திங்கள், 1 ஜூன், 2009

வெளிநாட்டினர் என தாக்குவது ஏன் ?

.


குடும்பம் - அரசின் அடிப்படை அலகு .
தனி மனிதன் - ஆரம்பம் .
நாடு அதன் அதிகார வரம்பெல்லை .

தற்பொழுதுள்ள அரசுகள் எதுவும்
குடும்பம் என்ற அமைப்பைப் பார்ப்பதேயில்லை.

மாறாக நிறுவனங்களையே பார்த்துக்கொண்டுள்ளன .

உலகில் இன்று ஏற்பட்டுள்ள
கொடும் பொருளாதார நெருக்கடிக்கும்
இனி ஏற்படப்போகும் கடுமையான பல நெருக்கடிகளுக்கும்
இதுவே முதல் மற்றும் முடிவான காரணமாக அமையப்போகிறது .

உலகில் குற்றவியல் மற்றும்
பிற சட்டங்கள் யாவும் பெரும்பாலும் தனி மனிதனை நோக்கி மட்டும் செயல்படும் நிலையில் ,
நிறுவனங்கள் அதனின்று தப்பி
குடும்பம் என்ற அமைப்பை சுரண்டி ,சீரழித்து
அரசு என்ற அமைப்பினை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன.
அரசுகளும் இதனை உணராமல்
நிறுவனத்தன்மையினால்
தவறான பாதையில் கண்மூடித்தனமாக
சென்றுகொண்டுள்ளன .
இவ்வாறு சென்றுகொண்டிருக்கும் நிலையில்
பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு தவிக்கும்
அல்லது
பொருளாதார நெருக்கடி கண்டு
அஞ்சும் குடும்பத்தின்
குரல்வளை இருக்கத்திற்கு
ஆளாகும் தனிமனிதர்கள்
(குறிப்பாக இளைஞர்கள் )
சமுதாயக்காற்றினால் ஒன்றிணைந்து
வெளிப்படுத்தும் சிறு எதிர்ப்பே
ஆஸ்திரேலியா
மற்றும்
பிற நாடுகளி்ல் ,மாநிலங்களில்
பிற நாட்டினர் ,இனத்தினர் ,மாநிலத்தினர்
என பாகுபாடு பார்த்து
தாக்குதல்கள் .

இப்படி உலகம் முழுவதும் தாக்குதல்கள்
அதிகரித்துவரும் நிலையில்
அரசுகள்
இப்படிப்பட்ட விசயங்களில்
அரசியல் கலக்காமல்
அணுகுவது தான்
சிறந்த நாகரிகமான நடவடிக்கையாக இருக்கும் .
அது தவிர்த்து அரசியலாக்க முயன்றால்
அப்படி முயல்பவர்கள்
மனித குலத்தை நாசம் செய்பவர்களாவார்கள் .

மேலும் ,
அரசுகள் தங்களின் தவற்றை
திருத்திக்கொள்ளாமல்
சட்ட நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் மட்டுமே
அடிப்படையான பிரச்சனை
தீர்ந்து விடுவதில்லை .
அடிப்படையான பிரச்சனையை
சரி செய்வது சற்று கடினம் தான்
எனினும்
அதனை முதலில் செய்யவேண்டும்
அதனைச்செய்யாமல் இருக்கும்
எந்த அரசும்
அதன் அதிகாரவரம்பெல்லையை
சிதைக்க தானே வழிவகுக்கும் அரசாகிவிடும் .


.

Download As PDF

1 கருத்து :

Anonymous சொன்னது…

In appropriate time,very correct way you have writen this topic.My congratulations to you.The reasons you have mentioned are exactly correct..disappointment and competitions created the mentality.The world social and economical reasons creating chaos and troubles.Good article..You can write often.Please do ---vimalavidya

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "