Monday, April 30, 2012

வெத்து வீர வசனம் பேசி மறத்தமிழனை மழுங்கடிக்கும் பேச்சுத்தமிழர்களே கேளுங்கள்



ஈரோட்டில் நடக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் மொழி ,இன ,நலம் விருப்பிகள் நடத்தும்  ஒவ்வொரு பொதுக்கூட்டத்திற்கும் ,மாநாட்டிற்கும் நான் சாதாரண பார்வையாளனாய் சென்று பார்ப்பது வழக்கம்.ஒவ்வொரு உணர்வாளர்கள் என்பவர்களும்  தாங்கள்  தமிழுக்காகவோ, அதன் உயர்வுக்காகவோ இல்லை என்பதனை பேச ஆரம்பித்த அடுத்த நிமிடத்திலே வெளிப்படுத்தி விடுவதுடன்  தமிழின் பெயரால் தவறாமல் தமிழர்களை மடையர்களாக்குவதோடு தாங்களை மட்டும் உன்னதமானவர்களாக காட்டிக்கொண்டு புரட்சியாளர் வரிசையில் அமரத்துடித்து ,வீர வசனம் பேசி நடித்துச்செல்வதை கண்டு ஒவ்வொரு தடவையும் நான் மிகவும் ஏமாற்றப்பட்டே திரும்பியுள்ளேன்.அப்பொழுது நான் நினைத்துப்பார்க்கும்  நாடு அமெரிக்கா .

(இதில் வேடிக்கை என்னவெனில் இன்றுள்ள பல வீர வசன தமிழ் தலைவர்களுக்கு நாடு, அரசு,மக்களாட்சி,கட்சி,இயக்கம் என்றால் என்னவென்றே  தெரியாத ஒன்றாக இருப்பதுவும் ,இருந்தாலும் இவர்கள் தலைவர்களாக உள்ளதும் தான் .ஆனால்,அவர்களுக்கு கற்பிதம் என்ற வார்த்தை மட்டும் நன்றாக உச்சரிக்கத்தெரியும் ,இது  தவிர்த்து வேறு எதுவும் இல்லை என்பது உள்ளங்கை நெல்லி .)

வெத்து வீர வசனம் பேசி மறத்தமிழனை மழுங்கடிக்கும் பேச்சுத்தமிழர்களே கேளுங்கள்  ...

நான் உலக அரசியல் அமைப்புச்சட்டங்கள் அனைத்தையும் ஆழ்ந்து படித்துவந்த பொழுது என்னை மிகவும் வசீகரித்தது அமேரிக்காவின் அரசியல் அமைப்புச்சட்டம் .
மிக மிக எளிமையான ஆனால் மிகமிக அழுத்தமான சரத்துக்களை தன்னுள் கொண்டுள்ளதை படித்த பொழுது மிகவும் வியந்தேன் .
அதை மிகவும் ஊன்றிப்படித்த பொழுது தான் தெரிந்து கொண்டேன் .தாங்களின் தலைவனை தனது மக்கள் எப்படிப்பட்டவராக தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதனை உள்ளீடாக கொண்டிருக்கும் பல விசயங்களை.
அதில் முதன்மையானது ,
தலைவன் மயக்கப்பேசும் தன்மையுடையவனாக ,மேடையில் முழங்கும் அட்டக்கத்தி வீரனாக இருக்கக்கூடாது என்பதுவே.

மேடையில் வீர வசனம் பேசும் வீணர்களுக்கு இங்கு இடமில்லை ,மக்களுக்கு நல்லது செய்பவன் வீர வசனம் பேச மாட்டான் .அப்படி பேசுகிறவன் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கமாட்டான் என்பதை மக்களிடம் அது கொண்டுசென்றுள்ள பாங்கை அறிந்து மிகவும் வியந்தேன்  .
அதனால் தான் அமெரிக்கா நல்லரசாக தனது மக்களுக்கு உள்ளது.

இங்கு வெத்து வீர்ர்ர வசனம் பேசியே நம்மை சாகடிக்கின்றனர் .

இனி நாமும் அமேரிக்காவின் வழியில் பயணிப்போம் .

வெத்து வீர வசனங்கள் பேசி மறத்தமிழர்களை  மழுங்கடிக்கும்  பேச்சுத்தமிழர்களே உங்களுக்கு நாங்கள் விடைகொடுக்கிறோம்.
இனி நீங்கள்  இன்டஸ்ட்ரீயில் கவனம் செலுத்துங்கள்.
அதையாவது தரமாக்குங்கள்.



எனவே


இனிய தமிழ் நெஞ்சங்களே,இனி அவர்களின் வீர்ர்ர வசனங்களை  தியோட்டர்களில் மட்டுமே கேட்போம் .




நம் நாட்டை நாம் பார்த்துக்கொள்வோம்.























Download As PDF

Saturday, April 28, 2012

அழிந்து போகும் அரசியல் கட்சிகள்… எவை? எவை? ...எப்படி? எப்படி?







“அரசியல் அறிவு பெற முயலாதவன் சமுதாய விலங்காவான்”



"அரசியலை சாக்கடையாக்கி விட்டார்களே ஒழிய அரசியல் சாக்கடை அன்று"










நண்டு: தேர்தல் கூட்டணிகள் தற்பொழுது சூடு பிடித்துள்ளவைபோல் தெரிகின்றது.

நொரண்டு: மக்களின் கைமையில் ஆட்சியைப் பிடிக்க அனைத்து யுத்திகளையம் மேற்கொள்ள வேண்டும்தானே. அப்பொழுதுதானே கட்சி அதன் ஸ்திரத் தன்மையை நிலைநிறுத்த முடியும். அது தானே ஒவ்வொரு கட்சித்தலைவரும் விரும்புவர்.

நண்டு : அப்போ, மக்களை ஏமாற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள்

நொரண்டு : மக்களை ஏமாற்றுவது என்பது வேறு, ஒரு கட்சி தனது ஸ்திரத் தன்மையை நிலை நாட்டுவது என்பது வேறு. பொதுவாகவே ஜனநாயக நாட்டில் ஒரு கட்சி மக்களை ஏமாற்றி ஓடடுகளை வாங்குகின்றனர் என்பது பழுத்த ஜனநாயக நாட்டில் நடக்க முடியாத ஒன்றாகும். ஆனால் மக்களை, தங்களின் வாக்காளர்களாக தங்களின் கட்சியின் தொண்டர்களாக வைத்துக்கொள்ள அனைத்துக் கட்சிகளும் ஒவ்வொரு யுத்தியை தன்னுள்ளே வைத்திருக்கும்.
ஏமாற்றுகின்றனர், ஏமாற்றிவிட்டனர் , ஏமாற்றப்படுவது என்பதெல்லாம் பொதுவாக ஒட்டுமொத்த மக்களின் மீது குவியும் கருத்து. ஆனால் ஒவ்வொரு கட்சியும் தங்களின் தொண்டர்களை ஏமாற்ற விரும்புவது கிடையாது. ஏமாற்றவும் செய்யாது. சூழல் சரியில்லாமல் போகலாம்.

நண்டு : அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு தேர்தலுக்கு தேர்தல் மாறிக் கொண்டே வருகின்றதே.

நொரண்டு : ஜனநாயகத்தின்படி நிலை வளர்ச்சியில் இது ஒரு அத்தியாயமாகும்.
மக்களாட்சித்துவம் இன்னும் சோதனை முயற்சியாலேயே இருக்கிறது.சாக்ரடீஸூக்கு முந்திய கால கட்டத்தில் தான் அனைவரும் .ஆட்சி அதிகாரத்தை மட்டும் கைப்பற்ற நினைக்கும் அரசியல் கட்சிகள்தங்களை ஸ்திரப்படுத்திக்கொள்ள, வழப்படுத்திக்கொள்ள, நிருவனமாகிப்போவதால் தங்களின் நிலைப்பாட்டினை அடிக்கடி மாற்றிக்கொண்டே வருகின்றது.

இன்று
தற்பொழுது உள்ள அரசியல் கட்சிகள் சிறந்த நிர்வாகிகளை நாடுகின்றன.
நிருவாகிகளாக இருக்க அக்கட்சியும், அரசியல் தளத்திலிருந்து நிருவாகத்தளத்திற்கு இடம் பெயர்கின்றது.இப்படி நிர்வாகிகளைக் கொண்ட அரசியல் கட்சிளாக இருக்கின்றது.
எனவே,சிறந்த நிர்வாகிகள் கொண்ட அமைப்பு சிறந்த அரசியல் கட்சியாக இருக்கிறது.
நிர்வாகிகள் மேல் மட்டத்திலிருந்து அடித்தட்டு தொண்டர்வரை பல தட்டுகளில் இருக்கின்றனர். நிர்வாகிகளில் சிறந்த நிர்வாகி சர்வதிகாரிக்கு ஒப்பான செயல்களையே கட்சிக்குள் மேற்கொள்வார்.இதுசர்வாதிகார கொடுங்கோல் அரசை வீழ்த்த ஏற்பட்ட ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட முதல் அடியாகும்.
நல்ல நிர்வாகியால் நல்ல செயல்கள் நடப்பதுபோல் தோன்றினாலும் ஜனநாயகத்திற்கு சரியான பின்னடைவே பின்னிட்டு ஏற்படும். காரணம் இப்படிப்பட்ட நிர்வாகிகள் மூலம்தான் கட்சிகள் தங்களின் பலத்தை நிரூபித்துக் கொண்டு வருகின்றன.
இப்படிப்பட்ட நிர்வாகிகள்தான் தங்களின் அதிகாரத்தை பிரயோகம் செய்து தங்களின் ஸ்தானத்தை நிலைப்படுத்திக்கொள்ள எதுவேண்டுமானாலும் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் செயல்கள் தான்

அட்டூழியங்களும்,

அட்டகாசங்களும்,

சாகசங்களும்,

வித்தைகளும்,

குரங்கு மாதிரி அந்தர் பல்டிகளும்,  
அரசியல் கலத்தில்.

சிறந்த அரசியல் தலைவர்கள்தான் சிறந்த அரசியல் கட்சிகளை நிலைநிறுத்த முடியும். அப்படிப்பட்டவர்களால்தான் இத்தகைய செயல்களுக்கு ஒரு முடிவு கட்ட முடியும்.

நண்டு : சிறந்த அரசியல் தலைவர்கள் மட்டும் அரசியல் கட்சிக்கு என்றால் ...

நொரண்டு : அரசை,அரசியல் கட்சியை தலைவராக இருந்து ஒருவர் வழி நடத்த வேண்டும். நிர்வாகியாக இருந்து நிர்வகிக்கக்கூடாது.நல்ல நிர்வாகிகள் மக்களைப் பார்க்க மாட்டார்கள்.
நல்ல நிர்வாகம் சார்புடையது.தலைவர்களிடம் சர்வாதிகாரப் போக்கு காணப்படாது.
தலைவர்கள் மக்களை மட்டுமே பார்ப்பார்கள் .மன்மோகன்சிங் சிறந்த நிர்வாகி.

நண்டு : புதுப்புது அரசியல் கட்சிகள் தோன்றிக்கொண்டே உள்ளதே ......

நொரண்டு : “அரசியல் என்பது வாழும் முறை” என்றாகிவிட்ட சமூகத்தில்
அரசியல் என்பது வாழ்வாகி விடுகின்றது.
நாம் அனைவரும ஒட்டுமொத்தமாக அரசியல் அடித்தளத்தில் இருக்கின்றோம்.
தனிமனிதன் தொட்டு அனைத்தையும் அரசியல் பதம் பார்த்துக் கொண்டுள்ள நிலையில் அது தவிர்த்த ஒரு நிலையை மனிதன் சிந்தித்துப்பார்க்கக்கூட முடியாதபடி தன்னை ஜக்கியப்படுத்திக்  கொண்டுவிட்டான்.
இப்படிப்பட்ட சூழலில் அரசியல் என்னும் மையம் மெல்லமெல்ல பற்றியபொழுது மேலும் மனிதன் தன்னுடைய மையத்தை அரசியலின் பால் நகர்த்தி முடித்த அளவு தன்னை முன்நிறுத்தி தனது வாழ்வை வளப்படுத்தி, நலப்படுத்தி, சுகப்படுத்திக் கொண்டு பின் தனது வம்சத்தையும், அதன் வழியிலே அமர்த்தி தனது வாழ்வையும், வம்சத்தையம் வடம்பிடிக்க ஆரம்பித்தான். தன்னை முன்நிருத்த அவனுக்கு ஏதாவது ஒன்று தேவைப்பட்டது, கிடைத்தது, பயன்படுத்திக் கொள்கின்றான்.
தான் முன்நிருத்த ஏதுவாக தனக்கு பின் பல கைகள் தேவை என்பதனையும் அவைகள் அசையாக்கைகளாக இருக்க தன்னிடம் நிலையாக ஏதாவது ஒன்று இருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்த அவன், அதனை தனது பயணத்தில் தொடர்ந்து பெற்றுக்கொண்டே வந்த அனுபவத்தின் மூலம் பெற்ற அறிவின் துணையுடன் கண்டுகொண்டு, அதன்மூலம் ஒரு முடிச்சைப் போடுகிறான். அந்த முடிச்சுதான் அவனைத் தலைவனாக்குகிறது. மற்றவர்களை அவனின் தொண்டர்களாக்குகிறது. அந்த முடிச்சுதான் அவனின் உயிர்மூச்சாகின்றது, பேச்சாகின்றது. அவனின் கொள்கையாகிறது அந்த கொள்கைகள் முந்நிருத்த அவனால் கட்சி ஆரம்பிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட முடிச்சு யாராலும் அவிழாத்படி இருக்கும்படியும், தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருக்கும்படியும், விடைகாணா தேடுதல் வேட்டையிலேயே போடும் கேள்விகளிலே திக்குமுக்காட வைத்து தொண்டர்களை தூங்க வைத்து வேட்டையாடி வித்தைகள் பல கற்றுக் கொள்கின்றான். வசீகரத்திலே (அது பேச்சாக இருக்கலாம், தோற்றமாகவும் இருக்கலாம், கருத்தாகவும் இருக்கலாம்). மயக்கி, மயங்கி விழுந்த மனிதன் தொண்டராகவே தொடரும் அவலம் தொடர தலைவன் மட்டும் வடத்தை தனது பகுதிக்குள் இழுத்துக்கொண்டே விடை காணா முடிச்சுடன் பல மட்டங்கள் குட்டி, குட்டி தலைவர்களை உருவாக்கிக்கொண்டே சுழல்கின்றான். அவன் தான்தலைவாகவும், மற்றவர்கள் தொண்டனாகவும் சிம்மாசன போட்டியை அடைகிறான். இப்படிப்பட்ட சிம்மாசன போட்டியில்தான் முடிச்சுகளின் ஆழங்கள் பார்க்கப்படுகிறது. அப்பொழுது ஏற்படும் கருத்து மோதலின்போது வெடித்து சிதறுவதுதான் அவன் போட்ட முடிச்சு .முடிச்சு அவிழ்ந்தால் கட்சி என்னவாகும்.
தொண்டர்கள் அவிழ்ந்து போவார்கள். அப்படியெனில் முடிச்சு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும். எவ்வளவுக்களவு சிக்கல் நிறைந்ததாக இருக்கமுடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருக்கவேண்டும். எவ்வளவுக்களவு சிக்கல் நிறைந்ததாக இருக்கமுடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு ஆதாயம் அதிகம். ஆனால் தொண்டர்கள் கொள்கை கொள்கைக்காகவே வாழ வேண்டும். ஆனால் கொள்கைப் பற்றி முழு அறிவும் பெற்றுவிடக்கூடாது. பெற்றுவிட்டால் தலைவன் தலைவனாக இருக்கமாட்டான். அந்த அளவு கொள்கை இருக்க வேண்டும். இப்படிப்பட்ட நெருக்கடியில் வாழும் மனிதன் அரசியல் வாழ்வாகிவிட்ட சமுதாயத்தில் தானும் ஏதாவது ஒரு கட்சியை அவனது சுயநலத்திற்காக பின்பற்றுவது ,அல்லது பின்பற்றுவது மாதிரி தொடர்கின்றான்.
அவன் தொண்டனானால் தொண்டன் என்பவன் முடிச்சுக்குள் வரவேண்டும். முடிச்சே உயிர் மூச்சாக நினைக்க வேண்டும். ஆனால் உயிடன் இருந்து என்ன பயன் என்ற கேள்வியை மட்டும் கேட்கக்கூடாது. இப்படியாகத்தான் சமுதாயத்தில் அரசியல் கட்சி உருவாகிக்கொண்டே இருக்கிறது.

நண்டு : இப்படி உருவாகும் கட்சியின் ஆயுட்காலம் எதைப்பற்றி அமையும்?.

நொரண்டு : முடிச்சுக்கு ஆதாராமான கருத்தில் உள்ளது அதன் ஆயுட்காலம். அந்த கருத்து தொடர்ந்து அக்கட்சியை வழிநடத்தி செல்லும் .அவையே அக்கட்சியின் ஆணிவேர் ஒரு கட்சி தொடர்ந்து, அதன் வேராகிய கருத்தை தழுவியே செல்ல வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு கருத்து ஆழமாகவும், அகலமாகவும் இருக்கிறதே , கருத்தைபின்பற்றுகிறதே ,அவ்வளவுக்கவ்வளவு அக்கட்சியும் வேறுன்றி பரவி செழிக்கும்.
ஆழமான ,அழுத்தமான, மனித நேயம் கொண்ட சிறந்த கொள்கை ,கோட்பாடுகளை உள்ளடக்கி ஏற்படுத்தப்பட்ட இயக்கங்களின் கருத்திலிருந்து தோன்றும் அரசியல் கட்சிகள்தான் நிலைத்து நிற்கும்.

சமுதாயம் என்பதில் அரசு என்ற கட்டமைப்பில் அதன் கொள்கைகளும் கோட்பாடுகளும் சமுதாயத்தையும், அரசையும் தாண்டி இருக்கும்பட்சத்தில் அக்கட்சி அந்த சமுதாயத்தில், அரசியல் நிலையான இடத்தினை தக்கவைத்துக் கொள்ள முடியும். அது தொடர்ந்து தனது ஆளுகையை செலுத்திக் கொண்டே இருக்கும். அதன் செயல்பாடுகள் அந்த அமைப்பைத் தாண்டி பயனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். இது விரிவடையும் விதியாகும். இவ்வாறு விரிவடையும் தன்மையுடையவைகள் காலத்தால் தொடர்ந்து மக்களுக்கு பயனடையும் அமைப்பாக இருக்கும்.உலகளவில் மார்க்ஸ்க்கு முதலிடம் .



நண்டு இந்தியாவைப் பொறுத்தவரை....

நொரண்டு இந்தியா என்பது மத, இன, ஜாதி, மொழி சார்பற்ற ஒரு அற்புதமான நாடு.அந்தப் பாதையில் அது சுதந்திரமாக பயணம் செய்து ஒன்றுபட்ட மாந்தரினத்தை உருவாக்க அது மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நாமனைவரும் அதற்கு உறுதுணையாக, விழிப்புணர்வுடன் இருந்து நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் அதற்கு செய்ய வேண்டும்.

இந்தியா என்பது ஆங்கிலேயன் நமக்கு கொடுத்த பெயரல்ல.
நாம் உருவாக்கிய தேசத்திற்கு நாம் வைத்த பெயர்.நமது பெயர்.
நாம் வாழ்ந்து வரும் காலத்திற்கு சற்று முன் நமது தந்தையர், தாத்தாக்களின் போராட்டத்தில் சுதந்திரம் பெற்று நம்மிடம் கொடுத்துச் சென்றுள்ள தேசம்.
நம்மிடம் விட்டுச் சென்றுள்ள மழலை.நமது அறிவாற்றலால் அதனை முன்னிறுத்தி வளப்படுத்தவேண்டும் என்றஎண்ணத்துடன் நாட்டை வழிநடத்த
எத்தணிக்கும் தொண்டர்களை உருவாக்கும் எந்தக் கட்சியும் தேசியக் கட்சியாக பரிணாமிக்கும்.வெற்றியும் பெறும்.

இது நமது தேசம்.நமது காலத்தில் நமக்காக கொடுத்த சுதந்திர பூமி. அகிம்சை வழியில் நமக்கு அளிக்கப்பட்ட மகத்தான தேசம்.நமக்காக நாம் உருவாக்கிய அனைத்து அம்சங்களைக் கொண்ட ஒரு அரசியலமைப்பின்பால் நமது கையில் விடப்பட்ட ஒரு அழகிய பூந்தோட்டம் என நினைக்கும் கட்சிதான்
இந்தியா முழுதும் பிரகாசிக்க முடியும்.அப்படி நினைக்காத எதுவும் தேசியக் கட்சியாக பரிணமிப்பது மிகவும் கடினம்.

இந்தியா என்ற ஒன்றும் கிடையாது.ஆங்கிலேயன் தனது நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திய பெயர் .பின் அவற்றை நாம் பின்பற்றி வருகின்றோம்.
இந்தியா என்பது ஒரு மாயை என கூறிக்கொண்டு ( இதற்கு முன் இப்படி ஒரு தேசம் இருந்ததில்லை என்றால் உலகில் எத்தனை தேசங்களின் பெயர்கள் கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து இருந்து வந்துள்ளது என காட்ட முடியுமா? -என வாதங்கள் புரிவேரிடம் கேட்களாமே )

மொழிவாரியாக, இனம் வாரியாக பேசிக் கொண்டு, ஆங்காங்கு செல்வாக்கு பெற்று ,பெற முயன்று வரும் கட்சிகள் மாநிலக் கட்சியாக இருந்து கொண்டு மத்தியில் ஆட்சியில் தங்களின் பிரதிநிதித்துவத்திற்கேற்ப சில சமயம் செல்வாக்கு பெற முடியுமே தவிர தேசத்தைப் பொறுத்து அவைகளின் செல்வாக்கு தவிர்க்கக்கூடிய அளவிலே, பூஜியமகவே இருக்கும் .

இந்தியாவைப் பொறுத்தவரை

காந்தியம் முதலிடம் வகிக்கின்றது.

காந்தியக் கொள்கைகள் உள்கட்டமைப்பில் விரிவடையும் தன்மை கொண்டன.


இந்த விசயத்தில்

காந்தியத்தை
இன்றைய காங்கிரஸ் கடைபிடிக்கின்றதோ, இல்லையோ,
அது காந்தியின் காலத்திலிருந்து
அவரின் கொள்கைகளை உள்வாங்கி இயங்கிக் கொண்டு வந்ததால்
காந்தியத்தின் பாதையில் அது செல்வதாக அதன் அனுதாபிகள் எடுத்துக்கொள்வதால் முதலிடம் அதற்கு தரலாம்.

மார்ச்சியம் .......
மார்ச்சியம் பின்பற்றும் கட்சிகளைப் பொறுத்தவரை இன்னும் அழுத்தம் திருத்தமான செயல்பாடுகள் தேவை. அவர்களின் செயல்பாடுகள் மந்தமாக இருப்பதால் முதலிடத்தில் இருக்கவேண்டிய இவர்களுக்கு
இரண்டாமிடம் தான்.

அது தவிர்த்து மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், மொழியின் பெயரால், தோன்றி அதற்குள்ளே காலம் தள்ள நினைக்கும் கட்சிகள் தேசியக் கட்சிகள் போன்று தெரிந்தாலும்,உருவானாலும், ஓட்டு வங்கிகளை வைத்திருந்தாலும் காலத்தால் நிலைத்து நிற்குமா என்பது கேள்விக்குறியே.அவைகள் சி்று கட்சிகளாக, மாநிலக் கட்சிகள் அந்தஸ்திலேயே தங்களின் பயணத்தை தொடர்ந்து முடிவைத் தேடிக்கொள்ளும். அத்தகைய கட்சிகளைப்பற்றி நான் எதுவும் கூறப்போவதில்லை. 

பொதுவாகவே,
எத்தகைய உயர்ந்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும்,அவைகளை கையில் எடுத்துக்கொண்டு பயணப்படும் எத்தகைய பெரிய ஓட்டு வங்கிகளைக் கொண்ட பெரியகட்சியும் தொடர்ந்து தனது அனுபவத்தினால் அவைகளின் கொள்கை மற்றும் கோட்பாட்டினை செலுமைப்படுத்தாமல் அப்படியே பயணப்பட்டது எனில் அக்கட்சிகள் எத்தகைய உயர்ந்த கொள்கைகளையும் கோட்பாடுகளை பின்பற்றி இருந்தாலும்
உறைந்துவிடும்.

அலெக்சாண்டர் உலகப் பேரரசை நிறுவினான். அதற்கு காரணம்
சாக்ரடீஸ்....

அரசு விரியும் தத்துவம் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.
இவ்வாறுதான் கருத்து வளர்ச்சியில் விரிவடையும் தேசம்.
தேச நலன்.அவ்வாறு விரிவடையா,செலுமைப்படுத்தா கருத்துக்களைக் கொண்ட கட்சிகள் சுருங்கி மறைந்துவிடும்.

எது எப்படியிருந்தாலும் மக்கள் விழிப்புணர்வு பெறப்பெற அதற்க்கேற்ப
மக்களாட்சித்தத்துவமும் விரிவடைந்து உயர்ந்த தன்மை கொண்ட கருத்துள்ள கட்சிகள் தவிர்த்து மற்ற எல்லா கட்சிகளும் அழிந்துவிடும்.
அதற்கான காலம் அவைகள் கொள்கை கோட்பாட்டிலே அமையும்.


நண்டு : தமிழகத்தைப் பொறுத்தவரை

நொரண்டு : தமிழர்கள் ஆழந்த தமிழ் உணர்வாளர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும் ஒருங்கே பெற்றவர்கள். தமிழ் இனம் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களால் ஒரு பொழுதும் தாங்கிக் கொள்ள முடியாது. அடிபட்டு, அடிபட்டு, மிதிபட்டு, மிதிபட்டு சொல்லவொண்ணா துயரங்களைக் கடந்து வந்துள்ள இனத்தினர், இனி ஒருபோதும் அத்தகைய சுழலுக்கு இடமளிக்காமல் செல்வார்கள் அல்லது செல்ல வைக்கப்படுவார்கள்.
மேலும்,தமிழகத்தைப் பொறுத்தவரை தந்தைப்பெரியாரின் அடிச்சுவட்டிலிருந்து தான் விடியலும் ,வெளிச்சமும். அவரின் சிந்தனைகளை பின்பற்றி தனது பயணத்தை எந்தக்கட்சியும் தொடர்ந்தால் மிகவும் பிரகாசமான எதிர்காலத்தை அடையும் .

இங்கு மண் பேசும் மருந்து தந்தைப்பெரியார் .


நண்டு :

சரி, இந்தியாவைப் பொறுத்தவரை .... தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த எந்த கட்சிகள் அழிந்து போகும் கட்சிகள்?

நொரண்டு இந்தப் பதிவைப் படிக்கும் நீங்கள் ஏதாவது ஒரு கட்சி சார்ந்தவராக இருந்தால் அதன் கருத்தை அறிந்துகொண்டாலே, அதன் ஆயுட்காலம் தெரிந்துவிடும் .நடுநிலையாளராக இருப்பீர்கள் எனில் எந்த கட்சியின் கருத்து விரிவடைவதாக இருக்கிறதே அதற்கே ஆயுட்காலம் அதிகம்
(மூடராக இல்லாத பட்சத்தில் ).

இந்தியாவைப் பொறுத்தவரை,தமிழகத்தைப் பொறுத்தவரை ஏன்
உலகத்தைப் பொறுத்தவரை கூட பகுத்தறிவு கருத்துக்களும் ,
பொதுவுடமை சித்தாந்தங்களும் கொண்டு அஹிம்சை வழியில்
நடந்து செல்லும மக்கள் கட்சிகளுக்கு ஆயுட்காலம் என்பது
வரையறுக்கமுடியாத ஒன்றாக இருக்கும் .



"அரசியல் அறிவு பெற முயலாதவன் மூடன்"

.
















மீள்வு...
Download As PDF

Sunday, April 15, 2012

திருக்குறளை எழுதியவர் நக்கீரர் .






தமிழ்ப்புத்தாண்டு கூடல் நிகழ்வில் கலந்துகொண்டு இலக்கியவாதியாக,மாந்தரின வரலாற்று ஆய்வாளருமாக தன்னை அறிமுப்படுத்திக்கொண்டு பேசிய சகோதரர் திருக்குறளை எழுதியவர் நக்கீரர் என்பது எனது சமிபத்திய ஆய்வின் முடிவு என கூறக்கேட்டபொழுது நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.அதனை கண்டடைந்த முதல் நபர் தான் தான் என்பதில் பெருமை அடைவதாகவும்,அவ்வுண்மையை தான் புத்தகமாக வெளியிடும் வரை இங்கு தான் வெளியிடும் தரவுகளையும்,கண்டடைந்த உண்மைக்கூறுகளின்  மெய்மைத்தன்மைகளையும் யாரும் தயவுசெய்து வெளியே கசியவிடவேண்டாம் என்றும் ,இது சம்பந்தமாக வெளியிடவோ,பொதுவில் பேசவோ வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாங்கள் அவ்வாறே செய்வதாக உறுதியளித்தோம்.

தமிழை காக்க எத்தனை நெற்றிக்கண்களையும் சந்திக்கத்தயார். ஆனால்,நெற்றிக்கண்ணுடையான் நேர்மையை உலகிற்கு உணர்த்துவதுவே எமது வாழ்வு என்பது  எவ்வளவு ஏற்புடையது என்பதனை "நெற்றிக்கண்  திறப்பினும் குற்றம் குற்றமே' என்று கூறிய தீரரின் எழுத்துக்களை ஆய்வதன் மூலம் அறிவோம் என்ற அவரின் அறைகூவல் எம்மை மிகவும் ஈர்த்தது.

அவரின் ஆய்வு அவரின் தனி .ஆனால்,திருவள்ளுவரும்,நக்கீரரும் பொது என்பதால் நாங்கள் இது பற்றி மேலும் விவாதங்களை தொடர்ந்தோம்.நாங்கள் இது ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பற்றி விவாதித்தோம்.

தமிழ்ப்புத்தாண்டு,திருவள்ளுவராண்டு மட்டும் இது சம்பந்தமாக எழுந்துவரும் சர்ச்சைகளுக்கு  இப்புத்தகம் ஒரு  முடிவான முற்றுப்புள்ளி வைக்குமானால் அது தமிழை நல்லுலகை நோக்கி இட்டுச்செல்லும் என்பதுவே உண்மையிலும் உண்மை.

நாம் மிகவும் பின்தங்கித்தான் போயுள்ளோம்,தமிழை ஏட்டில் பகுத்தறிந்த அறிஞர் பெருமக்களால்.

தமிழனம் எவ்வளவோ பயணம் செய்யவோண்டியுள்ளது.

நாமாவது சரியான பாதையை நாமே ஏற்படுத்தி பயணிப்போம்.






இதையும் பார்க்க .


 தொடரும் ....













Download As PDF

Friday, April 13, 2012

"இயற்கை எதிர்பாளர்களை இயற்கை அழிக்கும்"... உறங்கிக்கொண்டிருப்பவன் எழட்டும் ...



நாம் நமது மொழி மற்றும் இனம் பற்றி விசயங்களில் இன்னும் அதிகமாக சிந்தித்து செயல்படவேண்டிய தருணத்தில் உள்ளோம்.கடந்த காலத்தைவிட தற்பொழுது நம்மை விட்டு தூரதேயங்களாக விரிந்துவிட்ட நமது இனத்தையும்,அதனால் மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது .நாம் தற்பொழுது நமது இனத்தின் ,மொழியின் வளமையையும்,அதன் வளர்ச்சி மற்றும் பயணத்தையும் கணித்து,மிகவும் பாங்காக நமது இன,மொழி அடையாளங்களை அடுத்து எடுத்துச்செல்லும் உன்னதப்பொறுப்பிற்குள் தள்ளப்பட்டுள்ளோம்.நாம் தான் இதனை செய்ய முடியும் என்பதை விட நாம் தான் இதனை செய்தே ஆக வேண்டும் என்பதுவே உண்மையிலும் உண்மை.இது நமக்கே ஆன கடமையாகும்.இதனை நாம் உணர்ந்து செயல்பட்டே ஆக வேண்டும்.நமது இனமொழி காப்பு உறுதிமொழிக்கேற்ப இந்த அமர்விற்கு புதிய உறுப்பினர்கள் வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.இருந்தாலும் ,கடந்த காலத்து பதிவுகளைப்போல இம்மவர்வும் நமக்கு நல்ல படிப்பினையையும் ,பாடத்தையும்,பயணத்தையும் கொடுக்கும் என்று நம்புவோமாக.இது மூன்றாவது அமர்வு என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்.நான் கலந்துகொள்ளும் இரண்டாவது அமர்வு இது.

தான் என்ற அகந்தையையும்,அகங்காரத்தையும் வெளிப்படுத்தி,அனைத்தையும் தெரிந்தவன் என்ற வேசமற்ற தன்மையுடையவர்களாக ,நமது குறிக்கோள் நமது இனம் மற்றும் மொழி மட்டுமே என்ற எண்ணம் கொண்டவர்களாக ,தனது அறிவுன் தன்மையை அனைத்தையும் மொழியில் வெளிப்படுத்தி ,இனத்தில்  வளர்ச்சியையும்,வனப்பையும்,உயர்வையும் கொண்டுவந்து சேர்த்த நமது முன்னோர்களின் பாதையில் பயணிக்கும் நாம்.நமது அனைத்தையும் அவர்களின் வழியிலே நின்று என்றும் உயர்ந்த குடிகளாவோம், பண்புடையவர்களாக.

புதியவர்கள் இங்கு எந்தவிதமான ஒளிவு மறைவு இன்றி,அனைத்து விசயங்களையும் மனத்திறந்து நமது இனம் மற்றும் மொழியின் நன்மையை மட்டும் கவனத்தில் கொண்டு,அதன் வளர்ச்சி மற்றும் பயணத்திற்கு உண்டான சங்கதிகளை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறேன்.அதோடு ,அனைவரும் தாங்கள் சந்தித்த அனைத்தையும் மிகவும் விபரமாக தெரிவிக்குமாறும் கோட்டுக்கொள்கிறேன்.அது நமது மொழியின் வளர்ச்சிக்கு,இனத்தின் பாதுகாப்பிற்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.நமது நடவடிக்கைகள் தான் நமது இனத்தையும்,மொழியையும் காக்கும் அருமருந்து என்பது தான் கடந்தகால அசைவுகள் வெளிப்படுத்தியுள்ளது.தற்பொழுதைய அமர்வில் கடந்த அமர்வுகளில் கலந்துகொண்ட சுசுமானியரும்,டமாசும் இதுவரை கலந்துகொள்ளமுடியாத நிலை கவலை தருகிறது.அது நமக்கு சற்று பின்னடைவே ஆகும்.


...


நான் புதியவன்,நான் "ங"விலிருந்து வருகிறேன்.நான் எங்களின் மூன்றாவது பீடத்தின் உத்திரவின் பெயரில் இங்கு அனுப்பப்பட்டுள்ளேன்.எனக்கு முன் பேசிய பாப்போ ஆகட்டும்,கீர்,எகமடான் மற்றும் லாத்தர் ஆகட்டும் தாங்கள் நிலையை தெளிவாக கூறினார்கள்.அது போலத்தான் நானும் கூற உள்ளேன்.ஆனால்,அதற்கு முன் "இயற்கை எதிர்பாளர்களை இயற்கை  அழிக்கும்" என்றும் ,அது விசயமாக நாங்கள் கண்ட சில தெளிவுகளையும்.மேலும்,அது நடைமுறையாகவும்,பழக்கவழக்கமாகவும் ஆகிவிட்டால் அதன் உண்மைத்தன்மையின் உறுதியையும் ,அதனால் நாம் அடையும் உயர்வையும் ,தாழ்வையும் நாங்கள் சோதித்தது அறிந்ததை இங்கு கட்டாயம் சொல்ல முனைகிறேன்.இது எனது சொந்த விருப்பமாகும்.பீடத்தின் செய்தியல்ல.பீடத்தின் செய்தியை பிறகு சொல்கிறேன்.சரி விசயத்திற்கு வருகிறேன்.

இயற்கையை நாம் முழுவதும் உணரவேண்டும்.நாம் அதனை நேசிக்கவேண்டும்.அதனை கூர்ந்து கவனிக்கவேண்டும்.அதனை கூர்த்து கவனிக்க ,கவனிக்க அது செய்திகள் சொல்லும்.அந்த செய்திதான்  உயிரினங்களின் செய்தியாகும்.அந்த செய்தி தான் இந்த பிரபஞ்சத்தின் வரலாறாகும்.அதனை இயற்கையால் மட்டுமே கூற முடியும்.அதனால் மட்டுமே அது சாத்தியமாகும்.அதனைத்தான் நாம் அறியவேண்டும்.அது கூறும் செய்திகளை அறிந்துகொள்ளும் பக்குவத்திற்கு வரும் வரை நாம் அதனை நேசிக்கவில்லை என்பதுவே முதல் பாடமாகும்.அதன் செய்திகள் நமக்கு புரியவில்லை எனில் நம்மை நாம் சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.இது இரண்டாவது பாடம்.இரண்டாவது பாடத்தின் முதல் சோதனையே நாம் இயற்கையாக இருக்கின்றோமா என்பதுதான்.இப்படி நாம் இயற்கையாக இல்லையெனில் நாம் இயற்கையை வெறுமையாக ஆயும் பகலில் கண்ணால் நட்சத்திரம் பார்க்கமுயற்சிக்கும் வானியலான் ஆவோம்.அப்பொழுது இயற்கை நமக்கு மிகவும் சிக்கலானதாகவும்,புதிராகவும்,அச்சமூட்டக்கூடியதாகவும் தோன்றி நம்மை இருமையில் ஆழ்த்திவிடும்.அத்தகைய சூழலுக்குள் இன்று நாம் சென்றுகொண்டிருக்கின்றோம்.இது நமது அழிவின் ஆரம்பம்.இயற்கையை நாம் பலநாட்கள் அழித்தாலும் அது தன்னை ஒரே வினாடியில் சீரமைத்துக்கொள்ளும் ,ஆனால் நாம் நம்மை அவ்வாறு ஒருபொழுதும் மீண்டுகொள்ளவே முடியாது .
எங்களின் பீடம் ,இயற்கை ஏன் தன்னை சீரமைத்துக்கொள்கிறது ?.அதன் அவசியம் என்ன ?.என்பதனை கடந்த இரு குறிஞ்சி ஆண்டுகளாக ஆராய்துவருகிறது .இன்னும் ஆய்வுகள் நடந்துகொண்டுதான் வருகிறது.எங்களில் பலர் இயற்கையில் செய்திகளை உணர ஆரம்பித்தவர்களாக உள்ளோம்.இன்னும் இரண்டு திவலைகளில் கடும் மழை பொழிய உள்ளதால் நாம் உடனே சாலைக்கு சொல்வோம் ....




இதையும் பார்க்க .


 தொடரும் ....



Download As PDF

Bloggers.com

Nandunorandu - Find me on Bloggers.com