வியாழன், 14 அக்டோபர், 2010

சுத்தமான கைகளுடன் வாழ்வோம் .

இந்தியாவுக்கு மருத்துவம் படிக்க ஏன் விரும்பி வராங்க தெரியுமா ? ஏன்னா இது  "LAND OF DISEASE "  அதனால தான் அப்பிடினு எங்க பேமிலி டாக்டர் சொன்னப்ப எனக்கு கோபம் வந்தது இந்தியாவ எவ்வளவு மட்டமா பேசரார்னு.ஆனால் ,சில விசயங்கள நாம ஒத்துக்காட்டி நாம பின்னதங்கிப்போவதோடு விழிப்புணர்வு இல்லாமல் வீழ்ந்து ,தாழ்ந்து போவோம் .

நம்ம நாட்ல பொதுவா காலைக்கடன் விசயத்தில் விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே இருக்கு .
அதிலும் திறந்தவெளியில் மலம் கழித்தல் என்பது ரொம்ப சகஜமாக இருக்கு .ஒரு கிராம் மனித மலத்தில் கோடிக்கணக்கான வைரஸ்களும் ,லட்சக்கணக்கான பாக்டீரியாக்களும் இருக்கு .இவைகள் ஈக்கள் மூலமாக எளிதில் பரவுகின்றன .அதனால் நாம் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீங்கை தடுக்க அதனால் ஏற்படும் பாதிப்புகளை மக்களிடையே எடுத்துச்சொல்லி கழிவறைகளை பயன்படுத்தும்படி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது மிக முதன்மையான கடமையாக நமக்கு இருக்கிறது .

அதோடு மலம் கழித்த பின் சுத்தமாக நமது கைகளையும் சோப்புப்போட்டு கழுவவேண்டும். இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.மலத்தை கழுவி விட்ட   
நமது கை விரல்களிலும் மலக்கிருமிகள் இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் 200% உண்டு .அதனால் கைகளை சோப்புப்போட்டு நன்கு கழுவவேண்டும்.அதனால் மல நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும் .

நம்ம நாட்ல தினமும் நூத்துக்கணக்கான குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறக்கின்றன.சுத்தமாக கைகளைக்கழுவி வந்தால் இத்தகைய இறப்பை 50% தடுத்துவிடலாம்.
அதுவும் குழந்தைகள் விசயத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் தாய்மார்கள் .

பொதுவா
மலம் கழித்த பின்,
குழந்தைகள் மலத்தை கழுவி விட்ட பின் ,
சாப்பிடுவதற்கு முன் ,
உணவை கையாளுவதற்கு முன்,
சாப்பிட்ட பின் ,
தும்மல் ,சளி மற்றும் மூக்கு சிந்திய பின் ,
கையில அழுக்கு எப்போதெல்லாம் ஆகுதோஅப்போதெல்லாம்

நாம் நமது கைகளை சோப்பால் கழுவ வேண்டும் .


சோப்பு போட்டு எப்படி கழுவவேண்டும் என்பதை unicef இப்படி சொல்லுது.
சரியான முறையில் கை கழுவுவது எப்படி ?
1.உங்கள் கைகளை நீரினால் ஈரமாக்கிக் கொண்டு சோப்பைத் தடவவும் .
2.உள்ளங்கைகளை நன்கு தேய்த்துவிட்டுக் கொள்ளவும் .
3.விரல்களை ஒன்றினுள் ஒன்றாக செலுத்தி நன்கு தேய்க்கவும் .
4.வலது கை விரல் நுனிகளை இடது கை உள்ளங்கையில் வைத்து நன்கு தேயுங்கள் .இதே போல் இடது கை விரல் நுனிகளை வலது கை உள்ளங்கையிலும் தேயுங்கள் .
5.உங்கள் கைகளை நீரினால் சுத்தமாக கழுவுங்கள் -என .

திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள்,கழிப்பறைகளைப் பயன்படுத்துவதன் அவசியம் மற்றும் கைகளை கழுவுவதன் தேவையை மக்களிடையே எடுத்துக்கூறி விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக
உலக அமைப்புகள்
அக்டோபர் 15 ம் தேதியை
சர்வதேச கைகழுவும் தினமாகக்குறித்துள்ளது .

எனவே நாமும் இதனை கடைப்பிடித்து, நம்மை சுற்றியுள்ளவர்களையும் கடைப்பிடிக்க வைத்து, ஆரோக்கியமான சமுதாயமாக
முன்னேறுவோமாக சுத்தமான கைகளுடன் . 












நன்றி : unicef , SSA,த.நா.அரசு .









.


. Download As PDF

24 கருத்துகள் :

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

இடுக அருமை - பயனுள்ள இடுகை - அனைஅவரும் படித்துப் பின் பற்ற வேண்டிய இடுகை - இதற்கு ஒரு தினம் அறிவித்து பல்வேறு அமைப்புகள் செயல் படும் போது நாம் ஒத்துழைக்க வேண்டும்.

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

சசிகுமார் சொன்னது…

thanks

தமிழ்போராளி சொன்னது…

மிக சரியானா ஒரு இடுக்கை. மக்களிடம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.நம்மால் முடிந்த அளவுக்கு இதை அனைவரிடமும் எடுத்துச்செல்வோம்.

goma சொன்னது…

நல்ல பழக்கம் ஒழுக்கம் எல்லாத்தையும் கை கழுவுவோம் ஆனா இதுக்கு மட்டும் கைகழுவவே....மாட்ட்ட்டோம்
நல்ல பதிவு

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

விழிப்புணர்வூட்டும் இடுகை...

பெயரில்லா சொன்னது…

nichayamaaka pathivulaga nanbargal parthu manathil pathinthu dhinasari vaazhkayil pathivu seyapadavendiya onru nanri

சௌந்தர் சொன்னது…

எனவே நாமும் இதனை கடைப்பிடித்து, நம்மை சுற்றியுள்ளவர்களையும் கடைப்பிடிக்க வைத்து, ஆரோக்கியமான சமுதாயமாக
முன்னேறுவோமாக சுத்தமான கைகளுடன்///

நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி

priyamudanprabu சொன்னது…

USEFULL ONE

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நல்ல பதிவு + நல்ல பகிர்வு சார்

அம்பிகா சொன்னது…

மிக அவசியமான பதிவு.

பெயரில்லா சொன்னது…

nalla pathivuuuuuu

Chitra சொன்னது…

Lifebuoy (சோப்பு) இருக்குமிடம் ஆரோக்கியம் இருக்குமிடம்.
good post. :-)

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

good one

பவள சங்கரி சொன்னது…

நல்ல விழிப்புணர்வு ஊட்டக்கூடிய பகிர்வுங்க......வாழ்த்துக்கள்.

ஜெயந்தி சொன்னது…

தேவையான இடுகை.

பெயரில்லா சொன்னது…

It is advisable to use liquid soap from a liquid soap dispenser.(Do not use soap bars,unless if that is exclusive and specific for individual) It is not costlier and if you wish to save money,the dispenser can be continued to be used with liquid diluted with Surf Excel.Wash your hands after every bus journey also!

VELU.G சொன்னது…

நல்ல பதிவு நண்பரே

Radhakrishnan சொன்னது…

அருமையான பதிவு. பல நோய்கள் சுத்தமின்மையினால் வருகிறது.

Unknown சொன்னது…

உங்க்களுக்கு என் வந்தனம்..

ப.கந்தசாமி சொன்னது…

அருமையான அறிவுரை.

Menaga Sathia சொன்னது…

useful post!!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகைபுரிந்து

இந்த இடுகைக்கு ஆதரவாக


thamizmanam & இன்ட்லி ஆகிய இரண்டிலும்
வாக்களித்து சிறப்பித்த

yamsasi2003 &
verumpaye &
soundar @soundar1987 &
ambikaa @ambkikajothi &
ChitraSolomon @chitrax &
jayanthi @Jayanthig64 &
radhakrishnanv @rkrishnanv &
krpsenthil &
menaga@menagasathia

ஆகிய உங்களுக்கும்



thamizmanam த்தில்
வாக்களித்து சிறப்பித்த

tamilsowmiya &
sivamaniyan &
thevanmayam
ஆகிய உங்களுக்கும்


இன்ட்லியில்
வாக்களித்து சிறப்பித்த

karthikvlk &
kousalya &
bharani &
ganga &
kakkoo &
cpsenthilkumar &
kiruban &
boopathee &
kvadivelan &
amalraaj &
ashok92 &
jegadeesh &
hihi12 &
inbadurai &
mounakavi &
arasu08 &
kanavugal &
winner &
RDX &
kaelango &

ஆகிய உங்களுக்கும்


பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய

cheena (சீனா) &
சசிகுமார் &
விடுத‌லைவீரா &
goma &
வெறும்பய &
Anonymous &
சௌந்தர் &
பிரியமுடன் பிரபு &
சி.பி.செந்தில்குமார் &
அம்பிகா &
Chitra &
கிளியனூர் இஸ்மத் &
நித்திலம்-சிப்பிக்குள் முத்து &
ஜெயந்தி &
VELU.G &
V.Radhakrishnan &
கே.ஆர்.பி.செந்தில் &
DrPKandaswamyPhD &
Mrs.Menagasathia

ஆகிய உங்களுக்கும்

என் மனமார்ந்த நன்றிகளையும் ,
வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் .

மிக்க நன்றீங்க .


(குறிப்பு :இதில் யாராவது பெயர் தவறுதலாக இடம் மாறி இடம்பெற்றிருத்தாலோ அல்லது விடுபட்டிருந்தாலோ தயவுசெய்து தெரிவிக்கவும் திருத்திக்கொள்கிறேன் .)

பெயரில்லா சொன்னது…

இலவச தொலைகாட்சிக்குப் பதில் இலவச கழிப்பறை கட்டிக்கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.ஆனால் அதை எப்படி பராமறிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுக்கவேண்டும்

மதுரை சரவணன் சொன்னது…

in our school v shared all news what u written . most of the school celebrated this day. thank u for sharing. good post.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "