ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

மத உணர்வுகளை அவமதித்தலும் இந்திய தண்டனை சட்டமும் -2




















சமயச் சுதந்திரம் என்பது எந்த ஒரு சமயம் தொடர்பாக நம்பிக்கைகளை வைத்திருப்பதற்கு, வழிபடுவதற்கு, சடங்குகளை நடத்துவதற்கு ஆன சுதந்திரம் ஆகும்.

சர்வதேச மனித உரிமை சாசனம்
உறுப்புரை 29
ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்
1. எந்த ஒரு சமூகத்தினுள் மாத்திரமே தத்தமது ஆளுமையின் கட்டற்ற பூரணமான வளர்ச்சி சாத்தியமாகவிருக்குமோ அந்தச் சமூகத்தின்பால் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு.
2. ஒவ்வொருவரும் அவரது உரிமைகளையும் சுதந்திரங்களையும் பிரயோகிக்கும் பொழுது இன்னொருவரின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்குமுரிய அங்கீகாரத்தையும் மதி்ப்பையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துக்காகவும், சனநாயக சமுதாயமொன்றின் ஒழுக்கசீலம், பொது மக்கள் ஒழுங்கமைதி, பொது சேமநலன் என்பவற்றுக்கு நீதியான முறையில் தேவைப்படக் கூடியவற்றை ஏற்படுத்தல் வேண்டுமெனும் நோக்கத்துக்காகவும் மட்டுமே சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் வரையறைகளுக்கு மாத்திரமே கட்டுப்படுவராயாமைதல் வேண்டும்.
3. இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் முரணாக எவ்விடத்திலேனும் பிரயோகிப்படலாகாது என்கிறது .

இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 295-A: வாய்மொழியிலான அல்லது எழுத்தாலான சொற்களால்,அல்லது சைகைகளால் ,அல்லது தெரியக்கூடிய உருவ அமைப்புகளால் ,இல்லது வேறுவிதமாக இந்தியக் குடிமக்களின் ஒரு வகுப்பினரின் மத உணர்வுகளைத் திடுக்கிடும் வகையில் புண்படுத்தும் பொருட்டு,வேண்டுமென்றே குரோதமான கருத்துடன் ,அந்த வகுப்பினரின் மதத்தையோ அல்லது மத நம்பிக்கைகளையோ நிந்திக்கிற அல்லது நிந்திக்க முயலுகிற எவரொருவருக்கும் 3 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும் .

இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 298 :ஒருவருடைய மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தும் கருத்துடன் ,அவரின் காதில்படும்படி ஒரு சொல்லை உபயோகித்தாலும் அல்லது ஒலியை உண்டாக்கினாலும் அல்லது அவர் பார்க்குப்படியாக சைகை காட்டினாலும் அவர் கண்முன் ஒரு பொருளை வைத்தாலும் குற்றமாகும் . அப்படிச் செய்கிற எவரொருவருக்கும் ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும் என கூறுகிறது .










கருத்துரிமையும் தண்டனையும் -3.
தொடரும் ...





.




.



. Download As PDF

7 கருத்துகள் :

cheena (சீனா) சொன்னது…

தொடருக்கு நன்றி நண்டு

நல்லதொரு இடுகை - தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.

நன்று நன்று

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

பீர் | Peer சொன்னது…

தொடர்க... வாழ்த்துக்கள்.

http://rkguru.blogspot.com/ சொன்னது…

rommba mukkiyam......

ரோகிணிசிவா சொன்னது…

getting to know things, but how far practically its practiced?:(

சௌந்தர் சொன்னது…

எனக்கு தெரியாத தகவல் நன்றி தொடருங்கள்....

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
cheena (சீனா)@
பீர் | Peer @
rk guru @
ரோகிணிசிவா@
சௌந்தர்
அவர்களே ,
மிக்க நன்றி .

mohamedali jinnah சொன்னது…

ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்
கட்டுரை நல்லா இருக்கு.அருமை.
Your liberty should not curtail others`liberty

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "