திங்கள், 5 மே, 2014

பார்பனஆரியதிராவிட சண்டையை தோற்றுவித்த முதல்வரும்,தமிழ்மொழியும்.




















தன் மதத்தினை , இந்திய மக்களிடையே ,தனக்கு முன்வந்தவர்களைவிட , தான் சிறப்பான முறையில், புதிய உத்தியைப்பயன்படுத்தி ,எப்படியாவது பரப்பிவிடவேண்டும் என்ற வெறியுடன் 1838 ம் வருடம் சென்னை வந்திறங்கிய அந்த லண்டன் சமயத்தொண்டருக்கு ,இங்கு மிகப்பெரிய புதிர் காத்திருந்தது .

அவர் நினைத்தமாதிரி எளிதாக மக்களை கிருத்துவ மதம் அணுக முடியலவில்லை .அது மட்டுமல்லாமல் ,இங்கிருப்பவர்கள் தாங்கள் பின்பற்றிய மதங்களில் உறுதியான இருந்தனர் .மதமாற்றம் என்பது சாத்தியப்பட முடியாத ஒன்றாக இருந்தது .ஏற்கனவே புத்தம் ,சமணம் இவற்றிலிருந்து மாறியவர்கள் தற்பொழுதிலுள்ள நிலையில் ஆணித்தரமாக ஒன்றிவிட்டிருந்தனர் .அதோடு சைவமும் ,வைணவமும் ஒன்றிற்குள் ஒன்று உறவு கொண்டாட புதிதாக பிற கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ளத்தயாரில்லலாமல் இருந்தனர் .அதோடு அன்னியர்களை புத்தம் ,சமணம் சரணாகதிக்குப்பின் நினைத்துப்பார்க்கவே மறுத்துவிட்டனர் . இங்கிருந்த மதங்கககோட்பாடுகளை விட உயரியதாக தன் மதத்தின் கோட்பாடுகள் இருப்பதாக நிருபிக்க முடியவில்லை .எவ்வழிகளில் ஆய்ந்தாலும் தனது கடை சரங்கு இங்கு விற்காது எனத்தெரித்துகொண்ட அவர் .தன்னை இங்கு அனுப்பிய நாட்டிற்கும் ,மிசினரிக்கும் உண்மையானவனாக இருக்காதவனாகி விடுவோமா என்ற ஐயம் தோன்றியது .

ஆங்கில ஆட்சி இங்கு மேலும் மேலும் உறுதிப்பட இங்கு வாழும் குடிகளை தங்களின் அரசிற்கு விசுவாசம் கொள்ளும் வகையில் மதத்தால் ஒன்றிணைக்கும் யுத்தி படுதோல்வியைத்தழுவிக்கொண்டிருந்தது .மதத்தினால் மக்களைப் பிரிக்க முடியவில்லை ,மொழியினாலும் மக்களைப்பிரிக்கமுடியவில்லை .மக்கள் பிரிந்து நின்றாள் தானே தம் சரக்கு விற்கும் என்ன செய்ய என எண்ணிக்கொண்டிருக்கும் பொழுதுதான் ' பேராசிரியர் .சர் .டேனியல் சேண்ட் ஃபோர்டு ' கற்றுக்கொடுத்தது நினைவிற்கு வந்தது .மொழி,அதன் வழி இனம் என பகுத்து மக்களிடையே உள்ள ஒன்றுமையைக்குழைத்துவிட்டால் , சிறிது சிறிதாக மக்களிடையே அது பகைமை உணர்வு வளர்ந்து .பின் அதுவே பெரும் பகையாகி தனது அரசுக்கும் ,தனது மதத்திற்கும் பெரிய அரணாக பின்னாளில அது இருந்து வாழ்விக்கும் என்றும்,அதோடு தனக்கும் அது மிகப்பெரிய கௌரவத்தையும் கொடுக்கும் என்ற தீர்க்கமான முடிவுடன் 'இனத்தால் இந்த மனிதர்களைப் பிரிப்பது 'என்ற தனது ஆயுதத்தை கையில் எடுத்தைக்கொண்டார் .

இது இவரே மேற்கொண்டாரா அல்லது அங்கிருந்து அனுப்பிவைக்கும் பொழுதே அவருக்கு இடப்பட்ட கட்டளையா என்பது ஒராயிரம் கோடி ருபாய் பரிசுக்குறிய கேள்வி .எது எப்படியிருப்பினும் ஆங்கிலேயர்களின் இந்த 'பிரித்தாலும் சூழ்ச்சிக்கு 'என்றும் மக்கள் பலிகடா ஆகிவருவதுதான் கொடுமையிலும் கொடுமையாக உள்ளது .(அப்படி அவர்கள் செயல்பட்டதனால் தான் இந்தியாவை இரண்டாகப்பிரிந்து இன்னும் அதன் வக்கிரமத்தில் அவஸ்தைப்பட்டுக்கொண்டு வருகின்றேம் .)

இந்த கட்டுரை யின் நாயகர் "MR .ROBERT A.CALDWELL "
தனது "A COMPARATIVE GRAMMAR OF THE DRAVIDIAN "என்ற நூலின் மூலம்  தனது 'பிரித்தாளும் சூழ்ச்சியை ' நாசுக்காக புகுத்தினார் .
அன்று இவர் புகுத்திய அக்கினிக்குஞ்சு தான் மெல்ல மெல்ல பரவி ,
இங்கிருந்த மக்களை திராவிட இனம் என்றும் ,ஆரிய இனம் என்றும் தங்களுக்குள்ளேயே பிரிந்து சண்டையிட காரணமானது .
இவர் தான் பார்பனர் திராவிடர் என்ற சண்டையை தோற்றுவித்த முதல்வர்...                     
.............


அனைத்தையும் சந்தேகப்படு -1.
தொடரும் .........



52 கருத்துகள்:

சசிகுமார் சொன்னது…
உண்மை தான் நண்பா நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ரோகிணிசிவா சொன்னது…
title la irunthu , last line varaikkum oru sensation create aaguthu , waiting to hear more from you
பெயரில்லா சொன்னது…
அந்தப் பொத்தகத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
முதல்வர் என்றதும்.. பெருசுக்கு இப்ப அவசியமில்லையே என நினைத்தேன்..
இருந்தாலும் சுவையான தகவல்கள் ...
வானம்பாடிகள் சொன்னது…
good good. continue..
Raj சொன்னது…
வெள்ளயர்கள் காலத்தில் மத அடிப்படையில் பிரித்தாளும் சூழ்ச்சி செய்தார்கள் என்பதற்கு சான்று இருக்கிறது... ஆரியர் திராவிடர் மோதல் இருந்ததாக வரலாற்று குறிப்புகள் ஏதும் இருக்கிறதா?
Thamizhan சொன்னது…
கொஞ்சமாவது உண்மை பேசினால் நன்றாக இருக்கும்.பாவம் உங்கள் மூளைக்கு விலங்கிடப் பட்டுள்ள ஆரிய அடிமைத் தனத்திற்கு வருந்துகின்றேன்.

தமிழ் அழிந்து மணிப்பிரவாளம் என்று 90 விழுக்காடு சமஸ்கிருதம் (திருத்தப்பட்டது என்று பொருள்) ஆகிவிட்டதை நூறாண்டுகட்கு முன்னிட்ட எந்தக் கடிதத்தையோ,அழைப்பிதழையோ,எந்த இதழையோ பாருங்கள் தெரியும்.
ஒரு ஆரியப் பார்ப்பனர் சொன்னார். தமிழ் சமஸ்கிருதத்தில் இருந்துதான் வந்தது.தமிழில் மூன்றெழுத்துக்கள் தவிர மீதியெல்லாம் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது தான் என்றார்.
இதைத் "தமிழறிஞர்"களே ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்ற நிலையிலிருந்தது உங்கள் "அறிவி"ற்குத் தெரியுமா?
நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…
இது குறித்து நிறைய எழுதவுள்ளேன் .
இக்கட்டுரை தொடர்த்து எழுதப்படவுள்ளது .
Raj அவர்களே .
நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…
மணிப்பிரவாளம் -மணி தமிழ்ச்சொல் பிரவாளம் (பவளம்) வட சொல் .
இது போல இரு மொழிச் சொற்களையும் கலந்து எழுதுவது அழகாக இருக்கும் எனச் சமணர்களால் முதலில் ஆரம்பிக்கப்பட்டது .
மணிமோகலை சமணகாப்பியம் .
இது குறித்து நிறைய எழுதவுள்ளேன் .
இக்கட்டுரை தொடர்த்து எழுதப்படவுள்ளது .
முழுவதும் படித்தபிறகு அவரவரின் அடிமைத்தனத்திற்கு
முடிவுகட்டலாம் .
நாம் அனைத்தையும் சிந்தித்தல் நலம் .
அப்பத்தான் //உங்கள் "அறிவி"ற்குத் தெரியுமா?// என்பதற்கான பதில் எனக்கும் கிட்டும் .
தங்களின் வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும் மிக்க மகிழ்ச்சி சகோதரர் Thamizhan .
தங்களின் "அறிவு "ரைக்கு நன்றி .
k selvaprabhu சொன்னது…
வாரும் தமிழ் அறிஞரே இல்லை இல்லை பார்பண அறிஞரே ,பார்பனரால் தமிழ் ஒன்றுக்கும் உதவா மொழி என்றும் நீச மொழி என்றும் இழித்தும்,பழித்தும் பரப்புரை செய்ததை வரலாறு கூறுகிறது. "MR .ROBERT A.CALDWELL " தனது "A COMPARATIVE GRAMMAR OF THE DRAVIDIAN "
என்ற நூலின் மூலம் தான் வீழ்ந்து கிடந்த தமிழ் தலை நிமிர்ந்தது நீர் அறிவீரோ, ஒன்றுமே அறியாமல் இந்த ஆக்கம் எதற்கு.
ஹேமா சொன்னது…
தேவையான அலசல்.
நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…
ஆமாம் .உண்மைதான் .
தாங்கள் கூறியது மிகச்சரியே .
இதே போன்று தான்
இந்தியன் தலைநிமிர்ந்து நிற்க ஆங்கிலேயன் இரயிலும் விட்டான் ...
இப்படி நிறையா சொல்லலாம்
அந்ததளவிற்கு அவங்க ரோம்ப நல்லவங்கதான்
k selvaprabhu அவர்களே
NO சொன்னது…
அன்பான நண்பர் திரு நண்டு,

அருமை நண்பரே.... நீண்ட நாட்கள் பிறகு மிக நல்ல எழுத்துகள்!

கால்டுவெல் போன்ற அந்நிய ஏமாற்று வித்தகர்களை,
விஷமிகளை தொலுரிப்பதர்க்கான அவசியம் மிக தேவையானதுதான்!

நானும் கொஞ்சம் கூறிகிறேன் இந்த கபட தமிழ் அறிஞரைப்பற்றி!

I cannot imagine any person who has lived and worked amongst uneducated heathens in the rural districts believing them to be influenced by high motives in any thing they do. If they place themselves under Christian instructions, the motive power is not theirs, but ours...... They will learn what good motives mean, I trust, in time...If they remain long enough under Christian teaching and discipline; but till they discard heathenism; with its debasing idolatory and superstitions, and place themselves under the wings of church...........

இது கால்ட்வெல் கைப்பட எழுதியது....

இதன் தமிழக்காம்......வேண்டாம், சில வார்த்தைகளை மட்டும் தமிழ்ப்படுத்துகிறேன்

Heathen - கடவுளை அறியா காட்டுமிராண்டி, அறிவிலி என்பதற்கான வார்த்தை இது! கிருத்துவ பாதிரிகள், இந்து மதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு இன்றளவும் கொடுக்கும் பெயரிது!

Idolatory & superstition - கல் வழிபாடு மற்றும் மூட நம்பிக்கை..... அதாவது சிலுவையையும் (கல்லாலோ அல்லது கட்டையாலோ செய்யப்பட்ட அதை) தங்களின் கடவுளாரின் வடிவத்தையும் தவிர்த்து மற்ற எல்லா உருவங்களும் இவர்களுக்கு Idolatory! இந்து சாமி எல்லாம் மூட நம்பிக்கை, ஆனால் பைபிளில் இருக்கும் மாயாஜால கதைகள் அறிவியில், சிவனும் முருகனும் மூட நம்பிக்கை , ஆனால் தண்ணீரில் நடப்பது, செத்தபின் எழுவது எல்லாம் அறிவியல்!!!!

அவர் சொல்ல வருவது இதுதான்- தமிழர்கள் எல்லாம் பிசாசுகளை வழிபடுபவர்கள், அவர்களை மதம் மாற்றினால்தான், அதாவது "உண்மையான தேவனின் கிருத்துவ" மதத்திற்கு மாற்றினால்தான் இவர்கள் ஆங்கிலேயரிடம் என்றென்றும் அடிமைகளாக இருப்பார்கள் என்பது மட்டுமே!

இந்த மோசடி வேலைக்கு, தமிழ் அறிஞர் என்ற ஒரு மாய உடை! (அதான் இப்போ அந்த உடையை பலர் போடுகிறார்களே, எல்லாம் இந்த மாதிரி ஆட்களை பார்த்துதான்). இதைப்போல்தான் இந்த "தமிழ் மொழி சேவகர்" எழுதிய பல மோசடி பிறேச்சாரங்கள் அமைந்துள்ளன!

இந்த அந்நிய மத மாற்றி, எழுதியது இன்னும் பல பல......

இன்னும் எழுதுகிறேன் விரைவில்

நன்றி.......
NO சொன்னது…
மேலும் கால்டுவேல்லைப்பற்றி...

அவர் எழுதிருக்கும் இன்னும் சில முத்துக்கள்.......

..The fact of the terminology of devil-worship being purely Tamil throughout is to my mind a tolerable, conclusive arguement of the Tamil origin of the system!!!

கடாரத்தை கைப்பற்றிய ஒரு சமூகம், நைல் நாகரீகத்துக்கே சவால் விட்ட ஒரு கட்டமைப்பு, அவ்வை, வள்ளுவன், கம்பன், இளங்கோ என சிந்தனை செல்வங்கள் வழங்கிய ஒரு அறிவு முதிர்ந்த ஒரு சமூகத்திற்கு இந்த அந்நிய அயோக்கியன் கொடுக்கும் பெயர் devil-worshippers, அதாவது பிசாசு வழிப்படுபவர்கள்! அதுவும் இவர் கூறுகிறார், இப்படி அவர் நினைப்பது மிக ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருப்பது என்று!!!

என்னே ஒரு இறுமாப்பு, அயோக்கிய சிந்தனை!!

இந்த மூடர்கள் கர்க்களாலும் இலைகளாலும் வீடு கட்டிக்கொண்டிருந்தபோது ரோமாபுரியுடன் வியாபாரம் நடித்திய இந்த சமூகத்தைப்பார்த்து சொல்லுகின்றார், நாம் பின்தங்கிய பிசாசு பக்தர்கள் என்று!

இந்த மூடனை, அந்நிய மத வியாபாரியை "தமிழர் அறிஞர்" என்று கொண்டாடுவது, எவ்வளவு பெரிய கேவலம்!!

இவரும், இவர் போன்ற விஷமிகளும் படிப்படியே நடத்திய பிரித்தாளும் நாடகத்தை பற்றி எழுதுகிறேன் மேலும்....

அதுபோதாதென்று, திரைக்கடல் தாண்டி சமூக அமைத்த தமிழ் மக்களை ஒன்றும் தெரியாத காட்டு மிராண்டிகள் போல சித்தரித்த, மடையர்களே என்றும் பட்டம் கொடுத்து, நீ ஏமாற்றபட்டாய் என்று கதை ஒன்றை பரப்பி ஆதலால் நீ கிருத்துவனாக வேண்டும் என்று முடித்தார்கள்!

இது எப்படி என்றால் the guilt of sin is constantly drummed amongst the population so that they are always under the impression the salvation is needed and that only thro the man who had died for the sins என்ற ஒரு கிருத்துவ வழிமுறையை தமிழர்கள் மேலயும் பரப்பும் வழிமுறைதான் இது!!

நீ பாவி, மடையன், நீ அயோக்கியன், உனக்கும் ஒன்றும் தெரியாது, நீ ஒன்றுமே இல்லை என்று சொல்லி, அவர்களின் தாழ்வு மனப்பான்மையை வளர்த்து,
பின்னர் நேரம் வரும்பொழுது, இதோ பார் இதற்க்கு வழி தேவனின் வழியே என்று கதை விடுவது இவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக வளர்த்த வழிமுறை!!

மேலும் எழுதுகிறேன்!

நன்றி
NO சொன்னது…
//வீழ்ந்து கிடந்த தமிழ் தலை நிமிர்ந்தது நீர் அறிவீரோ, ஒன்றுமே அறியாமல் இந்த ஆக்கம் எதற்கு. //

நண்பர் திரு செல்வபிரபு - நீங்கள் மேலே கூறியதற்கும் கால்டுவெல் போன்ற மகான்கள் கூறியதற்கும் வித்தியாசமே கிடையாது! தமிழும் தமிழனும் வீழ்ந்தது ஒரு முறைதான்! அது ஆங்கிலேயன் வந்து தமிழனின் நிலங்களை கையகப்படுத்தி கூறுபோட்டு பின்னர் நடந்தது! தடம் புரண்ட தமிழ சமுதாயம் (பல இந்திய சமுதாயங்களும்தான்) ஒரு தற்காலிக பின்னடைவை மட்டுமே அடைந்தது!! கால வெள்ளத்தில் நடப்பவைதான் அது!! அதை செய்தது வேறு யாரும் இல்லை, உங்கள் நண்பர் கால்டுவேலுக்கு இங்கிலாந்திலிருந்து பணம் கொடுத்து அனுப்பியவர்கள்தான் அவர்கள்!! என்ன நீங்கள் அப்பொழுது இல்லை, இருந்தால் உங்களுக்கும் கொஞ்சம் கொடுத்திருப்பார்கள்!

அன்பான நண்பர் திரு தமிழன் என்பவர் கூறுவது- // கொஞ்சமாவது உண்மை பேசினால் நன்றாக இருக்கும்.பாவம் உங்கள் மூளைக்கு விலங்கிடப் பட்டுள்ள ஆரிய அடிமைத் தனத்திற்கு வருந்துகின்றேன்.// - ஆரிய அடிமைத்தனம் இருக்கட்டும் நண்பா, நீங்கள் ஆசையுடன் நாடுவதோ அந்நிய கிருத்துவ அடிமைத்தனம் அல்லவோ!!!

இன்னும் கொஞ்சம் சொல்லுகின்றேன் கேளுங்கள்!

The introduction of Dravidians within the pale of Hinduism appears to have originated, not in conquest, but in the peaceable process of colonization and progressive civilization .... all existing traditions...tend to show that the Brahman acquired their ascendancy by their intelligence and administrative skill. Caldwell further argued that the "Brahmans who came in peaceably, and obtained the kingdom by flatteries may probably have persuaded the dravidians that in callin then sudras they were conferring upon them a title of honour".

அதாவது, ஆரியர்களான பிராமணர்கள் நாகரீகத்தையும் அவர்களுடன் கொண்டு வந்தார்களாம் மேலும் தங்களின் அறிவு வலிமையால் எல்லாவற்றையும் அடைந்தார்களாம். அதைவிட அவரின் படு அபத்த கூற்று.. சூத்திரர்கள் என்றால் ஏதோ ஒரு நல்ல பட்டம் என்று கூறி தமிழர்களின் தலையில் அதை கட்டினார்களாம்!!!

அதாகப்பட்டது, தமிழர்கள் ஒன்றும் தெரியாத அண்ணாசாமிகள், எவனோ வந்தானாம் (இந்த ஆரிய கட்டுக்கதையை தொடங்கியவர்கள் எல்லாம் பாதிரிகள் மற்றும் இந்தியா எப்படி ஆரியர்கள், அதாவது வெள்ளையர்கள் இல்லாமால் இவ்வளவு ஒரு பெரிய நாகரீகத்தை அடைய முடியும் என்று ஐயம் கொண்டு ஆரியன் வந்து எல்லாம் கட்டினான் என்று கதை விட்ட ஒரு கும்பலும் சேர்ந்து நெய்த குல்லா) அவர்களுக்கு நாகரீகத்தை கொடுத்தானாம், மேலும் வாயப்பொளந்து சூத்திரன் பட்டத்தை வாங்கினானாம் என்று கண்டபடி சரடும் விட்டு, அதன் மூலம் தமிழர்கள் மடையர்கள் என்று நட்டு வைக்க பார்த்தவர்தான் இந்த கால்டுவெல்!! இதை விட தமிழர்களை கேவலப்படுத்தவே முடியாது!!

அடப்பாவிகளா, இந்து மதத்தின் முக்கிய வேறே தமிழில்தானடா உள்ளது! இந்துமதத்தின் ஒரு மூலம் தமிழகமடா! இந்து மதத்தை சீர்படுத்தி வட மக்களுக்கு கொடுத்ததே தமிழ் சமூகமடா! இந்து மதத்தை மற்றும் இந்தியத்தையும் உருவாக்கியதில் பெரும் பங்கு உள்ளது தமிழநிடத்திலடா!!
தமிழனின் தாய் மதம் இந்து மதம்!!! நாத்தீகத்தால் (அதாவது ஜைன மற்றும் பௌத நாத்தீகத்தால்) வட இந்தியா முழுவதும் இந்து மதம் கலங்கிய பொழுது, இந்து மதம் காத்து மறுபடி நிலை நாட்டியது தமிழனால்தான்! குஷான மற்றும் கிரேக்க தளபதிகளிடமும் பின்னர் முதல் கட்ட இஸ்லாமிய படையெடுப்புகளில் கலங்கிய இந்து மதத்தை காத்ததும் தமிழ் சமூகம்!

தமிழ் சமூகம் மிக்க நாகரீகமான ஒரு சமூகம்! என்னதான் அதற்க்கு மடையன் பட்டம் கொடுத்து சொந்த மதத்தையே எதிரியாக்கி காட்ட முனைதாலும், அதன் நாகரிகமும் பின்புலமும் அதை செய்ய விடாது!!!!

தமிழர்கள் காட்டு மிராண்டிகள் இல்லை! நாகரீகமற்ற கூட்டமும் இல்லை! தமிழர்கள் தொலை நோக்குடன் நாடாண்டவர்கள்! நாகரீகத்தை இந்தியாவில் நிலை நாட்டியவர்கள்! இந்து மதத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்கள்!!! இந்து மதம் இங்கு யாராலும் கொண்டு வரப்படவில்லை! இங்கிருந்து பலர் அதை எடுத்துக்கொண்டுதான் போனார்கள்!!

நன்றி
NO சொன்னது…
கால்டுவெல்லின் முத்துக்குள் மேலும் சில......

"The greatest of all obstacles to the spread of Christianity in India consists in the practice and the love of lying which prevades all classes of the people"

அதாவது "கிருத்துவத்திற்கு இந்தியாவில் உள்ள முக்கிய தடை, எல்லா தரப்பு இந்திய மக்களின் பொய் பேசும் ஆசையே" என்பதை கண்டுபிடித்தவர் இந்த அறிஞர்!! இதுவும் அவர் கைப்பட எழுதியதுதான்!!

இந்த வஞ்சக சூழ்ச்சியை பாருங்கள்! அதாவது, மெய்யான தேவனின் மதத்தை என்ன செய்தாலும் இந்தியாவில் இவரால் பரப்ப முடியவில்லை! அவரின் தேவனின் ஆசீர்வாதங்கள் இந்த காட்டு மிராண்டிகளிடம் பலிக்காமல் போனதற்கு காரணம் தேடவேண்டுமே என்று அலசி, இந்தியர்கள் (அப்பொழுது அவர் தமிழகத்தில்தான், அதாவது நெல்லையில்தான் இருந்தார், ஆதலால் அவர் தமிழர்களையும் சேர்த்து குறிப்பிட்டு சொல்லுகின்றார் என்பதை புரிந்து கொள்ளுவோம்) எல்லோரும் பொய் பேசுவதால் அவர்கள் மதம் மாற மாட்டார்கள் என்று போட்டு தாக்கினார்! அதாவது, உண்மை பேசினால், ஒருவர் கண்டிப்பாக மதம் மாறி விடுவாராம்! அப்படி மாராததனால் இந்தியர்கள் பொய் பேசும் ஆசை உள்ளவர்கள் என்று அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து வெளியிட்டார்!!

இப்படி அருமையான ஆராய்ச்சிகளை செய்து எழுதியவர்தான் இந்த மேதை!!

அடுத்தது இவர் எடுத்துக்கொண்ட டார்கெட் நாடார் சமூகம்!!

அவர்களில் பலரை மதம் மாற்றுமுன் அவர் என்னவெல்லாம் சொன்னார் என்பதை பார்ப்போம்!!
Thamizhan சொன்னது…
அவர் கிருத்துவ மதத்தைப் பரப்ப வந்த கிருத்துவர் என்பது அனைவரும் அறிந்தது தான்.
தமிழர்கள் "இந்து" என்ற வார்த்தையைப் பயன் படுத்தினார்களா? வேதத்திலேயே அந்த வார்த்தை கிடையாதே!தமிழ் மதத்தைத் திருடி,அதிலிருந்த நல்லதையெல்லாம் தமதாக்கி,நாடோடிகளாக சோம பாணமும்,சுராவும்,பசு வதையும்,யாகமும் நடத்தி,உயிக்கொலை செய்தவர் யார்? தமிழரா?

"இந்து" என்று சொல்லிகொண்டாலே,உன்னைச் சூத்திரன், சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்...
என்று ஒத்துக் கொள்வதாகத் தானே பொருள்.
தமிழன் இன்றும் பெருமையுடன் சூட்டிக் கொள்ளும் பெயர்கள் " ஆதி கேசவன் " "சண்முகக் கேசவன்"
அதைத் தமிழில் மொழி பெயர்த்து, அது போன்ற பெயர்களைத் தமிழில் மொழி பெயர்த்துச் சூடிக்கொள்ளச் சொல்லுங்களேன்.
பேய்,பிசாசு,சனி பகவான்,செவ்வாய் தோஷம், காலை முதல்,இரவு வரை ஆயிரம் பிள்ளையார்,ராமா ராமா, எல்லாம் அவன் செயல்...அம்மைக்குக் அம்மன்,கல்வியறிவில்லாதவனுக்கு சரஸ்வதி,ஏழைக்கு லட்சுமி,ஆயுதமே கண்டு பிடிக்காதவனுக்கு ஆயுத பூஜை.
இன்று வளரும் குழந்தகளிடம் கேளுங்கள், உனக்கு ஒன்றுமே தெரியவில்லையென்று எல்லாம் விளக்க்மாகச் சொல்லி விடும்.எது அவன் செயல்,எது நம் உழைப்பு என்று.

தமிழ்,தமிழர் என்று சொல்லிக் கொண்டு சூத்திரப் பட்டத்தில் பெருமை கொள்வது உங்கள் விருப்பம்.
ஆனால் தமிழ்,தமிழர் நாகரீகம் என்று சொல்லிக் கொண்டு "இந்து" நாடகம் என்ற அயோகியத் தனத்தைச் செய்வது,ஆம்,ஏமாற்று வித்தை !
NO சொன்னது…
..."Demonolatry , or devil worship, is the only term by which the religion of the Shanars (Nadars) can be accurately described"

சொன்னது மேதை கால்டுவெல்...

அதாவது, நாடார்களின் மதம் (நாடர்கள் இந்துக்கள் இல்லை என்ற ஒரு புது கண்டுபிடிப்பை அவரே வெளியிட்டார்) என்பது பிசாசு வழிபாடு என்பதைத்தவிர வேறு பெயரிடமுடியாது என்று சொன்னார்!

அதே வழிமுறை. முதலில், நீ வணகும் மதமும் கடவுளும் பெரும்பான்மை மதம் அல்ல (mainstream religion), இது வேறு என்று கூறவேண்டியது! அடுத்து, உனக்கு மதேமே கிடையாது என்று கூறவேண்டியது! அப்படி இருந்தாலும் அது பிசாசு வழிபாடுதான் என்று சொல்லவேண்டியது! கடைசியில், மெய்யான எங்கள் மதமே உனக்கு நல்லது என்று கூறி ஆசைக்காட்டி பயம் காட்டி பணிவைப்பது! மதம் மாற்றிய பின்னர், மனம் மாறி விட்டான் என்று கதை கட்டுவது!

என்ன நெஞ்சழுத்தம் இருந்தால், ஒரு முக்கிய சமூகத்தை (நாடார்கள் கீழே போய் கடின நிலைக்கு ஆனதன் காரணம் அவர்கள் ஆங்கிலேயர் உள்வந்ததால் நிலம் இழந்தார்கள், வியாபார மார்கங்களை இழந்தார்கள்) இப்படி கேவலப்படுத்துவது! நாடார் சமூகம் கால்டுவெல் கதை விடுவதுபோல இல்லை என்பதற்கு ஒரு உதாரணம், நாடார் சமூக தலைவர்களுக்கு நாயர் ராஜாக்கள் கொடுத்த பெயர் மாற்றச்சன் என்பது, அதாவது ஒரு இராஜ வம்சம் ஒரு சமூக தலைவனை பார்த்து, என தந்தை ஸ்தானம் நீங்கள் என்று கூறினால், அப்படி கூறப்பட்டவர் கண்டிப்பாக வாழ்வின் கீழ்நிலமையில் உள்ளவர் இல்லை! நாடார் சமூகமும் அது போலதான்! ஆங்கிலேயரின் வியாபார முறைகளும் ஜாமீன் முறைகளும் நாடார்களின் ஆளுமையை புரட்டி போட்டு விட்டது!! ஒரு நூறு வருடங்களில் அவர்கள் கீழே விழுந்தார்கள்!

இந்த நிலைமையை சாதகமாக்க பார்த்தார் கால்டுவெல் போன்ற சிலர்!

அவர் எழுதிய புத்தகத்தில் நாடார் சமூகத்தை பற்றி மிக இழிவாக எழுதியதால், மதம் மாறாத நாடார்கள் மிக சினம் கொண்டு அதை எதிர்த்தார்கள்! இந்த எதிர்ப்பை பார்த்து அவரின் புத்தகத்தை விளியிட ஆங்கிலேயர் அரசாங்கமே கடைசியில் தடை விதித்தது!!!

இப்படி தன்னின் மத மாற்ற ஆர்வத்திற்கு வரும் தடைகளை தகர்க்க கதைகள் பலதை கட்டினார்!

கிறுத்துவராக அதிகம் பேர் வராததனால் கடைசியில் இந்து மதத்திலிருந்த தமிழர்களை பிரிப்பதுதான் ஒரே வழி என்று எண்ணி, அதற்க்கு இரண்டு ஆயுதங்களை எடுத்தார்! ஒன்று, இந்து மதத்தின் பிரதிநிதி என்று பார்க்கப்படும் பிராமணர்களை ஏசி, அவர்கள் வந்தேறிகள் என்று பட்டம் கட்டுவது, அப்படி செய்தால் இந்து மதத்திற்கும் தமிழர்களுக்கும் இடைவெளி வரூம் என்ற முதல் ஆயுதம்! இரண்டாவது, தமிழ் மொழியிலிருந்து இந்து மத சம்மந்தமான விடயங்களை பிரித்தெடுத்து, அது தமிழில்லை, இதுதான் தமிழ் என்று கட்டம் கட்டினால், தமிழர்கள் மெதுவாக இந்து மதத்திலிருந்து வெளியே வராலாம் என்பது!! கூடவே அப்பப்போ, நாகரீகமற்ற சமுதாயம் நீங்கள், இந்து மதம் உங்களை மதிக்காதும், நீங்கள் தனியானவர்கள், அவர்கள் ஆரியர்கள் என்று பிரித்து போடும் பிரச்சாரத்தை பரப்புவது!

இந்த மூன்றுமன் சேர்ந்துதான் கால்டுவெல்!!!!

இந்திய மக்களின், தமிழர்களின், இந்துக்களின் எதிரி!!!!!

வாருங்கள் இவர்க்கு சிலை வைப்போம் என்று கிளம்புவது ஒரு கூட்டம்!!
NO சொன்னது…
நண்பர் தமிழன்,

பைபிளில் மற்றும் அனேக கடவுள் கொடுத்த புத்தகங்கள் என்று சொல்லப்படும் புத்தகங்களில் இருப்பது என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
Its clear that all those holy books condones slavery!!!!! அதாவது எல்லா மதபுத்த்கங்களும் அடிமைகளை வைத்துக்கொள் என்று கூறுகிறது! அது மட்டும் அல்ல, இன்னும் ஏதேதோ கூறுகிறது!

Mark Twain கூறினார் " "There is one notable thing about our Christianity: bad, bloody, merciless, money-grabbing and predatory as it is -- in our country particularly, and in all other Christian countries in a somewhat modified degree -- it is still a hundred times better than the Christianity of the Bible, with its prodigious crime -- the invention of Hell. Measured by our Christianity of to-day, bad as it is, hypocritical as it is, empty and hollow as it is, neither the Deity nor His Son is a Christian, nor qualified for that moderately high place. Ours is a terrible religion. The fleets of the world could swim in spacious comfort in the innocent blood it has spilt."

அட அதற்கென்ன இப்பொழுது என்று கூறுபவர்களுக்கு சொல்லுகின்றேன், எல்லா மத புத்தகங்களிலும் பயங்கரங்கள் இருக்கின்றன! ஆனால் அதை யாரும் உதாரணம் காட்டுவதில்லை! ஏனென்றால் இந்த காலத்தில் அது ஒரு பொருட்டில்லை!

அதே போலதான் இந்து மதத்திலும்! வக்கிரங்கள் இருந்தன என்பதை யாரும் மறுக்கவில்லை! ஆனால், அந்த வக்கிரங்களை வைத்துதான் இந்து சமூகம் நடத்தப்பட்டது என்பதுதான் கட்டுக்கதை!!

இது ஒரு Colonial invention"! There was caste. But it played a lot lesser role than what is projected now.

ஜாதிகளின் சமூக ஆளுமயைப்பற்றி பழந்தமிழ் எழுத்துகள் எவை? ஜாதிகளின் வீரியம் பற்றி விரிவான பழைய ஆக்கங்கள் எவை! அதையும் விடுங்கள். முதற்கட்ட ஆங்கிலேயர்கள் (1610 to 1800) ஜாதியின் வீரியம் பற்றி என்ன எழுதிருக்கிரார்கள்?

மேலுள்ள இரண்டு கேள்விகளுக்கும் பதில், "ஒன்றும் இல்லை"..........

சாதிகள்தான் இந்துமதத்தின் வேர், சாதிகள்தான் இந்து சமூகத்தின் ஒரே கோட்ப்பாடு என்று இன்று நிருவப்படிருக்கிற விடயங்கள், சுமார் இரநூறு வருடங்களுக்கு முன்னர் இல்லவே இல்லை!!

One of the most authentic and authoritative anthropological survey of Indian castes and society was done only by one Britisher. He was Collin Mackenzie. He was a distingusihed surveyor and the first surveyor general of India. He died in 1821, much before the British policy on Indian social settings changed. He started his vast collections by the end of 1780's when the British just began to step deeply in India. Hence from his records we are able to underestand to what extent the castes really played a role in the society. Since the land holding and the societal patterns were still not changes by trhe British then, the real influence of the caste was clearly made out from those records. But unfortunately, Collin Mackenzie dies before he could consolidate and publish his work. yet his vast collections are now preserved in London colonial Library / Museum and some in Delhi. The wondrfull thing about his collection was that he really did not receive much from the British government for his work on Indians. He spent his own money and hired people on his own interest to do such a survey.

இந்த ஆவணங்களில் ஜாதிகளின் பெயர் இருந்தாலும், ஜாதிகளின் இரும்புப்பிடி சமூகத்தில் இல்லவே இல்லை என்றுதான் கூறவேண்டும்!!
நிலம், வர்த்தகம், அந்த அந்த ஊர்களின் உள்ள நிலைமைகள் போன்ற சமூக விடயங்களை பொறுத்தே ஏற்றதாழ்வுகள் இருந்தன! ஜாதிகளின் ஆளுமை மிக குறைவாக இருந்தது, மேலும் அதன் வீரியம் பற்றி அந்த படைப்புகளில் இல்லவே இல்லை!

இன்று நாம் பார்க்கும் ஜாதிகள் வந்ததற்கு காரணம் பொருளாதார நசிவினாலே மற்றும் ஆங்கிலேயரின் ஆளும் முறையினாலே! ! ஆங்கிலேயர்கள், இந்தியர்கள் பல காலங்களாக நம்பி வந்த வாழ்வாதார முறைகளை புரட்டி போட்டதால் வந்தது இது!!

நேரம் கிடைக்கும் பொழுது மேலும் எழுதுகிறேன்

நன்றி
கப்பலோட்டி சொன்னது…
//இங்கிருந்த மக்களை திராவிட இனம் என்றும் ,ஆரிய இனம் என்றும் தங்களுக்குள்ளேயே பிரிந்து சண்டையிட காரணமானது . இவர் தான் பார்பனர் திராவிடர் என்ற சண்டையை தோற்றுவித்த முதல்வர் //

அப்போ திராவிடர் ஆரியர் என்பதே கிடையாதா?
Thamizhan சொன்னது…
வெள்ளைக்காரன் மீது பழியைப்போட்டு ஆரியக் கொள்ளைக் காரனை நல்லவனாக்க முயலும்"தமிழருக்கு".
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்....ஏன் எழுதினார்.இல்லாமல் இருந்ததால் எழுதினார்.
நால் வருணத்தை வெள்ளைக்காரன் எழுதினானா?
சமஷ்கிருதம் கடவுள் பாஷை! தமிழ் நீட்ஷ பாஷை,அவன் சொன்னதா?
கடவுளின் தனி ஏஜண்டுகள் நாங்கள் தான் என்று அரசனையும் அடிமையாக்கி வைத்துக், கோவில் கட்டிய ராஜ ராஜனையே கைகட்டி வெளியே நிறுத்தினானா?
"பார்ப்பனனுக்குப் பிறந்தவன் " நான் இந்து என்று தாராளமாகச் சொல்லிக் கொள்ளட்டும்.
தமிழனாகப் பிறந்து,தங்கள் மரபை,வழ்க்கத்தை,மொழியை அடிமைப் படுத்திச் சூத்திரனாக்கப்பட்ட தமிழன் ஒரு பொடியன் தன் தாத்தாவை "டேய்! பிச்சை" என்று ஆணையிட்டதைக் கண்கூடாகப் பார்த்த,கேட்ட தமிழனிடம் சொல்லிப் பார்க்கட்டும், ஜாதியெல்லாம் வெள்ளைக்காரன் உண்டாக்கியதென்று !
பொருளாதார மாய்மாலம் எல்லாம் செல்லுபடியாகாது.அது மனு தர்மம் படிக்காதவனிடம் சொல்லிக் காதில் பூ சுத்தலாம்.

வள்ளுவர் செய் திருக்குறளை மறுவர நன்குணர்ந்தோர் உள்ளுவரோ ஒரு குலத்திற்கொரு நீதி எனபதை யார் சொன்னது.
படித்தவர்கள், ஏன் இங்கிலாந்தில் பட்டம் வாங்கியவர்களே கூட,பணக்காரர்களாக இருந்தவர் பார்ப்பனரிடம் பட்ட பாடு வெள்ளையனின் விஷமமா?இல்லை வெள்ளைத் தோலின் மகிமையால் தமிழனை ஏமாற்றிய வந்தேரிகளின் விஷமா? மற்ற அசிங்கங்களை எழுத வேண்டாம் என்று விடுகின்றேன்,மனித நேயத்தால்.
ஆரிய ,திராவிடப் போராட்டத்தின் இணையத்தின் வடிவம் தான் இந்த வெள்ளைக்கார,கிருத்துவ ஏமாற்று வேலைகள்.எல்லா மதத்துக்காரனும் அவனவன் மதந்தான் பெரிது என்று ஏமாற்றுகின்றான்.
தமிழன் தான் "யாதும் ஊரே யாவருங் கேளிர்" என்றான்.
கேஷவர்கள், ( மயிராண்டி களாக இல்லாமல்)தமிழர்களாகி விட்டால் விஷமம் தொடராது விளக்கங்கள் கிடைத்து விடும்.தமிழர்களுக்கு அவர்கள் மரியாதை கொடுத்து "சாமி, குழந்தைக்குப் பெயர் வையுங்கள்" என்ற நம்பிக்கைக்குக் கிடைத்த பரிசு தான் இது !எந்த அவமானப் பெயரையாவது "சாமிகள்" அவர்கள் குழந்தைகளுக்கு வைத்துள்ளார்களா?

அனைவரும் அர்ச்சகர்கள் ஆவதையும்,தமிழில் அர்ச்சனைகளைச் செய்வதையும் தடுக்கும் "இந்து"க்கள் விஷ ஜந்துக்களா ? தமிழர்களா?
விடுத‌லைவீரா சொன்னது…
அருமையான பதிவு தொடரை படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.நன்றி
Robin சொன்னது…
ஐயா NO அவர்களே,

உங்கள் முகமூடி கிழிந்து இந்துத்தவா முகம் வெளிப்படத் தொடங்கியுள்ளது.
எல்லாப் பழியையும் வெள்ளைக்காரன்மேல் போட்டுவிட்டு பார்ப்பனீயத்தை காப்பாற்ற நீர் எடுக்கும் முயற்சி சிறு பிள்ளைத்தனமானது.
நாயர்கள் நாடார்களைப் போற்றினார்களா? எப்படி உம்மால் இப்படி வாய் கூசாமல் பொய் சொல்ல முடிகிறது?
நாடார் பெண்கள் தங்கள் மானத்தை மறைக்கமுடியாதவாறு நாயர்கள் தடுத்தார்கள் என்பதும் நாடார் ஆண்கள் நாயர்களுக்கு பண்ணை அடிமைகளாக இருந்தார்கள் என்பதும் பதிவு செய்யப்பட்ட வரலாறு. உமது செயல் சூரியனை கையால் மறைப்பதுபோல உள்ளது. அன்று மிஷனரிகள் கல்வி பயிற்றுவித்ததால்தான் நாடார்களால் தன்மானத்தை பெறமுடிந்தது. அன்று நாடார் பெண்கள் மானத்தை மறைக்க அனுமதி வழங்க வேண்டி மிஷனரிகள் எழுதிய கடிதங்களும் அதன் பிறகு திருவிதாங்கூர் அரசு பிறப்பித்த ஆணைகளும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
NO சொன்னது…
நண்பர் திரு ராபின்,

இங்கே யாரும் எதையும் தூக்கிபிடிக்கவில்லை! சாதியம் கேவலமானது இல்லை என்றும் யாரும் சொல்லவில்லை! பார்பனர்களால் தங்கள் ஜாதி உயர்த்தி பிடிக்கப்பட்டது சரி என்றெல்லாமும் சொல்லவில்லை! இன்று நாம் காணும் ஜாதிவெறி மூடி மறைக்கபடவேண்டியது என்றும் கூறவில்லை! எப்படி ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் துன்புறுத்துவது கேவலமோ, எப்படி சென்னை வீடுகளில் சிலர் பார்பஸ் ஒன்லி அட்டை மாட்டி அதற்க்கு வெஜிடேரியன் ஒன்லி பெயிண்ட் அடிப்பது எவ்வளவு கேவலமோ, அதே கேவலம்தான், நடப்பது இந்து மதத்தின் ஆக்கம் மட்டுமே என்று கூறுவது! இன்று நாம் காணும்
ஜாதிய வக்கிரம் இல்லை என்றே சொல்லவில்லை அதுதான் கண்முன்னே இருக்கிறதே!!! அனால் சொல்லவருவது, இதை ஊதிவிட்டு பெரிதாக்கியது கிளப்பிவிட்டது உங்களைபோன்ற அந்நியரிடம் அடிமையாகி பிரித்தாளும் கூட்டமே!!!

எவ்வளவு brain washing செய்யப்பட்டதால் நீங்கள் என்னை பார்த்து இந்துத்துவா முகமூடி என்று கூறுவீர்கள்? அதுவும் பதிவுகள் எங்கும் உங்கள் மதத்தையும் கடவுளாரையும் நீங்கள் கட்டி காத்து பதில் மேல் பதில் போடலாம் , அதன் பெயர் முற்போக்கா?? ஆனால் இந்து மதத்தை பற்றி யாராவது எழுதினால்
அவர்கள் இந்துத்துவா சொம்புதூக்கி, ஆர் எஸ் எஸ் அடிவருடி???? அப்போ நீங்கள் வாட்டிகன் சொம்புத்தூக்கியா? அல்லது பிராட்டஸ்டன்ட் பரப்பாளரா?? (இதை சொல்லுவதற்கு நான் வருந்துகிறேன், ஏனென்றால், எனக்கு வாட்டிக்கனின் மேல் என்றும் ஒரு நல்ல மதிப்பு இருக்கிறது, அவர்களின், சேவை மற்றும் reconcillation செய்யும் முறை மற்றும் மாறிய உலகில் அவர்களும் படிப்படியே மாறி, தாங்களின் மத அடிப்படைவாதத்தை மறு பரிசீலனை செய்து தாங்கள் ஒரு resposnsible entitiy என்ற நிலைக்கு வந்தது. கண்டிப்பாக பல தற்கால கிறித்துவ institution களின் மேல் எனக்கு நல்ல அபிப்பரயமே உள்ளது என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்)

அனால் பிரச்சனை, இவர்கள் இந்துமதத்தை,அதைவிட மேலாக இந்து சமூகத்தை முதலில் கூறு போட நினைத்தார்கள் என்ற உண்மைதான் வலிக்கிறது!!

நீங்கள் மறுபடியும் மிசினரிகளின் வழிமுறையில் ஒரு சமூகத்தை கேழே தள்ளி பார் இவர்களை காப்பாற்றியது கிருத்துவமே என்று கதை கட்டுகிறீர்கள்! நாடார்கள் என்பவர்கள், நிலம் மற்றும் வர்த்தகம் இழந்ததால் கீழே வந்தவர்கள் மட்டுமே!!! ஆமாம், அவர்கள் பல ஒடுக்குதலுக்கு ஆளானார்கள் என்பது உண்மை! அதை மறுப்பது யார்! ஆனால் அதற்க்கு இந்து மதம் காரணம், நாடார்கள் நாகரீகம் இல்லாமல் கீழே இருந்தார்கள், மிச்சினரிகள் அவர்களுக்கு வாழ்வு
கொடுத்தார்கள் என்று சொல்லுவது கடைந்தெடுத்த பித்தலாட்டம்!

என் எழுத்துகளின் சாரம், இந்து மதத்தை தூகிப்பிடிப்பதர்க்காக அல்ல!! எல்லா மதங்களும் வழுமுரைகளும் ஒரே மாதிரி இருக்கும் பொழுது, அது ஏன் இந்து மதத்தை மட்டும் கட்டம் கட்டி அடிக்கிறார்கள், மற்றும் வரலாற்று உண்மைகளுக்கு எதிராக திரிக்கிறார்கள் என்று மட்டுமே!!

கால்டுவெல் இறந்தாலும் அவர்களை போன்றவர்கள் விதைத்த நச்சு விதை உங்களைப்போன்ற அந்நிய மோகிகள் மூலம் இன்றும் வேர் விட்டு வாசம் வீசுகிறது என்பத்தான் கொடுமை!!

நன்றி
NO சொன்னது…
நண்பர் திரு கப்போலோட்டி,

//அப்போ திராவிடர் ஆரியர் என்பதே கிடையாதா?//

கிடையாது!!!

மாக்ஸ் மூலேர் என்றவர் ஆரம்பித்து வைத்த கட்டுக்கதை இது! மொழிவழி ஆராய்ச்சி என்றபெயரில், சில மொழிகள் இங்கிருந்து தொடங்கியது இல்லை என்று வளர்ந்து, இந்த நாகரீகங்களை வளர்த்தவர்கள் இங்கிருக்கும் மக்களாக இருக்கவே முடியாது என்ற அடிப்படையில் தொடுக்கப்பட்டதுதான் இந்த வந்தேறி
ஆரிய கதை!! திராவிட மாயையை ஊதிவிட்டது கால்டுவெல்! முன்னர் சொன்னதுபோல, இல்லாத ஆரியத்திலிருந்து, இந்துக்களை தனியாக பிரித்தெடுத்து, மதம் மாற்றம் செய்ய தொடுக்கப்பட்ட கதைதான் இந்த திராவிட இனக்கதை என்பது!

இதில் இரண்டு கொடுமைகளை சொல்லியே ஆகவேண்டும். அதாவது, மேல் ஜாதி காரகளுக்கு, குறிப்பாக பல பார்ப்பனர்களுக்கு இந்த கட்டுக்கதை நல்ல வசதியாக போய்விட்டது!! இதோ பார் நாங்கள் ஒரு படி மேல் என்று கதை விட்டு காலியான இடங்களை பிடிப்பதற்கு இது வசதியாகி விட்டது!! காலியான இடங்கள் என்றால், பாப்பனர்கள் இரநூறு அல்லது முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வரை விளிம்பில்தான் இருந்தார்கள்!! சமூகம் என்பது எல்லா இடங்களிலும் இருப்பது போல அந்த அந்த ஆளும் வர்க்கம், வியாபார வர்க்கம் போன்றவையை சார்ந்துதான் இருந்தது! யாருக்கும் ஒன்றும் special இடங்கள் இல்லை! ஆங்கிலேயர்கள் வந்த பிறகு இந்த நிலை முற்றிலுமாக மாறியது! வாழ்வாதாரங்கள் தடம் புரண்டதால், நிலம் இழந்ததால், பல சமூகங்கள் கீழே போனார்கள்! அப்பப்போ பல ஜாதிகள் இணைந்தன பிரிந்தன! ஆங்கிலேஎன் வந்த பிறகு அவன் மட்டுமே எல்லா அதிகாரங்களையும் கைப்படுத்தியதால், conventional power structures கரைந்து போனது! ஆங்கிலம் படித்து அரசு உத்தியோகத்தில் உட்காருவதே பெரிதாக மாறியது! இதை வாசனை பிடித்து முதலில் செய்தவர்கள் பிராமணர்கள் மற்றும் வேறு சில சாதிகள்!

ஆதலால் யாரும் இல்லாத அதிகார மையங்களில் by default உட்கார்ந்துவிட்டார்கள்! வேறு வழிகளில் இந்த நாள் வரை ஆளுமை செலுத்திய வர்கங்களோ, மறைந்த ஆளுமையை நினைத்து கொஞ்சம் நாட்கள் கோபம் கொண்டார்கள்! புதிய வழிமுறைகளை சில நாள் பின்ப்பற்றாததால், பின்னடைவை அடைந்தார்கள்! நிலங்களையும் விட்டதால் கீழே போனார்கள்! ஆனால் அவர்களும் புதிய யுத்திகளை கையில் எடுத்தவுடன் எல்லோருக்கும் நிகராக இப்பொழுது நாம் காணும் நிலைமைக்கு வந்தும் விட்டார்கள்!!

ஆதலால்தான் BC அல்லது MBC என்று சொல்லப்படுபவர்களுக்கும் FC என்று சொல்லப்படுபவர்களுக்கும் ஒரு நிலைக்கு மேல் பெரிய வித்தியாசம் கிடையாது ! ஒரு நிலை என்றால், ஒரு இரண்டு தலைமுறை படிப்பு என்று கொள்ளலாம்! இப்பொழுது எல்லோரும்தான் தேர்வுகளில் மதிப்பெண் வாங்குகிறார்கள்!!

இதை வைத்து பார்க்கும்பொழுதுதான் சொல்லுகிறேன், தமிழர்கள் (மற்றும் பல இந்திய வர்கங்கள்) அடைந்தது ஒரு தற்காலிக பின்னடைவு மட்டுமே!

வாழ்வாதாரங்கள் குருகியபிறகு, இருக்கும் ஒரு சில வாய்ப்புகளை பிடிங்கிக்கொள்ள அமைந்த வழிமுறையே இன்று நாம் காணும் ஜாதி வீரியம்! இது இப்பொழுது இல்லை என்று யாரும் கூறவில்லை! ஜாதி வெறி கண்முன் நடக்கும் கொடுமை! ஆனால் இதன் ஆணிவேர் இந்து மதத்தில் இல்லை, ஆயிரம் வருடங்களாகவும் இல்லை!

Its a very early phenomenon and which became very virulent as a side effects for racing towards collecting the minimum resources British left for Indians!

The entire dravidian and Aryan phenomenon is just a story and which has no historical, archeological or any other credible basis or evidence to substantiate! Essentially, the white men did not believe that the Hindus were capable of a high degree of civilization and hence wanted an external implant to justify that this all had an European begining and hence an Aryan theory! The Dravidian story was motivated by Caldwell and his missionary friends to see the possibility of splitting the south Indian population from Hinduism so that they can be converted to Christianity and hence would be loyal to the British while the north of India rebelled against the British rule!! This story telling by the White men started to get more virulent after the great rebellion of 1857 after which they thought that the Hindus should never get together to organise one more rebellion as such! While they were able to split the Muslims and Hindus very easily as they were of different religions, to split the Hindu society a more ingenious trick and story needed to be developed! Thus the Aryan Dravidian story!!

நன்றி
நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…
NO said...

நண்பர் திரு கப்போலோட்டி,

//அப்போ திராவிடர் ஆரியர் என்பதே கிடையாதா?//

கிடையாது!!!
இந்த கருத்தில் மட்டும் நான் தங்களிடமிருந்து முரண்படுகிறேன் .
இது குறித்து நான் படித்துவருவதால் தற்பொழுது என்னால் எதில் எங்கு முரண்படுகின்றேன் என்பதனை அறியிட்டுக்கூற முடியாயவில்லை .ஒருவேளை நீங்கள் குறிப்பிடுவது கூட சரியாக இருக்கலாம் .அனைத்தையும் சிந்தித்து பின் ஒரு முடிவுக்கு வரும் வரை எனக்கு தாங்களின் இந்தக்கூற்றில் மட்டும் உடன்பாடு இல்லை .தாங்களின் அருமையான பகிர்வுகளுக்கு மிக்க மகிழ்ச்சி .மேலும் செய்திகள் இருப்பின் அறிய விரும்புகிறேன் . மிக்க நன்றி
Jo Amalan Rayen Fernando சொன்னது…
Mr NO

முதலில் முடிவுரையை ஆரும் எழுத மாட்டார்கள். ஆனால் நீங்கள் அஃதை எழுதிவிட்டு, கேட்பவர்களிடம் பின்னர் எழுதிகிறேன் என்பது என்ன ஆட்டம்?

இஃது ஒரு இந்துத்வாவினரின் கொள்கை: அஃதாவது கால்டுவெல் ஒரு கள்ளப்பயல் என்பது.

அதை முதலில் சொல்லிவிட்டீர்கள்? உண்மையைத்தேடுவது உங்கள் நோக்கமா? அல்லது இந்துத்வாவின் ஊதுகோலா இருப்பது உங்கள் நோக்கமா? கண்டிப்பாக, தமிழ்.இந்து.காமில் உங்கள் பதிவு இணைக்கப்பட்டு வாசிக்கப்படும்.

முதலில் இந்த விளையாட்டை நிறுத்தி, கால்டுவெல் என்ன சொன்னார் என்பதை காய்தல் உவத்தல் இன்றி தொடர் பதிவுகளில் சொல்லிவிட்டு, இறுதியாக முடிவுரையை எழுதினால் அது நேர்மை.
Robin சொன்னது…
test
NO சொன்னது…
Dear Friend,

What you think might also be correct in a way that the geneology of populations certainly differ based on regions. But the thing is that this is all quite old and have been consolidated thousands of years ago which is much before the kind of civilizations that we see now had ever formed.

No doubt we have all caucasian and also maybe some negretoid blood is us! This is what happened when human populations drifted from Africa and moved around. And later over the years moved around seeking greener pastures to survive better!

What I am trying to say is that there is no civilizational or cultural classification as Dravidian and Aryan! All that have been is certain pre-civilizational population movements for sure.

So your point of populations moving around maybe correct. But the context is very different!

Its just like saying Azetics, Incas (Native American Indians in south America) and Chinese are the same as they are all of Mongoloid race. This maybe true but they all migrated across the Bearing starits more than 10,00 years ago and much before an idea of civilization and culutre ever occured.

Hope you understand the point

Nandri
Robin சொன்னது…
NO அவர்களே,

வார்த்தைக்கு வார்த்தை இந்து மதம் என்று சொல்கிறீர்களே, அப்படி ஒரு மதம் உண்மையிலேயே அன்று இருந்ததா? இந்து என்ற பெயரே
வெளிநாட்டுக்காரன் கொடுத்ததுதானே. அன்று இருந்தது வைணவம், சைவம், புத்தம், சமணம் தவிர இந்து மதம் என்று ஒன்றும் இல்லை.

ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும்பாலும் கிராம சிறு தெய்வங்களையே வழிபட்டனர். இவற்றை இன்று ஒரு பார்ப்பானராவது வழிபடுவாரா?

//அனால் சொல்லவருவது, இதை ஊதிவிட்டு பெரிதாக்கியது கிளப்பிவிட்டது உங்களைபோன்ற அந்நியரிடம் அடிமையாகி பிரித்தாளும்
கூட்டமே!!!// இதை ஊதிவிட்டு பெரிதாக்கவேண்டிய அவசியமில்லை. அன்றிருந்த நிலையில் ஜாதிக் கொடுமை தலைவிரித்தாடியது
என்பதுதான் நிஜம். இதை அந்நியன் வந்துதான் பெரிதாக்கிவிட்டான் என்பதெல்லாம் ஜாதி கொடுமையை மறைக்க நீங்கள் செய்யும்
தந்திரம்தான். இன்னும் அந்நியரிடம் அடிமையாக இருப்பதால்தானே அந்நிய மொழியான ஆங்கிலத்தில் எழுத்திதள்ளுகிறீர்.

//எவ்வளவு brain washing செய்யப்பட்டதால் நீங்கள் என்னை பார்த்து இந்துத்துவா முகமூடி என்று கூறுவீர்கள்?// நீர் இந்துத்வவாதி
என்பதைக் கண்டறிய யாரும் brain wash செய்யப்படவேண்டிய அவசியமில்லை, சமீப காலத்திய உம்முடைய எழுத்துக்களை படித்தாலே
புரிந்து கொள்ளமுடியும். brain wash என்பதே R.S.S தனமான பேச்சுதான்.

//அதுவும் பதிவுகள் எங்கும் உங்கள் மதத்தையும் கடவுளாரையும் நீங்கள் கட்டி காத்து பதில் மேல் பதில் போடலாம் , அதன் பெயர்
முற்போக்கா?? ஆனால் இந்து மதத்தை பற்றி யாராவது எழுதினால்
அவர்கள் இந்துத்துவா சொம்புதூக்கி, ஆர் எஸ் எஸ் அடிவருடி???? // பேச்சை திசை திருப்பவேண்டாம். இங்கு இந்து மதத்தை பற்றி எழுதும்
பதிவர்கள் உண்டு. அங்கெல்லாம் போய் நீங்களெல்லாம் இந்துத்வாவாதிகள் என்று சொல்லியிருக்கிறேனா? ஏதோ நான் இந்துக்களுக்கு
எதிரானவன் என்று சித்தரிக்க முயலவேண்டாம். இந்துத்வாவாதி வேறு இந்து வேறு. இந்துத்வாவாதி என்பவன் அரசியல் ஆதாயத்துக்காக
இந்து மதத்தினரை மற்றவர்களுக்கு எதிராக திருப்பிவிடுபவன். இங்கே நீர் செய்வதும் அதுதான்.
Robin சொன்னது…
//நீங்கள் மறுபடியும் மிசினரிகளின் வழிமுறையில் ஒரு சமூகத்தை கேழே தள்ளி பார் இவர்களை காப்பாற்றியது கிருத்துவமே என்று கதை கட்டுகிறீர்கள்! //சமூகத்தை மேம்படுத்தியதே மிஷனரிகள்தான் என்கிறேன், இவர்களை காப்பாற்றியது கிறிஸ்துவமே என்பதற்கு தென்தமிழகத்தில் காணப்பட்டும் கல்வி நியாயங்களே சாட்சி.

//நாடார்கள் என்பவர்கள், நிலம் மற்றும் வர்த்தகம் இழந்ததால் கீழே வந்தவர்கள் மட்டுமே!!! ஆமாம், அவர்கள் பல ஒடுக்குதலுக்கு ஆளானார்கள் என்பது உண்மை! அதை மறுப்பது யார்! ஆனால் அதற்க்கு இந்து மதம் காரணம், நாடார்கள் நாகரீகம் இல்லாமல் கீழே இருந்தார்கள், மிச்சினரிகள் அவர்களுக்கு வாழ்வு
கொடுத்தார்கள் என்று சொல்லுவது கடைந்தெடுத்த பித்தலாட்டம்!// நிலம், வர்த்தகம் ஏன் இழந்தார்கள், சொல்ல முடியுமா? அவர்களை ஒடுக்கியது யார், எதற்காக, விளக்க முடியுமா? மனு சாஸ்திரப்படி இயற்றப்பட்ட சட்டங்களை வைத்து மக்களை துன்புறுத்தும்போது, மதம்தான் இதற்கு காரணம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது? கோவணம் உடுத்தி கொண்டிருந்தவர்களை மேலாடையில்லாமல் திரிந்த பெண்களை நாகரீகமாக்கியது மிஷனரிகள் என்பதற்கு வாரலாற்று ஆதாரங்கள், ஆவனங்கள் உண்டு, இதில் பித்தலாட்டம் எதுவும் இல்லை.

//எல்லா மதங்களும் வழுமுரைகளும் ஒரே மாதிரி இருக்கும் பொழுது, அது ஏன் இந்து மதத்தை மட்டும் கட்டம் கட்டி அடிக்கிறார்கள், மற்றும் வரலாற்று உண்மைகளுக்கு எதிராக திரிக்கிறார்கள் என்று மட்டுமே!! // எல்லா மதங்களின் வழிமுறையும் ஒன்றல்ல. மற்ற மதங்களை கட்டம் கட்டி அடிக்கும் வலைதளங்கள் ஏராளம் உண்டு. உ.தா. தமிழ் இந்து தளம். வரலாற்று உண்மைகளுக்கு எதிராக திரிப்பது நீங்கள்தான்.
Robin சொன்னது…
//கால்டுவெல் இறந்தாலும் அவர்களை போன்றவர்கள் விதைத்த நச்சு விதை உங்களைப்போன்ற அந்நிய மோகிகள் மூலம் இன்றும் வேர் விட்டு வாசம் வீசுகிறது என்பத்தான் கொடுமை!!// மிஷனரிகள் விதைத்த நச்சு விதை எங்களை மேம்படுத்துகிறது என்றால் என்றைக்கும் அந்த வாசம் எங்களிடம் வீசத்தான் செய்யும். இதில் வேடிக்கை என்னவென்றால் மதத்தை மட்டும் பிடித்துக் கொண்டு மற்ற எல்லா விஷயத்திலும் வெள்ளைக்காரனை காப்பியடிக்கும் உங்களைப் போன்றவர்கள் எங்களைப்பார்த்து அன்னியமோகிகள் என்பதுதான். இதைத்தான் hypocrisy என்கிறார்களோ!
Robin சொன்னது…
Read

http://govikannan.blogspot.com/2010/06/blog-post_26.html
Robin சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Robin சொன்னது…
//What I am trying to say is that there is no civilizational or cultural classification as Dravidian and Aryan! All that have been is certain pre-civilizational population movements for sure.//

நன்றாக சமாளிக்கிறார். இன்றுகூட ஒருவர் வட இந்தியரையும் தென்னிந்தியரையும் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியும். சிந்து சமவெளி நாகரீகத்தில் வாழ்ந்த மக்கள் pre-civilized population-ஆ? சிந்து சமவெளி நாகரீகம் நகர நாகரீகம், ஆரிய நாகரீகம் கிராம நாகரீகம். நகர நாகரீகத்திலிருந்து கிராம நாகரீகத்திற்கு போயிருக்க சாத்தியமில்லை. சமீபத்தில் சிந்து சமவெளி நாகரீக எழுத்துக்கள் கேரளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Robin சொன்னது…
//A rock engraving, indicating clear remnants of Harappan culture, has been found in the Edakkal caves in neighbouring Wayanad district, linking the Indus Valley civilisation with South India.
"There had been indications of remnants akin to the Indus Valley civilisation in Karnataka and Tamil Nadu, but these new findings give credence to the fact that the Harappan civilisation had its presence in the region too and could trace the history of Kerala even beyond the Iron Age," historian M R Raghava Varier said.

The unique symbols integral to the Indus Valley culture traced in Harappa and Mohanjedaro region that stretched upto Pakistan, were found inside the caves during recent excavations by the State Archaeological Department.

Of the identified 429 signs, "a man with jar cup", a symbol unique to the Indus civilisation and other compound letters testified to remnants of the Harappan culture, spanning from 2300 BC to 1700 BC, in South India, Varier, who led the excavation at the caves, told PTI.//

29/09/௨௦௦௯

http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=3251075


பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு நாகரிக காலத்திற்கு முன்பு மட்டுமே மக்கள் இடம் பெயர்ந்தார்கள் என்பது கற்பனை.
NO சொன்னது…
நண்பர் திரு ஜோ,

நான் இந்துத்துவாவின் குழலாக இருந்து போகிறேன், இல்லாமல் போகிறேன்! ஆனால் அதை நீங்கள் சொல்லுவதுதான் பெரிய காமடி! உங்கள் எழுத்துக்களை
பல தளங்களில் வாசித்திருக்கிறேன்! உங்களின் strategy இப்பொழுது எனக்கு அத்துப்படி! ஒரு வாதத்தை எடுத்துவைத்துவிட்டு,கடைசியில், "உலகில் உள்ள
எல்லா குறைகளுக்கும் காரணம் இந்து மதமே" என்று முடிக்கும் எழுத்துகளை உங்கள் பாணியாக வைத்துக்கொண்டு , நான் எழுதுவதைப்பார்த்து முடிவுரைகள் முன்பே ஏன் கொடுக்கின்றீர்கள் என்று சொல்லுவது Hypocrisy of the highest kind!

சுருக்குமாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் ஒரு கிருத்துவ மத வெறியர்! அதை மறைப்பதற்கு நீங்கள் கையாளும் வழிமுறை, இந்து மதத்தை பிளவு படுத்தி குறை காண்பது! கால்ட்வெல்லின் களவாநித்தனத்தைப்பற்றி மேலே அவ்வளவு எழுதிருக்கிறேன்! வழிமுறைகள், மற்றும் கால்டுவெல் போன்ற மத மாற்றிகளின் உண்மையான குறிக்கோள் பற்றி எழுதிவிட்டுதான் அவர் யாரென்று சொன்னேன்! அப்படி இருந்தும் நீங்கள் ஒரே வரியில் "முடிவுரை இது" என்று கூறுவது கால்டுவெல்லின் அதே பிரித்துபோடும் சூழிச்சியின் தொடர்ச்சியே!!

//உண்மையைத்தேடுவது உங்கள் நோக்கமா? //
புதைந்து மறைந்து இருந்தால்தானே உண்மைகளை தேடவேண்டும். அதுதான் கண்முன்னே இருக்கின்றதே! பக்கம் பக்கமாக இந்து மதத்தை மோசமாக
விளித்டுவிட்டு, இந்த மதத்தை அழித்தால்தான் எல்லோரும் கிறுத்துவராக மாறுவார்கள், ஆதலால் அதுதான் ஏன் நோக்கம் என புரிதல் கொடுத்து மேலும் இங்கே இருப்பவர்களெல்லாம் காட்டு மிராண்டிகள் என்று தெளிவாக எழுதி வைத்ததை பார்த்தும இன்னுமா உங்களுக்கு ஒரு தேடுதல் வேண்டி கிடக்கிறது? இந்த "தேடுதல்" போன்ற சொல்லாடல்களை திருச்சபைகளுடன் நீங்கள் நிறுத்திக்கொண்டால் நல்லது!

என் எழுத்துகள் தமிழ் இந்து தளத்தில் இருக்கவேண்டுமென்றால் இருந்து விட்டு போகட்டும்! அனால் அதை திருச்சபை ஆவி பரப்புதல் பிரச்சரா கூடத்தை சேர்ந்தவர் சொல்லுவதுதான் நல்ல தமாஷு!

நீங்கள் உங்கள் மெய்யான தெய்வ பிரச்சார சமாச்சாரங்களை பார்த்துகொள்ளுங்கள்! நாங்கள் அதில் தலை இடுவதில்லை! பெந்தகோஷ்டோ, லுதேரனோ அல்லது வாடிக்கனோ, அல்லது ஒர்தொடாக்ஸ் ஒ, உங்கள் நம்பிக்கை உங்களுக்கு! தமிழ் இந்துவோ, நண்பர் திரு நண்டுவின் தளமோ அதை நான் முடிவெடுக்கிறேன்!

அதாவது மதவாதிகள் அறைகூவல் விடுவார்கள் "வாருங்கள் பரிணாமத்தை பற்றி விவாதிப்போம் எனேட்று! ஆனால் அவர்கள் கடைசியில் பார்க்க நினைப்பதோ அறிவியலை இல்லை, " இதோ பார், பரிணாமம் பொய், கடவுள்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பார்கள், அதயே சொல்லி முடித்துகொல்ல்வார்கள் (ஆம் கொல்வார்கள்) ! !
NO சொன்னது…
When the religious fanatic opens himself for a discussion or a debate its means that he has one last line that he would certainly deliver and that final line will always be "and hence your religion is not true and only mine is the true one"!! The point is, the points of discussion does not matter as you have the verdict already engraved inn your brains and its the one that you would deliver, whatever the context! Its a pity thet people have to watch you delivering moral sermons on how to write and costruct arguments!! A religious fanatic is always the same. Especially the Abrahamic ones!

Joes, Amalan's and the Robins of the lands are motivated to spread their religion in the guise talking about equivality! If only you had read a little bit about what your religion did to the peoples of the world! The African said" When they came , they had the Bible and we had the land, in a few years, we had the Bible and they had the land!!!

செய்வதெல்லாம் செய்துவிட்டு, அன்னிய ஆங்கிலேயரின் பிரித்தாளும் நாடகத்திற்கு உறுதுணையாகவும் இருந்து, இந்து மத சூழிகளைப்பற்றி பற்றி நீங்கள் பேசுவது நல்ல காமடி!! ஒரு இந்து தன் மதத்தைப்பற்றி கேள்வி கேட்கட்டும்! எல்லா மதங்களையும் நிந்தனை செய்யும் ஒரு மெய்யான நாத்திகன் இந்து மதத்தை பற்றி கேள்விகேட்கட்டும்! ஆனால், பெரியாரின் தாடியின் பின்னால் ஒளிந்துகொண்டு, மிசினரிகளின் "சேவை " எனும் நாடகத்தின் பின் ஒளிந்துகொண்டு, முழு மத பற்றாளனாக சிலுவையை மாட்டிக்கொண்டு தெருக்கள்தோறும் ஓலமிட்டு, என் மதேமே உண்மை என்று கொக்கரித்துக்கொண்டு, இந்து மதத்தை திட்டும் இந்த நீங்கள் சொல்லும் ஒவ்வரு சொல்லும் பொய்மையின் வடிவமே!!!

So to start with. declare that you do not have a faith in your holy book. Declare that you do not have faith in your God. Declare that you do not beleive in the thousands of fairy tales that your holy book teaches you! Then come and comment about our religion! We will then listen to you!! This will surely not happen as after all you are one of those that still believe firmly in the greatest story ever "SOLD"!

நன்றி
NO சொன்னது…
நண்பர் திரு ராபின்,

//இந்துத்வாவாதி வேறு இந்து வேறு//

இந்து மதத்தைப்பற்றி, இந்துவென்றால் என்னவேன்பதைப்பற்றி எங்களுக்கே நீங்கள் கற்றுக்கொடுக்கும் நிலைமைதான் உங்களின் முதல் கட்ட ஆக்கப்பணி!! இதைத்தான் கால்டுவெல் செய்தார், அவரின் சீடரான நீங்களும் அதைதான் செய்கிறீர்கள்! You have proved yourselves with this one point! Thanks

// ஏதோ நான் இந்துக்களுக்கு எதிரானவன் என்று சித்தரிக்க முயலவேண்டாம். //

நான் ஏன் சித்தரிக்க வேண்டும்! அதுதான் தெரிகிறதே உங்கள் காழ்ப்புணர்ச்சி!

//இந்துத்வாவாதி என்பவன் அரசியல் ஆதாயத்துக்காக இந்து மதத்தினரை மற்றவர்களுக்கு எதிராக திருப்பிவிடுபவன். இங்கே நீர் செய்வதும் அதுதான். //

கிருத்துவவாதி என்பவன் மத மாற்ற ஆள்சேர்க்கும் ஆதாயத்திற்காக இந்து மக்கள் மத்தியில் புகுந்து குழப்பம் உண்டாக்குபவன்! நீங்கள் செய்வது அதுதான் ஐயா, கால்டுவெல் செவதும் அதுதான் ஐயா!!!
எப்படி, இந்து என்றால் என்ன என்பதன் defnition நீங்கள் கொடுப்பீர்கள், இந்துத்துவம் என்றால் என்ன என்பதற்கும் விலாவாரியான விளக்கமும் கொடுப்பீர்கள்! அவ்வளவு விடயம் தெரிந்த நீங்கள் ஏன் கிருத்துவமதத்தில் இருக்கிறீர்கள் ஐயா?? வாருங்களேன் இங்கே, உங்களுக்கும் இங்கே இடம் உண்டு! ஏசுவையும் நீங்கள் இங்கே நம்பலாம்! இந்துக்கள் அதை தடுக்கமாட்டார்கள்! மெய்யான தெய்வம் ஒன்றே என்று நாங்கள் சொல்லவும் மாட்டோம்,

It doesnt require me to prove what the real intentions of your people are! Caldwell's spirit still lives!!

நன்றி
Robin சொன்னது…
//இந்து மதத்தைப்பற்றி, இந்துவென்றால் என்னவேன்பதைப்பற்றி எங்களுக்கே நீங்கள் கற்றுக்கொடுக்கும் நிலைமைதான் உங்களின் முதல் கட்ட ஆக்கப்பணி!// இந்து மதத்தை பற்றி பெரும்பாலான இந்துக்களுக்கே தெரியாது என்பதுதான் உண்மை. நானே இந்து நண்பர்கள் பலரிடம் கேட்டு விளக்கம் பெறமுடியாமல் சமீபத்தில்தான் பகவத்கீதை வாங்கினேன்.

//நான் ஏன் சித்தரிக்க வேண்டும்! அதுதான் தெரிகிறதே உங்கள் காழ்ப்புணர்ச்சி!//
முதலில் நாத்திக வேடமிட்டு இப்போது இந்துத்வா முகத்தை காட்டும் நீங்கள் இதை சொல்வதுதான் வேடிக்கை.


//கிருத்துவவாதி என்பவன் மத மாற்ற ஆள்சேர்க்கும் ஆதாயத்திற்காக இந்து மக்கள் மத்தியில் புகுந்து குழப்பம் உண்டாக்குபவன்!//
அப்போ உங்கள் ஆதி சங்கரர் முதல் இன்று வெளிநாடுகளில் ஆசிரமம் வைத்திருக்கும் இந்து சாமியார்கள் வரை செய்வது என்ன?
புத்தமும் சமணமும் கோலோச்சிய தமிழகத்தில் இந்து மதத்திற்கு ஆள் சேர்த்தது யார்? ஆன்மீகவாதிகள் எல்லாரும் தங்கள் மதக்கருத்துக்களை
மக்களுக்கு தெரிவிக்கவே செய்வார்கள், ஏற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இதில் கிறிஸ்தவர்கள் மட்டுமே இப்படி செய்வதாக
பொய்பிரச்சாரம் செய்வது ஆர்.எஸ்.எஸ். , வி.ஹெச்.பி ரவுடிக் கும்பலின் வேலை. நீரும் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்.
குழப்பம் உண்டாக்குவது குழந்தைகள் என்றும் பாராமல் உயிரோடு எரிப்பது எல்லாம் உங்களைப் போன்றவர்களின் வேலை.


//அவ்வளவு விடயம் தெரிந்த நீங்கள் ஏன் கிருத்துவமதத்தில் இருக்கிறீர்கள் ஐயா?? வாருங்களேன் இங்கே, உங்களுக்கும் இங்கே இடம் உண்டு! //
அவ்வளவு விடயம் தெரிந்ததால்தான் கிறிஸ்தவ மதத்தில் இருக்கிறேன்.

ஏசுவையும் நீங்கள் இங்கே நம்பலாம்! இந்துக்கள் அதை தடுக்கமாட்டார்கள்! மெய்யான தெய்வம் ஒன்றே என்று நாங்கள் சொல்லவும் மாட்//டோம், //
காய் கறியும் சாப்பிடலாம் கறி மீனும் சாப்பிடலாம் அசைவத்துக்கு மாறிவிடுங்கள் என்று சைவம் மட்டும் உண்பவர்களை கேட்டுப்பாரும், எத்தனை பேர் வருகிறார்கள் என்று பார்ப்போம்.

//It doesnt require me to prove what the real intentions of your people are! Caldwell's spirit still lives!!// இதை அந்நிய மொழியான ஆங்கிலத்தில் எழுதிவிட்டு என்னை அன்னியமோகி என்கிறீரே உம்மை hypocrite என்று சொல்லாமல் எப்படி சொல்வது? கால்டுவெல் உம்மைப் போன்றவர்களைத்தான் பொய்யர்கள் என்றிருக்கிறார்.
FYI Caldwell's spirit is much holier than sankararaachaariyaa's evil spirit. Caldwell gets along with other humans freely how about your sankaracharaya, one who treated a group of humans as low-castes.
Robin சொன்னது…
நோ ஐயா,


பதிவைப் பற்றியோ அதைப் பற்றி நான் கொடுத்துள்ள ஆதாரங்களைப் பற்றியோ பேசாமல் தனிப்பட்ட விமர்சனத்தையே செய்து கொண்டிருக்கிறீரே, அது ஏன்?
திசை திருப்பும் முயற்சியா?
Robin சொன்னது…
//செய்வதெல்லாம் செய்துவிட்டு, அன்னிய ஆங்கிலேயரின் பிரித்தாளும் நாடகத்திற்கு உறுதுணையாகவும் இருந்து, இந்து மத சூழிகளைப்பற்றி பற்றி நீங்கள் பேசுவது நல்ல காமடி!! // ஜாதிக் கொடுமைகளுக்கு மனுசாஸ்திரம் மூலம் அங்கீகாரம் கொடுத்துவிட்டு, தாழ்ந்த ஜாதி என்று ஒருபிரிவினரை கொடுமை படுத்தி, இப்படி செய்வதையெல்லாம் செய்து விட்டு எல்லாப் பழியையும் ஆங்கிலேயன் மேல் போட்டு தப்புவிக்க நினைப்பதுதான் வேடிக்கை.

//ஒரு இந்து தன் மதத்தைப்பற்றி கேள்வி கேட்கட்டும்! எல்லா மதங்களையும் நிந்தனை செய்யும் ஒரு மெய்யான நாத்திகன் இந்து மதத்தை பற்றி கேள்விகேட்கட்டும்! // கோவிக் கண்ணன் இந்துதானே, அவர் கேள்வி கேட்டபோது நீர அவரை தனிப்பட்ட முறையில் தாக்கி டார்ச்சர் கொடுக்கவில்லையா?
தமிழ் ஓவியா, நாத்திகர்தானே அவர் இந்து மதத்தைப் பற்றி வைத்த விமர்சனத்திற்கு என்ன பதில் கொடுத்தீர்? வெறும் வசவுதானே கொடுக்கப்பட்டது.

//ஆனால், பெரியாரின் தாடியின் பின்னால் ஒளிந்துகொண்டு// நீர் தருமி சாரின் பின்னால் ஒளிந்து கொண்டு ஜல்லியடிக்கவில்லையா?


//மிசினரிகளின் "சேவை " எனும் நாடகத்தின் பின் ஒளிந்துகொண்டு// சேவை என்பது தாழ்த்தப்பட்டவர்கள் எப்போதும் அப்படியே இருக்கவேண்டும் என்று நினைக்கும் கும்பலை சேர்ந்த உமக்கு நாடகமாகத்தான் தெரியும்.

//முழு மத பற்றாளனாக சிலுவையை மாட்டிக்கொண்டு தெருக்கள்தோறும் ஓலமிட்டு, என் மதேமே உண்மை என்று கொக்கரித்துக்கொண்டு, இந்து மதத்தை திட்டும் இந்த நீங்கள் சொல்லும் ஒவ்வரு சொல்லும் பொய்மையின் வடிவமே!!!// என் மதமே உண்மை என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம், அதனால் மற்றவர்களுக்கும் சொல்கிறோம், அதில் என்ன தவறு? உம்முடைய மதம் உண்மை என்று நீர் நம்பினால் எங்களுக்கு விளக்கி சொல்லும், நீர் சொல்லும் விளக்கம் திருப்தியாக இருந்தால் நான் ஏற்றுக்கொள்ள ரெடி. திட்டுவது கொலை செய்வது எல்லாம் உம்முடைய இந்துத்வா கும்பலின் வேலை.
பெயரில்லா சொன்னது…
i am hconfused over the commentators here. The person NO and the blogger, I thought, same., So, I addressed my comments to NO.

It is addressed to Nando Noradnu.

I told him, first every one will put up what the book said in detail. Give synospsis. Then, you can give your conclusion.

Otherwise, it is like hanging a man before the trial.

Nondu samaalikkiraar: I will put u[ ;ater/

Then why do you create a controversy here?

First, stop this. And put up one by one what Caldwell wrote in his book:
A Comparative Grammar of Dravidian Languages.

Could you?

Jo Amalan Rayen Fernando.

Mr No: Your reply to me is not welcome to me.
பெயரில்லா சொன்னது…
இந்துமதம் தமிழ்ர்களின் தாய் மதம் என்றால், அது என்ன இந்து மதம்? பேச்சி, புலைச்சி, மாடசாமி, கருப்பச்சாமி, முனீசுவரன், கொற்கை, அய்யனார், இசக்கி, இவைபோன்ற தெய்வங்களைத்தானே தமிழர்கள் வணங்கினார்கள்?

இதைப்பார்ப்னர்கள் அழிக்கத்தானே வைதீக இந்து ம்தத்த்தைக்கொண்டு வந்து இங்கு திணித்து இத்தொல் தெய்வங்களையும் கலாச்சாரத்தை அழித்தார்கள். இருப்பினும் இன்னும் அக்கலாச்சாரம் இன்றும் இருந்து வ்ருகிறதல்லவா?

பார்ப்பன் ஜெயலலிதா கிடாவெட்டக்கூடாதென்றல்லவா தடுத்தார்? ஏன் அவர் வைதீக இந்து மதமல்லவா?

எப்படி வைதீக இந்து மதம் தமிழர்களின் தாய் மதமாகும்? தமிழர்கள் என்றால் பார்ப்ப்னர்கள் மட்டுமா?

பார்ப்ப்னர்கள் தமிழ்த்தெய்வங்களை வணங்குகிறார்களா? எந்த பார்ப்ப்னர் கருப்பசாமி, மாடசாமி, பேச்சி, இசக்கி, அய்யனார் எனப்பெய்ரிட்டு குழந்தைகளை வளர்க்கிறார்கள்?
பிற தமிழர்கள்தானே அதைச்செய்கிறார்க்ள்?

கிடாவெட்டி, கூழ் ஊத்தி, கரகமாடியா பார்ப்ப்னர்கள் வணங்குகிறார்கள்? அவர்கள் தெய்வம் பதவிசாக பெரிய கோயிலகளின் சமஸ்கிருத மந்திரத்த்தில் அல்லவா குளிக்கிறது? தமிழ் அங்கே வந்தால் பார்ப்ப்னர்கள் எதிர்த்து கோர்ட்டுக்கல்லவா போகிறார்கள்?

கால்டுவெல், பேச்சி, புலைச்சி, இசக்கி, கருப்பன், சங்கிலியன், புலமாடன், போன்றவற்றைத்தானே பேய்த்தெய்வங்கள் எனச்சொன்னார்? பார்ப்ப்னர்களும் பேய்த்தெய்வங்கள் எனச்சொல்லித்தானே விலகி நிற்கிறார்கள்? எந்த பார்ப்ப்னர் கிடாவெட்டி, சாமியாடி, சாரயம் படையல் கருப்பசாமிக்கு வைக்கிறான்?

இந்தப்பார்ப்பனர்களும் கால்டுவெல்லும் ஒன்றுதானே?

கால்டுவெல், கிருத்துவமதத்தைத் திணித்தார் என்றால், நீங்கள் வைதீகமதத்தைத் திணித்தீர்களே? சமஸ்கிருதத்தையும் சிந்துசமவெளியில் எழுதப்பட்ட வேதங்களையும் ஏன் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்?

அப்படி அவர்கள் எங்கோ எழுதப்பட்டதை ஏற்றால், ஏன் மத்தியகிழக்கு நாட்டில் எழுதப்பட்ட பைபிளை ஏற்றுக்கொள்ளக்கூடாது? உங்களுக்கு ஒரு நியாயம் அவர்களுக்கொன்றா?

கால்டுவெல் சொன்னதை ஏற்றுக்கொண்டு அப்பேய்த்தெய்வ வழிபாட்டை விட்டுவிட்டு, புராட்டஸ்டெண்டு மதத்தை நாடார்களில் பலர் ஏற்றுக்கொண்டால் இவர்களுக்கு ஏன் வலிக்கிற்து? நாடார்கள் அல்லவா எதிர்க்கவேண்டும்?

மக்களைப்பிரித்தாண்டது யார்? சூத்திரன், வைசியன், சாதியில்லா தலித்து என்று பிரித்தாண்டது பார்ப்ப்னக்கூட்ட்மல்லவா?

இவர்க்ளுக்கு என்ன் யோக்கியதை இருக்கிறது கால்டுவெல்லைப்பற்றி சொல்ல?
kulasekaram சொன்னது…
//இந்த கட்டுரை யின் நாயகர்
"MR .ROBERT A.CALDWELL " தனது "A COMPARATIVE GRAMMAR OF THE DRAVIDIAN "//

முதலில் அவர் எழுதிய நூலின் பெயரையே தப்பாக எழுதுகிறீர்கள்.

அதன் பெயர்: திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்.

அது ஒரு இலக்கண நூல். ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. ஆங்கிலத்தில்

A comparative grammar of Dravidian languages.

அந்த நூலையாவது பார்த்திருக்கிறீர்களா?
NO சொன்னது…
பொய்
------------

இவர்கள் இங்கு வந்து நல்லதை கொடுத்தார்களாம்!!அதுவரை இங்கே காட்டுவாசிகளும் நாகரீகமற்ற மக்களும் மட்டுமே இருந்தார்களாம்! இருந்த கொஞ்ச
நஞ்ச நாகரிகமும் அல்லது ஆதிக்க வடிவெடுத்து அதற்க்கு நாகரீகம் என்று பெயரிட்டு ஆளுமை செய்தவர்களும் வந்தேரிகளாம், அதாவது ஆரியர்களாம்!

சுருக்கமாக சொல்லுவதென்றால் இவர்கள் நல்லதை செய்ய பிறந்து ஊர் ஊராக கண்டம் கண்டமாக சென்று நாகரீகமான சமூகங்களை அமைத்தார்களாம்!!
அவர்கள் வருவதற்கு முன் இங்கிருந்தவர்கள் மற்றும் எங்கும் இருந்தவர்கள் எல்லாம் கல், பிசாசு காட்டேரிகளை வணங்கிய அறிவிலிகள், அல்லது, ஆதிக்கவாதிகளிடம் அடிமை பட்ட அறிவற்றவர்கள்!!!

இந்த "இவர்கள்" யாரென்றால் -- கிருத்துவ மிசினரிகள்! இவர்களின் மொழியில் இவர்கள் செய்வது "மக்களை விடுதலை செய்வது", அதாவது பிசாசுகளிடமிருந்தும், ஆதிக்கத்திலிருந்தும், ஒடுக்கும் சக்திகளிளிருந்தும், மற்றும் எல்லாவற்றில்லிருந்தும்.........

யார் அந்த இவர்கள் என்று கொஞ்சம் பார்ப்போம்!! இவர்களின் ஆக்க பணிகள் பற்றியும் சிறிது பகிர்வோம்!

இந்த பொய் மாய்மாலத்தை துகிலுரிக்க நல்ல ஒரு வேலை மற்றும் உந்துதால் இப்பொழுது வந்ததால், என்னால் முடிந்த நேரத்தில் இதை எழுதுகிறேன்!!

பாகம் - 1 : அடிமைத்தனமும், அடிமைகளும், கிருத்துவமும், சர்ச்சும், மிசினரிகளும் பாதிரிகளும்!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பதினைந்து லட்சம் முதல் இருபது லட்சம் மனிதர்கள் படுபயங்கரமான நிலைமையில் மடிந்தனர்! சுமார் ஒன்றரை முதல் இரண்டு கோடி மக்கள் நாடு கடத்தப்பட்டு, தங்களின் குடும்பங்கள் சீரழிகபட்டு, சிறுமை படுத்தப்பட்டு, மானபங்கபடுத்தபட்டு, நாசப்படுத்தப்பட்டு அடிமைகளானார்கள்!

டோகோ, கானா, பெனின், அங்கோலா, காம்பியா சினேகல், நைஜீரியா என்னும் பல தேசத்துமக்கள் பட்ட துன்பம்!

இந்த அராஜகத்தின் மூலம் - Transatlantic Slave trade - எனப்பட்ட படு பயங்கர அடிமை வியாபாரம்!
சுமார் முநூற்றி ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஈவிரக்கமிலாமல் நடத்தப்பட்ட ஒரு கொலை கொள்ளை களம்தான் இந்த நடவு!

எந்த ஒரு கருப்பு இனத்தவரும் இப்பொழுதும் நினைத்து பார்த்தால் பயந்து துடிதுடித்து சோகத்துடன் அழும் ஒரு மாபெரும் அன்னியம் இது!!

ஹிட்லர் கொன்றது இதே போலதான்! ஆனால் அவனும், அவனுக்கு துணை நின்ற பலரும் (அதைப்பற்றியும் நான் எழுதுகிறேன்) இன்று நம் கண்முன்னே
கேடு கெட்டவர்கள் என்று உண்மையான பட்டம் கட்டி மானுட துரோகிகள் என்று நிருவப்பட்டுவிட்டன! அதே அளவுக்கு மக்கள் அழிந்த போன ஒரு நிகழ்வுக்கு, கொலை செய்யப்பட்ட ஒரு அநியாயத்திற்கு துணை நின்ற எல்லோரும் கூண்டில் ஏற்றப்பட்டு விட்டார்களா?? அல்லது அதைப்பற்றியாவது யாராவது
இப்பொழுது நினைக்கிறார்களா? ஹிட்லரின் அயோக்கியத்தனத்தை மூடி மறைக்க முடியவில்லை! ஆனால் இந்த அராஜகத்தில் முழு பங்கு கொண்ட
தலைகளை தூயவர்கள் போல இன்றும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்!

யார் இந்த அழுக்கான தூயவர்கள்??? யார் இந்த வேடதாரிகள்???

மேலும் படியுங்கள் இந்த அடிமை வியாபாரத்தின் பால பாடங்களை!!!

The beginnings of black slavery can be traced to the request of a Christian bishop, the Catholic Bishop of Chiapa in Mexico, Bartoleme de las Casas. In 1517 Padre Las Casas (he was not yet a bishop then) implored the King of Spain, Charles V, to allow the import of African slaves into the continent. Charles granted the request, made ostensibly on humanitarian grounds. Thus began the infamous Asiento, an "import" license for slave trade to Spanish controlled America.

தொடரும்........
ரிஷபன்Meena சொன்னது…
நிஜத்தில் ஜாதி இருக்கிறதோ இல்லையோ இந்த வலைப்பூக்களில் அது ஜிவித்திருக்கிறது. எதற்கெடுத்தாலும் பார்ப்பான் பார்ப்பான் என்ற ஏசலில் முடியும் எழுத்துக்களை இங்கே தினசரி காணமுடியும்.

(நான் பிராமணன் அல்ல) அப்போதெல்லாம் யார்டா இந்த சண்டையை ஆரம்பிச்சு வச்சவன் என்று தோன்றும். அதை ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

சும்மா போகிற போக்கில் வாய்க்கு வந்ததை எழுதாமல் நல்லா தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். இது போல் எழுதுபவர்கள் வெகு சிலரே.

நான் ஆத்தீகன் இருந்தாலும் பதிவர் தருமியின் வாதங்கள் பிடிக்கும். அதில் வெற்றுக் கூச்சல் இருக்காது. அவருடைய கருத்துடன் ஒத்துப் போக முடியாவிட்டாலும் அவர் சொல்வதை குப்பை என்று ஒதுக்கித் தள்ள முடியாது என்பதாக இருக்கும். முதலில், மற்ற கடவுள் இல்லை ஆட்கள் போல்
கட் & பேஸ்ட் கொடுமை இருக்காது. எல்லாம் அவரே படித்து தெளிந்ததாகத்தான் இருக்கும்

அது போல் நண்பர் ‘நோ” வின் எழுத்தும். நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளவராக இருக்க வேண்டும். அவர் சொல்வதை எல்லாம் சும்மா ஒதுக்கித் தள்ளி விடமுடியாது.

பிராமணர்கள் 200 வருடங்களில் தான் முதன்மை பெற்றார்கள் என்பது என்னைப் பொறுத்தவரை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கிறது.

தற்கால பிராமணர்கள் எல்லோரும் நல்லவர்களும் அல்ல கெட்டவர்களும் அல்ல. மற்ற எந்த ஜாதியையும் போல நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்த சமுதாயம் தான்.

ஒருவருடைய குண நலன் அவரின் தனிப்பட்ட ஒழுக்கத்தை சார்ந்தது அதில் ஜாதிகள் செய்வதற்கு ஒன்றுமில்லை.
NO சொன்னது…
நண்பர் திரு ரிஷபன் மீனா,

புரிதலுக்கு நன்றி. முதல் நன்றி நண்பர் திரு நண்டு அவர்களுக்கு!

//நான் ஆத்தீகன் இருந்தாலும் பதிவர் தருமியின் வாதங்கள் பிடிக்கும். அதில் வெற்றுக் கூச்சல் இருக்காது. //
உண்மை. விவேகானந்தர் கூறியது - Atheists many a times are more sincere than the believers. Atleast they are firm in their beleifs. இது திரு தருமி போன்ற ஆழ்ந்த நாத்தீகர்களுக்கு பொருந்தும்! நாத்தீகம் பேச தகுதி மற்றும் அறிவு வேண்டும்! உளறினால் நாத்தீகம் வெறுக்கப்படும்! அதுதான் இங்கே நடக்கிறது! தருமி போன்ற வெகு சிலரே உண்மையான நாத்தீகர்கள்! அதாவது, அஜெண்டா இல்லாத அறிவாளிகள்! மத்த முக்கால்வாசி நபர்கள், ஆழ்ந்த மதப்பற்றாளர்கள் அல்லது
கம்யூனிச மத பற்றாளர்கள். இவர்களின் இலக்கு இந்து மதம் மட்டுமே! இந்து மதம் பேய் மதம், மற்றவைஎல்லாம் பகுத்தறிவு என்பதுதான் இவர்களின் நாத்தீகம்!

// தற்கால பிராமணர்கள் எல்லோரும் நல்லவர்களும் அல்ல கெட்டவர்களும் அல்ல. மற்ற எந்த ஜாதியையும் போல நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்த சமுதாயம் தான். //
You have got the point. அவ்வளவுதான் சமாசாரம்!

நான் சென்னையின் வரலாற்றை படித்துகொண்டிருக்கும் பொழுது (அதாவது Madras நகரம் எனப்படும் ஆங்கிலேயர்களின் கட்டமைப்பு) ஆளும் சூழ்நிலையிலும், பல விடயங்களை தீர்மானிக்கும் இடத்திலும் யார் யார் இருந்தார்கள் என்பதை புரிந்துகொண்டேன்!

Francis Day, விஜயநகர சாம்ராஜ்யத்திடம் இந்த இடத்திலிருந்து வியாபாரம் செய்யவும், குடியிருப்பு அமைக்கவும் முதல் அனுமதி வாங்கும்போழுதும் மற்றும் நகரம் உருவான சரித்திர நிகழ்வுகளிலும் யார் யாரின் பங்கு மற்றும் ஆளுமை இருந்தது என்பதை கவனாமாக படித்தால், ஜாதி என்பது என்ன வென்பது ஓரளவுக்கு புரியும்! வரலாற்று முக்கியத்துவும் வாய்ந்த அந்த நாட்களில், பலரின் பங்குடன் உருவாக்கப்பட்ட சரித்திர நிகழ்வுகளில், ஆதிக்கம் செய்ததாக சொல்லப்பட்ட பிராமணர்களின் பங்கு - ஒன்றும் இல்லை!! இதை என் சொல்லுகிறன் என்றால், முதல் கட்ட ஆங்கிலேயர்கள் வந்தவுடன்தான் சில விடயங்கள் கவனமாக எழுதி பாதுகாக்கப்பட்டது (இரண்டாம் கட்ட ஆங்கிலேயர்கள் எல்லாம் மிச்சினரிகள் மற்றும் மதம் மாற்ற வேண்டும் என்று வந்தவர்களே)! அப்படி எழுதப்பட்டதில் சற்றும் இல்லாதது பார்பனர்களின் ஆளுமைதான்! உலகில் உள்ள எல்லா சமுதாயங்களை போலவும்தான் இருந்தது இந்த சமுதாயமும்! அதாவது, ஆள்பவர்களை சார்ந்து, வணிகத்தை சார்ந்து மற்று நிலம் உள்ளவர்களை சார்ந்துதான்! ஜாதியின் பிடி என்பது மிக குறைவு! ஜாதி இருந்தாலும், சமூக வாழ்க்கையின் உயர்வையோ தாழ்வையோ அது determine செய்யவில்லை! அதையும் மற்றும் பல சரித்திர நிகழ்வுகளையும் படித்தால் கேட்க்கதொன்றுவது ஒன்றுதான் - "எங்கே பிராமணன்"???

நன்றி
பெயரில்லா சொன்னது…
YES!!! IF OUR RELIGION WILL DIMINISH OUR CULTURE WILL DESTROY!!! BE PROUD TO BE A HINDU!!!


.


.

.

தலைப்பு மட்டும் மாற்றப்பட்ட இது - ஒரு மீள்வு.
அசல் கட்டுரையை இங்கே சென்று பார்க்க 
 பார்பனர் திராவிடர் சண்டையை தோற்றுவித்த முதல்வர் ....


Download As PDF

10 கருத்துகள் :

P.S.Narayanan சொன்னது…

போப்பையரையும் (ஜி யு) கருணானந்த சரஸ்வதி சுவாமிகளையும் ஏன் விட்டு விட்டீர்கள்!

P.S.Narayanan சொன்னது…

கால்டுவெல்லை திட்டியவுடன் பிராமணப் போராளிகளுக்கு ஒரு டானிக் கிடைத்து விட்டது. வாழ்க இந்து மதம். வளர்க வர்ணாசிரம தர்மம். எப்போதும் நிலைத்திருக்க பீ அள்ளும் ஆன்மீகச் சேவை.

பேரரசர் அக்பரிடம் ராமாயணம் - மகாபாரதம் ஆகியவற்றை விளக்கினர் பண்டிதர்கள். இவ்வளவு நல்ல கருத்துக்கள் உள்ள காவியங்களை ஏன் மக்கள் மொழிகளில் கூற மறுக்கிறீர்கள் என்று கேட்டாராம் அக்பர். பண்டிதர்களின் பதில்: ''இவை தேவ பாஷையில் எழுதப் பட்டவை. மிலேச்ச பாஷைகளில் இவற்றை மொழி பெயர்க்க முடியாது''.

கால்டுவெல்லும் ஜி யு போப்பும்தான் ஆரியர் - திராவிடர் என்ற பிரிவினையை உருவாக்கினார்கள் என்றால் இந்தக் கேவலத்துக்கு யார் காரணம்? தமிழை தெலுங்கை மலையாளத்தை அவர்களா மிலேச்ச பாஷையாகினர்?

மத மாற்றத்துக்கு பிராமணீயத்தின் கடுமையான எதிப்பு இந்து மதம் அழிந்து விடும் என்ற பயத்தினாலல்ல. ''விதி வலியது'' என்ற சூத்திரம் ஒவ்வொரு இந்தியனையும் ஆட்டிப் படைக்கும் வரை எந்தக் கொம்பனாலும் இந்து மதத்தை ஒன்றும் செய்ய முடியாது. இந்து மதம் - பார்ப்பனீயம் - சமஸ்கிருதத்தின் இரும்புப் பிடி ஆகியவற்றை எதிர்த்த புத்தரையே ஏற்றுமதி செய்தவர்கள் நமது பண்டிதர்கள். பெரியாரும் அம்பேத்காரும் எம்மாத்திரம் இவர்களுக்கு!

இவை போதாதென்று இப்போது வீரமணி, முக, லாலு, பஸ்வான், முலாயம், மாயாவதி, மோதி போன்ற நவீன பார்ப்பனர்களை உருவாக்கி உள்ளனர் நமது பண்டிதர்கள்.

உலகில் எத்தனையோ கொடூரமான சித்தாந்தங்கள் வந்தன; இருந்தன சில காலம்; பின்பு காணாமல் போய்விட்டன. ஆனால் இந்த உலகம் உள்ளவரை இந்த மண்ணில் நிற்கப் போவது வர்ணாசிரம தர்மம் ஒன்று மட்டுமே. கத்தி இன்றி, ரத்தமின்றி, அமல் படுத்த எந்தத் துறையும் இன்றி பல நூறு ஆண்டுகளாக நிலைத்து ஆட்சி நடத்தும் ஒரே தத்துவம் இது மட்டுமே. Perfectly well-oiled machine. பிராமணீயத்தைக் குறைவாக எடை போடாதீர்கள்.

சிறிய சான்று: ''மனித மலத்தை மனிதன் அள்ளுவது ஒரு ஆன்மீகத் திருப்பணி. சமுதாயத்தை சுத்தமாக வைத்திருக்க வால்மீகிகளுக்கு (தலித்) கடவுள் வழங்கிய வெகுமதி இந்தப் பீ அள்ளும் வேலை. கோவிலை அந்தணர் சுத்தம் செய்வதும் பீ அள்ளுவதும் ஒரே மாதிரியான சேவைகளே,'' என்று கூறிய ஒரு சூத்திரன் மேல் இதுவரை யாரும் ஒரு வழக்குக் கூடப் பதிவு செய்யவில்லை. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது: இவரை இந்த நாட்டின் பிரதம அமைச்சராக்குவதே.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மிக அருமையான பதிவு! விவாதங்கள் களை கட்டுகின்றன! தொடர்ந்து வருகிறேன்! நன்றி!

Unknown சொன்னது…

விவாதம் சூடு பறக்கிறது ,தொடருங்கள் பல விஷயங்களை நானும் அறிய உதவும் !
த ம 2

முத்துசாமிப் பேரன் சொன்னது…

யாருடைய சூழ்ச்சியோ அதான் பிரிந்து விட்டோமே ஜீ... இனி இருப்பவர்களும் பிரிந்து போகாமல் செய்வது தானே இன்றைய காலத்தின் கட்டாயம்.

பொன் மாலை பொழுது சொன்னது…

கால்டு வேல், ஜி..யு . போப் மற்றும் "வீரமா முனிவர் " போன்ற பிற நாட்டினர்களின் தமிழ் நாட்டு வருகையின் முழு முதல் நோக்கமே கிருத்துவ மிஷினரிகளின் வாயிலாக மத மாற்றமே அன்றி வேறில்லை. இங்கு இந்தியாவில் மட்டுமல்ல, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அணைத்து நாட்டு மக்களிடத்திலும் அயல் நாட்டு கிருத்துவ மெஷினரிகள் சென்றது மத பிரச்சாரம் செய்வதற்கே அன்றி வேறு எதற்கு அங்கு சென்றனர் நாடு பிடிப்பவர்களின் கூடவே?

மேல் சொன்ன மூவருமே தமிழில் தங்களை பண்டிதர்களாக ஆக்கிக்கொண்டனர், காரணம் மிக எளிதாக சமுதாய மக்களிடம் தங்களின் கருத்துக்களை கொண்டு சென்று நிலை நிறுத்தவே.
அன்றைய ஆங்கில ஆட்சியார்களின் அனுசரணையுடன் மிக எளிதாக இவைகளை எதிர்ப்பின்றி செய்யமுடிந்தது.

இந்த கருத்துகளை சொல்லவேண்டுமெனில் சொல்பவர்கள் ஆர். எஸ். எஸ். முகமூடி போட்டுக்கொள்ள வேண்டுவதில்லை.


இணையத்தில் இப்படித்தான் நிறைய "நட்ட நடு செண்டர் " காரர்கள் நிறைய உள்ளனர் - சிக்குலரிச்டுகள் !!!!

சார்வாகன் சொன்னது…

நண்பர் நண்டு,

கால்ட்வெல் ஒரு மத மாற்ற பிரச்சாரகர் ஆக இருந்து இருக்கலாம்.கிறித்தவ மதமும் இந்து மதம் போல் மக்களை சிலர்(மத குரு+மன்னன்) ஏமாற்றிப் பிழைக்கும் வழியே.எப்படி வேதங்கள் புருடாவோ,அதே போல் பைபிளும் புருடாதான். யூதனை மேன்மைப் படுத்துவது பைபிள், பிராமணனை மேன்மைப் படுத்துவது வேதம். இன்றும் தீட்சிதர் தவிர எவரும் சிதம்பரம் கோயிலில் அர்ச்சகர் ஆக நுழைய முடியவில்லை என்பது பார்ப்பனீய அரசியலின் செல்வாக்கை காட்டுகிறது.நீதி மன்றமும் வளைந்து கொடுக்கிறது.ம்ம்ம்ம்ம்ம்!!

1) ஆனால் தமிழ் மொழிக் குடும்பம், இந்தோ ஐரோப்பிய மொழியான சம்ஸ்கிருத மொழிக் குடும்பத்தில் இருந்து மாறுபட்டது என்பதே இப்போதைய ஆய்வுகளின் கருத்து.

இதற்கு மாற்றான ஆய்வுக் கட்டுரைகளை தாங்கள் முன் வைக்கலாம்.

2).பரிணாமம் உண்மை எனில், மனிதன்(ஹோமோ சேஃபியன்)கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றி உலக முழுதும் பரவினான் எனில், கருப்பின மக்களுகு நெருங்கிய திராவிட மக்கள் இந்தியாவிற்கு முதலிலும், ஐரோப்பியருக்கு நெருங்கிய ஆரிய மக்க்ள் பிறகு வந்தனர் என்பதே ஆய்வுலகின் ஏற்கப்பட்ட கருத்து.

மரபணு ஆய்வுகளும் இதனை வலியுறுத்துகின்றன.

இதற்கும் மாற்றான ஆய்வுக் கட்டுரைகளை முன் வைக்கலாம்.

இது தொடர்பான நம் பதிவு.
http://aatralarasau.blogspot.com/2014/03/blog-post.html

ஆரியர், திராவிடர் பிரிவு உண்மை,ஆனால் அது இக்காலத்தில் அரசியல் செய்ய தேவையற்றது என்பதுதான் உண்மை.
ஆங்கிலேயர் (, முஸ்லீம்கள்) வருகை முன் இந்தியா சமதர்ம பூமியாக, இருந்தது என்பது பொய்.

ஒரு நாட்டில் பொருளாதர சிக்கல் என்றால் ,அடுத்த நாட்டைக் கொள்ளை அடித்து ,தன் கஜானாவை நிரப்புவான் அரசன். அதில் கோயில் கட்டி மத குருக்களுக்கு கொடுத்து ,மீதியை கொஞ்சம் மக்களுக்கு கொடுப்பவன் சிறந்த அரசன் ஆகி விடுவான்.

அரசர்கள் பார்ப்பனர்களுக்கு நிலங்களைக் கொடையாகத் தரும்பொழுது தம் பெயர் விளங்கத் தம் பெயருடன் "சதுர்வேதி மங்கலம்" என்பதனை இணைத்துப் பெயர் சூட்டி ஊரமைத்துத் தந்திருக்கின்றனர்.[27]

அர்த்த சாஸ்திரம், மனுதர்மம் இரண்டும் அக்கால அரசியலை படம் பிடித்துக் காட்டுகின்றன."

நன்றி

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கால்டுவெல் அவர்களின் ஒப்பிலக்கணம் மொழிகளைப் பற்றிய ஓர் ஆய்வு ஏடு, தமிழின் பெருமையினை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய ஓர் அற்புத நூல்.
ஓரு அறிஞனை ஆராய முதலில் நாம் அறிஞராய் உயர வேண்டும்,
அதுவும் விருப்பு வெறுப்பு அற்ற அறிஞராய் உயர்ந்து, பின் ஆராய வேண்டும்.
அனைத்தையுமே சந்தேகப்படுவதில் தவறில்லை,
ஆனால் உண்மை என்னும் உரைகல் கொண்டு
உரைத்துப் பார்க்க வேண்டும்
தங்களின் கருத்தில் மாறுபாடுகிறேன் நண்பரே

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ம்... தொடர்கிறேன்...

Unknown சொன்னது…

இந்துக்களிடமிருந்த சில தவறுகளை மற்ற மதத்தினர் பயன்படுத்திக்கொண்டர்கள் என்பதே உண்மை. முக்கியமாக மக்களுக்குத் தேவை கோயில்கள் அல்ல கல்வியும் மருத்துவ வசதியும்தான் என்பது போன்று. அதைச்செய்வதற்கு அவர்களுக்குப் போதிய அளவு பண உதவியும் வெளியிலிருந்து கிடைத்தது.
இவ்வளவு பேசப்படும் மதர் தெரஸா மதச் சார்பற்றவராக இல்லை. ஆனாலும் பலரும் அவரைப் புகழ்ந்து தள்ளுகிறோம். அதுதான் இந்துக்களின் பலமும் பலவீனமும்.

எனக்கென்னவோ மற்ற மதத்தினர் இடஒதுக்கீடு கேட்கத் தொடங்கிய பிறகுதான் பார்ப்பனீயம் பெருமளவு பேசப்படுகிறது என்று தோன்றுகிறது.

கோபாலன்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "