புதன், 6 ஜனவரி, 2010

யார் சிறந்த சிந்தனையாளர் -பெரியாரா ? திருவள்ளுவரா ?

.

நொரண்டு :

யார்
சிறந்த சிந்தனையாளர் -
பெரியாரா ?
திருவள்ளுவரா ?

நண்டு: ஏன் கேட்கின்றாய் ?

நொரண்டு :
என் பிரண்டு கேக்கச்சென்னான் .

நண்டு:
அப்போ
உனக்குத் தேவையில்லாத பதிலுக்கான கேள்வியை கேட்கிற .

நொரண்டு : ம் ....

நண்டு:
இப்படி
தேவையில்லாதகேள்விகள்,
அதற்கு தேவையில்லாத பதில்கள் .
இதைவைத்தே ஓட்டும் கூட்டத்தில் இருப்பதில் உனக்கு மகிழ்ச்சி .
இப்படிப்பட்ட நிலைகளை
இன்று எங்கும் காண முடிகிறது. இது ஒரு வகையான மூடப்பழக்கமே .

நொரண்டு :
பதிலச்செல்லத்தெரியாதவனின் மேடை கோணலாக எடுத்துக்களாமா .

நண்டு:
அதப்பத்தி எனக்கு கவலையில்லை .

நொரண்டு :
சரி ,
நான் கேக்கரேன் , சிந்தனையாளர்னா
வரைமுறை எது ,என்ன ?

நண்டு:
அப்படி வரைமுறைப்படுத்த முடியாது .
இருந்தாலும் தோராயமாகச்சொல்ல்லாம் , ஒருவருடைய கருத்து
மக்களை நல்லவழியில்
கொண்டு சென்றதானால்
அவர் சிந்தனையாளர் .

நொரண்டு :
சரி ,
நான் கேக்கரேன் ,
உன் கருத்துப்படியே இப்ப சொல் யார்
சிறந்த சிந்தனையாளர்-
பெரியாரா ? திருவள்ளுவரா ?

நண்டு:
திருவள்ளுவர் எழுதிய குறள் ஒன்றை சொல்ரேன் கேள் .

நொரண்டு :ம் ...

நண்டு:
''கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். ''

நொரண்டு : சரி ,கருத்துரை

நண்டு:
கல்வி கற்றதனால் ஆகக்கூடிய பயன் எதுவாக இருக்குமெனில் .
அரசன் ,
ஆண்டவன் என தொழாமல் இருப்பதுவே .

நொரண்டு :
இன்னும் சரியாக சொல் .

நண்டு:
கல்வி சுயமரியாதையுடன் வாழ வழிவகுக்கும் படியாக இருக்கவேண்டும். இல்லையெனில்
கற்றதனால் பயன் எதுவும் இல்லை என்பது .

நொரண்டு :
இத திருவள்ளுவர் கி.பி.2500க்கு முன்னே செல்லிச்சென்றுள்ளார் .

நண்டு:
ஆம் ,
அதுவும்
இது 2வதா தொகுத்துள்ளனர் .

முதல் குறள்
எழுத்தையும் ,
இரண்டாவது குறள்
எழுத்தினால் வளரும் கல்வியையும் பற்றி கூறியதிலிருந்து
என்ன ஒரு அழகான திட்டமி்டல். என்னோ திருவள்ளுவரின் சமூக அக்கரை .

நொரண்டு :மதிக்கக்கூடியதே .

நண்டு:
இப்படிப்பட்ட குறளை
எனக்கு கொடுத்தவர்
தந்தை பெரியார் .


நொரண்டு :ஓ...

நண்டு:
இப்பொழுது
நீ சொல்
யார் சிறந்த சிந்தனையாளர்- பெரியாரா? திருவள்ளுவரா? .

நொரண்டு :ம் ....

நண்டு:
ஆனால் ஒன்று .
நான் இதனை
பயின்ற இடம் வேறு .

நொரண்டு :
குழப்பாத
பெரியார் பாசறையில் இல்லையா.
அங்க
இத சொல்லித்தரதில்லையா,
அப்புரம் எங்க கத்துக்கிட்ட .


.......

வள்ளுவர் -
அறியப்படவேண்டிய உண்மைகள்-4

...தொடரும் .


.

.


.


.


.

.

Download As PDF

3 கருத்துகள் :

thenammailakshmanan சொன்னது…

fine nandu and norandu

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி

தங்களின் வருகைக்கும்
பின்னுட்டத்திற்கும்
நன்றி
thenammailakshmanan
அவர்களே

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

வலைச்சரம் கும்மாச்சி மூலமாக தங்களின் பதிவுகளைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "