வியாழன், 11 டிசம்பர், 2014

சில பாரதி தீ கவிதைகள்


சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்,
துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார்,
அப்பால் எவனோ செல்வான் - அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்,
எப்போதும் கைகட்டுவார் - இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார்.

@ .@ .@. @ .@ .@

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல்

@ .@ .@. @ .@ .@


கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

@ .@ .@. @ .@ .@


தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;

@ .@ .@. @ .@ .@

மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப்-பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?

@ .@ .@. @ .@ .@

அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்.
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.

@ .@ .@. @ .@ .@

பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.



@ .@ .@. @ .@ .@


நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,


@ .@ .@. @ .@ .@



இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.








....


பாரதியின் பாடல்கள்  .

பாரதியின் நினைவாக .


இன்று பாரதியின் பிறந்த தினம் .




Download As PDF

6 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பாரதி போற்றுவோம்
பாரதி போற்றுவோம்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம 3

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

அற்புதமான வரிகளை எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பு...

G.M Balasubramaniam சொன்னது…

/மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப்-பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?/ அவன் பாட்டைப் புகழ்வோர் அவன் சிந்தித்ததை நினைத்துப் பாராததேனோ.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான பதிவு! நண்பரே! ஜிஎம்பி சார் சொன்னதையும் கருத்தில் கொள்ள வேண்டும்!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "