சனி, 8 ஜனவரி, 2011

தற்கொலையும் தெய்வங்களும்



நொரண்டு : வணக்கம் நண்டு .

நண்டு : சொல்லுங்க நொரண்டு

நொரண்டு : எங்க ஆளையே காணம் .ரொம்ப பிசியா ???

நண்டு : இல்லப்பா.

நொரண்டு : அப்புறம் எங்க போனா ?

நண்டு : ஊர்சுத்தினேன் ,உடம்புக்கும் சரியில்ல அதனால் தான் .வேற ஒன்னும் இல்ல. 

நொரண்டு : நான் கூட பரிசுப்போட்டி அறிவித்திருந்தையா அதுக்கு வந்தவைகளை படிக்கறதுக்கு உக்காந்துட்டையோனு பாத்தேன் .

நண்டு : ஓ...

நொரண்டு :என்னாச்சு ?.

நண்டு :மிகச் சொற்ப பதிவர்கள் தான் அனுப்பியுள்ளனர். அதுவும் மிக சொற்ப பதிவுகள் தான் .

நொரண்டு : ஓ ...அதனால் ...

நண்டு : அது பற்றி பிறகு செல்ரேன்.

நொரண்டு : என்ன திடீர்னு ஊர் சுத்தல் .

நண்டு : சும்மா தான்  தெய்வ வழிபாடுகள் பற்றி அறிந்துகொள்ள .

நொரண்டு : ஓ...என்ன தெரிஞ்சுக்கிட்ட .

நண்டு : நாம்மவர்கள்  பொதுவா பெண்களை தெய்வங்களாக முதன்மைப்படுத்தி வணங்குகின்றனர் என்ன காரணம் தெரியுமா ? .

நொரண்டு : ஆணாதிக்க சமூகம் அதனால் .

நண்டு :அப்படியில்லை .

நொரண்டு : என்ன சொல்ர .

நண்டு :நாமக்கு இதுவரை கற்பித்து வந்த இது பற்றியவைகள் வேறு .உண்மை வேறு . 

நொரண்டு :ம் ...

நண்டு :சாதாரணமாக நாம் வழிபடுவதை காண் .
உங்க வூட்ல எதைஎதை கும்பிடராங்க .

நொரண்டு :வீட்ல குல தெய்வம் ,சிவன்,முருகன்,வெங்கடாசலபதி,லட்சுமி,சரஸ்வதி,சக்தி,விநாயகர் அப்புறம் சத்திரத்து மாரியம்மன்,ஈரோட்டு மாரியம்மன்,சிவன் ,பெருமாள்,அப்புறம் பழனி முருகன்...இப்படி

நண்டு : அதாகப்பட்டது 1.குல தெய்வம் 2.ஊர்த்தெய்வம் 3.விருப்பத்தெய்வம் 4.இன தெய்வம் 5.நகர தெய்வம் இப்படி கும்பிடுரீங்க .

நொரண்டு : அதனால தான் பாதுகாப்பா பேய்,பிசாசு,மோகினி,முனி ,காட்டேறி கிட்டருந்து காப்பாத்தப்படுவதோடு நிம்மதியா வாழ முடியுது தெரியுமா ?.உனக்கு தெரியுமா 'உரல் உலக்கை சத்தம்' கேட்காத நேரத்தில இதுக போடும் ஆட்டம் .இப்பொல்லாம் குறஞ்சிருச்சு .ஏன்னா வீதிக்கு வீதி இப்ப கோயில் வந்ததால தான் .

நண்டு :ஓ ...

நொரண்டு : அதுவும் நாண்டுகிட்டு சாகரவங்க ஆவி இருக்கே .

நண்டு :என்ன செய்யும் .

நொரண்டு :மட்ட மதியானம் ,நடு ராத்திரியில முச்சந்தியில ,ஊர் ஓரமா ,ஓதுக்குப்புறத்தில இதுக பொம்பளைகளைக்கண்டா விடாது .ஒட்டிக்கும் .

நண்டு :செத்தவங்க ஆணாயிருந்தாலும்,பெண்ணாயிருந்தாலும் .

நொரண்டு : ஆமா .விடவே விடாது .

நண்டு :பெண்கள் பலகீனமானவர்கள் அதனால் பெண்களை தாக்குகிறது அப்படித்தானே .

நொரண்டு : ஆமா .

நண்டு :இந்த பேய்,பிசாசு,மட்ட மதியானம் ,நடு ராத்திரி, முச்சந்தி,ஊர் ஓரம் என்ற பதம் நாண்டுகிட்டு என்ற பதம் தோன்றுவதற்கு முன்பே வந்துவிட்டனவே .

நொரண்டு :அதவிடு .

நண்டு :ஏன் அவர்களின் கும்பிடும் தெய்வங்கள் காப்பாத்தாதா ?

நொரண்டு : இதா பொம்பளைங்க தனியா எங்கு போகக்கூடாது ,ஆணின் துணையில்லாமல் .அப்படி போனா பேய்,பிசாசு,மோகினி,முனி ,காட்டேறி கிட்டருந்து காப்பாத்த எந்த தெய்வமும் வராது .

நண்டு :ஓ ...

நொரண்டு : பெண்கள் எப்பொழுதும் கண்காணிப்பில் இருக்க இந்த ஏற்பாடுனு நினைக்கிறேன் .

நண்டு :ஓ...

நொரண்டு :இப்படியிருக்க  பெண்கள் பல ஆண்களை தேர்ந்தெடுத்து வந்தனர் என்று சிலர் கூறுவது தான் எனக்கு புரியல . 

நண்டு :அது முற்றிலும் பொய் என்பதோடு தவறும் ஆகும் .அது ஆழ்ந்த அறிவோ,பார்வையோ அல்லது படிப்போ இல்லாத ஒரு வறட்டு வாதம் .

நொரண்டு :ஓ ...

நண்டு :உலகைப்பற்றி,மனிதனைப்பற்றி  அறிவியல் பார்வையில்லாத , பெண்களை இழிவாக சித்தரிப்பதில் சுகம் காணும்
ஒரு தரப்பினரின் வறண்ட கோசம் அது .
  









தொடரும் ...




. Download As PDF

7 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

ஸ்வாரஸ்யமான தொடர் கலக்குங்க

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ha ha sema

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

OK.NEXT?

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

உலகைப்பற்றி,மனிதனைப்பற்றி அறிவியல் பார்வையில்லாத , பெண்களை இழிவாக சித்தரிப்பதில் சுகம் காணும்
ஒரு தரப்பினரின் வறண்ட கோசம் அது .//

ஏற்கலாம்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

கலக்குங்க

ம.தி.சுதா சொன்னது…

என்னமா நோண்டறாங்கப்பு.. ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..

ஹேமா சொன்னது…

நீங்க மட்டும் சொன்னா ஆயிடுமா !

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "