வியாழன், 4 நவம்பர், 2010

வள்ளுவர் சமணர் என்பது மாபெரும் மடத்தனம்

.

நொரண்டு : வள்ளுவர் சமணரா ?

நண்டு :   வள்ளுவர் சமணர் என்பது
மாபெரும் மடத்தனம் . இதனை மக்களிடையே
இன்னும் மக்கள் மடையர்களாகவே நினைத்துக்கொண்டு வரலாற்றுபார்வை மற்றும் அறிவு சிறிதும் இல்லாமல் எப்படித்தான் எழுதிவருகின்றனரே தெரியவில்லை .
நீ நான் சொன்ன  குறள்களை படிச்சியா ?

நொரண்டு :நான் தான் சொன்னேன்ல ,
நீ பாட்டுக்க குறளைப்படினு நம்பரக்கொடுத்தினா .விளையாடுரையா .ஒன்னு புருஞ்சுக்க . நாங்க எல்லாம் பழத்தை உருச்சில்ல ஜிரணிச்சே கொடுக்க சொல்றவுங்க .

நண்டு :    அப்புறம் எதற்கு கேள்வி கேக்கற ?

நொரண்டு :சும்மாதான் ,திருவள்ளுவர் திருவள்ளுவர் னு பேசராங்க , பெரிய சிலையல்லாம் வச்சிருக்காங்க அதான் .
அத விடு வள்ளுவர் சமணரா ? பதில் சரியில்லையே .

நண்டு :   இதனை நான் பின்பு ஆதாரத்தோடு  நிருபிக்கிறேன் .
குறள்களை படினு சென்னேன் முதலில் படிச்சியா.

நொரண்டு :அந்த 3 மட்டும் போதுமா .

நண்டு :   அட அறிவுஜிவி , திருக்குறளை விமர்சிக்கவோ ,
பயன்படுத்தவோ , கேள்விகேட்கவோ விரும்பினால் முதலில்
நீ அதனை முழுமையாக , 1330 குறளையும் படிக்கவேண்டும் .

நொரண்டு :அவனவனுக்கு வேளையில்லையா . ஒரு குறளை பயன்படுத்தக்கூட எல்லாத்தையும் படிக்கச்சொல்லுவபோல .

நண்டு :   ஆம் .

நொரண்டு :அதான பாத்தேன் ,எங்கடா சொல்லலனு .

நண்டு :    அது தான் உண்மை .

நொரண்டு :அப்படி இல்லாது , எதையும் படிக்காம ஒரு குறளை விமரிசித்தால் ,பயன்படுத்தினால் ?


நண்டு :   4 குருடர்களும் யானையும் கதைதான் .

நொரண்டு :அப்ப ,இப்போ எல்லாம் அப்படித்தான்  பயன்படுத்தராங்கனு  சொல்லவர ,அது தானே?

நண்டு :    உன் கருத்திலும் உண்மை உண்டு .

நொரண்டு : சரி , நீ சொல்ற மாதிரியே படிக்கலாமுனு இருக்கோன் . அதுக்கு உரை நிறையாப்பேர்  எழுதியிருக்காங்களாம் . யாரை படிக்க .

நண்டு :   யாரைவேணாலும் படி . ஆனால் குறைந்தது 9 உரைகளையாவது படித்தல் நலம் .

நொரண்டு : வா..வா..ஒரு குறலே படிக்கமுடியல ..
9 உரையா ...என்ன ஆராய்ச்சி பண்ணி விருதா வாங்கப்போரேன் . இல்ல எனக்கு வேலைவெட்டித்தான் இல்லையா , எங்குடும்பத்தையார் பாப்பா... இதனால் எனக்கென்ன ஆகப்போது . இனி கேள்வியே இவன் கேக்கக்கூடாதுனு ப்ளான் பண்ணிட்டயா ?. இப்படி வெளியில சொல்லாத , திருக்குறளை எவனும் படிக்கவும் வரமாட்டான் , உன்னையும் ஒரு மாதிரி பாப்பாங்க .

நண்டு :  அதப்பத்தி எனக்கு கவலையில்லை .ஆனால் ,
முழுமையாக படித்தவரால் மட்டுமே திருக்குறளினையும்,
திருவள்ளுவரையும் ஓரளவிற்காவது தெரிந்துகொள்ள முடியும் .

நொரண்டு : அப்படினா திருக்குறளினை
முழுமையாக படித்தவர்களெல்லாம் முழுமைவாதிகளா ?

நண்டு :   .....

நொரண்டு : சரி அதவிடு  இன்னைக்கு எந்த  குறளுக்கு  விளக்கம்  தர்ரா ,அதையாவது  சொல் கேட்டுக்கரேன் .

நண்டு : 

"ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் ".


நொரண்டு :இதுக்கு எனக்கு அர்த்தம் தெரியும் .அது அரசன் ஒழுங்கா ஆளளைனா பசு பால் கொடுக்காது ,அந்தணர் ஓதுவதை மறப்பர் ...ஹ..ஹா..ஹ...சரிதானே ..எப்படி எங்களுக்கும் தெரியுமில ....நாங்க யாரு ...ஹ..ஹ..ஹா...

நண்டு :   போடா மடையா .போய் நூல் போட்டுக்க .

நொரண்டு : இதா திட்ரத  விடு  . பிரச்சனையாப் போகும் .
ம்... சரி உன் விளக்க உரை சொல்லு பார்க்கரேன் .


நண்டு : 

காவலன் காவான் எனின்
அரசு அரசாக உயர்வடையும் தன்மையும் ,
அதனால்  சிறப்படையும் நன்மை குறையும் ,
மக்கள் அரசுடன்  ஒத்துப்போகும் தன்மையில்  ,
தாங்கள் பின்பற்றும் ஒழுக்க நெறியில் குன்றுவர் .
ஒரே இடந்தில் தங்கி  தொழில் பார்க்கும் நிலை  இல்லாமல் போவதால்
தொழில் செய்பவர்கள் அதன் நுட்பமான வழிமுறைகளையும்,
தாங்கள் வழிவழியாக சேர்த்துவைத்து வந்த அறிவினையும்,
படிப்பினைகளையும்   மறப்பர் ,  என்கிறார் .

அதோடு இன்னும்  சொல்கிறார் அதிகமாக .




.







.


.......

வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் ...தொடரும் .


.








. Download As PDF

8 கருத்துகள் :

sivakumar சொன்னது…

சில இசுலாமியர்கள் (எனக்குத் தெரிந்து கவிக்கோ அப்துல் ரகுமான்) வள்ளுவரை சமண சமயத்தைச் சார்ந்தவர் என்கிறார்கள். கொல்லாமை போன்ற சமண தத்துவங்களை வலியுறுத்துவதால் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். இன்னும் விரிவான விளக்கங்கள் எதிர்பார்க்கிறோம்.

அருண் பிரசாத் சொன்னது…

நல்ல பகிர்வு

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - நல்ல சிந்தனை - குறளுக்கு விளக்கம் நன்று. வள்ளுவர் சமணரா - ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

தமிழ்போராளி சொன்னது…

அருமை தோழரே தொடரட்டும் உங்கள் ஆராய்ச்சி.வெளிவரட்டும் உண்மைகள்.புரிந்துகொள்ளட்டும் அறியாத மக்கள்..

Jeyamaran சொன்னது…

anna engal college la tamil lecture vela free ah irukku vanthu join panringala........
summa vilaiyattukku ketten rocking but 1330 kural 9 uraila padikkanumrathu konjam aniyayam anna engala partha ungalukku pavamatheriyala

Unknown சொன்னது…

அவர் யாராயிருந்தால் என்ன..?

Jerry Eshananda சொன்னது…

happy diwali nandus.

Unknown சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் said...

அவர் யாராயிருந்தால் என்ன..?


என் கேள்வியும் அதுவே..

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "