புதன், 28 ஜனவரி, 2009

விளையாட்டை விளையாட்டாக பார்க்க முடியாது ..எப்பொழுது ?

.


விளையாட்டைக்கூட யாரும் விளையாட்டாகப் பார்ப்பதில்லை என்று நாம் சில சமயங்களில்
சலித்துக்கொள்கிறொம் .
ஆனால் ,விளையாட்டை விளையாட்டாக பார்க்க முடியாது .
எப்பொழுது ?

வரலாற்றை நோக்க ...

சைப்ரஸ் என்பவர் விளையாட்டுகளின் மூலம் பாரசிக மக்களை பேரெழுச்சி பெறச்செய்ததிலிருந்தே
விளையாட்டுகள் ஏன் ? என்பதற்கு பதில் கிடைத்தது.
சைப்ரஸைப் பின்பற்றி ஸ்பார்ட்டா தேசமும் இளம் சிறார்களுக்கு உணவு ,உடை, தங்குமிடம்
கொடுத்து சிறந்த வீ்ரர்களை உருவாக்கி நாட்டை காத்தனர் .
பிறகு ஏதன்ஸ் விளையாட்டில் சுதந்திர கருத்தை புகுத்தியதால் விளையாட்டு வேறு பல
வடிவங்களையும் ,போர்முறையினின்று மாறுபட்டு சில கூறுகள் தன்னுள் பெற்றது.பிறகு ரோம்
கிரேக்கத்தை வீழ்த்தியது .அது விளையாட்டை விளையாட்டாக பார்த்த சுதந்திர சுகத்தால்
ரோமானியர்கள் சோம்பேறிகளானதால் டியூடானிக் மரபினர் ரோமை வேன்றனர் . ரோம்
டியூடானிக் ஆட்சி காலத்தில் இருந்த பொழுது ஆங்காங்கே மரம் வெட்டுதல் ,கதிர் அறுத்தல்
போன்ற போட்டிகளைத்தவிர்த்து விளையாட்டு வீரம் காணும் நிலை இல்லாமல் இருந்தது .

இந்தியா இன்று்ம் ரோம் டியூடானிக் ஆட்சி காலத்தில் இருந்த பொழுது எப்படி இருந்ததோ
அதே நிலையில் இருந்து வருகிறது.விளையாட்டைப்பற்றியோ , எப்பொழுது விளையாட வேண்டும்
என்பது பற்றியோ இங்கு யாரும் யோசிப்பதில்லை .

ஜனநாயக நாடுகள் தங்களிடையே விளையாட்டு போட்டி நடத்தும்போது கிழ்க்கண்ட அம்சங்களை
காணத்தவறும் பொழுது விளையாட்டை விளையாட்டாக பார்க்க முடியாது மக்கள் தவிப்பர் .
மக்கள் மனரீதியக பாதிக்கப்படுவர் .

ஜனநாயக நாடுகள் தங்களிடையே விளையாட்டு போட்டி நடக்கும்போது காணவேண்டிய அம்சங்கள்
1.போட்டி நடத்தும் நாட்டில் அல்லது கலந்து கொள்ளும் நாடுகளில் ஏதாவதொன்றில் உள்நாட்டுக்கழகம்

2..போட்டி நடத்தும் நாட்டில் அல்லது கலந்து கொள்ளும் நாடுகளில் ஏதாவதொன்றில்
உள்நாட்டுப்புரட்சி

3..போட்டி நடத்தும் நாட்டில் அல்லது கலந்து கொள்ளும் நாடுகளில் ஏதாவதொன்றில் உள்நாட்டு
அடக்குமுறை

4.போட்டி நடத்தும் நாட்டில் அல்லது கலந்து கொள்ளும் நாடுகளில் ஏதாவதொன்றில் சர்வதிகார
ஆட்சி மற்றும் சர்வதிகார அரசியல் போக்கு

5.போட்டி நடத்தும் நாட்டில் உள்நாட்டுப்பாதுகாப்பில் அச்சம்

மேற்கூறிய அம்சங்களை பார்க்காது விளையாட்டு போட்டிகளில் பங்குபொறும் மற்றும் அதனை
அங்கிகரிக்கும் நாடுகள் தங்கள் நாட்டிற்கு சுதந்திரத்தைப்பெற்றுக்கொடுத்த உன்னத தலைவர்களை
அவமதித்த நாடுகள் ஆகும் .ஜனநாயக பாதையினின்று தவறான பாதையில் பயணிக்கும்
அரசினைக்கொண்ட நாடுகள் ஆகும் .


.

Download As PDF

1 கருத்து :

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "