சனி, 23 அக்டோபர், 2010

பாபிலோ ஆதிவாசியின் சிற்பங்கள் .

ஏற்காடு மலைப்பகுதியின் அடர்வின் மையத்தை நோக்கி நகர்ந்து சென்றுவிட்ட பாபிலோஆதிவாசிகளைப்பற்றியும் அவர்களின் மொழி பற்றியும் சிந்துசமவெளி நாகரீக மக்களைப்பற்றியஆய்வில் ஈடுபட்டிருந்த என்னிடம் கூறியபொழுது கட்டாயம் அவர்களைச்சந்தித்தே ஆகவேண்டும் என்றமுடிவிற்கு வந்தேன் .
...

நான் சந்தித்த பொழுது அவருக்கு அதிக மயக்கமருந்து கொடுக்கப்பட்டிருந்தது . நான் இது தவறு ,மனித உரிமை மீறல் எனக்கூறி அவரிடம் பேட்டி காண்பதை தவிர்த்தேன் . எனது எதிர்ப்பை சிறிதும் எதிர்பார்க்காத அந்த ஆய்வாளர் .உங்களுக்கு நாங்கள் உதவவேண்டிய அவசியமே இல்லை .அரசும் நீங்க என்னமோ சிந்து ஆய்வுபற்றி பேசி வருவதால் இருந்துட்டு போகட்டுமே ,கெட்டபேர் ஏதுக்குனு நினச்சு, முடிந்தால் உதவுங்கள் என்ற குறிப்புடன் தான் ஏதோ அனுமதி வழங்கியுள்ளது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் .நீங்கள் இதற்கான பட்டம் பெற்றவரும் அல்ல .இவ்வளவு அனுமதித்ததே அதிகம் போங்க போங்க என்றவரிடம், அப்படியல்ல தோழரே ,இது ஜனநாயக நாடு ,அரசு மக்களின் சேவகன் மட்டுமே .இதை நான் வெளியில் சொன்னால் நீங்க அரசு என நினைத்துக்கொண்டிருப்பதே ஆடிவிடும் ஆடி .முதலில்
அவருக்கு சரியான மரியாதை செய்யுங்கள் .இச்செயலுக்கு நீங்கள் கட்டாயம் தண்டனை அடைந்தே தீர்வீர்கள் எனக்கூறிவிட்டு புறப்பட்டேன்.

...
எங்கள் காடுகளை மட்டும் நாங்கள் இழக்கவில்லை . எம்மைச்சுற்றிய புல்லினங்களையும் சேர்ந்தே இழந்தோம் .ஆறுகளையும் அது கொடுக்கும்
பாதைகளையும் இழந்தோம் ...

எம்மால் என் தாயின் மடியில் தலைவைத்து படுக்கமுடிவதில்லை.நாளுக்கு நாள் அதிகம் சுகவீனப்படுகிறது அவளின் தேகம் .தன்னுடம்பில் தாதுக்கல் குறையக்குறைய அவள் பலவினமடைகிறாள் .இரவில் உறங்காமல் நடுங்கிக்கொண்டு .அனைவராலும் கைவிடப்பட்ட ஆதரவற்ற
முதியவளாக அவளும் .ஒளிந்து வாழும் மகனாக நானும் ...

என் அன்னை எனக்கு சொன்னால் மகனே மனிதனுக்கு மனிதன் உணவில்லை ஆதலால் மனிதர்களைத் தாக்குவது கூடாது ,பாவம் என ...

அவர்களுக்கு நான் என்ன உறவென்று தெரியவில்லை .ஆனால் அவர்கள் எனது உறவு ....

எதிர்க்க முடியவில்லை என்பதைவிட எதிராளியாய் பார்க்கவில்லை என்பதால் எதிர்க்கவில்லை.ஆனாலும் அவர்கள் எமது இரத்த சொந்தங்களை ...







----






தொடரும் ...

.



. Download As PDF

6 கருத்துகள் :

Jeyamaran சொன்னது…

nalla irukku anna.............

மதுரை சரவணன் சொன்னது…

manathai uruththukirathu. valarattum

vasu balaji சொன்னது…

omg

தேவன் மாயம் சொன்னது…

நன்று ! நண்பரே!

ஜெயந்தி சொன்னது…

ஆதிவாசிகள் மிருககாட்சி சாலை மிருகங்கள் போல் ஆகிவிட்டார்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "