ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

நம்மில் நாம் பிறப்போம் ,வாழ்வை வசந்தமாக்குவோம்.

.


.
.

இன்றைக்கு அவசர உலகத்தில் நாம் அனைவரும் இருக்கின்றேம்.மிகவும் பிசியா இருக்கின்ற இந்த காலகட்டத்தில் நாம் நமது வாழ்க்கையில் தவறவிட்ட இழந்துவிட்ட விசயங்கள் பல.அவை எவைஎவை என்பதைக்கூட நம்மால் யோசிக்க நேரமில்லாமல் எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.இப்படி ஓடிக்கொண்டிருக்கின்ற நாம் தவறவிட்டதில் முதன்மையான ஒன்றுநமது உடல்நலம் .மற்ற எதைத்தவறவிட்டாலும் காலத்தில் நம் தவற்றை நாம் சரிசெய்துகொள்ளமுடியும் .ஆனால் உடல் அப்படியானது இல்லை .அவைகள் அவைகளுக்கு என்று
காலத்தை வகுத்துக்கொண்டு இயங்குவன .அவைகளுக்கு உண்டானதை நாம் அவைகளுக்கு உண்டான போது செய்யவில்லை என்றால் அவைகளும் நமக்குண்டானதை உண்டான போது செய்யாது .அப்பொழுது தான் நாம்
நம்மைப்பார்க்கின்ற சூழல் ஏற்படுகின்றது அப்பொழுது நோயாளியாக நாம் .அப்பொழுது நாம் நம்மை நொத்துகொள்வதுடன் நம்முள்ளே நாம் எதிரியாகின்றோம் .அது சில சமயங்களில் பலரை குற்றவாளிகளாகக்கூட மாற்றிவிடுகிறது .(ஒரு உதாரணம்: தற்கொலை ).சரி இதனின்று
தற்காத்துக்கொள்ள ஏதாவது வழியுண்டா எனில் ,உண்டு ,அதிலும் மிக எளிமையான செலவேயில்லாத ஒரு வழி உண்டென்றால் அது நடைபயிற்சி என்றால் மிகையாகாது .

நடைபயிற்சி என்றால் எல்லா நடையும் நடைப்பயிற்சியாகா.குறிப்பாக உடல் நலம்காக்கும் நடைப்பயிற்சி எனில் அதிலும் நோயைத் துரத்த தினமும் காலையில்,அதுவும் அதிகாலையில் பொழுது புலருவதற்கு முன் ஒரு ஜில்லுனு காத்து அடிக்கும் (எங்க ஊரில்-ஈரோட்டில் 4.30-யிலிருந்து 5.30 மணி வரைக்கும அடிக்குது) அப்பொழுது நல்ல காலணி (ஷூவே சரியானது , சைஸ்சும் சரியானதாக இருக்கவேண்டும்) அணிந்து மாசற்ற சுத்தமான சுற்றுப்புறச்சுழலில் எந்த சுமையும் இல்லாமல் தொடர்ந்து தினம் நடை மேற்கொள்ளவேண்டும் .
இவ்வாறு நடையில் ஈடுபட்டவுடன் ,நடக்க ஆரம்பித்த விநாடியில் இருந்து எங்கும், எதற்காகவும் நிற்காமலும்,யாருடன் எந்த பேச்சும் பேசாமலும்,யாரைப் பார்த்து எந்தவித சைகையும் செய்யாமலும், கைகளை நன்றாக சௌகரியமாக அசைத்து,கால்களை அது எவ்வளவு சௌகரியமான தொலைவு எடுத்து வைக்க
முடியுமோ, அவ்வளவு மென்மையாக எடுத்து வைத்து, நெஞ்சை நிமிர்த்தி மூச்சுக்காற்றை மிகவும் சுதந்திரமாக எவ்வளவு முடியுமோ, அவ்வளவு ஆழ்ந்த சுவாசத்துடன் உள்வாங்கி ,அதிக நெளிவுகளற்ற நேரான பாதையில் கால்களை, காலையில் எடுத்து வைத்தால்,அந்த நாளை நமக்குள் நாம் எடுத்து வைத்துக் கொண்டவராவோம்.மேலும்,நடை பயிற்சி முடிந்த பிறகு ஒரு 10 நிமிடம்
மிகவும் ரிலாக்ஸாக அமர்ந்து ஓய்வு எடுத்துவிட்டு பிறகு மற்ற வேலையைப் பார்க்கவேண்டும்.

தினமும் குறைந்தது 30 நிமிடம் நாம் நடைபயிற்சிக்காக நேரத்தை ஒதுக்கினாலே போதும். டிரிட்டபிள் டிசீஸ்கள் எதுவும் நம்மை அண்டாது.பரம்பரை வியாதிகள் எட்டிப் பார்க்கவே பார்க்காது.மன அழுத்தம்,மன இருக்கம்,இரத்த அழுத்தம்,மாரடைப்பு,சர்க்கரை நோய்,சிறுநீரக நோய்,தசைப்பிடிப்பு,கை கால் வலி,அலர்ஜி சம்பந்தமான நோய்கள், மூச்சு சம்பந்தமான அனைத்து
நோய்கள்,அசதி,சோம்பல்,எரிச்சல்,சளி,தோல் நோய்கள் இப்படி பல நோய்களை எந்தவித மருந்து,மாத்திரைகளும் இல்லாமல்,அதற்கான எந்தவித பத்தியமும் இல்லாமல் நடையைக்கட்ட வைக்கமுடியும் நமது நடையினால்.மேலும் முகம் பொழிவு பெறும்,உடல் தோற்றம் வடிவமாகும், தொப்பை வராது,இருந்தாலும் குறையும்,மேனி மினுமினுக்கும்,உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி
உடல் தூய்மையாகும்.அதைவிட நமது உடலும், முளையும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு அன்றைய நாளை நமதாக்கும் .

நடைபயிற்சியினை தினமும் நாம் மேற்கொண்டால் நம்மில் நாம் பிறப்பதை தினமும் உணரலாம்.எனவே,எனவே,நடைப்பயிற்சி மேற்கொள்ளுவோம்.

நம்மில் நாம் பிறப்போம் ,வாழ்வை வசந்தமாக்குவோம்.


.


.

.


.

Download As PDF

12 கருத்துகள் :

அண்ணாமலையான் சொன்னது…

கரெக்டா சொன்னீங்க...

goma சொன்னது…

தற்பொழுது அனைவருக்கும் தேவையான பதிவு

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
goma அவர்களே
மிக்க நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
அண்ணாமலையான் அவர்களே
மிக்க நன்றி .

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

நல்ல விஷயங்களை நாளும் நாம் தெரிவிப்போம் ..

நல்ல பதிவு ராஜசேகர் .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

அப்படியே
Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களே
மிக்க நன்றி .

பிரியமுடன் பிரபு சொன்னது…

நடைபயிற்சியினை தினமும் நாம் மேற்கொண்டால் நம்மில் நாம் பிறப்பதை தினமும் உணரலாம்.எனவே,எனவே,நடைப்பயிற்சி மேற்கொள்ளுவோம்.
?/////////////
/
/
/


நல்லவிடயம்தான்

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
பிரியமுடன் பிரபு அவர்களே
மிக்க நன்றி .

ஜெகநாதன் சொன்னது…

நண்டு@நொரண்டுதான், நான் தேடிக்​கொண்டிருந்த​டோமி என்று தெரியாமல் போயிற்று.
3 வரிகள் மட்டும் எழுதும் ​டோமியிடமிருந்து இப்படி வித்யாசமான ​செறிவான ​சிந்தனைகளைப் படிக்க சுவாரஸியமா இருக்கு!

தொடர்ந்து நடப்போம்!

தமிழரசி சொன்னது…

நடைப்பயிற்சியின் அவசியமும் முறையும் தெளிவாக சொன்னீங்க ராஜன்..ஆமா நீங்க லாயருன்னு சொன்னாங்க...டாக்டருக்கு படிக்கிறீங்களா?

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ஜெகநாதன் அவர்களே
மிக்க நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

லாயர் படிப்பறிவு,
டாக்டர் பட்டறிவு
தமிழரசி அவர்களே .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "