வியாழன், 16 ஆகஸ்ட், 2012

தேவகுமாரனை நோக்கி


.


முன்னோர்களின்
வடு உடல்
நிறமாய்
நீங்காத பாவமாய்

கண்கள் முழுதும்
காட்சி கலக்கமாய்
பளிங்கு செவியாய்

மடையனாய்
மூடனாய்
முட்டாளாய்
சமுதாயத்தில்
சமூகத்தில்
சாதியால்

எப்பொழுதும் எப்பொழுதும்

உடல் வெம்பி
நாக்கு உள் இழுத்து
மொழி பேசா வாய்
வெளிச்சொல்லா
பயத்தில்
தடிமனாய்

அச்சத்தில்
போதை மிதந்து
பிதற்றி

ஓலை சுவற்றுக்குள்
நித்தம் நித்தம்
தவம் தவம்
பெண் மீதேறி
தேவகுமாரனை நோக்கி.





.

Download As PDF

9 கருத்துகள் :

ADMIN சொன்னது…

படித்தேன்....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனிதனல்ல. நன்றி. (TM 4)

MARI The Great சொன்னது…

ம்ம வித்தியாசமா இருக்கு ராஜா சார்! தொடருங்கள்!

Unknown சொன்னது…

///ஓலை சுவற்றுக்குள்
நித்தம் நித்தம்
தவம் தவம்
பெண் மீதேறி
தேவகுமாரனை நோக்கி.///

NANRU - ARUMAI

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஆழ்ந்த் சிந்தனையில் விளைந்த
அற்புதமான கவிதை
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 6

சசிகலா சொன்னது…

புதுமையான சிந்தனை வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான சிந்தனையில் உதித்த முத்து! பாராட்டுக்கள்!

இன்று என் தளத்தில்
திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html




cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "