திங்கள், 19 மே, 2014

ஓட்டுக்கு 200 ரூபாயும் 144ம் தமிழக பாஜகா கூட்டணிக்கு தோல்வியும் ஏன்?




நொரண்டு :வணக்கம் நண்டு

நண்டு : வாங்க நொரண்டு

நொரண்டு :ம் ...தேர்தல் முடிவுகள்.

நண்டு : எதிர்பார்த்த ஒன்னு தானே.

நொரண்டு :ஆமாம் ,ஆனால் எனக்கு சரியா ,விளங்கும்படி வெற்றி ,
தோல்விக்காண காரணத்த சொல்லு .

நண்டு : சொன்னா விழங்கிடும் வெளங்கி.

நொரண்டு :சும்மா சொல்லுப்பா.

நண்டு :  சும்மா ,சும்மா ,சொல்லி என்ன பிரயோசனம்.

நொரண்டு :சொல்லுப்பா.

நண்டு :மோடி அலையை தமிழகத்தில் தடுத்து நிறுத்திய  நீலகிரி மலை.
20 சதவீதம் மோடி அலையை தடுத்தது இது தான்.

நொரண்டு : ம்...

நண்டு :  ரஜினி,விஜய் போன்ற பிரபலங்களை மோடி சந்தித்ததும் ,அதில் ஒரு வாய்ஸை மக்கள் எதிர்பார்த்தும் , வாய்ஸ் இல்லாத்தால் ,மக்கள் .ஓ ,அம்மா தான்  ஜெயிக்பாங்க போல, அதனல தான் இவங்க வாய்ஸ் கொடுக்க மாட்டேங்கராங்க போல ,என்ற ஒரு உளவியல் ஓட்டம் தமிழக மக்களிடையே ஏற்பட்டது.இது  25 சதவீத மோடி அலையை மேலும் வீழ்த்தியது. விஜயகாந்தின் மீது மக்கள் வைத்திருந்த இமேஜை இந்த சந்திப்பு 30 சதவீதம் சரித்தது .இந்நிகழ்வு  நடந்திருக்கவே கூடாது.தமிழக மக்களின் எண்ணத்தை புரிந்துகொள்ளாத சந்திப்புகள் என்பதை இது காட்டுகிறது. 

நொரண்டு : ஓஓஓஓஓஓ.......

நண்டு :வைகோ வின் அழகிரி சந்திப்பும் இத்தகைய பலனையே அவருக்கு தந்துள்ளது.

நொரண்டு :ம்....

நண்டு :யார் ஜெயிச்சாலும் மோடிக்குத்தான் ஆதரவு என்ற பொதுக்கருத்து ஓட்டம்,15 சதவீத மோடி அலையை பிரித்தது.

நொரண்டு :ம் ... 

நண்டு ;  மேலும்,கட்சிகளுக்குள்ளே ஒற்றுமையில்லை.

நொரண்டு :ம்...

நண்டு : கூட்டணித்தலைவர்கள் ஒற்றுமையுடன் ஒன்றாக பிரச்சாரம் செய்யாமை.

நொரண்டு :ம்...

நண்டு : புதுச்சேரி பிரச்சனை.

நொரண்டு :ம்...

நண்டு : இரண்டாவது அதிமுக போன்று செயல்பட்ட தன்மை.

நொரண்டு :ம்...

நண்டு :அதிமுகவின்  தயவு என்றும் தேவை என்ற கருத்தோட்டம்.

நொரண்டு :ம்...

நண்டு : பாஜகாவினை மக்களிடையே தாமதமாக கொண்டுசென்றது.

நொரண்டு :ம்...

நண்டு : ஊடகங்களை சரியாக பயன்படுத்தாமை,ஊடக மக்களையும் சரியாக பயன்படுத்தாமை. 

நொரண்டு :ம்...

 நண்டு : மகத்தான வெற்றிக்கூட்டணி ,ஆனால் மகத்தான உள்குத்துகள்.

நொரண்டு :144 பற்றி.

நண்டு :  சரியான செயல் .இது இல்லையெனில்,தமிழகம் அமைதியை இழந்திருக்கும்.

நொரண்டு : ஓட்டுக்கு 200 ரூபாய்...

நண்டு :அதில்  எனக்கு நம்பிக்கையும் இல்லை ,அதனால் தான் அதிமுக வென்றது என்பதுவும் உண்மையில்லை, உண்மையில் தங்களின் தோல்வியை  மறைக்க கட்சிகள் போடும் வெற்று கூச்சல்களே தவிர வேறு ஒன்றும் இல்லை.அதிமுகவின் வெற்றியில் பாடம் கற்காமல் ,அதன் வெற்றியை விமர்சிப்பதில் கவனம் செலுத்தி ,தங்களின் தவறுகளை கண்டடைவதில் தோல்வியை தழுவியும்,மக்களையும் குழப்பி,ஏமாற்றும் , FRAUD செயல் அவ்வளவே.இதில் பலன் ஏதும் இல்லை.கட்சி தலைமையை ஏமாற்றலாம்.அவ்வளவே.

நொரண்டு :ம் ....

நண்டு : இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதில் ரகசியங்களும்  நிறைய உண்டு.


நொரண்டு :சொல்லவேண்டியது தானே .


நண்டு : இது பற்றி  கட்சி தலைமைகள் கேட்டால் மட்டுமே உரிய பதில் சொல்லுவேன்.

நொரண்டு :ஏன் ?

நண்டு :உனது அறிவை நான் வலைப்பதிவை ஆரம்பித்த நாளிலிருந்து தெரிந்து வருவதால் ,உன் கிட்ட சொல்லி ஒரு பயனுமில்லை.

நொரண்டு :கடைசியா என்ன சொல்ல வர்ர

  நண்டு : இந்த தேர்தலில் விஜயகாந்த் மற்றும் அவரது கட்சியினர் மற்றும் மோடி ஆகியோர் மட்டுமே  தமிழகத்தில் பாஜகா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற உண்மையான அற்பணிப்புடன் செயல்பட்டனர் என்பதுவே உண்மை.இதற்காக விஜயகாந்த் மற்றும்  அவரது  மனைவி அவர்களை பாராட்டியே அகவேண்டும்.

  நொரண்டு :ம்....

நண்டு : தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவில் மிக அதிக மாற்றம் வேண்டும்.

நொரண்டு :சரி

நண்டு :தேமுதிகவிற்கு தோல்வியில்லை,ஏமாற்றம்  மட்டுமே.பாடம் கற்க வேண்டும் இன்னும்.

நொரண்டு :சரி.

நண்டு :அதிமுகவிற்கு மிக அதிக பொறுப்புகளை மக்கள் அளித்துள்ளனர்.அதனை அவர்கள் நிறைவேற்றவேண்டும்.

நொரண்டு :சரி.

நண்டு :  திமுக தன்னை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.


நொரண்டு : காங்கிரஸ் ...

நண்டு : நான் தற்போது விடைபெறுகிறேன்.

நொரண்டு :ம்...வா.


படங்கள் உதவி நன்றி கூகுள் மற்றும் இணையம்.
Download As PDF

7 கருத்துகள் :

பொன் மாலை பொழுது சொன்னது…

தமிழ் நாட்டு ப.ஜ.க. கூட்டணியினர் நிறையவே சொதப்பிவிட்டனர். வை.கோ. வின் அழகிரி சந்திப்பு, மோடியின் ரஜினி,விஜய் சந்திப்புக்களை தேவை இல்லாமல் செய்து காட்டினர். ஆயரம் நொட்டைகள் சொன்னாலும் விஜய காந்த் தம்பதியினர் உண்மையாக உழைத்தும் பலன் இல்லை.

Unknown சொன்னது…

சிந்திக்க வைத்தது உங்கள் கருத்துக்கள் !
த ம 2

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எல்லா "வேண்டும்"களும் நிறைவேற வேண்டும்... ம்...

தனிமரம் சொன்னது…

நீங்கள் சொல்வது சரி!

KILLERGEE Devakottai சொன்னது…

நல்லாவே கணிக்கிறீங்க........ ம்
Killergee
www.killergee.blogspot.com

கும்மாச்சி சொன்னது…

நன்றாகவே அலசியிருக்கீர்கள்.

கே.முருகபூபதி இலக்கியவட்டம் சொன்னது…

துல்லியமான ஆய்வு

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "