சனி, 15 ஆகஸ்ட், 2009

தமிழனால் அரை நிர்வாணப்பக்கிரியான காந்திஜி

.

நண்டு : இன்று  சுதந்திர தினம் .


நண்டு : .ம்...

நொரண்டு : ஏன் அரைநிர்வாணப்பக்கிரியானார்னு சொல்லு ...

நண்டு : தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் மனிதன் மனிதனை அடிமைப்படுத்தும் நிலையினை , மனிதனை மனிதனாக பார்க்காதன்மையை , அதனின்று மனிதனாக விடுதலை பெற துடித்து க்கொண்டிருந்த தமிழக ஒப்பந்தக்கூலிகளைக்கண்டார் . மற்றவர்களைப்போல் அல்லாது அவர்கள் கொள்கைப்பிடிப்புடனும் , அதே நேரத்தில் அகிம்சை வழிப்போரட்டத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் வைத்து இயங்கிவந்தனர் .மேலும்,அவர்கள் மனிதனை மனிதனாகப்பார்க்கும் மக்களாகவும் இருந்தனர் . அவர்களின் தியாகம் , உண்மை,உறுதி,விடுதலை உணர்வு ஆகியவற்றைக்கண்டு ஆச்சரியப்பட்டார்.   இது அவரை மிகவும் கவர்ந்தது . அவர்களின்பால் மிகுந்த அன்பும் ,பாசமும் கொண்டார் . அகிம்சைப்போராட்டம் இங்கு தான் இப்படித்தான் ஆரம்பமானது .
தென்னாப்பிரிக்காவிலிருந்த தமிழர்களின் ஆதரவு எப்பொழுதும் காந்திக்கும். அவரின் போராட்டத்திற்கும் உந்து சக்தியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் கடைசி வரை உறுதுணையாகவும் இருந்தது . இது தான் காந்தியை இந்திய விடுதலைப்போராட்டத்திற்கே உந்திச்செல்லும் சக்தியாகவும் ஆனது .


பிறகு, இந்திய சுதந்திரப்போராட்டத்திற்கு தன்னை முழுமையான  ஈடுபடுததிக்கொள்ள காந்தியடிகள்  இந்தியா முழுவதும் பயணம் செய்கின்றார்.

தமிழர்கள்  தென்னாப்பிரிக்காவிலேயே அப்படியெனில் ,தாயகத்தில் சிறப்புடன் மிகுந்த வேட்கையுடன்  இருப்பர் என்று ,தனது போராட்டத்திற்கு தென்னாப்பிரிக்காவில் எப்படி தமிழர்கள் உந்து சக்தியாக இருந்தார்களே .அது போலவே இங்கும் தமிழர்கள் தனக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்கள் என்ற எண்ண ஓட்டத்தில் இருந்த காந்தி தமிழகம் வருகின்றார் .

இங்கு அவர் பார்த்த தமிழனின் நிலை அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது .
மிகப்பெரிய மனித நேயம் கொண்ட இவர்களின் நிலை இதுவா என மிகவும் மன வேதனை அடைந்தார் .தங்களின் பண்பாடு ,கலாச்சாரம் இன்ன பிற அடையாளங்களை தொலைத்துவிட்டு இருக்கின்றனறே இப்படி என மனமொடிந்தார் .சிந்து சமவெளிப்பரப்பில் பிறந்த காந்திக்கு தமிழனின் பண்பாடும் ,நாகரிகமும் இரத்தத்தில் கலந்த ஒன்றாகத்தானே இருக்கமுடியும்.
தங்களின் அடையாளங்களை என்று இந்த மனித நேயர்கள் முழுமையாகப் பொறுகின்றார்களே ,அது வரை அவர்களைப்போல தானும் ஆடை உடுத்துவேண்டும் என்று உறுதி பூண்டார் .கத்தியவார் ஆடைகளான (KATHIAWARI DRESS) வேட்டி, நீண்ட குர்த்தா,தலைப்பாகை ஆகியவற்றைத் துறந்து  அரை வேட்டிக்கும் மேல் துண்டுக்கும் மாறினார் தமிழனால் மனித நேயத்திற்காக .

கதராடைக்கு முக்கியத்துவம் கொடுத்தார் .கையில் ராட்டையுடன் கடைசி வரை தனது  எண்ணத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார் .

இதனாலேயே ''அரை நிர்வாணப்பக்கிரி '' என்ற ஏச்சுக்கும் ஆளானார் .

நொரண்டு : அப்ப ,தமிழனால்தான் அரை நிர்வாணப்பக்கிரியானார்னு சொல்ற

நண்டு : நான் சொல்லவில்லை இது உண்மை ,வரலாறு .

முடிவுக :தமிழன் ,இந்தியன் தன்மானத்துடன் ,தனித்துவத்துடன் தனது நிலையில் உயர்ந்து விளங்கும் காலம் வரை காந்தி ''அரை நிர்வாணப்பக்கிரி '' யாகவே அறியப்படுவார் என்பதுவே உண்மை  .





.
Download As PDF

6 கருத்துகள் :

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

:)
:(

minorwall சொன்னது…

அவுங்கல்லாம் இருந்த கால அமைப்புலே போரடுராதுக்கான தளங்கள் இருந்துச்சு.மக்களும் அவர்களோடே சேர்ந்து கூட வரும்படியான நிலை மக்களுக்கு என்று சுதந்திரத்துக்கே போராடவேண்டிய காலகட்டம்.

இப்போ சுதந்திரம் வந்து pubலே ரொம்ப சுதந்திரமா ஆடிட்டுருக்கிற கூட்டம்.யாரும் எந்த கொள்கைக்காகவும் என் சுதந்திரத்தை விட்டுகொடுத்து எந்த தேவையில்லாத சிந்தனையையும் பண்ணவே மாட்டேன்.என் பொழுதுபோக்கும் என் சுகமும்தான் எனக்கு பிரதானம் என்று சுயதேவையிலே மூழ்கிகிடக்கும் மக்கள்.

வளர்ச்சிப்பாதையிலே நல்ல அறிகுறிகளுடன் முன்னேறும் இந்தியா.

என்ன? வளர்ச்சி அசுரவளர்ச்சியாக இருந்து 2020லெ superpowerராக இந்தியா மாறியிருப்பினும் எங்கோ வயல்வரப்புகளில் உழவுக்கு என்று செல்லும் கோடானுகோடி இந்தியர்களின் உடை என்பதும் இந்த அரை நிர்வாணப்பக்கிரியுடனானதுவாகத்தாநிருக்கும் .
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.

இன்றைக்கு பெண்டியரின் உள்ளாடையை சுமக்கும் ஸர்வீஸ்ஸாக இந்தியபோஸ்டல் துறையை மாற்றிய கூட்டம் Tattoos and Piercing சகிதமாக நள்ளிரவில் தனியாக இதே அரைநிர்வாண உடைகளுடன் இந்திய வீதிகளில் சுற்றிக்கொண்டிருக்கும்.

இதைத்தான் காந்தி கனவாகக் கண்டிருப்பாரோ?

பாவம் காந்தி.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

நன்றி
minorwall அவர்களே
நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

நன்றி
குறை ஒன்றும் இல்லை அவர்களே
நன்றி

Maximum India சொன்னது…

காந்தி கண்ட கனவுகள் நனவாகட்டும்!

தமிழர் தலை நிமிரட்டும்!

வாழ்க பாரதம்!

நன்றி!

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க நன்றி
Maximum India அவர்களே
மிக்க நன்றி

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "