சனி, 7 ஜனவரி, 2017

என் ரோஜாத் தோட்டம் - கவிதைகள்









                                                   என் ரோஜாத் தோட்டம்
                                                   மலரும் மணக்கும்
                                                   நானில்லாவிட்டாலும்.
























.======
















                                                    கனவு ...
                                                    கதை எழுதுகிறேன் ...
                                                    நிஜம்  ...?



















 .======


















                                         படிந்தவைகளை  அகற்ற அகற்ற
                                         மீண்டு மீண்டும்  படியும்  தூசுகள்
                                         சோகம்




























@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@







நொரண்டு :   ம் ....ம் ....ம் .... ஆகா ..ஆகா....காஆககா ....
வணக்கம் நண்டு . 

நண்டு :வாங்க நொரண்டு ,என்ன  முனகல் . 

நொரண்டு :அது ஒன்னுமில்லை ,கவிதை ஒன்னு புரியல அதான் . 

நண்டு :ம் ... 

நொரண்டு :நீ பாட்டுக்க   ம் ....போட்டுட்டே போ . 

நண்டு :சரி விசயத்துக்கு வா 

நொரண்டு :நீ சிற்பா னு சொல்லுவியே அது ஹைக்கூ தானே. 

நண்டு : இல்லை. 

நொரண்டு :அப்ப என்ன 

நண்டு : இது சிற்பா அவ்வளவே . 

நொரண்டு :சரி ...சரி...சரி...எனக்கு சில ஹைக்கூவிற்கு ,
மன்னிக்கவும் ...மன்னிக்கவும் ... அப்படியே வாய் வருது, சரிப்பா சிற்பாவிற்கு அர்த்தம் சொல்லவும். 

நண்டு : கவிதைக்கு அர்த்தம் கேட்பது அபத்தம் நொரண்டு. 

நொரண்டு :ஓ...ஓ...ஓ...எனக்கு புரியலையே நான் என்ன செய்ய ?. 

நண்டு : எனக்கு புரிந்ததை  சொல்ரேன் ,இது சிற்பா எழுதியவருக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை  தெரிஞ்சு புரிஞ்சுக்கோ. 

நொரண்டு :சரிப்பா. 

நண்டு : சரி சிற்பாவை சொல். 

நொரண்டு : ம் ...
படிந்தவைகளை  அகற்ற அகற்ற
மீண்டு மீண்டும்  படியும்  தூசுகள்
சோகம் 

நண்டு : ம் ...தூசுகள் படிய படிய வரும் ,அது போல சோகம் . 

நொரண்டு :இது தெரியாத.வேற ... 

நண்டு :  ம்...

சோகம் என்பது ஒரு உணர்வு .அது பல வகையினால் ஏற்படும்.
தூசுகள் படிய படிய ஏற்படும்.

தூசுகள் படியாமல் இருக்கவேண்டும் என்றால் நாம் மட்டும் அல்ல நமது சுற்றமும்,சூழலும் சுத்தமாக இருந்தால் தான் தூசு படிய வாய்ப்பில்லாமல் போகும்.அது போலத்தான் சோகமும் .சுற்றம் சரியல்லை என்றால் ....

தூசுகள் இங்கு படிமம். அதன் படிமம் சோகம்.

இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்,
ஆனால் ,எழுதினவன் ,என்ன நினைச்சு எழுதினானோ ,
நமக்கு என்ன தெரியும். 

நொரண்டு : சரி ....

என் ரோஜாத் தோட்டம்
மலரும் மணக்கும்
நானில்லாவிட்டாலும்.

இதுக்கு  

நண்டு : இதில் பெரிய விசயம் அடங்கியிருக்குப்பா .ஆளைவிடு .











...
நன்றி : படங்கள் உதவி கூகுள் மற்றும் இணையம் .


Download As PDF

9 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் சிந்தனையே வித்தியாசமாக இருக்கிறது...!

வலிப்போக்கன் சொன்னது…

தண்ணிர் இல்லாததால் ரோஜா தோட்டத்தில் விளைச்சல் இல்லையோ...???

வலிப்போக்கன் சொன்னது…

தண்ணிர் இல்லாததால் ரோஜா தோட்டத்தில் விளைச்சல் இல்லையோ...???

ஸ்ரீராம். சொன்னது…

ரசித்தேன்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ரசித்தேன் நண்பரே

Parameswaran C சொன்னது…

வாழ்த்துக்கள் ஐயா,
மரியாதைக்குரியவரே,வணக்கம்.தங்களது கவிதை இன்றைய காலத்திற்கேற்ப ஹைக்கூ என்னும் இருவரிகளில் எளிமையாக அதே நேரத்தில் என்னறிவுக்கு அருமையாக உள்ளதுங்க..தொடரட்டும் தங்களது கணினி வழி தமிழ்வளர்ப்பு பணி!....
என அன்பன், பரமேஸ்வரன்,சமூக ஆர்வலர்,விதைகள் வாசகர் வட்டம் &நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு konguthendral.blogspot.com ,. paramesdriver.blogspot.com

Unknown சொன்னது…

இம்மாம் பெரிய விஷயம் ,இத்தூனூண்டு கவிதையிலா,அருமை:)

தமிழ்ப்பூ சொன்னது…

Haha!

அபயாஅருணா சொன்னது…

ஹைக்கூ கவிதையின் அடிப்படை வித்தியாசமாகச் சிந்திப்பது.
அதன்படி நன்றாகவே உள்ளது
ஜப்பானிய ஹைக்கூவிற்கு நிறைய விதிகள் உண்டு .
தமிழ் ஹைக்கூ இலக்கணம் விதிகள் தெரியாது.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "