடங்கு சம்பிரதாயத் திருமணங்களுக்கு கட்சித்தலைமைத் தோழர்கள் வந்திருந்து வாழ்த்துரை வழங்குவது ஏதோ புரட்சிகர மாநாடு போல செங்கொடி கட்டியும், பேனர்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டிருப்பதும் தான்.
ஒரு வேளை புரட்சிக்குப்பிறகு ஒரு சோசலிச அதிகாரம் நிறுவப்பட்டபின்புதான் இதுபோன்ற பண்பாட்டு விசயங்களில் கவனம் குவிக்கவேண்டும்; அது வரை ஊரோடு ஒத்துப்போக வேண்டும் என்ற தெளிந்த முடிவோடே இவ்வாறு பெருந்தன்மையாகச் செயல்படுகின்றனரோ என்று கருதவேண்டியுள்ளது.

ஏனென்றால் எனக்குத் தெரிந்த (னி.ஸி) மார்க்சிய இலெனினிய இயக்கத்தோழர்கள் பலரும் இது போன்ற புரிதலில் தான் இருந்தனர்; செயல்பட்டனர். குறிப்பாக 70களில் மிகத்தீவிரமாக செயல்பட்டுத் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு சிறைசென்ற தோழர் ஒருவர் இந்த சாதி, சடங்கு, நாள்நட்சத்திரம் போன்ற விசயங்களில் எவ்வித மறுப்பும் கூறாமல் குடும்பத்தாரோடு உடன்பட்டுப் போனதோடு நம்மோடு விவாதிக்கும்போது ‡ ‘இவையயல்லாம் புதிய பொதுவுடைமைச் சமுதாயத்தில்தான் மறையும்; அதுவரை இதற்கெதிராகப் போராடவோ, மாற்ற முயற்சிக்கவோ கூடாது’ என‡விவாதிக்கவும் செய்தார்.
இந்த விதப்புரிதல் கொண்ட தோழர்கள் சி.பி.அய், சி.பி.எம், சி.பி.அய். (எம்‡எல்) என்ற மூன்று இயக்கங்களிலும் பரவலாக உள்ளனர். ஏனென்றால் பண்பாட்டு விசயத்தில் கறார்தன்மையும், உறுப்பினர் தகுதியில் ஒன்றாக பண்பாட்டு நடவடிக்கைகளை இணைக்காததும் இதற்குக் காரணமாகும்.
இதேநிலை தமிழத்தேசிய இயக்கங்களிலும் காணப்படுகிறது. திராவிடர் கழகங்கள் இவ்விசயத்தில் ஓரளவு முன்னேறி உள்ளன எனலாம். ஏனெனில் அவை பார்ப்பனிய பண்பாட்டு விசயங்களை மய்யப்படுத்தி அவற்றிற்கெதிராக இயங்குவதால் இ ந்நி ç ல. ஆனால் அ தி லு ம் ¼ த V ழர்க ள் ப ல ரு ம் சுயசாதித்திருமணங்களை மேற்கொள்வதே அதிகமாகும். அடுத்து தாலி மறுப்பு, பார்பனியச் சாதிமறுப்பு, சடங்கு மறுப்பு என முற்போக்காக மேற்கொள்ளப்பட்ட சில திராவிடர்கழகத் திருமணங்கள் கூட இந்துக்கள் நம்புகின்ற அதே நல்ல (முகூர்த்த) நாளில் நடைபெற்றது ஏன் என்பது நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
கவனமின்மை என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதேசமயம் சாதி என்ற கொடூரமானதும், கெட்டிதட்டிப்போன ஒன்றையே புறக்கணித்த தோழர்களுக்கு இந்த ‘நல்ல நாள்’ என்ற மூடநம்பிக்கையைப் புறந்தள்ளுவதா கடினம் என்ற கேள்வியும் எழுகிறது.

அண்மையில் முன்னாள் கம்யூனிஸ்டு (நக்சல்பாரி), இன்னாள் ‡ தியாகி இமாணுவேல் பேரவை, சாதி ஒழிப்பு முன்னணியின் ‡ செயல் வீரருமான தேவகோட்டைப் பகுதியைச் சேர்ந்த மூத்த தோழர் நமசு, தோழர் பாட்டாளி எழுதிய ‘கீழைத்தீ’ என்ற நாவல் மீதான விமர்சனக் கூட்டத்திற்கு (30.11.2008 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி) ஏற்பாடு செய்திருந்தார். கொடுக்கப்பட்ட அழைப்பிதழ்கள் 150. நூறுபேர் வருவார்கள் என்றார்; (தோழர் நமசுவுக்கு 30.11.2008 அன்று முகூர்த்தநாள் எனத் தெரியவில்லை) ஆனால் கூட்டத்திற்கு இருபது நபர்களுக்குள்ளாகவே வந்திருந்தனர். இதுதான் இன்றைய நிலை. கலை இலக்கிய அரசியல் கருத்தரங்குகளை சனி, ஞாயிறு போன்ற நாட்களிலேயே இன்று பெரும்பாலும் நமது தோழர்கள் நடத்துகின்றனர். ஏனெனில் கலந்து கொள்பவர்களின் அலுவலகப்பணி பாதிக்கக்கூடாது என்பதால்தான். இன்று இதே நோக்கிலேயே இந்துக்களும் ஞாயிற்றுக்கிழமையில் வரும் முகூர்த்தநாளைத் தேர்வுசெய்து திருமணத்தை நடத்துகின்றனர். இந்துக்கள் தங்களின் சடங்கு சம்பிரதாயத்தை, நம்பிக்கையை நவீனச்சூழலுக்கு ஏற்பவும் அதே சமயம் கைவிடாமலும் தொடர்ந்து கட்டிக்காத்து வருகின்றனர்.

இனிமேல் நமது தோழர்கள் கூட்டங்களை, கருத்தரங்குகளை சனிக்கிழமைகளில் மட்டுமே நடத்தவேண்டும். ஏனென்றால் சனியும் செவ்வாயுமே இந்துக்களைப் பொருத்தவரை மோசமான(?!) நாட்களாகும். வேறு என்ன செய்வது! நம்மால் பெரும்பான்மையான மக்களை (இந்துக்களை) மாற்ற முடியாதபோது, மேலும் சமூகமாற்றத்திற்காக நிற்கும் நம்மாலேயே (மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய வாதிகளாலேயே) நல்ல நாள், நேரம், முகூர்த்தநாள் போன்ற பார்ப்பனிய மூடத்தனத்தை எதிர்த்து, மீறி இல்ல நிகழ்வுகளை மேற்கொள்ள முடியாதபோது குறைந்தபட்சம் நமது குடும்ப உறுப்பினர், உறவினரோடு எதிர்த்துப் போராடி தோற்றுப்போகாமல் கூட  அப்படியே அவர்களின் விருப்பத்திற்குட்பட்டுப் போகும் நிலையில் கலை இலக்கிய நிகழ்வுகள், கருத்தரங்குகள், போராட்டங்கள் ஏன் புரட்சியேயானால் கூட இந்துக்களின் முகூர்த்த நாள்  நல்லநாள்  தவிர்த்த பிற கரிநாட்களில் (அமங்கலநாட்களில்) எமகண்டம், இராகுகாலத்தில் துவங்குவதே சரியாகும் என்று தோன்றுகிறது.பின்குறிப்பு : தோழர்களே! இக்கட்டுரை தனிநபர் எவரையுமோ அல்லது மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களையோ கட்சிகளையோ இழிவு செய்யும் நோக்கத்தோடு எழுதப்படவில்லை. மாறாக என்னையும் உள்ளடக்கி நமது தோழர்கள் மத்தியில் உள்ள நாள், நட்சத்திரம் குறித்த விழிப்புணர்வற்ற நிலையையும், பார்ப்பனியத்திற்குப் பலியாகிப்போயுள்ள நிலையையும் சுட்டிக்காட்டி சிந்திக்கத்தூண்டுவதற்காகவும், "இல்லை! நாள் நட்சத்திரம் பார்ப்பதால், பார்ப்பனியச் சடங்குகளை மேற்கொள்வதால் சமூகமாறுதலுக்கோ புரட்சிக்கோ, குறைந்தபட்சம் சமூக முன்னேற்றத்திற்கோ ஒரு கேடும் வந்துவிடப்போவதில்லை" என்று கருதும் தோழர்கள் மனம்திறந்து வெளிப்படையாகத் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. எனவே தோழர்கள் திறந்தமனதோடு இதுகுறித்து ஒரு விவாதத்தை (அ) உரையாடலை மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இந்துக்கள் என்போருக்கு இங்கு வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஓர்வழிமுறை (சாதிரீதியான வழிமுறை) வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல் பிற மதத்தினருக்கும் வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் மதமற்ற, சாதியற்ற, சமூகமாற்றத்திற்காகப் போராடுபவர்கள் என்போருக்கான பண்பாட்டு வழிமுறைகள் என்ன? என்பதுபற்றிய தெளிவான வழிகாட்டல்கள் ஒவ்வொரு இயக்கத்திலும் இதுவரை வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறதா அல்லது அப்படி எதுவும் தேவை இல்லையா என்பது பற்றியும் தோழர்கள் சிந்திக்கவும், உரையாடவும் வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன்.

அடிக்குறிப்பு 1 :

இவ்வளவு காலமாக சாதி இந்துக்களிடம் செல்வாக்கோடு இருந்த நாள், நட்சத்திரம், ஜாதகம் பார்த்தல் போன்ற வழக்கங்கள் தற்போது நகர்ப்புறங்களில் வாழும் தாழ்த்தப்பட்டோர் மத்தியிலும் வெகுவாகப் பரவிவருகிறது. காரைக்குடியில் ஒரு பகுதியைச் சேர்ந்த அருந்ததியரில் எவராவது ஒருவர் இறந்துவிடும்போது அப்பகுதியின் தெரு முக்கியஸ்தர்கள் நான்குநபர்கள் சோதிடரிடம் சென்று ‘இவர் இத்தனை மணிக்கு இறந்துவிட்டார், எத்தனை மணிக்கு பிணத்தை எடுக்கலாம்’ என நேரம் குறித்து வந்தே மற்ற காரியங்களைப் பார்க்கிறார்களாம்.
அச்சோதிடன் சாவுக்கு நேரம் குறித்துச் செல்ல வந்த அருந்ததியர்களைத் தன் வீட்டு வாயிலிலேயே நிறுத்தி நேரம் குறித்துக் கொடுத்து ரூ.51 தட்சணை வாங்கிக் கொண்டு அனுப்பிவிடுவானாம். இச்சோதிடம் பார்த்துச் சடலம் எடுக்கும் வழக்கம் மிகச் சமீபமாகத்தான் பரவிவருவதாகவும் முன்பு காலண்டரைப் பார்த்து நல்ல நேரம் குறித்துக் கொண்டதாகவும் கூறினர்.
அடுத்து அண்மையில் பெய்த கனமழையின்போது என் துணைவியார் வழி உறவினர் ஒருவரின் வீட்டுச்சுவர் விழுந்துவிட்டது. உடனடியாக வேறு வீடு வாடகைக்குக் கிடைக்காமல் அவர்கள் பட்ட துயரமும், வீடுதேடிப்போன இடங்களில் அருந்ததியர் என்றதால் வீடுதரமறுத்து சாதித் திமிரன்/ள் கள் கூறிய காரணங்கள் நாகரிக (?!) தமிழ்ச் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டியவை.
அது ஒருபுறம் இருக்க அவ்வுறவினர்கள் ஒவ்வொரு சோதிடனாகத் தேடிச் சென்று தங்களின் துயரங்களுக்கான காரணம் என்ன? என்று ஜாதகம் பார்த்து அலைந்து திரிந்தது வேதனையிலும் வேதனை.
அடிக்குறிப்பு ‡ 1 அ :
இன்றைக்குச் சில்லரை வணிகம், உள்நாட்டுச் சிறு தொழில் போன்றவை உலகமயம், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் தலையீடு போன்றவற்றால் நெருக்கடிக்குள்ளாகி நசிந்து போய்க் கொண்டிருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இது மேலிருந்து அல்லது வெளியிலிருந்து திணிக்கப்படும் நெருக்கடி என்றால் பார்ப்பனியப் பண்பாட்டுத் தேவையை மையமாகக் கொண்டு இயங்குதல் என்பது சிறுதொழில், வணிகத்தின் உள்ளிருந்து அல்லது கீழிருந்து கொல்லும் நோயாக இருக்கிறது எனலாம்.
அடிக்குறிப்பு ‡ 1 ஆ :
இசுலாம் மார்க்கத்தில் இவ்வாறு நல்லநேரம் என்பது இல்லாவிட்டாலும் இன்று நடைமுறையில் இந்துக்களைப் பார்த்து இசுலாமியரும் பல்வேறு மூடத்தனங்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்துக்களைப் போலவே சனியையும், செவ்வாய்க்கிழமையையும் திருமணத்திற்கு ஏற்றநாள் அல்ல என்று ஒதுக்குகின்றனர். அதுபோல் சில பகுதிகளில் சோதிடம் பார்த்தல், மந்திரித்து தாயத்துக் கட்டுதல் போன்ற வழக்கங்களும் கடைப்பிடிக்கப்படுகிறது.
தங்கள் மதத்திற்குள் வந்துவிட்ட தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு செய்யாமல் சமமாகவும் திருமண உறவுகளை மேற்கொள்ளும் அதே வேளை இந்து மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை இந்துக்களைப் போலவே ஒதுக்கிப்பார்க்கும் வழக்கமும் நிலவுகிறது.

கிராமப்புறத்தில் இசுலாமியரிடம் இந்தவிதப் போக்குகள் மிகுந்து காணப்படுகின்றன. தமிழகக் கிறித்தவர்களைவிட இசுலாமியரிடம் பார்ப்பனியம் குறைவாகச் செல்வாக்குச் செலுத்துகிறது என்று வேண்டுமானால் கூறலாம். மற்றபடி பார்ப்பனியப் பண்பாட்டின் கொடிய விசநாக்குத் தீண்டாத மனிதர் இங்கு எவருமில்லை என்றே கூற வேண்டியுள்ளது.

அடிக்குறிப்பு ‡ 2 :

இந்த மூத்த தோழர் கூறுகின்ற கருத்திற்கு வலுச்சேர்ப்பது போன்ற வகையில் ‘செப்டம்பர் 2008 தீராநதி’ இதழில் ஒரு செய்தி பதிவாகியுள்ளது. "சிண்டு வைத்த மாவோயிஸ்ட், பூணூல் அணிந்த மாவோயிஸ்ட், ருத்ராட்சக் கொட்டை அணிந்த மாவோயிஸ்ட்டுகளையும் கூடச் சந்திக்க நேரிட்டது. ‘இதெல்லாம் என்ன’ என்று அன்று மாலை உள்ளூர்த் தோழர்களிடம் கேட்டபோது ‘ஆமாம் இங்கு இது ஒரு பிரச்சனைதான்; என்ன செய்வது?. இங்குள்ள கலாச்சாரம் அப்படி’ என்று சமாளித்தார்கள்..." (தோழர். அ.மார்க்ஸ். ‘சிறைப்பட்ட வாழ்வுகள்’ கட்டுரையில்)

ஜார்கண்ட் மாநிலச் சிறையில் வாடும் மாவோயிஸ்டுகளைப் பற்றிய உண்மையறியும் குழுவில் சென்றபோது ஏற்பட்ட அனுபவங்களையே தோழர் அ.மார்க்ஸ் மேலே குறிப்பிடுகிறார். மேலும் அ.மார்க்ஸ் இப்படிக் கூறுகிறார். "கலாச்சாரம் எல்லா இடத்திலும் ஒரே மாதிரித்தான் இருக்கிறது. கலாச்சார எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் நடந்ததுபோல இங்கு நடக்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது என நினைத்துக்கொண்டேன். ‘தமிழகத்தில் இதெல்லாம் சாத்தியமில்லை’ என்று மட்டும் சொன்னேன்"

அடிக்குறிப்பு ‡ 3 :

எனக்குத் தெரிந்தமட்டிலும் ம.க.இ.க ‘பாட்டாளி வர்க்க பண்பாட்டு நெறிமுறைகள்’ என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டு உள்ளதாக அறிகிறேன். அதில் கம்யூனிஸ்ட் என்பவர், வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வின் போதும் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டல்கள் உள்ளன. மேலும் தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டிய முறையில் ஒரு சராசரி பெற்றோரிடமிருந்து கம்யூனிஸ்ட்டுகள் எவ்வாறு மாறுபட்டுள்ளனர் என்பது பற்றியயல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளதாக நினைவு. ம.க.இ.க தோழர்கள் எந்த அளவிற்குக் கடைப்பிடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
இந்நூலைப் பிற இயக்கத்தவர் ஏற்று நடைமுறைப்படுத்தாவிட்டாலும் கூட விவாதத்திற்குரியதாக மாற்றலாம். ஆனால் இங்கு நிலவும் கட்சித் தீண்டாமை, இயக்கத்தீண்டாமைச் சூழலில் இது பேராசைதான். மேலும் கட்சியையோ, இயக்கத்தையோ சாராத தனிநபராக செயலற்று இருந்தும். பிற அனைவரையும், அனைத்து இயக்கங்களையும் தனக்கும் தன் சிந்தனைக்கும் கீழான புழுவைப்போல் பாவிக்கும் தன்னகங்காரப் பேர்வழிகள் நிரம்பிய சூழலில் பிற இயக்க வெளியீட்டைப்படித்துப் பரிசீலிப்பதும், ஏற்றுக்கொள்வதும், நடைமுறைப்படுத்துவதும் அழகான ஆசைதான்!
இதுபோன்ற மற்றொரு நூல் சிலிக்குயில் பதிப்பகம் 1986‡ஆம் ஆண்டு வெளியிட்டதான எரிதழல் எழுதிய ‘பண்பாடும் புரட்சியும்’ ஆகும். எரிதழல் என்ற புனைப்பெயரில் எழுதியவர் தோழர்.அ.மார்க்ஸ் என்று தெரியவருகிறது. அன்று அவர்சார்ந்திருந்த புரட்சிப்பண்பாட்டு இயக்கம் கொண்டிருந்த நிலைப்பாடாகவும் இந்நூலின் கருத்துக்களை நாம் கொள்ள முடியும்.
இந்நூலில் பண்டிகைகள், திருவிழாக்கள், கூட்டுவழிபாடுகள் பற்றியும் நம் தோழர்கள் இவற்றை அணுக வேண்டிய வழிமுறைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இந்நூலையும் இன்றும் வாசிப்பதும் விவாதிப்பதும் அவசியமானதேயாகும்.


நல்ல நேரம்
 தமிழர்வாழ்வில் ஏற்படுத்தும் நெருக்கடியும் சீரழிவும் :- குமரன்தாசு 


மதிப்பிற்குரிய  ஐயா, பி.இரா .அரசெழிலன் ,ஆசிரியர்: நாளைவிடியும் , இருதிங்களிதழ்,திருச்சி ,அவர்களால் குமரன்தாசு அவர்களின் ஆக்கத்தை எனது பார்வைக்கு முன்பு அனுப்பி வைத்த மின்னஞ்சல்  இது .
உங்களின் பார்வைக்கும் வைக்கிறேன் .

நன்றிகள்  குமரன்தாசு  மற்றும்  அரசெழிலன்  ஆகியோருக்கு .



.
.மீள்வு.
Download As PDF

திங்கள், 30 ஜனவரி, 2017

காந்தி என்ன செய்து கிழிச்சார் , அவரால நாட்டுக்கு என்ன லாபம்.


காந்தி என்ன செய்து கிழிச்சார் , அவரால நாட்டுக்கு என்ன லாபம்.அவர் வெள்ளக்காரங்ககிட்டயிருந்து பிரிச்சு கொள்ளக்காரர்கிட்ட நாட்ட கோடுத்துட்டார்.அதனால தான சுதந்திரமே வேணாமுனு நாங்க சொன்னோம்.காந்திக்கு சப்போட்டா பேசரவங்க முதலில வரலாறு தெரிஞ்சுக்கனும் என பேசும்  கண்மணிகள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக ...


...............

அடிமைப்பட்ட பல நாடுகளிலே 'சுதந்திரம் வேண்டும்' என்பது மட்டுமே பிரச்னை - இங்கோ, சுதந்திரமும் வேண்டும், புது சமுதாய அமைப்பும் வேண்டும் என்று கேட்கவேண்டிய நிலைமை இருந்தது. இங்கோ, விடுதலை வேண்டும் என்று போராடத் தொடங்கிய போது, அன்னிய ஆட்சி ஒழிய வேண்டும், என்பது மட்டும், முழக்கமாக இல்லை - அந்த ஒரு முழக்கம் மட்டும் போதுமானதாகச் தெரியவி்ல்லை. அன்னிய ஆட்சி மட்டும் தொலைந்தால் போதும் என்ற அளவுடன், நின்றுவிட மனமில்லை - ஏனெனில் இந்நாட்டு அமைப்பு முறை, தேவையான வேறு பல இலட்சியங்களைக் கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டது. எனவேதான் இங்கு சாதாரணமாக, அடிமைப்பட்ட மற்ற நாடுகளிலே, அன்னிய ஆட்சி ஒழிய வேண்டும என்ற ஒரே ஒரு முழக்கம் மட்டும் கிளம்பியது போலல்லாது,

அன்னிய ஆட்சி ஒழியவேண்டும்.
மக்களாட்சி மலர வேண்டும்.
இந்து - முஸ்லிம் ஒற்றுமை வேண்டும்.
தொழில்கள் பெருக வேண்டும்.
கல்வி பரவ வேண்டும்.
ஜாதி பேதம் ஒழிய வேண்டும்.
தீண்டாமை போக வேண்டும்.
கிராமம் சீர்படவேண்டும்.
வறுமை போக வேண்டும்.
சுரண்டல் முறை ஒழிய வேண்டும்.

என்ற வேறு பல இலட்சிய முழக்கங்கள் கிளம்பின. மற்ற நாடுகளிலே நடைபெற்ற விடுதலைப்போர் சூழ்நிலைக்கும், நமது நாட்டிலே விடுதலைப் போர் நடந்த போதும், அதற்குப் பிறகும் உள்ள சூழ்நிலைக்கும், இது ஓர் மகத்தான வித்தியாசம் - இதிலேதான், எதிர்காலத்தை உருவாக்கும் சூட்சமம் இருக்கிறது. ...


ஏழை ஈடேற வேண்டும்.
ஏழை உரிமை பெறவேண்டும்.
ஜாதிபேதம் ஒழியவேண்டும்.
ஒற்றுமை மலரவேண்டும்.

என்று கூறினதுடன், 'இத்தகைய இந்தியா உருவாக வேண்டும், அதுவே என் இலட்சியம், அதற்கே நான் பாடுபடுகிறேன்' என்றும் கூறினார்....



 - அறிஞர் அண்ணா எழுதிய கட்டுரையிலிருந்து 



...............


உலக உத்தமர், மறைந்ததால் உள்ளம் நொந்து கிடக்கும் நாம், ஒருவருக்கொருவர் ஆறுதல் மொழி கூறிக் கொள்ளும் நிலையிலே இருக்கிறோம். ஒரு கிழமைக்கு மேலாகிவிட்டது, இழிகுணத்தான், மானிலம் போற்றும் மகாத்மாவைக் கொலை செய்து, உலகம் இன்றும் அழுதுகொண்டுதான் இருக்கிறது. அவருடைய மாண்புகளைப் பற்றிப் பேசாத நாடில்லை, எழுதாத ஏடில்லை. எங்கும் கலக்கம் - ஏக்கம் . எவருக்கும் தாங்கொணாத் துக்கம். அதை மாற்ற அவரைப்பற்றிப் பேச முனைகிறோம். ஒவ்வொரு பேச்சும், மீண்டும் மீண்டும், கண்ணீரைக் கொண்டுவரவே உதவுகிறது. மூண்ட தீ அணையவில்லை துக்கம் தரும் நிலை அது. ஆனால் அவர் புகழ் ஒளிபரவுகிறது. அதை எண்ணுவோம்; ஆறுதல் பெற முயற்சிப்போம்.
நாம் அரசுரிமை இழந்திருந்தபோது அவர் பிறந்தார்; அவர் மறையும்போது நாம் அரசுரிமை பெற்று வாழ்கிறோம்.

அவர் பிறந்தபோது நமது நாடு, உலகிலே இழிவும் பழியும் தாங்கிய நாடாக இருந்தது. அவர் மறைந்திடுவதற்கு முன்னும் மாஸ்கோவிலிருந்து நியூயார்க் வரையிலே உள்ள சகல நாடுகளிலும் நமது விடுதலையை விளக்கும் விருது பெற்று, தூதுவர்களும், பிரதிநிதிகளும் வீற்றிருக்கும் நிலை உண்டாகிவிட்டது.

அவர் பிறந்தபோது, உலக மன்றத்திலே, நமக்கு இடம் கிடையாது. இன்று நாம் இருந்தால் உலக மன்றத்திலே புதியதோர் பலம் என்று பல நாடுகள் எண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டது.

அவர் பிறந்தபோது, இங்கு தேவைப்படும் எந்தச் சாமானுக்கும், வெளிநாட்டின் தயவை நாடி, ஏங்கிக் கிடந்தோம். இன்று வெளிநாடுகள், நமது சரக்குகளைப் பெற நம்முடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்வதற்குத் தமது ராஜதந்திரத்தை உபபோகிக்கும் அளவு மாறுதலைக் காண்கிறோம்.

அவர் பிறந்தபோது, கோயில்கள் மூடிக்கிடந்தன. தீண்டாதார் என்ற தீயோரால் அழைக்கப்பட்டு வந்த தியாகப் பரம்பரையினருக்கு அவர் கண் மூடுமுன், மூடிக்கிடந்த கோயில்கள் எல்லாம் திறந்துவிடப்பட்டன.
குடித்துக் கிடப்பது மிகச் சாதாரணம், சகஜம் என்று யாரும் எண்ணிக்கொண்டிருந்த நாட்கள், அவர் பிறந்த காலம் மதுவிலக்குச் சட்டம் அமுல் நடத்தப்படுவதைக் கண்டான பிறகே, அவர் மறைந்தார்.

அவர் பிறந்த காலத்திலே, சூரியனே அஸ்தமிக்க அஞ்சும்படியான அளவுள்ளதாக இருந்தது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம். அந்த சாம்ராஜ்யத்தின் ஆதிக்கப் போக்கு அழிந்ததைக் கண்டான பிறகே, அவர் கண்களை மூடினார்.

அவர் பிறந்த நாட்களிலே, பிரிட்டனிலிருந்து, கவர்னர்களும் மற்ற அதிகாரிகளும் இங்கு வந்த வண்ணம் இருந்தனர். ஆள்வதற்கு அடிமை இந்தியாவை விட்டு வெளியே அவர்கள் போகும் காட்சியைப் பார்த்துவிட்ட பிறகே, உத்தமர் உயிர் நீத்தார்.

இவ்வளவையும், அவர், மந்திரக்கோல் கொண்டோ, யாக குண்டத்தருகே நின்றோ சாதிக்கவில்லை மக்களிடையே வாழ்ந்து மக்களின் மகத்தான சக்தியைத் திரட்டிக் காட்டிச் சாதித்தார். புதிய வாழ்வு தந்தார். புதிய அந்தஸ்து தந்தார்.

இவ்வளவு தந்தவருக்கு அந்தத் துரோகி தந்தது, மூன்று குண்டுகள், சாக்ரடீசுக்கு விஷம் தந்ததுபோல.
அவர் சாதித்தவைகள் மகத்தானவை. ஆனால் அவர் சாதிக்க எண்ணியிருந்தவை வேறு பல. அவை மேலும் மகத்தானவை.

நாட்டிலே உள்ள மற்றக் கொடுமைகள் ஜாதிச் சனியன், வறுமை, அறியாமை ஆகியவற்றை அடியோடு களைந்தெரிந்துவிட்டு, உலகினர் கண்டு பின்பற்றத்தக்க முறையிலே, உன்னதமான இலட்சியங்களைக் கொண்ட ஓர் சமுதாயத்தைக் காண விரும்பினார். அதற்காக அரும்பாடுபட்டு வந்தார். அந்த நேரத்திலே ஆத்திரத்தால் அறிவை இழந்தவனால், அவர் கொலை செய்யப்பட்டார்.


உலகப் பெரியார் காந்தி - அறிஞர் அண்ணாவின் வானொலிப் பேச்சு .


Download As PDF

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

இங்கு எரிமலைகள் மட்டும் வெடிப்பதில்லை.









நீங்கள் பார்க்கும் 





இந்த ஓவியம் நான் வரைந்தது.

ஓவியத்தின் தலைப்பு  YIN TU  

இதை பார்த்த பலர் பலவிதமான பார்வைகளை பகிர்ந்தும் ,
YIN TU என்ற பெயருக்கான காரணத்தையும் 
என் மூலம் அறிய முயன்றபொழுதெல்லாம் 
நான் அவர்களை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் என கூறிவந்தேன்.

நேற்று எனது நண்பன் கேட்டுக்கொண்டதற்கிணங்க 
இது பற்றிய எனது மௌனம் கலைந்தேன் . 




YIN TU  வை வரைந்த போது  நான் எழுதிய சிற்பாக்கள் .

.
.

.
என் ரோஜாத் தோட்டம்
மலரும் மணக்கும்
நானில்லாவிட்டாலும்
.

.
.

சுத்தம் செய்யப்படும்
எவ்விடமும்
பழையதின் சலசலப்பு

.
.

.


YIN TU  என்றால் ? ...

உலக வரலாற்றில் மறைக்கப்பட்ட விசயங்கள்,மறக்கப்பட்ட விசயங்களில் இதுவும் ஒன்று .

இங்கு வரலாறு முழுவதும் எழுதப்பட்ட ஒன்றாகவே
இருக்கிறது.( அ.பொ : எழுதப்பட்ட - எழுத்தத்தெரிந்தவர்களால் படிக்கத்தெரிந்தவர்களுக்காக ஆக்கப்பட்டது ) .
உண்மையான வரலாறு இனி வரும் .
அதற்கான சூழல் உருவாகிவருகிறது.

YIN TU  என்பது எழுதப்பட்ட வரலாற்றில் எழுதப்படாத பக்கங்களில் எழுப்பப்பட்ட சில உண்மைகளில் இருந்து பெறப்பட்ட வார்த்தை. 

இவ்வார்த்தையின் அர்த்தம் ' மகான்களின் பூமி '.
அதாவது ' நல்லவர்களின் பூமி ' .' உயர்தோரின் இருப்பிடம் '

இது எங்குள்ளது என்றதற்கு 
இவ்வார்த்தையை உச்சரித்தவர்கள் சுட்டிக்காட்டிய இடம் நமது தாயகம்.



இவ்வாறு நமது நாட்டை அழைத்ததன் காரணத்தினால், 
நமது மா நிலத்தை மிக அருமையான வார்த்தையினால் உச்சரித்த மாந்தர்கள் மறந்துவிட்ட மறை விடயங்களினின்றும் ,அதன் உண்மைத்தன்மையினாலும் ,சமிப வரலாற்று நிகழ்வுகளானாலும் பீய்த்துக்கொண்டு வெளிவருகின்றது.நமது மாந்தரின வரலாறு.


உண்மையில் அன்பானவர்களால் நிறைந்திருந்த நமது நாடு காலத்தின்  சுவடுகளால் நசுக்கப்பட்டு ,இன்று பாதங்களை விட பார்வையே முக்கியம் என்ற உன்னத நிலைக்கு உந்தப்பட்டு வரலாற்றை முடுக்கவேண்டிய நிலையில் பாய்ந்து பறந்துகொண்டிருக்கிறது.









சில சிற்பாக்கள்

.

.






வரலாறும் 
உண்மையும் .
இங்கு எரிமலைகள் மட்டும் வெடிப்பதில்லை.



.

.











இறந்தது
வீழும் .
கல்லறை மலர்கள்.



.


.






ஓவியங்களும் உண்மை சொல்லும்.


















.
Download As PDF

சனி, 28 ஜனவரி, 2017

இப்படித்தான் பாவப்பட்ட ஆமைகள் இறப்பதாக நீதி.



 // உனது ஆதிக்க சக்திக்கு கட்டுப்பட்டு வாழ
எனக்கு சிறிதும் விருப்பமில்லை. அதோடு என்னை ,எனது இயல்புக்கு மாறாக மாற்றிய உன்னையும் சும்மா விட மனமும் இல்லை . அதனால் தான் எனது இயல்பை வெளிப்படுத்தினேன் .
இதில் தவறென்ன இருக்கிறது.சில நிமிடங்கள் வாழ்ந்தாலும் நான் நானாகவே வாழ விரும்புகிறேன் , அதனால் ...//





கடுமையான விடம் கொண்ட தேள் ஒன்று
பெருமழையினால்
எதிரேயுள்ள ஆற்றை கடந்து வாழ எண்ணியது.

அதனால் ஆற்றை கடக்க இருந்த ஆமை ஒன்றை தன்னை ஏற்றி ஆற்றைத்தாண்டி அழைத்து செல்ல வேண்டியது .

அதற்கு 'மாட்டேன்...நீ என் முதுகில் சவாரி செய்யும்போது என்னை கொட்டி விடுவாய்.அப்படி நிகழ்ந்தால் நான் இறந்துபோவேன்' என்றது ஆமை.

அதற்கு தேள்,'உன்னை நான் கொட்டினால் நீ இறப்பாய் ,அதனால் நீரீல் மூழ்கிப்போவாய் அப்போது நானும் முழுகி இறந்துவிடுவேன் அல்லவா' என்றது.

ஆமை தேளை ஏற்றி ஆற்றை கடக்க ஆரம்பித்தது.

பாதி தொலைவில் தேள் ஆமையை கொட்டியது.

ஆமை,ஏன் கொட்டினாய்,இது எந்த விதத்தில் சரி என கேட்டது .

அதற்கு தேள், 'நீ  கேட்பது தான் எனக்கு புரியவில்லை.
எனது குணம் கொட்டுவது.அதை மாற்றச்சொன்னது உனது ஆதிக்க மனோபாவம்.நானும் உனது ஆதிக்க வார்த்தைக்கு கட்டுப்பட்டு
வாழும் ஆசையில் இந்த ஆற்றை உன் நிபந்தனையில் கடக்க சம்மதித்தேன் .

பிறகு தான் யோசித்தேன் .

உண்மையில் என்னால் ஆற்றை கடக்கமுடியாது தான் .நான் தனியாக யாரின் துணையுமின்றி ஆற்றை  கடக்க முயற்சித்திருந்தாலும் ஆற்றில் மூழ்கி இறந்து தான் போயிருப்பேன் .கடக்காமல் இருந்திருந்தாலும் பெருமழையால் இறந்து தான் போயிருப்பேன் .ஆனால்,நான் இறந்து விடுவேன் என்பதற்காக உனது ஆதிக்க சக்திக்கு கட்டுப்பட்டு வாழ எனக்கு சிறிதும் விருப்பமில்லை. அதோடு என்னை ,எனது இயல்புக்கு மாறாக மாற்றிய உன்னையும் சும்மா விட மனமும் இல்லை . அதனால் தான் எனது இயல்பை வெளிப்படுத்தினேன் .இதில் தவறென்ன இருக்கிறது.சில நிமிடங்கள் வாழ்ந்தாலும் நான் நானாகவே வாழ விரும்புகிறேன் , அதனால் கொட்டினேன் 'என்றது .

நான் செய்தது உதவியில்லையா என்றது ஆமை .

நான் எதற்காக பயணம் செய்கின்றேன் என கேட்காமல் ,ஆற்றின் ஆபத்தையும்,அக்கரையின் தன்மையையும் கூறாது.என்னால் ஆபத்தில்லை என்ற உத்திரவாதத்தை மட்டுமே பெற்று அழைத்துச்சென்ற நீ,இதை எப்படி உதவியென்கிறாய் ,நீயும் ஆற்றை கடக்கத்தானே இருந்தாய் என்றது தேள் .

அப்பொழுது வந்த பெருவெள்ளம் இருவரையும் மூழ்கடித்தது .


இப்படித்தான் பாவப்பட்ட ஆமை இறக்கின்றன.


இப்படித்தான் பாவப்பட்ட ஆமைகள்  இறப்பதாக நீதி.
.   
Download As PDF

வியாழன், 26 ஜனவரி, 2017

எதிர்மறை எண்ணங்கள் .







எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறையாய் வரும்பொழுது
எதிர்மறையில் சில எண்ணங்கள்
எழாமல் இருப்பதில்லை.

வளைந்து வளைந்து
பாதை சென்றாலும்
பாதை பாதையினின்று
வளைந்து சென்றதில்லை .

வளமான பாதையில்
சுழல நினைத்தாலும்
சுழலும் பாதையில் சுகம்கண்டதால்
வளமான வாழ்விற்கு வக்கில்லை.

எப்பொழுதும் எல்லோர்க்கும்
எப்பொழுதும்  வாய்ப்பதில்லை
எப்பொழுதென்பது  எப்பொழுது என்றாலும்
எப்பொழுதென்பது  எப்போதும் இங்கில்லை.

சோக ரேகை
மனதினில் தோன்ற
சோம்பல் ரேகை
முகத்தில் தொலைவதில்லை .

மறக்கும் எண்ணம்
நினைவினில் தோன்ற
நினைக்கும் எண்ணம்
மறப்பதை தொலைப்பதில்லை.

எதற்காகவோ வாழ்வு என்றாலும்
எதற்காக வென்பதே
நமக்காகும் போது
நமக்கா வென்பது ஏதும் இங்கில்லை.

இல்லை யென்பது
இங்கில்லை யென்றாலும்
இல்லை இல்லாமல்
இங்கொன்றும் இல்லை .

எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறை யென்றாலும்
எதிர்மறை எண்ணங்கள்
எண்ணாமல் முடிவதில்லை.

எப்படி யென்றாலும்,

எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறையாய் வரும்பொழுது
எதிர்மறையில் சில எண்ணங்கள்
எழாமல் இருப்பதில்லை.



Download As PDF

வியாழன், 12 ஜனவரி, 2017

புத்தரை எனக்கு ஏன் பிடிக்கும் .

மிகவும் மென்மையாக ,அழகாக  எழுதப்பட்டது
புத்தரின் வரலாறு.

மிகவும் திட்டமிடப்பட்டு எழுதப்பட்டதால்
மிகமிகநாகரிகமான நயங்கள் அவற்றில் காணப்படும்.


''Paul Carus'' எழுதிய
''THE GOSPEL OF BUDDHA'' என்னும்
''புத்தரின் புனித வாக்கு'' என
''மு.கி.சந்தானம்'' அவர்களின் தமிழாக்கத்தில்
இந்திய அரசு வெளியிட்ட நூல் .
அப்படியானவைகளில் ஒன்று

அதனின்று சில பகுதிகள் ...

அவருடைய கணவனாகிய அரசன் .அரசியரின் புனிதத்தன்மையுடன் விளங்கும் சமயத்தில் அவரை கௌரவித்தார் ...
(இளவரசர் சித்தார்த்தர் புத்தர் ஆகிறார் -4.போதிசத்துவரின் பிறப்பு -3-பக்கம் 11 )
எவ்வளவு நயம் பாருங்கள் எழுத்தில்.

''சாம்ராஜ்யம் அவரை நாடி வரும் .ஒன்று இவர் புவியாளும் ராஜாதி ராஜாராக ஆவார்.அல்லது உண்மையில் புத்தராக ஆவார் ''.
( இளவரசர் சித்தார்த்தர் புத்தர் ஆகிறார் -4.போதிசத்துவரின் பிறப்பு -21-பக்கம் 15 )

கடைசி புத்தர் என்னும் முன்முடிவை பக்குவமாக இயம்பியுள்ளதை பாருங்கள் .

இளவரசருக்கு அரசர் கொடுத்திருந்த மாளிகை அனைத்து சொகுசுகளும் நிறம்பப் பெற்றிருந்தது ...-1
துயரங்கள் சித்தார்த்தரை வந்தடையாது இருந்தால் தான் இளவரசருக்கு உலகின் துயரங்கள் இருப்பது அறியாமல் போகும் என்று நம்பினார் -2
ஆனால்,சிறைப்பிடிக்கப்பட்ட யானை காட்டு வாழ்வுக்கு ஏங்குவது போன்று இளவரசருக்கு வெளி உலகைக்கண ஆசைப்பட்டார் -3
சுத்தோதனரும் நான்கு கம்பீரமான குதிரைகள் பூட்டப்பட்டு நகைகளால் ஜொடிக்கப்பட்ட தேரை சித்தம் செய்து இளவரசர் செல்லும் சாலை முழுவதையும் அலங்கரிக்கச் செய்தார்-4
அதன்படி நகரின் வீடுகள் எல்லாம் திரைச்சீலைகளாலும் பதாகைதோரணங்களாலும்,அழகுபடுத்தப்பட்டன.பார்வையாளர்கள் சாலை இரு மருக்கிலும் நின்று தங்களது அரசருக்கு வாரிசான இளவரசரைஆவலுடன்எதிர்கொண்டுஅழைத்தனர் .சித்தார்த்தரும் தமது தேர்ப்பாகன் சன்னாவுடன் நகரின் வீதிகளிலும்,நீரூற்றுக்களாலும் கண்ணிக்குஇனியமரங்களாலும் நிறைந்த புறநகர் பகுதிகளிலும் தேரில் வலம் வந்தார்-5
(இளவரசர் சித்தார்த்தர் புத்தர் ஆகிறார்-6.மூன்று துயரங்கள்-1-5 -பக்கம் .18,19)

இது வரை சரியாக இருந்தது .
காட்சி உடனே மாறுகிறது

''அவ்வாறு வலம்வரும் பொழுது வழியில் கூன் விழுந்து,முகத்தில் சுருக்கம் ஏற்பட்ட ,கவலை தோய்ந்த பார்வையை உடைய முதியவர் ஒருவரை சந்தித்தார் ...''
(இளவரசர் சித்தார்த்தர் புத்தர் ஆகிறார்-6.மூன்று துயரங்கள்-6 -பக்கம்.19)
மேலும் முன்னேறுகையில்,வழியில் வயதான ஒருவர் தென்பட்டார்.அவர் உடல் உருக்குலைந்தவராக வலியால் துடித்து அவதிப்பட்டு மூச்சுவாங்கிக் கொண்டிருந்தார்.-9
பிணத்தைச் சுமந்து கொண்டு நான்கு பேர் எதிர்ப்பட்டனர் ...-13
(இளவரசர் சித்தார்த்தர் புத்தர் ஆகிறார்-6.மூன்று துயரங்கள்-9,12 -பக்கம்.21)

இவ்வாறு செல்கிறது ...

'' இந்த விசயம் அவருக்கு தெரியாது அதனால் தான் இப்படி''.
'தலைவி நாலேசுக்கே எதுவும் போகரதில்ல ,அவங்க நாலேசுக்கு போச்சுனா கட்சி இன்னேரம் எப்படி இருக்கும் தெரியுமா ?' .
'தலைவருக்கு மட்டும் இது தெருஞ்சதுனூ வச்சுக்க பிச்சிடுவாறு பிச்சு' .
'அய்யாகிட்ட இத சொல்ல வேண்டாம் .அவருக்கொல்லாம் இதுக்கு நேரமில்லப்பா நான்  முடிச்சுத்தாரேன்'.
'அடடா,ஏப்பா இத என் கவனத்துக்கு கொண்டுவல்ல .சரி ,இனி நான் பாத்துக்கரேன் '.

நிறையா இடங்களில் இப்படியான வார்த்தைகளை கேட்கும் போதெல்லாம் எதற்காக அவர்கள் அங்கிருக்கின்றார்கள் என்ற எண்ணம் தோன்றும் .

ஆழ்ந்து யோசித்ததில் ...

காந்தி ,சே போன்றோர் மக்களை நேரடியாக சந்தித்தனர் .சந்தியில் .அதனால் தான் அவர்களுக்கு மக்களின் உணர்வுகள் புரிந்தது .

அப்படி இல்லாதவர்களால் மக்களை நேசிக்க முடியாது .
நேசிப்பதாக சொல்லதெல்லாம் வெறும் பேச்சே .

//நகரின் வீடுகள் எல்லாம் திரைச்சீலைகளாலும் பதாகைதோரணங்களாலும்,அழகுபடுத்தப்பட்டன.// என்ற முன்னேற்பாட்டுடன் சென்ற புத்தர் மூன்று துயரங்களை புத்த கதைகள் கூறியபடி தேரில் சென்று சந்தித்திருக்க வாய்ப்பில்லை .
அதுவும் ஒரே நாளில் .
இவை மிகைப்படுத்தப்பட்டுள்ளது ,
எனினும் புத்தர் மக்களை தனியாகவே சந்திந்திருக்கின்றார் என்பது தான் உண்மை .எது எப்படி என்றாலும் புத்தர் மக்களை நேரில் சந்தித்துள்ளார் .பல நாட்கள் பல இடங்களுக்கு சென்றிருக்கின்றார் .இளவரசராக இருந்துகொண்டு. ஆனால்,அரசு அதிகாரமின்றி .
தனக்கு இவ்வுலகின் இயல்பான வாழ்க்கையை ஆடம்பரம் என்னும் மறைப்பின் மூலம் அதிகாரம் தனிமைப்படுத்துகிறது என்பதனை உணர்கிறார் .பிறகு அவர் தனது பயணத்தை ஆடம்பரம்,அதிகாரம் இன்றி தொடரவிரும்பி இயற்கையுடன் இயைந்த மனித வாழ்வை நோக்கி நகர்கின்றார்.

மக்களையும் அந்த நகர்வை நோக்கி அழைத்தார் .
அதனால் இவர் மக்களுடன் ஐக்கியமாகி விட மக்களும் இவருடன் ஐக்கியமானார்கள் .

இந்த ஐக்கியமான நகர்வுதான் புத்தரிடம் எனக்கு பிடித்தது.
...



. . .



Download As PDF

திங்கள், 9 ஜனவரி, 2017

இது படிக்காதவர்களுக்கு மட்டும் - சிறுகதை














டிஸ் காம்பஸ் சிறுகதை -புனைவு.


.
.
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள்
அவர்கள் அரசனை,
எங்கள் தலைவனை
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள்
நாங்களும் அப்படித்தான்
இருந்து வந்தோம்
காடுகளும், மலைகளும்
எங்கள் இருப்பிடமாக
வனாந்திரம்
எங்கள் வசத்தில் இருந்தபோது
நாங்களும் அப்படித்தான்
இருந்து வந்தோம்.
கடுமையான போட்டிக்கு இடையே
அவரவர் உணவை அவரவர் தேடி
சூரிய ஒளிக்குள் சுழன்று கொண்டு
உலகம் முழுவதும் ஓரினமாக
தேடும் உணவை பகிர்ந்து கொண்டு
சேகாரம் செய்யா சேர்ந்தினமாக
உணவுத் தேடலே வாழ்வுரிமையாக
நாங்களும் அப்படித்தான்
இருந்து வந்தோம்
அவர்களுடைய அரசன்
எங்களின் தலைவனாகும் வரை.
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள்
காட்டு வழியே ஓடி கடல் கடந்து
மிளகு விளையும் தேசம் நோக்கி சென்ற
அவர்களின் அரசனை
எங்களுடைய தலைவனை
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள் ....

என்ற பழங்குடிகளின் பழம் பாடல் காலம் காலமாக மலைகள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.இன்றும் அவர்களின் வாய்கள் அவற்றை முணு முணுத்துக் கொண்டே இருக்கிறது என்று ஆரம்பித்தது என்று தெரிந்து கொண்டாலும் எப்போது முடியும் தெரியவில்லை. காரணம், ஈடிபஸ் கண்டுபிடிக்க முடியாத இடம் நோக்கி சென்றுவிட்டான். அவனை கண்டுபிடிக்க உதவும் ஒரு சிறு தகவல்தான் மேற்கூறிய பழங்குடிகளின் உள்ள குமுறல்…


ஈடிபஸ் தனது குதிரையின் மூலம் தீப்ஸிலிருந்து நகருகிறான்.எவ்வளவு நேரம், தூரம் ஓடியது என்று தொரியவில்லை.கண்குழியில் அதிக வலி எடுக்கவே குதிரையை நிறுத்தினான்.குதிரையை மட்டுமே உதவியாக கொள்ள வேண்டியிருப்பதால் அதனது எண்ணத்திற்கு அதிக மதிப்புகொடுத்தால் தான் மீண்டும் பயணிக்கமுடியும் என்பதால் குதிரைக்கு ஓய்வு கொடுக்கஎண்ணி குதிரையில் இருந்து இறங்கி அமர்ந்தான்.கைகளாலே மெல்ல மெல்ல இடத்தின் தன்மையைஆராய்ந்தான்.கைகளை அங்கும், இங்கும் போட்டுதுலாவினான். அவன் நினைத்ததுபோலவே நடந்துவிட்டது.ஆம், தடி ஒன்று கிடைத்து விட்டது.அதன் உதவியுடன் இடங்களை துலாவ ஆரம்பித்தான்.தடி ஏதோ சலசலப்பை ஏற்படுத்த அதை நோக்கி நகர்ந்தான்.ஒரு செடியினைக் கைப்பற்றினான்.என்ன நினைத்தான் என்று தெரியவில்லை.வேக வேகமாக அதன் இலைகளை பறித்து கண் குழிகளில் கசக்கி அப்பிக் கொண்டான். சற்று இதமாக இருக்கவே மீண்டும் சில இலைகளை சேகரித்து நன்றாக கசக்கி சாறு பிழிந்து கண் குழிகளில் ஊற்றினான்.கண் குழிகளில் குளுமை தெரியவே ஆனந்தமாக அப்படியே செடியை ஒட்டியே படுத்துக் கொண்டான்.அதிகம் பயணித்த களைப்பில் அயர்ந்துவிட்டான்.


பறவைகள் சத்தங்கள் கேட்டு எழுந்தான் ஈடிபஸ் . பறவைகளின் சத்தம்  கேட்டுக் கொண்டு இருக்கவே பகல்பொழுது என்று உணர்ந்து தன் கையில் கிடைத்த தடியை மட்டும் துழாவி எடுத்தான். அதன் உதவியினால் மெல்ல எழுந்து தடியை தட்டி தட்டி நடக்க ஆரம்பித்தான்.குதிரையை கூப்பிடும் ரகசிய மொழியில் குதிரையை அழைத்தான்.குதிரையிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் கையிலுள்ள தடியினை அங்கும் இங்கும் வேகமாக ஆட்டினான். எதிரில் எதுவும் இல்லை.குதிரை தன்னை பிரிந்து சென்றுவிட்டது என்று யூகித்துக் கொண்டான்.இனிமேல் குதிரையை நம்பி பிரயோஜனம் இல்லை என்று கவலையுடன் நொந்து அமர்கின்றான்.பிறகு குச்சியின் அளவிற்கு வேகமாக நடப்பது என்ற முடிவுக்கு வருகின்றான்.நீண்ட தொலைவிற்கு பிறகு அவனால் எதையும் அடையமுடியவில்லை.பறவைகளின் இரைச்சல் மட்டும் அடங்கிக் கொண்டு இருந்தது.ஒரு கணக்கிற்கு வர ஆரம்பித்தான்.பறவைகளின் இரைச்சலிலிருந்து பறவைகளின் இரைச்சல் வரை நகர்வது என்று முடிவு செய்தான்.களைப்பின் காரணமாக அமர்ந்தான்.கையில் ஏதோ தட்டுப்பட அதனை எடுத்து முகர்ந்தான்.அது ஒரு பழம். உற்சாகமானான்.பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது . உடனே உண்ண ஆரம்பித்தான்.அங்கேயே அயர்ந்துவிட்டான் . மீண்டும் பறவைகளின் ஒலியில் எழுந்தான்.பசி எடுக்கவே உண்டது ஞாபகம் வந்தது. பழத்தின் மரம் பக்கத்தில்தான் இருக்க வேண்டும் என்றஆவலில் குச்சியின் உதவியுடன் ஒரு மரத்தை கண்டுபிடித்தான் . தான் கண்டுபிடித்த மரம் தவறானது என்று மரத்தில் ஏறிய பின்பு உணர்ந்து பல முயற்சிக்கு பிறகு உண்மையான மரத்தினை கண்டு கொண்டான்.அங்கேயே இருக்க முடிவு எடுத்தான்.

பொருளற்ற,ஆள் அம்புகளற்ற,உறுப்புகளற்ற ஈடிபஸை அவன் நினைத்துப் பார்க்கிறான்."ஓ" வாழமுடிகிறதே! .எப்படி? எப்படி? இவைகள் இல்லாமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது என்ற நினைப்பில்தானே வாழ்ந்துவந்திருக்கிறேன். அநேக உயிர்களையும், பொருட்களையும் அழித்தேன். அநேக போர்களை நான் மேற்கொண்டேன். அப்போது ஏன் தெரியவில்லை? தெரிந்திருந்தால், மிக நல்ல வாழ்க்கை வாழ்ந்து மக்களுக்கும் அமைதியையும், ஆனந்தத்தையும் தரும் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருப்பேனே. இப்போது நான் யாருக்கும் அரசன் இல்லை.இனி எனது வாழ்விற்காக யாரின் உழைப்பையும் சுரண்ட மாட்டேன், முடியவும் முடியாது . இருந்தாலும்,என்னால் முன்னைவிட பிரச்சனைகளற்ற வாழ்க்கையை இப்போது வாழ முடிகிறது. இருந்தாலும் தான் முன்பு அறியாது இருந்ததுபோல், இன்னும் தன் நாட்டிலும், வெளியிலும் மனிதர்கள் அறியாமையில் உள்ளனர். அவர்களுக்கு நான்தான் வழிகாட்ட வேண்டும் என்று உரக்கச் கூறிக்கொண்டான். வழிகாட்ட வேண்டும் என்ற ஆசையுடன் தன் நாடு நோக்கி பயணம் மேற்கொண்டான். தனது நாட்டிற்கு எதிர் திசையில் தான் பயணம் செய்கின்றோம் என்பதனை அறியமாட்டாமலேயே. அவன் மட்டும் சரியான பயணத்தை மேற்கொண்டிருந்தால் தீப்ஸ் மீண்டும் மிக நல்ல ஒரு அரசனை பெற்றிருக்கும்.

தீப்ஸிலிருந்து கிட்டதட்ட 500 கிலோ மீட்டருக்கும் அதிக தொலைவிலுள்ள ஒரு மிகப் பெரிய மலை முகடென்பது அவனுக்குத் தெரியாது அவன் அடைந்துள்ள இடம். பறவைகள், ஊர்வன, விலங்குகள் ஆகியவற்றின் நகரும் ஓசைகள், அண்மையில் ஏற்படும் வாசனைகள்,இடத்தினை பற்றிய படிப்பினை ஆகியவற்றை அவன் இப்பொழுது நன்றாக அறிந்து கொண்டான். சில சமயம் பலமாக தாக்கப்பட்டான் மிருகங்களால். மிருக வெறி கொண்டு தட்டுத்தடுமாறி போரிட்டான். ஓடினான், காயமுற்றான், தடியாலடித்து துரத்தினான், கையிலிருந்த தடியை மட்டும் எச்சூழ்நிலையில் தவறவிட்டதில்லை. அதுதான் அவனுக்கு வழிகாட்டியாகவும்,ஆதாரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. தடியைப் பற்றி அவனின் கருத்து இப்படித்தான் இருந்தது."மனிதன் வாழ்வதற்கு தன்னை தவிர்த்து பிற ஒன்று தேவை.அது அதிகமாக அதிகமாக மனிதன் அவற்றிற்கு அடிமையாகின்றான்.தடி எனது வழிகாட்டி.நான் அதனை பின்பற்றுகிறேன்.இப்பொழுது நானும் அடிமையே.உயிரற்ற ஒன்றுக்கு".

மிருகங்களிடம் ஏற்பட்ட போரினால் தடியில் ஆங்காங்கு இரத்தக் கரைகள் அப்பிக் கொண்டன. அவைகள் அத்தடியினை சிவப்பு நிறத்தில் பளபளக்கச் செய்தது. அவனின் உடம்பில் மிகச் சிறந்த வீரத்தழும்புகள் ஏற்பட்டிருப்பதாக உணருகிறான்.எவ்வளவோ மருத்துவர்களின் உதவியுடன் போர் களத்தில் ஏற்பட்ட புண்களை மருந்துகொண்டு குணப்படுத்த முடிந்தாலும், அதிக வலியும், ஆற அதிக நாட்களும் ஆகும். ஆனால் இங்கு புண்கள் ஆற தான் ஏதேதோ தளைகளைமட்டும் தடவிக் கொண்டாலும் உடனே குணமாகிவிடுகிறதே என வியந்தான்.

நீரோடைகளின் சலசலப்பு,மலைகளின் கலகலப்பு பள்ளத்தாக்குகளின் கலகலப்பு,ஆற்றின் சலசலப்பு,அடர்ந்த காடுகளின் குளுமை,விலங்குகளின் குரல்,அவைகளின் அசைவுகளினால் ஏற்படும் சலசலப்பு ஆகியவற்றை துல்லியமாக கணிந்து ஒவ்வொன்றுக்கும் சரியான தீர்வை வைத்திருந்தான்.
காற்று வாசனைகளை கடத்துகின்றது.அதன் மூலம் அருகில், தூரத்தில் உள்ளதை உணர முடிகிறது.காற்றின் சலசலப்பினால் தம்மைச்சுற்றி உள்ளவைகளின் நிலைகளை தெளிவாக தெரிந்துகொள்ளமுடிகின்றது.காற்றின் அசைவினால்தான் இவைகளனைத்தும் சாத்தியம்.காற்றே அனைத்திற்கும் ஆதாரம் என்று கூறிக்கொண்டான்.இப்போ தான் தன் உணவுக்காக அலையவும் இல்லை,நீரை தேக்கி வைப்பதும் இல்லை,உடையை பற்றி பிரச்சனையும் இல்லை,வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதே என்று நினைத்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டான்.

மீண்டும், மீண்டும் தீப்ஸை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டான்.ஆனால் தற்பொழுது தனக்கு எவ்வளவு ஆனந்தம் அவனுக்கே வியப்பை அளித்தது.தான் தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்ற நினைப்பு வந்தது.இன்னும் எவ்வளவு தூரம் என்ற நினைப்புடன் தீப்ஸிலிருந்து அதிக தூரம் விலகி கொண்டிருந்தான்.மனித வாடையே இதுவரை அவனுக்கு தென்படவில்லை.

நேரம், காலம், நாள் எல்லாம் அவனுக்கு அப்பொழுது புரிபடவில்லை. இப்பொழுது அனைத்தும் மனிதனை கட்டுப்படுத்தும் தண்டனைச் சட்டங்களாகவே நினைத்தான்.அவை அனைத்தும் பொய் என முடிவுக்கு வந்தான்.இது நாமே நமக்காக போட்டுக்கொண்ட விலங்கு என்பதனை கொஞ்சம், கொஞ்சமாக தனது கருத்தாக உருப்பெறச் செய்து கொண்டான்.தான் தீப்ஸிலிருந்து பொழுது முழுக்க முழுக்க மூடத்தனத்திலும், மூட பழக்க வழக்கங்களிலும் இருந்ததை எண்ணிப்பார்க்கிறான்.

எப்படித்தான் நூறு சதவீதம் மூடப்பழக்கத்தில் வாழ முடிந்தது நம்மால்? .வாழ்ந்தும்தானே இருக்கின்றோம்.நானே இப்படி என்றால் மற்றவர்களும் அப்படித்தானே.என்ன வாழ்க்கை,மூட பழக்க வழக்கங்களிலே பிறந்து, வாழ்ந்து, மடிவது.எல்லோரும் அப்படித்தானே.யார் இதற்கு முடிவு கட்டுவது.மிகவும் கடினமான செயல்தான்.இருந்தாலும் இனியும் தான் மூடத்தனத்தை ஒழிக்க பாடுபடாவிட்டால் நான் மனித குலத்திற்கு உதவி செய்யாதவனாகி விடுவேன்.

மத நம்பிக்கைகள், மதக் கோட்பாடுகள் எப்படி மனிதனை மூடனாக, மடையனாக, முட்டாளாக மனிதனை வைத்திருப்பதுடன் சிந்திக்கக்கூடாத சூழலையும் வருவாக்கி, சிந்திக்க முடியாதவனாக முடமாக்கி வைத்துள்ளது.பிறந்தால், இறந்தால், நோயுற்றால், குணமானால், நின்றால், நடந்தால், பார்த்தால், பேசினால்,உறங்கினால், விழித்தால், சிந்தித்தால், கண்டால், எழுதினால், பறவை பறந்தால், விலங்கு பார்த்தால், படித்தால், பழகினால், சுத்தமாக இருந்தால், அசுத்தமானால் எது செய்தாலும் பகுத்தறிவற்ற செயலிலல்லவா மக்கள் வாழ்கின்றனர்.

பகுத்தறிவுடன் யாரும் சிந்திப்பதில்லையே பகுத்தறிவுடன் சிந்திப்பதே முட்டாள் தனமாக,மூடத்தனமாக மனித
குலத்திற்கே கெடுதி செய்ய வந்ததாக அல்லவா நினைத்து வாழ்ந்து வந்துள்ளோம்.நான் மட்டுமா,என் மக்களும் ,அண்டைமக்களும்,அரசர்களும் அப்படித்தானே.என்ன வான் ஒலி,மனிதனை மன நோயாளியாக்கி பேசும் பேச்சல்லவா இது.நான் எப்படி இதனை ஏற்றேன்."ஓ" அனைவரும் என்னை ஏமாற்றிவிட்டனர்.அரசனையே ஏமாற்றும் அளவிற்கு பாதுகாப்புடன், பத்திரமான இடத்தில்ல்லவா மூடப்பழக்க வழக்கங்கள் உள்ளன.

பகுத்தறிவு எங்கே? .ஓரிடத்திலும் இல்லை….இல்லை. பகுத்தறிவதற்கு மனிதன் தன் நிலை பற்றி சரியாக புரிந்து, அறிந்து கொள்ளாததே, விரும்பாததே காரணம்.நான் அதற்கு மிகச் சிறந்த விடையை அளிக்க வேண்டும். காமம் அனைத்திற்கும் பொதுவானது.கற்பு என்பது பொய்.மனிதர்கள் உணவை மையமாக கொண்டே வாழ்கிறார்கள்.வாழ்க்கை என்றால் என்ன என்று அவர்களுக்குத் தெரியாது.உண்பது, உடுப்பது, பொழுது போக்குவது மட்டுமே வாழ்க்கையாக நினைத்து வாழ்கின்றனர்.ஏன், எனக்கே தெரியாமல்
இருந்ததே.நான் இந்த அறிவை அடைந்தது எதனால். காதுகளை நன்றாக பயன்படுத்தியதால் அல்லவா? நானே தான் எனது ஆட்சியை இழந்தேன்.ஐயோ என்னை நானே ஏமாற்றிக் கொண்டேனே.மூடப் பழக்கத்தினால் முடமானேனே என்று ஓங்காரத்துடன் கத்தினான்.காடுகளும், மலைகளும் ஒரு நிமிடம் ஆடி அதிசயித்தது.

"ஏ ஈடிபஸின் கையிலுள்ள நன்னெறி காட்டும்.நல்வழி காட்டும் தடியே உலகில் அதிகமான மூடப் பழக்கவழக்கம் மற்றும் மனிதனை மனிதனாகநினைக்காத தேசம் ஒன்று உண்டு என்றால் அது நோக்கி என்னை அழைத்துச் செல்.நீதான் எனக்கு வழிகாட்டி.உன்னைத் தவிர எனக்கு வேறு துணையில்லை"
என்று கூறி தனது கையிலுள்ள தடியினை, தனது தலைக்கு மேல் உயர்த்தி பிடித்து நின்ற இடத்திலிருந்து கரகரவென்று சுழன்று நின்றான். அவன் கையிலிருந்த தடி இந்திய துணைக்கண்டம் இருந்த திசையை நோக்கி காட்டியது.அத்திசை நோக்கி நகர்ந்தான்.

மல்யுத்தக்கலத்தில் மிகப்பெரிய மல்யுத்தம் நடக்கிறது.வெற்றி பெருகின்றான் ஈடிபஸ்.பழங்குடிகள் ஆரவாரத்துடன் ஈடிபஸை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.அவர்கள் நீ யார். எங்களுக்கு கூறு.ஒன்று நீ வீரனாக இருக்க வேண்டும்,அல்லது அரசனாக இருக்க வேண்டும்.அதில் நீ யார்? என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே இரந்தனர்.ஈடிபஸ் எங்கள் ஊரில் அனைவரையும் ஏமாற்றும் கதை ஒன்று உண்டு.அதுதான் என்னைப் பற்றிய நீங்கள் கேட்கும் கதை.ஆனாலும்...என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று கூறி
தனது கைகளை உயர்த்தி காண்பித்து  எனக்கான பாதை இதோ தெரிகிறது,எனது கை வழியாக உங்களுக்குத் தெரிகின்றதா என்றான்.பழங்குடியினர் அவனது கையிலுள்ள தடியிலிருந்து கோடு ஒன்று கிழக்கு நோக்கிச் செல்வதை பார்த்ததாக கூறி தங்களுக்குள் வியக்கின்றனர். சூரியன் மேற்கில் பிரகாசமாக இருக்கின்றான்.

எங்கள் ஊரி்ல் ஒரு பொய் உண்டு.அது என்னைப் பற்றியது.அரச வாழ்வு பற்றி தவறான ஒன்று நிலவி இனி உலகில்
அரசாள விரும்புபவர்களுக்கு அதுவே உதாரணமாக இருக்கும்.அரசர்கள் அனைவரும் கொடூரன்களாகவே காண்பிக்கப்படுவர்.ஆனால், உண்மையில் அவர்கள் அவனைவரும் அப்படிப்பட்டவர்கள் அல்ல.போரில் அனைவருக்கும் முன்னே அரசன் தான் சாகின்றான்.படைகள் சிறிது பின்வாங்கினாலும் சிதறிய படைகளில், சேர்ந்த புதியவர்கள் எதிரியின் கையாட்களாக மாறி முதலில் கொல்ல நினைப்பது தனது முன்னாள் அரசனைத்தான் என்பதை நான் அனுபவப்பூவமாக உணர்ந்தவன், ஒன்றல்ல இரண்டல்ல பல போர்களில். வெற்றி பெறபவனே அரசன்.போர் என்றால் உண்மையில் சாவுக்கும், வாழ்வுக்குமான சரியான எல்லைக்கோடு அல்ல.ஒருவன் இயல்பாக சாவதையே இயற்கை விரும்புகிறது.ஆனால் அரசர்களோ போரில் சாவதையே மிகவும் விரும்புகின்றனர்.உண்மையில் வீரம் என்பது போரினில் கிடையாது.அனைத்தும் கோழைத்தனமான தந்திரங்களே. போரில் யார் யார், எதை எதைச் செய்ய வேண்டும் என தீர்மானித்து இயங்குகின்றோம். ஆனால் வெற்றி யாரிடமிருந்து வருமென யாருக்கும் தெரியாது.சில சமயம் வெற்றி பெற்றுள்ளோம் என்ற பிரச்சனை இல்லாமல் தங்களை மாய்த்துக்கொண்ட கோழைகளை போர்க்களத்தில் பார்த்துள்ளேன்.

மக்களை காப்பவன்,மக்களை காக்க மனிதர்களை கொன்றுதான் சாத்தியமென்றால் அது காட்டுமிராண்டித்தனமானது. ஒரு கோடிகோழைகளை  காக்க பல்லாயிரம் பேர் இறக்க வேண்டுமென்றால் அது முட்டாள்தனமானது.
தாங்கள் மடிவோம் என்ற உறதியுடன் போருக்கு புறப்படுபவன்
தாங்களால்  காக்கப்படுவது , தங்களால் வாழப்பார்ப்பது் கோழைகள் என்பதை அறிந்தால் உண்மையில் அவன் போர்க்களத்திலிருந்து வெளியேறி விடுவான்.வீரம், வீரத்திற்காக மடியுமிடம் போர்க்களமல்ல என்பதால் போரை வெறுக்கிறேன்.நான் தனியாளாக நின்று பலரை கொன்றிருக்கிறேன்.ஆனால் நாடு, நான் வென்றதாக கூறி தன்னை எனது பாதத்தில் வைத்து பிறகு தீப்ஸின் மூடசதிகாரர்களின் வலையில் மாட்டி சதிகாரர்களால் நாட்டின் காலடியில் தள்ளப்பட்டேன்.

உண்மையில் அரசர்கள் பாவம் செய்தவர்கள்.
மன்னிக்க முடியாதவர்கள்.மன்னிக்க முடியாத செயல் செய்தவர்கள். அரசர்கள் அவர்களுக்கு கிடைத்ததை அவர்கள் அனுபவித்தார்கள்.அவர்கள் அனுபவிப்பதற்காகவே சிலர் அவர்கள் விரும்பியதை தாங்களே விரும்பி அனுபவிக்க கொடுத்தார்கள்.இதில் ஒளிவு எதுவும் இல்லை.உண்மையில் பல சமயங்களில் விருப்பமில்லாமலும் அவர்கள் சிலதை அனுபவிக்கும்படியும் ஆனது.விரும்பிய சில சமயம் வன்முறையில் முடிந்தது. அப்படி விரும்பியவன் எவனொ அவனுக்கு சாவுமணி அடித்தார்கள்.அரசர்களுக்கென்று
சொந்த சொத்தும் கிடையாது. தனி சுகம் என்பதும் கிடையாது.அனைத்தும் மக்களுடையது, அனைத்தும் மக்களுக்கானது,மக்களால் அவர்களைக் காத்துக்கொள்ள அவர்களால் ஒருபோதும் முடியாது என்பதாலேயே அரசனை அவர்கள் நம்புகின்றார்கள்.ஈடிபஸ் மயங்கி விழுந்தான்.

ஒரு பறவைகளின் இரைச்சல்கள் அதிகமானதருணம் தீப்ஸின் போரிகையின் சப்தம் கேட்டு அதிசயித்தான். ஒரு பழங்குடியினை அழைத்து கேட்டான். அவன் ஏதோ தெரியவில்லை. மிகப் பெரிய உருவங்களில் மனிதர்கள் நகர்ந்து வருகின்றனர் என்றான். ஈடிபஸ் உணர்ந்து கொண்டான். தீப்ஸ் மக்கள் தன்னைத் தேடி வருகின்றனர் என்பதனை. அவர்களைப் பார்க்க ஈடிபஸ் விரும்பவில்லை. பழங்குடியினாரிடமிருந்து  விடைபெறுகின்றான். தனக்கு தானே திசைக்காட்டியாக , வழிகாட்டியாக ஆக்கிக்கொண்டு.தடியினை தூர எரி்கிறான்.

உலகில் உயிர்வாழும் ஆசையை தவிர்த்து , பிறஆசைகள் இல்லாதவன்.புது புது ஓசைகள் கேட்டும் ஞாபகப்படுத்தியும், இனங்கண்டும் கொள்கின்றான். அவைகளுக்கென சில பெயர்களை தனக்குள் வைத்துக் கொள்கின்றான்.அவன் இதுவரை ருசிக்காதவைகளை, நுகராதவைகளை அனுபவிக்கின்றான்.தான் தூர தேசம் வந்துவிட்டதை  உணர்கிறான். இனிமேல் தான் கடினமான சோதனைகளை சந்திக்கப் போகிறான் என்பது அவனுக்குத் தெரியாது. இப்போது அவனுக்கு தாய், தந்தை, வளர்ப்புத் தாய், தந்தை, குழந்தைகள், நாடு போன்றவை ஏதோ ஒரு நிகழ்வின் சந்திப்பாகவேபடுகிறது. அரசனாக இருந்த  சமயங்களை விட, இப்பொழுது செய்யும், ஒவ்வொரு செயலும்  அர்த்தமுடையதாகவும் ,  அர்த்தப்படுவதாகவும் உணர்கிறான். அவன் பாதங்கள் மிளகு விளையும் நாட்டை அடைகின்றது.
.
.


.

.
Download As PDF

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

ஆண்டவனின் சாபமும் ...நிவர்த்தியும் ...அறிவின் நீட்சியும்....நீதியும் ...

சாபமே அனைத்து கேட்டிற்கும் காரணம் என்பவர்கள் கடவுளின் மேன்மையை  உணராது செயல்படும் உயிர்களால் இத்தகைய சாபத்திற்கு ஆளாவதோடு , அதன் தாக்கத்தால் அனைத்தும் அங்கு இப்படி தொடர்கிறது என்போர் ஆவார்.

இங்கு கடவுளின் சாபத்திற்கு ஆளானவர்களை பட்டியலிட்டால்.அதற்கான காரணம் என்னவென்றும் ,அதற்கான நிவர்த்தியும் அறியமுடியும் பட்டியல் அவரவர் கடவுள் நம்பிக்கையைசார்ந்த்து .ஆனால்,தீர்வு மட்டும் சற்று முயக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு lல் தவிர்த்த ஒன்றாக முற்றுபொற முயன்ற ஒன்றாக காட்டிக்கொண்ட ஒரு குயுத்தியாக இருக்கிறது என்றால் அவரால் சற்று  முயன்று இன்னும் முயன்று அடுத்ததை ஆயலாம் .ஆனால்,முடிவும் நிவர்தியும் முதலில் இருந்து மீண்டுவரும்.அறியாமை எவ்வளவோ  அவ்வளவே அனைத்தும்.எதையும் ஏற்றுக்கொள் என்பது விடையன்று என்று முதலில் ஆரம்பிப்பவனுக்கு ஒவ்வொன்றும் ஒரு ஆரம்பமாக இருக்கும்.ஒரு ஆரம்பம் இன்னொன்றை ஆரம்பிக்கிறது எனில் விடை அதில் இல்லை என்ற அறிவு அடுத்த துவக்கத்தை கொடுக்கும்.
அடுத்த துவக்கமே பல முடிவுகளுடன் துவங்கினால். நிவர்த்திக்கான துவக்கம் மெல்லிடைப்படும்.மெல்லிடப்பட்டதின்  கண பரிமாணம்மே மெய்ஞானம்,அது  பல காத தூரம் அழைத்துச்சொல்லும்.அது எக்காலமாக இருக்கிறதோ அதுவோ கடவுளின் சாப துவக்கமாகும்.

ஒருவர் ஒருவரின்ன் செயலுக்கு சாபம் தருவதும் .மூன்றாமவர் மூலம் அதற்கு விமோசனம் பெறுவதும் முதல் நீதீயாயிற்று.













Download As PDF