சனி, 27 மார்ச், 2010

வெள்ளிக்கம்பியின் முடிவிலிபோர் - புனைவு

.



.



எங்கும் மூக்கு வைத்து எதுவும் கிடைக்காமல்,கொட்டிக்கிடக்கும் காலாவதி போலி மருந்து கசிவின் கழிவுகளில் அசிங்கப்படுத்திய மூக்கினை நொந்தபடி காலிடப்பாக்களை உருட்டிய பலத்தில், பயத்தில் பறந்தமர்ந்த மொட்டை மதிலில் பூனை மஞ்சள் பட்டுப்பூச்சிகள் பறந்து திரிவும் செடிகளுடே இடித்துச்சென்றது மூக்கிலிருக்கும் அத்துகள்களுடன். எங்கிருந்தோ வந்த ஆக்ஸைடின் நாற்றத்தில் தனது இறக்கைகளை பரப்பி இம்சித்துக் கொண்டது ; பல்லாயிரக்கணக்கான தாக்குதல்களை கொடுக்கும் சிறுசிறு கம்பிகளை வயிற்றில் ஆயிரக்கணக்கில் கட்டி வைத்திருத்தல் மிகவும் கடினம் என்பதால் எப்படியாவது அவற்றை அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்.

போர், போர் தீரான மாயப்போர், காலச் சக்கரம் சுலன்றது. தன்னையும் விடாமல், போரையும் விடாமல், ஒன்றை ஒன்று ஒட்டி வைத்து வெட்டப்பட்ட இணைப்பு இடம் மட்டும் வெள்ளைக்காயம் வெள்ளிக் கம்பியாக மாறி , போர் தொடங்கி ,வெள்ளிக் கம்பி ஒளியுடன் உலகெங்கும் வீச, அத்தனை ஜீவ ராசிகளும் பரிதவிக்க ஓட ஓட பிரட்டியடிக்கும் அம் மாய ஒளி. எங்கும் செல்ல வைக்கும், எதைப் பற்றியும் சிந்திக்கவைக்காமல் எதையும் செய்ய வைக்கும். பனியினுடே பளபளக்கும் பொருள் தேடி, நதியினுடே மின்னிச் செல்லும் மஞ்சள் பார்த்து, நிலத்தினுடே நிலம் பிளந்து, கபாலம் உடைந்து, ஒன்றைக்கொன்று ஒன்பதாக்கி ஒன்பதையும் விடாமல் ஒன்றுமில்லாதாக்கி மீண்டும் ஒன்று பெற்று .தொடரரும், தொடரும், தொட்டுத் தொட்டு தொடரும் வெள்ளிக் கம்பியின் அதிகாரம்.

ஒரே ஓங்காரம், ஓலம், அவலம், இருந்தாலும் போரினின்று தப்பி எங்காவது சற்று நிம்மதி கிடைக்கினறதா. மலையேறி ஆதங்கம் கொண்டவனின் அடிவருடியது வெள்ளிக்கம்பி,அதை உணராமல் சிலாகித்தவன் காலில் வெள்ளிக்கம்பி வெம்மையுற்றது. எங்கும் வெம்மை. குளிர்தாண்டி வெம்மையின் வேதனை
மண்டையைப் பிளக்க. தொப்புளைத் தொட்ட குதிரைப்படை நாற்புறம் ஓடி எங்கும் பரவியது. சிறுக சிறுக குதிரையின் வேகம் உத்வேகம் பெற்று உடலெல்லாம் பரவி குதிரையின் ஓட்டத்திற்கு ஆட்பட வைத்தது. காடு, மேடு, பள்ளத்தாக்கு, பனி, நதி கடந்து நிலத்தினில் குதிரை எங்கும் வெல்வாலம் பிடித்து அலைந்து கொண்டிருந்தது. ஓடி வந்த குதிரையினின்று எங்கோ வெள்ளிக் கம்பி நிலத்தினில் விழுந்துவிட அங்கே நிற்கும்படி ஆகிவிட்டது அவனுக்கு.

திடுமென முலைத்த மின்னலை தலையில் பதித்து வெள்ளிக் கம்பியை அழித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தன்னுடல் தேய்த்து பல உயிர்களை பார்த்து ஆணையிட்டு, ஆண்டு அடங்கி வெள்ளிக்கம்பியின் ஒரு துரும்பைக் கண்டு சமாதானம் கொண்டு, மீண்டும், மீண்டும் கபாலம், சதை ,எழும்பு, இயக்கம், ஓட்டம் துரத்தல் என அனைத்தும் ஒரு துரும்பு வெள்ளிக் கம்பியினை காண்பதிலே சென்றது. எங்கே ஆரம்பிப்பது. எங்கே முடிகிறது. விடை கிடைக்காமல் பிரிந்து போகிறது ஜீவராசிகள். எனினும், வெள்ளிக் கம்பியின் மீது வெற்றி கொள்ள யாராலும் போரிடத்தான் முடியும். வெற்றி என்பது பல தோல்விகளுக்கு பின் அறிவிக்கப்படும் என்ற எண்ணத்துடனே பயணம்.வலிமை, மெலிமை இவைகளிரண்டும் வெள்ளிக் கம்பியின் கோரத் தாக்குதலுக்கு இலக்காகாமல் போக முடியாது. இருப்பினும் வலிமை மெலிமையை ஓட, ஓட சுரண்டி வெள்ளிக் கம்பியுடனான தனது போருக்கு தக்க ஆயுதங்களை தயார்படுத்தினாலும் சமதானம் மட்டுமே செய்ய முடிந்தது. மெலிமை எப்பொழுதும் திடத்துடன், தீரத்துடன் கடும்போர் செய்து தளர்வுற்று தளர்வுற்று சமாதானம் சொல்லி மீண்டும் இடையுறாத போர் -சமாதானம், போர்- சமாதானம் என்ற வேத காமத்தை ஓதியது. ஆனால் வலிமையையும், மெலிமையையும் மோதவிட்டு இவைகளிடமும் மோதி கம்பீரமாக நிற்கிறது வெள்ளிக்கம்பி. இத்தனைக்கும் மெலிதாக வாள் போல் தோன்றினாலும் அது கம்பியே. வாள் கம்பியென்றும் கூறலாம். ஆனால் வாள் என அறுதியிட்டுக் கூற முடியாது.

வெள்ளிக் கம்பியோ திடீரென தனதுடலின் அனைத்து அணுக்களின்றும் மின்னிப்பரவும் ஆயிரம் வெப்பக் கதிர்கணைகளை ஒரே நேரத்தில் பாய்ச்சும் திறனுள்ளது. இதன் தாக்குதல் காலம், தூரம், நேரம் என பாராமல் எல்லா ஜீவராசிகளிலும் ஏகமாகப் பரவி நிற்கும். இதன் மின்னிப்பரவும் ஆற்றல் மின்னி மறையும், மறைதல் என்பது குறிப்பிட்ட கால அவகாசத்திற்குட்பட்டது. எப்பொழுது தோன்றும், தாக்கும் என்றும், யாரைத் தாக்கும் என்றும் சொல்ல முடியதது. வலியதைத் தாக்கும்பொழுது மெலியதை தாக்காமல் செல்லலாம். ஒரே நேரத்தில் வலியதையும், மெலியதையும் தாக்கலாம். எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் அதன் தாக்குதல் அந்தரங்கமாக எங்கோ
பூமிக்கு வெளியேறியள்ள சால்டன் தீவில் கூட வைக்கப்பட்டிருக்கலாம். காபாலத்திற்கு கீழேயும் வைக்கப்பட்டிருக்கலாம். சால்டன் தீவு உன் கபாலமாகக் கூட இருக்கலாம். அதற்கு கீழேயும் இருக்கலாம்.

வெள்ளிக் கம்பியுடனான போரை அனைத்து ஜீவராசிகளும் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பொழுது எழுந்து நடந்தவன் மட்டும் விரைந்து சென்று மண்டியிட்டுவிட்டான். பிறவற்றைப் பார்த்தே கற்றுக் கொண்டவன். மண்டியிடலை மட்டும் சுயமாக உருவாக்கிக் கொண்டான். நடப்பவை சிலவற்றையும் தன்வயன்படுத்தி, நிலத்தில் பூத்த மகரந்தங்கள் அனைத்தையும் அழிக்க ஆரம்பித்தான். வாழ்விற்கு வரம்பு வைத்தான். இரவு போருக்கான சுழல் அல்ல என முடிவெடுத்தாலும். போர் சில பக்கங்களில் அவ்வப்பொழுது நடந்து கொண்டிருந்தது. தாம் போரினின்று தனிப்பட்ட முறையில் தப்பயெண்ணி தன் இரத்தத்தை கூறாக்கி தன்னுடனான ஓரினத்தை சேர்த்து கலந்து தயார் செய்யப்பட்டது சிலசூழ்ச்சிகள் .ஒரு குறிப்பிட்ட கால அவசாகசத்துடன் போரில் சமாதானம் ஏற்பட வழி கிட்டிவிட்டது. கபாலத்தை தயார் செய்து கவசம் தாங்கி என்னுடன் வெள்ளிக் கம்பியுடனான போர் இல்லை என பறை சாற்ற துடித்தன எழுந்து நடந்த கும்பல். சமாதானத்திற்கான அனைத்து ஆயுதங்களையும் சேமித்து தன்னிடமில்லாதவைகளை தன்னிடம உள்ள ஆயுதம் கொடுத்து பறிமாறிக் கொள்ளப்பட்டது. எவ்வளவு பரிமாறுவது, எவ்வளவு பரிமாறுவது, கத்த ஆரம்பித்தது கூட்டம். விதியேற்படுத்தி, உயர உயர கற்களை நிரப்பி விதவிதமான ஒலியெழுப்பி ருசி காட்டி, சோம்பலை புகுத்தி, சொகுசு காட்டி என்றாலும் கூச்சல் மேலிட மேலிட, கபாலம் பிளந்து ஒலி பூமியை ஓட்டை போட பலர் ஓட்டை, ஓட்டை ,ஓசோன் ஓட்டை என் கத்திட, கத்தல் கூடிக்கொண்டே சென்றது.

வெள்ளிக் கம்பியின் புதிய பரிமாணம் புரியாமல் தவித்தது ஜீவராசிகள். வெள்ளிக் கம்பியின் தாக்குதல் யாவரையும் விட்டபாடில்லை. தாக்குதலை மறைக்க முயன்று முகத்தில் வெள்ளிரோகைகள் பரவ அதற்கும் பயந்து தன் இயக்கத்தை விரைவுபடுத்த உச்சி கபாலத்தில் ஏற்படுத்திய தாக்குதல் உள்ளங்காலை மண்டியிட வைத்தாலும் சற்று திடத்துடன் தோல்வி, தோல்வி என மனதிற்குள் கருவி தன்னிடம் தேடி சமாதானம் பேசி யாரிடமும் சொல்லாமல் நிம்மதி தேடி அலைந்தவனை, எங்கும் சொல்லாமல் பாடிய மூங்கிலும் மூச்சைவிட்ட குயிலும் கவர தனதியக்கத்தை ,உருக்கத்தை தனது உணர்வில் வாங்கி உதட்டிலும், நரம்பிலும், விரலிலும் விரல் விட்டு இனிமையான இசையையேற்படுத்தினான் ஒரு போராளி. அவனின் இசைக்கு மயங்கி ஓடி வந்தது ஒரு கூட்டம். சற்றே இளைப்பாற, சகலத்தையும் மறக்க கற்றுக் கொண்டது கூட்டம். அலைத்துச் சென்றன அனைவரையும் ஏதோ இராகத்தில், என்னவோ ஒரு தாளத்தில், காலம் . இசையில் மிதந்தவர்கள் போர் மறந்து, தொல்லை மறந்து, போக்கு மறந்து, காடு, மலை, சமவெளி, நீர் வீழ்ச்சி, தென்றல், சுகந்தம், மலர் கூட்டம், இனிய நெருடல், சிலாக்கியம், பிணைப்பு எல்லாம் கலந்த ஏகாந்தத்தில் திடீரென சால்டன் தீவினில் இறக்கி விடப்பட்டனர். பரிதவிப்பு, பதைப்பு அனைவரும் ஓடினர். அவரவர் இயக்க சக்திக்கேற்றவாறு, அதற்குள் இசைக்கருவியின் நரம்பு அறுந்து அனைவரின்
தொப்புளிலும் ஒரு மாய புகையை சுழலவிட்டது. பாவம் யாருக்கும் தெரிவதில்லை. வெள்ளிக்கம்பியின் மாயஜாலங்கள்.

அனைவரும் தங்களுக்கே உரித்தான ஆயுதங்களை பூட்டி போரிடாமல் சமாதானம் பேசிக் கொண்டிருக்க ஆரம்பித்துவிட்டனர். வெள்ளிக்கம்பியுடனான போரை அனைவரும் வெறுத்தனர். இதற்கென முடிவு, குழு குழுக்கலாக, அவரவர் கூட்டம் கூட்டமாக முடிவெடுக்கப்பட்டது. முதலாவதாக பூமியினின்று வெள்ளிக் கம்பியின் கோரப்பிடிக்கு ஆட்படாத உலோகத்திற்கு வெள்ளியென பெயரிடப்பட்டது. பின் அதனை கம்பி போன்ற அமைப்புள்ளதாக்கி தங்கள் இஷ்டம் போல் கலர் கலராக, பல நிறத்துடன், பல வடிவத்தில் வெள்ளிக் கம்பியை சிக்கவிடப்பட்டது. இதனைக் கொண்டு வெள்ளிக் கம்பியுடன் போரிட அவ்வவ்குழுக்களுக்கு, கூட்டத்திற்கு ஆணையிட்ப்பட்டது. பண்டமாற்று முறையில் வாங்கப்பட்ட ஆயுதங்களனைத்தும் இந்த போலி வெள்ளிக் கம்பிகளுக்கு அளிக்க முடிவெடுக்கப்பட்டது. வெள்ளிக் கம்பியுடனான சமாதானம் இந்த போலி வெள்ளிக் கம்பியால் சாத்தியப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. காலம் சற்றைக்கெல்லாம் போலி வெள்ளிக் கம்பியுடன் உண்மையான வெள்ளிக் கம்பியை கலந்து விட உண்மையான வெள்ளிக் கம்பி தனது பணியின் புதிய பாரிமாணத்தை நோக்கி பாய்ந்துவிட்டது. வெள்ளிக் கம்பிக்கு மாற்று வெள்ளிக் கம்பி என்பதால் அதனுடனான தாகத்தில், சேர்ப்பில் ,சேமிப்பில் கூட்டம், கூட்டமாக நடக்க ஆரம்பித்தது ஜீவராசிகள். போலிக்கு உண்மையைவிட வலிமைகூட ஆரம்பித்துவிட்டது. போலியின் முன் அன்பு, பாசம், பரிவு, காதல், கருணை, இரக்கம், நேர்மை, நியாயம் அனைத்தும் அடித்துச்செல்லப்பட்டது. கடவுளை படைக்க வைத்து அடிபணிய வைத்தது. இதனை இல்லை யென்றுகூறும் அளவிற்கும் இட்டுச் சென்றது.

போர், போர் வக்கிரமான போர் இப்பொழுது மோதிக் கொண்டது வெள்ளிக் கம்பியும் உயிரும் அல்ல. உயிரும், உயிரும். காரணம் போலி வெள்ளிக் கம்பியை சேர்த்தால் உண்மை தாக்காது என்ற பயத்தில் தாக்கினாலும் உடனடி சமாதானம் என்ற நினைப்பில் தொடர்ந்து போர், போரின் தன்மை மாறிக்கொண்டே வந்தது. இல்லை இல்லை போரின் பரிணாமம் பிரிதொன்றாக மாறவும் தலைப்பட்டது. திருடுதல், கலவாடுதல், கொள்ளையடித்தல் மூன்றும் பொதுவான ஒரு பிரிவின் முப்பாரிமாணம். சுரண்டுதல், பிடுங்குதல் இவை இன்னொரு பிரிவின் அதிகாரம். இப்படியாகவும் போரையும் ஜீவராசிகள் சந்திக்க நேரிட்டது. போலியிடம் ஒப்படைத்த பணி இனிதே நிறைவேறிக் கொண்டிருக்கிறது. போரிடுபவர்கள் வெள்ளிக் கம்பியின் தாக்குதலுக்கு தப்பிக்க பிறருடன் போரிட்டு வெள்ளிக் கம்பிக்கு அவர்களின் இரத்தத்தை அர்ப்பணிப்பதன் மூலம் தப்பிக் கொள்வார்கள். இதில் அரசனும், ஆண்டியும் அடங்குவர். வெள்ளிக் கம்பிக்கு அது உண்மையோ, போலியோ இரத்தம் என்றால் மிகவும் பிடிக்கும் என்ற நிலைக்கு சென்றது உலகு.தனக்காகவும், தன்னுடனும் போரிடும் அனைவரும் போலி வெள்ளிக் கம்பியின் முன் தனது இரத்தத்தினை உரைய வைத்தாலொழிய உண்மை வெள்ளிக் கம்பிக்கான தாக்குதலை அது நிறுத்தாது. போரிட வைக்கும் சூத்திரதாரி. தொடரும், தொடரும் இரத்த உறைதல், மீண்டும் தொடரும் இரத்த உறைதல். இரத்தம உறைந்தாலும், அதனுடன் தன்னுடன் போரிட ஏதாவதுண்டா என பல லட்சக்கணக்கான அழுகிய நெழிபுழுக்களை அனுப்பி அலசி அவற்றுடன் சொச்ச தாக்குதலை தொடுத்து மீண்டும் அலசி உலகம் முழுவதும் நாத்தத்தை ஏற்படுத்தி பின் புழுக்களின் இரத்தம் பார்த்து அவற்றிற்குள் ஆயிரம் தங்க வாட்களை ஏழுகூறாக்கி ,பாய்ச்சி, பிளந்து மீண்டும் அவற்றை மக்கச் செய்து நிலம் பிளப்பவன் கையில் கொடுத்து, அவனும் போரிட இரத்தம் கொடுத்து தனது நிலையில்லாத யாரும் வெற்றி கொள்ள முடியாத, எதிரியில்லாத, எதனாலும் வெல்ல முடியாத தனது மாய புகையால் அனைத்தையும வலைத்து அவைகளுடன் போரிட்டு அதனாலே இயங்க வைத்து ஆட்டி வைத்து உருவாக்கி, உருபார்த்து, அழிக்கும் முடிவில்லா மாயப் போரை மேற்கொண்டுவிட்டது வெள்ளிக்கம்பி.

காலில் ஒரு பரபரப்பு, பாய்ந்து சென்று பார்த்த பார்வையில் மின்னிக் கொண்டிருக்கும் பாதரச துகள் தாண்டி சமாதான ஆயுதங்களின் குவியல் பார்த்து ஒவ்வொரு கம்பியாக, ஒவ்வொரு கம்பிக்குமான சமாதானத்தையும் ஏற்படுத்த தன்னை ஆசுவாசப்படுத்தியது அந்த பூனை. வெள்ளிக்கம்பியால் இன்னும் சிறிது நேரத்தில் இரு கூறாக்கப்படுவது அறியாமல்..


.




.




.
Download As PDF

5 கருத்துகள் :

அண்ணாமலையான் சொன்னது…

என்னமோ சொல்றீங்க... ஆனா என்னன்னுதான் புரியலே

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம்.....
நன்றி
அண்ணாமலையான் அவர்களே
நன்றி .

ஜெரி ஈசானந்தன். சொன்னது…

Bravo...Bravo.

ஜெரி ஈசானந்தன். சொன்னது…

உருவகமாய் பல படிமங்களுக்குள் ஒளித்து எழுதுகிறீர்கள்.எனக்கு முள்ளிவாய்க்கால் போர் ஞாபகம் வருகிறது.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

நன்றி
ஜெரி ஈசானந்தன். அவர்களே
நன்றி .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "