வியாழன், 14 ஜனவரி, 2010

கரும்பைப்போல் சுவைக்க .


.


.

நொரண்டு : வணக்கம் , தமிழர்திருநாள் வாழ்த்துக்கள் .

நண்டு : வணக்கம் . நன்றி ,வாழ்த்துக்கள் .

நொரண்டு : பெங்கலெல்லாம் ஊருள படு ஜோரா ..

நண்டு : ஆம் ,இருந்தாலும் நாளைக்குத்தான் எனக்கு ரொப்பப்பிடிக்கும் .

நொரண்டு : ஓ ,ஒங்களுக்கொள்ளாம் நாளைக்குத்தானே
மறந்துட்டேன் .

நண்டு : நாளைக்குத்தான் நம்மளுக்கு உழச்ச குட்டிப்பசங்களை எல்லாம் குஷிப்படுத்தும் நாள்
.அவங்கெல்லாம் நாளைக்கு ஜிகு ஜிகு இருப்பானுக ...நாளைக்கு அவங்க அடிக்கற லூட்டி
இருக்கே ...அப்ப்பா ... நினைச்சாலே ...இந்த வருசம் குட்டிப்பையன் ஒருத்தன்
புதுசா சேந்திருக்கான் .இன்னைக்கே ஜிமுஜிமுனு ஓடிக்கிட்டு இருந்தான் .நாளைக்கு
நான்வந்தப்பறம் ரண்டு பேரும் குளிப்போமுனு அவன்கிட்ட செல்லிட்டு வந்திருக்றேன் .

நொரண்டு :சரி ,சரி அதோட சேந்தாவது குளிச்சா சந்தோசம் .
சரி வருசம் பூராம் கஷ்டப்படுத்திட்டு ஒரு நாள் மட்டும் இப்படி செய்தல்
சரியா ?

நண்டு : நீ வாழ்க்கைய சுமையா பாக்குற .

நொரண்டு :அப்படியில்லை தவறான புரிதல் .

நண்டு : இல்லை இல்லை ,
உனது புரிதல் தான் தவறு .
அதனால தான் நீ
தமிழனின் கொண்டாட்டத்தை ,
தமிழனின் பண்பாட்டை,நாகரிகத்தை
தவறா அப்படி பாக்குற .

நொரண்டு : ம் ...எல்லாத்துக்கும் பிறவி என்பது ...

நண்டு : பிறவி என்பது ?

நொரண்டு : அதாகப்பட்டது வாழ்க்கை எனும் பெரும் கடலை நீந்திக்கடத்தில் என்பது அவ்வளவு
எளிதானதா ?

நண்டு : இதுக்கு வள்ளுவர் என்ன சொல்றார்னு கேட்டுட்டு 21ம் நூற்றாண்டுல இருக்கிற நீ சிந்தி

நொரண்டு : சொல்லு ?

நண்டு :

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்."

நொரண்டு :

இதுக்கு


இப்படியும்

உரை எழுதியுள்ளனர் .


நண்டு : ஆம் .

நொரண்டு :நீ உன் கருத்தா சொல்லு .

நண்டு :

இறைவன் அடிசேராதார்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்போல்

நீந்தார் .


நொரண்டு : புரியல

நண்டு :
பிறவியை
பெரும் கடல்
என்றும் ,
சுமைஎனறும்

வாழ்க்கையை நடத்தமாட்டான்
இறைவன் அடிசேராதவன் .
இறைவன் அடிசேர்ந்தவர்கள் தான்
பிறவியையே
பெரும் குற்றமாக நினைத்து
வருந்தி
வாடுகின்றனர் .

நொரண்டு :அப்போ ...

நண்டு : வாழ்க்கை என்னும் சுவையை கரும்பைப்போல் சுவைக்கவேண்டும் .

நொரண்டு : வள்ளுவர் கூறுவது

நண்டு :வாழ்க்கை சுமையன்று .

.


.

வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் ...
தொடரும் ...







.





.



.

Download As PDF

3 கருத்துகள் :

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அருமையான உரையாடல்

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

நன்றி
Starjan ( ஸ்டார்ஜன் )
அவர்களே

கோவி.கண்ணன் சொன்னது…

வாழ்க்கை சுமை இல்லை மகிழ்வு தான். அருமை

நீங்களும் பிறவியை உண்டு இல்லைன்னு பண்ணி இருக்கிங்க

:)

நன்றாக இருக்கு.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "