வெள்ளி, 14 செப்டம்பர், 2012

கனவுகளை என்ன செய்ய ?





அட்டக்கத்தி
போராட்ட
மனக்குகை
வக்கிர அபிலாசை
தெரிப்புகளை

பிறப்பித்து
சாகடித்து

காயமின்றி
வெறியடக்கி

எல்லாம்  எல்லாம் 
உள்ளீடற்ற
வெறுமை
வேடம் பூண்டு

நான் காணும் 
கனவுகளில் என்ன செய்ய ? ..? ..?

நான்  காணும் 
என் கனவுகளை என்ன செய்ய

கவியாகி
கழுவேற்றுவதை  தவிர.





.
படம் : நன்றி Google,இணையம்
Download As PDF

23 கருத்துகள் :

Rathnavel Natarajan சொன்னது…

நிஜம் தான்.
சில நேரங்களில் நமது இயலாமையை நொந்து கொள்வதை தவிர வழி தெரியவில்லை.
நன்றி.

TNPSCGK Editorial Team சொன்னது…

இப்படி ஒற்றை வார்த்தை,இரட்டை வார்த்தை வச்சே கவிதை எழுதினா திட்டிப்புடுவேன்...

பின்ன என்னங்க... நாங்களும்தான் எழுதறோம்.. ஒரு கருத்தைச் சொல்ல ஓராயிரம் வார்த்தைகளை தெரிவு செய்து அதையே சுருக்கி நூறு வார்த்தைகளாக்கி, அந்த வார்த்தைகளை வரிகளாக்கி பதிவிடுகிறோம்...

அந்த கட்டுரைகளெல்லாம் சொல்லாத அர்த்த்தை ரெண்டு வார்த்தைகளை வைத்தே கவி எழுதி அசத்துறீங்க...!

பொறமை எனக்கு உங்கள் மீது.. அதுதான் முதல் வரி அப்படி அமைந்துவிட்டது...ஹா..ஹா..!!!

தொடர்ந்து கலக்குங்க...!!! காசா பணமா? கவிதைதானே...!!!!

Thozhirkalam Channel சொன்னது…

நல்ல பகிர்வு.. தொடருங்கள்,,,

ஆமா அந்த படத்தை எங்க புடிச்சிங்க..?

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

எதார்த்தம்..

TNPSCGK Editorial Team சொன்னது…

உங்களை மாதிரியே.. நானும்...

"அறிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி"

என்று எழுத முடியாத அளவுக்கு கவிதைகளும், பதிவுகளும் இருக்கு... !!!


எப்படியும் எங்களை கருத்தெழுத வைத்துவிடுகிறீர்கள்.. உங்களின் எழுத்தின் தன்மை அவ்வாறு இருக்கிறது. இதுதான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசமோ..!!!

என்னதான் சொல்லுங்க.. பெரியவங்க.. பெரியவங்கதான்.. சின்னவங்க சின்னவங்கதான்...!!!

அருமை.. அருமை.. கவியும் அருமை.. கவிப்படைத்த தாங்களும் அருமையானவரே...!! என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.. நன்றி..!



சின்னப்பயல் சொன்னது…

கவியாகி
கழுவேற்றுவது...ஹ்ம்..நல்ல பதம்

பால கணேஷ் சொன்னது…

குட்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வரிகள் நச் !

Yaathoramani.blogspot.com சொன்னது…

விளக்க முடியாத படத்தை
கவிதை மூலம் அருமையாக விளக்கியுள்ளது
மனம் கவர்ந்தது
வாழ்த்துக்கள்

vimalanperali சொன்னது…

கனவுகளை நாம் ஏன் என்னமும் செய்ய வேண்டும்?கனவுகள்தாம் நம்மை ஒருவழிபண்ணுகின்றனவே?

குட்டன்ஜி சொன்னது…

நன்று

சசிகலா சொன்னது…

கவியாகி கழுவேற்றுவதைத் தவிர....
அழகு.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

கனவுகளை என்ன செய்ய கவியாக்கி கழுவேற்றுவதை தவிர! சிறப்பான கவிதை! சிறப்பானவரிகள்! நன்றி!

இன்று என் தளத்தில்
சரணடைவோம் சரபரை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_14.html





எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

கனவுகளை என்ன செய்ய கவியாக்கி கழுவேற்றுவதை தவிர! சிறப்பான கவிதை! சிறப்பானவரிகள்! நன்றி!

வரலாற்று சுவடுகள் சொன்னது…

//கவியாகி
கழுவேற்றுவதை தவிர.//

நல்ல சிந்தனை சார்!

ராஜி சொன்னது…

கனவுகளை என்ன செய்ய ?
>>>
கனவுகளை கொட்டத்தான் நாம பிளாக் ஆரம்பிச்சு இருக்கோமே!

ஹேமா சொன்னது…

கனவுகளை எழுதியே கழுவேற்றுவோம்.நல்லதொரு கவிதை !

Unknown சொன்னது…

அருமையான கவிதை! நன்று..வாழ்த்துக்கள்!

மகேந்திரன் சொன்னது…

நல்லா இருக்குது நண்பரே..

அருணா செல்வம் சொன்னது…

ஆமாம்... ஆமாம்... கழுவேற்றி விடனும்.
அது உயிருடன் ஊசலாடிக்கொண்டே இருக்கும்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - கவிதைககாளும் கனவுகள் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

பெயரில்லா சொன்னது…

உண்மை தான்......

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

மதுரை சரவணன் சொன்னது…

nalla kavithai...

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "