புதன், 7 மே, 2014

சமச்சீர் கல்வி என்ற ஒன்றே ஒரு அரசியல் தேசிய அபத்தம் .







கல்வி என்ற விசயத்தில் நாம் அனைவரும் ஒன்றும் அறியாத அறிவற்றவர்களாகவே இன்னும் இருக்கின்றோம் .

சட்டம் என்ன சொல்கிறது நடைமுறையில் என்ன என்பதனை கல்வியாளர்கள் என்று கூறித்திரிபவர்களும்,கல்வியாளர்கள் என அடையாளம் காட்டப்பட்டவர்களும், இன்னும் இது விசயமாக அலட்டிக்கொள்பவர்களும்,ஆதங்கப்படுபவர்களும் சிறிதும் சிந்தித்து செயல்பட்டது போல் தெரியவில்லை .
அனைவரும் இந்த விசயத்தில் படிப்பறிவில்லாதவர்களாகவா உள்ளனர் என்ற கேள்வி என்னுள் எழுந்துகொண்டே இருக்கிறது .

முதலில் ஒன்றை நாம் தெரிந்துகொள்ளவேண்டும் .
அது நமது அரசியல் அமைப்புச்சட்டம் .
இந்திய அரசியல் சாசனம் என்பது
இந்தியர்களாகிய நாம் ,
நாம் பெற்ற விடுதலையை பேணிக்காக்கவும் ,
நமக்காக நம் உரிமைகளை வலியுறுத்து நிலைநாட்டிக்கொள்வதற்கும் வழங்கிக்கொண்ட உரிமை சாசனம் .
இது நமது உயிர்.
இதனை மீறிய சட்டங்கள் எதுவும் இல்லவே இல்லை.

நமது அரசியல் சாசனத்தின் 86 வது திருத்த சட்டம்
THE CONSTITUTION (EIGHTY-SIXTH AMENDMENT) ACT, 2002
[12th December, 2002.]


An Act further to amend the Constitution of India. .
BE it enacted by Parliament in the Fifty-third Year of the Republic of India as follows:-

1. Short title and commencement.- (1) This Act may be called the Constitution (Eighty-sixth Amendment) Act, 2002.
(2) It shall come into force on such date as the Central Government may, by notification in the Official Gazette, appoint.


2. Insertion of new article 21A.- After article 21 of the Constitution, the following article shall be inserted, namely:-

Right to education.-

"21A. The State shall provide free and compulsory education to all children of the age of six to fourteen years in such
manner as the State may, by law, determine.".

3. Substitution of new article for article 45.- For article 45 of the Constitution,the following article shall be
substituted, namely:- .

Provision for early childhood care and education to children below the age of six years.

"45. The State shall endeavour to provide early childhood care and education for all children until they complete the
age of six years.".


4. Amendment of article 51A.- In article 51A of the Constitution, after clause (J), the following clause shall be added,
namely:-

"(k) who is a parent or guardian to provide opportunities for education to his child or, as the case may be, ward between
the age of six and fourteen years.".

இது ஆகும் .

new article 21A ''The State shall provide free and compulsory education to all children of the age of six to fourteen years in such
manner as the State may, by law, determine'' என கூறுகிறது .
இதன் படி அரசு கட்டாயம் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கவேண்டும் .
இதன் படி free and compulsory education to all children of the age of six to fourteen years அரசு மட்டுமே தரவேண்டும்.
அரசுக்கு மட்டுமே அதனை செய்யவேண்டும் .

மேலும்
new article "45. The State shall endeavour to provide early childhood care and education for all children until they complete the age of six years.".ஆனது
''இந்த அரசியல் சாசனம் துவக்கப்பட்டுப் பத்தாண்டுகளுக்குள் குழந்தைகள் அனைவரும் பதினான்கு வயது முடிவடையும் வரையில் இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி பெற்வதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்'' என்பதற்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு new article 21A வழி வகை செய்துவிட்டபடியால் இங்கு இவ்வாறு வகைமை செய்யப்பட்டுள்ளது .



இப்படி அரசியல் அமைப்புச்சட்டத்தில் வகைமை செய்த பின் அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என பல அமைப்புகள் எப்படி இருக்க முடியும் ? .அரசு அனுமதிப்பது முறையா ?.எதன் அடிப்படையில் அனுமதிக்கிறது ?.
.
மேலும் கல்வி ஒரு அடிப்படை உரிமையான பிறகு தனியார் கல்வி நிறுவனங்கள் ஆதாரக்கல்வியை போதிக்க எதன் அடிப்படையில் அரசு அனுமதிக்கிறது ?.அரசு அனுமதிப்பது முறையா ?.

இவைகள் அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒன்றல்லவா ? .


new article 21A ன் படி நமது நாட்டில் ஒரு மூலையில் உள்ள மாணவர் என்ன படிக்கின்றாரோ அதனையே எங்கும் உள்ள அனைத்து மாணவர்களும் படிப்பார்கள் .அதுவும் அவர்வர் தாய்மொழியில் .அவ்வளவே.இதில் குழப்பம் எதுவும் இல்லை .மொழி,இனம்,பண்பாடு பாதிக்கும் என்ற அச்சத்திற்கு இடமில்லை.உலகிலே மிகச்சிறந்த கல்வியை ,மற்ற நாடுகளுக்கு முன்னுதரமாண கல்வியை அளிக்கமுடியும்.

அரசியலமைப்பு சட்டம் இப்படி கூறும் சூழலில் சமச்சீர் கல்வி என்ற ஒன்றே ஒரு அரசியல் தேசிய அபத்தம் ஆகும் , அல்லவா ?.

ஏன் இதனை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளவில்லை என்று தெரியவில்லை ?

1970 ஆம் ஆண்டை சர்வதேச கல்வி ஆண்டாக .நா அங்கீகரித்தது.அதிலிருந்து ஆதாரக்கல்வியை உலகிலுள்ள அனைத்து குழந்தைகளும் பெற எண்ணிலடங்கா நிதிகளை அளித்துவருகிறது .நாம் தான் ஆதார கல்விக்கு சரியாக,சரியான நிதிகளை ஒதுக்க முடியாவிட்டாலும் ..நா வின் நிதியையாவது முறையாக பயன் படுத்தியுள்ளோமா என்பதுவும் கேள்விக்குறியாகவே உள்ளது .

ஆதாரக்கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் 8 ஆண்டுகள் என்பது காந்தியின் கனவு.



காந்தியின் கனவு நனவாகும் காலத்தை எதிர்பார்த்து.




இது  ஒரு மீள் பதிவு
 அசல் கட்டுரையை இங்கேசென்று பார்க்க 



.

Download As PDF

4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இணைப்பிற்கு நன்றி...

அம்பாளடியாள் சொன்னது…

சிறப்பான பகிர்வு பகிர்வுக்கு மிக்க நன்றி .ஏழைக் குழந்தைகளுக்கும்
வாழ்வளிக்க காந்தியின் கனவே நிறைவேற வேண்டும் .

rajamelaiyur சொன்னது…

நல்ல கருத்துகள்

Unknown சொன்னது…

விளையாட்டாகட்டும், வியாபாரமாகட்டும், கல்வியாகட்டும், ஒருவர் உயர்வதற்கு போட்டி மிக அவசியம் என்பதைக் காலம் உணர்த்தியிருக்கிறது.

தனியார் அதுபோன்ற போட்டியை கல்வியில் ஊக்குவிக்கக் காரணமாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு. அரசுக் கல்வி ஆசிரியர்கள் அதைத் துணிவுடன் எதிர் கொள்ள முயலவேண்டும். தனியார் கல்வி நிலையங்களில் நிகழும் ஊழலைத் தடுக்க முயன்றால் போதுமே. தாங்கள் கூறியது போன்ற சட்டத்தை இயற்றியவர்கள் அதைச் செய்ய முன்வருவார்களா.

கோபாலன்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "