திங்கள், 15 மார்ச், 2010

நவீன பாசிஸ்டுக்கள் ... உஷார் ...

.

.


இன்னும் மனிதர்களிடையே விழிப்புணர்ச்சி மலரவேயில்லை ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு சிறு முயற்சியைக்கூட எந்த ஒருவரும் தனக்கே கூட செய்துகொள்வதில்லை .அதற்குக் காரணம் தங்களை மனித நேயர்களாகவோ,நாத்திகர்களாகவோ காட்டிக்கொண்டாலே போதும்
அனைத்தும் பொற்றுவிட்டவர்களாக,எல்லா விசயமும் தெரிந்தவர்கள் போல் வலம் வரும் ஒரு சூழலை அரசியலில் இருந்து அடித்தட்டு மக்கள் வரை விதைத்து விட்டனர் .இந்த விதையில் முளைத்தவர்கள் மாறத நச்சுக்கள்.உண்மையில் பெரியாரோ ,மார்க்ஸொ இன்ன பிற அறிஞர்களே அதனை அறியும் நிலையில் இருந்தால் வெட்கித் தலைகுனிவர் .ஏனெனில் இவ்வாறு உருவாகிய நபர்களிடம் எந்த ஒரு அறிவும் ,அதன் பயனான வளர்ச்சியையும் பார்க்கமுடியாது. இப்படிப்பட்டவர்கள் தங்களை
எதுவாகவும்வடிவமைத்துக்கொள்வர்.இவர்கள்சினிமா,டீ.வி,சாட்டிங்,மொக்கை,அரசியல்,இலக்கியம்,
இன்னிசை,கேலி ,கிண்டல்,கடி என குழல் இனிது ,யாழ் இனிது என பொழுது போக்கு அம்சங்களில் தங்களை அமிழ்த்தி மற்றவர்களுக்கு வழிகாட்டாத தங்களின் மடத்தனத்தை மறைக்க கண்டதுபோல் கண்டதைப்பேசி காலம் கடத்துவர் .கவிஞராக, எழுத்தாளராக,நாத்திக சிகரமாக,மனிதகுல
மாமணியாக, மாமேதமையாளராக மேலும் பிரபலமாக, முடிந்தவர்கள் தலைவர்களாக. இவர்களிடம் பாசிச கொள்ளை வேறுன்றி இருக்கும் .அவர்களின் பேச்சும், எழுத்தும், நடவடிக்கைகளும், செயல்களும் ஆழ்ந்து வாசிக்க ,நோக்க அது பளிச்சிடும் .ஆனால்,அவர்கள் எப்பொழுதும் தங்களை ,மக்களின் மீது சிறுதுரும்பு பட்டாலும் பதறி ஒடி உதவும் பண்பாளர்களாகவே வேடமிடுவர் .இவர்கள் நவீன பாசிஸ்டுக்கள்.

நவீன பாசிஸ்டுகளிடமிருந்து துளிகூட இன உணர்வோ, வெளிப்படையானதன்மையோ இருக்காது. இவர்கள் பணத்தின் மிதே தங்களின் பார்வையையும்,பயணத்தையும் வைத்திருப்பர் .இவர்களுக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை. இனத்தைப்பற்றியோ,இழிநிலைபற்றியோ அழிவைப்பற்றியோ ஒரு வார்த்தையும் பேசவோ, எழுதவோ மாட்டார்கள் தான் .அப்படியே எழுதினாலும் ஊருடன் ஒத்து ஊதுவார்கள் . சரி,அதிருக்கட்டும் விலைவாசி விசம்போல் ஆகிவிட்டதென்றால் ஒரு கண்டனம் கூட காட்டாமல் பேருந்து ஓட்டுநர் பெயரில்லாமல் வண்டி ஓட்டுகின்றார் என்ன கொடுமையடா கோபாலா
என கோபத்துடன் வெளிப்பட்டு ருத்ரதாண்டவனாகி சமுதாயம் காப்பார் .சரி,அது
போகட்டும்,கோவில் கோவிலாக கோடிகோடி மக்கள் சென்றாலும் அதற்கான காரணம் அறிந்து மக்களை நல்வழிப்படுத்துவதை விடுத்து .கடவுள் என்றும்,புசாரி என்றும் ,ஏமாற்றுக்கூட்டம் என்றும், சாமியார்கள் ஓழுக்கங்கொட்டுவிட்டார்கள் என்றும் ஏகத்துக்கு துக்கப்படுவர் .ஆனால்,
அப்படிச்சொல்பவர்கள் எல்லாம் என்ன ஒன்றும் அறிவில்லாதவர்களா?அல்லது பைத்தியங்களா ? .அப்படி ஒன்றும் இல்லையே, அப்படியிருந்தும் ஏன் செல்கின்றனர் ? .அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளும் ,அதிலுள்ள சங்கதிகளும் என்ன ? என்ன செய்தால் திருந்துவர்? என சிந்திக்காமல்.கீழ்தரமாக திட்டுவதாலோ,எழுதுவதாலோ அல்லது ஒதுக்குவதாலோ மேற்கொள்வது
மந்திரத்தால் மாங்காய் விழும் என்னும் முடத்தனத்தில் இருப்பவருடன் கைகோர்த்து நடப்பதற்கு ஒப்பாகும். உதாரணமாக எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை கருங்குறங்கு மருத்துவரிடம் லேகியம் வாங்கி சாப்பிட்டால் நோய் தீரும் என்னும் மூடநம்பிக்கையை எங்கனம்
தடுக்க.மருந்தைக்கொடு மூடநம்பிக்கை ஓடியே போகும் .அதை விடுத்து மூடத்தனம் ,மூட நம்பிக்கை என பேசியும்,எழுதியும் வருவதால் என்ன பயன்.

இவ்வாறு திரிபவர்களைக்கண்டுதான் ,

நவீன பாசிஸ்டுக்களிடமிருந்து நம்மை உஷார்படுத்த

வள்ளுவர் இவர்களை

'' குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். ''

என்கின்றார்.
இங்கு மக்கள் மழலைச்சொல் என்பது மக்களின் கஷ்டம் எனக்கொள்க.

.....

.


.


வாள்ளுவர் அறியப்பட வேண்டிய உண்மைகள் ...

தொடரும் ....

.

.


.


.

Download As PDF

10 கருத்துகள் :

அண்ணாமலையான் சொன்னது…

அருமையா சொன்னீங்க

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
அண்ணாமலையான் அவர்களே
மிக்க நன்றி

நேசமித்ரன் சொன்னது…

அருமை

டக்கால்டி சொன்னது…

ஏதோ கொஞ்சம் புரிஞ்சதுங்க..
என்னை மாதிரி டுயுப் லைட்டுகளும் புரிஞ்சிக்கிற மாதிரி இருந்துச்சுங்க...

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

ஓ ....
மிக்க மகிழ்ச்சி
டக்கால்டி அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
நேசமித்ரன் அவர்களே
மிக்க நன்றி

Robin சொன்னது…

சிந்திக்கவேண்டிய கருத்துக்கள்.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
Robin அவர்களே
மிக்க நன்றி

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல கருத்துக்கள். இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால் இவர்கள் மற்றவர்களைப் பற்றிக் குறிப்பிடும் அருவருப்பான விமர்சனங்கள் தான். மிக்க நன்றி.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

நல்லா சொன்னீர்கள்
பித்தனின் வாக்கு அவர்களே
மிக்க நன்றி

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "