வியாழன், 19 ஜூலை, 2012

'புத்துலகு படைக்க வரும் புதிய பகுத்தறிவாளர்களே' - வருக...வருக...




நண்பர்  இக்பால் செல்வன்  அவர்கள்  

தமிழ் பகுத்தறிவு வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

விடுத்துள்ளார்.

மிகவும் நல்ல செயல்.

சவால்கள் நிறைந்த  பயணத்திற்கு  வாழ்த்துக்கள்.


அவரின் அழைப்பை கண்டதும் எனக்கு நினைவிற்கு வந்தது எங்களின் முந்தைய முயற்சி.




....


நொரண்டு : எதாவது புதிய செய்தி உண்டா ?

நண்டு : ம்......ம்....இந்த நூற்றாண்டின் புதிய பகுத்தறிவாளர்கள் ஒரு சங்கம்ஆரம்பித்து இருக்காக .

நொரண்டு என்ன புதிய பகுத்தறிவாளர்கள் சங்கமா ?

நண்டு : ஆமாம் ,...புதிய பகுத்தறிவாளர்கள் சங்கம் என்றில்லை
' பகுத்தறிவாளர் சங்கம்' என்று ஒரு புதிய சங்கத்தை ஆரம்பித்து இருக்காக...

நொரண்டு : எப்போ.. ?...எங்க... ? யார் ...?....

நண்டு : எனக்கு அதல்லாம் தெரியாது . எனக்கு வந்தத சொல்றேன்.முதலில்
நான் அவர்களின் சிறு விண்ணப்பத்தை கண்டு அதிர்ந்தேன் ....

நொரண்டு  ஏன் ?.....

நண்டு : ஏன் ?.....உனக்கு எதுவும் தெரியாதா?...உனக்குஎதுவும் வரலையா?

நொரண்டு முதல்ல விசயத்துக்கு வா .

நண்டு : அதென்ன பகுத்தறிவாளர்கள் என்று சொன்ன உடனே பழமைவாதிகள்
தாக்க ஆரம்பித்து விடுவார்களா என்ன ?? இந்த நூற்றாண்டிலுமா... ??? '
பகுத்தறிவாளர் சங்கம்' என்று கூறிக்கொள்பவர்கள் உண்மை தான் கூறுகின்றனரா ? அல்ல ......

நொரண்டு :  பொதுவாக பகுத்தறிவாளர்கள் பொய் எதுவும் கூறமாட்டார்கள் . தவறு,தவறு ,பகுத்தறிவாளர்கள் எப்போதும் உண்மை மட்டுமே பேசுவர் ,மேலும் தங்களின் பழமைவாதத்தை நிலைநாட்ட உடனடியாக செயலில் இறங்கி பகுத்தறிவாளர்களை பழமைவாதிகள் அழிக்க நினைப்பது தொடரும் வரலாற்று நிகழ்வே . எந்த நூற்றாண்டானாலும் அப்படியே .ஆனால் , பகுத்தறிவாளர்கள் மன்னராட்சி காலத்தை விட தற்பொழுது
பழமைவாதிகளோடு மற்றவர்களின் இன்னல்களுக்கும் ஆளாகவேண்டிவரும்  ..

நண்டு :  யார் அந்த மற்றவர்கள் ?

நொரண்டு பழைய பகுத்தறிவாளர்கள் ....

நண்டு :  ....?....புரியவில்லை......?

நொரண்டு என்றும் ,எப்பொழுதும் பழமைவாதிகளோடு, பகுத்தறிவாளர்களாக தங்களை உருவகப்படுத்தி்கொண்ட பழைமையானவர்களும் ( பழைய பகுத்தறிவாளர்கள்) சேர்ந்து, புதிய கருத்துக்கள் அது எங்குதோன்றினாலும் தங்களின் பழைமை கருத்துக்களை பாதுகாக்க எதிர்க்கவே செய்வர் .பழமைவாதிகளை விட பழைய பகுத்தறிவாளர்கள் தான் தங்களின் கடுமையான எதிர்ப்பையும், முட்டாள்தனமான விவாதத்தையும் முன்வைப்பர் .

நண்டு :  புதிய பகுத்தறிவாளர்கள் விவாதம் என ஆரம்பித்துள்ளனர் .அது நன்றாகத்தான் உள்ளது.( எனக்கு தெரிந்ததை சொன்னேன் )

நொரண்டு  அப்படியா ....அப்போ ..நீ சேந்துட்டே

நண்டு :  இல்ல ...இல்ல ....நான் எங்க ஊரில இதே மாதிரி ஒரு சங்கத்தில இருக்கோன் .நாங்களாம் சேர்ந்து ஆரம்பிச்சது .நான் நிறையா பேசியிருக்கோன்.எத்தனையோ நிகழ்ச்சிகள் செஞ்சிருக்கோம் .
எங்க தலைவர் எவ்வளவோ கருத்துக்களை விட்டுச்சென்றுள்ளார் அதை மக்களிடம் கொண்டு செல்வதற்கே இனி ஏழேழு பிறவி எங்களுக்குவேண்டும். இப்பப்போய் ... என்ன .....


நொரண்டு  சரி விடு . ஆமா நீ உன் சிஸ்டத்தை அப்டேட் சேஞ்சிட்டையா ?

நண்டு :  ம்......அதல்லாம் ... அப்பப்போ..உடனுக்குடனே...ஒரு வினாடி கூட தாமதம் இல்லாம...என் சிஸ்டத்தை பாத்தேன எல்லாமே நியு தான்..ஏங்கேக்கர...

நொரண்டு : அட ...அறியா மனிதா ... அப்ப உன் அறிவை மட்டும் ஏன்
 அப்டேட் சேஞ்சுக்கமாட்டேங்ர...கொள்கைகளும், கோ ட்பாடுகளும் உறைந்து விடக் கூடாது. உறைந்து போகும் கொள்கைகளும் , கோட்பாடுகளும் மதமாகிவிடும்(அதுஒருகாலத்தில் பகுத்தறிவாக இருந்திருந்தாலும் சரி) .

நீ மதமாகிய கொள்கை,கோட்பாட்டில் இருக்கின்றாய்.
உன்னால் உண்மையை சுவாசிக்க முடியாது.


நீ  'வரலாற்றை படித்து அறிவியலில் வாழ்கின்றாய் .....
அறிவியலை படித்து வரலாற்றில் வாழ் ' ...
அப்போதுதான் உண்மை உனக்கு த்தெரியும்.


நண்டு :   சரியப்பா ...சரி.....நீயும் ஒரு பகுத்தறிவாளி் தான்...போ..... .
எப்ப சங்கம் ஆரம்பிக்கர.. 
முதல்ல நீ் http://pakuttarivalarsangam.blogspot.com/ .... போய்ப்பார்........

நொரண்டு : எனக்கு தெரியும்...உன்ன டெஸ்ட் பார்த்தேன்.

நண்டு : அதானே ....நீயும் தத்துவம் பேசர.............

( எனக்குள் பல புதிர்கள் மின்னி மறைந்தன ....)


நொரண்டு :: உண்மையில் ...

. 1.செம்மொழியாம் தமிழ் மொழி புதிய பாதையில் வீறுநடை
போடும் காலம் வந்துவிட்டது என நினைக்கிறேன் .

. 2. தமிழகத்தை புதிய கருத்துக்கள் இனி அலங்கரிப்பதை பார்க்கலாம்.

. 3. புதிய பகுத்தறிவாளர்களின் உலகை மாற்றும் உன்னத கருத்துக்கள் தமிழுக்கு இனி வளம் சேர்க்கும் என நம்பலாம்.


. எனவே,

 'புத்துலகு படைக்க வரும் புதிய பகுத்தறிவாளர்களை'.... . . . 
வருக...வருக...என வரவேற்கிறேன்




அதனை மீள்பதிவாக்குகின்றேன்    இங்கே  பார்வைக்கு.


Download As PDF

10 கருத்துகள் :

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

எல்லா காலக்கட்டத்திலும்.. எந்த சமுதாயத்துடனும் எந்த சூழ்நிலையிலும் ஒத்துப்போவதுதான் பகுத்தறிவு...

இணைவோம்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல கருத்துக்கள்... இணைவோம்..

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

ராஜி சொன்னது…

துண்டை போட்டு எனக்கும் ஒரு சீட்டை புடிச்சு வைங்க.

Admin சொன்னது…

இக்பாலின் பதிவை வாசிக்கவில்லை.வாசிக்கிறேன்..
நண்டு நொரண்டுவின் பேச்சாடலில் என்னைக் கவர்ந்தது.
"வரலாற்றை படித்து அறிவியலில் வாழ்கின்றாய்
அறிவியலை படித்து வரலாற்றில் வாழ்"

Unknown சொன்னது…

ஹாஹா எஞ்சாய்!

kaialavuman சொன்னது…

//உறைந்து போகும் கொள்கைகளும் , கோட்பாடுகளும் மதமாகிவிடும்//
ரசிப்பதற்கும் சிந்திப்பதற்கு ஏற்ற வார்த்தைகள்.

MARI The Great சொன்னது…

நல்ல அலசல்.. உங்கள் இடுகைகள் நிச்சயம் அவசர கதியில் வாசிக்க கூடியவை அல்ல.! வாழ்த்துக்கள்.!

suvanappiriyan சொன்னது…

//உறைந்து போகும் கொள்கைகளும் கோட்பாடுகளும் மதமாகி விடும்//

'அவ்வப்போது நமது அறிவை பயன்படுத்தி நிகழ்காலத்துக்கு ஏற்றவாறு அடிப்படை மாறாமல் அந்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பயன்படுத்தினால் அதுவே அழகிய மார்க்கமாகி விடும்'

பெயரில்லா சொன்னது…

முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு .. நண்டு நொரண்டுவின் பேச்சுக்கள் உண்மையில் இரசிக்கும்படியும் சிந்திக்கும்படியும் இருக்கின்றது .. உங்களின் இப்பதிவு எக்காலத்துக்கும் பொருந்தும் போல் இருக்கே !!!

புதிய உலகினை படைக்க புதிய பகுத்தறிவாளர்கள் என்றென்றும் தேவையே ஆகும் !!! இன்றைய புதிது நாளை பழையது ஆகிவிட்டால், அதனையும் நீக்க முனைய வேண்டும் ...

சரியான வார்த்தையை சொன்னீர்கள் ...

உறைந்து போகும் கொள்கைகளும் கோட்பாடுகளும் மதமாகி விடும் ... !!!

இது அனைத்துக்கும் பொருந்தும் ... வட கொரியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சி கூட இன்று மதமாகிக் கொண்டு இருக்கின்றது .. இப்படித் தான் அந்தக் காலத்திலும் நடந்திருக்கும் என்பதை அறிய முடிகின்றது !!!

தமிழ் பகுத்தறிவாளர் தளம் குறித்து எழுதியமைக்கு மிக்க நன்றிகள் !

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "