வியாழன், 7 ஜனவரி, 2010

கஞ்சன் பெரியாரும் 1000 பொற்காசுகளும்

.


நொரண்டு :

கஞ்சன் பெரியார்
உன் குறலுக்கு 1000 பொற்காசுகளும்...


நண்டு: என்ன உளர


நொரண்டு :

சொல்லவர்ரத சொல்லவிடு முதல

நண்டு: சரி சொல்லு .


நொரண்டு :

அட ,
தந்தைப்பெரியார்
இப்போ இருந்தார்னா
உன் குறலுரைகள்
பகுத்தறிவை
வளமைசெய்யுதுனு ...


நண்டு: வளமைசெய்யுதுனு ...


நொரண்டு :

அதான்
சொல்லறேன்ல
சொல்லவந்ததை
சொல்லவிடு முதல


நண்டு: சரி


நொரண்டு :

உனது
ஒவ்வொரு குறலுரைக்கும
1000 பொற்காசு்கள்
அறிவித்திருப்பார் .


நண்டு:

அது என்ன
கஞ்சன் பெரியார்


நொரண்டு :

அவரை அப்படித்தான்
அவரின் சீடர்கள் சிலர்
சொல்றாங்க .


நண்டு:

அப்படிப்பட்ட கஞ்சன்
எப்படி
1000 பொற்காசு்கள்
தருவாருனு சொல்ர


நொரண்டு :

மனிதனை
மனிதனாக்கும் பகுத்தறிவை ,
பகுத்தறிவுடன்
பரப்பும்
ஒவ்வொரு முயற்சிக்கும்
பெரியார்
தனது செல்வம் அனைத்தையும்
தாராளமகக் கொடுக்கக்கூடியவர் .
அதுமட்டுமல்ல
அவர் இருந்திருந்தால்
உனது உரையை தானே
தனது செலவில் பதித்து ,
தானே ஊர் ஊராக ,
வீதி வீதியாக
எடுத்துச்சென்று
இலவசமாக தந்திருப்பார் .
அப்படி
மனிதன்
பகுத்தறிவு பெறவேண்டும்
என்பதில்
அவ்வளவு
அளவுகடந்த அவா .


நண்டு:

எனக்கு சரியா செல்லு .


நொரண்டு :

பெரியார் புரிந்து கொள்ளப்படவேண்டிய
புதிர் .

நண்டு:

திருவள்ளுவர் மாதிரினு
சொல்லவர்ர


நொரண்டு :

ஆம் .

நண்டு:

நான் ஒன்னும்
பகுத்தறிவுக்கருத்துக்களை
பரப்பவில்லையே ,
திருவள்ளுவர்
என்ன எழுதினாரோ
அதத்தானே சொல்லரேன்

நொரண்டு :

அட ,நண்டு
திருக்குறளுக்கு
மாநாடு
நடத்தியவர் பெரியார் .
உன்னைப்பார்த்தா
என்ன சொல்லுவார்
தெரியுமா ?


நண்டு: என்ன சொல்லுவார் ?


நொரண்டு :

வாங்க நண்டு ,வாங்க ,
ரொம்ப நல்லது செஞ்ச ,
இத்தனை நாளா
இருந்த வெங்காயங்க
திருவள்ளுவரை
தப்பாவே சொல்லிப்புட்டானுங்க ,
திருவள்ளுவர் என்ன செய்வார் ,
நீ எழுது ,
நான் உன்
ஒவ்வொரு குறளுரைக்கும்
1000 பொற்காசு்க தரேன் .
தமிழனின் அடையாளத்தை
மறைக்கறதே
அவனுகளுக்கு வேலையாபோச்சு .
என்ன அநியாயம் ,
என்னாமா போட்டு
மறச்சுட்டானுக ....
இத நானே வெளியிட்டு
இலவசமா கொடுக்கலாமுனு
இருக்கேன் ...

அப்படினி சொல்லுவார்

நண்டு:

ஓ ,
மலர்மிசை ஏகினான் போல்

நொரண்டு :

அது என்ன
மலர்மிசை ஏகினான்

நண்டு:

''மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.''


நொரண்டு : கருத்து


நண்டு:

நல்ல ஆசிரியரை பொற்றவர்கள்
உலகம் போற்ற
நீடுவாழ்வர் .

நொரண்டு : புரியல

நண்டு:

உனக்கு எப்பத்தான் ,
எதுதான்
புரிஞ்சிருக்கு .


நொரண்டு :

சரி ,
புரியும் படி சொல்லு.


நண்டு:

மலர்கள் தங்களின் மணத்தினை
எவ்வாறு மிச்சம் மீதி வைக்காமல்,
அதில் ஒளிவு எதுவும் இல்லாமல் ,
அப்படியே பரப்புகின்றதே
அதைப்போல
தான் கற்றது அனைத்தையும்
கற்றுத்தருபவனை .
அந்த நல்ல ஆசிரியனை
''மலர்மிசை ஏகினான் ''என்றார் .
ன்- குணத்தினால் வந்தது.
.

''மாணடி சேர்ந்தார்''
அப்படிப்பட்ட
மாண்புமிகு நல்ல ஆசிரியரிடம்
மாணவராக சேர்ந்தவர் எனக்கொள்க .
ர்- கற்பதனால் வந்தது.

அடி-ஆசிரியர் .

''நிலமிசை ''
உலகம் முழுதும் புகழ் பரவி .

இப்ப புரிந்ததா ..


நொரண்டு :ஓ

நண்டு:

பெரியார்
ஒழிவு மறைவு அற்றவர் ''மலர்மிசை ஏகினான் ''

நொரண்டு :

சரிதான் ,
உண்மையில்
அவரிருந்தால்
1000 என்ன ...


நண்டு:

இதா
இந்த பில்டப்பு எதுக்கு .


நொரண்டு :

நான் எதுக்கு பில்டப்பு கொடுக்கனும் .

நண்டு:

பெரியாரை விட்டா
ஆளே யில்லையா?

நொரண்டு :

ஏன் ஆள் சேத்தர ,
நீ என்ன போருக்கா போர ...


.....

வள்ளுவர்
அறியப்படவேண்டியஉண்மைகள் -5.

தொடரும் ...


.


.

.

Download As PDF

7 கருத்துகள் :

சிவாஜி சொன்னது…

குறள் விளக்கம் அருமை!

Anonymous சொன்னது…

ANNAaaaaaaa!
please write the article without spelling mistake.Have you had a good sleep ???And by the '"TOPIC"" YOU ARE INVITING TROUBLES >>>NANDU doing good Norandu works>>>>vimalavidya

வெற்றி சொன்னது…

interesting one!

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
சிவாஜி
அவர்களே .

தங்களின்
வருகைக்கும்
பின்னூட்டத்திற்கும்
நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும்
பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
வெற்றி
அவர்களே .
நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

//please write the article without spelling mistake.//
சரி ,
எப்படியும் தெரியாமல் நடந்துவிடுகிறது .


//Have you had a good sleep ???//
உண்மை.
உண்மைதான் .


//'"TOPIC"" YOU ARE INVITING TROUBLES//

இங்கு அப்படிப்பட்ட நிலையில்லைனு
நினைக்கிறேன் .

ஏன்னா
யாருக்கும்
எதப்பத்தியும்
தெரியாது .


இங்க பிரச்சனை பண்ண
முதலில்
திருக்குறள் படிக்கனும் ,
பெரியாரை படிக்கனும் ,
அப்புறமாத்தானே
பிரச்சனைக்கு வரமுடியும் .


எல்லாத்துக்கும்
ஆதாயமாக
ஏதோ
அரசியல் போன்று
கொஞ்சம்
பேர்வர்ரமாதிரி
முளைய பயன்படுத்தாத
விசயமாக
இருந்தா மட்டுமே
பிரச்சனை பண்ணுவாங்க .


//NANDU doing good Norandu works//
நன்றி .

தங்களின்
வருகைக்கும்
பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
vimalavidya
அவர்களே .

நன்றி .

Anonymous சொன்னது…

check out the new free [url=http://www.casinolasvegass.com]casino games[/url] at the all new www.casinolasvegass.com, the most trusted [url=http://www.casinolasvegass.com]online casino[/url] on the web! enjoy our [url=http://www.casinolasvegass.com/download.html]free casino software download[/url] and win money.
you can also check other [url=http://sites.google.com/site/onlinecasinogames2010/]online casinos[/url] and [url=http://www.bayareacorkboard.com/]poker rooms[/url] at this [url=http://www.buy-cheap-computers.info/]online casino[/url] sites with 100's of [url=http://www.place-a-bet.net/]free casino games[/url].

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "