புதன், 15 ஜனவரி, 2014

மத்திய மாநில அரசு ஊழியர்கள் இனி வருமான வரி கட்டதேவையில்லை.





பார்வை 1.ஆண்டு வருமானம் ருபாய் 10 லட்சம் வரை உள்ள அனைவரும்  வருமான வரி கட்டதேவையில்லை.

( மத்திய , மாநில அரசு ஊழியர்களுக்கும்  இதில்  அடங்குவர் என்பதால்
ஆண்டு வருமானம் ருபாய் 10 லட்சம் வரை உள்ள அனைத்து மத்திய மாநில அரசு ஊழியர்களும்  இனி வருமான வரி கட்டதேவையில்லை .
மேலும்,வருமான வரி காட்டாதவர்கள் அனைவரும்  ஆண்டு வருமானம் ருபாய் 10 லட்சத்திற்குள் உள்ளவர்கள் என  கொள்ளப்படும் ) .

பார்வை 2.குறிப்பிட்டவைகளுக்கு குறிப்பிட்ட அளவு வரை தொழில் வரி, சேவை வரி மற்றும் மதிப்பு கூட்டுவரிகள் என்ற வரிவிதிப்புகள் இனி கிடையாது .

பார்வை 3.வரித்துறைகள்  மற்றும் அவை சார்ந்த சட்டங்கள்  மாற்றி அமைக்கப்படும்.

பார்வை 4. வங்கிச்சேவைகள் எளிமையானதாகவும்,பாதுகாப்பனதாகவும் அமையும் வகையில் சீரமைக்கப்படும்.

பார்வை 5.பெட்ரோல்,டீசல் மற்றும் சமயல் எரிவாயு விலைகளை அரசே இனி நிர்ணயிக்கும் ,அதுவும் ஆண்டிற்கு ஒரு முறை .

பார்வை 6.அனைவருக்கும்  மருத்துவப் பாதுகாப்பு.

பார்வை 7.குழந்தைகள்,பெண்கள் மற்றும்  முதியோர்கள்  பாதுகாப்பில் முன்னுரிமை.

 பார்வை 8. ஊழல் ஒழிப்பிற்கு முன்னுரிமை.

...

தற்பொழுது வருமான வரி  மற்றும் பிற வரிகள் குறிந்து  நாடு முழுவதும் முக்கிய விவாதம் நடந்து வரும் வேலையில்,தேர்தல் அறிக்கையா அரசியல் கட்சிகள் முன்வைக்கவுள்ள அறிவிப்புகளில் பிரதானமாக இருக்கும்  அம்சங்களைப் பற்றிய   ஒரு பார்வையே  இந்த பதிவு , அவ்வளவே.



பார்ப்போம்  தேர்தலில் அரசியல்கட்சிளின் நிலைகள் என்னவென்று?.


வரி இல்லாம  எப்படியா நாட்டை  ஆள முடியும் ? - னு யாராவது கேட்டால் ,
எனது பதில் ,நாங்க புதிய பொருளாதார கொள்கையில் பயணிப்பவர்கள்,
இந்த சமாச்சாரம் எல்லாம் உங்களுக்கு புரியாது ,
நீங்கள் வரி எப்படி இருக்கவேண்டும் என்று முதலில் படித்துவிட்டு வந்து
பிறகு கேளுங்க  கேள்வி .பழையதையே பேசாதீங்க.சிந்தியுங்கள்.




படம் : நன்றி கூகுள் மற்றும் இணையம் . 
Download As PDF

8 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இத்தனையும் நடக்குமா என்று தான் தெரியவில்லை... பொறுத்திருந்து பார்ப்போம்...

இனிய திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல் தினம் வாழ்த்துக்கள்...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அனைத்தும் சாத்தியமே,
ஆனால்,
அதற்கு வலுவான பிரதமர் தேவை.

தாங்களுக்கும் எனதினிய வாழ்த்துக்கள் தனபால் அவர்களே.

ப.கந்தசாமி சொன்னது…

Good proposal

ஊரான் சொன்னது…

எந்தக் கட்சியும் இவ்வாறு சொல்லாத போது நீங்கள் பிரதமரானால் மட்டுமே இது சாத்தியம்-நீங்களும் உங்கள் வாக்குறுதியை மீளவில்ல எனில்!

Unknown சொன்னது…

எப்ப இது இத்தனையும் நடக்குமா என்று தான் தெரியவில்லை... பொறுத்திருந்து பார்ப்போம்...வாழ்த்துக்கள்...

அ.பாண்டியன் சொன்னது…

தேர்தல் அறிக்கை தானே! வாக்குறுதி கொடுத்த கட்சி ஆட்சிக்கு வந்ததும் மறந்து விடும். சிறப்பான கற்பனை சகோதரரே. எதிர்காலத்தில் நடக்கலாம். தொடர்க..

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஊரான் கருத்தே என் கருத்தும்
ஆயினும் நல்ல ஆலோசனை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 3

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "