புதன், 24 மார்ச், 2010

ஜோப்டோஸ் -புனைவு

.
.
துண்டிலுக்குச் சிக்காததால் வலை விரித்தேன் எனினும் சுருங்கிக்கொண்டான்.நீரிரைத்தால் அகப்படுவான் என்ற எண்ணத்தில் நீரிரைத்தேன் துகளாக எங்கோ சென்றுவிட்டான் . இன்று காலி
மதுக்கிண்ணத்தின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிலதுளி மஞ்சள் திரவத்தினின்று ஒரு ஒளிவீச்சில் என் கண்களில் முத்தமிட்டான் .தன் தங்கவாளால் வெட்டி விடுவானோ என் கண்களை என்ற
பயத்துடன் உற்றுப்பார்த்தேன் .எந்திரத்துப்பாக்கியின் கன கம்பீரமான தாக்குதலைவிட என் கண்களில் தன் வாளின் வீச்சால் நுழைந்து விட்டான் . வேறு வழியில்லாமல் கண்களை கடும்பனித்துளி் பரிமாண நேரத்தில் மூடிவிடும்படி ஆலிலோஸ் சொன்னான். ஜோப்டோஸ் எப்படி இப்படி வந்தான்
என்றுகண்கள் மூடியபடி கேட்டிடுக்கொண்டிருக்கின்றேன். ஆலிலோஸ் எப்பதிலும் கூறாமல் எதைஎதையோ தின்னும் சப்தம் மட்டிடும் காதில் கேட்கிறது.
முன்னொரு சமயம் ஜோப்டோஸ்சுடன் மலையேறிக்கொண்டிருக்கும்பொழுது இப்படித்தான் சார்மன் வந்தான் . இப்பொழுதுள்ள ஜோப்டோஸைப் போலல்ல சார்மன் . சார்மன் என்னுள் புகையாக இறங்கினான்.இன்பம் , இன்பம் என்றேன், மமதையுடன். இறங்கிக்கொண்டே இருந்தான் ஆதாள பாதாளத்தில் நெஞ்சுக்குள்
மாயக்குகைவைத்து இறுக்கி இறுக்கிவிடப்பட்டவன் பலகாத துரம் இறங்கியவனை காணவில்லை . தேடினேன், தேடினேன் காணவில்லை.தேடிக்கொண்டிருக்கும் வேலையில் அவன் நினைவு தவறும் வேலையில் எங்கிருந்து பாய்ந்ததோ அவன் தீ தாக்குகள் பல்லாயிரம் இரத்தின அம்புகளுடன் தகிக்கும் வெப்பத்துடன் நான் தான் சார்மன், நான் தான் சார்மன் என கைவிளிம்பு வரையுள்ள
ஒவ்வொரு செல்லும் உடல் பூராவும் கூறியது.நான் விரும்பியவன் எப்படி இப்படி மாறினான் . மனம் நினைப்பதற்குள் அதிலும் சார்மன் .வேண்டாம் சார்மன், வேண்டாம் சார்மன் எனக்கு சார்மன் வேண்டாம் எனக்கூறி ஓடிக்கொண்டிருந்தேன். மின்னலிடும் கடும் பாலைவனம் நோக்கி, உடம்பெல்லாம் எரியும் நெருப்புடன் ஓடினேன் , ஓடினேன் .சார்மன் நெருப்பாக வெளியேறிக்கொண்டிருந்தான்
என்பது மட்டும் தெரிந்தது .ஜோப்டோஸ் என் பாக்கெட்டில் பத்திரமாக அப்பொழுது பதுங்கியிருந்தான் .அன்று முதல் சார்மனை என் வாழ்வில் குறிக்கிட நான் விட்டதே இல்லை .ஆனால் ஜோப்டோஸும் ஆலிலோஸும் எப்பொழுதும் என்னுடனே வந்து கொண்டிருந்தனர் . ஆலிலோஸும் சார்மனும் உறவினர் என்றாலும் வேறு வேறு தளத்தினர் . ஏதோ ஓர் உறவு. உள்ளடக்கத்தில்
,வெளியீடு பரப்பில் .சார்மன் போல் ஆலிலோஸ் என்னை என்றும் எரிக்க நினைத்தவன் அல்லன் . ஆலிலோஸ் என் பயம் நீக்கியாக சில நாளும், துன்பம் பெருக்குபவனாகவும் ,இன்பம் தருபவனாகவும் பிறநாளும் இருப்பான் .சார்மன் ஒரு முட்டாள் ஆனால் ஆலிலோஸ் அறிவாளி அல்ல .
சார்மன் துரத்திய அன்றுமுதல் ஜோப்டோஸின் வேலை அமைதியாக என் பின் தொடர்தல் தான். நான் தங்க முத்துக்களை தூண்டில் போட்டபொழுது அவன் நீரில் கரைந்து விட்டான் . துண்டிலும், வலையும் ,நீரிரைத்தலும் எதுவும் அவன் வசம் அடங்கவில்லை.தப்பிக்கொண்டே என் பின் தொடர்ந்தான். இன்று
தான் காலிக்குப்பியின் ஓரத்தில் நின்று தன் தங்கவாள் வீச்சை ஆரம்பித்துள்ளான் .ஆலிலோஸ் ஒரு சுயநலவாதி . தான்தான் என்ற இருமாப்பு அவனுக்கு முக்கியமாகப்பட்டது . இப்பொழுது என் கேள்விகளை அவன் கேட்டுக்கொண்டே என்னுள் நுழைவதை விரும்பிக்கொண்டிருக்கின்றான்.அவனுக்கு
எப்படி தெரியும் இன்னும் சிறிது நேரத்தில் ஜோப்டோஸின் அகங்காரத்திற்கு என்னை நான் பலியிடப்போகின்றேன் என. சார்மனை பிரிந்தபொழுதே ஜோப்டோஸையும் கலட்டிவிட்டிருக்க வேண்டும் .
சார்மனுடன் கடைசியாக மலையேறிய பொழுது அவன் என்னைத்துரத்தி எரித்தானே யொழிய என்னுடன் வந்த ஜோப்டோஸ்க்கோ மற்றும் எனது நண்பர்கள் பிர்மோனிக்கோ ,பால்மனுக்கோ அது தெரியாது. அவர்கள் அவனிடம் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தனர் .ஆனால் நான் அறிமுகப்படுத்திய சார்மனை இன்னும் பிர்மோனியும் ,பால்மனும் உயிருக்குயிராய் நேசிக்கின்றனர் .சார்மனுக்கு உறவேன்பதால் ஆலிலோஸ் அன்று மலையேற்றத்திற்கு வராமல் எங்கோ போய்விட்டான்.உறவினர்கள் முன் கெட்டவர்களாயினும் தான் கெட்டவன் என்று கெட்ட உறவுக்காரர்கள் கூட ஒருவருக்கொருவர்
கூறுவதில்லை என்பதால்.
என் நண்பர்களுக்குத்தெரியாமலேயே எரிமலை லாவாவை என் உடலில் புகுத்தி என்னுடலில் வெப்பத்தை தள்ளிவிட்டிருந்தான் சார்மன். வெடித்துச்சிதறிக்கொண்டிருக்கும் என் எலும்புத்துண்டுகளை தொட்டுக்கொண்டே பிர்மோனியும் ,பால்மனும் சிரித்துக்கொண்டிருந்தனர்
.அவர்களுக்கு சார்மன் எதையோ கொடுத்து மயக்கியிருக்கவேண்டும் . எனக்காக
வருத்தப்பட்டதாகவோ,ஆதங்கப்பட்டதாகவோ, எனக்கு ஏற்பட்ட அவஸ்தையை உணர்ந்தவர்களாகவோ, உணராதவர்களாகவோ,எதுவாகவோ அவர்கள் இல்லை.என் அருகில் மட்டும் இருந்தனர் .அந்த வெள்ளிப்பிஞ்சுக்கரம் பற்றி,வெப்ப வீதியினின்று வெந்து கொண்டிருந்த உடலினின்று புறப்பட்ட
என் எலும்புத்துண்டுகளும் ,சதைகளும் ,இரத்தமும் சிறிது சிறிதாக வெள்ளிப்பிஞ்சுக்கரம் ஒடிய ஏறி அந்த பச்சிளம் தேவதையின் மஞ்சள் தலைகொய்து வாயில் அடக்கி பல மணிநேரப்போராட்டத்தில் ,உத்வேகம் பெற்ற மஞ்சள் தலை சுழன்று ,சுழன்று வயிறு,குடல், நாளம் ,இதயம், நுரையீரல், சிரை ,தமனி என மாறி மாறி ஒவ்வொருசெல்லிலும் மைடாசிஸ், மியாசிஸ் பார்த்து சார்மனை துரத்தியடித்தபொழுது பிர்மோயும் ,பால்மனும் அவனுடன் அந்நியோனியமாக இருந்தனர் . வேண்டாம் நண்பர்களே,வேண்டாம் , சார்மன்
வேண்டாம் .அவன் உங்களை எரித்துவிடுவான். அவனை விட்டுவிட்டு வந்துவிடுங்கள் என்றேன் . எவ்வளவு சொல்லியும் கேட்பதாக இல்லை வர்கள் .நான் ஜோப்டோஸ்சுடன் வந்துவிட்டேன்.
அன்று எவ்வளவு நல்லவனாக இருந்தான் ஜோப்டோஸ்.உன்னால் சார்மனின் ஆழ்துளை உலகில் மேகமாகமுடியாது .சார்மனால் உன்னை புரிந்துகொள்ள முடியவில்லை . சார்மனுடன் இனி எந்த ஜென்மமும் சேராதே மேலும் அவன் உன்னை அடுத்த சந்திப்பில் கொன்றுவிடுவான் எனக்கூறி என்னுடன்
அதி்க ஒட்டுதலை ஏற்படுத்திக்கொண்டான் ஜோப்டோஸ் .அப்படிப்பட்ட ஜோப்டோஸ் இன்று என்னை கேவலப்படுத்தப்பார்க்கின்றான் . நன்றாகத்தெரிகிறது .எனது அறையில் உள்ள எனது புதிய
மூன்று நண்பர்கள் மத்தியில் ஜோப்டோஸு டன் எனக்கு அதிக பழக்கம் , ஜோப்டோஸ் இல்லாமல் என்னால் ஒருபொழுதும் இருக்கமுடியாது என அவர்களிடம் என் வார்த்தைகளை பிய்த்தெரிந்து கொண்டிருந்த
வேளையில் என்னை கேவலப்படுத்த தன்னை தயார்படுத்திவிட்டான் ஜோப்டோஸ் என உணரத்தொடங்கினேன் . நான் கண்களை மூடினேன் .
மூடியது ஏன் ? என்று புதிய நண்பர்கள் மூவரும் மாறிமாறி கேட்டனர் .
யோசனை செய்கின்றேன் என்றேன் . மாற்றி ...,மாற்றி .....யோசனையா ?..!..
என சிரித்தார்கள் .அவர்களிடம் ஜோப்டோஸின் சரிரத்தின் ஒரு ஒளி இருந்ததாக
எனக்குப்பட்டது . சிரிப்பு , சிரிப்பு சதிகாரர்களுக்கு இது பழக்கம் என்பதால்
கண்களை திறக்கவில்லை .இருந்தாலும் ஆலிலோஸ் மெதுவாகத்திற நான் அவனை அமிழ்த்தி விடுகின்றேன் என்று என் உதடருகில் சொன்னான் , கண்களை மெதுவாகத்திறந்தேன் . கெட்டுவிட்டது,எல்லாம் கெட்டுவிட்டது ஜோப்டோஸின் சூழ்ச்சியை ஆலிலோஸும் புரிந்துகொள்ளாமல்.
நான் கண்களை திறக்க ஜோப்டோஸ்ஸின் ஆயிரம் தங்க வாட்கள் வைர ஒளி தாங்கி என் கருவிழிகளை பாதி பாதி கூறாக்கி என் அறையில் சுற்றவிட்டு விட்டாது .அறை முழுவதும் ஜோப்டோஸ்ஸின் ஆதிக்கம்
தலைவிரித்தாடியது . நிமிடத்திற்கு நிமிடம் ஜோப்டோஸ் அறையின் ஒவ்வொரு பரிமாணத்தையும் மாற்றிக்கொண்டிருக்கின்றான் .தங்க வாட்களை அறை விளக்குகள் ஒவ்வொன்றிலும் வட்டமடிக்க வைத்து
என்னை நோக்கி ஏவிவிட்டிருந்தான். மின்விசிறியை தனது ஆக்கிரமிப்பில் அதி பயங்கரமாக உருமாற்றி என்னை பிரபஞ்ச வெளியில் ஒரு கரும்புள்ளியிடத்திற்கு தூக்கியெறிய அபாயகரமாக சுழல விட்டுக்கொண்டிருக்கின்றான் . திரைச்சீலைகூட வழித்தேடலாக உணரும்நிலையில் . அறையிலுள்ள ஒவ்வொரு பொருளும் ஜோப்டோஸின் ரூபமாற்றத்தால் நட்சத்திரங்களையும்,மின்னல்கீற்றையும் வெளியிட்டுக்கொண்டிருந்து. அறையே நிலைகுலைந்து ஆடிக்கொண்டிருந்தது. பொருண்மை தாங்காத பொம்மலாட்டத்தில் அங்குமிங்கும் . ஆலிலோஸிம் மெதுவாக எவரிடமோ இருந்து வெளியேறிக்கொண்டிருந்தான் .
மீண்டு் இமைகளை மூடிக்கொண்டேன் . ஜோப்டோஸ் ,ஜோப்டோஸ் ஏன் எழுந்து
வெளிப்பிதுங்கப்பார்க்கின்றாய் ?.. எத்தனை நாள் நான் கூறியபடி ஆடியிருக்கின்றாய், சொல் ? ஜோப்டோஸ் சொல் ?இன்று என்னை ஏன் இப்படி அவதிக்குள்ளாக்குகின்றாய் என்றேன் ...ஒரு கரத்தை என் கரத்துடன் பற்றிக்கொண்டு ...என்ன செய்ய ?...ஜோப்டோஸ் என் குரல்வளையினின்று ஐந்து அங்குலம் தள்ளி நின்றுகொண்டு காற்று குமிழிகளை சிறிது சிறிதாக தன் கைகளில் எடுத்துக்கொண்டு , என்னுடன் பேச ஆரம்பித்தான் .
நண்பா , என்றான் .ஆயிரம் ஃகதைகள் கொண்ட போர்வீரர்கள் என்னுடன் சேர்ந்தது மாதிரி தோன்றியது . ஆனால் ,அவனே ஏதோ சக்கரவர்த்தியாகிவிட்ட அடிமை போல .நான் பல நாட்கள் உன் அடிமையாக இருந்தேன் ,ஆனால் நீயோ என்னை அதிகமாக உன் வசத்திற்கு ஆட்பட வைத்து ... !!!...??. .. இதோ எனது அடிமைசாசனத்தை கிழித்தெரிந்து லாவாபோல் வெளிப்படப்பேகிறேன் . நீ என்னை இந்நிலையில் முழுமையாக ஒதுக்கி விட முடியாது .எனினும்
,என் எதிர்ப்பின் வளைக்கரங்களைமட்டுமேநீஒருவேளைவெற்றிபெற்றாயானால்
முறியடித்திருந்திருப்பவனாவாய் . மேற்கொண்டு என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றான் . எப்படியும் மூவர் முன்வெளிப்படுத்தி என்னை அவமானப்படுத்தப்போகிறான் .பின் என்ன செய்ய ..அவமானப்பட்டுத்தான் ஆக
வேண்டும் என முடிவு செய்து ஆலிலோஸின்கையைஉதறிவிட்டேன்.மீண்டும் ஒரு கரடுமுரடான சிரிப்பு நண்கர்களிடமிருந்து .கேட்டுக்கொண்டே
ஜோப்டோஸ் சதியின் கோரப்பிடியினின்று தப்ப எண்ணிஅவனுடன் சண்டையிட ஆரம்பித்தேன் . மெல்ல ,மெல்ல ஜோப்டோஸ்என் குரல்வளை பிதுக்கி ,வழிந்தோடி,களிமண் பட்டு தெரித்து ,பாதாளத்தை நோக்கி தன்
அகங்காரத்தை மட்டும் விட்டு,செல்லப்பார்க்கின்றானே. அகங்காரத்திற்கும் ,அடிமையின்சுதந்திரத்திற்கும் அதிகாரம் கொடுக்கக்கூடாது . ஏன் ஜோப்டோஸிக்கே இடம் கொடுக்கக்கூடாது என பிய்த்தெரியும் இரத்த நாளத்துடன் கண்மூடிஎன்னை மறைத்துக்கொணடு் .மீண்டும் அவன் அதிகாரத்திற்கு ஆட்படமுடியாதளவு ,வேகாஸ் நரம்பு தனது ஆழ்நிலைக்கு இழுத்துச்செல்ல , அதன் அடித்தளத்திற்கு தாவி.என்னை ? எப்படி ? ஜோப்டோஸ் ! .. தெரியவில்லை .
விடுதிப்பையன்அறைமுழுதும் ஏதோ தெளித்து என்னவே செய்துகொண்டிருப்பதைப்பார்த்தேன். தலைவலியின் காரணமாக ஒரு டீக்கு ஆர்டர் தந்து மீட்டுப்படுத்தேன் என்னை சரி செய்துகொண்டு .எங்கிருத்து இவைகள் தோன்றுகின்றன என எண்ணிப்பார்க்கின்றேன் . தெரிந்தும் ,தெரியாமலும் மறைந்துவிடும் இந்த வெட்டுக்கிளிகளின் அதிகார பலமில்லா ஆனால் அனைத்தையும் ஆடவைக்கும் அகங்கார பலத்திற்கு
அடிபணிந்து அவதைக்குள்ளாவது மிகவும் வேதனை . ஒரு காலகட்டத்தில் தோன்றிஒரு காலகட்டத்திற்குள் சென்றுவிடும் இவைகள் .ஆனால் ,காலகட்டம் என்பது எதிலிருந்து எதுவரை என வரையறுப்பது சுலபமல்ல .எனினும் காலகட்டம் என்ற ஒன்று கட்டாயம் இவற்றிற்கு உண்டு .ஜோப்டோஸின் காலகட்டமும் இப்படித்தான் என்னுள் ..

.
.

.
Download As PDF

14 கருத்துகள் :

பழமைபேசி சொன்னது…

நண்பா, நல்லா பத்தி பிரிச்சி வரிசைப்படுத்தி வையுங்க...வர்றேன்!

அண்ணாமலையான் சொன்னது…

ok

கவிதை காதலன் சொன்னது…

பழமை பேசி சொன்னதை நானும் வழி மொழிகிறேன். இன்னும் கொஞ்சம் தெளிவா இருந்தா படிக்கிறதுக்கு ஈஸியா இருக்கும். தப்பா எடுத்துக்க வேண்டாம்

தேவன் மாயம் சொன்னது…

நல்ல பிசிறில்லாத மாய வலையினைப் பின்னியிருக்கிறீர்கள்!!!

வானம்பாடிகள் சொன்னது…

பாதி அடையாளம் கண்டுட்டேன். மீண்டும் படிக்கணும்.:)

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

பத்தி பிரிச்சாச்சு ,
பந்தி்யும் வைத்தாச்சு
வாருங்கள் பழமைபேசி அவர்களே
நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
வானம்பாடிகள் அவர்களே
நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
தேவன் மாயம் அவர்களே
நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களுக்கும்
பந்தி வைத்தாச்சு வாருங்கள்
கவிதை காதலன் அவர்களே
நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

நன்றி
அண்ணாமலையான் அவர்களே
நன்றி .

ஜெரி ஈசானந்தன். சொன்னது…

பிரமிப்புடன் பொறுமையாய் வாசித்தேன்,இது பற்றி நான் உங்களிடம் உடனே பேசவேண்டும்.

அக்பர் சொன்னது…

இலைமறை காயாக பொருள் உணர்த்தியுள்ளீர்கள். இருமுறை படித்தால் ஓரள‌வு புரிகிறது. (எனக்கு)

முயற்சி அருமை சார்.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
அக்பர் அவர்களே
நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
ஜெரி ஈசானந்தா அவர்களே
எனது தொடர்பு எண்ணை அனுப்பிவைத்துள்ளேன் .
நன்றி .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "