Wednesday, September 29, 2010

அயோத்தி விவகாரம் -இது உண்மை -இது முடிவு


மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா,தனது ஈடேற்றம் கடவுளின் பெயரால்,மதத்தின் பெயரால் தடைபடுவது கண்டு தவிக்கின்றது.
உலக அரங்கில் ,இந்தியா தனது உள்நாட்டில் ஏற்பட்டுள்ள  பூசலுக்கு தீர்வுகாண முடியாமல் வெட்கித் தலைகுனிகிறது. அனைத்து சமுதாய ஈடேற்றத்திற்கும் முட்டுக்கட்டையாக இருக்கும் ஒரே பிரச்சனை தற்பொழுது அயோத்தி என்று சொன்னால் அது மிகையாகாது.

மதத் தலைவர்களும்,சமய நிறுவனத் தலைவர்களும் மற்றும் அரசியல் தலைவர்களும் தாங்கள் மட்டுமே ஒட்டுமொத்த மதத்திற்கும் பிரதிநீதிகளாக காட்டிக் கொள்ளும் செயலானது கேலிக்குரியதாக உள்ளது. தற்பொழுது ,இவர்கள் யார்? எங்கிருந்தது வந்தார்கள்? இத்தனை நாள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? மதத்தில் இவர்களின் பங்கு என்ன? மதத்திற்காண இவர்களின் முன் அர்ப்பணிப்பு வரலாறு யாது? தேசத்திற்கான இவர்களின் அர்ப்பணிப்பு என்ன? என்பதை நோக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியார்களின் கட்டாயக் கடமையாக உள்ளது. காரணம், சிலரின் செயலால் ஒட்டு மொத்த இந்தியர்கள் அனைவரும் அச்சத்தில் தற்பொழுது வாழ்ந்துகொண்டும், நடைபிணங்களாய், பேசாமடந்தைகளாய், மடையர்களாய், முட்டாள்களாய் ஆகவேண்டியுள்ளது. ஒட்டு மொத்த இந்தியர்களின் மனிதப் பண்பும், மனிதாபிமானமும் அயோத்திப் பிரச்சனையால் மதத்தின் கோரப்பிடியினில் சிக்கி அமிழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.இதே நிலை நீடித்தால் சமூக சமய நல்லிணக்க ஆர்வளர்கள்,சமூக சேவகர்கள், மதச் சார்பற்றோர் ஆகியோர் தாங்கள் ஏதாவது ஒன்றை சார்ந்து போய் வாழ வேண்டிய (ஏதாவது ஒரு பக்கம் என்ற நிலை) சுழலுக்கு ஆட்பட்டு விடவேண்டிய காலச்சூழ்நிலை உருவாகிக் கொண்டு வருவதால்
இக்கட்டுரையை எழுத வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது.


அயோத்தி

இராமர்

மட்டுமே பிரச்சனையாக இருந்தால்

அது உடனே தீர்க்கப்பட்டு விடமுடியும்

அது மிக எளிது.

ஆனால்,
உண்மை அப்படியில்லை என்பதனால் தான் அது விசுபரூபம் கொண்டு  பலவற்றை கேட்கின்றது. ஆதலால் இப்பிரச்சனையை வரலாற்றுரீதியில் அணுகுவதோடு,உளவியல்ரீதியிலும் சரிசெய்யப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.அயோத்தி பிரச்சனையை அணுகும் பொழுது தொடர்ந்து வந்த வரலாற்று நிகழ்வுகளினால் மதங்களிடையே ஏற்பட்ட வெறுப்புகள் என்ன? அதன் எதிரொலி யாது? தற்பொழுது அதற்கும், இப்பொழுது நடப்பதற்கும் என்ன தொடர்பு?இப்பிரச்சனையின் தொடக்கம் என்ன? இப்பிரச்சனையின் தொடக்கம் எது?இது யாரால் ஆரம்பிக்கப்பட்டது? இதனால் ஆதாயம் அடையப் போகும் தரப்பினர்கள் யார், யார்? எத்தகைய ஆதாயத்தை அவர்கள் அடைவார்கள்? அந்த ஆதாயத்தினால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? நாட்டிற்கும் , மதத்திற்கும் ஏற்படப் போதும் நன்மைகள் என்ன? போன்ற கேள்விகளுக்கு பதில் காண வேண்டியது அவசியம். அதன் மீதே சரியான முடிவு எட்டும் என்பதுவே திண்ணம். இல்லாமல் போனால் எடுக்கும் எந்த முடிவையும் யாரேனும் ஒரு தரப்பினர் மீறிக்கொண்டே இருப்பர். அதனால் மேலும் மேலும் அமைதியின்மையை இந்தியா நிரந்தரமாக சந்தித்துக் கொண்டே இருக்கும்.

தற்பொழுது இந்துக்களும் சரி, முஸ்ஸீம்களும் சரி, இந்தப்பிரச்சனையால் சளிப்புற்றுள்ளார்கள். மேலும் மிகுபக்தி கொண்டவர்கள் தவிர ஒட்டு மொத்த இந்தியர் அனைவரும் இப்பிரச்சனையால் வெறுப்புற்றே இருக்கின்றனர்.
சரியாகக் கூறப்பட வேண்டுமென்றால் இப்படிப்பட்ட ஒரு பிரச்சனையை இந்தியா மறக்கவே விரும்புகின்றது.

வரலாற்றை நோக்க,

வடமேற்கு ஆசியாவிலிருந்த ,குழுக்கள் குழுக்களாக பதவியாசை,
மண்ணாசை பிடித்த மக்கள், துரத்தியடிக்கப்பட்டனர். அப்படிக் துரத்தப் பட்டவர்களில் ஒரு பிரிவினர் மேற்கே ஐரோப்பா நோக்கி நகர்ந்தனர் அவர்கள் அங்கே ஆதிக்கம் செலுத்தினர் அங்கு அவர்களால் ஐரோப்பாவில் இருந்து மிகச்சிறிந்த நாகரிகங்கள் அழிக்கப்பட்டது.

அதன் உச்சகட்டம் தான் ஹிட்லர் .

அதுபோலவே கிழக்கு நோக்கி நகர்ந்த குழு கணவாய்கள் வழியாக இந்தியா வருகின்றது.இங்குள்ள மேம்பட்ட, சிறந்த நல்நாகரிகமான திராவிட குடிகளுடன் போரிட்டு, போரிட்டு திராவிட நாகரிகத்தை பாழ்படுத்தியது. ஆட்சி ,மாற்றம் ,ஆட்சி ,மாற்றம் , என ஆட்சி மாற்றத்தில் அடிக்கடி உழன்று கஷ்டப்பட்டு கடைசியில் யார் ஆண்டாளும் அவர்களின் அடிவருடிகளாக இரண்டாம் ஸ்தானத்தைப்பெற்று அதுவே வாழ்வு என்ற நிலையில் நிலைத்துவிட்டது.அதனால் அவ்வப்போது ஏற்படும் ஆட்சிமாற்றம் அதனை ஒன்றும் செய்யவில்லை எனவே அங்கு நிம்மதியாக வாழ்ந்து ஆரம்பித்தது அக்குழு.அங்கு அக்குழுவின் வேலையெல்லாம் ஆள்பவனை துதித்தல், துதிபாடுதல், அவனை மகிழ்வித்தல்,அவனின் எதிரிகளை பழித்தல், அவற்றை பரப்புதல்,சதிசெய்தல்,கொலைசெய்தல், வரலாற்றை திருத்துதல் ஆகியவையே தவிர வேறு ஒன்றும் கிடையாது. இதன் காரணமாக அக்குழு மிகப்பெரிய நன்மைகளையும், ஆதாயங்களையும் ஆள்பவனிடமிருந்து பெற்றுக் கொண்டே இருந்தனர். ஆதலால், அவர்கள் ஆள்பவன் மற்றும் அவனை சார்ந்தவர்களின் வாழ்வியலோடும், கடவுள்,சொர்க்கம், மறுபிறப்பு போன்ற இன்ன பிற சடங்கு முறைகளைக் கொண்ட சமயத்தை உருவாக்குகின்றனர்.அதனால் இந்தியாவில் பல்வேறு சமயங்கள் தோன்றின. இந்தியாவில் பல்வேறு சமயங்கள் பழக்கத்தில் வந்தாலும் ஒரு நிலையான கோட்பாடான சொர்க்கம்,மறுபிறப்பு, போன்ற இன்ன பிற மீயியற்கை ஆற்றலை அடிப்படையாகக் கொண்டே அனைத்தும் இயங்குவதன் காரணமாக இரண்டாம் ஸ்தானத்தைப் பெற்று வாழ்ந்து வருபவர்கள் பாதிக்கப்படுவதில்லை. வந்தேரிகளின் அதிகப்படியான மனித உரிமை மீறல்களினால் பௌத்தம், சமணம் ஆகியவை தோன்றியது. அதன் காரணமாக அச்சப்பட்ட வந்தேரிகள் அதனை அழிக்கும் முயற்சியில் முழு மூச்சுடன் தங்களின் சமயங்களை இணைப்புச்சமாதனத்துடன் அரசபீடம் இழந்த குறுநில மன்னர்கள், அரசாசை கொண்டவர்கள் ஆகியோ்ரின் உதவியினால் பௌத்த, சமண துறவிகளையும், அருளாளர்களையும் படுகொலை செய்தனர் .இது ஹிட்லரின் இனப்படுகொலைக்கு ஒப்பான ஒன்றாகும். அமைதியையும், நிர்வாணத்தையும் போதித்து உணர்ந்தவர்களினால் இனப்படுகொலைகளை புரிந்து கொள்ள முடியவில்லை அவர்கள் கொல்லப்பட்டனர். வந்தேரிகளினாலும் இனப்படுகொலைகள் அதிகம் என்பது வரலாற்று உண்மை . உலகம் அவர்களைப்பார்த்தே கற்றுக்கொண்டது எனலாம்.சமணத்தையும், பௌத்தத்தையும் கொன்றுவிட்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர் வந்தேரிகள்.

கணவாய் வழியாக வந்து சில சிறிய சிறிய நிலங்களை கைப்பற்றி சிலகாலம் ஆண்டவந்தேரிகள் கங்கை சமவெளியில் சற்றே இளைப்பாறினர். பிறகு அங்கிருந்த மண்ணின் மைந்தர்களின் வீரதீர செயல்களினால் வந்தேரிகளின் அரசாளும் ஆசை குழிதோண்டி புதைக்கப்பட்டதால் மண்ணுலகை அரசால்வதை விட்டுவிட்டு விண்ணுலகை ஆள்வதற்கு தயார் படுத்துவதாகவும், தாங்கள் அதற்கு வழிவைத்துள்ளதாகவும் கூறி பக்தி என்பதனை தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டனர்.
( பக்தியைப்பற்றி இங்கு கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும்.
பக்தி என்பது ஒருவகை பயம். மனிதனுக்கு ஆரம்பகாலம் தொட்டே இருந்த ,இருக்கும் பயம்.மனிதன் தன் அறிவுக்கு எட்டா விசயங்களில் தனக்கு ஆபத்தானவைகள் எவையெவை? என்று தெரிவதில் தோன்றிய பயம்.
ஆரம்ப மனிதன், தன் அடுத்த மனிதனிடமே பயந்தான். மனிதன் தான் பயந்த ,புரியாத எதிரியிடம் அடிபணியக்கற்றான். அடிபணிந்த பின் பயம் சிறிது சிறிதாக நீங்கியது அந்த எதிரியிடமிருந்து, அடிபணிந்ததினால். பயத்தின் மீது நம்பிக்கை வேரூன்றியது. நம்பிக்கை பக்தியானது.பக்தி மூடத் தனத்தில் ஆழ்த்தியது.பயம் தொலைத்து வெகுதூரம் மனிதனால் பயணிக்க முடியவில்லை.மீண்டும், மீண்டும் பக்தியே அவனை ஆட்கொண்டது. பக்தியை தங்களின் கைகளால் எடுத்தவர்கள் பயத்தை வேறு ரூபத்தில் கையாள்பவர்கள் ஆனார்கள்.

சமுதாயத்தில் மனிதன் தனது இயல்பு நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஏதோ ஒன்று கூடுகின்றது அல்லது ஒன்று குறைகின்றது.அதற்கு தனது செயல்தான் காரணம் என்று அவனால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஒத்துக்கொள்ள மறுக்கின்றான். காரணம் சமுதாயத்தில் அது ஏற்றுக் கொள்ளக் கூடிய அம்சமாக இல்லாத அளவிற்கு, அவனின் உழைப்பு, முயற்சியின் மீது ஒத்துக்கொள்ளக் கூடிய காரணங்களை ஏற்றுக்கொள்ளாத அளவிற்கு மாற்றப்பட்டிருக்கின்றது. அதனால் அவன் செய்யும் செயல்அனைத்திலும் நன்மை , தீமைகளைப் பார்க்கின்றான் .அதுதான் காரணம் என்று சமுதாயத்தில் கற்பிக்கப்பட்டுள்ளதால், அதுதான் காரணம் என்றும், அதற்கு தனக்கு மேற்பட்ட சக்தியின் செயல் என்றும் முடிவு செய்து,இல்லாத ஒன்றை நோக்கி குவிகின்றான். அதை சமுதாயம் ஏற்பதால் நிகழ்கின்றது. அப்படி குவியும்பொழுது ஒரு மார்க்கத்தை சார்ந்து ஒழுகும்படி சமுதாயம் சில மார்க்கங்களை தன்னுள் வைத்துக்கொண்டு அழைக்கின்றது.
அந்த மார்க்கத்தின் மீது தனது செயல்பாட்டின் நிலையைப் பொறுத்து மிகுபக்தி கொள்கின்றான்.அந்த மிகு பக்தி கடைசியில் உயிர்கொலையாக அமைந்தாலும் ஆன்மா ஈடேற்றத்திற்காக வீடுபேறு பெறவேண்டும் என்ற எண்ணத்தில் தனது அனைத்தையும் இழக்கின்றான்.

தான் சார்ந்த மார்க்கம் சமயமாகி பின் நிறுவனமாகிய பின் அந்த நிறுவனத்தின் கட்டமைப்பில் ஆழ்ந்து விடுகின்றான். சமூகத்தில் பூசல் மற்றும் மொத்த சமூக அமைப்பில் ஒரு சிந்தனை அழிவு அல்லது புதிய சிந்தனை வரவு அந்த நிறுவனத்தை பாதிப்பதாக இருக்கும்பொழுது நிறுவனம் தன்னை வளார்த்துக்கொள்ள அனைத்து வகையான மனித மூடத்தனங்கினையும் தனது வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்கின்றது. இப்படிப்பட்ட காவுகள்தான் இப்பொழுது நடக்கின்றன.மனிதன் தான் பக்திக்கும் அடிமையாகியுள்ளோம் என்று உணர்ந்தும் இன்னும் அப்படியே உள்ளான்.)

இப்படியாக பக்தியைக் கையில் எடுத்தவர்கள் அரசர்களுக்கு அடிவருடி பிழைப்பு நடத்தினர். தங்களின் பிழைப்புக்காக சமயத்தில் பலவற்றை தோற்றிவித்து அதன் மூலம் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சொத்தினைப் பெறவைத்து அதில் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கையை ஓட்டினர் வந்தெரிகள்.அப்படி நிறுவிய நிறுவனங்களின் சொத்துக்கள் கஜினியால் கொள்ளையடிக்கப்படவே அரசுகள் போல்,சமய நிறுவனமும் ஆட்டம் கண்டது. அதனை சரிகட்டுவதற்குள் கோரி ஆனால், கோரியினால் கஜினியின் கொள்ளையடிப்பை விட மிகப்பொpய தாக்குதல் சமய நிறுவனங்களின் மீது விழுந்தது. அது கோரி இஸ்லாத்தின் அரசை நிறுவியது.அரசாளும் ஆசை கொண்டு, மிகப்பெரும் நிலப்பரப்பை ஆளும் எண்ணத்தில் வடமேற்கு ஆசியாவிலிருந்து வந்தவர்கள் முதலில் இந்த மண்ணின்மைந்தர்களிடமும்,பௌத்த சமண மதத்தினாலும் அரச பதவியை இழந்தனர்.கஜினியால் பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டவர்கள் கோரியினால் தங்களின் மொத்த சமூக அமைப்பிலும் தாக்குதல் ஏற்படுத்தப்பட்ட பொழுது தங்களின் வாழ்வதற்கான அனைத்து உரிமைகளையும் இழந்து மீண்டும் நாடோடி வாழ்க்கை வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.கோரியின் ஆட்சி சில காலம்தான் அவனும் கொள்ளையடித்து சென்றுவிடுவான் என்ற நினைப்பில் தங்களின் நிறுவனத்தின் சொத்துக்களைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தினர். காரணம் நிறுவனம் சொத்திழந்ததால் தாங்கள் சோறிலக்க வேண்டிவரும் என்று அவர்கள் நன்றாக உணர்ந்திருந்தனர். இஸ்லாத்தை மக்கள் பின்பற்ற வைக்கப்பட்ட பொழுது இவர்கள் நிலை மேலும் மோசமானது. இந்த சூழ்நிலையில் இஸ்லாம் இங்கிருந்த மதத்திற்கு முற்றிலும் வேறாக இருந்தபட்சத்தில் மக்கள் அப்பொழுது சரியாக இரண்டு பிரிவாக பிரிந்துநின்றனர்.ஒரு வகையினர் இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள், பிறிதொரு வகையினர் இஸ்லாத்தை பின்பற்றாதவர்கள் .வந்தேரிகள் இஸ்லாத்தை பின்பற்றாதவர்களின் பின்னாள் தங்களின் நிறுவனச் சொத்துடன் ஒளிந்து கொண்டனர்கள்.
(நான் மேலே குறிப்பிட்ட மக்கள் மேல்தட்டு -எஜமானர்கள் )
வந்தேரிகள் மண்ணின் மைந்தார்களுடன் இக்கால கட்டத்தில்தான் அதிகப்படியான சமாதானத்தை ஏற்படுத்திக் கொண்டனர் எனலாம். பிறகு இஸ்லாத்தின் ஆட்சி ஆங்கிலேயார் இந்தியாவை ஆளும் வரை நீண்டது.

ஆங்கிலேயாரின் ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டது.அப்பொழுது வந்தேரிகளின் மார்க்கமும் சரி, இஸ்லாத்தும் சரி, கிறிஸ்துவின் வரவால் தங்களின் மார்க்கங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் கொண்டனார்.வந்தேரிகள் வரவிலிருந்து ஏன் அதற்கு முன்பிருந்து இன்று வரை நம் மண்ணின் மைந்தர்கள் தங்களின் தனி மார்க்கத்தில் அமைதியாக வாழ்ந்து வந்தனர், வருகின்றனர் . வந்தேரிகள் அரசில் அதிக செல்வாக்கு பெற்றிருப்பதால் சமுதாயத்தில் வந்தேரிகள் எண்ணங்களும், தேவைகளுமே மிகுதியாக பிரதிபலித்ததே தவிர வேறு எதுவும் அதில் இருப்பதாக இல்லை.இதனை இந்த நூற்றாண்டில்தான் அனைவரும் உணர்ந்தனர். இன்று வீதிக்கு ஒரு கோவில், வீட்டுக்கு ஒரு கோவில் என்ற நிலை ஏற்பட்டதற்கான காரணம் வந்தேரிகளின் நிறுவனங்களிலும், கோவில்களிலும் அவர்களின் அட்டூழியங்களை தாங்க முடியாத இந்த மண்ணின்மைந்தர்கள் தங்களின் தேவைக்கேற்ப கோவில்களை அமைத்துக்கொண்டதாலேயே ஒழிய வேறு ஒரு காரணமும் கிடையாது.வந்தேரிகளின் அட்டூழியம் இல்லையெனில் ஊருக்கு ஒரு கோவில்தான் இருந்திருக்கும் இது ஒரு வகையான வந்தேரிகளின் மீதான எதிர்ப்பேயாகும். அதிலும் தற்போது தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டி விட்டனர் என்பதுதான் கோடுமை.
நமது மண்ணின் மைந்தார்களின் அறியாமை.

இந்தியா சுதந்திரத்திற்காக தன்னை பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தது.வந்தேரிகளில் பெரும்பான்மையோர் சுதந்திர எண்ணம் இல்லாதவர்கள். வந்தேரிகளில் மற்றவர்கள் சுதந்திரத்தை வெறுத்தவர்கள் .ஆங்கிலேயே அரசுகளிலும், இரண்டாம் தர அடிமை அரசுகளின் துணையுடன் வாழ ஆரம்பித்தனர் ஆங்கிலேயர்களின் அணுகுமுறையை அறிய முடியாதவர்களாய். செல்வாக்கும் பெற்றிருந்தனர் சிலர். வந்தேரிகள் அரைகுறை மனத்துடன் தான் சுதந்திரப் போராட்டத்தை பார்த்தனர். ஆனால், வீரதீரபராக்கிரமங்கொண்ட நம் மண்ணின் மைந்தர்களின் உதவியுடன் சுதந்திரத்திற்காக அல்லும் பகலும் கடைசியாக கடுமையாகப் போராடினர் இந்தியாவின் இருதவப் புதல்வார்கள்.

ஒருவர்

மாமனிதர் மகாத்மா காந்தியடிகள் .

இவர்கள் இல்லையேல் இந்தியா எப்படிப்பட்ட மோசமான நிலைக்கு வந்தேரிகளினால் தள்ளப்பட்டிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவேமுடியவில்லை.



...உண்மை ...முடிவை நோக்கி ...தொடரும் .......






(இது ஒரு மீள்வு .)







  Download As PDF

Sunday, September 26, 2010

பட்டினி





மகாத்மாவே

அன்று
பட்டினி கண்டு
அடிபணிந்தது
உலகாண்ட இனம்
இங்கு


இன்று
பட்டினி கண்டு
கண்ணீர் துளிகளால்
தமிழ் இனம்
அங்கு






. Download As PDF

Friday, September 24, 2010

இராமர் பிறந்த இடம் எதுனு தெரியுமா ?





நொரண்டு : வணக்கம் நண்டு .

நண்டு : வணக்கம் ,என்ன விசேசம் ?

நொரண்டு : எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ?

நண்டு : உண்மை தெரிஞ்சாகனும்னா ,இப்ப பொய்களை தெரிஞ்சு வச்சிருக்கைனு பொருள் .அப்படித்தானே .

நொரண்டு : கொழப்பாதே

நண்டு : சரி ,விசயத்துக்கு வா .

நொரண்டு : இராமர் பிறந்த இடம் எதுனு தெரியுமா ?

நண்டு : இது வந்து இராமர் பிறக்கவில்லை ,இராமர் பிறந்தார் என்பது சரியா என்று கேக்கரதுக்கு பதிலா கேக்கர அப்படித்தானே .

நொரண்டு : அது ....வந்து ...

நண்டு : சரி விடு ,முதலில் இராமர் உனக்கு எப்படி அறிமுகமானார் .

நொரண்டு : ம்..வந்து ...முதல சாமியா வீட்ல ,அப்புறம் பள்ளியில் பாடமா ....அப்புறம் ...

நண்டு : அது உன் தனிப்பட்டவனைப்பொறுத்து .ஆனால்,சமுதாயத்தில் எப்படி அறிமுகனார் ,ஆகியுள்ளார் என தெரியுமா .

நொரண்டு : நீ கேக்கரது ஓன்னும் புரிலையே .

நண்டு : அங்க தான் சிக்கலே ஆரம்பம் .

நொரண்டு : என்ன சிக்கல் ?

நண்டு : இராமரை இங்கு சரியா யோசிக்கல .

நொரண்டு : எப்படி ?

நண்டு : முதலில் நாம் நம்முடைய புரணங்கள் மற்றும் இதிகாசங்களை சரியாகப் புரிந்துகொள்ளாமல் இயங்குகின்றோம் .நாம் இன்றைய சூழலில் இதிகாசங்கள் ,இலக்கியங்கள் மற்றும் கலைகள் அனைத்தையும் மறுஆய்வு செய்யவேண்டியது அவசியமாக உள்ளது .

நொரண்டு : அப்படினா ?

நண்டு : அப்படினா ,இன்றுள்ள கலை ,பண்பாடு,கலாச்சாரம்,இலக்கியம் போன்றவைகளின் நகர்வுகளை ஆய வேண்டியுள்ளது .

நொரண்டு : புரியல

நண்டு : முதலில் நாம் நமது இதிகாசங்கள் ,இலக்கியங்கள் மற்றும் கலைகள் இவற்றிற்கும் மேற்கத்திய இதிகாசங்கள் ,இலக்கியங்கள் மற்றும் கலைகள் இவற்றிற்குமான வித்தியாசத்தை அறிந்துகொள்ளவேண்டும் .

நொரண்டு : அப்படினா ?

நண்டு : மேற்கத்திய இதிகாசங்கள் ,இலக்கியங்கள் மற்றும் கலைகள் இவற்றின் உள்ளாக்கங்கள் ,உட்கூறுகள் வேறு .நமது இதிகாசங்கள் ,இலக்கியங்கள் மற்றும் கலைகள் இவற்றின் உள்ளாக்கங்கள் ,உட்கூறுகள் வேறு .

நொரண்டு : புரியர மாதிரி சொல்லு .

நண்டு : மேற்கத்திய இதிகாசங்கள் ,இலக்கியங்கள் மற்றும் கலைகள் ஆகியவை கற்பனையில் உருவாகி அதில் உண்மை ஒளிந்திருக்கும் .

நொரண்டு : அப்ப நம்மது ?

நண்டு : நமது இதிகாசங்கள் ,இலக்கியங்கள் மற்றும் கலைகள் ஆகியவை உண்மையில் உருவாகி கற்பனை மிகுந்திருக்கும் .

நொரண்டு : அப்படினா

நண்டு : நம்மது உண்மைக்குப் பின்னால் கற்பனை இருக்கும் .அவர்களது கற்பனைக்குப் பின்னால் உண்மையிருக்கும் .இது ஒரு யுத்தி .

நொரண்டு : ஓ..

நண்டு : ஆனால் ,இங்கு கற்பனை மிகைப்படுத்தப்பட்டிருக்கும் .அங்கு சம அளவில் இருக்கும் .

நொரண்டு : அப்படியா ..

நண்டு : ஆமாம் ,ஒரு சின்ன உதாரணம் .இராமனுக்கு ஒரே மனைவி ,தசரதனுக்கு பல மனைவிகள் .ஏன் இந்த முரண். 1000 மனைவிகள் என கூறுவேறும் உளர் . நன்றாக சிந்தித்தால் .இராமனின் குணத்தை மிகவும் சிறப்பிக்க கூறப்பட்ட மிகையே அது .

நொரண்டு : ஓ ...

நண்டு : மற்ற ஒன்றை சொல்கிறேன் கேள்.சீதையை இராவணன் கொண்டுசென்றதை பலர் பல மாதிரி எழுதியுள்ளனர் .இதற்குக்காரணம் அவர்அவர்கள் தங்களுக்குள் கற்பனையில் மிகுந்தவர்கள் என காண்பிக்கவே தவிர வேறு இல்லை .

நொரண்டு : ஓ...

நண்டு : இது போலத்தான் இராவணனுக்கு 1000 தலைகளும் .

நொரண்டு : அப்ப அப்படியில்லையா ?

நண்டு : என்ன முட்டாள் தனமான கேள்வி ? அப்படி இருக்க முடியுமா ? அது சாத்தியமா ?

நொரண்டு : ஆமாம் உண்மை தான் .

நண்டு : இதுவும் இராவணனின் குணத்தை கற்பனையில் மிகுதியாகக்காட்டவே தவிர வேறு ஒன்றும் இல்லை .

நொரண்டு : சரி அத விடு ,விசயத்துக்கு வா .

நண்டு : அதத்தான் சொல்ல வரேன் .

நொரண்டு : எப்படி ?

நண்டு : முதல்ல உனக்கு ஜதகம் இருக்கா ?

நொரண்டு : ஏன் கேக்கிர

நண்டு : சொல்லு சொல்லரேன் .

நொரண்டு : எங்க அப்பிச்சி நான் பிறந்தப்ப அவரின் ஆஸ்தான ஜோசியரிடம் போய் எழுதி வாங்கி வந்த பழைய ஜதகம் ,அந்த ஜதகம்நோட்டு கிழியர மாதிரி ஆனதால் கம்யூட்டர் ஜாதகம் வேற போட்டு வச்சேன் .இங்க பாரு ,பிறந்த ஊர் ,நாள் ,டயம் மட்டும் தான் சொன்னேன் .என்ன ஒரு ஆச்சரியம் பழைய ஜாதகத்த விட துல்லியமா கணித்து கையில 10 தே நிமிசத்தில தன்திடுச்சு .உலகம் எவ்வளவு பாஸ்டா போகுது பாரு . அங்க இருக்கிற ஜோசியர் என் ஜாதகம் இராமர் ஜாதகம் மாதிரினு சென்னார் .அவர் கிட்ட இராமர் ஜாதகம் ,கிருஷ்ணர் ஜாதகம் எல்லாம் இருக்கு பாத்தேன் .

நண்டு : ஓ ,அப்படியா ...

நொரண்டு : என்ன தெரியாத மாதிரி கேக்கிர

நண்டு : அப்ப பிறந்த ஊர் ,வருசம், நேரம் தந்தா ஒருத்தரின் ஜாதகம் கிடைத்து விடும் .

நொரண்டு : ம்...


நண்டு : அப்ப ஒருத்தரின் ஜாதகத்தை வைத்து அவரின் பிறந்த வருசம் ,ஊர் ,நேரம் ஆகியவற்றை கணித்துவிடலாம் அல்லவா .

நொரண்டு : ஆமாம்.ஆமாம் கட்டாயம் ,கண்டிப்பாக . அது சாத்தியமாகும் பொழுது இதுவும் சாத்தியம் ஆகும் தானே .அது தானே உண்மை .

நண்டு : ஒரு ஜாதகத்தைப்பார்த்து அவரின் பிறப்பிடத்தை அறியமுடியும் தானே .

நொரண்டு : ஓ..முடியுமே ,ஏன் முடியாது .

நண்டு : அப்படினா நீ முதலில் இராமரின் ஜாதகத்த வச்சிருக்கர அந்த ஜோசியர் கிட்ட போய் அத வச்சு இராமரின் பிறப்பிடத்தை கண்டுபிடி .உனக்கு புண்ணியமா போகும் .

நொரண்டு : ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !

நண்டு : (: (: (: (: (: (: (: (: (: (: (: (: (: (:












. Download As PDF

Thursday, September 23, 2010

என்று தணியும்

Download As PDF

Wednesday, September 22, 2010

தற்கொலை செய்து கொண்டுதான் பேசுகிறேன் .




ஒரு வழக்கு விசயமாக கோபி கோர்ட்டிற்கு இன்று சென்றேன் .
வழி நெடுக உணவுமக்கள் உழவு பணி செய்வது கண்டு மனம் அதில் லயித்தது .
அதிலும் பரம்படித்த நிலத்திலிருந்து வந்த அந்த மண்ணின் வாசனை உள்ளத்தையும் நெஞ்சத்தையும் அள்ளிச்சென்றது .

நான் சின்னப்பையனா இருந்தப்ப எங்க வெங்கிடு மாமா என்ன அவர் முதுகில் தூக்கிவச்சுக்கிட்டே  பாட்டுப்பாடிட்டு ஏர் ஒட்டுவாரு .அவ்வளவு பாசம் ஏன் மேல .அது ரொம்ப சந்தோசமா இருக்கும் . இப்ப அவருக்கு வயசாச்சு ,அவரால் விவசாயம் செய்யவும் முடியில அதோட விவசாயம் செய்யரதுக்கு ஆட்களும் வரமாட்டேங்கராங்க  .ம்...என்ன செய்ய .

எனக்கு விபரம் தெரிஞ்சப்பறம் , எங்க மாமா பையன் பழனிச்சாமி ஏரோட்ட கத்திக்கொடுத்தான் .
ஏரோட்டறது எனக்கு மிகவும் பிடித்தமானத ஒன்று . சால் பாத்து ஏரோட்டும் இன்பம் எப்படி யிருக்கும் தெரியுமா பட்டம் விடும்பொழுது மனது மிதக்குமே அதுபோல அவ்வளவு லேசா இருக்கும் .சூரியன் இருப்பதே அறியாத  கணங்கள் அவை .

பரம்படிக்கும் பொழுது அதில் உருண்ண்டு பெறண்ண்ட  இன்பத்தைச்சொல்ல ஓராயிரம் வார்த்தைகள் வேண்டும் .

விவசாயம் இயந்திரம் வயப்பட  வயப்பட பல தமிழ்  சொற்கள் காணாமல் போய்க்கொண்டிருப்பதை  நினைத்தபொழுது  எனக்குள் ஞபகத்திற்கு வந்த சிலவற்றை நினைத்துப்பார்த்தேன் .

அவைகள் ...

கருக்குத்தடி - ஏர் பூட்டுதலில்  கலப்பையை தவிர்த்து இருக்கும்  பிற பகுதி  .நீளமான கட்டை .

கலப்பை - உழ பயன்படுத்தப்படும் கருவி .

மோழி -ஏரின் கைப்பிடி பகுதி .

நுகத்தடி -மாட்டு வண்டி ,ஏர் பூட்டுதலின் போது மாடுகளை கட்ட பயன்படும் கட்டை .

தலைக்கயிறு - தலையைச்சுற்றி கொம்பில் கட்டும் கயிறு .

முளைக்குச்சி - மாடு,ஆடு அகியவற்றை கட்டுத்தறியில் கட்ட பயன்படும் குச்சி .பூமியில் புதைக்கப்பட்டிருக்கும் .

அணப்பு -ஒரு கட்டுவாய் ,நாலு பக்கம் வரப்பு இருப்பது .

பட்டி - ஆடு,மாடுகள் அடைத்து வைக்கும் இடம் .

மயிளை காளை -மயிலை, வெள்ளை மாடு சற்று கருமை கலந்ததையும் அழைப்பர் .

காரி  காளை-கருப்பு மாடு .

செவளை -சிவலை ,சிவப்பு மாடு .

கிடாரி - கெடாரி,கடாரி ,பெண் மாடு .

பிறவை - பெண் ஆடு .

கிடா -ஆண் ஆடு .

காளை -7 வயது ஆண் மாடு .

எருது  -2 வயது ஆண் மாடு .

வெடை -பெண் கோழி .

கொடாப்பு - கோழி அடைக்கும் கூண்டு .

குடுசு - ஆடு அடைத்து வைக்கப்பட்டு அதிலே இடையர்களும் தங்கும்  வசதிகொண்ட இடம் .

பட்டறை -போர் வைக்கும் இடம் .அதன் அடிப்பாகம் .

குதிர் - தானியங்கள் சேமிப்பு  கலம் .

தாலி -கழுநீர் பானை .

பரம்பு அடித்தல்  -உழுத நிலத்தை விவசாயம் செய்ய பக்குவப்படுத்துதல் .

இவைகளை   நாம்  இனி ...


திரும்பும் பொழுதும் அதே காட்சிகள்  மனதில் பல யோசனைகளுடன் கவுந்தப்பாடியை நெருங்கிய பொழுது வேகமாக மிகவும் லாவகமாக என்னை ஒரு இளைஞர் முந்தி சென்றார் . ஏன்  இப்படி  வண்டி ஓட்றாங்க பசங்க என எண்ணிக்கொண்டே அவரை உத்துப்பாத்தேன் . என்ன ஆச்சரியம் அது எனது இனிய நண்பர்  ''உன்னதம்'' இதழ் ஆசிரியர் ''கௌதம சித்தார்த்தன்''  .மிகவும் மகிழ்ந்து போனேன் .
நாங்க எப்ப சந்தித்துக்கொண்டாலும் எதை பேசுகின்றோமோ  இல்லையோ ,கட்டாயம் இலக்கியம் பற்றி பேசுவோம் .இருவருக்கும் அவ்வளவு  இது பற்றி ஒரு சிறு பொறுப்பு  அவ்வளவே . நாங்கள் பேசியதினின்று சிறு துளிகள் .

தமிழ் இலக்கியம்  சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரிய வீச்சை நோக்கிய ஒரு பயணத்தை மேற்கொண்டது . ஆனால் ,அது அப்படியே தவிடுபொடியாகி இன்று ஒன்றும் இல்லாத நிலையில் உள்ளது .

தமிழ் இலக்கியவாதிகள்  கிரிமினல்கள்  என அவர் குறிப்பிட்டார் .

நான் சொன்னேன்  ,நீங்கள் இப்படி கூறிக்கொள்வதன் மூலம்  உங்ளின் அயோக்கியத்தனத்திலிருந்து தப்பிக்க  ஒரு பாதுகாப்பான ஏற்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு ,அதனை பயன்படுத்தி பெண்களை தவறாக உங்களின் இலக்கிய அறிவின் தன்மையால் பயன்படுத்திக்கொள்கின்றீர்கள் .நான் அயோக்கியன் ,என்னுடன் பழகினால் அயோக்கியத்தனமாகவே நடந்துகொள்வேன் என்ற ஒரு அனுமானத்தை இதன் மூலம் ஏற்படுத்தி நீங்கள் மோற்கொண்ட  பெண்களுக்கு எதிரான குற்றத்தினின்று தப்பிக்கொண்டு வருகின்றீர்கள் என்றேன் .
நீங்கள் எதிராக பேசுகின்றீர்கள் என்றார் .
இல்லை,இல்லை ,நீங்கள் எதிராகப்போனதால் அப்படி தோன்றுகின்றது என்றேன் .
ஏன் இன்னும் ''இனப்பெருக்க  இன்பர்களாக '' இருக்கின்றீர்கள் என்றேன் .
இலக்கியவாதி அல்லவா ஆச்சரியத்துடன் என்ன சொன்னீர்கள் என்றார் .
''இனப்பெருக்க  இன்பர்களாக ''  என்றேன் .
யோசித்தார் .

பின் தமிழில் தற்பொழுது இலக்கியம் உருவாகாமல் இருக்கிறது என்றார் .

நான் சென்னேன் ஆத்மாநாம்  எவ்வளவே முயற்சிகள் இலக்கியத்தில் மேற்கொண்டும் முடியாமல் இந்த சமுதாயம் திருந்தவே திருந்தாது என முடிவெடுத்து மனம் நொந்து கிணத்தில்விழுந்து தற்கொலை செய்துகொண்டான்  .அது போலத்தான் இன்றைய சுழலில் இலக்கியம் பற்றி நான் தற்கொலை செய்து கொண்டுதான் பேசுறேன் என்றேன்  .


அவர் சொன்னார் ,நண்பா, நானும்  இலக்கியத்தில் தற்கொலை செய்து தான் வாழ்கின்றேன் .
என்ன செய்ய ,நான் இப்பொழுது சராசரி மனிதனாகிவிட்டேன் .மன்னிக்கவும் ,என்னால் முடியவில்லை  என்றார் .

உண்மையில் அதற்கான ஒப்புதலான எனது நண்பனின் பதில் என்னை மிகவும் யோசிக்க வைத்தது .

எப்பவும் சித்தார்த்தன் இயல்பாக  உண்மையை பேசக்கூடியவர் .அவருடன் நெருங்கி பலகிய சிலருக்கே  இது தெரியும் .

திடிரென காஞ்சிக்கோயிலிலிருந்து ஒரு கட்சிக்காரர்  அவசரமாக அழைக்க விடைபெற்று விரைந்தேன் .

''இனப்பெருக்க  இன்பர்கள்''   இந்த வார்த்தை நான் முதல்முதல் பயன்படுத்தியது . இது குறித்து மீண்டும் மீண்டும்  யோசித்தேன் .

எனக்கு கிடைத்த பதிலை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன் .

இனப்பெருக்க  இன்பம் கொண்ட இத்தகைய நபர்கள் மிகவும் எச்சரிக்கையாக தங்களின் நகர்வை எதிர் இனத்தின் மீது பிரயோகப்படுத்துவர் .இவ்வாறு  பெண்கள் மீதான வக்கிரம ....













. Download As PDF

Tuesday, September 21, 2010

ரோஜா வனம்



வான் தொடும் உயரத்தில்
வளைத்து நெளித்து
அழகாக
கட்டப்பட்டது

அக் கோட்டை

வருடங்கள் பத்து ஆனதாம்
வலுவாக கட்ட

அக் கோட்டைக்கு

வலுவினை சோதித்த
வடிவனும் 
வலுவின் காலம்
ஆயிரம் என்றானாம்

"ரோஜா வனம்" என பெயரிட்டு


சிறு அழகிய
செடி ஒன்று
வாழ முளைத்தது
அதன் மீது
சுதந்திரமாய்

வருத்தப்பட்டது நீரின்றி

இறப்பைக் கண்டு பயந்த அது
வலுவிழந்த வேர் கொண்டு
இறங்கி வந்தது
மேலிருந்து
நீர் குடிக்க

மெது மெதுவாய்

நீரை
இறங்கி ருசிப்பதற்குள்
வேரின்
வேறின் வீரியத்தால்
இடிந்து போனதாம்
அக்கோட்டை

ஒரு நூறில்






.






( வேறின் - வேறு ஒன்றின்  )


.
Download As PDF

Saturday, September 18, 2010

சே... இந்த யுகத்தின் மனித வடிவம்....








சே .......

இந்த யுகத்தின் மனித வடிவம் ..



சொடுக்கி பார்க்கவும்



Che Guevera - Tamil Video


 உண்மை தான்

சுட்டி தந்த விடுதலை வீரா அவர்களுக்கு
மிக்க நன்றி


.

Download As PDF

Wednesday, September 15, 2010

பன்றி மாமிசம் சாப்பிட்ட புத்தர் - ராகுல்





எந்த ஜீவனுக்கும் இம்சை செய்யலாகாது , என்று புத்தநெறி பரப்பிய புத்தருக்கா இந்த விருந்து நடந்ததாகச்சொல்வது ! எப்படிப்பொருந்தும் ! ஆனால் ,ராகுல் தனது இந்த ஏட்டை ஒரு ஆராய்ச்சி நூல் என்று தெரிவிக்கிறார் .(கைதி எண் 6342 -167. 07/04/64 ). என்றார் 'சிந்து முதல் கங்கை வரை' என்ற நூலில்
''புத்தர் ,புத்த பிச்சுக்களோடு பன்றி மாமிசம் சாப்பிட்டார்'' என்று இராகுல் சாங்கிருத்தியாயன் சொல்லியிருப்பதைப்படித்த அண்ணா  .
இதை அண்ணா புத்தத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்கு ஆதரவாக கூறுவர் .

குறுகிய கண்ணோட்டம் எங்களுக்கு இல்லை .எமது கண்ணோட்டம் பரந்து,விரிந்து இருப்பது எனக் காட்டிக்கொள்ள விரும்பி சுயமரியாதை இயக்கத்தவரைக் கம்யூனிஸ்டுகள் காட்டிக்கொடுக்கின்றனர் .பாகிஸ்தான் பிரிவு கூடவே கூடாது என்றவர்கள் பிரிவினை உறுதிப்பட்டதும் அதற்கு ஆதரவு என்றனர் .இது பற்றி ஜின்னா கூறினார் .''பாகிஸ்தான் திட்டத்துக்கு ஆதரவு திரண்டு வராதிருந்த கட்டத்தில் ,அதன் நியாயத்தை இந்த யோக்கியர்கள் மதித்து ஏற்றுக்கொண்டிருந்தால் ,நான் இந்த கம்யூனிஸ்டுகளுக்கு நன்றி செலுத்தியிருப்பேன் .ஆனால் ,அப்போது என் மீது கல்வீசினர் .இவர்கள் பைத்தியக்காரர்கள்.என் நன்றிக்கு உரியவர்கள் அல்ல ''.
(அண்ணாவின் கடிதங்கள் 18.09.1953)

''நான் லுங்கி கட்டாத முஸ்லீம் ,சிலுவை அணியாத கிறித்துவன் ,திருநீறு பூசாத இந்து '' - அண்ணா  .

விருதுநகர் சங்கரலிங்கனார்  ''தமிழ் நாடு'' என சென்னை இராச்சியத்திற்கு பெயர் சூட்டவேண்டும் என போராடி மறைந்தார் . அண்ணா தான் முதல்வரானதும் முதல் வேலையாக ''தமிழ்நாடு'' என பெயரிட்டு அன்னாரின் ஆசையை நிறைவேற்றினார். ஒட்டுமொத்த தமிழர்களின் ஆசைகளையும்  நிறைவேற்றினார்.

அண்ணாவை படித்தவைகளில் படிந்தவைகள் .




.







Download As PDF

Tuesday, September 14, 2010

நடிகர்களாகிப்போனவர்களை என்ன செய்ய

மனிதன் தன் வாழ்வை  இங்கும்அங்கும் ஓட்டி அலைந்து திரிந்து ஒன்றையும் புரிந்துகொள்ளமல் சக மனிதர்கள் மத்தியில் தவிக்கும்பொழுது அவனால்  கடினத்துடன் கூறும் வார்த்தை ''நாடகமே உலகம் '' .

 ''நாடகமே உலகம் ,நாமெல்லாம் நடிகர்கள் ''   என்ற நாடக வார்த்தை  நாடகவாதியால்   கூறுவதற்கு முன் இவ்வுலகம் பற்றிய கணிப்பு மதவாதக்கூற்றுகளின் படி இருந்தது .

 மனிதனை தனது சுயத்தினின்னு புறம் தள்ளி நாடக மனேபாவத்திற்கு கொண்டுசென்று,
மனிதர்களை நாமெல்லாம் நடிகர்கள் என நடிகர்களாக்கி ,அதன் முலம் தன்னை விட நன்றாக நடிப்பவனை உயர்ந்தவனாக நோக்க வைத்து ,மக்களை நடிகர்களின் மாயையில் ஆழ்த்தி ,நடிகனை  இலட்சியவாதியாகவும் ,தானக்கு தலைவனாகவும் எண்ண வைத்து  ,அவனை தொடர வைத்து ,சமுதாயத்தை சீரழித்து ,உலகையே கேள்விக்குறியாகவும்,கேலிக்குரியாதகவும் ,கேளிக்கைக்கோ உரியதாகவும் ஆக்கி விட்டதால்  உலகை பீடித்த உன்னதவரிகள்   ''நாடகமே உலகம் ,நாமெல்லாம் நடிகர்கள் '' என்கின்றேன்.

''நாடகமே உலகம் ,நாமெல்லாம் நடிகர்கள் ''  என்ன பதத்தை  பயன்படுத்தியவருக்கு உண்மையில் நாடகமே உலகமாக இருந்திருக்கிறது தான் .ஆனால் ,அதனை நிஜ உலகத்தில் புகுத்தி  உண்மையை கற்பனையாக்கி விட்டது தான் கவலைதருகிறது .மனிதனின்  இயல்பை நடிப்பாக ஆக்கிவிட்ட ,மாற்றிவிட்ட  மிகப்பெரிய கெடுதி  இது அல்லவா ?

ஆடல்பாடலுடன் ஆரம்பித்தது .ஆடல்பாடலுடன்  கலாச்சார சீரழிவும் அதிகமாகி தற்பொழுது நடிப்பாகவே அனைத்தும் .

இன்று,
நிஜ வாழ்வை தொலைத்து ,
எது வாழ்வு என புரியாமல்
'' நாடகமே உலகம் ''என
நடிகர்களாகிப்போனவர்களை என்ன செய்ய ?.




. Download As PDF

Sunday, September 12, 2010

ஆணாதிக்கம்







நொரண்டு : ஆணாதிக்கம் என்றால்  ?

நண்டு : ஆண்+ஆதிக்கம் =ஆணாதிக்கம் .

நொரண்டு :இது தெரியாதா . விளக்கம் கொடு .

நண்டு :ஆண் என்றால் விளக்கம் தர்ரேன் .

நொரண்டு : சரி .

நண்டு :தான் எத்தகைய உரிமைகளை சமுதாயத்தில் பெற்றுள்ளானோ அதன் அனைத்தையும் பெண்ணிற்கு தரும் பண்புள்ள மனிதன்

நொரண்டு :நல்ல ஆண் ?.

நண்டு :இல்லை இவர் தான் ஆண் .

நொரண்டு : அதான் சொல்ரேன் .இப்படிப்பட்டவர் நல்லவர் .

நண்டு :இதில் நல்லவர் ,கெட்டவர் என்ற பாகுபாடு இல்லை .

நொரண்டு : அப்படினா ?

நண்டு :தான் எத்தகைய உரிமைகளை சமுதாயத்தில் பெற்றுள்ளானோ அதன் அனைத்தையும் பெண்ணிற்கு தரும் பண்புள்ள மனிதன் ஆணாவான் .அவ்வளவே .

நொரண்டு :அப்ப ஆணாதிக்கமுனு ஒன்னு இல்லையா ? .

நண்டு : (:

நொரண்டு :திருவள்ளுவரை ஆணாதிக்கவாதினு சொல்ராங்களே ?.

நண்டு :எதை வைத்து ?

நொரண்டு :சொல்றாங்க ?

நண்டு : ஏதாவது  ?

நொரண்டு :

''தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்பு ம் மழை.''

இந்த குறளை வைத்து சென்னதா ஞாபகம் .

நண்டு : ஓ . அப்படியா ?

நொரண்டு : ஆமாம் .

நண்டு :  அப்படி சொல்ரவங்க கிட்ட  நீ ஒன்னு கேள் .

நொரண்டு : என்னானு ?

நண்டு : நீங்க சமுதாயத்தில அனுபவித்துவரும் அனைத்து உரிமைகளையும் சக பெண்ணிற்கு தந்துவரும் பண்புள்ள மனிதரா என்று ?

நொரண்டு : ம் .

நண்டு : அதற்கு அவர் ஆம் என்றால் திருமணமானவரா என்று கேள் .

நொரண்டு :ம் .

நண்டு : அதற்கும் ஆம் என்றால் அப்ப நீங்க எப்படிப்பட்டவர்  ? 'கொழுநன்' தானே எனக்கேள் .

நொரண்டு : 'கொழுநன்' னா என்ன அர்த்தம் ?.

நண்டு :தான் எத்தகைய உரிமைகளை சமுதாயத்தில் பெற்றுள்ளானோ அதன் அனைத்தையும் தனது துணைக்குத்தரும் பண்புள்ள மனிதன் 'கொழுநன் ' ஆவான் .

நொரண்டு :அதெப்படி ஆணாயிருந்து கொழுநனாகமல் இருப்பார்களா ?

நண்டு :பலர் இப்படித்தான் பேச்சுக்கு மனிதனாக பேசுவார்கள் .ஆனால் ,நிஜத்தில் அப்படியில்லை  என்பதால்.

நொரண்டு :ஆமாம்,ஆமாம் .உண்மைதான் .

நண்டு :  'கொழுநன்'  தான் எனில் அவரிடம் மேற்கூறிய குறளுக்கு விளக்கம் :

''தெய்வம் என்ற ஒன்றை போற்றது ,தனது 'கொழுநன்' போற்ற இருப்பவள் இல்லத்தில்
பெய் என்றவுடன் மழைபொழிந்தால் எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகுமோ
அவ்வளவு மகிழ்ச்சி இருக்கும் .'' எனச்சொல் .

நொரண்டு :மழை புரியல ...

நண்டு :கடும் கோடை மழைவந்தா நல்லாயிருக்கும்னூ நினைக்கிற .அப்ப உடனே மழை வந்தா உனக்கு எப்படி இருக்கும் ?

நொரண்டு : அப்படி நடந்தா ஆனந்த தாண்டவம் ஆடுவேன் . பக்கத்திருப்பவர்களை மகிழ்வுடன் ஆராதிப்பேன் . அந்த இன்பத்திற்கு ஈடு எங்காவது இருக்க முடியுமா ? ஐயோ .விவரிக்கமுடியாத ஒருவகையான ...என்ன சொல்லதுனே ... அப்படி ...

நண்டு :...அப்படித்தான் கொழுநனை பெற்ற இல்லத்தில் மகிழ்வான வாழ்வு இருக்கும் என்கிறார் வள்ளுவர் .









.





.
வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் ... தொடரும் ...




. Download As PDF

Saturday, September 11, 2010

அன்னியம்

.


வேகமாக

புன்முறுவலிடும்

கடக்கும் முகம்

கடந்த என்னை

சவுக்கியமா

அம்மா அப்பா

கல்யாணம் குழந்தைகள்  தொழில்

என்ன ஏது என

பரிமாறிக்கொண்டது

சில கேள்விகளை

சில நிமிடங்களில்

அவசர நிமித்தத்தில்

பாசப் பிணைப்புடன் .

பத்து வருடத்திற்கு முன்

இருபது வருடம்

பக்கத்து வீட்டிலிருந்து

எந்த கணமும்

புன்முறுவல் பூக்காத

மனிதர் .






. Download As PDF

Friday, September 10, 2010

எப்பொழுது மாறுவேன்

.



அவர்களிடம் அவர்களாய்

இவர்களிடம் இவர்களாய்

அதுகளிடம் அதுகளாய்

எல்லோரிடமும் எல்லாமாய்

மாறிமாறி யானது

நான்...

நானாய்

எப்பொழுது மாறுவேன்

பச்சோந்தியாகா ?.

. Download As PDF

Thursday, September 9, 2010

நான் நானாகவே வாழ விரும்புகிறேன் .


கடுமையான விடம் கொண்ட தேள் ஒன்று பெருமழையினால்
ஆறு ஒன்றை கடந்து வாழ எண்ணியது.

ஆற்றை கடக்க இருந்த ஆமையை அதன் முதுகில் தன்னை ஏற்றிச்செல்லும்படிக் கேட்டது.

'மாட்டேன்...நீ என் முதுகில் சவாரி செய்யும்போது என்னை கொட்டி விடுவாய் .நான் இறந்துபோவேன்' என்றது ஆமை.

அதற்கு தேள்,'உன்னை நான் கொட்டினால் நீ இறப்பாய் ,அதனால் நீரீல் மூழ்கிப்போவாய் அப்போது நானும் முழுகி இறந்துவிடுவேன் அல்லவா' என்றது.

ஆமை தேளை ஏற்றி ஆற்றை கடக்க ஆரம்பித்தது.

பாதி தொலைவில் தேள் ஆமையை கொட்டியது.

ஆமை,ஏன் கொட்டினாய்,இது எந்த விதத்தில் சரி என கேட்டது .

அதற்கு தேள், 'நீ  கேட்பது தான் எனக்கு புரியவில்லை .எனது குணம் கொட்டுவது.அதை மாற்றச்சொன்னது உனது ஆதிக்க மனோபாவம்.நானும் உனது ஆதிக்க வார்த்தைக்கு கட்டுப்பட்டு வாழும் ஆசையில் இந்த ஆற்றை கடக்க சம்மதித்தேன் .பிறகு தான் யோசித்தேன் .உண்மையில் என்னால் ஆற்றை கடக்கமுடியாது தான் .நான் தனியாக யாரின் துணையுமின்றி முயற்சித்திருந்தாலும் இறந்து தான் போயிருப்பேன் ஆற்றில் மூழ்கி.கடக்காமல் இருந்திருந்தாலும் இறந்து தான் போயிருப்பேன் பெருமழையால் .ஆனால்,நான் இறந்து விடுவேன் என்பதற்காக உனது ஆதிக்க சக்திக்கு கட்டுப்பட்டு வாழ எனக்கு சிறிதும் விருப்பமில்லை.அதோடு என்னை ,எனது இயல்புக்கு மாறாக மாற்றி வாழ ஆசை காட்டிய உன்னையும் சும்மா விட மனமும் இல்லை . அதனால் தான் எனது இயல்பை வெளிப்படுத்தினேன் .இதில் தவறென்ன இருக்கிறது.சில நிமிடங்கள் வாழ்ந்தாலும் நான் நானாகவே வாழ விரும்புகிறேன் அதனால் கொட்டினேன் 'என்றது .

நான் செய்தது உதவியில்லையா என்றது ஆமை .

நான் எதற்காக பயணம் செய்கின்றேன் என கேட்காமல் ,ஆற்றின் ஆபத்தையும்,அக்கரையின் தன்மையையும் கூறாது. என்னால் ஆபத்தில்லை என்ற உத்திரவாதத்தை மட்டுமே பெற்று அழைத்துச்சென்ற நீ,இதை எப்படி உதவியென்கிறாய் ,நீயும் ஆற்றை கடக்கத்தானே இருந்தாய் என்றது தேள் .

அப்பொழுது வந்த பெருவெள்ளம் இருவரையும் மூழ்கடித்தது .






.     Download As PDF

Wednesday, September 8, 2010

போல் போல்




திங்கள்
திங்கள் போல்

செவ்வாய்
செவ்வாய் போல்

புதன்
புதன்  போல்

வியாழன்
வியாழன் போல்

வெள்ளி
வெள்ளி போல்

சனி
சனி  போல்

ஞாயிறு
ஞாயிறு போல்

அத்தனை  போல்களும்
அதனதன் போல்

ஒரு போலும் இல்லை
என்னது போல் .






. Download As PDF

Monday, September 6, 2010

அறிவியலும் ,இலக்கியமும் .



.அறிவியல் என்பது அனைவருக்கும் பொதுவானது.
மொழி, இனம், ஜாதி, மதம் என்று எதுவும் கிடையாது.
ஆனால்,அது தோன்றும்பொழுது எங்கிருந்து தோன்றுகின்றதோ அந்த மொழியின் தன்மையினின்று வெளிப்படும் பின் பொதுமைப்படும்.அந்த மொழியும் பின் அதற்கு உரிமை கொண்டாடுவதில்லை.
இலக்கியம் அப்படியில்லை.

அறிவியல் முதலில் தோன்றியதா?
இலக்கியம் முதலில் தோன்றியதா?
என்றால்
அறிவியல் தான் முதலில் தோன்றியது எனலாம்.

அறிவு வெளிப்படு கைப்பழக்கத்திற்கு வர ஆரம்பித்ததிலிருந்து,தனித்து இயங்க ஆரம்பித்துவிட்டது இலக்கியம் .அப்படி சென்ற இலக்கியம்
இன்னும்அறிவியல் போல் பொதுமைப்படவில்லை.
காரணம்,இலக்கியத்தில் ஆன்மீகம் கலக்க ஆரம்பித்ததுவே.
ஆன்மீகம் தன்பால் தன் வளர்ச்சிக்கு இலக்கியத்தை
மிக அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்து,அதனால் அதன் பொதுமை குணத்தை நாசம் செய்து இன்று வரை அது தொடர்கிறது.

இங்குதான்
இலக்கியத்தை பாதுகாக்க
இலக்கியநடப்பு வாதிகள் என்பர்
இலக்கியம் மொழி கடந்தது ஒன்று
பொதுமையானது.
எக்காலத்திற்கும், எச்சூழலுக்கும் பொதுவானது.
ஒரு மொழி இலக்கியம் என்று ஒன்றைக் கூறக்கூடாது.
அந்த மொழியிலுள்ள இலக்கியம் என்று கூறவேண்டும் என்று
இலக்கியபொதுவுடமை பேச ஆரம்பித்தனர்.
ஏனெனில்
தங்களின் படைப்புகளை பொதுமையானதாக காட்டிக்கொள்ளவே அனைவரும் அப்படி.
ஆனால்
தாங்கள் தாங்களின் தற்சார்பு விசயங்களை
இலக்கியம் என்னும் வடிவில் படைத்து
அதனை பொதுமைப்படுத்துவதன் மூலம்
தங்களின் தற்சார்பு கொள்கைகளை பிரச்சாரப்படுத்தி
தங்களை மனித குலத்திற்கே பொதுவான கர்த்தாக்களாக
எளிதில் ஆக்கிக்கொள்ளலாம் என்ற எளிய நகர்வில்
எழுத்து வண்மையை கைவரப்பெறும் கலையை கற்று
பின் அதில் பயணம் செய்தனர்,செய்கின்றனர் இலக்கிய வேடதாரிகள்
(பின் குறிப்பு : அப்படி பயணம் செய்து பல ஆயிரக்கணக்கான வாசகர்களை தங்களின் பால் ரசிகர்களாக வைத்திருந்த எழுத்து வல்லுனர்கள்
பின் தங்களின் ரசிகர்களால் தூக்கி எறியப்பட்ட வரலாறு
இலக்கிய உலகில் பல )

இப்படித்தான்
மொழி பெயர்ப்புகளும்,புளகாங்கிதத்துடன் கூடவே
மறைமுகமாக ஆன்மீகமும் வளர .மிகப் பெரிய கேட்டை
இலக்கிய வாதிகள் என்பவரும் இலக்கிய கோட்பாட்டாளர்கள் என்பவரும் இலக்கியத்திற்கு
செய்து இன்றுவரை தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றது.

இப்படி தமிழுக்கு வந்த பிற மொழி எழுத்துக்களில்
'பொதுவுடமை'
'புரட்சி'
மற்றும்
'பகுத்தறிவு 'எழுத்துக்கள் தவிர்த்து மற்றவைகள் அனைத்தும் இலக்கியம் என்ற போர்வையில் கட்டவிழ்ந்து விடப்பட்ட ஆன்மீக பயணமே.

படைப்பை பார்,
படைப்பாளியைப் பார்க்காதே.
படைக்கும்வரைதான் படைத்தவன்
அதற்கு பொறுப்பு.
அது வெளிவந்த பிறகு
அவனும் வாசகனே
என்பது எல்லாம்
வெறும் தப்பிக்கும் பாசிசகூச்சல்.
ஆனால்
இது கடவுள் கோட்பாடு .
இப்படி சொல்பவர்கள் அனைவரும் ஆன்மீகவாதிகளாகவே இருப்பர் .


விஞ்ஞானப் படைப்புக்கும்,இலக்கியத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு.
உங்களிடமுள்ள வாகனம் ,உங்களுக்கு பயன்தரும் மருந்து,உங்களிடம் ஆன்மீகம் பேசாது.அதனை படைத்தவன் பேசலாம்.அந்த படைப்பு?
ஆனால்
உங்கள் கையிலுள்ளஒரு இலக்கியம் கட்டாயம் பேசும்
அல்லது திசை திருப்பும்.அந்த அளவிற்கு செய்துவிட்டனர் .


இலக்கியத்திலுள்ள அறிவு
என்றைக்கு
அறிவியல் அறிவு போல்
அனைத்தையும் கடந்து வெளிவருகின்றதோ
அன்று தான்
இலக்கியம் நலம் பெறும்.

அதற்கு
இலக்கியத்திலிருந்து ஆன்மீகத்தை பிரிக்க வேண்டும்.
அப்பொழுதுதான் இலக்கியம் பொதுமைப்படும்.
மொழியும் வளம் பெறும் .

அதுவரை இலக்கியம் ஆன்மீகமாகவே இருக்கும்.



. Download As PDF

Sunday, September 5, 2010

கடவுள் பெரிசா ? காசு பெரிசா ?




நண்டு : கடவுள் பெரிசா ? காசு பெரிசா ?

நொரண்டு :அது தான் பலபல பேர் கேட்டு பலபல பேர் பலபல பதில் சொல்லி சொல்லி சலித்து புளித்துப்போனதை இப்ப கேக்கர....

நண்டு : இன்னும் கடவுளும்,காசும் சலித்துப்புளித்துப்போகாமல் இருப்பதனால் தான் .மேலும் சில சந்தேகங்களும் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது அதனால் தான்...

நொரண்டு :என்ன சந்தேகம் ....?

நண்டு : மாற்றம் என்பதைத்தவிர மற்ற அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்கின்றாயா?

நொரண்டு :....ம்........ம்.....அதை வைத்துக்கொண்டு உனது கருத்தை கூறு .

நண்டு : அப்படினா கடவுளும்,காசும் ஏன் இன்னும் மாறாமல் இருக்கு ?

நொரண்டு :அட மண்டு , அப்ப இருந்த கடவுளும் ,காசும் இப்போது இல்லையே.மனிதன் தன்னை அச்சுறுத்தும் விசயங்கள் இவை, இவை அவ்விசயத்தில் நாம் கவனத்துடன் இருக்கவேண்டும் இல்லையெனில் நாம் அழிந்து போவோம் என்னும் கருத்தை வெளிப்படுத்தும் வடிவமாக கடவுளை படைத்தான் .பின் நாம் அதனை மண்டியிட்டால் ஒன்றும் செய்யாது என்று தொடங்கி ,பூசை,பிரார்த்தனை ,வணங்குமுறை என ஆரம்பித்தான் . பின் வாழ்வு நிலை ஆனபொழுது அது பயக்கவழக்கமானது .அப்பயக்கவழக்கம் படிப்படியாக கேள்வி கேட்காமல் தொடர்த்து மேலும் பல இடைச்செருகல்கள் சேர்ந்து நிறுவனமானது .அதில் கடவுள் நிலையாகி தான் படைக்கப்பட்டது என்பதனை மறைத்து தன்னால் படைக்கப்பட்டதாக பிரகடனப்படுத்தப்பட்டது .
காசும் அப்படித்தான் பாதுகாப்புமிக்க பண்டமாற்று முறையில் வளர்ந்து பின்
படிப்படியாக எளிய வடிவெடுத்து அது அவனை பசியில் அலையவிட்டதாலெ அதன் மீது அதிகம் ஆசை கொண்டு சுரண்டலினால் ஓரினத்தின்  பெருக்கமானது.

நண்டு : கடவுளும்,காசும் இல்லாமல் வாழ முடியாதே ?

நொரண்டு :ஏன் ? கடவுளும்,காசும் இல்லாமல் ஆதிமனிதன் வாழவில்லையா ..? மனிதனுக்கு விபத்தாக வந்ததுதான் கடவுளும்,காசும் .இன்று ஆனேக உயிரினங்கள் கடவுளும்,காசும் இல்லாமல் தான் வாழ்கிறது. மனிதன் படைத்தான் அதில் வாழ்கிறான் .உங்க வீட்டு நாய்க்கு  கடவுளும்,காசும் தேவையில்லே தானே.

நண்டு : நான் மனிதனுக்கு கேட்டேன்......

நொரண்டு : நான் உலகைப்பற்றியும் ,ஒட்டுமொத்த உயிரினங்களைப்பற்றியும் சிந்திக்கிறேன் .

நண்டு :மனிதன் மட்டும் தானே முக்கியம்...

நொரண்டு :உலகில் மனிதன் மட்டும் இருந்தால் மனிதன் மட்டும் தானே முக்கியம் என சொல்லலாம் . அப்படியில்லையோ உலகம் ....

நண்டு :அப்படியெனில்.....

நொரண்டு :கடவுளால் மனிதனுக்கு பாதுகாப்பும் ,நிறைவும் கிடைக்கிறது என்பதனின்று அது
மனிதனுக்கு மட்டுமே படைக்கப்பட்ட ஒன்று என்றாகிறது .அப்படியாயின் பிரபஞ்சத்தை படைத்தான்
என கூறுவது எங்கனம் ?

நண்டு : என் கேள்வி கடவுள் பெரிசா ? காசு பெரிசா ? என்பதுதான்

நொரண்டு :இல்லாத கடவுள் பெரிசா , இருக்கும் காசு பெரிசா என்றுதானே கேட்கிறாய்?.
திறமையுள்ளது பிழைக்கும் .காசை அடைய அவ்வழிதான் . அதனை போதுமான
அளவு அடைந்த பின்னும் பேராசையால் மேலும் மேலும் சேர்த்து அல்லது இழந்து
பரிதவிக்கும் மனிதன் மனநோயாளி ஆகிறான் .தனது திறமையால் எதுவும் அல்ல வேறு சக்தியால் அது தான் இயக்குகிறது என்ற மனநோயில்
தன்னை இழக்கின்றான்.மனநோய் மற்றவர்களால் அங்கிகரிக்கப்படுகின்றன.வளர்க்கப்படுகின்றன அதனால் தானும் தன்னை மனநோயாளியாகவே ஆக்கிக்கொளகிறான் . உலகில் அனைவரும் ஏதோ ஒருவகையில் மனநோயாளிகளாகவே உள்ளதாக கூறும் அளவிற்கு உலகம் ஆக்கப்பட்டுவிட்டது .

மனநோய் குணமானால் கடவுள் பெரிசா ? காசு பெரிசா ? என்ற கேள்வியே இல்லாமலபோய்விடும்.
மனநோய்க்கு மருந்து சுரண்டலற்ற வாழ்க்கை முறையே .அது வரை மனநோய் கிருமி ' கடவுளே' பெரிசு .

நண்டு :சுரண்டலற்ற சமூகத்தை கற்பனை செய்து பார்க்கின்றேன்.

அப்போது கடவுளும் , காசும் ......என்னாகும்



(அ.பொ ...பயக்கவழக்கம் -பயந்து வாழும் பழக்கம் .)






. Download As PDF

Saturday, September 4, 2010

விஞ்ஞானிகளுக்கு தெரிந்த கடவுள்கள் .






என்னிடம் கடவுளைப்பற்றி விஞ்ஞானிகள் ஒவ்வொருவரும் என்ன என்ன கூறினார்கள் என்று விளக்கி நண்டு புலகாங்கிதம் கொண்டபொழுது நான் அதிர்ந்துபோனோன் .

விஞ்ஞானிகளும் இந்த நச்சு சமுதாயத்தில்தானே வளர்ந்து,வாழ்ந்து வந்திருகின்றனர் .இந்த கல்வி கட்டமைப்பிலிருந்து தானே கல்வி கற்று.
அப்படியிருக்க அவர்களிடம் எதைப்பற்றி என்ன கேள்வி கேட்டாலும் என்ன பதில் வரும் இந்த கட்டமைப்பை தாண்டி .
அவர்களுக்கு என்று சிறப்பாக வேறு ஒன்றும் இல்லையே .

பொதுவாக விஞ்ஞானிகள் தங்களின் வாழ்க்கைப்பாதையில், இளமையிலேயே அறிவியலின்பால் அதிக ஆர்வம்கொண்டு,
தங்களை அர்ப்பணித்ததன் காரணமாக, உலகிற்கு உன்னத கண்டுபிடிப்புகளை அளித்து மனிதகுலம் வளமாகவும், நலமாகவும், நிறைவாகவும் வாழ தங்களால் ஆன பங்களிப்பு செய்யப்படுகிறது.
அவர்களின் குறிக்கோள் முழுவதும் தங்கள் எடுத்துக்கொண்ட விசயத்தை அடைவதாகவே இருக்கும் .மற்றபடி அவர்களுக்கும் சமுதாயத்தில் புதைந்துகிடக்கும் பழக்கவழக்கங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை .
அது மூடத்தனம் என்றோ ,புரிந்துகொள்ளமுடியாது என்றோ அவர்களால் பிரித்துணர நேரம்,அவசியம் அவர்களுக்கு இல்லை .
நமது கல்விமுறை கற்றுக்கொடுத்த சமுதாயம் பற்றிய படிமம் அவர்களிடம் அதிகமாகவே விரவியிருக்கிறது .மேலும் , அவர்களிடம் கடவுளைப்பற்றி கேட்பது எனக்கு சரியாகப்படவில்லை.

விஞ்ஞானம் என்பது அனைவருக்கும் பொது .
அதனால் விஞ்ஞானிகள் பகுத்தறிவாதிகளுடன் ஒதுக்கப்படுகிறார்கள் ஆத்திகர்களால் பயத்துடன் .

பிரபஞ்ச ஆய்வில் ஈடுபடுபவர்கள் கூட பிரமிப்பில் தான் உள்ளனர். அவர்களுக்கு மனிதனைப்பற்றியும் ,அவனின் அறிவின் ஆகப்பெரிய தன்மை பற்றியும் எதுவும்தெரிவதில்லை.எளிமையாகக்கூறவேண்டுமேன்றால் சூரியனுக்கு கோடிகோடி ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள
ஒன்றைப்பற்றி கூறும் ஒரு அறிஞருக்கு கழிவுநீரால் ஏற்படும் கேடு பற்றி தெரிவதில்லை.இதயநோய் ஆராய்ச்சியாளருக்கு பல் நோய் பற்றிய அறிவு போல் .இது போன்றுதான் அனைத்தும்.

இங்குதான் சிந்தனையாளர்கள் அனைவரையும் கடந்து நிற்கின்றனர் .
இங்குதான் மனித சமுதாயம் சிறக்கவும், மனிதநேயம்
பெருகவும் அனைவருக்கும் பொதுவான ஒரு பார்வையை வைக்கிறது
பகுத்தறிவு .
விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கின்றனர்.
பகுத்தறிவாளர்கள் பகிர்ந்தளிக்கின்றனர்.

எந்த ஒரு விஞ்ஞானப்படைப்பிலும் அந்த படைப்பினை மட்டுமே பார்க்கவேண்டும் .அதைப்படைத்தவன் அதற்குத்தரும் விளக்கத்தை அதைப்பொருத்து அதுசம்பந்தமாக மட்டுமே காணபெறவேண்டும் .
அப்பொழுதுதான் அப்படைப்பை அடுத்துவரும் தலைமுறையினர் மேலும் செலுமைப்படுத்துவர்.

அது தவிர்த்து மற்றவற்றில் அவர்களின் பார்வை மங்கலாகவே இருக்கும்.
பதிலும் மழுப்பலாகவே வரும். கடவுளும் அப்படித்தான் தெரிவர் .


-நொரண்டு .




மீள்வு .
. Download As PDF

Friday, September 3, 2010

சூப்பர் பக்கும் - ஏழைகளின் குக்கும் .




















இன்றைய நாளிதழில் வந்த செய்திகளில் .

1.வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு வழங்க முடிவு .
2.சூப்பர் பக் ஆய்வு செய்த விஞ்ஞானிகளுக்கு நோட்டீஸ் .

இவற்றை படித்ததும் எழுதத்தோன்றியது .

1.உச்சநீதி மன்றம்
வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கும்படி கூறி பிறகும்
மத்திய அரசு ஏன் விலைக்குத்தான் கொடுப்போம்னு அடம்பிடிக்கிறது என்றே தெரியவில்லை .
வழக்கு தொடராமல் இருந்திருந்தால் இவைகள் அனைத்தும் வீணாத்தான் போக்கியிருப்பார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது .
வீணா போனாலும் போகுமேயொழிய மக்களுக்குத் தர தயாராயில்லாத அவர்களை மக்கள் எவ்வாறு நம்புவார்கள் இனி .
இத்தனைக்கும் இவைகள் மக்களின் சொத்துக்கள்.
அவைகளை மக்களுக்கு கொடுப்பதற்கு ஏன் இத்தனை தயக்கம் ?.
மக்கள் நல்லா பொழச்சிறுவாங்க என்ற அச்சமா ? .
ஆமா,இவ்வளவு தானியங்கள் வேஸ்டாகரவரைக்கும் பொருளாதார மாமேதைகள் என்னசெஞ்சுக்கிட்டிருந்தாங்க ?.
உலக வங்கியில கடன் வாங்க கையொழுத்து போட போய்ட்டாங்களா ?
அடடே ,இவங்கள நம்பில்ல நாடு இருக்கு .

எத்தனையோ இலவசங்களை அறிவிக்கிறீங்க .
வீணா போயிருக்கரத ஏங்க விக்கப் பாக்கிறீங்க .
வீணாப்போரதையே விக்கப்பாக்கிற நீங்க ...?

எதிர் கட்சிகதான் குரல் கொடுக்கல ,
வலைப்பதிவர்களாவது இதற்கு குரல் கொடுப்பார்கள் என நம்புகிறேன் .



2.ஒரு நாட்டில் அதன் அனுமதியில்லாமல் குடிமக்களை மருத்துவ ஆய்வுகள் செய்வது மிகவும் கடுமையான தண்டனைக்குறிய குற்றமாகும் .
அதையும் தாண்டி தேசத்தின் பெயருக்கே களங்கம் ஏற்படும் படியாக நடந்து கொண்டதற்கு ?.
மருந்து கட்டுப்பாட்டுத்துறை
விஞ்ஞானிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது .
தாமதமாக செயல்பட்டாலும் நல்ல ஆரம்பம் .
அது மட்டும் போதாது
இந்த ஆய்வுக்கு இந்தியாவிற்கு வந்தவர்கள் யார் , யார் ?
அவர்களின் நோக்கம் என்ன ?
இது மாதிரி யார் ,யார் இன்னும் உள்ளனர் ?
அவர்களின் நோக்கம் என்ன ?
எதற்காக ,யாரால் இவர்கள் வந்தார்கள் ?
எப்படி வந்தார்கள் ?
அவர்களின் பின்னணி எது ?
போன்றவற்றை கண்டுபிடிப்பதோடு இனிவரும் காலங்களில் இப்படி நடக்காதபடி கடுமையான நடவடிக்கைகளை தயவுதாட்சணியம் இன்றி உடனே எடுக்க வேண்டும் .
இல்லாது போனால்நம் நாட்டின் நலத்திற்கு மிகப்பெரிய பாதகமாக எதிர்காலத்தில் அமைந்துவிடும் இப்படிப்பட்ட செயல்கள்.
இதில் நம் நாட்டின் கவுரவம் மட்டுமல்ல பாதுகாப்பும் அடங்கியுள்ளது .



. Download As PDF

Thursday, September 2, 2010

குழந்தைக்காய் இலையுதிர்க்கின்றேன்


























என்னிருப்பை நிலைநிறுத்த
வளர்ந்து வாழ்கிறேன்
கானகத்தே
என் குழந்தையை
தாலாட்ட
இலையுதிர்த்தேன்
பஞ்சணைக்காய்
மக்கச்செய்தேன்
என்னிலையை
வீதைவீதைத்தேன்
சதையுடன்
வீரீட்டெழும்
என் நினைவில் .
ஓடியது பல ஆண்டு
என் காலம்
ஆசையாய்
பிள்ளை காணா
அனுப்பிவைத்தேன்
என் கையை
பஞ்சணையில் காணாது
தேடியவர சென்ற கைகள்
திரும்பவில்லை .
மீண்டும் மீண்டும்
குழந்தைக்காய்
இலையுதிர்க்கின்றேன்
என் வாழ்வில் .





(கானகம் -முல்லை நிலம்,தீவு இப்படி பொருள்கொள்ளலாம் )



. Download As PDF

இழிப்பு

























தூங்கப்போகும் முன்
அறை கதவைத்திறந்து
கணினியில் இருந்த
என்னைப்பார்த்து
இழித்தாள்.
எதற்க்காக என்பதற்குள் மறைய
ஏகப்பட்ட எதற்காக
என் மண்டையில் எரிமலையாய்.
ஏளனமா ? எதிர்பார்ப்பா ?
ஏமாற்ற மறைப்பா ? வெகுளித்தனமா ?
தேவைகளின் பூர்த்தி செய்யாமையா ?
எதுவென்று தெரியவில்லை
அந்த இழிப்பின் இரகசியம்
ஏதோ ஒன்றாகத்தான்
இருக்கவேண்டும்
அது
அவளிடமோ
அல்லது
என்னிடமோ .





. Download As PDF

Wednesday, September 1, 2010

கவலை அழிக்கும் காஷ்மீர்







எனக்குத்தெரிந்து நடந்த நிகழ்விது .
விவசாயிகள் சங்கம் மிகவும் வலுப்பெற்று தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக மாறிவந்துகொண்டிருந்த சமயம் அது .உண்மையில் அந்த காலகட்டத்தில் அவர்கள் சரியான அறிவுத்தலின் கீழ் இயங்கியிருப்பார்கள் எனில் திராவிட கட்சிகள் அனைத்தும் அப்போதே வீட்டிற்கு சென்றிருக்கும் .ஆனால் ,அப்படி நடக்காமல் போனதிற்கு காரணம் பலவாக இருந்தாலும் ,துரதிருஷ்டமான நிகழ்வாகவே அதன் தோய்வு அமைந்து விட்டதோடு ,திராவிடக்கட்சிகளால் திட்டமிட்டு அதற்குப்பின்னிட்டு அதிக ஊங்கமும் ,ஆதரவும் தந்ததால் சாதியக்கட்சிகள் பல தோன்றின.
சரி,விசயத்திற்கு வருவோம் .
அப்ப விவாசாயிகள் மாநாடு ,ஆர்ப்பாட்டம் என அறிவித்து இருந்தனர் .
அப்ப எம்.ஜி.ஆர் ஆட்சி .கட்டுப்படுத்த முடியாதபடியாலும் ,மேலும் உள்ளூர் போலிச நம்பாத படியாலும் எம்.ஜி.ஆர் கேரளா போலிஸ பாதுகாப்பிற்காக அழைத்து நிப்பாட்டிட்டார்.அதோட நின்றிருந்தால் பரவாயில்ல ,விவாசாயிகள் சங்கத்தினர் பச்சைத்துண்ட கட்டிருப்பாங்க .அதனால் கேரளா போலிஸிடம்"பச்சைத்துண்ட கண்டா பட்டை எடுக்கும்" என ஆணையும் போட்டுவிட்டார் .அப்பொழுது பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் திரள்திரளாக வேண்டுதலின் நிமித்தும் பழனி நோக்கி சென்றுகொண்டிருந்தனர் ,அவர்களில் அனேகர் பச்சை ஆடை உடுத்தி யாத்திரை மேற்கொண்டிருந்தனர் .பாதுகாப்புக்கு நின்றிருந்த போலிஸே கேரளத்துக்காரர்கள் தமிழ் தெரியாது ,நம்மாலுகளுக்கே மலையாளம் தெரியாது . கேரளா போலிஸ்சுக்கு '' பச்சை துண்ட கண்ட பட்டை எடுக்க''ஆணை . அதனால் புடுச்சாங்க பாரு கோயிலுக்கு போன பச்சை தரித்த பக்தர்களை .மரண புடி .எங்க அப்பிச்சியும் அதில மாட்டி அடிவாங்கி ஆஸ்பத்திரிக்கு நடந்தார்...நடந்தார் ...அவர் சொன்னார் நாங்க கோயிலுக்கு போரோம்னு சொன்னாலும் பாஷை புரியாம எதித்து பேசரதா நினைச்சி பின்னீட்டாங்க என .அப்ப இருந்து சாகும் வரை அவர் மத்திய கம்பனியோ ,மற்ற மாநிலத்தவர்களோ தேர்தல் நேரப்பாதுகாப்பிற்கு வந்தால் கூட ஒரு அன்னியப்பார்வையே பார்ப்பார் .மேலும், உள் மனதில் பாதிப்பால் அவர்களை அவருக்கு பிடிக்காது போனதை நேரடியாகவே அவர்களிடம் வெளிப்படுத்துவார் . தவறு என சொன்னாலும்,இவன்களுக்கு இங்கு என்ன வேளை ,இவன்க இல்லாமல் ஒன்னும் ஒழுங்கா நடக்காதா என்ன ? என கேட்பார்.நியாயமான கேள்வியாகவே படும் .

கவலை அளிக்கும்படியாக உள்ளது காஷ்மீரில் அனுதினம் நடந்துவரும் நிகழ்வுகள் .

தற்போதைய நிகழ்வுகள் அங்குள்ள மக்களின் மனநிலையை நன்றாக வெளிச்சம்போட்டு காட்டுகிறது .காஷ்மீரில் நடக்கும் நிகழ்ச்சிகளை ஊன்றிப்பார்த்தால் எனக்கு என்னவோ அதிக காலமாக அங்கே நிருத்தப்பட்டுள்ள மத்தியப்படைகளை அங்குள்ள மக்களுக்கு பிடிக்காமல் போனது தான் காரணம் என்றே தோன்றுகிறது . அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு மக்கள் தெருவில் வந்து போராடுகின்றனர் என்றே நினைக்கின்றேன் .இப்ப அமைதியாக இருந்தவர்களை தூண்டிவிட்டு ,அதோடு இருந்தாலும் பரவாயில்லை ,அதில் தேவையில்லாமல் தீவிரவாத சாயம் பூசப்பட்டதால் ,தீவிரவாதிகளுக்கு அதுவே சாதாகமாகி.இப்ப ஒரு மாநிலத்தில் நடந்த ஒரு எளிய தீர்க்கப்பட்டிருக்கவேண்டிய சிறுபிரச்சனையை மிகப்பெரிய தேசிய பிரச்சனையாக ஆக்கி குளிர்காய்ந்து கொண்டுள்ளனர் அரசியல்வாதிகள் .
காஷ்மீர் மக்கள் அமைதியாக வாழ அரசியல் சார்பில்லாத மனிதாபிமான நடவடிக்கைகளை மோற்கொள்ளவேண்டியது அந்த மாநில அரசின் கடமையாகும்.அதை விடுத்து அது இதனை தேசிய பிரச்சனையாக்குவது நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல.
ஒரு சிறுபிரச்சனையை எவ்வாறு தேசிய பிரச்சனையாக மாற்றமுடியும் என்பதற்கு இதைவிட சான்று ஒன்றை யாராலும் இனிவரும் காலத்தில் காட்டமுடியாது .
மக்களின் மனேநிலையை புரிந்து நடந்துகொள்ளவேண்டும் அரசுகள் .
ஆந்திராவில் உஸ்மானிய மாணவர்கள் ஆசிரியர்களைத்தாக்கிய சம்பவத்தை நினைத்துப்பாருங்கள்.மக்கள் எவ்வாறேல்லாம் சிந்திப்பார்கள் என .
காஷ்மீர் நம் நாட்டின் தலை ,அதை தேவையில்லாமல் மேலும் தலைவலியாக மற்றிவிடாதீர்கள் .
கவலை அளிக்கும் இவ்விசயத்தில் மனிதநேய நடவடிக்கையே
காஷ்மீரின் கவலையை அழிக்கும் என நம்புகின்றேன் .

என்னைக்கேட்டால்
உண்மையில் காஷ்மீரில் பிரச்சனை அங்குள்ள மக்கள் அல்ல,அரசியல்.

அரசியலை விடுத்து மக்களை அணுகுங்கள் .

காஷ்மீர் ரோஜாவை முகர்வீர்கள் .








. Download As PDF

Bloggers.com

Nandunorandu - Find me on Bloggers.com