வெள்ளி, 16 நவம்பர், 2018

பொது வெளியின் இன்றைய நிலை



ஒவ்வொருவரும்
தனது கனவு வெளியை 
திறந்து வைத்து  ...

அவரவர் 
கனவு வெறியை  மொய்க்க
மற்றவர்களை அழைக்கின்றனர்.

அதனில்
தனது கனவு வெளியை மொய்ப்பவர்களை
விட்டில் பூச்சிகளாக்கி 
மாய்க்க பெரு முயற்சி செய்கின்றனர் 
களவு வெறியுடன் .

அதில்
பூச்சிகளானவர்களை  மதிக்கின்றனர்,
மற்றவரை கொந்தளிக்கின்றனர்.

அந்த
கனவு வெளியில்
களவு வெறி மட்டுமே  மிஞ்ச
கடந்து செல்கின்றனர் 
கல கலப்புடன்
பல சலிப்புடன் .


இணையவாசிகளும் சரி
இலக்கியவாதிகளும் சரி
இயக்கவாதிகளும் சரி
இதைத்தான் செய்கிறார்கள்.
இதுதான்  இன்றைய  பொது நிலை .







.


Download As PDF

3 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரி தான்...

நலம் தானே தோழர்...

KILLERGEE Devakottai சொன்னது…

உண்மை நண்பரே...

Yarlpavanan சொன்னது…

அருமையான வரிகள்
பாராட்டுகள்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "