ஞாயிறு, 4 அக்டோபர், 2015

வித்தியாசமான விளையாட்டு .






இது
ஒரு
வித்தியாசமான விளையாட்டு
சொல்லித் தருகிறேன்
வா .

ஒன்று ,இரண்டு ,மூன்று ,நான்கு ...
என
எண்ணிட  எண்ணிட
நாம்
இலக்கியம் செய்யவேண்டும்


அங்க இங்க
பார்த்த கேட்ட
இத்தியாதி இத்தியாதி என
வட்டமோ,சதுரமோ,
முக்கோணமோ
ஏதோ ஒன்று
இருக்க வேண்டும்
அதில் .

இதில்
கைகோர்க்க
படிமத்தை
எதிர்ரெதிர் பார்க்க
கால் மாற்ற
காலம் மாற்ற
இரண்டும் மாற மாற
நகர்ந்து நகர்ந்து
மையத்தை மாற்ற
அமைப்பு சிதையா
விதிக்கு சரியாக
யாரோ சொன்னதால்
வட்டமே தேர்வானது
இன்றுவரை .


இது ஒரு
வித்தியாசமான விளையாட்டு
உனக்கும் சொல்லித் தருகிறேன்
நீயும் வா .

ஒன்று ,இரண்டு ,மூன்று ,நான்கு ...
உனக்கு  எனக்கு ....

கைகோர்  கைகோர்
கால் மாற்று
களம் மாற்று
நகர்  நகர்
மையம்   ...
ஓ !!!
வட்டம் .

இனி
என்ன இருக்கிறது
இலக்கியம் செய்ய ?.
வட்டம் தான் வந்துவிட்டதே.


ம் ...
விளையாடும் வரை விளையாட்டு
விலகிய பின் வட்டம்

விளையாட்டை விட்டுவிட்டு
வட்டத்தைப்பார்.

நீயும் சொல்வாய்
இது ஒரு
வித்தியாசமான விளையாட்டு
என .

இனி
நீயும் சொல்வாய்
இது ஒரு
வித்தியாசமான விளையாட்டு
நானும் சொல்லித் தருகிறேன்
என.












படம் :  நண்டு @ நொரண்டு .




Download As PDF

சனி, 3 அக்டோபர், 2015

புதுக்கோட்டையில் வலைபதிவர்கள் சந்திப்பு அனைவரும் வருக! வருக!

                                                                                                                                                                                   




                                                              11.10.2015

புதுக்கோட்டையில் 

                           வலைபதிவர் சந்திப்பு  

                


 வலைத்தலநண்பர்கள் 
அனைவரும்
 வருக! வருக! 


என
அன்புடன்
அழைக்கும்


உங்களின்


நண்டு     @    நொரண்டு 
 என்ற 
 வழக்கறிஞர்  இராஜ சேகரன் ,ஈரோடு .






Download As PDF

வெள்ளி, 2 அக்டோபர், 2015

மகாத்மா என்னும் மாயை ..." Why We Can't Wait "







ரத்தமும் சதையுமாக ஒரு மனிதன் இவ்வாறு பூமியில் வாழ்ந்தார் என்றால் வரும் தலைமுறையினர் அதை நம்புவது கடினம்  ஐன்ஸ்டீன்





நொரண்டு : வணக்கம் நண்டு .

நண்டு :  வாங்க நொரண்டு .

நொரண்டு : காந்திஜி பிறந்தநாள் இன்று.

நண்டு : என்ன செய்தி ?

நொரண்டு : ஒன்னுமில்ல காந்தியப்பத்தி கேக்கலாம்னு வந்தேன் .

நண்டு :  என்ன தெரிஞ்சுக்கணும் .

நொரண்டு :மகாத்மா காந்திக்கு பின் இந்தியாவில் காந்தியம் என்ன ஆனது?. காந்தியம் இன்னும் இருக்கிறதா ,தொடர்கிறதா ? இல்லை...

நண்டு :  மிக நல்ல கேள்விகள் . காந்தியம் தொடர்கிறது என்பதுவே உண்மையும் நடப்பும்

நொரண்டு :தொடர்கிறதா !!!!!!

நண்டு :  ஆம் .

நொரண்டு : எவ்வாறு ?

நண்டு : உலகில் உள்ள ,ஒவ்வொரு மனிதர்களின், இதயத்திலும் ,மலர்ந்து மலர்ந்து ,மிகப்பெரிய மிகப்பெரிய சக்தியாக ...

நொரண்டு : உலகில் உள்ள ஒவ்வொரு  இதயத்திலும் ... புரியல ?

நண்டு : காந்தியம், இந்தியாவைத்தாண்டியும் பயணித்துக்கொண்டு , பயனடையவைக்கின்றது உலக சமுதாயத்தை .

நொரண்டு : புரியல ?.

நண்டு : ஒபாமா தெரியுமா .

நொரண்டு : என்ன கிண்டலா ...அவரை தெரியாதவங்க உலகத்தில் இருக்கமுடியுமா...

நண்டு : காந்தியத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் மிகச்சிறந்த காந்தியவாதியாகவும் உருவெடுப்பார் என்பது எனது கருத்து  .

நொரண்டு :மகாத்மா காந்தி சமாதியை பார்வையிட்ட அவர் அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் “அன்பு, சகிப்புத் தன்மை, அமைதி மூலம் இந்த உலகையே மாற்றிய மகாத்மாவை நாங்கள் எப்போதும் நினைவில் வைத்துள்ளோம். அவர் மறைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் ஏற்றி வைத்த ஒளி, இந்த உலகுக்கே இன்றும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறது” என்று குறிப்பு எழுதினார்.

நண்டு : ஆம்,அந்தளவிற்கு காந்தியின் மீது பற்றுக்கொண்டவராக திகழ்கின்றார் .

நொரண்டு :நல்லது .

நண்டு : மார்ட்டின் லூதர் கிங்  ...


நொரண்டு :" Why We Can't Wait " என கூவியவர்.

நண்டு :  நெல்சன் மண்டேலா ....

நொரண்டு :'' Only free men can negotiate; prisoners cannot enter into contracts. Your freedom and mine cannot be separated '' என்றவர்.

நண்டு : சுந்தர்லால் பகுகுணா

நொரண்டு : "முதல், இரண்டாம் உலகப் போர்கள் ஐரோப்பிய நாடுகளின் தீராதப் பேராசைப் பசியால் உருவானது. மூன்றாம் உலகப் போரென்று ஒன்று வந்தால், அது நீரைப் பங்கிடுவது குறித்துதான் எழும்." என்ற  "பசுமை போராட்ட வீரர்'

நண்டு : சிவராம் காரந்த் .

நொரண்டு : 93 வயது வரை ஊர் ஊரா சமுதாயப் பணிகள் செய்த சமுதாயப் பணிகள் செய்த கன்னட நாவாலாசிரியர்.

நண்டு :  Harivallabh Parikh .

நொரண்டு :மக்கள் நீதிமன்றம் இவரை அடையாளப்படுத்தும் .

நண்டு : பிரேம் பாய்

நொரண்டு :1971-72 இல் 5 லட்சம் வங்காளம் அகதிகள் மத்தியில் இவர் ஆற்றிய பணியை மறக்கமுடியுமா ?.

நண்டு :  "மரங்களை கட்டிபிடித்துகொள்!"

நொரண்டு :சாந்தி பிரசாத் பட், கௌர தேவி என்ற இயற்கை மனிதங்கள்.

நண்டு :  Narayan Desai

நொரண்டு :அகிம்சை படையின் அமைதிப்போராளியாயிற்றே.

நண்டு :  ஜெயப்பிரகாஷ் நாராயண்

நொரண்டு : Emergency யை உடைத்து காந்தி தேசத்தை காத்த வித்தகர்.இவரை மறந்தவர் ஜனநாயகத்தை அறியாத மூடராவார்.


நண்டு : வினோபா பாவே

நொரண்டு :காந்தியின் ஆன்மீக வாரிசு, ஏழைகளுக்கு நான்கு மில்லியன் ஏக்கர் நிலத்தை சேகரித்து தானமாக தந்த துறவி .

நண்டு : பாபா ஆம்தே

நொரண்டு :பூவுக்குள் மலரை வைத்தவர் .







நண்டு : அன்னா ஹசாரே

நொரண்டு : சொல்லவும் வேண்டுமோ ????

நண்டு : கிருஷ்ணம்மாள்-சங்கரலிங்கம் ஜகன்னாதன்

நொரண்டு : காந்திய கொள்கைகளுக்காகவும், நிலமற்ற தலித்துகளுக்காகவும் சேவை செய்யும் நாகப்பட்டினத்து காந்தியவாதி.

நண்டு : ஈரோட்டைச்சேர்ந்த ...

நொரண்டு : இரு ....இவர்களை எல்லாம் ஏன் குறிப்பிடுகின்றாய் ?.

நண்டு :  இவர்களின் வாழ்க்கைப்பாயணத்தை படித்தைப்பார்த்தாலே நன்கு புரியும் . இவர்களின் சேவைகள் அனைத்தும் காந்தியத்தின் நன்மைகள் அனைத்தும் மக்கள் பூரணமாக அனுபவிக்கவேண்டும் என்பதற்காகவே என்பதனை ,அதனால்...

நொரண்டு :ஓ...அப்படியா ....இப்படிப்பட்ட பல உன்னதர்கள் தோன்றிக்கொண்டே இருந்தாலும் காந்தியைப்பற்றிய பார்வை மங்கலாகவே இருக்கிறதே ,காந்தீயம் பரவாமல் இருக்க எது தடையாக உள்ளது ,அதற்கான காரணங்கள் என்ன ?.

நண்டு : மூன்று விசயங்கள் தடையாக உள்ளது .

நொரண்டு : எவை அவை ?.

நண்டு :  முதலாவதாக  காந்தியைப்பற்றியும்,காந்தியத்தைப்பற்றியுமான அறியாமை ,இரண்டாவதாக  காந்தியத்தை வேண்டுமென்றே புறக்கணிக்கும் அரசியல் கேட்பாட்டு அபத்தங்கள் ,மூன்றாவதாக மகாத்மா காந்தி என்னும் மாயை.

நொரண்டு : ம் ...இந்த மூன்றுமே அறியாமை தானே ?

நண்டு : முதலாவது ஆழ்ந்த அறிவும்,பார்வையும் இல்லாதவர்களால் மேற்கொள்ளப்படுவது , இரண்டாவது கற்பிக்கப்பட்ட கற்பிதம் .முதலாவதான அறியாமையை அகற்றிவிட முடியும் .இரண்டாவதின் வாழ்வு சார்ந்த முரட்டு மூடத்தை காலம் தான் படிப்படியாக உணர்த்தும்.

நொரண்டு :அவர்கள் அவர்களுக்குள்ளே திருத்தப்பட வேண்டியவர்கள் அப்படித்தானே .ஆமாம் .அப்படிப்பட்ட அவர்கள் யார் ?.

நண்டு : ஏன் கேட்கிறாய்?

நொரண்டு :அடையாளப்படுத்தப்பட்டால் திருத்தப்படுதல் எளிதாகும் அல்லவா அதற்காக ?


நண்டு :  அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு ஆதரவுதவர்களில் முதன்மையானவர்கள் யாரென்று சொல்லமுடியுமா ?

நொரண்டு : ம் ....

நண்டு :  காந்தியை பனியாவிற்கு ஆதரவாளராக பார்ப்பவர்கள் யாரென்று உன்னால் கூறமுடியுமா ?.

நொரண்டு :தெரியல ?.

நண்டு : ம் ....

நொரண்டு :குழப்பாதே.எனக்கு காந்தியைப்பற்றியும், காந்தியத்தைப் பற்றியுமான  அறியாமை பற்றி  முதல்ல சொல்லு.அத புரிஞ்சுட்டு ,பிறகு அடுத்தத புரிய முயற்சிக்கின்றேன் .

நண்டு :  இன்று நம்மவர்கள் காந்தியவாதிகளுக்கு கொடுக்கும் மரியாதையை, காந்திக்கும்,காந்தியத்திற்கும்  கொடுக்க முன்வராததினின்று ...












மாயை ...தொடரும் ......


.
Download As PDF

புதன், 30 செப்டம்பர், 2015

இனி சாவிகள் பிறக்கப்போவதில்லை .



.




காலம்
கடத்துகின்றன
பொருட்களை
ஒன்றிலிருந்து ஒன்றிற்கு

சாவிகளை
மரணக்குழிக்குள்  தள்ளி
சபித்து
சாம்பலாக்கி விட்டன
கடவுச்சொற்கள்

அண்டா ...கா... கக்கும்
அபுக் கா குக்கும்
திறந்து விடு  சீசேம்
இனி
சாவியல்ல
கடவுச்சொல்


காலம்
கடக்க வைக்கின்றன
கருத்துக்களை
ஒன்றிலிருந்து ஒன்றுக்கு

நேற்று சாவி
இன்று  கடவுச்சொல்

இனி
சாவிகள்
இங்கு பிறக்கப்போவதும் இல்லை
பூட்டுக்களை
பூட்டப்போவதும்  இல்லை
திறக்கப்போவதும்  இல்லை


சாவிகள் சாவிகள்  ஆக
கடந்து போகிறது  காலம்  .



இங்கு  இனி
சாவிகளுக்கும் வேளையும்  இல்லை
சாவி வேலையும் இல்லை


கடவுச்சொல்
சாவியும் இல்லை
சாவியாவதும் இல்லை







.
அ.சொ.பொ .
( வேளை - காலம்  )
.
Download As PDF

சனி, 5 செப்டம்பர், 2015

என் பிரியமானவர்களே

.
.

.

அடைகாக்கப்படயென
அடைகாக்கப்பட
வந்தவன் நான்.
அடைகாக்காமல்
என்னருகில்
ஏதேதோ வெளித்தள்ளி
உருமாற்றுகின்றீர்கள் .
எங்கனம்
அடைகாக்கப் போகின்றீர்கள் ?
சுவாசம் மட்டும் சுவாசமாய்
சுவாசிக்கும் பொருள் சூனியமாய்
உடலும் உயிரும்
மிதவை ஒலிஒளியாய்
குரல் தீனமாய்
ஓட்டிற்குள் அடையாய்
நான்.
அடைகாக்காவிட்டாலும் பரவாயில்லை
என் பிரியமானவர்களே
ஓட்டை உடைக்கும்
மந்திரம் மட்டும் சொல்லிக்கொடுங்கள்
முட்டையிட வைக்கும் வேலை
எனக்களிக்கப்பட்டுள்ளது .

.

.

.
.
Download As PDF

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

உங்களால் உலகிற்கு என்ன பயன் என சொல்ல முடியுமா ? ,பதில் சொல்லுங்கள்


  அடர்ந்த மலையினுடே பயணத்திக்கொண்டிருந்தது கூட்டம் .
மலையின் அழகையும் அற்புதத்தையும் வியந்தபடி சென்றது.

பாதி மலை தான் இருக்கிறது,மீதி அழிந்துவிட்டது என ஆதங்கத்துடன் பேசிச்சென்ற கூட்டத்தின் கவனத்தை திருப்பியது காட்டுமலர்கள் நிறைந்த பள்ளத்தாக்கு.

அதனைப்பார்த்து அதிசயத்தனர் கூட்டத்தார்.

அப்பொழுது கூட்டத்தின் சூத்திரதாரி ,என்ன அழகான பூக்கள் ,எவ்வளவு அழகு ,இவைகளின் பெயர்கள் தான் என்ன ? யாருக்கு தெரியும் ? என்ன  இருந்தாலும் இவைகளால் உலகிற்கு என்ன பயன் ? என ஆதங்கப்பட்டுக்கொண்டு கூட்டத்தினை தனது மாயவலையில் சுற்றிக்கொண்டிருந்தபொழுது,
திடுமென பள்ளத்தாக்கினின்று ஒரு பூ வெளிப்பட்டு ,
வந்தனங்கள் தங்களுக்கு ,வார்த்தைகளை கேட்பார்கள் இருப்பதற்காக சிந்தாதீர்.
முதலில் எமது பெயர் உமக்கு தேவையில்லை .உமது பெயரும் எமக்கு தேவையில்லை.
அடுத்து ,எங்களால் உலகிற்கு என்ன பயன் ?என்று எம்மைப்பார்த்து நகைக்கும் உம்மைப்பார்த்து கேட்கிறேன் .இங்கிருந்து நான் பார்க்கும் நகரில் பல லட்சம் மனிதர்கள் உள்ளீர்கள் .இருந்தும்  உங்களால் உலகிற்கு என்ன பயன் என சொல்ல முடியுமா ? ,பதில் சொல்லுங்கள்,உங்களால் உலகிற்கு என்ன பயன் ?சொல்லுங்கள்  என பல முறை கேட்டது .
யாரிடமும் பதில் வராததால் சிரித்துவிட்டு மறைந்துவிட்டது.

..........

நான் எங்க டோமியோட இன்று வாக்கிங் போன போது,என் பெயர் தெரியுமா ?என் பெயர் தெரியுமா ?




என பாதையோர  பூக்கள் கேள்விகள் கேட்பது போல ஒரு உணர்வு .
எனக்கு சரியா தெரியல.சிரித்தபடி,நம்மை சுற்றியுள்ளதையே அறியாமல் வாழும் ஒரு பிறவி என நொந்துகொண்டு வீட்டிற்கு வந்தேன்.


பிறகு வீட்டிற்கு வந்து எமக்கு இது நாள் வரை தெரிந்த மலர்களையும் அதன் தோற்றத்தையும் மனதினில் எண்ணிப்பார்த்தேன்.  ரோஜா,கனகாம்பரம்,மல்லிகை ,

காந்தள் ,ஜாதி மல்லி ,நெருஞ்சி, சாமந்தி, செவ்வந்தி, செம்பருத்தி.....
                                                              

                                                                   குறிஞ்சி
முல்லை
 மருதம்
 

                                                                   பாலை
                                                             
                                                                   தேமா

                                                                  புளிமா
                                                                     கூவிலம்
                                                                  கருவிளம்




கரந்தை

 காஞ்சி
                                                                          வெட்சி




                                                                      வாகை


                                                                      கொன்றை
                                                                         வாழை
ஆம்பல்

                                                                   மணிக்குலை
                                                                           நாகப்பூ

 செங்கொடுவேரி
                                                                          டணக்கம்







                                        தாழை


                                         வழை

                                                                    ஆவிரை
                                                                   எருவை

                                                                 குறுநறுங்கண்ணி
                                                 பாரம்
                                                                                பீரம்
   
 குவளை





புன்னை

 ஈங்கை

 ஆத்தி

 சேடல்

 செம்மல்

தளவம்

 தில்லை

 குளவி
  புழகு

தும்பை


இலவம் 


  அவரை

                                         சண்பகம்
                                          செங்கருங்காலி


                                         தாமரை



ஏன்,எனக்கு இப்படி ஒரு நினைவு தோன்றியது என எண்ணிப்பார்த்தேன்.மலைவாழ் மக்களிடமிருந்து வாங்கிவந்த மெழுகுவர்த்தி தான் இத்தனைக்கும் காரணம் என்பதனை உணர்ந்துகொண்டேன்.ஆம்,2 ருபாய்க்கு மலையில் கிடைக்கும் தேன்ஆடை மெழுகினால் செய்த இயந்திரமில்லாமல் கையில் தயாரித்த மெழுகுவர்த்தி இத்தனை கற்பனைக்கும் வித்திடவைத்துவிட்டது.அதைவிட அதன் தயாரிப்பு நுணுக்கமும்,அதன் பயன்பாடும் நாம் இங்கு பயன்படுத்தும் மெழுகுவர்த்தியை விட மிகவும் உன்னதமாக இருந்ததை  நேற்றைய இருளில் அனுபவித்ததால் வந்துள்ளது என்பதனின்று அதன் உயர்வை சொல்லவும் வேண்டுமோ.










இந்த மெழுகிற்கான எத்தனை தேனிகள் எத்தனை மலர்களை சுவைத்தனவையோ?.அவைகளின் பெயர்கள் தான் என்னென்னவோ ?.

இப்ப எனக்கு மாயப்பூ கேட்ட பல லட்சம் மனிதர்கள் உள்ளீர்கள் .இருந்தும்  உங்களால் உலகிற்கு என்ன பயன் என சொல்ல முடியுமா ? ,பதில் சொல்லுங்கள்,உங்களால் உலகிற்கு என்ன பயன் ? . சொல்லுங்கள் ? 
 என்ற கேள்வி மீண்டும்  மீண்டும் ஞாபகத்திற்கு வருகிறது . 















படங்கள் உதவி ; flowersofindia.in ,கூகுள் , விக்கிபீடியா மற்றும் பிற இணையதளங்கள் இவைகளுக்கு நன்றி
இது ஒரு மீள்வு....
.   .
Download As PDF