வெள்ளி, 6 ஜனவரி, 2017

இருமை தமிழகமே விழித்தெழு



உலகம் இருமையில் இருந்த பொழுது விழித்துக்கொண்டேன்.
ஆனால்,எதுவும் தெரியவில்லை எங்கும் இருமை யாரோனும் உதவ உள்ளனரா என்று தேடிய கணம் யாவரும் இருமையில் அதன் தாண்டவத்தால் ஆகாசிக்கப்பட்டு.

உலகம் இரண்டாவது இருமையில் இருந்தபொழுது தான் நீ வந்தாய் உதவிசெய்வதாக கூறினாய் உன்னால் முடியாது என மூன்றாவது இருமையில் இருந்தபொழுது தெரிந்துகொண்டேன்.
இரண்டாவது இருமையில் சில நிபந்தனைகளும்,கட்டுப்பாடுகளும் நம்மிடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது ஆனால் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மூன்றாம் இருமையில் நாம் நம்மை சரியான விழிப்புக்கு உட்பட்டிருந்தபொழுது முற்றிலுமாக நீ மாறியிருந்தாய்.

எனக்கு நன்றாக ஞபகம் வந்த இரண்டாவது இருமை நிபந்தனைகளை நீ புறக்கணித்து புதிதாக ஏதேதோ செய்யத்துவங்கிவிட்டாய் .அதனால் நாம் வேறுவேறு பாதையில் பயணம் செய்யவேண்டியிருக்கும் என்ற எனது எச்சரிக்கையை நீ புறக்கணித்துவிட்டாய் ஆனால் அப்படியே நடந்தது .இருமையினின்று மீழ்வது என்பதனைத் தவிர்த்து மற்ற அனைத்தும் நடந்துகொண்டேயிருந்தது.இருமையினின்று இருமையில் விழித்தவர்களின் உதவியுடன் தான் நீக்கமுடியும் என்ற எனது கருத்தை நீ உனது செயலால் முடமாக்க முனைந்து அனைவரையும் மேலும் இருமையிலேயே ஆழ்த்தி அதில் சந்தோசமடைந்தது  நம்மிடையே பிளவு ஏற்படத்துவக்கமானது.விழிப்படைய என நீ இருமையில் உள்ளவர்களை விழிப்பிற்கு பதில் புதிய இருமையில் ஆழ்த கடின சிறத்தை எடுத்து இயங்கிகொண்டிருக்கிறாய் என என்னால் உணர முடிந்தது. ஆனால் ஒன்றை மட்டும் உன்னால் புரிந்துகொள்ளமுடியாமல் போனது எனக்கு விளங்கவில்லை. இருமையினின்னு விடுவிக்காமல் வேறு இருமையில் ஆழ்த்தும் போக்கு அவர்களை ஏதோ ஒன்றில் விழிக்கச்செய்துவிடும் என்பது தான்.அது அப்படி அவர்கள் விழிக்கும் நிலையில் உன் நிலை மிகவும் தூரப்பட்டுப்போகும் அதனால் நீ நீ நினைக்கும் கடவுளாகாமல் மிகப்பெரிய வெறுமைக்கும் ஆளாகி உன்னை நீயே மறக்கும்படி போவதுடன் மூன்றாம் இருமையைத்தாண்டி நான்காம் இருமைக்குள்ளும் தள்ளப்பட்டு முழுவதும் உன்னை இருட்டடிப்பு செய்து கொள்ளப்படுவாய் என நீ உணராமல் உனது இயக்கம் இருப்பது கண்டு நான் மிகவும் கவலைப்பட்டேன் .ஆனால்,எனது கவலைகளை உன்னால் கொஞ்சமும் கண்டுகொள்ளப்பட்டதாக தெரியவில்லை.தற்பொழுது இருக்கும் இருப்பு உனக்கு ஏதொ ஒரு வகையில் சவுகரியமாகப்பட்டதோடு உனக்கு ஆதாரவாகவும் இருப்பதுபோல்அதில் ஒரு உலகை உருவாக்கிக்கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் நீ அறியாது தவறான பாதையில் உனது பயணமும் உன்னை சார்ந்தவர்களின் பயணமும் இருப்பதை என்னால் கண்டுணரமுடிந்தது.ஆனால்,ஒன்றை நான் அடிக்கடி கூறி வந்தேன்.உண்மை விழிப்பு எப்படியும் எதுவழியாகவும் பகிரங்கமாக வெளிப்பட்டே தீரும் யாரும் இருமை கொண்டு அதனை மறைக்க முடியாது.மேலும் இருமை என்பதற்கு அர்த்தமே இல்லாத ஒன்றாக இருப்பதனால் மறுஇருமை உண்மைவிழிப்பில் அணுஅணுவாக சிதறி சின்னாப்பின்னமாகி உன்னையும் சிதைத்துவிடும்.நீ எவ்வளவு வலிமைகொண்டவனாக இருந்தாலும் உன்னை உண்மைவிழிப்பு மிகவும் சர்வசாதாரணமாக வென்றுவெளிப்பட்டுவிடும்.நீ உன்னை திருத்தி இருமையிலிருந்து மீண்டு விழிப்பை நோக்கி நகராத பட்சத்தில் உன் அனைத்தும் நீர்மூலமாகாப்போய் நீயும் அப்படியே ஆவாய் என. நான் உனக்கு பல தடவை எடுத்துரைத்தாலும் நீ இருமையின் பிடியில் சொகுசாக இருந்து வருவதால் எனது கூற்றை கண்டக்கொள்ளாமல் இருக்கிறாய்.ஆனால் உன்னை மிகவும் அருகிலிருந்து கவனிக்கும் விழிப்பு உனக்கு பல சந்தர்ப்பங்கள் கொடுத்துக்கொண்டே இருக்க ,அவைகளை நீ ஏதோ உன்னின் இருமைச்செயலால் நடப்பதாக இருமாப்புடன் நினைத்து செயல்பட்டால் உண்மை விழிப்பு பல வழிகளில்  மாற்றப்பார்க்கும் கடைசியாக தனது கடை ஆயுத்ததை பயன்படுத்தி உன்னை விழிப்பின் தன்மைக்கு முதலில் மாற்றப்பார்க்கும் இவ்வாறுபோகும் பொழுது இருமை அழிந்துவிடும்.


முதலில் விழித்துக்கொண்டவன் நான் என்று என்னை அடையாளம் கூறுவதாக நான் என்னை நினைத்துக்கொள்ளவில்லை.  ஆனால் இருமையில் ஏதோ ஒரு நகர்வில் அனைவரும் ஏதச்சையாக நகர்ந்துகொண்டு தான் இருக்கின்றனர்.ஆனால் அவர்கள் விழித்துக்கொண்டதாக ஒரு இயைப்பை ஏற்படுத்துக்கொண்டு இருமையிலிருந்து விடுதலையாகாமல் விடுதலையாகிவிட்டதாக நினைத்துக்கொண்டு  இயங்குகின்றனர் என்பதனை நான் உணர்ந்துகொண்டேன். அனைவரும் ஏதோ ஒரு வகையில் இருமையில் அமர்ந்து அதில் சுகம்காண்பது என்பதை என்னால் எப்படியென யோசிக்க முடியவில்லை.ஆனால் அத்தகைய சமயத்தில் தான் நீ என்னருகில் வந்தது போல் ஒரு எண்ணம்.என்னை மிகவும் பாதித்த நான் உன்னிடம் உரையாடிய முதல் நிகழ்வு என்னை மிகவும் யோசிக்கவைத்ததால் நான் நீ என்னருகில் இருப்பதாக உணர்ந்தேன்.இருமையில் இயங்கும் மனிதர்கள் தங்களுக்குள்ளே நீ இருமையில் இருக்கிறாய் இல்லை நீ தான் இருமையில் இருக்கிறாய் என விவாதித்துக்கொள்வதும் நாத்திகம் ஆத்திகம் சாத்வீகம் என பலப்பல இசங்கள் பேசிக்கொல்வதும் மற்றும் பல்வேறு கோணங்களில் ஆகிக்கொள்வதும் பிறகு தாங்கள் இருமைக்குள்ளிருந்தே இயங்கிச்செல்வதும் ஆன விசயத்தை பகிர்ந்துகொண்டோம்.ஆனால் நீயும் ஒரு புரியாத இருமைக்கோட்பாட்டை உன்னுள் வைத்துக்கொண்டு என்னை பிரமாண்டமாய் பார்த்து பிரமித்து என்னிடம் வேடம் போட்டிருக்கின்றாய் என என்னால் உந்தன் மூன்றாம் இருமையில் தான் உணர முடிந்தது என்றால் நானும் ஏதொ ஒரு இருமையில் தான் இருந்திருக்கிறேன் என என்னை நானே குதைத்துக்கொண்டேன் .ஆனால் உண்மையில் உன்னை நான் ஒரு பொருட்டாக எண்ணாததால் தான் அப்படி நினைத்தேன் என்பதனை உணரமுடிந்த்து.முடிந்தவரை நகர்வு என்பது இருமையை கடந்து செல்லும் வழியன்று.முற்றிலும் இருமையை அறிந்து அதனை அழித்து செல்வது தான் இருமையைக் கடக்கும் செயல் என எனது கருத்தை உன்னுள் நான் உணர்த்த முற்பட்டமுனைநத்து கொண்டிருக்கையில் நீ மற்றொரு இருமையில் உள்ளாய் என்பதனை அறிந்ததால் நான் உன்னுடன் எந்த விவாதத்திற்கும் உட்படாமல் உன்னை ஒரு பார்வை மட்டுமே பார்க்க எண்ணினேன்.ஏனெனில் நான் உன்னையே நோக்கினால் இருமையில் இருந்து விலக நினைக்கும் பலருக்கும் எனது பயணத்தின் பயன்பாடு பயனில்லாமல் போகுமே அதனால்.இருந்தாலும் நான்காவது இருமை ஐந்தாவது இருமை என இருமைகளை உருவாக்கிக்கொண்டு இருமைக்குள் இருமை என அழிந்துகொண்டு தவறான வாழ்வு வாழ்ந்துகொண்டு தவறை மறைக்க அடுத்த இருமையை பழித்துக்கொண்டு ,தவற்றிக்கு திருந்தவும் எண்ணாமல் ,அடுத்தவர்களை அதுவும் இருமையில் உள்ளவர்களை ,ஏன் திருத்தவேண்டும் ஏன் அவர்களுக்கு தண்டனை என உணர்த்தாமலே ,பழிச்சொல்வதும் ,அதனை ஏற்று நடக்கும் அவர்களை அடிமைகளாக ஆக்க நினைத்து செயல்படுவதும் ,தண்டனைக்குரிய செயல்பாடாகும் என்பதனையும் உனக்கு உணர்த்தியும், நீ சுகமாக ஒரு நிலையிலிருந்து செயல்படுவதால் சுகப்படும் செயல் அழியும் என எண்ணாமல், அழிவை நோக்கி நீயும் சொல்வதுடன், உன்னை பின்பற்றுபவர்களையும் ஏமாற்றி ,நீயும் ஏமாறுற்றப்பட்டு, உனக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி சிறிதும் அறியாமல், நீ காலம் கடந்த வாழ்விலும் ,மரணத்திலும் அனைத்தையும் நிறுத்தி ,உனதறிவை முற்றுப்பொற்றுக்கொள்வாய். உனது திட்டத்தின் ஒவ்வொரு படியும் சரிந்துள்ளதை நீ உணர மறுக்கின்றாய் ,இருந்தாலும் உனக்குள் உன்னை பார்க்கவும் மறுக்கின்றாய் .நான் முடிவாக உன்னிடம் எதுவும் சொல்வதில்லை, உனது இயக்கத்தினை கண்டுகொள்வதும் இல்லை ,மேலும் உன்னை நுகர்வதும் இல்லை ,என்ற முடிவுடன் உன் இருப்பிடம் தவித்து , பிறவெங்கும் இருமை அகற்றும் செயல்களில் நான் ஈடுபட உத்தேசித்து  எனது செயலை எனது பாணியில் செய்ய நான் எப்பொழுதும் இயக்கிக்கொண்டிருக்கின்றேன்.உன் தொடர்பு ஏதோ ஒன்றை ஏற்படுத்தும் என நினைத்து,நான் செய்யும் அனைத்திற்கும் நீ உறுதுணையாக இருப்பாய், இருமையை இருவரும் சேர்ந்து அகற்றுவோம் என எண்ணினேன்.இவ்வொண்ணமே தவறு ஏனெனில் ஒன்றைச்செய்வதனை அதனை உருவாக்கியாவனால் மட்டுமே முழுமையாக முடியும் பிறவெல்லாம் சார்புதான் ,அதற்கு துணையாகவே உதவியாகவே பிறரை நினைத்து இயங்குவது முட்டாள்தனம், இதுவும் ஒருவரது இருமையே என நினைத்துக்கொண்டு அனைவரும் இப்படிப்பட்ட நிலையில் செயல்படுவது மிகவும் சரியென எனக்குப்படும்படி உணர்த்திய காரணத்தால் உன் மீது எனக்கு பரிதாபத்துடன் கூடிய பரிவு வருகின்றது .உன்னைவிட்டு விலக நினைத்தாலும் உன் அறியாமை,உன்னைவிட்டு என்னை அகழவேண்டாம் என மறுக்கின்றது .நீ மற்றவர்களை விட இருமை உலகில் உன்னை மிகவும் சிக்கலடைத்துக்கொள்வதில் சுகப்படுகின்றாய்.உன்னையும் மீட்பது எனது கடமைகளில் ஒன்று என்பதால் உன்னையும் இருமையிலிருந்து வெளிக்கொணர போராடமுடிவுசெய்கின்றறேன்.இருமையில் ஆழ்ந்துள்ளவர்கள் எண்ணிக்கையில் ஒன்று குறைந்துள்ளது என நினைத்தேன் இப்பொழுது ஒன்று கூடியுள்ளது தமிழகமே தமிழகமே உனதருகில் நான் இருப்பதால்அந்த ஒன்று நீ எனம்பதனை அறிவிக்க முடியாமல் எனது பணியை தொடர்கிறேன்...
இனி இருமையினின்று விழித்தொழுவாய் தமிழகமே விரைவில்.                                

                    
Download As PDF

6 கருத்துகள் :

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

விழிக்கும், நம்புவோம்.

KILLERGEE Devakottai சொன்னது…

விரிவான சிந்தனை அருமை நண்பரே

வலிப்போக்கன் சொன்னது…

தூங்கிறவனை எழுப்பிவிடலாம்....தூங்கிறமாதிரி நடிக்கிறவன எழுப்ப முடியாது.. என்பது இங்கு பொருத்துகிறேன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல சிந்தனை....தமிழகம் ஒளிரும் என்று நம்பிவோம்!!

அபயாஅருணா சொன்னது…

தூங்குவதில் சுகம் கண்ட பின்னே விழிக்க மனம் வருவதில்லை . விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்

Parameswaran C சொன்னது…

சிந்தனைக்குரிய பதிவு..மரியாதைக்குரிய ஐயா,வணக்கம். தமிழகம் ஒளிரும் என் தன்னம்பிக்கையுடன் காத்திருப்போம்..

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "