வியாழன், 12 ஜனவரி, 2012

யாதும் ஊரே யாவரும் கேளிர் - உலகை புரட்டிப்போடும் புத்தகம்



"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Death's no new thing; nor do our bosoms thrill
When Joyous life seems like a luscious draught.
When grieved, we patient suffer; for, we deem
This much - praised life of ours a fragile raft
Borne down the waters of some mountain stream
That o'er huge boulders roaring seeks the plain
Tho' storms with lightnings' flash from darken'd skies
Descend, the raft goes on as fates ordain.
Thus have we seen in visions of the wise ! -
We marvel not at greatness of the great;
Still less despise we men of low estate."

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

-கணியன் பூங்குன்றன்

................

நேற்று என் மனைவி கோயிலுக்கு செல்லவேண்டும் என்றார்.அதானல் நானும் அவர்களுடன்  கோயிலுக்கு சென்றிருந்தேன்.அவங்க சாமி கும்பிட கோயிலுக்குள்ள போய்ட்டாங்க.வெளிய நின்னுக்கிட்டிருந்த என்ன அந்த வழியா வந்த எனது சக வழக்கறிஞர் என்னப்பா இந்தப்பக்கம் என எள்ளினார்.நான் நாத்திகன்,அடுத்தவனை சாமி கும்பிடாத,சாமி கும்பிடாத னு சொல்றவன் .அது மடத்தனம் அப்படினு சொல்றவன்.அப்படிப்பட்ட நான் என் வீட்டிலே கடவுளை கும்பிடற ஆளை திருத்த முடியாத ஒரு கையாலாவாதவன் என்பதுவே அவரின் எள்ளளுக்கான காரணம்.முன்பு இது போன்ற தருணங்களில் சூழலுக்கு ஒவ்வாத வறட்டு காரணம் ஏதாவது  ஒன்றை சொல்லி சமாளித்துவந்துள்ளேன்.ஆனால்,இப்பொழுது அவர் கேட்டதும் உடனே சரியான உரிய பதில் தர ,அவர் மன்னிக்கவும்,தெரியாமல் கேட்டுவிட்டேன் ,இனி இதுபோல் யாரையும் என் வாழ்க்கையில் கேட்கவேமாட்டேன் என்றார்.அதற்கு நான் ,ஏன் உணர்ச்சி வசப்படுறீங்க,இது மாதிரி இன்னும் நிறையா இருக்கு , நீங்க இந்த புத்தகத்த படிங்க ,அப்ப இன்னும் தெளிவாவிங்க ,இதுக்கே இப்படி ஆயிட்டா என கூறி அனுப்பிவைத்தேன்.

......

ஒரு ஊரில ஒரு  ராஜா இருந்தார்,அவருக்கு 3 மகன்கள்,
முவரும் தந்தை மாதிரியே அரசனாகவேண்டும் என ஆசைப்பட்டனர்.அதனால் அரசன் தனது நாட்டை விரிவுபடுத்த விரும்பினான்.ஆனால்,அண்டை நாடுகள் தனது நாட்டைவிட பலம் வாய்ந்ததாக இருக்கவே,அரசன் சதி செய்து மற்றவர்களை வெல்வதிலேயே தனது கவனத்தை செலுத்திவந்தான்.வருடங்கள் ஓடிக்கொண்டிருந்தன.சதி செய்வதிலேயே அவன் மனம் போய்க்கொண்டிருந்த்தால்,அவனின் 3 மகன்களுக்கும் நல்ல கல்வியும்,பயிற்சியும் கொடுப்பதை தவறவிட்டுவிட்டான்.அரசன் தனது மகன்களால் ஒழித்துக்கட்டப்பட்டார்.3மகன்களும் தங்களுக்குள் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் மாய்த்துக்கொண்டனர்.ராஜ்யமும் அடுத்தவர் கையில்  சென்றுவிட்டது.

இப்பவெல்லாம் இது போன்ற கதைகளை நாம் கேட்கமுடிவதில்லை.
ஆம்,கதை சொல்லிகளை நாம் காலச்சக்கரத்தில் இழந்துவருகின்றோம்.இருந்தாலும் இந்த கதைசொல்லிகள் விட்டுச்சென்ற புதிர்கள் இப்பொழுது இந்த புத்தகத்தின் மூலம் வெளியுலகிற்கு அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

அந்த புதிரில் ஒன்று தான் ஒரு ஊரில ஒரு  ராஜா.
நாம கூட விளையாட்ட ஏன் ஒரு ஊருள,ஒரு ராஜா தான் இருப்பாங்களா?.2 ராஜா இருக்கக்கூடாதானு.
ஆனால்,ஒரு ஊருக்கு ராஜா எப்படி இருக்கமுடியுமுனு கேட்கத்தோனவில்லை சிறுவயதில்.ஆனால்,இந்த நூலாசிரியர் கேட்கிறார்.கேட்பதோடு ஒரு புரிதலையும்,புரிதலையும்,நாம் இன்றுவரை புரிந்துவந்த புரிதல் தவற்றையும் சாடுவதோடு திருத்திக்கொள்ள தனாகவே நம்மை தயார்படுத்துகிறார்.
அதன் மீதான பயணத்தில் ,
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ; என்ற கணியன் வரிகளை
To us all towns are one என்ற தொனியில்
நாம் இனி பயன்படுத்துவது எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கும்  என்பதனை உணர்த்துகிறது இந்த நூல்...

பழமைகளைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் சரியாக புரிந்துகொள்ளாமல் புதுமையைச் சிறப்பாக படைக்க முடியாது என்பதனை சொல்லாமல் சொல்லிச்செல்கிறது இந்த நூல்.


இதையும் பார்க்க .


 தொடரும் ....





Download As PDF

20 கருத்துகள் :

shanmugavel சொன்னது…

சிறிய வயதுக்கதைகள் ஒரு ஊர்ல ஒரு ராஜா என்றுதான் துவங்கும்.ஆவலத்தூண்டுகிறது,தொடருங்கள்.

ராஜி சொன்னது…

பழமைகளைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் சரியாக புரிந்துகொள்ளாமல் புதுமையைச் சிறப்பாக படைக்க முடியாது என்பதனை சொல்லாமல் சொல்லிச்செல்கிறது இந்த நூல்.
>>
அப்படியா! அப்பிடின்னா பசங்களுக்கு வங்கி குடுத்தாகனுமே. பகிர்வுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி சகோ

Rabbani சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஹேமா சொன்னது…

ம்...சொல்லிட்டே வந்தேன்.சின்னக்கதையா முடிச்சிட்டீங்க.அடுத்ததரம் பெரிய ராஜா கதை சொல்லுங்க !

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி சொன்னது…

ஈரோடு வலைப் பதிவர் சங்கத்தில் உங்களைப் பற்றி ஒருவர் பேசினார்..வாய்ப்பேச்சில் வல்லவர் நண்டு நொரண்டு என்று...கதை சொல்வதிலும் கெட்டிக் காரர்தான்..நீங்கள்..

Admin சொன்னது…

1)இது மாதிரி இன்னும் நிறையா இருக்கு , நீங்க இந்த புத்தகத்த படிங்க ,அப்ப இன்னும் தெளிவாவிங்க ,இதுக்கே இப்படி ஆயிட்டா என கூறி அனுப்பிவைத்தேன்.
2) கதைசொல்லிகள் விட்டுச்சென்ற புதிர்கள் இப்பொழுது இந்த புத்தகத்தின் மூலம் வெளியுலகிற்கு அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
3)யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ; என்ற கணியன் வரிகளை
To us all towns are one என்ற தொனியில்
நாம் இனி பயன்படுத்துவது எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கும் என்பதனை உணர்த்துகிறது இந்த நூல்...
4)பழமைகளைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் சரியாக புரிந்துகொள்ளாமல் புதுமையைச் சிறப்பாக படைக்க முடியாது என்பதனை சொல்லாமல் சொல்லிச்செல்கிறது இந்த நூல்.
அந்த நூலைப் பற்றி குறிப்பிட்ட மேற்கண்ட நான்கு செய்திகளும் அந்த புத்தகத்தை வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது..தொடருங்கள்..இளைஞர் தின மற்றும் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்..

சசிகுமார் சொன்னது…

உடனே வாங்கி விடுகிறேன் சார்.......அதிக இலக்கிய நடையில் இருக்காதே....நமக்கு இலக்கியம் கொஞ்சம் புரியாது...

சின்னப்பயல் சொன்னது…

கேக்றதுக்கு பொறுமையும் இல்லை
இப்பல்லாம்...எல்லாம் நெட்ல கெடக்கிது..:-)

K.s.s.Rajh சொன்னது…

அருமையான பகிர்வு பாஸ்

P.S.Narayanan சொன்னது…

கடவுள் பேரில் பக்தி என்பது நம்பிக்கை அடிப்படையிலானது. உங்களுக்கு எப்படி கடவுள் இல்லை என்ற நம்ப உரிமை உள்ளதோ அதேபோல் கடவுள் இருக்கிறார் என்ற நம்ப உங்கள் துணைவியாருக்கு உரிமை உள்ளது. அதை கட்டுபடுத்த நினைப்பது ஆணாதிக்கம். உங்கள் துணைவியார் இதே மாதிரி நினைக்கலாம் அல்லவா! காந்தி தன்னுடைய சில நம்பிக்கைகளுக்காக தனது மனைவி மக்களை கஷ்டப்படுத்தினார். சாமி பேரை சொல்லி நடக்கும் கூத்துக்களுக்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல கார்ல் மார்க்ஸ், மோகன் தாஸ் காந்தி மற்றும் ஈ வே ராமசாமி போன்றோரை கடவுளர்கள் ஆக்கியது. பேர் சொல்லி அழைப்பதே ஒரு அவமரியாதை என்று நினைக்கின்ற மூட நம்பிக்கை மத மூட நம்பிக்கைகளை விட காட்டுமிரண்டித்தனமானது.

கடவுளர்களையும் அதை நம்புகிறவர்களையும் திட்டுவது மட்டுமே சுயமரியாதை என்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஜெயேந்திர சரஸ்வதிக்கும் மு கவுக்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்? ஒருவர் கடவுளை பூசனை செய்து பிழைப்பு நடத்துகின்றார். மற்றவர் கடவுளைத் திட்டி கொள்ளை அடிக்கிறார். இரண்டுமே சுய மரியாதைக்கு புறமபானவைதான்.

கார்ல் மார்க்சின் படைகளுக்கு சிவப்பு, காந்தியன் சீடர்களுக்கு தொப்பி, ஈ வே ராவின் பஜனைக்கு கருப்பு, சபரி மலைக்குக் கருப்பு, மேல்மருவத்தூருக்கு காவி இவை அனைத்துமே கடைந்தெடுத்த மூட நம்பிக்கைகள். காந்தியாருக்கு மகாத்மா என்ற பட்டம் கொடுத்ததற்கு பழியாக
ஈ வே ராவுக்கு பெரியார் பட்டம். இரண்டிலும் சித்தாந்தம் கொலை செய்யப்பட்டது. பக்தி அறிவை மறைக்கும். இது கோயிலுக்கு மட்டுமல்ல.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - நாத்திகவாதியாக இருப்பது தவறல்ல. அடுத்தவரின் கொள்கையினை மதிக்கும் வண்ணம் மனைவி கோவிலுக்குள் சென்ற போது - வெளியில் காத்திருந்தது பற்றி மிக்க மகிழ்ச்சி. கதைகள் அருமை - புத்தகம் பற்றிப் பிறகு படிக்கிறேன். நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா

துரைடேனியல் சொன்னது…

Ellame arumai. Puthagam vaasikka aavalai thoondukirathu Sir.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

புத்தகத்தை உடனடியாக வாங்கி படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டும் விதமாக உள்ளது உங்க பதிவு. நன்றி பகிர்வுக்கு.

சிவானந்தம் சொன்னது…

///அடுத்தவரின் கொள்கையினை மதிக்கும் வண்ணம் மனைவி கோவிலுக்குள் சென்ற போது - வெளியில் காத்திருந்தது பற்றி மிக்க மகிழ்ச்சி.//

இதுதான் நாகரீகம். மனைவியாகவே இருந்தாலும் நாம் நமது விருப்பத்தை திணிப்பது தவறு. இந்த நாகரீகம்தான் மதவாதிகளிடம் இல்லை.

கும்மாச்சி சொன்னது…

புத்தகத்தை வாங்க உள்ளேன். அறிமுகத்திற்கு நன்றி.

சேகர் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.. உடனடியாக வாங்கி விடுகிறேன்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

புத்தகம் வாங்கி படித்து விட்டு சொல்கிறேன் Sir!

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

mahendrababu rajendran சொன்னது…

திருக்குறள் படியுங்கள். நன்றாக புரியும் வகையில் விளக்க உறையும். ஆங்கில மொழிபெயர்ப்பும் இங்கே காணலாம் www.thirukkural.com

Thenpulathaan சொன்னது…

nice work visit mine

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "