வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

காப்பாட்சியாளரின் காலாட்படையுடன் .

சிற்பங்கள் பேசும் மொழி கற்றவன் நான் .
நீண்ட நாட்கள் சிற்பங்களுடன் பேசி பயணப்பட்டு ஆகியிருந்தபடியால் காப்பாட்சியகத்திற்கு சிற்பங்களுடன் பேசிக் களிக்கச் சென்றபொழுது
அவைகள் ஏனோ பேச மறுத்தன .என் மொழி கடுமையாக இருந்திருக்குமோ அல்லது எனது அணுகுமுறை அவைகளுக்குப் பிடிக்கவில்லையா என்ற கேள்விகளை என்னுள்ளே எழுப்பிக்கொண்டே அருங்காட்சியகத்தை சுற்றிக்கொண்டிருந்தபொழுது வெட்டவெளியில் சிலர் தங்களின்
மூளையிலிருந்து கைகளின் மூலம் பறவைகள்,விலங்குகள்,மரங்கள்,காடுகள் என விதவிதமாக ,விதவிதமான நிறங்களில் தங்களுக்கு முன் இறக்கிக்கொண்டிருந்தனர் .அவற்றை ஆர்வத்துடன்
கவனித்துக்கொண்டிருந்தவர் தான் காப்பாட்சியாளர் என்பதை அருகிலிருந்த இருவரின் பேச்சுக்களிலிருந்து அறிந்து கொண்டேன் .அவர் தனது இளவர்களுக்கு பயிற்ச்சி கொண்டிருப்பதாகவும் அறிந்து கொண்டேன் .கூர்ந்து கவனித்ததில் அவர் மூளையிலிருந்து எவ்வாறு பிறவற்றிற்கு சிந்தனைகளை மாற்றுவது என்பது குறித்து மிகவும் சிரத்தையுடன் பொருமையாக சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொண்டேன் . நான் மீண்டும் எனது பயணத்தின் ஆரம்பத்தை புதுப்பிக்க சிலைகளை அணுகினேன் .ஆனால்,அவைகள் மீண்டும் மௌனம் காட்டின .
சிலைகள் பற்றிய அறிவில் சிலைகள் அனைத்தும் பேசும் என்பது அடிப்படையான முதல் பாடமாகும் .இரண்டாவதாக சிலைகள் ஒரு சங்கோதத்தில் கட்டாயம் பேசும் .சிலைகள் தமக்குள் பேசிக்கொள்ளும் என்பதும் சிலைகள் பிற சிலைகளுடன் பேசும் என்பதும் ,முக்காலத்தையும் உணர்ந்தவைகள் என்பதோடு எதிர்காலத்தைப்பற்றி சரியான விடைகளுடன் விடுவிப்பையும் தரும்
என்பதும் ஆச்சரியப்படக்கூடிய பாடங்களாகும் .சிலைகள் தங்களுக்குள் பேசும் காலம் நடுஇரவு என்பதும் அதன் விழிப்பு நிலையில் நாம் அது தனக்குள் பேசிக்கொண்டவற்றை ஊகித்து உணரலாம் என்பதும்அறித்திருக்கவேண்டிய பாடங்களாகும் .
நான் அருங்காட்சியகத்தில் மற்றவர்கள் போலவே சும்மா சுற்றித்திரிந்து கொண்டிருந்தேன் .அவைகளின் மௌனம் எனக்கு புரிபடவில்லை .இவைகள் பேசாதா சிலைகளா ? ஊமைச்சிலைகள் இருக்கின்றதா ? என்ற ஐயப்பாடு எனக்கு சட் என்று ஏற்பட்டது .சிற்பசாஸ்திரத்திரப்படி அனைத்து சிலைகளும் சரியாகவே புடம் போடப்படுகின்றன என்பதுவே உண்மை .பேசும் கற்களில் இருந்தே சிலைகள் செய்யப்படுகின்றன .அதுவும் குறிப்பிட்ட சங்கோதமொழி தெரிந்த கற்களில் இருத்தே சிலைகள் செய்யப்படும் . குறிப்பிட்ட சங்கோதமொழி தெரிந்த கற்கள் மட்டுமே சிலைவடிக்க ஐயப்பாடு ஏனே அதிகரித்துக்கொண்டே வத்துகொண்டு வந்த வேளையில் சிற்பங்களின் கற்களுக்குள்
பயணிக்கும் சாம்பிரட் இரகசிய வாய்ப்பாட்டு முறையினை உபயோகித்து கற்களுடன் பயணப்பட முடிவுசெய்தேன் .

கற்கள் அனைத்தும் அதிர்ந்துகொண்டு உயிர்ப்புடன் இருந்தன .என்னால் பயணிக்கமுடியாத அளவு எதிர்வினைகளை தெரிவித்து என்னை மூர்ச்சையடையச்செய்தன. மீண்டு நான் வெளிவந்தபொழுது
காப்பாட்சியர் தனது இருக்கையில் அமர்ந்திருந்தார் .நான் அவரிடம் இது பற்றி விளக்கம் கேட்க அணுகியபொழுது சிந்து வெளி சிற்ப எழுத்துக்களுக்கு முன் அமர்த்திருப்பதை உணர்ந்தேன் .நான் எழுத்துக்களை ஆவலுடன் பார்த்துக்கொண்டே அவரை நெர்ங்கியதை கண்ட அவர் சிந்து வெளி எழுத்து
ஒன்றை என் மீது செலுத்தினார் .நான் அது தவறான பிரயோகம் எனக்கூறி அவரின் மீது அதையே மீண்டும் பிரயோகித்தபொழுது உடனே அதற்கு அவர் நர்தமா வனப்பகுதி ஆதிவாசிகளை போர்குறியுடன் என் முன் கொண்டுவந்து நிறுத்தினார் .எனக்கு பாகீரென்றது .அவருடன் போர்புரிய நான் வரவில்லை என அவருக்கு விளக்குவதற்குள் ஆதிவாசிகளின் தலைவன் தனது
மதகுருக்களின் மது வெறியாட்டத்தில் ஆண்டவனின் அருள்வாக்கு நர்மதையைக் கடந்து வெற்றி பெறு என்று இருக்கிறது என்பதைக்கொட்டு போருக்கு கிளம்பியிருத்ம்படியால் நான் போர் செய்யும்கட்டாயத்தில் தண்டகாரண்ய சதுப்புநில மாந்தர்கள் அருபதின்மறையும் ,மாயான்களையும் இணைத்து ஒரு மா லோகம் மாயமாய் தயாரித்து மிகப்பெரிய வெடிச்சத்தத்துடன் பிரவேசித்தேன் .தோல்வியின் விளிம்பிற்கு தள்ளப்பட்ட காப்பாட்சியர் போரை வேறு ஒரு பரப்பிற்குள் நுழைந்துஇப்பொழுது அவர் ஷென்றி ரென் என்பவருடன் தனது பாதுகாப்பு படையுடன் வந்து கொண்டிருந்தார் .நான் இப்பொழுது தனி மனிதனாய் இருந்து போரிட்ட பொழுதும் அவருடன் டார்வின் சேர்ந்துகொண்டார் .இப்பொழுது என் பக்கத்தில் முதன்முறையாக பிராய்டு அகப்பட எங்களமு போர் அறிவு சார்ந்ததானது .
அவர் புத்தகங்களினின்று காலாட்படைகளை ஆயுதங்களுடன் அனுப்பிக்கொண்டிருந்தார். நான் எனதுகபாலத்தைப்பிளந்து அவைகள் அனைத்தையும் அப்படியே விழுங்கிக்கொண்டிருந்தேன் .அதை உணர்ந்து
அப்போரை நிறுத்திய அவர் தான் எப்படியும் வெற்றிபொற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் எனதுஅடித்தளந்தின் அஸ்திவாரத்தை தகர்க்க தக்க சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டிருத்த பொழுது ,சிறைப்பிடிப்பது எப்படி என்று தனது படையாட்களுக்கு பயிற்சி கொடுக்க சென்றபொழுது ,பிரமாண்டகன் என்பவன் அவரின் தூதுவனாக என்னிடம் வந்தான் .அவரின் படைகளைப்பற்றியும்
,படைகளின் தன்மை ,வலிமை,எண்ணிக்கை முதலியவைகளைக்கூறினான் .
நீங்களும் காப்பாட்சியாரும் பலத்தில் சமமாக உள்ளதால் போர் தேவையில்லை என்ற முடிவுக்கு காப்பாட்சியர் வந்துள்ளார் என்றான் பிரமாண்டகன் .
போர் தேவை இல்லை என்பதனின்று என்ன கூறவருகின்றீர்கள் ? எப்படி சமபலம் என நினைப்பது ? இந்த கணிப்பு எப்படி வந்தது ? என்றேன் .
காப்பாட்சியர் அப்படி நினைக்கின்றார் . அதோடு சம்பலத்துடன் இருப்பதனால் சதுரங்கத்தின் மூலம் முடிவு செய்யலாம் என்றும் முடிவுக்கு வந்துள்ளார் என்றான் பிரமாண்டகன்.
எனக்கு உடன்பாடில்லை சதுரங்கத்தில் அரசனை கைப்பற்றுவதே விதி ,ஆனால் எனக்கு அரசன் தேவையில்லை ,அரசு தான் வேண்டும் .மேலும் ,சதுரங்க அரசன் ஒரு சோம்பேறி ,மனித நேயமற்ற கொடுரன் .என்னிடம் உங்களின் போர்யுத்தியை புகுத்தாதீர்கள் எனது வரையறை வேறு .போரில்
ஆயுத வெற்றியல்ல பங்கு ,பதவி அல்ல பாதுகாப்பு இவை தான்வேண்டும் .சமாதான பேச்சுக்கள் அனைத்தும் ஆதாயத்தை நோக்கியே என்பதனை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள் .எந்த சமாதானப்பேச்சும் போரின் கொடூரத்தை பற்றி கவலைப்படுவதுவே .ஆதாயத்தை தேடும் மனிதவேடமே .போர் நிறுத்தம்
என்பதே ஆதாயத்தை வேறுவிதத்தில் தேடுவது என்பதை நீ காப்பாட்சியருக்கு உணர்த்து .எந்த போரிலும் வெற்றி என்பது ஒருவருக்கு மட்டுமே .சமாதானப்பேச்சு ஆதாயமே ,அது அனைவருக்கும் என்பதால் நான் ஆதாயத்தையே விரும்புகிறேன் .அதோடு இது மீது திணிக்கப்பட்ட
போர் .அதனால் நான் ஆதாயத்தை எதிர்பார்க்கின்றேன் .உங்களின் போர் யுக்தி பழமையானது .உங்களின் போர் பெரும் திருட்டைப்போன்றது .யாரும் விரும்பாதது .ஆனால் ,நீங்கள் யாருக்கும் செய்வது .என்னிடமிருந்து நீங்கள் பாடம் கற்றிவிட்டாத உணர்ந்தால் தான் மனித இனத்திற்கு நல்லது .இல்லையேல் உங்களுடைய அழிவு இந்த அருங்காட்சியகத்திற்குள்ளாகவே முடிந்துவிடும் . இங்குள்ள சிலைகளே உங்களை கொன்றுவிடும் என்பதனை உங்களின் தலைவனுக்கு விளக்கு என கூறினேன்.
இது கேட்டு பிரமாண்டகன் மறைந்தான் .
வெண்ணிற தூவல் மேவிய ,அழகிய நட்சத்திரம் தாங்கிய அந்த சிலை தனது சிலிர்ப்பால் என்னை அழைத்து ,திரும்பிக்கொண்டது .பின் என் இதயத்தை அடைந்தது,அதைத்தொடர்த்து ஒவ்வொரு சிலைகளாக என்னைப்பார்த்து புன்னகைத்தது .அதன் ஒவ்வொரு புன்னகையிலும் சுதந்திரத்தின்
மோனமும் ,விடுதலையடைந்த மொழியின் வீச்சும் இருந்தது.

.

.
Download As PDF

6 கருத்துகள் :

தமிழ்போராளி சொன்னது…

நல்லதொரு கட்டுரை தோழர்.உங்கள் கட்டுரையின் மூலம் பல கருத்துக்கள் அறிந்தேன். தொடர்ந்து வரட்டும் புரட்சி கட்டுரைகள்.

vasu balaji சொன்னது…

Very nice.

நேசமித்ரன் சொன்னது…

உள்வயமான மொழி நடை தோழர்

நன்று !

Unknown சொன்னது…

////இங்குள்ள சிலைகளே உங்களை கொன்றுவிடும் என்பதனை உங்களின் தலைவனுக்கு விளக்கு என கூறினேன்.///
நல்ல எழுத்துநடை, நான் மீண்டும் ஒரு முறை படிக்கபோகிறேன்.புரட்சி எழுத்துக்கள் தொடரட்டும்.
ஆண்டாள்மகன்

சசிகுமார் சொன்னது…

நல்ல கட்டுரை

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும்,புரிதலுக்கும்
மிக்க மகிழ்ச்சி

விடுத‌லைவீரா @

வானம்பாடிகள் @

நேசமித்ரன் @

நந்தா ஆண்டாள்மகன் @

T.V.ராதாகிருஷ்ணன் @

சசிகுமார்

அவர்களே
மிக்க நன்றி

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "